எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 29, 2007

அனுபவம் புதுமை! 1



இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது?
22-ம் தேதி காலையில் வண்டியில் கிளம்பும்போது ஒரே தூக்கம் தான். இன்னும் 5,6 நாள் எப்படி இந்த வண்டியில் உட்கார்ந்து போவது என்று கொஞ்சம் யோசனையாவும் இருந்தது. நீண்ட தூரப் பயணம், முதலில் கும்பகோணம் போய், கிராமத்தில் குலதெய்வப் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, பின் வரிசையாக ஸ்வாமிமலை, அங்கிருந்து மதுரை போகும் வழியில் அழகர் கோயில்,பழமுதிர்சோலை, அங்கே நாவல்பழம் மூலம் ஒளவைக்குப் போதித்த முருகனைப் பார்க்கணும், இந்த சிபி ஏன் இன்னும் "குமாரகாவியம்" எழுதலைன்னு கேட்கணும்! திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சியைப் பார்த்து விட்டுப் பின் திருச்செந்தூர் போய் தரிசனம் முடித்துப் பின்னர் பழனி போய் தண்டாயுதபாணியைப் பார்த்துவிட்டுப் பின்னர், திரும்ப மதுரைக்கு அருகே இருக்கும் என் அப்பாவின் சொந்த ஊரான மேல்மங்கலம் போகவேண்டும் என்ற முடிவு!

சனிக்கிழமை காலையில் 11 மணி வாக்கில் கிளம்பினோம். இங்கிருந்து அம்பத்தூரைத் தாண்டி பைபாஸில் போகவே நேரம் பிடித்தது. சாலையும் மோசம், போக்குவரத்தும் மோசம். ஒரு வழியாக பைபாஸைப் பிடித்துத் திண்டிவனம் வரை கொஞ்சம் பரவாயில்லை, சாலைகள், ஏனெனில் அங்கே எல்லாம் சுங்கம் வசூலிக்கும் சாலைகள், நல்லாவே இருந்தது, பிரயாணம், கும்பகோணம் செல்லும் சாலைப் பக்கம் திரும்பும் வரை! அதுவும் தேசீய நெடுஞ்சாலையில் தான் வருகிறது 45B. ஆனால் சாலையோ மோசமோ, மோசம். ஒரே மேடு, பள்ளம், வண்டிகள் சாதாரண வேகத்தில் கூடச் செல்ல முடியவில்லை, ஒரே குலுக்கல், ஆட்டம். ஒரு 2 மணி நேரத்துக்குள் களைப்பு பிரயாணம் செய்த எங்களுக்கே வந்துவிட்டது, வண்டி ஓட்டுபவருக்கு என்ன கஷ்டமா இருந்திருக்குமோ தெரியவில்லை. ஒருவழியாக மாலையில் 6 மணி போல் கும்பகோணம் வந்து வழக்கமான லாட்ஜுக்குப் போனால் இடமே இல்லைனு கை விரிக்கிறார்கள். இத்தனைக்கும் முன்னாலேயே சொல்லி வச்சிருந்தோம், அப்படியும் இடம் இல்லைனு சொல்லிட்டுப் பின்னர் அவங்களோட கிளை லாட்ஜுக்குத் தொலைபேசி இடம் கொடுக்கச் சொல்லி விட்டார்கள். திரும்பவும் அந்த ஹைஸ்கூல் ரோடில் இருந்த லாட்ஜுக்குப் போனால் அங்கே 3-வது மாடியில் தான் அறைகள் இருந்தனவாம். ஏறுவதற்குப் படிகள் தான். கடவுளே, எப்படி ஏறி இறங்குவது? ஒண்ணுமே புரியலையே? ஒரே குழப்பம். வேறு வழியில்லாமல் அதையே எடுத்துக் கொண்டோம்.

Friday, December 28, 2007

ஒரு சின்ன விளம்பரம்!

வந்தாச்சு, வந்தாச்சு, புதிய விஷயங்களுடன், புதிய படங்களுடன் உங்கள் "எண்ணங்கள்" புதுப் பொலிவுடன், புதிய தகவல்களுடன், இன்றே பாருங்கள், உங்கள் "எண்ணங்கள்"

பெருச்சாளியின் சதி,
மழையின் சதி,
கூகிளின் சதி,
இணைய இணைப்புக் கொடுக்கும் டாட்டா இண்டிகாமின் சதி,
அனைத்தையும் முறியடித்த ஒரே நபர், உங்கள் ஒப்பற்ற "தலைவி"யின் சாகசங்களை இன்றே காணுங்கள், உங்கள் எண்ணங்களில்.

Friday, December 21, 2007

நற்செய்தி, நற்செய்தி, நற்செய்தி!

வலை உலக மக்களே, நற்செய்தி! தமிழ்நாட்டையும், சென்னை நகரையும் கடந்த ஒரு வாரமாக மழை வாட்டி வருவது அனைவரும் அறிந்ததே! இந்த மழையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்தது குறித்து மேன்மை தாங்கிய தலைவி அவர்கள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். (அவங்க வீட்டு வாசலில் குளிக்கலாம், துணி துவைக்கலாம், கப்பல் விடலாம், அவ்வளவு தண்ணி! இதிலே மத்தவங்களைப் பார்த்து துக்கமாக்கும்? :P) க்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஹிஹிஹி, என்னோட மனசாட்சி, அது அடைப்புக்குறிக்குள்ளே வந்து புலம்புது, ரொம்ப நாளா அதைக் கண்டுக்கலைனு கோவம் அதுக்கு! நீங்களும் கண்டுக்காதீங்க!

ஆகவே தலைவி, தென் மாவட்டங்களுக்குப் புயல், சூறாவளி, இப்படி எது வேணாப் போட்டுக்குங்க, வேகத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேர்காணல் மூலம் கண்டு அவர்கள் குறைகளைக் கேட்டு அறியப் போகின்றார். (யாருங்க அது? சொறிஞ்சுக்குங்கனு சொல்றது? வேதா(ள்)வா? ஹிஹிஹி) ரொம்பச் சிரிக்க வேண்டாம், ம.சா. வந்து வச்சுக்கறேன் உன்னை! இப்போ வர்ட்டா??????????????

எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன், ஞாபகம் வச்சுக்குங்க. அபி அப்பா, இதுக்கு தப்புத் தப்பா வந்து பின்னூட்டம் போட வேணாம், நீங்க சாட்டிலே "வ"ன"க்கம்னு சொன்னதுமே இங்கே இணையமே போயிடுச்சு! :P:P

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!


இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில் ஆழ்ந்த மன்னன், மிகவும் வருந்தினான். அப்போது ஐயப்பன் மன்னனிடம் ஒவ்வொரு வருடமும், மகரசங்கராந்தி அன்று தான் காந்த மலையில் ஒளி வடிவில் தோன்றுவதாயும், அப்போது தன் பக்தர்கள் அனைவரும் வந்து தன்னைத் துதிக்கும் வண்ணம் சபரிமலைக் கோயிலில் ஏற்பாடுகள் செய்யும்படியும், மன்னன் செய்து வைத்திருக்கும் திரு ஆபரணத்தை அந்தக் கோயிலின் மூல விக்ரஹத்துக்குச் சாத்தும்படியும் கேட்டுக் கொண்டார். அது போல் மன்னனும், அவன் சந்ததியினரும் ஒவ்வொரு வருடமும் பந்தள அரண்மனையில் இருந்து ஐயனின் திருவாபரணங்களைச் சுமந்து வந்து ஐயனுக்குச் சாத்துவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.

அந்தத் திருவாபரணப் பெட்டிகள் மூன்றிலும் உள்ளவை: ஒன்றில் ஐயப்பனின் திருமேனிக்குச் சார்த்தப் படும் திருவாபரணமும், இரண்டாவதில் கலசக்குடை பேடகமும், மூன்றாவதில் கொடிப்பெட்டியும் உள்ளது. இதைத் தவிர, திருவிதாங்கூரின் சித்திரைத் திருநாள் மகாராஜாவின் காணிக்கையாகத் தங்க அங்கியும் மண்டலபூஜை நிறைவின் போது சாத்துவது வழக்கம். அப்போது ஐயப்பனுக்கு அபிஷேஹம் செய்யப் படும் நெய்யானது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்தே வருவதாயும், இந்த வழக்கத்தையும் இந்த மகாராஜாவே ஏற்படுத்தியதாயும் சொல்கின்றனர். சபரிமலை சாஸ்தா கோயில் கட்டத் தொடங்கிய நாள் கார்த்திகை மாதம் முதல்தேதி என்பதால் ஐயப்பனின் விரதத்தில் கார்த்திகை முதல் தேதி அன்று துவக்குகின்றார்கள்.

நெய்யபிஷேஹம் ஏன் என்பதற்குக் காரணம்:மூன்று கண்களை உடைய தேங்காய் சாட்சாத அந்தப் பரமசிவனின் அம்சம். நெய்யோ என்றால் அந்த நெய் உண்ட மாலவனின் அம்சம். ஹரிக்கும், ஹரனுக்கும் பிறந்த தெய்வக்குழந்தைக்கு அவன், தாயையும், தந்தையையும் ஒன்றாக இணைத்துக் கொடுத்து வழிபடுவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் என்னவென்றால் அழியக்கூடிய நாம் தான் தேங்காய் என்றால் அழிவில்லாத ஆத்மா தான் நெய் என்று கருதி அந்த நெய்யை நிரப்பி எடுத்துச் சென்று ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். அழிவில்லாத ஆத்மாவான நெய்யை, இறைவனிடம் சேர்த்துவிட்டு, அழியக் கூடிய உடலான தேங்காயை, நெருப்பில் இடுகின்றோம்.

