எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 25, 2009

அப்பாடா! :D

முந்தாநாள் கூகிளாரா? இல்லை, ப்ளாகரா?? ஒரு ஆட்டு ஆட்டி வச்சுட்டாங்க சிலரை. ஒரு சிலருக்கு எண்ணங்கள் பதிவுக்கு மட்டும் சுட்டி கிடைக்கலை, இன்னும் சிலருக்கு வலைப்பக்கமே திறக்கமுடியலை. சிலருக்கு என்னுடைய எந்தப் பதிவுகளுமே கிடைக்கவில்லை. நானும் கண்ணன் வருவான் பதிவுகளில் வந்த பின்னூட்டங்களை மெயில் மூலம் வெளியிட்டுவிட்டு, பதில் கொடுக்க முயன்றால் திறக்கவே இல்லை. இது அடிக்கடி நடக்கும் ஒன்று என நினைத்து அசட்டையாக குழும மடல்களைப் பார்க்கப்போய்விட்டேன். பின்னர் பதிவுகளை அப்லோட் செய்ய நினைத்து முயன்றால் மீண்டும் வரவில்லை. சைட் விக்கினு ஒண்ணு இருக்கு, புதுசா, அங்கே போய்க் கூட வெளியிடலாம்னு ஒரு செய்தி! திரும்பத் திரும்ப முயன்றதில் இன்னொரு செய்தி, இந்த வலைப்பக்கங்களே இப்போக் கிடையாது, நீ வேண்டுமானால் புதுசா உன்னோட பேரிலே திறந்துக்கோ. sivamgss.blogspot.com பேரிலே இப்போ எதுவுமே இல்லைனு அடிச்சுச் சொல்லுது.

கிட்டத் தட்ட ஒருமணி நேரம் முயன்றும் எதுவும் வரலை. வலைப்பக்க உதவிக்குப் போய்ப் பார்னு எரர் மெசேஜ் சொல்லுது. ஆனால் அங்கேயும் போகமுடியலை. சரினு உதவி கேட்டு ஒரு பதிவு எழுதி குழும மடல்களுக்கும், எண்ணங்கள் பதிவுக்கு ஜிமெயில் மூலமும் அனுப்பினேன். எண்ணங்கள் பதிவிலே வெளியீடு ஆனதா என்னனு பார்க்கமுடியலை. குழுமத்திலும் நிறைய பேருக்கு இதே பிரச்னை இருந்திருக்கிறது அப்புறமாத் தெரிஞ்சது. ஆகையால் உடனே பதிலும் வரலை. மறுபடியும் மெயிலைப் பார்த்தால் கோபி கேட்டிருந்தார் என்ன ஆச்சுனு?? இன்னும் சிலருக்கும் எதுவுமே வரலைனும் தெரிஞ்சது. கணினியை மூடிவிட்டு நிம்மதியா உட்கார்ந்தேன். என்றாலும் கிட்டத் தட்ட எண்ணூறு பதிவுகளுக்கு மேல் எழுதினது. சில பதிவுகள் மொக்கைகள்தானேனு இருந்தாலும், மற்றப் பதிவுகளை அர்த்தமுள்ள பதிவுகள்னு சொல்லிக்கமுடியாது என்றாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே? அதுவும் ராமாயணத்துக்கும், இப்போ எழுதற கண்ணன் பதிவுகளுக்கும் பல புத்தகங்கள், கூகிளார் தயவில் பல இடங்களுக்கும் போய்த் தேடிக் குறிப்புகள் எடுத்துனு. அதெல்லாம் போயிடுச்சோனு கொஞ்சம் வருத்தம் தான்.

என்றாலும் பரவாயில்லை, புதுசாவே ஆரம்பிப்போம்னு மனசைத் தேத்திட்டு, மறுபடியும் ஒருமணி நேரம் கழிச்சுக் கணினியைத் திறந்து உடனே வலைப்பக்கம் வராமல், குழும மடல்களைப் பார்த்துட்டு, அங்கே இருந்தே வலைப்பக்கம் முயன்றால் ஆன்மீகப் பயணம் மட்டும் திறந்தது. அங்கே இருந்து உடனே ப்ரொஃபைலுக்கும் போக முடிந்தது. ப்ரொஃபைலே வராமல் இருந்தது. ப்ரொஃபைல் வரவும் அங்கேயே எண்ணங்கள் சுட்டியும் இருந்தது. கோபி பார்த்தப்போ ப்ரொஃபைலிலே எண்ணங்கள் சுட்டியே இல்லைனு வருத்தப்பட்டிருந்தார். அதுவேறே யோசனை. சுட்டி இருந்ததும் க்ளிக்கினால் உடனேயே வந்தது. என்னுடைய உதவி தேவை பதிவு மெயில் மூலம் அனுப்பினதும் வெளியாகி அதுக்கு ரா.ல. பித்தனின் வாக்கு இருவரின் பின்னூட்டங்களும் வந்திருந்தது. மறுநாள் தான் தெரியும் இது மாதிரி பிரச்னை இரண்டு மணி நேரத்துக்கும் மேலே பலருக்கும் இருந்திருக்குனு. செர்வர் பிரச்னை என்று சொன்னார்கள். எப்படியோ எல்லாம் சரியாச்சு இறைவன் அருளாலே. கண்ணன் காத்துட்டு இருக்கான் வரதுக்கு. சீக்கிரமாய் வந்துடுவான். பதில் கொடுத்த அனைவருக்கும், தனி மடலில் விசாரித்தவர்களுக்கும், உதவி கேட்டதுக்கு பதில் சொன்னவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னோட பதிவுகளுக்கும் ரசிகர்கள் இருக்காங்கனும் தெரிய வந்ததில் சந்தோஷமே.

1 comment:

  1. இது உங்களுக்கு ஒரு சின்ன உதாரனம்தான் இணையம் எப்போது வேண்டுமானலும் செயல் இழக்கும், ஆதலால் ஒரு தனி ஹார்ட் டிஸ்க் வாங்கி உங்கள் பதிவுகளை அந்த டிஸ்க்கில் காப்பி செய்து வைக்கவும். இணையம் தொடர்பு போனாலும் நாம் மீண்டும் புதுபிக்க முடியும். நன்றி.
    முக்கியமாக கண்ணன் தொடரை வைரஸ் புகாத ஹார்ட் டிஸ்க்கில் சேமிக்கவும்.

    ReplyDelete