எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 17, 2008

தமிழ் ஓவியாவுக்கு ஒரு பதில்!

திரு தமிழ் ஓவியா அவர்களே!
தங்கள் பின்னூட்டங்கள் வந்து சேர்ந்தன. உங்களுடைய பின்னூட்டங்களைப் படித்தேன். எனக்கு நீங்கள் எழுதிய கருத்துக்களில் ஆழ்ந்த உள்ளறிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இதை எழுதுவது நான் படித்த ஆங்கில ராமாயணத்தை அடிப்படையாக வைத்தே எழுதுகின்றேன் என்பதை முதலிலேயே தெரிவித்திருக்கின்றேன். வால்மீகியை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட அதன் கருத்துக்களைத் தான் தெரிவிக்கின்றேன். தங்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் தகுதியோ, அல்லது தங்களுடன் விவாதம் செய்யும் அளவுக்கு ஆழ்ந்த உள்ளறிவோ எனக்கு இல்லை எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ராமாயணத்தை அனைவரும் படிக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் யாரிடமும் சொல்லவில்லை. என் சொந்த வலைப்பதிவில் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எழுதும் இதை நீங்கள் படிப்பதோ, படிக்காமல் இருப்பதோ உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆகவே உங்களைப் படிக்க வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. என்னை எழுதக் கூடாது என்று நீங்களும் கூற முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன். இதற்கு மேல் உங்கள் பின்னூட்டங்கள் தொடர்ந்தாலும், என்னிடமிருந்து பதில் ஏதும் வராது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி வணக்கங்களுடன்,

கீதா சாம்பசிவம்.

3 comments:

  1. மரியாதைக்குரிய கீதா சாம்பசிவம் அவர்களுக்கு,
    வணக்கம்
    யாரையும் எழுதக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.ஒருவலைப்பதிவில் ஒரு பொருளை அல்லது ஒரு கருத்தை தெரிவிக்கும் போது அதற்கு வெட்டியோ ஒட்டியோ விமர்சனம் வரும்.அதுதான் இயற்கை. நாம் எழுதும் கருத்தை செழுமைப்படுத்திக் கொள்ள அந்த விமர்சனங்கள் பேருதவியாக இருக்கும். என்கருத்தை மறுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. அதேவேளை என் கருத்தைக் கூறக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்று சொன்ன பெரியாரின் வழியில் வந்தவன் நான். எனவே தான் நீங்கள் எழுதும் இராமாயணம் எங்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.இராமாயணம் மட்டுமல்ல அதைப் பரப்பும் நீங்களும் எங்களை (பார்ப்பனரல்லாதவர்களை) மதிக்கவா போகிறீர்கள்?
    உங்கள் பதிலை எதிர்பார்க்காமல்
    நியாயமான பிரச்சாரத்தை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்போம். நன்றி

    ReplyDelete
  2. எல்லாம் பார்வையில் இருக்கிறது.
    ஓட்டை கண்டு பிடிக்க வேண்டுமானால் எதில் வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்" என்று சொன்னது போல பிடித்ததை உள்வாங்கிக் கொண்டு பிடிக்காததை விட்டு விட்டு போகலாமே!

    ReplyDelete
  3. திரு.திவா "பிடித்ததை உள்வாங்கிக் கொண்டு பிடிக்காததை விட்டுவ்ட்டு போகலாமே"என்று சொல்கிறார்.நல்ல ஆலோசனை.தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல் இராமாயணத்தில் வரும் சம்பங்கள் பார்ப்பனரல்லாதவர்களை இழிவுபடுத்துகிறது. ஏதோ ஒரு காலத்தில் பார்ப்பனரல்லாத மக்கள் விபரம் புரியாமல் அந்தக்கதையை படித்தார்கள்.பரப்பினார்கள்.சுயமரியாதை அடைந்த பின்பும் இந்த 2008- லும் மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தும் இராமயணக் கதையை பரப்பிக் கொண்டிருக்கும் போது இராமாயணத்தில் வரும் சம்பவங்கள் குறித்த நியாயமான விமரிசனத்தை ,வாதத்தை எடுத்து வைத்தால் அது குறித்து பதில் சொல்லுவதுதான் நியாயவானுகளுக்கு அழகு. அதைவிட்டுவிட்டு " நான் பேசும் போது கெட்டவார்த்தைகள் எல்லாம் பேசுவேன் . ஆனால் நீங்கள் அதைப் பொருட்படுத்தாமல் நல்ல வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதைப் போல் உள்ளது திவாவின் வாதம்."நீ போனால் கலகம் ஆகிவிடும் நான் போய் செருப்பால் அடித்துவிட்டு வருகிறேன்" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.
    பெரியார்தான் சொல்லுவார் அரிசி வாங்க வேண்டும் என்றால் அரிசிக் கடையில் வாங்க வேண்டுமே தவிர மலத்தில் அரிசி பொறுக்ககூடாது.
    நீங்கள் நல்ல கருத்தை எழுதும் போது பாராட்டி விமர்சனங்கள் வரும். மற்றவர்களை பாதித்தோ, இழிவுபடுத்தியோ எழுதும்போது அதற்குண்டான நியாயமான காரணங்களை விளக்கியாக வேண்டும் இந்த மரபைக் கடைபிடிக்கும் போதுதான் மனிதநேயம் மிளிரும். நன்றி

    ReplyDelete