எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 11, 2024

பாரதி கண்ட புதுமைப்பெண் திரௌபதி


 நாயகர் தாம் தம்மைத் தோற்ற பின் - என்னை

      நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்

தாயத்திலே விலைப்பட்ட பின் - என்ன

      சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்? - அவர்

தாயத்திலே விலைப்பட்டவர் - புவி

      தாங்கும் துருபதன் கன்னி நான் - நிலை

சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் - பின்பு

      தாரமுடைமை அவர்க்குண்டோ?



போச்சுது போச்சுது பாரத நாடு!

      போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!

ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்!

       அன்னை பாஞ்சாலி - பாண்டவர்களின் காதலி - துரியோதனனால், அவமதிக்கப்பட்ட பொழுது, பெண்ணாக மட்டுமல்ல, அடிமைத்தனத்தில் அவமதிக்கப்படும் நமது பாரத தேவியைப் போலவே காணப்படுகிறாள். இறுதியில் அவளது பெண்மை வெற்றி கொண்ட வேகத்தில் - சபதம் செய்யும் பொழுது, - பராசக்தியின் ஸ்வரூபமாகிறாள். இக்காவியப் பகுதியை பொறுக்கியெடுத்ததிலேயே, பாரதியின் ரசிகத்தன்மையும், நுட்பமான ஆராய்ச்சி சக்தியும் நன்கு வெளியாகிறதல்லவா? தன் கொள்கைக்கேற்ற ஒரு கதையை எடுத்துப் பட்டை தீட்டிப் புது வைரமாக்கியிருக்கிறார்".தனைத் தடுத்தல் அரிதோ!

நன்றி விக்கி பீடியா மூலம் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக் கட்டுரையின் வடிவம்.


Sunday, September 08, 2024

பிள்ளையார் உம்மாச்சியின் ஹாப்பி பர்த் டே!








குட்டிக்குஞ்சுலுவிடம் ஏற்கெனவே பிள்ளையார் சதுர்த்தி பற்றிச் சொல்லி யாச்சு என்பதோடு அவ அப்பாவும் சொல்லி இருக்கார். ஆகவே பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் காலையில் (அவங்க நேரம் காலை எட்டு மணி)கூப்பிட்டாங்க. நான் அப்போத் தான் பூஜை முடிச்சுட்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு போட்டுட்டு அதிரசம் ஒண்ணை எடுத்துத் தின்று பார்த்துக் கொண்டிருந்தேன். குஞ்சுலு வந்ததும் எனக்கு/தாத்தாவுக்கு எல்லாம் ஹாப்பி பிள்ளையார் சதுர்த்தி சொன்னது. பின்னர் பிள்ளையாரைக் காட்டச் சொல்லியது. எனக்குச்சரியா வரலை. உதவிக்கு வரும் பெண் மொபைலை அட்ஜஸ்ட் செய்து காட்டினார். குஞ்சுலு பார்த்துட்டு ஹாப்பி பர்த்டே பிள்ளையார் உம்மாச்சி எனப் பாட ஆரம்பித்தது. பாடி முடிச்சதும் நிவேதனங்களைக் காட்டினால். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுக்கு லட்சியமே இல்லை. எல்லாம் அம்பேரிக்க வாழ்க்கையினால் வந்த விளைவு. இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சம் கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் சாப்பிட ஆரம்பிச்சிருக்கு. மற்றபடி முறுக்கு, தட்டை, ஓலை பக்கோடா எல்லாம் சாப்பிடும்.முன்னால் வீட்டில் பண்ணி வைத்துக் கொண்டு கொடுப்பேன். பின்னர் பிள்ளை கண்டிப்பாக வீட்டில் பண்ணுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே வாங்கி வைக்கிறேன். அதையும் மனசு இருந்தால் சாப்பிடும். 

எப்படியோ ஒரு வழியாப் பிள்ளையார் சதுர்த்தியும் ஆச்சு. எனக்குத் தான் அன்று ஒரே தடுமாற்றம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ரங்க்ஸைப் பார்த்துக்க வேண்டி வந்ததால் சாப்பிடும்போது பனிரண்டு மணி ஆயிடுச்சு. பாவம் ரங்க்ஸ்! பசி முத்திப் போச்சு. சரியாச் சப்பிடலை. கொழுக்கட்டை எல்லாம் நிவேதத்துக்குப் பண்ணிக் கொண்டு மிச்சத்தை மத்தியானமாப் பண்ணி விநியோகம் செய்தேன்.