Sunday, December 16, 2007

பதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா!


மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற திருநாமம் இவருக்குக் கிடைத்தது என்றும் சொல்லுவார்கள். கள்ளர்களைப் போலவே தலையில் கொண்டை, கையில் வளரி என்னும் ஆயுதம்,(தற்காலத்தில் பூமராங் என்று அழைக்கப் படுகிறது), சாட்டைக் கம்பு, தலையில் எடுத்துக் கட்டிய உருமால், காதுகளில் கடுக்கன்கள், இடுப்பிலும், மார்பிலும் ஒரே ஆடையை இடுப்பில் அரையாடையாகவும், மார்பில் மேலாடையாகவும் கிராமத்து மக்களைப் போல் உடுத்தும் பாங்கு, இவற்றால் கவரப் பட்ட மன்னன் சேரநாடு சென்றும் கள்ளழகர் நினைவாகவே இருந்தான். பின்னர் அங்கே இருந்த "மலையாளக் கருப்பு" கோயிலுக்குப் போய் அவரை வணங்கும்போது அவரிடம் எப்படியாவது அந்தக் கள்ளழகரை இங்கே கொண்டு சேர்ப்பித்து விடு என வேண்டிக் கொண்டார். கருப்பு மன்னனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார். தனக்கும் தாய் தானே ஒரு வகையில், ஆகவே பெருமாளை எப்படியாவது சேரநாட்டுக்குக் கடத்திவிடலாம் என நினைத்துத் தன் பதினெட்டுப் பட்டிகளில் இருந்தும், தன் பரிவார தேவதைகளைச் சேர்த்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்து சேருகிறார்.

கள்ளரின் அழகைப் பார்த்த அவருக்குக் கண் இமைக்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறார். வந்த வேலை மறந்து விடுகிறது. எம்பெருமான் கள்ளர்களை விட்டுவிட்டு, மதுரையை விட்டுப் போவானா? அவன் மாயையே, இம்மாதிரி கருப்பை வந்த வேலையை மறக்கச் செய்கின்றது. அங்கேயே இருந்து தினமும் வணங்கிக் கொண்டிருந்த மலையாளக் கருப்புக்குத் திடீரென ஒருநாள் தான் வந்த வேலையும், தற்போது இருக்கும் நிலையும் புரிய, அழகரையே என்ன செய்வது எனக் கேட்கிறார். அழகரும், "நீ திரும்பிப் போகவேண்டாம். இங்கேயே இருந்து எனக்குக் காவல் காத்துக் கொண்டு இருந்துவிடு. நான் வெளியே போகும் நாட்களில் கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடைய கணக்கு, வழக்குகளுக்கும் நீ பொறுப்பு எடுத்துக் கொள், உன் முன்னிலையில் என்ன தீர்ப்பு வருகின்றதோ அதற்கு மக்கள் கட்டுப் படுவார்கள். உன் முன்னிலையில் ஒருவன் பொய்யாகச் சத்தியம் செய்ய மாட்டான். உண்மையே உன் முன்னிலையில் நிற்கும். என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் உன்னைத் தரிசித்துவிட்டே பின்னர் என்னைத் தரிசிக்க வருவார்கள்" என்று ஆசி வழங்குகிறார்.

கருப்பும் தன்னுடைய பதினெட்டுப் பரிவார தேவதைகளையும், பதினெட்டுப் படிகளாய் மாற்றி அன்று முதல் அழகர்கோயிலில் காவல் இருக்க ஆரம்பிக்கின்றார். இவருடைய பெயரும் அப்போது முதல் "பதினெட்டாம்படிக் கருப்பு" என வழங்க ஆரம்பித்தது. மலையாளத்தில் இருந்து வந்தபடியாலும், பதினெட்டு படிகள் உள்ளதாலும், இவர் சாஸ்தாவின் ஒரு ரூபமே என மக்கள் நம்பிக்கை. மேலும் ஐயப்பனும் கரிய திருமேனி படைத்தவர் எனக் கூறுவது உண்டு. இங்கே பதினெட்டுப் படிகளும், கதவும் தான் தரிசிக்க முடியும். வாசல் கதவு தான் கருப்பண்ணசாமி சன்னதி. சந்தனத்தால் (ஐயப்பனுக்கும் சந்தனம் விசேஷம்) அலங்கரிக்கப் பட்ட இந்தக் கதவின் இருபக்கமும் இரு பெரிய அரிவாள்கள் வைக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கே பூஜைகள் நடக்கும் இந்தச் சன்னதிக்கு முன்னர் நின்று பேசித் தீர்த்து வைக்கப் பட்ட வழக்குகள் மதுரை மாவட்டத்தில் கணக்கில் இல்லை என்றே சொல்லலாம். யாராக இருந்தாலும் இந்தச் சன்னதிக்கு முன்னர் பொய்ச் சத்தியமோ, பொய்ச் சாட்சியோ கூறுவது இல்லை. இன்றளவும், அழகர் சித்திரைத் திருவிழாவுக்கு மதுரைக்குச் செல்வதற்கு முன்னர், கருப்பண்ணசாமி சன்னதியில் அழகரின் நகைகளின் ஜாபிதாவைச் சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பும்போது அதே ஜாபிதாபடியே நகைகள் கணக்குகளைக் காட்டிவிட்டுமே செல்வார்கள்.

பின்னூட்டம் போட்டால் கண்ணாடி உடையும்!

இரண்டு நாள் முந்தி அபி அப்பா "பொங்கள்" பத்தி எழுதி இருந்த பதிவுகளைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் போட்டுட்டு இருந்தேனா? அதிலே இருந்த தப்புக்களைப் பார்த்தால் தலை சுத்த ஆரம்பிச்சது. சரி, ஒண்ணோ, இரண்டோ இருக்கும் சுட்டிக் காட்டலாம்னு பார்த்தால், சுட்டிக் காட்டிட்டு இருப்பதைத் தவிர வேறே ஒண்ணுமே செய்ய முடியலை, எண்ண முடியலை, கடைசியில் தோல்வியை ஒத்துக்கிட்டுத் தலையில் அடிச்சுட்டு உட்கார்ந்தேன். வேறே வழியே இல்லை. எத்தனை சொன்னாலும் அவர் திருத்தி என்னமோ எழுதப் போறதில்லை. விரக்தியின் எல்லைக்கே போய் உட்கார்ந்துட்டு இருந்தபோது, திடீரெனப் பதிவுகளைப் படிக்க முடியலை, என்ன ஆச்சு எனக்கு? தலை சுத்தலில் கண் மறைக்கிறதா? அல்லது என்னோட தமிழ் ஆர்வம் அதிகமாகிக் கண்களில் இருந்து அபி அப்பாவின் தமிழைப் பார்த்துவிட்டு ஆனந்த பாஷ்பம் பொழியுதா? என்னன்னே புரியலை.

"சொத்!" எதுவோ கீழே விழுந்த சப்தம். என்னனு குனிந்து பார்த்தால், கண்ணாடி, கண்ணுக்குப் போடுவது தாங்க, கையில் வந்தது. ஃப்ரேம் லூசாகி விட்டது, டைட் பண்ணணும்னு நினைச்சுட்டே கையில் கண்ணாடியை எடுத்தால், என்ன ஆச்சரியம்? ஒரு பக்கத்து ஃப்ரேமே உடைஞ்சு போயிடுச்சு. கொஞ்ச நாள் முந்தி ஒரு புத்தகத்தில் படிச்சேன். வெளிநாட்டுக் காரர் ஒருவர் லலிதா சகஸ்ரநாமம் டேப்பை இந்தியாவில் இருந்து வாங்கிப் போயிருந்தாராம். வாங்கும்போதே இதுக்குப் "பவர்" அதிகம், தினமும் சொன்னால், அதுவும் ஒரே சிந்தையுடன் சொன்னால் அதிகமாய் சக்தி இருக்கும் என்று. அதைச் சோதனை பண்ணிப் பார்க்க வேண்டி அவர் தினமும் அந்த சஹஸ்ரநாமம் காசெட்டைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டே ஒரே சிந்தனையாக இருந்திருக்கிறார். திடீர்னு ஒரு நாள் அது வெடித்தே விட்டதாம். அது போல அபி அப்பாவின் தமிழுக்கும் கண்ணாடியை உடைக்கும் அளவுக்குச் சக்தியா என்று வியந்து போய் விட்டேன், போங்க, மூணு நாளா கண்ணாடி இல்லாமல் எதுவும் செய்ய முடியலை, நேத்துச் சாயங்காலம் தான் ஒரு மாதிரி ஃப்ரேம் சோல்டரிங் பண்ணி வந்தது. பவர் வேறே ஜாஸ்தியாகி இருக்கு. கண்ணாடியையே மாத்தணும், அதுக்குள்ளே, இது வேறே. இனி "மொக்கை இடைவேளை" முடிஞ்சு பதிவுகள் ஆரம்பம்.

Wednesday, December 12, 2007

காரணம் என்ன சொல்வேன்?

