எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 17, 2007

சுட்ட படம் வேணுமா/ சுடாத படம் வேணுமா?

இந்தியாவிலே தான் குப்பைன்னு எல்லாம் இல்லை. இங்கே ஹூஸ்டனும் ஒரே குப்பை மயமாத் தான் இருக்கு. அதுவும் நாங்க நடைப் பயிற்சி போகிற "வால்மார்ட்" என்னும் வணிக வளாகத்தை அடுத்த முக்கிய வீதியானது "ஃப்ரீவே" எனப்படும் தேசீய நெடுஞ்சாலையை இணைக்கும் வீதியாக இருந்தும் அங்கே உள்ள நடைபாதையில் வால்மார்ட்டின் கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது. அது தவிர, வாடிக்கையாளர் சேவைக்கு என வைத்திருக்கும் தள்ளுவண்டிகள் கன்னாபின்னாவெனக் கிடக்கிறது மட்டுமில்லாமல், பக்கத்திலேயே உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கிறது. இங்கே குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த நடைபாதையும் மோசம் என்றால் அதைச் சுற்றி வெளியே தெருவில் உள்ள நடைபாதையும் புல் முளைத்துக் கால் வைத்தால் மேடு, பள்ளம் தெரியாமல் இருக்கிறது. ஹிஹி, கீழே விழுந்தாச்சு அதிலே! :D இருந்தும் விடாமல் நாங்கள் நடக்கப் போகொறோம். இங்கே நான் இருப்பது யு.எஸ். என்பதை நினைவு செய்வது இங்கே உள்ள மக்கள் தான், மற்றபடி சென்னை போல்தான் இங்கேயும் சீதோஷ்ணமோ, மக்கள் நெருக்கமோ அல்லது குப்பைகளோ, பிச்சைக் காரர்களோ இருக்கிறார்கள்.

கடந்த ஒருவாரமாக அதிகம் எழுத முடியலை. முக்கிய காரணம் இந்த மடிக்கணினியில் தான் படங்கள் போட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. எந்த டிவிடி ஆனாலும் அது சரியாக இல்லை. இந்த விஷயத்திலும் இந்தியாவைத் தோற்கடிக்கிறது. அப்படியும் இப்படியுமாக் கஷ்டப் பட்டுப் பார்த்த படங்கள் விவரம் வருமாறு:

தெனாலி- முதல் முறையாப் பார்த்து, இதைப் பார்க்காத பாவத்தைப் போக்கிக் கொண்டேன்.

2.காதலிக்க நேரமில்லை- எத்தனாவது முறை, தெரியாது.

3.பொம்மலாட்டம்-இதுவும் சிலமுறை பார்த்தாச்சு

4.தம்பிக்கு எந்த ஊரு: மாதவியின் மேக்-அப் இவ்வளவு மோசம்னு இப்போத் தான் புரிஞ்சது. உடைத் தேர்வு ரசனையே இல்லை.

5.ரங்க் தே பசந்தி: இந்த வலை உலகிற்கு வந்தப்போ எல்லாம் இதைப் பத்தித் தான் எழுதினாங்க. இப்போத் தான் முதலில் பார்த்தேன். படம் நல்லா இருந்தாலும் குறிப்பிட சில காட்சிகள் வேணும்னு தேர்வு செய்த மாதிரி இருக்கிறது. ஆமீர்கானின் ஒருதலைப் பட்சமான போக்கைக் காட்டியது.

(6.மொழி: ரொம்ப நல்ல படம் என்பதோடு யதார்த்தமான வசனம், நடிப்பு, இசை,கதை அம்சம், டைரக்ஷன், எல்லாமே.

7.பருத்தி வீரன்: இன்னும் முடிவு பார்க்கலை. .

8.இக்பால்: அருமையான படம், நல்ல இயல்பான நடிப்பு. இக்பாலின் தங்கையாக நடிக்கும் பெண் ஒரு பிறவி நடிகை.) இது மூன்றும் மெம்பிஸில் பார்த்தேன்.

9.லகான்: எத்தனாவது முறை? தெரியலை. :D

10.ஹாட்-ட்ரிக்: நானா படேகரின் நடிப்பும், டானியின் நடிப்பும் நல்லா இருக்கு. முழுசும் சரியாப் பார்க்கலை.

11.ஏகலவ்யா: தலை சுத்தல், பாதி கூடப் பார்க்கலை.

12.லகே ரஹோ முன்னா பாய்: யதார்த்தமான படம். நடக்க முடியாத கனவுகளைக் கொண்ட "சிவாஜி"யை விட இது கொஞ்சம் ஏற்புடையதாய் இருக்கிறது. கொஞ்சம் முயன்றால் இதில் கண்டது நடக்கும் நாள் சாத்தியமே. ஆனால் தலைமை சரியாக இருக்க வேண்டும்.

