எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 30, 2016

நவராத்திரிப் பதிவுகள், கொஞ்சம் மீள், கொஞ்சம் கொசுவத்தி!

இன்னும் கொலு வைக்க ஆரம்பிக்கவில்லை. நாலரை மணிக்கு மேல் தான் கோலமே போடணும்! வழக்கமான உற்சாகம் இல்லைனே சொல்லணும்.ஒரு வேளை நவராத்திரி ஆரம்பிச்சதும் களை கட்டுமோ என்னமோ தெரியலை. போகப் போகத் தான் தெரியணும். நேத்திக்குப் பெரிய ரங்குவைப் பார்த்துட்டு வந்தேன்.

நேத்திக்கு ரங்குவைப் பார்க்கக் கூட்டம் அதிகமில்லை. ஆனால் இன்னிக்குப் போயிருக்கவே முடியாது! தெருவே கூட்டம் தாங்காமல் போக்குவரத்தை மாத்திட்டு இருந்திருக்காங்க. நம்பெருமாளையும், யாகபேரரையும் மற்றும் உபய நாச்சியார்களையும் நன்கு தரிசித்தோம். தாயாரையும் நன்கு தரிசிக்க முடியுது.ஒரு மாசமா அடிக்கடி போவதாலோ என்னமோ இப்போல்லாம் பட்டாசாரியார்கள் ரொம்பவே விரட்டறதில்லை.ஆனால் வழி தான் சுத்திக் கொண்டு தொண்டைமான் மேட்டில் ஏறிக் கீழே இறங்கினு கஷ்டப்பட வேண்டி இருக்கு! என்றாலும் விடறதில்லை. போயிட்டு வந்துடறோம். மற்ற சந்நிதிகளையும் பார்க்கணும்னா கூடவே இரண்டு, மூன்று மணி நேரம் ஆகும் என்பதோடு அங்கெல்லாம் நடக்க முடியவும் இல்லை. ஒரு நாள் தனியாக ஒதுக்கி மற்ற சந்நிதிகளைப் பார்க்கணும். கோயிலில் ஆயிரக்கால் மண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சியும், தாயாருக்கு நவராத்திரி உற்சவமும் ஆரம்பிச்சாச்சு. நவராத்திரி உற்சவத்துக்குப் போக முடியலைனாலும் நவராத்திரி கொலு காட்சிக்குப் போகணும்னு நினைக்கிறேன். பார்க்கணும். இந்த வருஷம் நவராத்திரி மட்டும் பத்து நாட்கள் வருகின்றது. பதினோராம் நாள் செவ்வாயன்று தான் விஜயதசமி.

நவராத்திரிப் பதிவுகள் ஏற்கெனவே போட்டாச்சு. என்றாலும் திரும்ப நினைவூட்டலுக்குப் போடறேன். நாளைய நிவேதனம் என்னனு இனிமேல் தான் யோசிக்கணும். ஒரு மாதிரி முடிவு செய்து வைச்சிருந்தாலும் கொஞ்சம் வெளியே போக வேண்டி இருப்பதால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்கணும். நிவேதனம் பண்ணியதும் கொலுவையும் சேர்த்து வழக்கம் போல் படம் வரும்! காமிரா ஏதோ தகராறு செய்யுது! செல்லில் எடுத்து யாருக்கானும் அனுப்பிப் பின்னர் அவங்க எனக்கு அனுப்பிப் போடணும். பார்க்கலாம். காமிராவுக்கு என்ன உடம்புனு பார்க்கிறேன். கீழே நாளைய தினத்துக்கான நவராத்திரிக் குறிப்புகள்.
*********************************************************************************


படத்துக்கு நன்றி விக்கி பீடியா

நவராத்திரி முதல்  மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாக நினைத்து வழிபட வேண்டும். துர்கதியிலிருந்து நம்மை நற்கதிக்கு மாற்றும் வல்லமை கொண்டவள் துர்கை! இன்றைய தினம் 2 வயதுப் பெண் குழந்தையை பாலையாக நினைத்து வழிபட வேண்டும்.

பாலாம்பிகா க்கான பட முடிவு

ஒரு சிலர் குமாரியாகவும் வழிபடுவார்கள். இன்றைய தேவி சைலபுத்ரி ஆவாள். இவள் தான் மலைமகள் என அழைக்கப்படும் பார்வதி தேவி ஆவாள். பவானி, பர்வத குமாரி என்றெல்லாம் அழைக்கப்படுபவள் இவளே. வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஈசன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் ரிஷிமண்டலத்தில் தோன்றியவள் இவள்.

சைலபுத்ரி க்கான பட முடிவு


நவராத்திரி முதல்நாளன்று அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போடவேண்டும். வில்வ மலர்கள் விசேஷம் என்றாலும் மல்லிகை, சிவப்பு அரளி போன்றவையும் உகந்ததே! இன்று காலை வழிபாட்டின்போது வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். மாலை பாசிப்பயறுச் சுண்டல் இனிப்பு, காரம் இரண்டும் செய்யலாம். அல்லது வெண் மொச்சைச் சுண்டல் செய்யலாம்.

