நாயகர் தாம் தம்மைத் தோற்ற பின் - என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்
தாயத்திலே விலைப்பட்ட பின் - என்ன
சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்? - அவர்
தாயத்திலே விலைப்பட்டவர் - புவி
தாங்கும் துருபதன் கன்னி நான் - நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் - பின்பு
தாரமுடைமை அவர்க்குண்டோ?
போச்சுது போச்சுது பாரத நாடு!
போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!
ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்!
அன்னை பாஞ்சாலி - பாண்டவர்களின் காதலி - துரியோதனனால், அவமதிக்கப்பட்ட பொழுது, பெண்ணாக மட்டுமல்ல, அடிமைத்தனத்தில் அவமதிக்கப்படும் நமது பாரத தேவியைப் போலவே காணப்படுகிறாள். இறுதியில் அவளது பெண்மை வெற்றி கொண்ட வேகத்தில் - சபதம் செய்யும் பொழுது, - பராசக்தியின் ஸ்வரூபமாகிறாள். இக்காவியப் பகுதியை பொறுக்கியெடுத்ததிலேயே, பாரதியின் ரசிகத்தன்மையும், நுட்பமான ஆராய்ச்சி சக்தியும் நன்கு வெளியாகிறதல்லவா? தன் கொள்கைக்கேற்ற ஒரு கதையை எடுத்துப் பட்டை தீட்டிப் புது வைரமாக்கியிருக்கிறார்".தனைத் தடுத்தல் அரிதோ!
நன்றி விக்கி பீடியா மூலம் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக் கட்டுரையின் வடிவம்.