எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 23, 2013

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், வீடெங்கும் மாவிலைத் தோரணம்!


திருமண சம்ஸ்காரங்களில் இரு வீட்டாரின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாச் சமூகங்களிலும் இரு வீட்டார் பங்கு என்பது முக்கியமானது.  முன் பதிவுகளில் சொல்லப்பட்டவை பிராமணர்களுக்கு என்றால் மற்ற சமூகத்திலும் சம்பிரதாயங்கள் இல்லாமல் போகவில்லை. ஒவ்வொருத்தருக்கும் அவரவர் குடும்ப, குல வழக்கப்படியான சம்பிரதாயங்கள் கட்டாயமாகவே கடைப்பிடிக்கப் படுகின்றன.  மற்ற சமூகத்தினரில் பொன்னுருக்குதல் என்னும் திருமாங்கல்யத்துக்குப் பொன்னுருக்குவதை மாப்பிள்ளை வீட்டில் செய்வதை இன்னமும் பலர் கடைப்பிடிக்கின்றனர்.  அதன் பின்னரே கன்னிக்கால் ஊன்றுதல் என்னும் பந்தக் கால் முஹூர்த்தம் நடைபெறுகிறது.  இது அநேகமாய் இரண்டு வீடுகளிலும் ஒரே நாள் ஒரே நேரம் அவரவர் வீடுகளின் ஈசான்ய மூலையில் கன்னிக்கால் ஊன்றப்பட்டு நடைபெறும்.  இதற்குப்பெரும்பாலும் கல்யாண முள்முருங்கை மரத்தின் கொம்புகளே பயன்படுத்தப் படுகின்றன. வீட்டுக்கு மூத்த முதியவர் ஒருவரால் அந்தக் கொம்பின் நுனியில் மஞ்சள் பூசப்பட்டு மாவிலைக்கொத்து கட்டப்பட்டு ஒரு துணியில் செப்புக்காசும் முடிந்து வைக்கப்பட்டு ஊன்றப்படும். பின்னர் மற்றவை அனைவருக்கும் இருப்பது போல் நவதானியம், காசுகள், நவமணிகள் போன்றவற்றை இட்டு 3 சுமங்கலிப் பெண்களால் பால் ஊற்றப்பட்டுக் கீழே பூமியிலிருந்து கொம்பு தெரியும் அடிப்பக்கம் திருநீறு, குங்குமம், சந்தனம் பூச்சப்படும்.. ஒரு சிலர் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட்டும் பந்தக்கால் ஊன்றுகிறார்கள்.  இது அவரவர் குடும்ப வழக்கப்படி செய்வார்கள்.  பந்தக்கால் ஊன்றிய பின்னர் இரு வீட்டினரும் எந்தவிதமான துக்க நிகழ்விலும் பங்கெடுக்க மாட்ட்டார்கள்.

மற்ற சமூகத்திலும் முளைப்பாலிகை போடுவது உண்டு.  ஆனால் இது அநேகமாய்ப் பெண் வீடுகளிலேயே நடைபெறும். மூன்று அல்லது ஐந்து மண் கலசங்க்களில் மண் பரப்பி நீர் ஊற்றிப் பாலில் ஊற வைத்த நவதானியங்களை 3 அல்லது ஐந்து சுமங்கலிப் பெண்கள் தூவிவிட்டுப் பாலும், நீருமாய்க் கலந்து விடுவார்கள்.  மூன்று முறைகள் விதை தெளிப்பார்கள்.  பின்னர் வீட்டின் பூஜையறையில் அவை வைக்கப்பட்டிருக்கும்.  திருமணதினத்தன்று மணவறைக்குக் கொண்டு செல்வார்கள்.  அநேகமாகப் பிள்ளை வீட்டினர் பொன் உருக்கும் தினத்தன்று பெண் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். "

"சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்" 60

எனச் சிலப்பதிகாரத்தில் வருவது போல் முளைப்பாலிகை என்பது பல ஆயிரம்  ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருந்து வருவது தெரிகிறது.  மற்றப்படி பந்தல் அமைப்பது, அலங்காரங்கள் செய்வது, சத்திரங்களில் கல்யாணம் நடந்தால் தாங்கள் இருக்கும் வீடுகளிலும், சத்திரத்திலும் குலை தள்ளிய வாழைமரங்களைக் கட்டுவது போன்றவை நடக்கும்.  வாழை ஒரே முறை குலை தள்ளினாலும், அதன் சந்ததியானது தொடர்ந்து வரும்.  அதைப் போல் நம் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரே முறை தான் ஆனாலும் நம் சந்ததியும் வாழையடி வாழையாகத் தொடர வேண்டும் என்பதைச் சுட்டவே மங்களமாக வாழைமரம் கட்டுவார்கள். பாக்கு மரங்களாலும் அலங்கரிக்கப்படும்.  பாக்குக் கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் தம்பதிகள் ஒற்றுமையாக இருந்து பல நன் மக்களைப் பெற்று மகிழ்வோடு வாழவேண்டும் என்பது இதன் ஐதீகம். தென்னை மரத்தின் தேங்காயும் இப்படியே தென்னை மரம் கற்பகத் தருவாகக் கருதப் படுவதால் திருமணத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஆயிற்று, விரதம் முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்துண்டாச்சா?  மதியம் இரண்டு மணிக்குக் காஃபி குடிப்பவர்களுக்குக் காஃபியும், தேநீர்க்காரங்களுக்குத் தேநீரும் அளிக்கப்படும்.  சரியா மூணு மணிக்கு டிஃபன் இலை போடுவதாகத் தலைமை சமையல்காரர் சொல்லி இருக்கார்.  ஆகவே எல்லாரும் டிஃபன் சாப்பிட்டுட்டு அலங்காரங்கள் முடிந்து நிச்சயதார்த்தத்துக்குத் தயாரா இருக்கணும்.  சரியா? :))


பெண்ணின் அம்மா நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாக அனைவரையும் வந்து அழைத்துவிட்டுச் செல்வார்.  அதே போல் பெண்ணின் அப்பாவும் ஆண்கள் தரப்பில் சொல்லுவார்.

மாப்பிள்ளை அழைப்பு உண்டா?  ஆஹா, உண்டு, உண்டு.  நிச்சயம் உண்டு.  அலங்கரிக்கப்பட்ட கார் அல்லது சாரட் வண்டி ஏற்பாடு பண்ணணுமே!  பண்ணியாச்சு!  அதிலே பாதி வழியிலே பெண் போய்க் கூட உட்கார்ந்து சத்திரம் திரும்பும்போது வருவாளே, பெண்ணைத் தயார் செய்ய வேண்டாமா?

 இல்லை, பிள்ளை வீட்டில் அது பழக்கம் இல்லையாம்.  சும்மா சத்திரத்து வாசலிலே ஆரத்தி எடுத்துப் பிள்ளையை உள்ளே அழைக்கையில் சேர்த்து உட்கார வைத்துப் படம் பிடிச்சால் போதும்னு அபிப்ப்ராயப் படறாங்க.

அப்படியா, சரி அப்படியே செய்துடலாம்.  இதில் எல்லாம் வருத்தம் வரக்கூடாது.

ரெண்டு பேருக்கும் மாலை போட ஆனை வந்திருக்கு! என்ன ஆனையா?? ஆனையைக் கட்டி யார் தீனி போடறது?

அட, அதெல்லாம் பெண்ணின், பிள்ளையின் நண்பர்கள் ஏற்பாடாம்!

அது சரி, நிச்சயம் சத்திரத்திலா? கோவிலிலா?

அதான் மாப்பிள்ளை அழைப்பு உண்டுனு சொல்லிட்டீங்களே, அதனாலே பிள்ளைக்கு  மாப்பிள்ளை அழைப்பு டிரஸ் கொடுப்பதை  அங்கே வைச்சுண்டு மாப்பிள்ளை அழைத்துச் சத்திரம் திரும்பியதும் நிச்சயம் வைச்சுக்கலாமா? நேரம் ஆயிடாதோ?

அப்போ ஒண்ணு செய்யலாம்.  இரண்டு வீட்டினரும் தனித் தனிக் காரில் கோயிலுக்குப் போயிட்டு வந்து, இங்கே நிச்சயம் முடிந்து மாப்பிள்ளை அழைக்கலாம்.

இல்லை, இல்லை, இங்கே சத்திரத்து வாசலிலேயே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு.  இரண்டு வீட்டுக்காரங்களும் அங்கே போயிட்டு வந்துடுங்க. அப்புறமா நிச்சயம் பண்ணிக்கலாம்.

அப்பாடா, சாஸ்திரிகள் சரியாத் தான் சொல்லி இருக்கார், அப்படியே செய்துடலாம்.  சீக்கிரமா நிச்சயதாரத்தத்துக்குத் தயாராகுங்கப்பா எல்லாரும்.  அதுக்குள்ளே நிச்சயதார்த்ததுக்கு வேண்டியவற்றைத் தயார் பண்ணிடுங்க யாரானும்'

அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.  நீங்க நிம்மதியா கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை பண்ணிட்டு வாங்க.


பாலிகை படம் நன்றி: அகோபிலம் தளம்.

நிச்சயதார்த்த அலங்காரம் படம் சொந்தம்! :))

21 comments:

  1. me d first.