ஐயப்பனைக் காண வாருங்கள், பதிவு இன்னும் முடியலை, சில எதிர்பாராத காரணங்களினால் உடனே தொடர முடியலை, பதினெட்டாம்படிக் கருப்பைப் பற்றி எழுதப் போறேன்னு சொன்னேன், 2 நாள் தகவல் தேடினேன், அதுக்குள்ளே, வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் "பொதிகை" மூலமா அற்புதமான தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையிலே தான் எழுதப் போறேன், மேலும் ஐயப்பன் கல்யாணம் பத்தியும், மதுரை செளராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவர்கள் அதை நடத்துவாங்கன்னும் நான் சொன்னதைக் கூடல் குமரன் உறுதி செய்துள்ளதோடு மேலதிகத் தகவல்களும், படங்களும் இருப்பதாய் லிங்க் கொடுத்துள்ளார். இன்னும் போய்ப் பார்க்க முடியலை, போகணும், கண்ணபிரான் கேட்ட "திருவாபரணங்கள்" பத்தியும், மதுரையம்பதியின் பதிவிலே உள்ள "சத்யகா" பத்தியும் தகவல்கள் கேட்டுட்டு இருக்கேன், கிடைச்சதும் அதையும் இணைக்கணும், ஆகவே இன்னும் அது முடியலை, வெயிட்டீஸ் ப்ளீஸ், அதுவரை, மெகா தொடருக்கு நடுவே, தொலைக்காட்சிச் சானல்களில் விளம்பர இடைவேளை மாதிரி நம்ம வலைப்பதிவில் மொக்கைப் பதிவுகள் வரும், எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்த வேண்டாமா? அதுவும் பெருவாரியான குண்டர்கள், சீச்சீ, சிஷ்யகேடிகள், சீச்சீ, என்னமோ தப்பாவே வருதே, சிஷ்யகோடிகள்னு வரணும் இல்லை? அவங்களுக்கு எல்லாம் மொக்கையே போதும்னு இருக்கும்போது, சிறிது அவங்களையும் திருப்தி செய்து மொக்கை போடவேணாமா?

நேத்துப் பூராப் பொதிகையிலே பாரதியார் பாட்டு, பாரதியார் பட்டிமன்றத் தொகுப்பு நிகழ்ச்சிகள், பாரதி பாட்டை ராஜ்குமார் பாரதி பாடிய பழைய? மறு ஒளிபரப்பு?, அப்புறம் பாரதி பாட்டுக்களில் "சக்திப்பாட்டுக்கள்" தேர்ந்தெடுத்து மெல்லிசை, பாரதி விழா என ஒரே பாரதியாகவே இருந்தது. என்றாலும் பொதிகைத் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது பாரதியை நினைவு கூர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்று பொதிகையே அதிகம் பார்க்கும் என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். ஆனால் தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று எதிலுமே வரலைனு நினைக்கிறேன். அதாவது நான் பார்க்கும்போது, மற்ற நேரங்களில் காட்டினாங்களா தெரியாது. ஆனால் நேற்று சாயந்திரம், சன்ஸ்கார் சானலில் கங்கை ஆரத்தி முடிஞ்சு, பொழுது போகாமல் சானல் மாற்றிக் கொண்டிருந்த போது, "ராஜ்" தொலைக்காட்சியில் "சுப்பிரமணிய பாரதி" என்ற தலைப்பில் நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. என்ன அதிசயம் எனப் பார்க்க ஆரம்பித்தேன். நிஜமாகவே அற்புதமான ஒரு தொகுப்பு. முதல் பகுதி, அதாவது பாரதி பிறந்ததும், அவர் அம்மா இறந்து,தந்தையின் மறுதிருமணம் எல்லாம் போய்விட்டது. நான் பார்க்கும்போது 11-ம் வயதில் பாரதி எழுதிய முதல் கவிதையில் இருந்து சில வரிகள் கைஎழுத்துப் பிரதியாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அந்தக் கவிதைக்கு அவருக்குக் கிடைத்த "பாரதி" பட்டமும், பேரும், புகழும் என்று, பின்னர் தந்தை நடத்திய ஜின்னிங் பாக்டரியை மூட வேண்டிய கட்டாயமும், அதை மூடக் காரணம் ஆங்கிலேயர் விதித்த வரிகள் எனவும், அந்த வரிகளைக் கட்ட முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு மூடவேண்டிய நிர்ப்பந்தமும், அந்த பாக்டரியின் இடிந்த சின்னங்களும் எனக்காட்டினார்கள், பாரதியின் திருமணமும், பின்னர் தந்தை மரணம், திருநெல்வேலி இந்துப் பள்ளியில் படித்த பாரதி, படிப்பை நிறுத்த வேண்டி வந்ததும், மனதை நெகிழ வைத்தது. பள்ளியின் பாரதிக்கு நினைவுச் சின்னம் எழுப்பி இருப்பதையும் காட்டினார்கள்.

பின்னர் அத்தை குப்பம்மாளிடம் போனது, காசியில் படித்தது, அங்கே ஆங்கிலம், வடமொழி, என கற்றுத் தேர்ந்தது, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது எனக்காட்டினார்கள். படித்த பள்ளியையும், அத்தை குப்பம்மாளின் இல்லமும் இடம் பெற்ற இந்தக் காட்சிக்குப் பின்னர் காசிக்கு வந்த எட்டயபுரம் மன்னர் அழைப்பின் பேரில் திரும்ப எட்டயபுரம் போய் அரசவைக் கவிஞனாக இருக்க முயன்றதும், 6 மாதங்கள் கூட நீடிக்க முடியாமல் போனதும், பின்னர் சேதுபதி உயர்நிலைப்பள்ளி, மதுரையில் தமிழாசிரியராக வந்தது, அங்கேயும் 3 மாதங்களுக்குள், ஜி.சுப்பிரமணிய ஐயரால் "சுதேசமித்திரன்"பத்திரிகைக்கு அழைக்கப் பட்டுச் சென்னை வந்தது, தேசீய எழுச்சியின் தாக்கத்தால் எழுந்த பாடல்கள், நிகழ்த்திய சொற்பொழிவுகள், திலகரிடம் கொண்ட பக்தி, வ.உ.சி. நண்பரானது, அவரும் சுப்பிரமணிய சிவாவும், ஆங்கிலேயரின் தந்திரத்தால் கைது செய்யப்ப்பட்டது, அவர்களை மீட்கப் போராடினது, சாட்சி சொன்னது என்றும் காட்டினார்கள். விஞ்ச் துரையுடன் வ.உ.சி. நிகழ்த்திய பேச்சுப் பற்றிய பாடலும் இடம் பெற்றது.

இந்தச் சமயம் தான் "இந்தியா" பத்திரிக்கைக்கும் அழைப்பு வருகிறது பாரதிக்கு. அதை நடத்திய திருமலாச்சாரியார், பாரதியை ஆசிரியர் என்று போட்டால் ஏற்படக் கூடிய நிகழ்வுகளை நினைத்து, திரு ஸ்ரீநிவாசன் என்பவரை ஆசிரியராக வெளிப்படையாகப் போட்டு அதை நடத்துகிறார். இந்தப் பத்திரிகையில் பாரதி முதல்முதலாகக் கேலிச்சித்திரங்கள், என்னும் கார்ட்டூன்களை வைத்து அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்வதை ஆரம்பித்து வைக்கிறார். பத்திரிகையின் சூடு தாங்கவில்லை ஆங்கில அரசுக்கு. பாரதி கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரதிநிதியாகப் போகிறார். பின்னர் 1907-ல் நடந்த சூரத் காங்கிரஸில், மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகள் எனச் சொல்லப் பட்ட திலகர் குழுவுக்கும் நடந்த வாக்குவாதம் கலவரத்தில் முடிகிறது. விபின் சந்திரபால் கைது செய்யப் படுகிறார். சற்று முன்பின்னாக இருக்கோன்னு நினைக்கிறேன். குறிச்சு வச்சுக்கலை, ஓரளவு நினைவில் இருந்து எழுதறேன். இந்தியா பத்திரிகை "யங் இந்தியா" என பாரத இளைஞர்களுக்காகவும் ஒன்று ஆரம்பிக்க அதன் ஆசிரியர் ஸ்ரீநிவாசன் கைது செய்யப் பட பாரதியும் கைது செய்யப் படும் சூழ்நிலை தெரிகிறது. விபின்சந்திரபால், திலகர் இவர்களின் கோஷங்களை எழுதிய பத்திரிகைகளையோ, அல்லது நோட்டிஸ்களையோ திருவல்லிக்கேணித் தெருக்களில் பாரதி விநியோகித்ததாயும், அன்று மாலை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவ்ர் பேச்சு ஆவேசம் நிரம்பியும் இருந்ததாயும் இந்தியா பத்திரிகையில் வர பாரதி தேடப் படுகின்றார். ஆகவே பத்திரிகை நடத்திவரும் திருமலாச்சாரியாரே பாரதியைப் புதுச்சேரிக்கு அனுப்பி அங்கே இருந்த தம் நண்பர் ஒருவர் உதவியுடன் பத்திரிகையை அங்கிருந்தே வெளியிட ஏற்பாடு செய்கின்றார். இந்த இடத்தில் தான் ஒரு ஆச்சரியமான விஷயம் பகிரப் பட்டது. அயர்லாந்தும், இங்கிலாந்தில் இருந்து சுதந்திரம் பெறப் போராடிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது அமெரிக்காவில் இருந்து வெளிவந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை "ஜர்னல் அமெரிக்கா" என்றோ என்னமோ, நினைவில் இல்லை, ஆனால் அமெரிக்கா என முடிகிறது. இந்தப் பத்திரிகை, அயர்லாந்தின் விடுதலையை முற்றிலும் ஆதரித்ததோடு அல்லாமல், அங்கே இருந்து அமெரிக்கா சென்றவர்களையும் ஆதரித்து வந்திருக்கின்றது. அந்தப் பத்திரிகையை அன்றைய நாட்களில், அதாவது 1906, 07, 08-ம் ஆண்டுகளில் சென்னை ராஜதானியில் மொத்தம் 13 பேர் மட்டுமே சந்தா கட்டி வரவழைத்திருக்கின்றார்கள், அவர்களில் பாரதியும் ஒருவர், இதுதான் ஆங்கிலேயர் அவரிடம் வெறுப்பும், கோபமும் கொள்ள அடிப்படைக் காரணம் என்று இந்தப் பதிவில் காட்டப் படுகிறது. மிச்சம் இன்னிக்குச் சாயங்காலம்னு சொல்லிட்டாங்க, அதுக்குள்ளே பொதிகையில் "வேளுக்குடி"யும் ஆரம்பிச்சுட்டார்.