 பூரணக் கொழுக்க்ட்டை அம்மா வீட்டில் ஐந்த் விதம் பண்ணுவாங்க. இங்கே தேங்காய்ப் பூரணமும் உளுந்துப் பூரணமும் தான். வ்டை, அதிரசம்,, பாய்சம் தான் கூடுதலாக. பச்சரிசியில் இட்லி செய்யணும். நன்றாக வந்திருந்தது. இன்னிக்குக் காலையில் கூட அதான் சாப்பிட்டோம். இந்த முறை மிச்சம் வடை மாவை வடையாகவே தட்டித் தயிரில் போட்டு விட்டேன். இன்னிக்கு மத்தியானமாத் தான் பண்ணினேன். இன்னும் சாப்பிடலை. நோ திப்பிசம்.

Friday, September 06, 2024

கண்ணான கண்ணே!

 பகலுக்கு வந்து கொண்டிருந்த பெண் ஆசிரமத்தில் வளர்ந்ததாகச் சொன்னார். வயது என்னமோ 30க்குள் தான். அதுக்குள் கல்யாணம் ஆகிப் பனிரண்டு வருஷங்களாம். 2 பெண் குழந்தைகள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார். நான் கொஞ்சம் கண்டிப்பாகப் பேச்சைக் குறைனு சொல்லிட்டேன். அதோடு அவள் மற்றவங்களைக் குறிப்பாக இரவுக்கு வரும் பெண்மணியையும், எங்க வீட்டில் ஏழெட்டு வருஷங்களாக வேலை செய்யும் பெண்ணையும் பற்றிக் குற்றம் சொல்ல ஆரம்பித்தார். இரவில் வருபவர் அப்பாவைச் சரியாகத் துடைத்துச் சுத்தமாக வைச்சுக்கலை, நீங்க சொல்லணும் என்று என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் சுத்தமாகத் தான் செய்து வந்தார். ஏனெனில் நான் இவங்க எல்லாம் உடம்பு துடைத்து, டயபரை மாற்றிச் சுத்தம் செய்யும்போதெல்லாம் நான் கூடவே தான் இருப்பேன். அதே போல் எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணையும் சரியாகப் பெருக்கலை, துடைக்கலை, மூலை எல்லாம் குத்திவிட்டுப் பெருக்கித்துடைக்கச் சொல்லுங்க என்றெல்லாம் ஆரம்பிச்சார். எங்க வீட்டுக்கு வரும் ஃபிசியோதெரபிஸ்டிடம் காலில் விழுந்து சாப்பிட்டு 3 நாட்கள் ஆயிடுச்சு, அம்மா இன்னமும் (நான் தான்) சம்பளம் கொடுக்கலை, ஏதானும் உதவி பண்ணுங்கனு அழுது கெஞ்சி 500 ரூபாய் வாங்கிட்டார். அவங்க சம்பளமெல்லாம் என் மூலமே போகாது. எனக்கு மொத்தப் பேச்சு வார்த்தையும் ஹோம்கேர் ஆர்கனைசரிடம் தான். நான் ஒரு நாள் மிகக் கடுமையாக நீ உன் கணவரிடமே போய் அங்கே சேர்ந்து குடித்தனம் பண்ணுனு சொல்லிட்டேன். மறு நாளில் இருந்து வருவதில்லை. இப்போ வேறே ஒருத்தர் வருகிறார். என்னதான் காலை சீக்கிரம் வரச் சொன்னாலும் அவர் சௌகரியத்துக்குத் தான் வரார். மாலையும் சீக்கிரம் கிளம்பிடுவார். இரவு வரும் பெண்மணியிடம் கேட்டுக் கொண்டு அவங்களைக் கொஞ்சம் சீக்கிரமா வரச் சொல்லிச் சொல்லி இருக்கோம். ஏழேகாலுக்குள் வந்துடறார்  இதிலே ஒரு பெண் இரவு வரும் பெண்மணி குலதெய்வக் கோயிலுக்குப் போனதால் லீவில் மாற்றாக வந்தவர் பிடிவாதமாக இனிமேல் ராத்திரி நான் தான் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் ஒவ்வொருத்தருக்காகத் தொலைபேசியில் அழைத்து இங்கே கட்டில், மெத்தை எல்லாம் போட்டிருக்காங்க, ஏசியும் ஓடுது. சௌகரையமா இருக்கு. நான் இனிமேல் இங்கே தான் இரவுக்கு இருக்கப் போறேன் என அறிவிப்புச் செய்து கொண்டிருந்தாங்க. அவங்களைக் காலை கிளப்ப ரொம்பப் பாடு பட்டேன். 

