எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 14, 2009

ஒரு அவசரப் பதிவு இது, பெருமாளையே காணோம்!

பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((

எங்க ஊரில் மாரியம்மன் கோவில் தவிர, ஒரு சிவன் கோவிலும், ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது. இது தவிர, ஐயனார் கோவில், பிடாரி கோவில் போன்ற காவல் தெய்வங்களும், பொய்யாப் பிள்ளையார் துணையே இல்லாமல் தனியாகவும் இருக்காங்க. இந்த ஐயனார் கோவில் பக்கம் உள்ள வயலில் உழுவதற்குத் தோண்டியபோது சில சிலைகளும், அஸ்திவாரங்கள் போன்ற அமைப்பும் கிடைத்ததாய்ச் சொல்கின்றனர். அந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்ததாயும் திருமூலர் எழுப்பிய முதல் மாடக் கோயில் அது எனவும், அதை லிங்கத்தடி எனவும் சொல்கின்றனர். அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் தனியாய் வரும். இப்போப் பெருமாள் கோயில் பத்தி. பரம்பரை தர்மகர்த்தாக்கள் ஆன எங்க குடும்பத்தார் அதை அரசுக்கு மாற்றி 70களின் கடைசியில் கொடுத்தாச்சு. கோவிலுக்கு என்று எங்கள் குடும்ப நிலத்தில் இருந்து அரைவேலியும் எழுதி வைத்திருக்காங்க. அதைத் தவிரவும், கொஞ்சம் நிலத்தில் சில மரங்கள், ஒரு கருகமரத் தோப்பு போன்றவையும் உண்டு. இதில் மரங்கள் இருந்த நிலத்தில் மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன. விற்கப் பட்டிருக்கிறது. கோவில் நிலத்தில் விவசாயமும் நடைபெற்று வருகிறது. கருகத் தோப்பும் இருக்கிறது. ஆனால் பெருமாள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் யாராவது ஊருக்குப் போனால் தான் அவருக்குக் குளியல், துணி மாற்றம், சாப்பாடு எல்லாமே. வெளிச்சமே அப்போது தான் பார்க்கிறார். நான் திருமணம் ஆகிவந்து இந்தக் கோயிலில் நல்ல முறையில் எல்லாக் கால பூஜையும் நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு விளக்குக் கூடப் போடுவது இல்லை. கோவில் தேர்முட்டி, மற்றும் கோவிலின் வெளிச்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டு இப்போது பட்டாவே போட்டுக் கொடுத்தாச்சு. கோவிலுக்கு நேர் எதிரே சன்னதிக்கு நேரே ஒரு பெரிய மரம் வெட்டப் பட்டுப் பல நாட்களாய்க் கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தச் சொல்லி தற்போதைய டிரஸ்டி கிட்டே சொல்லியும் அவர் இதோ, போய்ச் சொல்லறேன், என்று டாடா இண்டிகாம் ஆட்கள் மாதிரியே சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போப் போனவாரம் போனபோது கூட அப்படியே இருக்கிறது. மாடுகள் கட்டப் பட்டு, ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன கோயிலுக்குப் போகும் வழியில். நிலத்தில் விளைந்து வந்த நெல் கோவிலுக்கு அளக்கப் படவே இல்லை. நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம். அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ வருவாங்க. வேறு ஊரில் இருந்து வந்து இருந்து செய்வதென்றால் நிரந்தரமாய் ஏதேனும் ஒரு வருமானம் வேண்டாமா?

தன்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டுப் பெருமாள் வேண்டுமானால் பட்டினியாய் இருப்பார். அவருக்குப் பரவாயில்லை. ஆனால் வந்து பூஜை செய்யறவங்களுக்குக் குடும்பம், குழந்தைன்னு இருக்குமே? அதுக்கு ஏதாவது கொடுக்கணுமே? கோவில் டிரஸ்டியிடம் கேட்டால் குத்தகைக்காரர் அளக்கவில்லை என்கிறார். குத்தகைக்காரர் கிட்டே கேட்டால் விளையவே இல்லை, சிவன் கோவிலுக்கு என்ன கொடுத்தாங்க? அவங்க கிட்டே கேட்கிறதில்லையே, என் கிட்டே மட்டும் ஏன் கேட்கணும்? என்று சொல்றாங்க. இந்த அழகில் பெருமாளின் இருப்பிடமே இடிந்து விழுந்து விடுமோனு பயமா வேறே இருக்கு. கர்ப்பக் கிரகத்தில் மூலவருக்குக் கீழே வரை வேர் பிடித்து ஒரு அரசமரம் அபாரமாய் வளர்ந்திருக்கு. அங்கங்கே விரிசல்களில் வெளவால்கள் அடைந்துள்ளன. நாங்களும் இந்தக் கோயிலுக்குப் பராமரிப்புச் செய்து கும்பாபிஷேகம் நடத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறோம். நேற்று வந்த தகவல் படி ஊரில் யாருமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. கோவில் நிலத்தை விற்றாவது அதை வைப்பு நிதியில் போட்டு அதில் இருந்து வரும் வட்டியில் கோவிலை நிர்வாகம் செய்யலாமே எனத் தோன்றுகிறது. ஆனால் ஊர் இரண்டு பட்டுக் கிடக்கிறபடியால் எதையும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை, பெருமாளே தனக்கு ஒரு வழியைத் தேடிக்கணும்.

R.E.A.C.H. Foundation மூலம் ஏதானும் வழி பிறக்கும் என்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்றைய பதிவுகள் இரண்டுமே கொஞ்சம் சீரியஸ் பதிவாகி விட்டது. இவங்க மூலமாத் தான் ஏதேனும் செய்ய முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இவங்க விலாசம் reach.foundation.india@gmail.com. இதிலே நம்ம சக பதிவாளர் மரபூர் ஜெ.சந்திரசேகரன் ஒரு உறுப்பினர். அவரை ஞாயிறு அன்று போய்ப் பார்த்தோம். உதவிகள் செய்வதாய்ச் சொன்னாலும் எப்படி இருந்தாலும் ஊர்க்காரங்க சம்மதம் தான் முக்கியம்னு அவரும் சொல்றார். (வழக்கம் போல் சந்திரசேகரும், நான் நினைச்சாப்பலே இல்லை, ஹிஹிஹி) பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனசு வைக்கணும் போல் இருக்கு. மேலே இருப்பது அவர்தான் குடும்ப சமேதராய், பொதுவாய் மூலஸ்தானத்தில் இருக்கும் திருமேனிகளைப் படம் எடுத்துப் போடுவது இல்லை. இவருக்கு முறையான பூஜைகள் நடந்து 25 வருஷமாவது ஆகி இருக்கும். கோவிலின் வெளிப்புறம் படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும் போடுகிறேன்.


சில மாதங்கள் முன்னே நான் போட்ட இந்தப் பதிவு இது. இப்போ இந்தப் படத்தில் மூலவருக்கு முன்னே இருக்கும் உற்சவ விக்கிரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டது. பெருமாளுக்கு அரைவேலி நிலம் இருந்தும் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டுட்டு இருந்தார். இப்போ அவரோட உற்சவரையே தூக்கிண்டு போயாச்சு! நிலத்தில் விளைந்ததை எல்லாம் இந்தக் கோயிலின் உள்ளேயே வைத்துக் கொண்டு பெருமாளுக்கு ஒரு பிடி அரிசி கூடக் கொடுக்காமல் சாப்பிட்டிருக்காங்க. எப்படி மனசு வந்தது? இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலம் பிறக்கும்?? மனசு கொதிச்சுப் போய் எழுதி இருக்கேன். இதுக்கு என்ன நீதி? எப்போ கிடைக்கும்? கண்ணீருடனே எழுதறேன்!

10 comments:

  1. Anonymous14 July, 2009

    Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  2. மேடம்,

    என்ன இது ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். முடிவில் சொல்லி இருக்கீங்க. அப்போதே இணைய தளத் தொந்தரவால் பின்னூட்டம் போட முடியவில்லை. அப்போது போட நினைத்ததை இப்போது சொல்கிறேன்: "படித்தது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்" என்பதற்குப் பொருத்தமாக நீங்களே அந்தக் கோவிலை ஒரு பள்ளிக் கூடமாக மாற்ற ஏன் முயற்சி எடுக்கக் கூடாது?"

    பெருமாளுக்கும் அந்த இடத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப் பெருமாளே சொல்வது போல் அங்கிருந்து பெயர்ந்து போய் HINT கொடுத்திருக்கார்.

    "பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்" என்று கூப்பிடுங்கள், மூலவரும் உங்களுன் கிளம்பி வந்து விடுவார்.

    ReplyDelete
  3. இப்போதைக்கு வாழ்த்துகள் மட்டும் ;-)

    ReplyDelete
  4. //நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம்.//

    எப்பவோ போய் இவங்க விளக்கேத்து்வாங்களாம். அதுக்காக அந்தப் பெருமாள் அங்கே காத்திருக்கணுமாம்.~!
    அவருக்க விளக்கேற்ற பலர் இருக்காங்கன்னு அவர் போயிருக்கலாமில்லியா!

    ReplyDelete
  5. செய்தி வளையம், மறு வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. ரத்னேஷ், ஏற்கெனவே ஊரில் என் கணவர் படிச்ச காலத்திலே இருந்த ஆரம்பப் பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் இருக்கு. உயர்நிலைப்பள்ளி கிராமத்திலே இருந்து ஒரு கிமீட்டருக்குள்ளேயே இருக்கு. அனைத்துப் பள்ளிகளும் சொந்தக் கட்டிடத்திலேயே இயங்குகின்றன. கோயிலைத் திரும்பக் கட்ட முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி இருந்தால் அர்த்தம் இருந்திருக்குமோ?? இது பற்றி விரிவாய் எழுதறேன். :(((((((((

    ReplyDelete
  7. சம்பந்தம் இல்லைனு பெருமாள் போயிடலை. வலுக்கட்டாயமாப் பூட்டை உடைச்சு அவரைக் கொள்ளை அடிச்சுட்டுப் போயிருக்காங்க! :((((((((((

    ReplyDelete
  8. முகவை மைந்தன், பெருமாள் காணாமப் போனதுக்கா வாழ்த்துகள்??? என்னங்க இது?? பதிவு மாத்திப் பின்னூட்டம் போட்டிருக்கீங்கனு நினைக்கிறேன். ஆனாலும் சிரிப்பை வரவழைத்ததுக்கு நன்றி. :)

    ReplyDelete
  9. வாங்க டாக்டர், ஏற்கெனவேயே இது பத்தி சூரி சாருக்கும், எனக்கும் ஒரு விவாதம் நடந்து முடிஞ்சு அது பத்தி ஒரு பதிவே போட்டாச்சு. ரொம்பச் சொன்னா சுயபுராணமா ஆயிடும். அதனால் உங்க கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு முடிச்சுக்கறேன். நன்றி.

    ReplyDelete
  10. ”அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ வருவாங்க”

    ஏன் மூன்று பெயர்கள்? வெவேறு ஆட்களா?

    அவர்கள் சம்பாத்தியத்தைப்பற்றி கவலைப்படுகிறீர்கள். அவர்கள் பணத்திற்காகத்தான் வருவர். இல்லையா? எனவே, ‘இந்த மடம் இல்லாவிட்டால் சந்த மடம்’ எனபதே அன்னாரின் கொள்கை.

    பெருமாளின் பெயரென்ன? எந்தவூர்? ஊர் மக்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களும் சேர்ந்து பெருமாளுக்காக அழுதார்களா?

    மக்கள் நினைத்தால் முடியும். ஏன் நினைக்கவில்லை. இங்கு நீங்கள் நிறைய மறைக்கிறீர்கள் என தெரிகிறது.

    உங்கள் பரம்பரை சம்பந்தப்பட்ட கோயில் என்ற பச்சாபிதமே தொக்குகிறது.

    ஆதியிலிருந்து அந்தம் வரை, பெருமாள் இங்கு தனிமனிதரிகளின் சொத்தாகிறார். பொது அல்ல. இருப்பின், மக்கள் நன்றாக கவனித்திருப்பர்.

    இந்துமததிற்குப் பிடித்த பீடையிது - தனிமனித சுகத்திற்காக இறைவ்ழிபாடு.

    ReplyDelete