எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 03, 2006

My thoughts

My thoughts கடவுளுக்குக் கண்ணில்லை

ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இன்று g-mail பார்க்கும்போது இந்த மாதிரி ஒரு செய்தியைப் படிக்கும்படி நேரும் என்று நினைக்கவில்லை. திரு மஞ்சூர் ராஜாவின் செய்தி. அவர் நண்பர் தன் பெண்ணையும், பையனையும் காரில் கூட்டிச் செல்லும் வழியில் signalக்காக வண்டி நிற்க cellphoneல் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். எதிர் பக்கமிருந்து வந்த வண்டி மோதி பையன் உடனேயே போய் விட்டானாம். பெண்ணும் திங்கள் அன்று போய் விட்டாள்.முறையே 10லிருந்து 6 வயது வரை உள்ள பிஞ்சுக் குழந்தைகள். இப்போதெல்லாம் இந்த மாதிரி சாவுகள் அதிகரித்து உள்ளன. பாதிக்காரணம் கைதொலைபேசி. அதை வைத்துக்கொண்டு இளைஞர்கள் எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். பெரியவர்களும் கூட. வண்டி ஓட்டும்போது பேச வேண்டாம் என்றால் யார் கேட்கிறார்கள்? போன வருடம் குரோம்பேட்டையில் இளம் பெண்கள் கூட இதனால் ரயிலுக்குப் பலியானார்கள். அதிகம் இளைஞர்கள் சாவது இதன் காரணத்தால் தான். ஒரு வகையில் அண்ணா யுனிவர்சிட்டித் துணை வேந்தரின் உத்தரவு சரியென்று தோன்றுகிறது. அந்தக் குழந்தைகள் கைத் தொலைபேசியில் பேசவில்லை என்றாலும் அவர்கள் தந்தையின் அஜாக்கிரதை தான் இதற்குக் காரணம் என்பது மறுக்க முடியாது. பாவம், தன் குழந்தைகளின் சாவுக்குத்தான் காரணமாக அமைந்தத் பற்றி அவர் எவ்வளவு துடிப்பார்? அந்தத் தாய் எத்தனை வேதனைப் படுவாள்?கடவுள் ஏன் சிலருக்கு இம்மாதிரித் தண்டனை கொடுக்கிறார் புரியவில்லை. நாம் காய்கறி வாங்கும்போது பிஞ்சுக் காய்களாகப் பொறுக்குவது பார்த்துவிட்டு அவரும் இம்மாதிரி மாறிவிட்டாரோ?கடவுள் அந்தத் தாய் தந்தையருக்கு மன ஆறுதல் கொடுக்கப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment