எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 14, 2006

வெற்றிகரமாக முடிந்த பயணம்

கோபிச்சந்தனத்தைப் பெற்றுக்கொண்ட மத்வர் ஒரு உள்ளுணர்ச்சியுடன் அதை உடைக்க அதில் இருக்கிறான் ஸ்ரீகிருஷ்ணன் ஒரு கையில் மத்துடனும் மறு கையில் கயிறுடனும்.ஒரு அடி உயரம்தான் இருக்கும் என்று தோன்றுகிறது அந்தக் கிருஷ்ணன். கொள்ளை அழகுடன் இருக்கும் அவனைப் பார்த்தால் இரு கைகளாலும் வாரி அணைத்துக் கொஞ்சத் தோன்றுகி
றது. நமக்கே இப்படி என்றால் கிருஷ்ண பக்தியில் திளைத்த மத்வரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஸ்ரீகிருஷ்ணனின் புகழைப் பாடிக் கொண்டே 4 மைல் தூரம் அந்த விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு உடுப்பிக்கு வர்கிறார் மத்வர். அவரால் பாடப் பட்ட அந்த ஸ்லோகங்கள் "த்வாதஸ ஸ்தோத்ரா" என்று அழைக்கப் படுகிறது. அந்த விக்ரஹத்தைப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் குளிப்பாட்டிப் பிரதிஷ்டை செய்கிறார். அந்தக் குளம் தற்சமயம் "மத்வ சரோவர்" என்று அழைக்கப் படுகிறது. கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. கோவிலின் உள்ளிருந்தும் குளத்திற்கு வரப் பாதை இருக்கிறது. பூஜை முறைகள் ஸ்ரீமத்வரால் ஏற்படுத்தப் பட்டு இன்றளவும் பின்பற்றப் படுகின்றன.பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் மத்வரால் ஏற்படுத்தப்பட்ட 8 மடங்களைச் சேர்ந்த "பால சன்யாசிகள்" என்றழைக்கப் படும் மடங்களைச் சேர்ந்த துறவிகளால்தான். இவர்களைத் தவிர வேறு எவருக்கும் பூஜை செய்யவோ இக்ரஹத்தை தொடவோ அனுமதி இல்லை.

கோவில் கேரளப் பாணி தான். ஸ்ரீகிருஷ்ண மடம் என்று அழைக்கப் படும் கோவிலில் முன் வாசலே கிடையாது. ஸ்ரீகிருஷ்ணர் மேற்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். மேற்குப் பார்த்த வாசலில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதன் வழியாக யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிருஷ்ணரைத் தரிசனம் செய்யலாம் என்பதற்காக வைத்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமாகப் பார்க்க முடியவில்லை. உள்ளே இருப்பவர்கள் கொஞ்சம் விலகினால் ஏதோ கொஞ்சம் தெரியும். அந்த ஜன்னலுக்கு முன் ஒரு சிறிய கோபுரம் உள்ளது.
போது ஜனங்கள் தெற்கு வாசல் வழியாக உள்ளே செல்ல வழி வைத்திருக்கிறார்கள். மெட்டல் டிடெக்டரைக் கடந்து உள்ளே போனால் வாசலில் வலது பக்கம் இருக்கும் மத்வ சரோவரைப் பார்க்கலாம். இது கிருத யுகத்தில் "வ்ரஜ தீர்த்தம்" என்றும், "அனந்த சரோவர்" என்று முறையே த்ரேதா மற்றும் துவாபர யுகத்திலும் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒரு முறை கங்கை இந்த தீர்த்தத்தில் பிரவாஹம் எடுப்பதாகவும் சொகிறார்கள். இந்தக் குளத்து நீரால் தான் தினமும் அபிஷேஹம் செய்யப் படுகிறான் கண்ணன்.
மெட்டல் டிடெக்டரைக் கடந்து உள்ளே போகும் நான் போகும் போதே பிரஹாரம் சுற்றி ஸ்ரீகிருஷ்ணனின் சன்னிதியை அடைகிறோம். பகவான் மிகவும் சாந்நித்தியம் உள்ளவர் என்று சொல்லப் படுகிறார். ஜீவன் இன்னும் இருப்பதாகவும் நம்பப் படுமிறது. ஆதலால் கண்ணனை நாம் நேருக்கு நேர் பார்க்க முடியாது. கண்ணனின் தரிசனம் 9 ஓட்டைகளைக் கொண்ட ஒரு ஜன்னல் வழியாகத் தான் நடைபெறுகிறது. வெள்ளித் தகடால் மூடப்பட்ட அந்த ஜன்னல் நவகிரஹ ஜன்னல் என்று அழைக்கப் படுகிறது. வெள்ளித் தகட்டில் மஹாவிஷ்ணுவின் 24 உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளது.
நாங்கள் பார்க்கும்போது கண்ணன் மாடு மேய்க்கும் கோலத்தில் இருந்தான். அவன் நடையும், சடையும், எனக்கு "ஆடாது அசங்காது வா" என்ற ஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யரின் பாடல் தான் நினைவு வந்தது.

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக் கோவிந்தன் குழல் கொடூதினபோது,
பறவையின் கணங்கள் வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கவிழ்ந்திறங்கிக் கால் பரப்பிட்டுச் செவியாட்டகில்லாவே

என்று ஆழ்வார்களும் பாடியது கண்ணனை நேரில் பார்த்துத் தான் என்று புரிந்தது. என் கண்ணில் கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்தக் கள்வனைத் தூக்கி கொஞ்சி வேண்டுவன எல்லாம் செய்ததற்கு யசோதை செய்த தவம் மாபெரும் தவம். அது பெற்ற தாய் தேவகிக்குக் கூடக் கிடைக்கவில்லையே. பார்த்தால் நாம் கையில் தூக்கிக் கொஞ்சலாம்போல் கண்ணன். சென்னப் பட்டினம் அருகில் (இதுவும் கர்நாடகா தான். மைசூரில் இருந்து பங்களூர் வரும் வழியில் உள்ளது) தொட்டமளூர் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீராம அப்ரமேயர் கோயிலில் குடி கொண்டிருக்கும் குழந்தைக் கண்ணன் தவழ்ந்த கோலத்தில் இருக்கிறான். அவன் மூன்று முதல் ஆறு மாதத்திற்கு உட்பட்டவன் என்றால் இவன் நடக்க ஆரம்பித்து உள்ள குழந்தை. நாமும் கைப் பிடித்துக் கூடப் போகவேண்டும் என்ற ஆவல் எழுவது தவிர்க்க முடியாதது. பார்த்துக் கொண்டே இருந்தோம். கோவில் பணியாளர்கள் அப்படி ஒன்றும் அவசரப் படுத்துவது இல்லை. குறைந்தது 2 நிமிடமாவது பார்க்க அனுமதிக்கிறார்கள்.

2 comments:

  1. கீதா,
    எனக்கு இன்னும் 'அவனை'ப்பார்க்கும் பாக்கியம் கிடைக்கலை(-:

    கட்டாயம் ஒரு நாள் போகத்தான் வேணும்.
    ஆவல் அதிகமாகிறது.

    நல்ல தொடர்.

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  2. துளசி, நீங்கள் இந்தியா வரும்போது இதற்கெல்லாம் திட்டம் இட்டுப் பிரயாணம் செய்ய வேண்டும். ஒரு மாதம் எல்லாம் சொந்தங்களுக்கே பத்தாது.

    ReplyDelete