இதுக்கு நடுவில் போனவாரம் வியாழனன்று இரவு திடீர் எனக் கண்ணில் இடக்கண்ணில் ஏதோ குத்தல்/குடைச்சல். கண்ணை மூட முடியலை/திறக்கவும் முடியலை. எப்படியோ படுத்துத் தூக்கம்னு பெயர் பண்ணினேன். கண் மருத்துவரிடம் போனால் மணிக்கணக்காய் உட்கார்ந்திருக்கணும்னு தெரிந்த ஃபார்மசியில் கண்ணுக்குச் சொட்டு மருந்து கேட்டிருந்தேன். கூடவே 2 மாத்திரைகளையும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார் மெட்ராஸ் ஐயாக இருக்கலாம்னு அவர் சந்தேகம். அன்று கொஞ்சம் பரவாயில்லைனு இருந்த கண் மறுபடி ஞாயிறன்றிலிருந்து தொந்திரவு செய்யவே வேறே வழியில்லாமல் ஆயிரத்தெட்டுப் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கொடுத்துட்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு அப்புறமாச் சாப்பிட மாதுளை ஜூஸும் போட்டு வைச்சுக் கண்ணாஸ்பத்திரிக்குப் போனேன். மீட்டர் ஆட்டோனு பெயர். அந்தப் பையர் நம்ம வீட்டிலிருந்து தெற்கு வாசலுக்கு எழுபது ரூபாய் ஆகிவிட்டதாகவும் மீட்டர் அவ்வளவு காட்டுவதாகவும் பயங்கரமான பொய் சொன்னார். நான் பணத்தை எடுக்கையிலேயே அவர் மீட்டரிடம் ஏதோ பண்ணுவதைப் பார்த்துட்டேன். காட்டிக்காமல் 50 ரூபாய் தான் எப்போவும் கொடுப்பேன். அதான் கொடுப்பேன்னு சண்டை போட அவர் ஒத்துக்க மறுக்க உடனே உங்க சங்கத்தலைவரிடம் நான் பேசிக்கிறேன். நீ எழுபது ரூபாய் என்ன, 100 ரூபாயகவே வைச்சுக்கோனு 100 ரூபாயைக் கொடுத்துட்டுக் கீழே இறங்கினேன். பையருக்கு பயமோ என்னமோ 50 ரூபாயைத் திரும்பக் கொடுத்தார். என்றாலும் சங்கத் தலைவரிடம் புகார் அளித்தேன்.

மருத்துவமனை உள்ளே போய் வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்ததும் அந்தப் பெண்ணிடம் என்னைச் சீக்கிரம் அனுப்பும்படியும் மாமா படுத்திருக்கும் விஷயத்தையும் சொன்னேன்.அரை மணி நேரத்தில் அனுப்புவதாகச் சொல்லிட்டு ஒரு வழியாப் பனிரண்டரைக்கு அனுப்பினாள். டாக்டர் பார்த்ததுமே கீதா மேடம், தூங்கி எத்தனை நாட்கள் ஆச்சு? என்று தான் கேட்டார். எனக்குத் திகைப்பு. பின்னர் கண்களைப் பல முறைகள் சோதனை பண்ணிட்டுத் தூக்கம் இல்லாததால் கண்க்ள் காய்ந்து நீர்ச்சுரப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் எதுக்கும் ரெடினா டெஸ்ட் பண்ணிடுவோம், இப்போ உங்களால் முடியுமா? அதுக்கு நேரம் ஆகும் என்றும் சொன்னார். இன்னொரு நாள் வீட்டில் டெஸ்டுக்குச் சொல்லிட்டுத் தயார் நிலையில் வரேன்னு சொன்னேன். அவருக்கும் அதற்குள்ளாக ரங்க்ஸின் உடல்நிலை பற்றிச் சொல்லி விட்டேன். ஆகவே அவர் இப்போதைக்குக் கண் இரண்டிலும் சொட்டு மருந்து விட்டுக்கச் சொல்லிக் கொடுத்துட்டுப் பின்னர் ஒரு நாள்வந்து ரெடினா செக் அப் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கார். அதுக்குப் போகணும். பயமாகவும் இருக்கு. அதே சமயம் போயிடணும்னும் தோணுது.