இன்று காலை நம்ம வல்லி சிம்ஹன் ஊரைக் காட்டினாங்க பொதிகையிலே. அருமையா இருக்கு ஊர், மரங்களும், செடி, கொடிகளும் ஒரே பச்சைப் பசேல் என்று. நாங்க என்னமோ திருநெல்வேலி போனப்போ எப்படி இந்த ஊரை விட்டோம்னு தெரியலை, அந்த வட்டப்பாறையும், அதைத் தொடர்ந்த ராமானுஜர் கதையும், அவர் திருவனந்தபுரம் சென்றதும், அங்கிருந்த பெருமாளைக் கொண்டு வர நினைத்ததும் பெருமானுக்கு வர இஷ்டம் இல்லாததும், ராமானுஜருக்குத் தூக்கம் வரவைத்து, அவரைத் தூக்கத்திலேயே அங்கிருந்து திருக்குறுங்குடி அனுப்பி விடுகின்றார் எம்பெருமான். ஆனால் ராமானுஜரின் அணுக்கத் தொண்டர், அவருக்குச் சகலத்திலும் உதவுவர் வந்து சேரவில்லை. ராமானுஜரோ, அது புரியாமல் தம் தொண்டரைக் கூப்பிட, அங்கே கோயிலில் குடி கொண்டிருக்கும் திருக்குறுங்குடி நம்பியான எம்பெருமானே தொண்டராக வந்து ராமானுஜருக்குத் தொண்டு செய்ததும், அதை ஒட்டிய புடைப்புச் சிற்பங்களுமாக அற்புதமாய் இருந்தது. ஒரு தனிப்பதிவே போடலாம். இதிலே எழுத ஆரம்பிச்சுட்டேன், அதான் சுருக்கமாய்ப் போச்சு, வல்லி இது பத்தி விரிவாய் ஒரு பதிவு போடுவாங்கனு எதிர்பார்க்கலாம்.

Tuesday, December 11, 2007

126 வது பிறந்த நாள்


அநேகமா எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் இன்னிக்கு ஏன் வரச் சொன்னேன் என்று. இருக்கும்வரை யாருமே சீந்தாமல் இருந்த பாரதியார், இறந்த பின்னர் "தேசீயக் கவி" ஆனார். அவர் பாடல்களைப் பாடத் தடை விதித்திருந்தது ஆங்கில அரசு. ஆனால் இப்போது எல்லாவற்றுக்கும் அவர் பாடல், அல்லது கட்டுரை தான் உதாரணம் காட்டப் படுகிறது. காலத்தை வென்ற அந்த "அமரகவி"க்கு ஒரு சின்ன அஞ்சலி!


டிசம்பர் 11 பாரதியார் பிறந்தநாள். அவர் இருக்கும்போது யாரும் அவரையோ, அவர் கவி
உள்ளத்தையோ கொண்டாடவில்லை. வறுமையில் தான் தவிக்க விட்டார்கள். கிட்டத்
தட்ட பத்து வருஷங்களுக்கு மேல் பிரஞ்சு நாட்டுப் பகுதியான புதுச்சேரியில் வாழ்க்கை
நடத்திவிட்டுப் பின்னர், மனைவியும், குழந்தைகளும் கடையம் சென்ற பின்னர், தனியாகப் புதுச்சேரி வாசம் சலித்துப் போய் அவரும் இந்தியப்பகுதியான கடலூருக்கு வந்த போது அவரை ஆங்கில அரசு கைது செய்து ரிமாண்டில் வைக்கிறது. உடனே கடையம் போயாகவேண்டும். ஆனால் அவரை நிர்ப்பந்திக்கும் அரசு ஒரு பக்கம், மறுபக்கம் குடும்பச் சூழல் எனத் தவிக்கின்றார். முடிவில் ஆங்கில அரசு கடையத்தை விட்டு வரக் கூடாது என்று சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு வெளியே வந்து கடையம் செல்கின்றார். பாரதியின் உணர்ச்சி செறிந்த கவிதைகளுக்கு ஆங்கில அரசு அவ்வளவு கவலைப்பட்டதோடு அல்லாமல், கிரிமினல் குற்றவாளி போலவும் நடத்தியது. பாரதியின் "இந்தியா" பத்திரிகையையே தடை செய்தவர்கள் அல்லவா!

கடையம் சென்ற பாரதி, சாப்பாட்டுக்கு வழியில்லாமல் எட்டயபுரம், திருவனந்தபுரம், கானாடுகாத்தான், காரைக்குடி போன்ற ஊர்களில் உதவி தேடுகின்றார். எட்டயபுரம்
அரசருக்குச் சீட்டுக்கவிகள் அனுப்புகின்றார். நோபல் பரிசுக்காகத் தன் கவிதைகளை
அனுப்பவும் விருப்பப்படுகின்றார். வறுமை காரணமாக எதுவுமே நடக்கவில்லை. பாரதி இந்த
மாதிரிக் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த சமயம் தான் மதுரையில் டவுன்ஹாலில் நோபல்
பரிசு பெற்ற தாகூருக்குப் பாராட்டு விழாவும், வரவேற்பும் நடைபெற்றது. 1913-ல் நோபல்
பரிசு வாங்கிய தாகூருக்கு கிட்டத் தட்ட ஆறு வருடங்கள் கழித்துப் பாராட்டு விழா எடுத்த தமிழர்களில் யாருமே பாரதி சோற்றுக்குக் கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பதை நினைவு கூரவில்லை. தன்னுடைய 11-ம் வயதில் பாரதிக்குக் கிடைத்த பட்டம் "பாரதி" என்பது. அதன் பின்னர் உயிர் உள்ளவரை எந்தப் பட்டமும் யாரும் பாரதிக்கு அளிக்கவில்லை.


1919 மார்ச்சுக்குப் பின்னர் மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் பிடிகளைத்
தளர்த்திக் கொள்கிறது ஆங்கில அரசு. அதன் பேரில் ஊரை விட்டுக் கிளம்பி சென்னை வருகின்றார். இந்தச் சமயம் தான் காந்திஜியின் தென்னாட்டு விஜயம் நடைபெற்றதால் ராஜாஜியின் வீட்டில் காந்தியுடன் சந்திப்பு நடைபெறுகிறது. என்றாலும் வாழ வழி எதுவும் கிடைக்காததால் மறுபடி கடையம் செல்கின்றார். பல முயற்சிகளுக்குப் பின்னர் 1920
டிசம்பரில் தான் சுதேசமித்திரன் பத்திரிகையில் வேலை கிடைத்துச் சென்னை வருகிறார். என்றாலும் அவர் அதன் பின்னர் 7,8 மாதங்கள் தான் உயிர் வாழ்ந்தார். செப்டம்பரில் 12-ம் தேதி தன்னுடைய 39-ம் வயது நடக்கையிலேயே உயிர் துறக்கிறார். இந்த வயதுக்குள்ளேயே அவர் கண்ட கனவுகள், எழுத்து வடிவம் பெற்று விட்டிருந்தாலும் பாரதியை ஒரு கவி என்றே பின்னர் பல வருஷங்களுக்குப் பின்னர் தான் ஒப்புக் கொள்ளப் பட்டிருப்பது
துயரமான விஷயம். பாரதி யுகம் என்பது பாரதியோடு முடியவில்லை. இன்னும் தொடரும், ஏனெனில் பாரதியின் கனவுகள் எதுவும் நனவாகவில்லை. கீழே உள்ள கவிதை பாரதி வாழ்வு என்ற கவிதைத் தொகுப்பில் உள்ளதின் ஒரு பகுதி. எப்போது எழுதினார் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சீனி.விஸ்வநாதனின் புத்தகங்களில் இருக்கலாம். எனக்கு அது இன்னும் எட்டாக்கனி தான். விலையும் சரி, நூலகத்திலும் சரி கிடைப்பதில்லை!