வெண் பொங்கலுக்கு ஒரு கிண்ணம் பச்சரிசியும், கால் கிண்ணம் பாசிப்பருப்பையும் நன்கு வாசனை வர வறுக்கவும். குக்கரில் வைப்பதென்றால் களைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று கிண்ணம் நீர் ஊற்றிக் குழைய வேக வைக்கவும். நேரடியாகக் கிளறுவதானால் உருளி அல்லது வெண்கலப்பானை என்றால் நல்லது. முதலில் கொஞ்சம் நெய்யும், பாலுமாகச் சேர்த்துக் கொண்டு பால் 200 கிராம் தாராளமாக எடுத்துக்கலாம். அதில் பாசிப்பருப்பைக் களைந்து போட்டு வேக வைத்துக் கொண்டு பின்னர் பாசிப்பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அரிசியைக் களைந்து போட்டு தேவையான நீர், மற்றும் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கிளறவேண்டும். அரிசியும் பருப்பும் குழைந்து வந்ததும், பக்கத்தில் ஓர் வாணலியில் அரைக்கிண்ணம் நெய்யைக் காய வைத்து அதில் மிளகு, ஜீரகம் முழுதாகப் போட்டுக் கருகப்பிலை, இஞ்சி, மஞ்சள் தூள் (தேவையானால்) சேர்க்கவும். பின் அந்த நெய்யோடு பொங்கலில் கொட்டி, தேவையான உப்புச் சேர்த்துக் கிளறவும். நெய் தேவையானால் பார்த்துக் கொண்டு விடவும். இம்முறையில் வெண்பொங்கல் நல்ல மணமாக இருக்கும். வெண்பொங்கலுக்குப் பாலா என்பவர்கள் ஒரு முறை விட்டுத் தான் பாருங்களேன். அப்புறமாப் பால் விட்டே வெண்பொங்கல் செய்வீர்கள். முந்திரிப்பருப்பு தேவையானால் போடலாம்.

குக்கரில் என்றால் நன்கு குழைய வெந்ததும் வெளியே எடுத்துக் கடாயில் நெய்யையும் பாலையும் சேர்த்து ஊற்றிக் கொண்டு குழைந்த பொங்கலை அதில் சேர்த்து உப்புப் போட்டுக் கிளறவும். இன்னொரு கடாயில் கொஞ்சமாக நெய்யை ஊற்றிக் கொண்டு முந்திரிப்பருப்புச் சேர்த்தால் முதலில் அதை வறுத்து எடுத்துக் கொண்டு பின்னர் மேலே சொன்னமாதிரி மிளகு, ஜீரகம், கருகப்பிலை, இஞ்சி சேர்த்துக் கொள்ளவும். தாளிதத்தைப் பொங்கலில் சேர்க்கவும். குக்கரில் பொங்கல் செய்தால் நெய்யோ, பாலோ கூடச் சேர்க்க வேண்டி வரும். கொஞ்சம் காய்ந்தாற்போல் பொங்கல் இருக்கும். வறண்டு இருக்கும். ஆகையால் நெய்யும், பாலும் நிறையச் சேர்த்தால் தளதளவென்று வரும்.

மொச்சையை முதல் நாளே ஊறப் போடவும். மறுநாள் மாலை அதை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும். தாளிக்கக் கடுகு, மிவத்தல், பெருங்காயம், கருகப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவை தேவை.
வேக வைத்த மொச்சையை நீரை வடித்துக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்துக் கொள்ளவும், மி.வத்தல் ஒன்றிரண்டு போட்டுக் கொண்டு, கருகப்பிலை சேர்த்து வேக வைத்த மொச்சையைப் போட்டு வதக்கவும். பெருங்காயப் பவுடர் எனில் அதை எண்ணெயிலேயே போடலாம். பெருங்காயம் கட்டி எனில் நீரில் ஊற வைத்துக் கொண்டு ஜலத்தை வதக்கும்போது சேர்த்துக் கொண்டு தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கிளறவும். இதற்கு மி,வத்தல், கொத்துமல்லி விதையை வறுத்துப் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொண்டும் போடலாம் ஆனால் ஒரு நாள் பண்ணியது மீதம் இருந்தால் மறுநாள் சுண்டலுக்கான நிவேதனத்தில் ஏற்கெனவே சாப்பிட்டதில் மீதத்தைப் பயன்படுத்த முடியாது. ஆகையால் நான் மி.வத்தலே போட்டு விடுவேன். அவரவர் வசதிப்படி செய்து கொள்ளவும்.

இதிலே எழுதி இருக்கும்படி நிவேதனம் நான் செய்வதில்லை. ஏனெனில் எங்க வீட்டில் நவராத்திரி பூஜை இல்லை. ஆகவே எனக்கு என்ன செய்ய முடியுமோ அதான் நிவேதனம். :) இது நாளைய தினம் செய்ய வேண்டியது. இன்றே ஒரு நாள் முன் கூட்டியே சொல்கிறேன். இரண்டாம் நாளுக்கான தகவல்கள் நாளைக்கு வரும்! :)

Thursday, September 29, 2016

நண்பரின் பதிவைப் பகிர்கிறேன்.