Wednesday, September 04, 2024

ஏமாற்றங்கள் சகஜமாகி விட்டன!

 கிச்சாப்பயலுக்குப் பண்ணின வடை மாவு கொஞ்சம் மிச்சமாக இருந்தது. ரங்க்ஸ் இம்முறை வடை நல்லா இருக்கு, தயிர் வடை பண்ணுனு தான் சொன்னார். ஆனால் அத்தனை மாவும் இல்லை. குழந்தைகளும் கிளம்பிப் போயிட்டாங்க. நின்னுண்டு வடை பண்ணுவதில ஆர்வமெல்லாம் இல்லை. ஆகவே அத்துடன் ஒரு ஆழாக்கு அரிசியை இட்லி+பச்சரிசி தான், ஊற வைச்சு அரைச்சுச் சேர்த்துத் தோசையாக வார்த்தேன்.  மெத்து மெத்தான தோசைகள். அருமையா இருந்தது. இதுவும் ஒரு திப்பிசம் தானே! இப்படித் தான் கொஞ்ச நாட்கள் முன்னர் அடை மாவு மிஞ்சி இருந்தது. என்ன பண்ணலாம்னு மண்டை காய்ந்தது. அன்னிக்குனு அரிசி உப்புமா பண்ணவே அதுக்கு அரைச்சு விடத் தனியா ஊற வைக்கலை. இதையே போட்டுக் கலந்து விட்டேன். மீனாக்ஷி அம்மாள் புத்தகத்தில் வ்ந்திருக்கும் தவலை உப்புமா மாதிரி வாசனை அடித்துக் கொண்டு நன்றாக இருந்தது.  ரங்க்ஸோ உப்புமா வாசனையா இருக்கே இன்னிக்குனு சொன்னார்.  பழைய சாதம் மிஞ்சினால் கூட அதோடு அவலை ஊற வைத்துக்கலந்து கொண்டு தேங்காய் சேர்த்து அரைத்து நீர் தோசை மாதிரி மெலிசாகப் பண்ணிடலாம். ஒரே ஒரு time பண்ணினேன். அப்புறமாக் குட்டு வெளிப்பட்டு விட்டது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மக்கள் எப்படி எல்லாம்  .ஏமாத்தறாங்க!  நான் மட்டும் என்னமோ ஏமாறவே பிறந்திருக்கேன் போல. ஒரு பலி ஆடு மாதிரி மாட்டிக் கொண்டு பல சாயங்கள் முழிக்கிறேன். ரங்க்ஸ் முடியாமல் படுத்து அவரைப் பார்த்துக்கன்னே ஆள் போட்டாலும் போட்டோம். விதம் விதமான அனுபவங்கள். ஆரம்பத்தில் வந்த இருவரும் சாப்பாடு, தொலைபேசிப் பேச்சு இவற்றுக்கிடையில் ரங்க்ஸைப் பார்த்துக் கொண்டனர். நாம் ஒண்ணும் பேச முடியாது. இப்போ என்னாங்கறீங்கனு மிராட்டிக் கொண்டே 3 மாசம் இருந்தாங்க. சம்பளமும் அதிகம்.  ரங்க்ஸைக் க்ளீனாக வைச்சுண்டாங்களோ இல்லையோ தினம் ஒரு க்ள்வுஸ் டப்பா, வைப்ஸ் அடங்கிய பாக்கெட்டுகள் 2 அல்லது 3 செலவாகும். சில சமயம் அவங்க கை, கால், முகம் துடைத்துக் கொண்ட வைப்ஸாலேயே ரங்க்ஸுக்கும் துடைச்சுடுவாங்க. நாம கவனிச்சதாக் காட்டிக்கக் கூடாது. காட்டிக் கொண்டால் போச்சு. உடனேயே இனிமே நீங்களே பார்த்துக்குங்க, வைப்ஸே உபயோகிக்காமல் க்ளவுஸே உபயோகிக்காமல் வருவாங்கனு கிளம்பிடுவாங்க. ஒரு தரம் எனக்கும் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்துப் போங்கனு சொல்லிட்டேன். அம்புடுதேன். கிளம்பிட்டாங்க. அடுத்து வரவங்க வேறே வகை.