""மற்றையக் கல்லுரு மாறிடப் பின்னு
மானிடன் தான் என மனத்திடை அறி போழ்து
எத்தனை இன்பமுறு எந்நிலை நிற்பன்?
அத்தகைய நிலையினை அளியனேன் எய்தினன்
வெம்போர் விழையும் வீரனிங்கொருவன்

சிறையிடை நெடுநாட் சிறுமை பெற்றிருந்த பின்
வெளியுறப் பெற்றவ் வேளையே தனக்கோர்
அறப்போர் கிடைப்பின் அவன் எது படுவன்?
அஃதியான் பட்டனன், அணியியற்குயிலே,
நின்முக நகையும் நின் விழி யாழ்மையும்

நின்னுதல் தெளிவும் நின் சொல்லினிமையும்
நின்பர் சத்தே நிகழ்ந்திடு புளகமும்
ஈதெலாம் பின்னரு மெண்ணிடைத் தோன்றப்
பின்னுமோர் முறையான் பெருமையோய் நின்னைச்
சரணென அடைந்தேன், தமியெனைக் காத்தி!"

சாலை ஜெயராமனின் பகிர்வுகள் -2 ரசிகனுக்காக

ரசிகன் தங்கள் ஆழமான பார்வைக்கு முதலில் என் பாராட்டுக்கள். தங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க
எனக்குத் தெரிந்தவரை முயற்சி செய்கிறேன். குற்றமிருப்பின் மன்னிக்கவும்.

முதலில் பரிபாஷைகள் பற்றி.........

பரி பாஷைகள் என்பது ஒரு கருத்தை மறைமுகமாகத் தெரிவிப்பது. அதுவும் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைக கொண்டே சங்கேத முறையில் பேசிக் கொள்வது அல்லது அறிவிப்பது. இது தமிழ் மொழியில் மட்டும்தான் அதிகம் பயன் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்திய சாஸ்திரத்தில் அதிகமாக
கையாளப்பட்டுள்ளது. 'அகத்தியர் குழம்பு' போன்ற நுால் இதற்கு சான்றாகும். மற்றைய மொழிகளில்
இவ்வாறு பரிபாஷைகள் வழக்கில் இருக்கிறதா என்பதை தமிழறிஞர்கள் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுவோம். ஒரு
மொழியை சிறப்பித்துக் கூற வரும்போது பிற மொழிகளை குறைத்துக கூறுவது நாகரீகமாகாது. என் நோக்கம் அதுவுமல்ல. ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பிற்கு ஏற்றவாறு தன் தன் வளமையைக் கொண்டுள்ளது.

ஆனால் மற்ற மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டெனில் அது உயிரியலையும்,
வாழ்வியலையும் ஒருங்கே பெற்று உயிர் மொழியாக இருப்பதுதான்.

தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் மறை பொருளாகிய மெய்ப் பொருள் என்னும் மெய் அருத்தம் ஒன்று உண்டு. இதையே வள்ளுவர் பிரான் 'மெய்ப் பொருள் காண்பதறிவு' எனக் கூறுகிறார்.

இலக்கண நுாலான தொல்காப்பியம் சொல்லின் இலக்கணமாக 'தமிழ்ச் சொற்களில், ஒவ்வொரு சொல்லும் 'ஆறு வீதி'
'பதினெட்டு சந்து' என்று சொல்லப் பெறுகிற லட்சணத்தைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது. அதாவது எந்தஒரு சொல்லையும் பொருள் கொள்ளும் போது இடத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்ளலாம். ஆனால் அந்தச் சொல்லுக்கு மெய்யருத்தம் காணப் புறப்பட்டால் அது தன் முகத்தைக் காட்டாது. இந்த 'யுனிக் கோடு' அமைப்பு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களால் கையாளப்பட்டது தமிழுக்கு ஒரு சிறப்பு. எனவே நம் மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் புழக்கத்தில் கொள்ளும் அர்த்தத்தை தவிர அந்த சொல்லுக்குரிய மெய்யான பொருள் மறைவாக உள்ளது என்பது செய்தியாகும்.

உதாரணமாக 'படி' என்ற ஒரு பதத்திற்கு பொருள் கூறும் போது படித்தல் என்று வினைச் சொல்லாகவும், பெயர்ச் சொல்லாக வரும்போது அளக்கும் உபகரணமான படி, வாயிற் படி, அடுக்கு என்ற பொருள் பட வரும். இவ்வாறாக பயன் பாட்டுச் சொல்லாக வரும்போது ஆறு வீதி வழியாக அனைவர் பார்வைக்கும் பட நிற்கும்.

மெய்யருத்தம் காணும் முகத்தான் படியைத் தேடினால் 18 சந்து களில் தன்னை மறைத்துக் கொண்டு சத்திய
வழி நடப்பவர்களுக்கு மட்டும் தன் முகத்தைக் காட்டும்.

இதை மேலும் விவரிக்குமிடத்து, ஒரு பெயர்ச் சொல்லை எடுத்துக் கொள்வோம். ' முயல் ' என்ற ஒரு
சொல்லானது வெளித் தோற்ற வழியாக பொதுவாகச் சொல்லுமிடத்து,ஒரு பிராணியைக் குறித்து வரும்.
இதையே சித்தர்கள் , ஞானிகள் தங்கள் இறை அனுபவங்களைக் கூறுமிடத்து, சாமானியர்களும், துன்
மார்க்கர்களும் தங்கள் நெறி வழிகளை துஷ்பிரயோகம் செய்யாமலிருக்கும் பொருட்டு மெய்ப் பொருளை
மறைத்துக் கூறுவர். முயற்சியுடையோர் ஒரு மெய்யான ஆசான் மூலம் அறிந்து கொள்ளட்டும் என விட்டுவிடுவர்,

முயல் என்ற சொல்லை ஆழ்ந்து நோக்கினால், முயலுதல் என்ற ஒரு செயலுக்கும், அந்த முயலுதல் என்ற
காரியப்படும் போதுமறைந்து நிற்கும் முயலின் அருங் குணங்களைக் கைக் கொண்டால் முயலுதல் வெற்றியைத் தரும். முயலின் குணங்களாவது துாய்மைக்கு உதாரணமாகவும், சுத்தத்திற்கு எடுத்துக் காட்டாகவும் முயல் என்ற பிராணியின். பிறவி அமைப்பு. இதைக் கூர்ந்து நோக்குவோர் மட்டும் அறிந்து
கொள்வர்.

அதிகாலை Dawn என்று சொல்லப் பெறும் பிரம்ம முகூர்த்த காலத்தில் மட்டும் முயலானது நீர் அருந்தும்
அருங்குணம் கொண்டது. அது தரையில் உள்ள னீரை அருந்துவதில்லை. காலை வேளையில் வயல் வெளிகளில் நிறைந்து காணப்படும் புற்களின் மேல் பரவி நிற்கும் துாய்மையான பனி நீரை அருந்தும் குணமுடையது முயல். இந்த குணம் சத்வ குணமானதால் இதை முயற்சி செய்தல் நலம். இதை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துாய்மையையும் சத்தியத்தையும் கைக் கொண்டு
நடைமுறையில் முறையான பயிற்சியில் ஒரு ஆசானின் துணையோடு முயல்வோமேயானால் அதுவே
முக்திநிலை. இங்கும் முக்தி னிலை என்பது ஒரு பரிபாஷையே. அதை விவரிக்க தனி பிளாக்கில் எழுத
உள்ளேன். வெறும் சத்வ குணம், ரஜோ குணம், தமச குணம் என்று கூறுவதைக் காட்டிலும், அந்தக்
குணங்களை நாம் தமிழ்வழியில் தேடிக் கண்டடையலாம்.

அடுத்து ஒரு பரி பாஷை பார்ப்போம். குணங்களைப் பற்றிப் பேசும் போது புறங்கூறுதல் என்ற ஒரு
தீமையான குணத்திற்கு அர்த்தம் கொள்ளும் போது, சாமானியர்கள் பார்வையில், ஒருவரைப் பற்றி அவர்
இல்லாத இடத்து அவரைப் பற்றி தவறான கருத்துக்களை மிகச் சாதாரணமாக உபயோகிப்பது என்பது பொருள்.

ஆனால் இதையே ஞானிகள் பார்வையில் வேறாக உள்ளது. வடலுார் வள்ளல் பிரான் திரு ராமலிங்க அடிகள் இதைக் கூறுமிடத்து, 'அகத்தைப் பற்றிப் கூறாத எல்லாமும், எதுவும் புறங்கூறுதலே ஆகும்' என்பார்.
புறம் என்றால் வெளியே / அகம் என்றால் உள்ளே. இயன்றவரை புறத்தினைப் பற்றி சிந்திக்காமல் அகத்துள் உறைந்துள்ள ஈசனை வெளியே தேடாமல் உள்ளேயே சிந்தித்திருப்போமேயானல், தியானம் என்ற தவனிலையை அடையலாம்.

இதையே 'சிவாய நம வென சிந்தித்திருப்போருக்கு' என சைவ ஆகமங்கள் கூறுகிறது.

இதையே வள்ளுவ பிரான் எவ்வாறு கையாண்டுள்ளார்கள் எனக் காண்போம்.

மறைமொழி மாந்தர் தம் பெருமை உலகே அவர்தம் நிறை மொழி காட்டிவிடும்

தக்கார் தகவிலார் என்பார் அவர்தம்
எச்சத்தால் காணப் பெறும்

அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்,

இதில் நிறைமொழி, எச்சம், அடக்கம், ஆரிருள் போன்றவை பரிபாஷைகளாக உள்ளன,

மேலும் இந்தக் குறள்களை (கொரல்களை) நன்கு கூர்ந்து நோக்கின் மெய்யர்த்தம் வேறொன்றாக இருக்கிறது. அது சாமானியர்களுக்கு சாதாரணப் பொருளையும், பரிபாஷை கண்ட நிறை மொழி மாந்தர்க்கு மெய்ப் பொருளான ஒரு மெய்யையும் கொண்டுள்ளது என அறியலாம்.