முகநூல் நண்பர் விஜயராகவன் கிருஷ்ணன் ஶ்ரீரங்கத்துக்காரர். பலவற்றையும் ஆய்வு செய்து எழுதி வருகிறார். அவர் முகநூலில் போடும் பதிவுகளைப்போல் வலைப்பக்கமும் எழுதி வருகிறார். முகநூலில் அவர் பதிவுகளில் என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை. ஒரே முறை அவர் இங்கே எங்கள் குடியிருப்பு வளாகத்துக்கு ஶ்ரீரங்கம் குறித்த காணொளிக் காட்சிகளைக் காட்டும்போது பார்த்திருக்கிறேன். கீழே உள்ளவை குழந்தை பிறப்பால் உண்டாகும் தீட்டு குறித்து. பொதுவாக இப்போதெல்லாம் யாரும் தீட்டு, எச்சில் போன்றவை பார்ப்பதில்லை. அவை கலப்பது தான் நாகரிகம் என்றும் முன்னேற்றம் என்றும் நம்புகின்றனர். ஆனால் இது நம்மிடம் மட்டும் இல்லை, யூதர்களுக்கும் இருக்கின்றது என்பதைத் தான் நண்பர் எடுத்துக் கட்டி உள்ளார். இனி கீழே உள்ளவற்றைப் படியுங்கள்!  அவர் முகநூல் பக்கத்தில் உள்ளதை அப்படியே வெட்டி ஒட்டியுள்ளேன். ஆகவே அதில் காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கண்டுக்க வேண்டாம்.  :))))))) நண்பரின் பெயரைச் சொல்லி இருப்பதால் அவருடைய முன் அனுமதி பெறாததைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்னும் நம்பிக்கையுடன் போட்டிருக்கேன்.
*********************************************************************************

பிறப்பினால் உண்டாகும் தீட்டும் பழமை யூதமத கோட்பாடுகளும் :