    நிச்சயதார்தத்திற்கு ரெடியாகி வந்திடறேன்

    ReplyDelete
  2. இங்கே சத்திரத்து வாசலிலேயே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. இரண்டு வீட்டுக்காரங்களும் அங்கே போயிட்டு வந்துடுங்க. அப்புறமா நிச்சயம் பண்ணிக்கலாம்.//

    அதுதான் இப்போது நடந்து வருகிறது எல்லோருக்கும் வசதி.
    தலைப்பு அருமை.

    ReplyDelete

  3. "ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், வீடெங்கும் மாவிலைத் தோரணம்!"

    தலைப்பைப்போலவே தகவல்களும் படிப்போர் மனதில் தோரணம் கட்டி மகிழ்வளிப்பதாக உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாங்க புதுகை, முதல் ஆளா வந்தாச்சு! வருகைக்கு நன்றி. காஃபி சாப்பிட்டாச்சா? அப்புறமா டிஃபன் சாப்பிட்டதும் அலங்காரம் செய்துக்குங்க. அதான் சரியா இருக்கும். :))))

    ReplyDelete
  5. வாங்க கோமதி அரசு, ஆமாம், இப்போல்லாம் யாருக்கும் நேரமில்லையாச்சே! :))))

    ReplyDelete
  6. வாங்க வைகோ சார், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. நான் ரெடிப்பா.
    யார் பக்கம் உட்காரணும்? பெண் பக்கமே உட்காருகிறேன். அருமை கீதா.அனைத்தும் அருமை.

    ReplyDelete
  8. கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு வந்து விடுகிறேன்... எல்லாம் ஒழுங்காக நடக்கணும்... ஜாக்கிரதை... ! ஹிஹி..

    ReplyDelete
  9. வாங்க வல்லி, டிஃபன் சாப்பிடலையா?? அப்புறமா உங்களுக்கு நேரம் ஆயிடப் போறது! டிஃபன் சாப்பிட்டுட்டு வந்து உட்காருங்க.:))))

    ReplyDelete
  10. வாங்க டிடி, நீங்களும் டிஃபன் சாப்பிட்டுட்டுக் கோயிலுக்குப் போங்க. :))))

    ReplyDelete
  11. உங்களின் அடுத்த பகிர்வு : http://engalblog.blogspot.in/2013/07/2.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. இத்தனையையும் தப்பாமல் செய்கிறார்களா இப்போதெல்லாம் என்பது சந்தேகம்தான். இவ்வளவையும் ஞாபகம் வைத்துக் கொண்டு செய்ய வேண்டுமே.... இதற்குத்தான் வீட்டில் பெரியவர்கள் இருக்க வேண்டும். சாஸ்திரிகள் கூட சம்பிரதாயங்கள் செய்யுமுன் அந்த வீட்டு பெரியவர்களைக் கேட்டுக் கொள்வார் இல்லையா?

    ReplyDelete
  13. வாங்க வெங்கட், டிஃபன் சாப்பிட்டாச்சா? :))))

    ReplyDelete
  14. வாங்க டிடி, தகவலுக்கு நன்றி. :))))

    ReplyDelete
  15. வாங்க ஶ்ரீராம், டிஃபன் கிடைச்சதா? ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க போல!

    ஹிஹி, பெரும்பாலும் இப்போ இப்படி எல்லாம் விலாவாரியாகச் செய்வதில்லை என்பது தான் வருத்தமான ஒன்று. இன்னிக்கு எல்லாருக்கும் அவசரம், ஆகவே சாஸ்திரிகளுக்கும் அவசரம். பெரும்பாலான சாஸ்திரிகள் ஒரு கையில் மொபைலை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே மந்திரம் சொல்கின்றனர்! :(

    ReplyDelete
  16. ஆரம்பமே அருமை.

    ரெடியாகி வந்துவிடுகின்றோம் மாப்பிள்ளை ஊர்வலம் பார்க்க. நம்பக்கம் இவ்வழக்கம் ஒன்றும் இல்லையே.

    ReplyDelete
  17. மாலை டிபனுக்கு தேங்காய் சேவையும், கோதுமை அல்வாவும், போண்டாவும் உண்டல்லவா....:))

    நானும் தயாராகி வருகிறேன். நானும் வல்லிம்மா கூட பெண் பக்கம் தான்.

    ReplyDelete
  18. வாங்க மாதேவி, சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க. :))))

    ReplyDelete
  19. வாங்க கோவை2தில்லி, கோதுமை அல்வா கல்யாணத்தன்று காலை போடச் சொல்லி இருக்காங்க. சேவை லிஸ்டிலேயே இல்லை. நல்லவேளையா போண்டா இருக்கு! :))))))

    ReplyDelete
  20. அருமையான தகவல்கள்

    ReplyDelete