எனவே கடவுள் என்பது புறத்தில் அதாவது வெளியில் இல்லை. சமஸ்கிருதம், யூதர்க்ளைப் போல்
அல்லாமல், நீங்கள் கூறியது போல் தமிழ் மட்டுமே சொர்க்கத்திற்கு டிக்கட் போடும் வல்லமையைக் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் 'ஆங்கு+இலம்=ஆங்கிலம்' ஆங்கு (அங்கே) எந்த மொழியாலும் சொர்க்கத்திற்கு வழிகாட்ட முடியாது. ஏனென்றால் சொர்க்கம் என்பது வான வெளியினில் அல்ல. அது நம் அகத்தே உள்ள ஒரு நன்னிலமாகும். எரேபிய மொழியிலிருந்து பைபிளை தமிழாக்கம் செய்யப்பட்டபோது தமிழின் சிறப்பால் புனித பைபிளானது ஒரு மெய்ஞானப் பெட்டகமாக மிளிர்கிறது.

உதாரணமாக பிராமண குலத்து மக்களிடையே புழங்கப்படும் பூணுல் என்ற சொல்லை முப்புரி நுால் என்று
பைபிளில் கையாளப்பட்டுள்ளது மிக ஆச்சிரியத்தைத்தரும். இதை நுால் என்றும் புத்தகம் என்றும் பல
கிருத்துவ அன்பர்கள் கூறக் கேட்டேன். மெய்யான பொருள் மெய்நிலை அடைந்தோருக்கே கிட்டும். பைபிள்
பிரசங்கி (4 12) அதிகாரத்தில் முப்புரி நுால் பற்றி வருகிறது. இதுதான் தமிழின் சிறப்பு,

தமிழின் மற்றொறு சிறப்பையும், இதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு செய்தியும் இங்கு தர விரும்புகிறேன்.
நம்முடைய மூச்சுக் காற்றோடு அதாவது உயிரோடு மிகக் கவனமாக இணைக்கப் பட்ட மொழி நமது தமிழ்.
எவ்வாறெனப் பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு விடும் மூச்சுக் காற்றானது 21600 முறை என வேலை மெனக்கெட்டு கவனமாக எண்ணப்பட்டது நமது மூதாதையர்களால். அக்ஷ்ரக் கல்வி என்று சொல்லப்படும் நமது தமிழ் மொழியின் உயிர், மெய் எழுத்துக்கள் 216 உடன் 100 சுவாசங்களை ஒரு அட்சரத்திற்கு கொண்டு 21600 சுவாசத்தையும் மொழியோடு இணைத்துள்ளனர். சுவாசப் பயிற்சியெனும் உயர்நிலை யோக நெறி கைவசப்பட்டால் மூச்சோடாத பெரு நிலை தியானத்தைக் கைவசப்படுத்தலாம்.

மூச்சை இழுத்து வெளியே விடும் சுவாசம் பிறந்தவுடன் தொடர்கிறது. 8 அங்குலக் காற்றை உள்ளே இழுத்து

12 அங்குல அசுத்த காற்றை வெளியில் விடுகிறோம். இயல்பாக இது நடைபெறுகிறது. இந்த இயக்கம் நின்று
விட்டால் இறப்புதான். 12 அங்குல காற்று ஒவ்வொரு சுவாசத்திலும் வெளியேற்றப்படுவதால் நரை, திரை,
மூப்பு என்னும் நிலைகளில் சின்னாபின்னப்பட்டு பின் இந்த உடல் வீழ்ந்து விடுகிறது. சராசரியாக 100
வயதிற்குட்படுத்தப்பட்ட நம் வாழ்வு தற் காலங்களில் 50க் குள் முடிந்து விடுவதைப் பார்க்கிறோம்.

இயல்பாக விடும் மூச்சுக் காற்றே நம்மை இறப்புக்கு கொண்டு செல்கிறது. இதில் கோபப் பட்டால் 12
அங்குலம், 36 ஆகவும், காமத்தில் போகிக்கும் போது 68 ஆகவும், உறக்கத்தில் ஏறக் குறைய 108 அங்குலம் குறட்டை ரூபத்தில் வெளியேறி சாவின் எல்லை சென்று திரும்புகிறது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை 'உறங்குவது போல் சாக்காடு' எனக் கூறுகிறார்.

ஆனால் முயற்சி செய்தால் இந்த 8 அங்குல சுவாசத்தை 4 அங்குலமாக மாற்றி அதையே பின் மூக்கினுள்
மட்டும்சுவாசிக்கும் யோக நிலையை அடைய மனிதனால் மட்டுமே முடியும். இந்த சுவாசம் தான
வெற்றியைத் தரும் விசுவாசம் நம்பிக்கை என்ற பொருளாக மறைந்து உள்ளது. இன்றைய வாழ்க்கைச்
சூழலில் நாம் மிகச் சாதாரணமாக பொருளாதாயத் தேட்டலினால் சுவாசத்தை இழந்து மிகச சிறிய வயதில் பொலிவிழந்து டென்ஷன் டென்ஷன் என நம்மை நாமே இழந்து விடுகிறோம். சைவத் தமிழ் நுால்கள் இந்த ஒப்பற்ற சுவாசம் பழகும் யோக நெறியைப் போதிக்கிறது.

அதைப் போல் 'கண்+நாக்கு = கணக்கு' என்பதில் கணிதம் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. கண் நாக்கு
இரண்டினாலும் கவனமான அணுகுமுறைக் கைகொண்டால் மிகச் சிறந்த யோக நெறி வசமாகும். தமிழில் மட்டும்தான் இப்படிப் காரணப் பெயர்கள் அதிகம் உள்ளது,

ஆவல் - அவா அறிவு - ஞானம்

போன்wறசொற்களுக்கு மிக நீண்ட விளக்கம் உள்ளது. போகப் போக சிறிது சிறிதாகப் பார்ப்போம். இவை அனைத்துத் தகவலும் ஆன்மீகத்தோடு சம்மந்தப்பட்டிருந்தாலும் தனியாக சாதி மதம் மொழி என்ற பேதமற்று சத்திய மாக கடைப்பிடித்தால் மட்டும் போதும் வையத்துள் வாழ்வாங்கு இனிமையாக வாழலாம் என்ற கருத்தை சொல்ல

விரும்பியே இத்தகவல்களைத் தந்துள்ளேன்.

// பொதுவான ஒரு
இறைவுலகை அறிவித்தே எல்லா வேதங்களும் இப்பூமிக்கு இறக்கப்பட்டுள்ளன.//
பக்குவமடையும் வரை இறை கன்செப்ட் மனிதனுக்கு ரொம்ப அவசியம் .அதனால
எழுதப்பட்டவை (இறக்கப்பட்டவையல்ல ) .
ஆனா அதுலயும் நெறய பேதங்கள் காலத்துக்கேற்ப்ப.. இந்து மதம் வர்ணங்கள் சாதிகள்.,ஒரே கடவுள்ன்னு

சொல்லிக்கொள்கின்ற கிருஸ்துவத்தில் கத்தோலிக்,ப்ரொடஸ்ட்ன்னு ஆயிரம் வகைகள் அவர்களுக்குள்ளேயே

சண்டைகள்.இஸ்லாமில் சுன்னி,குர்தீஷ் ந்னு பல பிரிவு அவர்களுக்குள்ளே போர்..//

எழுதுவதற்கும் ஒரு தனித் திறமை வேண்டுமல்லவா. தனிமனிதன் பெயர், புகழுக்காக எழுதுவதற்கும், சான்றோர்கள் பிறர் வாழ எழுதி இறக்கியதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 'இறக்கப்பட்டபவை'
என்று ஏன் சொன்னேன் என்றால், இரக்கத்தினால்தான், பெரியோர்கள் வருங்கால சந்ததியினர் பயன்படும் வகையில் எங்கோ இறக்கி வைத்துள்ளனர். அதனால் தான் அச்சுகள், கணிணிகள் இல்லாத காலத்தில் எழுதப்பட்டவை இன்றளவும் நமக்கு கிடைத்து வருகிறது.

சல் முகம்மது நபி பிரானவர்கள் வஹி என்னும் சப்த தொனியால் புனித குரான் இயற்றி இறக்கினார்கள்.

அதை தமிழில் தர்ஜமா என்று தமிழ் உரையில் இஸ்லாம் மார்க்கத்தின் வேத மந்திரமான பிஸ்மில்லா ஹிர்
ரஹ்மான் ஹிர் ரஹீம் என்ற புனித மந்திரத்தின் 24 அட்சரங்களும் ஹிந்து தர்ம்த்தின் மகாமந்திரமான
காயத்ரி மந்ரத்திற்கும் 24 அட்சரங்கள் என்பது வியப்பான செய்தியில்லையா. மனிதன் தன்னை அறியாதவரையில் மதங்களால் மாறுபடுவான் . தன்னை அறிந்தால் எல்லா மதமும் எம்மதமே என்பது புரிய வரும். வேதங்களை இயக்கிய அல்லது எழுதிய செம்மல்கள் ஒரே பொருளைத்தான் பேசியுள்ளார்கள்.