இன்று அதிகாலை (03.09.2016) எனது மூத்த சகோதரனின் மருமகள் ஒரு பெண் குழந்தையை கோயம்புத்தூர்ரில் பெற்றுஎடுத்தாள் என்று செய்தி கேட்டோம் .. சாம வேதம் ஓத வேண்டிய (ஆம் வேண்டிய!!!#$% அதான்ஒண்ணுமே தெரியாதே எனக்கு! ) குடியில் பிறந்த படியால் “சாமஉபாகர்மம்” எனப்படுகின்ற ஆவணிஅவிட்டம் நாளை இந்த பிறப்பினால் தீட்டு ஆகி எங்கள் ரிஷிகளையும் இந்திராதி தேவர்களை நாளை துதிக்க முடியாமல் போயிற்று!!
என்ன குழந்தை பிறந்தாலும் தீட்டு என்று பார்த்தால்.. நமது சனாதனந்தின் சில பல வேர்கள் பரவி இருக்கும் யூதமதத்தை (அவனுங்கதான் இதை ஒரு 3-4,000 வருடமாக எவன் என்ன சொன்னாலும் கடைபிடிச்சு வரானுங்க ) போய் என்ன சொல்லி இருக்கானுங்க என்று பார்த்தேன் !! -
ஸ்ரீரங்கத்து விஜி சொல்லுவதை விட .. வெளிநாட்டு காரன் இங்கிலீஷ்லில் சொல்லி இருந்தா வெளிநாட்டில் மற்றும் சென்னை மும்பை போன்ற பட்டணங்களில் பல புதிய விசயங்கள் படிச்சு அனுபவிச்சு கொண்டு இருக்கிறவங்க – O..!!!.. english rabbi has said that .. then that should have some basis ... அப்படீன்னு சொல்லி நம்புவாங்க என்பதால் .. ஒரு ஆய்வு !!
முதலில் இந்த தீட்டு என்பது தூய்மை இல்லை என்பதே !!! இது இறப்பு மற்றும் பிறப்பு இரண்டிற்கும் உண்டு காரணம் கீழே அப்படியே பல யூத மத கோட்பாடுகளை கட் அண்ட் பேஸ்ட் பண்ணி இருக்கேன் படிச்சுக்கோங்கோ !!
யூத மதத்தில் இதை “Niddah” என்கிறார்கள்...
What does this word “niddah” mean?
Impurity, filthiness, menstruous, set apart; impurity; of ceremonial impurity; of menstruation; impure thing; of idolatry, immorality.
Wayyiqra (Leviticus) 15:19 :- " And if a woman have an issue, and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever touches her shall be unclean until the evening".
இவர்கள் நம்மை போல் மூன்று நாள் என்று சொல்லவில்லை எழுநாள் என்றும் அந்த பெண்களை தொட கூடாது என்று...
Furthermore, you will notice that if her husband did accidentally “touch” her during her uncleanness , he would be considered “unclean” ceremonially for Temple service. This means that he could not come before YaHuWaH in prayer as he had touched “death” because her egg (which was supposed to be fertilized into a human life) had died. Therefore, YaHuWaH cannot have death in his presence as he is the author of life.
இந்த விஷயம் மிக மிக முக்கியமானது .. பெண் என்பவள் உயிர் உருவாக்குவள் என்பது போல் ஒவ்வொரு மாதமும் ஒரு உயிர் உண்டாக்க கூடிய முட்டையை அழித்து அதை நீக்கும் வேலையையும் செய்கிறாள் !! அதனால் அந்த காலங்களில் அது ஒரு பிணத்தை போன்றதே .. அதனால் அந்த தீட்டை இறைமூர்த்தங்கள் (கோவில்களுக்கு ) எடுத்து சென்று கலக்க வேண்டாம் என்பதே
Wayyiqra (Leviticus) 15:21 And whosoever touches her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
தீட்டான பெண் தொடும் பொருள்களை வேறு எவரும் தொடுவார்கள் என்றாலும் அவர்கள் குளித்து அவர்கள் துணிகளை துவைத்து .. அன்று மாலை வரை கோவிலுக்கு செல்லாதிருக்க வேண்டும்.
“Wayyiqra (Leviticus) 15:23 And if it be on her bed, or on anything whereon she sits, when he touches it, he shall be unclean until the evening.
அந்த பெண் அமர்ந்து இருந்த இடம், படுக்கையை கூட தொட்டால் திட்டுதான்.. குளித்த பின் .. மாலை வரை கோவிலுக்கு செல்ல கூடாது !!
During child birth :-
When a woman delivers naturally, she enters a state of niddah. This begins from the first sign of blood or from when she feels that the delivery is imminent. The niddah state lasts for seven days after the birth of a boy and fourteen days after the birth of a girl.23 However, going to the mikvah is usually delayed for much longer as most doctors today recommend that women wait at least six weeks before resuming marital relations. This should be discussed with one's doctor.
From the time a woman becomes a niddah, her husband may not see the parts of her body that are normally covered.24 It is therefore improper for a husband to watch the actual birth of his child.25 In fact, the Rebbe felt that for this reason the husband should not be in the delivery room at all during the birth.26 Obviously, if there is no one else to aid his wife, he may do so, but he should try as much as possible not to look at intimate parts of her body, as explained.27
If a woman has a baby via Caesarean section, she is not rendered a niddah unless and until she bleeds vaginally.2
அட குழந்தை பிறந்தால் .. ஆண் குழந்தைக்கு 7 நாட்களும் பெண் குழந்தைக்கு 14 நாட்களும் தீட்டு உண்டு ..இதைபற்றி விவரமாக போட்டு இருக்கிறார்கள்படித்து கொள்ளுங்கள் (மறுபடி தமிழில்எழுதினால் பெரிதாகிவிடும்...
இந்த தீட்டு காலத்தில் தனது மனைவியை அவள் துணியால் மறைத்து இருக்கும் பாகங்களை கணவன் கண்டிப்பாக பார்க்க தடை உண்டு .. எனவே தனது மனைவி பிரசவிக்கும் காலங்களில் கணவன் அதை காணக்கூடாது!!
What About a Man’s Uncleanness?
The same principle applies when a man spills his semen. If a man spills his seed, he is unclean ceremonially until evening. You will also notice in verse 17, that whereupon the semen is touching the skin or garment, that garment is unclean just as it is with the blood of the woman:
அட எல்லாமே போம்பளைக்குதான் தீட்டா என்றால் ஆணுக்கும் தீட்டு உண்டு .. அது அவன் ஆண் உறுப்பில் இருந்து வெளிப்படும் விந்து மற்றும் சிறுநீர் பற்றியது ...
இன்றும் கேரளா கோவில்களில் நம்பூதிரிகள் சிறுநீர் கழிந்து விட்டு பிறகு குளித்து விட்டுதான் கோவிலுக்குள் வருவார்கள் !! பெண்ணுடன் இணைந்தபிறகு நிச்சியமாக குளித்து விட்டுதான் கோவிலுக்குள் வர வேண்டும்!! இது நமது கோவில் அர்ச்சகர்களுக்கும் உண்டு...
Wayyiqra (Leviticus) 15:16 And if any man’s seed of copulation go out from him, then he shall wash all his flesh in water, and be unclean until the evening.
And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the evening.
The woman also with whom man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the evening.
ஒரு பெண்ணுடன் இணைந்த பிறகு இருவரும் நீராடிய பிறகுதான் தூய்மை அடைவர்!!!
The article ends like this….
In the final analysis, we can see that the laws for “niddah” are greatly misunderstood and often-times abused within Judaism. And they seem to be completely ignored within Christianity and used out of context as an excuse to negate the Towrah (Mosaic Law) entirely in the life of the Renewed Covenant believer. The laws of uncleanness as we can see, are not exclusive to women. The deceptive nature of HaWaH (Eve) in the Garden of Eden was nailed to the tree when our Messiah was sacrificed for us. The woman is no longer under the curse brought on by HaWaH (Eve), and thus the female gender is redeemed equally from all sin and uncleanness.
Galatians 3:28 “…..there is neither male nor female: for you are all one in Mashiyach Yahuwshuwa.
இந்த பதிவில் முழுமையாக யூத மத கோட்பாடுகளை கைகொண்டதால் .. அவர்களே இதை பற்றிய ஒரு மத்தியமான முடிவை எழுதி இருக்கிறார்கள் .. படித்துக்கொள்ளுங்கள் !!
விஜயராகவன் கிருஷ்ணன்

Monday, September 26, 2016

இல்லம், இனிய இல்லம்! 2016













தெருவுக்கே நிழல் கொடுக்கும் வேப்பமரம்! 

Sunday, September 18, 2016

நிலா, நிலா! ஓடி வா! நில்லாமல் ஓடி வா!


