எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 19, 2015

ஆடிக்காற்றில் என்ன பறக்கும்?

காற்று மிகக் கடுமையான வேகத்தில் வீசுகிறது. வாயு பகவானின் கோபத்துக்கு ஈடு கொடுத்துப் பக்கத்துத் தோப்பு மரங்கள் காற்றின் வேகத்துக்கு  அப்படியும் இப்படியுமாக வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் அந்த அசோகா மரம் எங்க வீட்டு அறையின் ஜன்னல் கதவையே உடைச்சுடும் போல வேகமாய் வந்து மோதுகிறது. ஒரு சில படங்கள் அசையும் படங்களாகவே (ஹிஹிஹி, அவ்வளவு மேதை எல்லாம் இல்லை, தானாகவே வந்துடுச்சு) வந்திருக்கின்றன. அவற்றை இங்கே பகிர்கிறேன்.



தென்னை மரம் ஆடும் ஆட்டம். அதில் அமர்ந்திருக்கும் கிளிகள் கவலையே இல்லாமல் ஊஞ்சலாடுகின்றன. கிளிகளை ஜூம் பண்ணி எடுக்க நினைச்சால் முடியலை. கிட்டே வரும் கிளையில் இருந்த கிளி பறந்துடுச்சு. :)








அசோகா மரம் வேகமாய் ஓடி வருது தென்னை மரத்தோடு போட்டி போல! காற்றின் சப்தம் காரணமாகவோ என்னமோ தெரியலை, பறவைக் கூச்சலே இல்லை. ஒரே அமைதியாக இருக்கின்றன எல்லாமும். 

35 comments:

  1. அம்மி பறந்ததா இல்லையா? அது கிடக்கட்டும். அருமையான விழியம், செவியம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி "இ"சார், வ.வா.பி.ரி. :)

      Delete
  2. பாருங்க! நீங்க பதிவு எழுதறது வாயு பகவானுக்கே பொறுக்கலை!

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம், சரியா இல்லையே தம்பி! நான் பதிவும் எழுதி அசைபடமாப் போட்டும் இருக்கேனே! வாயு பகவான் சம்மதம் இல்லைனா முடியுமா? :)))) கொஞ்சம் மாத்தி யோசிங்க! :P :P :P :P :P :P

      Delete
  3. சீக்கிரம்..... அம்மியை எடுத்து காற்றுல மாட்டாம உள்ள வச்சுடுங்க!

    ReplyDelete
    Replies
    1. அம்மி அம்பத்தூர் வீட்டிலே தான் இருக்கு! :)

      Delete
  4. அருமையான வீடியோ. கீதா,அசுரக் காற்றாய் இருக்கும் போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்மாவா நல்லா வந்திருக்குங்கறீங்க? ம்ம்ம்ம்ம்ம்?????

      Delete
  5. மரங்களின் ஆட்டமும், கிளிகளின் ஊஞ்சல் ஆட்டமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஹை, உங்களுக்கும் மரங்களோட ஆட்டம் தெரியுதா?

      Delete
  6. Grrrrrrrrrr... where is my comment?

    ReplyDelete
    Replies
    1. மேலே இருக்கே, பார்க்கலை? அல்லது தெரியலை?

      Delete
  7. அட...! அட்டகாசம் அம்மா....

    ReplyDelete
  8. வீடியோன்னு நினைச்சேன்.... GIF இமேஜா இருக்கே!!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்பை, வீடியோ எடுக்கலாம் காமிராவிலும், மொபைலிலும் ஆனால் எனக்கு சரியா வரலை. முயற்சி பண்ணிப்பார்க்கிறேன். இது ஏதோ தற்செயலா வந்தது. அதையே எனக்கு அப்லோட் பண்ண முடியலை. பிகாசாவில் ஏதோ பிரச்னை போல. அப்லோட் பண்ணினால் ஆகவே இல்லை. :(

      Delete
  9. Replies
    1. அப்பாதுரை, நிஜம்மாவா? நன்னி ஹை.

      Delete
  10. அருமையான ஆடிக்காற்றில் எல்லாமே அலைபாயறதே. என்னவோ கிட்டே வரமாதிரியே இருக்கே. இங்கெல்லாம் கூட 4,5 நட்களாக உஶ்உஸ் என்ற சப்தத்துடன் காற்று அலை மோதுகிறது. நானும் இந்த வசனத்தை நினைத்துக் கொண்டேன்.படங்கள் தத் ரூபமாக இருக்கு. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க காமாட்சி அம்மா, இரண்டு நாட்களாகக் காற்றே இல்லை. :) இங்கே விர் விர் என சப்தம் போடும். :)

      Delete
  11. ஆடிக்காற்றினை படம் எடுத்து அசத்தலாய் ஓர் பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ஒரு வித்தியாசமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. வருகைக்கு நன்றி.

      Delete
  13. என்ன ஆச்சு என் கமென்ட். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. அம்மா, இங்கே மின் வெட்டுக் கடுமையாக இருப்பதால் மாலை ஆறரை மணிக்கு மேல் தான் மின்சாரமே வருது. நேற்றுக் காலை ஒன்பது மணிக்குப் போனது மாலை ஆறே முக்கால் ஆச்சுத் திரும்பி வர. ஆகையால் அதுக்கப்புறமா கணினியில் உட்கார முடிவதில்லை என்பதால் (இன்று காலை) இப்போது தான் வெளியிடுகிறேன்.

      Delete
  14. Good.....

    காத்து அள்ளுது!

    ReplyDelete
  15. ஆகா... வித்தியாசமான படம் ............

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, நன்றி.

      Delete
  16. ஆகா... வித்தியாசமான படம் ............

    ReplyDelete
  17. இப்ப நவ்வாபழம் நிறைய விழுமே:) மரம் இருக்கா ?

    ReplyDelete
    Replies
    1. நாவல் மரமே இங்கே இல்லை ஜெயஶ்ரீ. அதோட நாங்க நாவல்பழம் சாப்பிடறதில்லை. :)

      Delete
  18. இதை எல்லாம் எப்படி இணைக்கிறீர்கள் என்று தெரியவிலலை.

    டி டி கிட்ட டூயுஷன் போகலாமின்னு இருக்கேன்.

    ஹி ஹி ஹி.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஊமைக்கனவுகள், நான் தான் ஒரு ம.சா. நினைச்சேன். நல்லவேளையாத் துணைக்கு ஆள் இருக்கு! :) பிகாசா மூலம் தான் இணைக்கிறேன். ஆனால் முன்னெல்லாம் பிகாசாவிலிருந்து நேரே பதிவுகளில் படத்தை இணைக்க முடிந்தது. இப்போல்லாம் முடியலை. ஆகையால் அதை என் கணினிக்கு மாற்றி அதிலிருந்து பதிவுகளில் இணைக்கிறேன்.

      Delete