புரியாததால்தான் பேதங்கள். எனவே எல்லா மார்க்கமும் ஒன்றே என்பதை அகத்துள்தான் தேட முடியும்,

பிரிவினைகளை விடுங்கள், அகத்துள் கூடுங்கள், பிறரைப் பார்க்காதீர்கள். பேதங்களும் ஒற்றுமைக்காக ஏற்பட்ட ஒன்றே என்று தர்க்க ரீதியாக சிந்தியுங்கள். இறைவனை மறுத்து பின் இறையோடு ஒன்றுங்கள்.

ஏனெனில் நீங்களே கடவுள். கடவுள் தனியாக எங்கோ ஆகாயத்தில் இல்லை,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

உடம்பினைப் பெற்ற பயன் ஆவதெல்லாம்,
உடம்பினுள் உத்தமனைக்காண்

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

போன்ற உயிருக்கான பொன் மொழிகள் தமிழைத்தவிர எந்த இலக்கியத்திலும் இல்லை. தமிழ் ஒன்றுதான் இலக்காகிய முக்தி வீடை இயம்பும் மொழி. நமது இலக்கு பொருள் தேடுவது அல்ல. அருளைத் தேடுவதே, அதற்கான உபகாரமே பரோபகாரம். காக்கை குருவி போன்ற பறவையினங்களும், யானை போன்ற பெருவயிறு படைத்த மிருகங்களும் உணவுக்காக யாருடைய உதவியையும் நாடவில்லை. தொண்டு, பணி, உதவி போன்ற
செயல்களெல்லாம் அகங்காரத்திற்கு வழிவகுக்குமே யல்லாது நிஜ உதவியாகாது. ஞானத்திற்கு செய்யும்
உதவியே பேருதவி. அதுவே பயனுக்கு வருவது. கர்வத்தை அழிப்பது. மற்ற உதவியெல்லாம் போலியே.

அனைத்துயிரையும் நம் உயிராகப் பாவிக்கும் போது, தனிப்பட்ட முறையில் உதவி செய்வேண்டியது அவசியம் இல்லை. அதற்காக இரக்கமற்ற பாவியராய் கொடுமை செய்ய வேண்டுமென்பது பொருளல்ல.

எனவே பரிபாஷைகள் அனைத்தும், முறையாக குருவழி அறிந்து கொள்ள வேண்டி முன் வந்த இறையிலார்கள் தங்கள் இறை அனுபவங்களை முறைப்படுத்தி வைத்துள்ளனர். அதில் தமிழ் பெரும் பங்கு
வகிக்கிறது என்ற செய்தியோடு தற்சமயம் முடித்துக் கொள்கிறேன்,

தங்களுக்கு மேலும் ஆர்வம் இருக்குமாயின் கலந்துரையாட விருப்பமாயுள்ளேன்.

11 December, 2007

ரசிகனுக்கு ஜெயராமன் கொடுத்த பின்னூட்டத்தை இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன். நான் இன்னும் படிக்கவில்லை. படித்ததும் பின்னூட்டம் வரும்!

Monday, December 10, 2007

ரொம்பவே சின்ன மொக்கை!

மொக்கைப் பதிவுன்னா தான் வந்து எல்லாரும் ஆதரவு கொடுக்கிறதுனு வச்சிருக்கீங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இருந்தாலும் நன்னி, நன்னி, நன்னி! இதிலே நாம என்ன செய்ய முடியும்?

"எல்லா மொக்கையும், மொக்கை அல்ல, சான்றோர்க்கு
எண்ணங்கள் பதிவின் மொக்கையே மொக்கை"
னு புதுக் குறளே பிறந்துடுச்சு. தவிரவும்

"பதிவிட மேட்டர் கிடைக்காத போழ்தில் சிறிது
மொக்கைக்கும் ஈயப் படும்"

அப்படின்னும் ஒரு குறள் பிறந்துடுச்சு. எல்லாம் நம்ம வேதா(ள்) கூடச் சேர்ந்த தோஷம் தான். அவங்க தான் கவிதை எழுதணுமா? நாமும் எழுதலாமேன்னு யோசிச்சேன். அந்த விளைவு தான். நல்லா இருக்கா? நல்லா இருந்தே ஆகணும்! "தலைவி" எழுதி இருக்கும்போது நல்லா இல்லாமல் எப்படி இருக்க முடியும்? பார்க்கிற படங்களில் உள்ள லாஜிக்கை நினைச்சாலே தலை சுத்துது! அப்புறமா படிக்கிற புத்தகங்கள், ஆன்மீகம்னு எழுதறதுக்கு என்னமோ மேட்டர் இருக்கு. ஆனால் கொஞ்ச நாளா அதிகமா வர முடியலை. இன்னும் கொஞ்ச நாள் இப்படித் தான் இருக்கும். நேரம் கிடைக்கும்போது வருவேன். எப்போ வருவேன், எப்படி வருவேன்னு சொல்ல முடியாது, வந்தே தீருவேன், என் வழீஈஈஈஈஈஈஈஈஈஈஈ தனீஈஈஈஈஈஈஈஈஈஈ வழீஈஈஈஈஈஈஈஈஈஈ! நாளைக்கு ஒரு முக்கியமான பதிவு இருக்கு, எல்லாரும் வந்துடுங்க!

அப்புறமாக் காலையிலே "பொதிகை"த் தொலைக்காட்சியிலே "வயலும் வாழ்வும்" பார்க்கிறப்போ முடியற நேரத்திலே ஒருத்தர் பாடினார் பாருங்க, ஆஹா, அற்புதம்! அந்தக் கால (அதாவது அம்பி பிறந்தப்போ உள்ள காலம்) தியாகராஜ பாகவதர் ஸ்டைலில் ஒரு பாட்டு, "கிருஷ்ணா, முகுந்தா, முராரே!" பாட்டின் ராகத்திலேயே, கரும்பைப் பத்தி ஒரு பாட்டு எடுத்து விட்டார் பாருங்க, "ஒண்ணா, ரெண்டா, மூணா?"னு! அப்படி ஒரு குரல் வளம்! ரொம்பவே அருமையான குரல்! ஏன் இன்னும் யார் கண்ணிலும் படலைனு தெரியலை. வழக்கம்போல் பொதிகை அவரோட பேரைப் போடாததோடு, பாட்டுப் பாதியிலேயே அடுத்த நிகழ்ச்சிக்கும் (நேரம் 6-30 ஆயிடுச்சுன்னு) போயிடுச்சு! முழுசாக் கேட்க முடியலை. எப்போவோ இம்மாதிரியான குரல்களில் பாட்டுக் கேட்க முடியுது!

Friday, December 07, 2007

சாலை ஜெயராமனின் பகிர்வுகள்

கல்வியில் அரிச்சுவடிப் பாடம் எவ்வாறோ, அதைப் போலவே இறை பக்தி என்பது மிகவும் அவசியம். குழந்தைப் பருவத்தில், பேரறிவின் விளிம்பு கொண்ட இறைத் தத்துவத்தை, இரை உணர்வோடு, இறை உணர்வையும் எளிமையாகப் பெறுவதற்காக பெரியோர்கள் செய்து வைத்த வழியே வழிபாட்டு முறைகளாகும்.பள்ளிக்கல்வியில் தகுதி நிலையை வைத்து, அறிவினை சோதித்து, தேர்வு முறைகள் நடத்தி பள்ளிக் கல்வி என்ற நிலை மாறி, கல்லூரிப் பட்டம் முதலியவை படிப்படியாக வைத்ததுபோல், இறை நிலையிலும் மிக உயர்ந்த நிலையான முக்தி நிலை என்பதை நம் தேகம் நல்ல முறையில்
இருக்கும் போதே பல நிலைகளில் படிப்படியாக அறிந்து கொள்ள வேண்டும். வெறும் வழிபாடு மட்டும் இறைநிலையை அறிய உதவாது.

நம் இந்திய மத தர்மங்கள் இறைஉணர்வை அடைவதற்கான வழிமுறைகள் கோடானு கோடி வழிகளை வைத்திருக்கிறது. அதிலும் தமிழ் வழி வந்த செம்மல்கள்
தங்கள் பங்களிப்பை மிக அதிகமாகவே தந்திருக்கிறார்கள். குறிப்பாகத் திருக்குறள் தந்த திருவள்ளுவர் போன்ற சித்தர்கள், முக்தர்கள் பல வழிகளை
அறிவித்துச் சென்றிருக்கிறார்கள். இதைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் தயார் செய்து வைத்திருக்கிறேன்.

வெறும் வழிபாட்டு நெறிகள் சடங்கு சம்பிரதாயத்திற்கு மட்டுமே வித்தாக இருக்கும். இந்த உண்மையை அறியாததாலேயே உலகில் பல்வேறு மதங்கள் பேதப்பட்டு, அறிவின் நிலை மாறி இறைவுணர்வை கொச்சைப் படுத்தி முடிவில் நாட்டுக்கு நாடு, தெருவுக்குத் தெரு மதபேதத்தினால் மனிதனின் இயல்பு வாழ்க்கை நிலைமாறி முடிவில் மதத்தின் பெயரால், அறியாமையும், படுகொலைகளும், மனித வாழ்வைத் தடம் மாறச் செய்து விட்டன.
பொதுவாக அனைத்து மதங்களும் ஒரே செய்தியை பலவாறாகக் கூறிவருவதை தற்போது காண்போம்.குறிப்பாக இறைவனின் வாச ஸ்தலத்தை எவ்வாறு பல மதங்களும் ஒரே கருத்தாய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

1) 'ஈசன் இருப்பிடம் இருதயம்' என்பது அப்பர், சுந்தரர் போன்ற சைவ சமயக்குரவர்களுடைய வேத ஆகமங்களின் கருத்து

2) 'ஹிருதயகமலவாசா' என்பது வைணவப் ஆழ்வாராதிப் பெரியோர்கள் கருத்து

3) 'கல்பு' என்ற இருதயத்தில் அல்லா ஒளியாய் உள்ளான் என இஸ்லாம் வேதமான புனித குரான் கூறுகிறது.