நேத்துக் காலையிலேயே நடைப்பயிற்சியின் போது காமிரா எடுத்துச் செல்லலையேனு நினைச்சேன். இன்னிக்கும் மறந்துட்டுப் பாதிப் படிகள் ஏறினபின்னர் நினைவு வந்து எடுத்துப் போனேன். ஆனால் நேற்றுக் கண்ட மாதிரி இல்லை வானம்! இருந்தாலும் பரவாயில்லைனு எடுத்தேன். உ.பி.கோயில் தெரியுது பாருங்க பிரகாசமான விளக்குக்குப் பின்புறமா! என்னதான் ஜூம் பண்ணினாலும் இவ்வளவு தான் வருது! எனக்குத் தான் தொ.நு. தெரியாதே! ஆகவே போனாப் போகுதுனு விட்டுடுங்க! :) தெற்கே தெரியும் இது!

நிலாவைத் தான் எடுக்கக் காமிரா கொண்டு போனேன். நிலாவை மேற்கே அஸ்தமனம் ஆகும் முன்னர் காலை ஐந்தரைக்கு எடுத்தது இது. இதுவும் ஜூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பண்ணினது தான்! ஹிஹிஹி, இம்புடுதேன் வந்துச்சு!




நேற்றுக் கீழ்வானம் செக்கச் சிவந்திருந்தது. அந்த வண்ணக்கலவையைக் குழைக்க இன்று நேரமில்லை சூரியனுக்கு! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வண்ணத்தைத் தெளித்திருந்தான்! லேசாக இளமஞ்சள் கலந்த சிவப்பு வண்ணத்தைத் தெளித்திருந்தான். தனக்குத் தானே ஆரத்தி எடுத்துக் கொண்டான் போலும்!



இவ்வளவெல்லாம் எடுத்துட்டு நம்மக் காவிரியம்மாவை எடுக்காமல் முடியுமா? அகண்ட காவிரியை வறண்ட காவிரியாப் பாருங்க! :)


இன்னொரு கோணத்தில் வறண்ட காவிரி!

Monday, September 12, 2016

நாங்களும் திம்போமுல்ல!

சிறு தானிய லாடு

கம்பு, குதிரைவாலி, தினை, சாமை, வரகு,(சோளம் இருந்தால் சோளரவை) அனைத்தும் சேர்த்து சமமாக ஒரு குழிக்கரண்டி போட்டு எடுத்துக் கொள்ளவும். இதற்குச் சமமாக கோதுமை ரவை எடுத்துக் கொள்ளவும். நான் கோதுமை ரவை ஒரு கிண்ணம் (200 கி) எடுத்துக் கொண்டேன். மற்றவை ஒவ்வொரு கரண்டி. எல்லாவற்றையும் நன்கு சிவக்க வறுக்கவும். வறுத்ததை மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும். நைசாக இருக்கணும்னா சலிக்கவும். நான் சலிக்கலை. அப்படியே போட்டுட்டேன். ரவையும் இல்லாமல் மாவும் இல்லாமல் கோலப் பொடி பதத்தில் இருக்கும். இதை அளந்து கொண்டு ஒரு கிண்ணம் ரவை மாவு எடுத்துக் கொள்ளவும் ஒன்றரைக்கிண்ணம் சர்க்கரை எடுத்துக்கவும். மிக்சி ஜாரில் சர்க்கரையைப் பொடிக்கவும். பொடிக்கையிலேயே அதிலே ஏலக்காயைச் சேர்க்கவும்.

இப்போது மாவு, சர்க்கரைப் பொடியை ஒன்றாகக் கலந்து வைக்கவும். ஒரு கிண்ணம் நெய் எடுத்துக்கவும். ஒரு வாணலியில் அரை க்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்புகளை ஒடித்துப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு கலந்த மாவில் கொட்டி விட்டு, அதே வாணலியில் மிச்சம் நெய்யை ஊற்றவும். நெய்யிலிருந்து புகை வரும் வரை சூடு செய்யவும். அந்தச் சூடு குறையாமல் தேவையான நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக லாடு மாவுக் கலவையில் ஊற்றவும். கொஞ்சம் நெய்யை நிறுத்திக் கொண்டு மாவைக் கரண்டியால் அல்லது இலைக்கரண்டியால் நன்கு கிளறி நெய்யும், மாவும் ஒன்றாகக் கலக்கும்படி கிளறி விடவும். சற்றே இளகின பதத்தில் இருந்தால் மாவு சரியாக வந்திருக்குனு அர்த்தம். ரொம்ப இளகி இருந்தால் எடுத்து வைத்திருக்கும் மாவை இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம். உதிர் உதிராக இருந்தால் நெய்யை இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கலக்கவும்.