ஆனால் முன்னாபாய் எம்.பி.பிஎஸ். பார்க்கலை. அதுக்குப் பதிலாய் வசூல்ராஜா பார்த்தேன், அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. இன்னிக்கு "ப்ளாக்" பார்க்கலாம்னு நினைச்சேன். மறுபாதி ஒத்துக்கலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர். அதான் கடமை ஆற்ற வந்துட்டேன். இது தவிர, இங்கே ஹூஸ்டன் வந்ததிலே இருந்து தினம் ஒரு சூடு வேறே போட்டுக்கறேனா? 4 நாள் முன்னாலே இடது உள்ளங்கையில் விரல்களில் எப்படினு தெரியலை சூடு பட்டு தட்டச்சு செய்ய முடியாமல் ஒரு கையால் தட்டச்சிக் கடமை ஆற்றினேன். இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை.ஹிஹிஹி, ஸ்வாதி, அ.வ.சி. கோவிக்காதீங்க! :P அ.வ.சி. சினிமா பார்த்ததுக்கு. சூடு போட்டுக்கிட்டதுக்கு இல்லை. அது வழக்கம்தானேன்னு இங்கே முறைக்கிறார். :P

அதோட இல்லை, மெம்பிஸில் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு மிரட்டும் செக்யூரிட்டி வார்னிங்க் இல்லையா, படங்களும் நல்லாச் சுட முடியுது. கணினியைத் திறந்ததுமே வரும் Trend MC PC Cillin Security Warning, you are not allowed to see this website. The website filter configuration does not allow. அப்படின்னு ஒட்டிட்டே கூட வரும். சில சமயம் என்னோட பதிவையே பார்க்க விடாது. மிரட்டல் அதிகமா இருக்கும்.இங்கே அந்தத் தொந்திரவு இல்லையா இந்தச்சாக்கில் எத்தனை வலைப்பூக்கள், எத்தனை விதமான பதிவுகள்னு பார்த்தேன் கணக்கே இல்லை.. வைகானசம், பாஞ்சராத்திரம் விவரம் தேடும்போது தேசிகன்,நா. கண்ணன், சடகோபன் இவங்களோட வலைப்பூக்களைத் திரும்பத் திரும்பப் படிச்சேன். தேசிகனுடையதும், கண்ணனுடையதும் சிலது முன்பே படிச்சிருக்கேன் என்றாலும் மற்றவைகளும் படிக்க முடிஞ்சது. கண்ணனுடைய சைவம் பற்றிய கருத்துக்களோடு ஒத்துப் போகமுடியவில்லை என்றாலும், படிக்கச் சுவையாகவே இருந்தது. சடகோபனின் பதிவுகளில் இருந்து எங்கே எல்லாமோ போய்ப் பார்க்க முடிந்தது. அப்படிக் கிடைத்தது தான் ஸ்ரீபீடியா. பின்னர் வல்லிசிம்ஹனும், "வி" என்பவரும் லிங்க் கொடுத்ததோடு அல்லாமல் திவாகரும் அனுப்பி உள்ளார்.

சிதம்பர ரகசியம் பதிவில் போடப் படங்கள் தேடும்போதும் இப்படி எதிர்பாராமல் கிடைத்த புதிய பதிவுகள் பல இருந்தாலும் முக்கியமாய்ச் சொல்லவேண்டியது இந்தப் பதிவு தான். natarajar.blogspot.com & navarathri.blogspot.com இரண்டுமே இவரோட வலைப்பூக்கள் தான். இதைத் தவிரவும் வலைப்பூக்கள் திருப்பாவை, திருவெம்பாவை, மயிலையில், காரைக்காலம்மையார், கைலாஷ் யாத்திரா என்ற பெயர்களில் இருக்கின்றன.எல்லாமே நல்லா அனுபவித்து மிக ஆழமான அர்த்தங்களோடும், உள்ளார்ந்த பக்தியோடும் எழுதி உள்ளார். அதிலேயும் நவராத்திரி வலைப்பூவில் உள்ள அம்மன் அலங்காரங்களோடு உள்ள படங்கள் மனதை நிறைக்கிறது. "கைலாஷி" என்ற பெயரில் எழுதி இருக்கும் இவரோட ஒரு வலைப்பூவில் இருந்து படங்கள் எடுத்துக் கொண்டதோடு அல்லாமல் இவரின் மானசரோவர் யாத்திரைக் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. இந்திய வழியில் போயிருக்கிறார். மிகக் கடினமான பயணம், கொடுத்து வைத்திருக்கிறார். அற்புதமான இடங்களைப் பார்த்ததோடு அல்லாமல் பகிர்ந்தும் கொண்டிருக்கிரார். நவராத்திரி பற்றி எழுதி இருக்கும் பதிவுகள் அருமைனு ஒரே வார்த்தையில் சொன்னால் அது தப்பு. ஆகவே அதைப் புகழ வார்த்தைகளே கிடையாது. நீங்களே போய்ப் பார்த்துக்குங்க.

3 comments:

  1. இப்போ ஹூஸ்டன்ல இருக்கீங்களா??
    எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க அங்கே Home maker-a இருக்காங்க!!
    உனக்கு தெரிஞ்சு யாராச்சும் ஹூஸ்டன்ல இருக்காங்கலா னு கேட்டாங்க!
    நீங்க அங்கேதான் இருக்கீங்கன்னு தெரியாம போச்சே!! :-)

    ReplyDelete
  2. லிங்க் கொடுத்தமைக்கு நன்றி....படிக்கிறேன்.

    ReplyDelete
  3. @CVR, என்ன இந்தப் பக்கம் எல்லாம் உங்கள் நல்வரவு? :P

    @மதுரையம்பதி, எந்த லிங்க்? ம்ம்ம்., திருமுறைக்குக் கொடுத்ததா? இப்போத் தான் பார்க்கிறீங்களா? :))))))))))

    ReplyDelete