எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 30, 2011

ஓ, வெல்கம், ஸ்வீட் வெல்கம், மெரி கிறிஸ்துமஸ்!


சான்டா அங்கே ஒரு மாபெரும் கப்பலில் மிதந்து கொண்டிருந்தார். இந்தப் பையன் பில்லி, அங்கே தான் காலநிலையைக் கவனிக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தான். எட்வர்டும், அந்தச் சுட்டிப் பெண்ணும் அவனை அழைக்கச் சென்றபோது தவறுதலாக எதையோ அழுத்த, அது பின்னாலேயே நகர ஆரம்பிக்க மூவரும் அதோடு பயணித்து, அங்கு நடைபெறும் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டே வந்தனர். கிறிஸ்துமஸுக்குப் பரிசளிக்கவென சான்டா கிளம்பும் கலைமான்கள் பூட்டிய வண்டி பயணம் செய்யச் சித்தமாக நின்றது. அப்போது அந்த வெள்ளி மணிகளில் ஒன்று தவறிக் கீழே விழ எட்வர்ட் அதைக் கையில் எடுத்து ஆட்டிப் பார்த்தான். போலார் எக்ஸ்பிரஸில் வருகையில் அந்தப் பெண்ணிற்கு இந்த மணி ஓசை கேட்டது அவன் நினைவில் வந்தது. அப்போது அவனுக்குக் கேட்கவில்லை. ஆகவே இப்போதாவது தனக்குக் கேட்கிறதா என்று பார்த்தான். ஏமாற்றம் தான்! மணி ஓசை கேட்கவே இல்லை அவனுக்கு. உடனே தனக்கு சான்டாவிடமும், கிறிஸ்துமஸின் உண்மையான புனிதத்திலும் நம்பிக்கை இருப்பதாக வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான். சான்டாவை நம்புவதாகவும் மீண்டும் கூற அவன் கண்களுக்கு சான்டாவும் தெரிந்தார். மணியின் ஓசையும் கேட்டது. அந்த மணியில் சான்டாவின் உருவமும் தெரிந்தது.

கிறிஸ்துமஸின் முதல் பரிசைக் கொடுக்க சான்டா எட்வர்டைத் தேர்ந்தெடுத்தார். எட்வர்டிடம் இவ்வுலகில் இருக்கும் எதை வேண்டுமானாலும் கேள்; உனக்குக் கிடைக்கும் எனக் கூறினார். எட்வர்டுக்கோ அந்த வெள்ளி மணியின் மேலே ஆசை; மணி ஓசை எல்லாருக்கும் எப்போதும் கேட்காது. சான்டாவின் மேலும் கிறிஸ்துமஸின் புனிதத்தன்மையின் மேலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும். சான்டாவின் கைகளில் இருந்து வெள்ளிமணி நழுவ அதை எடுத்துத் தன் ட்ரவுசர் பையில் போட்டுக்கொண்டான் எட்வர்ட். அங்கிருந்த அனைவருக்கும் பரிசளித்த சான்டா மற்றக் குழந்தைகளுக்கும் பரிசளிக்க அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கினார்.
குழந்தைகளும் மீண்டும் போலார் எக்ஸ்பிரஸுக்குத் திரும்பினார்கள். குழந்தைகளின் டிக்கெட்டுகளில் அறிவுரைகள் நிரம்பிய கடிதங்களைக் கோர்த்துக் கொடுத்தார் ரயிலின் கன்டக்டர். தன் வீடு வரும் போது தன் ட்ரவுசர் பையைச் சோதித்துப் பார்த்த எட்வர்ட் அந்தப் பை எப்படியோ ஓட்டையாகி இருப்பதையும் வெள்ளி மணி அதிலிருந்து கீழே விழுந்திருப்பதையும் கண்டு ஏமாந்து போய்ச் சுற்றும் முற்றும் தேடினான். மணி எங்கும் கிடைக்கவில்லை. ரயிலிலிருந்து கீழே இறங்கித் தேடலாம் என்றால் நேரமாகிவிட்டது. மனம் ஒடிந்து போனான் எட்வர்ட். ஆனால் அவன் மனதில் கொஞ்சமாவது சந்தோஷம் கொடுக்கும் நிகழ்வு ஒன்று அப்போது நடந்தது. ஷிகாகோவிலிருந்து வந்த பில்லிக்கு அவன் கேட்ட பரிசு கிடைத்துவிட்டதாம். சான்டா வந்து கொடுத்திருக்கிறார் என மிகவும் சந்தோஷம் அடைந்து கிறிஸ்துமஸ் தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாய்ச் சொன்னான். அவன் வீட்டருகே ரயில் வந்து நின்றதும் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லிப் பிரியாவிடை பெற்றான் எட்வர்ட். மறுநாள் கிறிஸ்துமஸ் அன்று காலை அவன் தங்கை கிறிஸ்துமஸ் மரத்தினருகே இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த பரிசுப் பொருள் ஒன்றைக்கண்டாள். அனைத்துப் பரிசுகளும் பிரிக்கப்பட்டிருக்க அது மட்டும் பிரிக்காமல் காணப்பட்டது.

எட்வர்ட் அதை எடுத்துப் பிரித்தால் ஆஹா, அந்த வெள்ளி மணியே அது! அதை எடுத்து ஆட்டிப் பார்த்தான். இனிய நாதம் கிளம்பியது. அவன் மட்டுமின்றி அவன் தங்கையும் கேட்டாள். ஆனால் அவன் பெற்றோருக்குக் கேட்கவில்லை. ஏனெனில் அவர்கள் சான்டாவை நம்புவதை விட்டுவிட்டனர். ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவன் பெரியவனான பின்னரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அவன் சிநேகிதர்களுக்கும் சரி, அவன் சகோதரிக்கும் சரி, அவர்கள் வயதானபின்னால் கேட்கவே இல்லை என்று சொன்னார்கள்; சொல்கிறார்கள். ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவனுக்கு வயதானபின்னரும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் அவன் உண்மையாக சான்டாவின் இருப்பை நம்புகிறான்.

4 comments:

  1. ரொம்ப நன்றாக எழுதியிருக்கீங்க மாமி.

    அங்க கிருஸ்மஸ் கொண்டாட்டம் எல்லாம் தொடங்கியாச்சா??

    ReplyDelete
  2. வெள்ளி மணி ஓசையிலே...
    இது படக் கதையா..நான் பார்த்ததில்லை.

    ReplyDelete
  3. வாங்க ராம்வி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், அதற்கான பர்ச்சேஸும் தாங்க்ஸ் கிவிங் நாளில் இருந்து ஆரம்பிக்கிறது. இப்போ வரும் எல்லா நிகழ்வுகள், குழந்தைகளுக்கான பரிசுப்பொருட்கள், பெரியவங்களுக்கானவைனு எல்லாம் கிறிஸ்துமஸை அடிப்படையாக வைத்தே வருகின்றன.

    ReplyDelete
  4. வாங்க ஶ்ரீராம், போலார் எக்ஸ்ப்ரஸ் படத்தோட பெயர். 4 டி படம். அதற்கான ஐநாக்ஸ் தியேட்டரில் பாருங்க. ஐமாக்ஸ்?? எனக்கு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் புரியவில்லை. ஆனால் இரண்டிலும் படங்கள் பார்த்திருக்கிறேன். :))))))

    ReplyDelete