முந்திரிப்பருப்பையும் போட்டு நன்கு கலந்த பின்னர் தனியாக எடுத்து வைக்கவும். நன்கு ஆறட்டும். உருண்டை பிடிக்கலாம். ஒவ்வொருவர் அடுப்பில் நெய்யைக் காய்ச்சிய வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாவில் நெய்யை ஊற்றிக் கொண்டு சுடச் சுடக் கையையும் சுட்டுக் கொண்டு உருட்டுவார்கள். இந்த முறையில் அதெல்லாம் தேவையே இல்லை. நல்லா ஆறிடுச்சுனு தெரிஞ்சதும் உருண்டைகளாக உருட்டவும். நேரம் ஆக ஆக உருண்டை நல்லா கெட்டிப்பட்டு விடும். நேத்திக்கு நெய் கலந்த மாவைப் பார்த்த ரங்க்ஸ் இதென்ன இப்படி இளகி இருக்குனு கிண்டல் பண்ணினார். இன்னிக்கு உருண்டை கெட்டியாக இருக்கு பாருங்க! தைரியமா எப்போ என்ன உருண்டை செய்தாலும் ரவா லாடு, பொட்டுக்கடலை லாடு, கடலைமாவு லாடு, ஜவ்வரிசி லாடு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு கலந்த மாவு லாடு, கோதுமை மாவு லாடுனு எதுவா இருந்தாலும் இம்முறையில் நெய்யைக் காய்ச்சி ஊற்றினால் ஆறியதும் நிதானமா உருண்டைகள் பிடிக்கலாம். சுவையான சத்தான உருண்டைகள்.






Sunday, September 11, 2016

மாதர் தம்மை இழிவு செய்து "மாதரையே" கொளுத்திடுவோம்! :(

பாரதியார் க்கான பட முடிவு

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும்படியா இருக்கு இன்றைய நிலைமை?

இன்று மஹாகவியின் நினைவு நாள். மஹாகவி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைத் தான் கொளுத்தச் சொன்னான். ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களைக் காதலிக்க ( என்ன அர்த்தம் இதுக்கு) மறுக்கும் பெண்களை வரிசையாய்க் கொன்று கொண்டிருக்கிறார்கள்! இது எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு நேற்றுப் பிரபலமான தொலைக்காட்சி சானலின் பிரபலமான தொடரில் பள்ளி செல்லும் பெண்ணை ஒருவன் துரத்தித் துரத்திக் காதலிப்பதோடு அந்தப் பெண்ணை, "ஐ லவ் யூ" என்று சொல்லும்படி வற்புறுத்துகிறான். அப்படி அந்தப் பெண் செய்யவில்லை எனில் அவள், அவள் அம்மா, கூட இருக்கும் இன்னொரு பெண்மணி மூவரையும் வீட்டுக்குள் அடைத்துப் போட்டுப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் போவதாகவும் பயமுறுத்துகிறான். அவன் பெரிய இடத்துப் பிள்ளை என்றும் அவன் செல்வாக்கிற்கு யாராலும் ஏதும் செய்ய முடியாது என்றும் பீத்தல், அலட்டல்! இப்போது நாடு அதிலும் முக்கியமாய்த் தமிழ்நாடு இருக்கும் நிலைமையில் இத்தகைய காட்சிகளோ அல்லது வசனங்களோ தேவையா என்றே தோன்றுகிறது!

பதினைந்து வயதிலிருந்து முப்பது வயதுக்குள்ளாகப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர் பெண்ணின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் பயப்படுகிறார்கள் எனில், முப்பது வயதும் அதற்கும் மேல் ஆன கல்யாணம் ஆன பெண்களோ கள்ளக் காதலில் ஈடுபட்டுக் கணவனைக் கொலை செய்வது, காதலனைக் கொல்வது, கள்ளக் காதலியைக் கொல்வது என்று ஏதோ கத்திரிக்காய், வாழைக்காயை நறுக்குவது போல் நறுக்கித் தள்ளுகின்றனர். முந்தாநாள் தினசரியில் மனைவி குடிக்கக் காசு தராத காரணத்தால் மனைவியின் கழுத்தை அரிவாளால் வெட்டிவிட்டுத் தலை மறைந்த கணவன் பற்றிய செய்தி! வரவரப் பத்திரிகைகள் முக்கியமாய் தினசரிகள், தொலைக்காட்சிச் செய்திகள்னு பார்க்கவே மனசுக்கு பயமாய் இருக்கிறது. எப்போ மாறும் இந்த நிலைமை?

மஹாகவியின் நினைவு நாளைக் குறித்துச் சொல்ல வந்துட்டு என்ன என்னவோ சொல்லிட்டுப் போறேன். ஆனால் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க விரும்பிய மஹாகவி இன்று உயிருடன் இருந்திருந்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பான் என்பது என்னமோ நிச்சயம்.


Wednesday, September 07, 2016

வேதனைக்கு மேல் வேதனை!

நேற்றைய செய்தி ஒன்று மனதை வேதனைப் படுத்துகிறது. இன்னமும் அதன் கோரத்தை ஜீரணிக்க முடியவில்லை. நேற்றுக் காலை வந்த மன்னார்குடி விரைவு வண்டியில் மாம்பலத்தில் ஓர் குடும்பம் இறங்க வேண்டும். இறங்கி இருக்காங்க. அவர்களிலே வயது முதிர்ந்த இருவர் முன்னால் இறங்கி இருக்காங்க. சரிதான். தப்பில்லை. அடுத்து இரு நடு வயதுக்காரர்கள் அல்லது இளைஞர்கள் இறங்கி சாமான்களை எல்லாம் இறக்கி இருக்காங்க. கடைசியில் கைக்குழந்தையுடன் அந்தக் குடும்பத்து மருமகள் இறங்குகையில் ரயில் கிளம்பிவிட்டது. யாருக்குமே பதட்டம் வரத் தான் செய்யும். இந்தப் பெண்ணும் பதட்டத்தில் செய்வதறியாது கிட்டத்தட்டக் குதித்திருக்கிறாள்.