ஹோம்கேர் மூலமா வந்தாங்க. முதலில் இருந்தவங்களை நேரடியாகப் பேசிச் சம்பளமும் அதிகம் கொடுத்துத் தாஜா பண்ணி வைச்சுக் கொண்டிருந்தார் பையர். ஆனால் அவங்களுக்கு எங்க ரெண்டு பேரையும் பிடிக்கலை. முக்கியமாய் ரங்க்ஸை இஷ்டத்துக்கு மிரட்டினாங்க. நான் பார்க்கையில் ஒரு மாதிரி இல்லைனா வேறே மாதிரினு இருந்தாங்க. அதுக்காகவே நேரம் கிடைச்சால் ரங்க்ஸ் பக்கத்தை விட்டு நகராமல் இருந்தேன். இப்போ ஹோம்கேர் மூலமா வரதாலே ஒரு கண்டிப்பு இருக்கும். லீவ் போட்டால் வேறே ஆள் மாத்தி அனுப்புவாங்கனு நினைச்சோம். எல்லாம் சரி தான். ஆனால் ராத்திரி வர பெண்மணிக்குப் பகலில் வரவங்களைத் தெரியாது. பகலில் வரும் பெண்ணிற்கு ராத்திரி யார்னு தெரியாது. அப்படி இருந்தும் ரெண்டு பேரும் போட்டி. பகலில் வர பெண் சரியா ஆறுமணின்னா கன் டைம் ஆறுக்குக் கிளம்பிடுவாங்க. ராத்திரி வரவங்களோ என்னோட நேரம் ராத்திரி எட்டு மணி தான்னு சொல்லிட்டு எட்டு/எட்டேகாலுக்குள்ளே வருவாங்க. இந்த இடைப்பட்ட நேரத்திலே தான்  ரங்க்ஸ்  பாத்ரூம் வந்தால் போகணும். அப்போல்லாம் கதீட்டர் இருந்ததால் படுக்க யில் தான் எல்லாம். பணம் கொடுத்து 2 ஆள் வைச்சும் சுத்தம் செய்தது என்னமோ நான் தான். அந்த முடியாத நிலையிலும் ரங்க்ஸுக்குக் கோபம் வரும். பகலில் வரும் பெண்ணைக் கொஞ்சம் ஏழு மணி வரை இருனு சொன்னால் குழந்தைங்க தனியா இருக்காங்கனு கிளம்பிடுவா. ராத்திரி வரவங்க எட்டு மணிக்கு வேணால் வரேன்னு சொல்லிட்டு எட்டு மணிக்கு வருவாங்க. காலை ஏழரைக்குக் கிளம்பிடுவாங்க. காலை ஏழரையிலிருந்து ஒன்பது/ஒன்பதே கால் வரை இரவு மாலை ஆறு மணியிலிருந்து எட்டேகால் வரை ரங்க்ஸை நான் தான் பார்த்துக்கணும்.

பிரச்னை என்னன்னா அவரைச் சுத்தம் செய்வதிலோ, மாற்று உடைகள் அணிவிப்பதிலேயோ இருக்காது. கட்டிலில் படுக்கை இறங்கி விடும். அதைக் கூடச் சரி பண்ணிடலாம். அவரைத் தூக்கி மேலே போடணும். அது என்னால் முடியாது. இந்தப் பெண்கள் எல்லாம் இதில் கை தேர்ந்தவார்களாக இருந்ததால் அவங்க வரும்வரை அவர் கால்களைக் கட்டிலுக்கு வெளியே நீட்டிக் கொண்டு படுத்திருப்பார். அதான் ரொம்பக் கஷ்டமா இருக்கும். தூக்கம் வந்தால் தூங்க முடியாது. அடுத்து கதீடரில் யூரோ பாக் மாத்துவாது. பலரும் அதைச் சரியாக் கவனிக்க மாட்டாங்க. நாம அதில் ஒரு கண் வைச்சுக்கொண்டு அவங்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கணும். குறைந்த பக்ஷமாக இரண்டு மணிக்கொரு தரம் பையைச் சுத்தம் செய்து விடவேண்டும்.  இதுக்காக நள்ளிரவு 12 மணிக்கு, பின்னர் 2 மணி, காலை நாலு, நாலரை மணினு வந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். இல்லைனா பை நிரம்பி யூரின் எல்லாம் திரும்ப ப்ளாடருக்கே போயிடும். ஒரு முறை அப்படியும் ஆகி இன்ஃபெக்ஷன் ஆகி ரொம்பச் சிரமப் பட்டார். ஆகவே இதில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டி இருக்கு.