ரயில் போகும் திசையிலேயே இறங்க வேண்டும் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தாலும் அப்போது இருந்த பதட்டத்தில் அதைக் கடைப்பிடிக்கத் தோன்றாது தான். கீழே உள்ளவர்களாவது அந்தப் பெண்ணிடமிருந்து குழந்தையை ஒருவர் வாங்கிக் கொண்டு இன்னொருவர் அநேகமாய்ப் பெண்ணின் கணவராகவும் இருக்கலாம், அந்தப் பெண்ணைக் கீழே இறக்கி இருக்க வேண்டும். வேடிக்கை பார்த்திருக்கின்றனர். விளைவு! குழந்தை ரயில் நிலைய நடைமேடையின் இடுக்கு வழியாக தண்டவாளத்தில் விழுந்து குழந்தையின் மேல் ரயில் சக்கரம் ஏறி இரண்டு துண்டாகி இருக்கிறது. அந்தப் பெண் குழந்தையைக் காப்பாற்றப் போய் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இப்போது இரண்டு கால்களையும் இழந்து தவிக்கிறாள்.

வயது முதிர்ந்தோரை இறக்கி விடும்போதே அந்தப் பெண்ணையும் சேர்த்தல்லவோ இறக்கி இருக்கணும்! குழந்தையுடன் இருக்கும் பெண்ணைக் கடைசியில் இறங்கச் சொல்லலாமா? ஒரு ஆண் ரயிலில் இருந்து கொண்டு சாமான்களைக் கொடுத்தால் கீழே உள்ளவர்கள் வாங்கி வைக்கலாம். பெரியவங்களாவது இறங்கும்போதே அந்தப் பெண்ணையும் கூடவே இறங்கும்படி வற்புறுத்தி இருக்கணும். அநியாயமாய் ஒரு சின்னப்பிஞ்சு உயிர் போனதோடு இல்லாமல் அந்தப் பெண்ணுக்கும் கால்களை இழக்க வேண்டிய கட்டாயம்! ஒரு சின்ன அஜாக்கிரதையினால் விளைந்த  விளைவு மிகக் கோரமாய் ஆகி விட்டது. இனி அந்தப் பெண்ணின் கதியை நினைத்தாலே கவலையும், பயமும் வருகிறது.

நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் பல்லவன் விரைவு வண்டியிலிருந்தோ அல்லது மலைக்கோட்டை விரைவு வண்டியிலிருந்தோ மாம்பலத்தில் இறங்கும்போதும், திரும்பி ஶ்ரீரங்கம் வருகையில் ஶ்ரீரங்கத்தில் இறங்கும்போதும் ஶ்ரீரங்கத்தில் பல்லவனில் ஏறும்போதும் திக் திக் திக் என்று கவலையும், பயமுமாக இருக்கும்.  ஏறி உட்கார்ந்ததும் தான் அப்பாடா என்று இருக்கும். அதே போல் வண்டியை விட்டு இறங்கினதும் தான் மூச்சே விட முடியும். அப்படியும் ஒரு முறை ஃப்ளாஸ்க், ஆகாரங்கள் அடங்கிய பையை ரயிலிலேயே விட்டு விட்டுக் கொஞ்ச தூரம் வந்த பின்னர் நம்ம ரங்க்ஸ் ஓடிப் போய் ரயிலில் ஏறி எடுத்து வந்தார். இறங்குகையில் ரயில் நகர ஆரம்பித்து விட்டது. அவருக்குப் பழக்கம் இருந்ததாலும் ரயில் கிளம்பி விடும் என்பது தெரிந்திருந்ததாலும் கவனமாகக் காலைக் கீழே வைத்து ரயில் ஓடும் பக்கமாக இறங்கினார். அதன் பின்னரே மூச்சு வந்தது.


அடுத்து ஒரு முறை மலைக்கோட்டை விரைவு வண்டியில் சென்னையிலிருந்து வருகையில் ராத்திரி முழுக்கத் தூங்கவே இல்லை. காலை அசந்து விட்டது. ஶ்ரீரங்கம் வந்ததே தெரியலை. யதேச்சையாக ரங்க்ஸ் எழுந்து பார்த்தால் ஶ்ரீரங்கம் ரயில் நிலையம். என்னை எழுப்பினார். நல்ல வேளையாக சாமான்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு பை தான். ஆகவே உடனே கீழே இறங்க ஆரம்பித்தோம். அப்படியும் நான் அங்கே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் என்ன நிலையம் என்பதைக் கேட்டுத்தெரிந்து கொண்டு அவர் உதவியோடு இறங்கினேன். பின்னாலேயே அவரும் இறங்கினார். இரு முறை இப்படி ஆகி இருக்கிறது. ஆகவே கூடியவரை காலை நேரத்துக்குப் போய்ச் சேரும் வண்டிகளில் செல்லக் கூடாது என்று எண்ணுகிறேன். நல்லவேளையா எனக்கோ அவருக்கோ தூக்கக் கலக்கம் இல்லை! பிழைத்தோம்! :(

வண்டி நிற்க அனுமதித்திருக்கும் நிலையங்களில் குறைந்த பட்சமாக மூன்று நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரை நிற்கவேண்டும் என்று ஓர் கட்டாய உத்தரவே பிறப்பிக்கலாமோ என்று தோன்றுகிறது. இல்லை எனில் காசைப் பார்க்காமல் எழும்பூர் வரை சென்று திரும்பி வர வேண்டும். வேறு வழியில்லை. காசு போனால் சம்பாதிக்கலாம்! உயிர்? அதிலும் இப்போது பெண்களுக்கு மிகவும் சோதனைக்காலம் போல இருக்கிறது! :(

Monday, September 05, 2016

பிள்ளையார் வந்தாரா? கொழுக்கட்டை கொடுத்தீங்களா?


பூஜைக்குத் தயாராகக் காத்திருக்கும் பிள்ளையார்கள், எட்டுப் பிள்ளையார்கள் இடம் பெற்றிருக்கின்றனர். :) இடக்கோடியிலிருக்கும் பிள்ளையார் தான் கீழே விழுந்து சின்னக் காயம் பட்டவர். :(


தேங்காய்க் கொழுக்கட்டை, உளுந்துக் கொழுக்கட்டை, இட்லி, வடை, அப்பம், பாயசம், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, கரும்பு மற்றும் சாதம், பருப்பு. 


அர்ச்சனை நடக்கும்போது

நம்ம ராமர் இன்றைய தினம் அந்தப் பிரதிபலிப்பு இல்லாமல்

கீழே உள்ள பூதேவி, ஶ்ரீதேவி சமேதரான மஹாவிஷ்ணுவுடன் ரிஷபாரூடர், மீனாக்ஷி, அன்னபூரணி போன்றவர்கள். 
 தீபாராதனை!


Saturday, September 03, 2016

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??

நாளை சாமவேதிகளுக்கு ஆவணி அவிட்டம். இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும்.  .  இந்த வருடம் செப்டம்பர் நான்காம்  தேதி ஞாயிறு அன்று சாமவேதிகளுக்கான உபாகர்மா!

தகவல்களுக்கு நன்றி:தெய்வத்தின் குரல்!

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.  .  பொதுவாக மீள் பதிவு போடுவதில்லை;  என்றாலும் இது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் கடந்த சில வருடங்களாகப் போட்டு வருகிறேன்.  ஏற்கெனவே படித்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  நன்றி. பொறுத்தருள்க! :)))))


Friday, September 02, 2016

காதல், காதல், காதல், காதல் போயின் சாதல்?

காதல் என்றால் என்ன? ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஏற்படும் விவரித்துச் சொல்ல முடியாத ஓர் உணர்வா? அந்தப் பெண் கிடைத்தால் தான் தன் வாழ்க்கையில் திருப்தி ஏற்படும் என்று ஓர் ஆண் மட்டும் உணரும் உணர்வா? ஆணின் மனதில் இத்தகைய ஓர் உணர்வு ஏற்பட்டால் அதன் பிரதிபலிப்புப் பெண்ணின் மனதிலும் ஏற்பட வேண்டாமா? அப்படிப் பெண்ணுக்கு ஏற்படவில்லை என்றாலும் அந்தப் பெண் தன்னை ஒரு தலையாகக் காதலிப்பவனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமா?

இப்போதெல்லாம் அப்படித் தான் நினைக்கிறார்களோ என்று  தோன்றுகிறது. கரூரில், தூத்துக்குடியில், பாண்டிச்சேரியில், சென்னை நுங்கம்பாக்கத்தில், சேலம் சின்னப் பிள்ளையில் எனப் பல ஊர்களிலும் இதனால் தாக்கப்பட்ட பெண்களை நினைக்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? பெண்ணின் மனது தெரியாமல், புரியாமல் காதலை வளர்த்துக் கொண்டு பெண் மறுத்தால் உடனே அவளைக் கொல்வது தான் காதலா? அதனால் அந்த வாலிபனுக்குக் கிடைக்கப் போவது என்ன? 

தடுக்க வந்தவர்களையும் தாக்கியதன் மூலம் அவன் எப்படிப்பட்ட வெறியில் இருந்திருக்கிறான்! :( பள்ளியில், கல்லூரியில், தேவாலயத்தில் என்று பெண்கள் அவரவர் வேலையில் மூழ்கி இருக்கையில் எதிர்பாராமல் வந்து தாக்கிக் கொன்று விடுகின்றனர். இதற்குத் திரைப்படங்களும், சின்னத்திரைத் தொடர்களுமே முக்கியக் காரணம். இதைக் குறித்துப் பலமுறை சொல்லி ஆகிவிட்டது. எழுதியும் ஆயிற்று. பெற்றோரின் வளர்ப்புச் சரியாக இல்லை. அவர்கள் குழந்தைகளைக் கண்காணிப்பதை ஏதோ அவர்களுக்குச் செய்யும் அநீதியாக நினைக்கிறார்கள். இதனால் பாழாவது இரு குடும்பங்களின் எதிர்காலமே! சம்பந்தப் பட்ட பெண்ணின் குடும்பமும், பையரின் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சமூகத்தில் அவர்களால் வழக்கம் போல் இயங்க முடிவதில்லை.

ஒரு தலைமுறையே இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நேரம்! செய்தே ஆகவேண்டும். முக்கியமாய்ப் பெற்றோருக்கு!