4) 'புனித தூய இருதயம்' என கிருத்துவ வேத ஆகமம் புனித விவிலிய வேதம் (பைபிள்) அறிவிக்கிறது.

5) இந்துமத புனித பகவத் கீதையில் உன் பிடரியின் வழி இருதயத்தில் உள்ளேன் என்னையே நினை என்னையே வந்தடைவாய். உன் ஹிருதயத்தின் நடுநாயகமாய் இருந்தேன் என் விஸ்வ ரூப தரிசனத்தின் மகிமையை உன் இருதய சிம்மாசனத்தில் வைத்து வழிபடு என
போர்க்களத்தில் உபதேசித்த மொழியில் இருந்தும், இறைவன் மனிதனின் சுத்த இருதயத்தில் அன்றி வேறு எங்கும் வெளியாவதில்லை என மிகத் தெளிவாக அறியலாம்,

மேலும் மனித வாழ்க்கையில் இறப்புக்குப் பின், சைவம், திருக்கையிலாய பதவி என்னும் கயிலாய லோகம் என்றும், வைணவம், வைகுண்ட லோகம் என்றும், இஸ்லாம், மெகராஜ் என்ற அல்லாவின் ராஜ்யத்திற்கு உன்னை ஆயத்தப்படுத்து எனவும், கிருத்துவம், பரலோக ராஜ்யம் உங்களிடையே மிக சமீபமாக இருக்கிறது எனவும் இறைவன் வாழும் மற்றொரு உலகத்திற்குப் பலவாறான பெயர்களில் சொல்லப்பட்டாலும் கருத்து பொதுவான ஒரு
இறைவுலகை அறிவித்தே எல்லா வேதங்களும் இப்பூமிக்கு இறக்கப்பட்டுள்ளன. உபதேசம் என்பது வெறும் வாய்மொழிமட்டும் அல்ல. உப + தேசம் அதாவது 'உப' வேறொரு `தேசம்' உலகம். என்பது போன்ற கருத்தினையும் உள்ளடக்கி வைத்துள்ளது.

தமிழறிவு எவனொருவனுக்கு இல்லையோ அவனுக்கு முக்திநிலை இல்லை. ஏனெனில் இம்மொழியில் மட்டுமே இறைநிலை என்பதை மனிதன் அடைவதற்கு பல பரிபாஷைகளை பெரியோர்கள் விட்டு வைத்து இருக்கின்றனர். ஆன்மீக நெறிவழியில் இதுவரை கோயில், குளம், வழிபாடு போன்றவை தாண்டி - மிக எளிய வழியான கடவுள் தத்துவத்தை / கட + உள் என்பதாக இக் 'கட' மாகிய 'தேகத்திற்கு' 'உள்` கடவுள் உள்ளான் என்பது போன்ற நான் அறிந்து வைத்துள்ள ஆன்ம தத்துவங்களை தங்களைப் போன்றோருடன்
பகிர்ந்து கொள்ளுதலில் மிக்க மகிழ்ச்சி அடைவேன். பரோபகாரம் என்பது பர வாழ்வாகிய சொர்க்க வாழ்வுக்குச் செய்யும் உபகாரமே ஆகும்.

இகஉபகாரமாகிய தொண்டு, உதவி போன்றவைகளால் ஒருபோதும் மனித வாழ்வில் நிறைவைப் பெற்றுத்தர முடியாது.கல்வி, வாழ்வியல், பொருள் ஆதாரம், தமிழ் கூறும் நல்லுலகம், அறிவு, அறியாமை, ஞானம், வள்ளுவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஏற்படுத்தப் பட்ட ஆன்ம காரியம் எவ்வாறு உலகியல் ஆகிய அழிபொருள் தேடலில் மாற்றுக் கருத்துக்களாக உருவகப்படுத்தப் பட்டது போன்ற சிந்தனைகளைத் தாங்கள் விரும்பினால் மீண்டும் பகிர்ந்து கொள்வோம் என கூறி நிறைவு செய்கிறேன்.

பிளாக்கில் எழுதாவிட்டாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் மன நிறைவைத் தருகிறது. பெருமைக்கு எழுதுவது என்பது கூடாது. நல்ல செய்தியைத் தரவேண்டும். இணைய தளம் அதன் பயன்பாடு மிகச் சிறப்பாக வைத்துள்ளது. இது போன்று நன் முறையில் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். செய்திகள் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் மற்ற மதுரை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விழைகிறேன். கடிதம் எழுதப் புறப்பட்டால் பக்கம் பக்கமாக சிந்தனை விரிகிறது. பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு இல்லாததால் அனைத்தும் அடைபட்டுக்கிடக்கிறது.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல் எண்ண அடிப்படையிலேயே நமது தமிழ் வையத்துள் வாழ்வாங்கு வாழும் மொழியாக உள்ளது

இவை திரு சாலை ஜெயராமன் எனக்கு அனுப்பிய மெயிலில் வந்த செய்தி! அவர் விருப்பத்தின் பேரில் பகிர்ந்து கொள்கிறேன். அவரால் அவரோட வலைப்பக்கத்தில் வெளியிட முடியவில்லை.

Wednesday, December 05, 2007

சிஷ்ய கோடிகளுக்காக ஒரு "மொக்கை"

கைப்புள்ளயை என்ன என்னோட பதிவுக்கே வரதில்லைனு கேட்டால், ரொம்பவே "ஆன்மீகமா" இருக்குனு சொல்லறார். :P, இதிலே நாகை சிவா தான் ரொம்பவே கடமை உணர்ச்சியோட ஆன்மீகம் ஆனாலும் சரி, மொக்கை ஆனாலும் சரி, தவறாமல் வந்து ஒரு வரிப் பின்னூட்டம் போட்டுடறார். அம்பி, மொக்கைக்குத் தான் தவறாமல் பின்னூட்டம் போடுவார்னாலும், நடுநடுவில் இந்த மாதிரி ஆன்மீகப் பதிவுகளும் ஏதோ புரிஞ்ச மாதிரி எழுதிட்டு, தேவையில்லாமல் ஒரு கேள்வியும் கேட்டுட்டு, எல்லாமும் படிச்சேனாக்கும்னு சொல்லிட்டுப் போயிடுவார். அப்புறம் வரவே மாட்டார். கார்த்திக் முத்துராஜன் சுத்தம், இந்த வம்பே வேணாம்னு ஒதுங்கிட்டார். வேதா, தினமும் பதிவு போட்டால் என்னால் படிக்க முடியாதுனு சொல்லிட்டு, ஒண்ணொண்ணாப் படிச்சு, மெதுவாப் பின்னூட்டம் கொடுப்பா. திராச. சார் வரதே இல்லை. மதுரையம்பதிக்கு "உள்ளேன் அம்மா" போடவே நேரம் இல்லை. அநேகமாய் எல்லாப் பதிவிலேயும் இதையே போடறதால் ஜி3 பண்ணினால் போதுமே. மணிப்பயல் ஊருக்குப் போற குஷி! ரசிகன், என்னமோ ரொம்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கார். இரண்டு முறை அங்கே போயிட்டு, மண்டையில் ஒண்ணுமே ஏறலைனு வந்துட்டேன். :D கோபிநாத் அப்போஅப்போ வரார். அபி அப்பா ஆளே காணோம். போர்க்கொடிக்கு ரங்குவோட போர்க்கொடி தூக்கவே நேரம் இல்லையாம். :P வல்லி சிம்ஹனுக்கு வீட்டில் விருந்தாளி, இருந்தாலும் அவங்க ரெகுலர் விசிட்டர் இல்லையே! முடிஞ்சப்போ தான் வராங்க. மத்தவங்களும் முடிஞ்சப்போ தான் வராங்க. இலவசம் 100வது பதிவு கொண்டாடறதிலே ரொம்ப பிசி. சரி, யாருமே இல்லைனு நினைச்சப்போத் தான், வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. நேற்று வந்தது. பேசியது யார் தெரியுமா? "தம்பி" கணேசன் தான்.

நேத்து தம்பி கணேசனோட பேசிட்டு இருந்தேன். இந்தப் பதிவே அதுக்குத் தான். கணேசனுக்கு நன்றி சொல்லத் தான். கணேசனுக்குத் தனியா ப்ளாக் இல்லைங்கறதாலேயும், நான் என்னோட வலைப்பக்கத்திலே அனானியை அனுமதிக்கிறதில்லைங்கறதாலேயும், அவரால் என்னோட பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுக்க முடியலை. அதான் தொலைபேசிச் சொன்னார். என்னோட பதிவுகளைப் படிச்சேன்னு சொன்னார். தம்பி கணேசன் யாருன்னு யோசிக்கிறவங்களுக்கு, அவர் ஒண்ணும் புதுசு இல்லை! "அம்பி"யோட கோஸ்ட் ரைட்டர். அம்பி எழுதறது எல்லாம் இவர் எழுதிக் கொடுக்கிறது தான். அதையும் நேத்து என் கிட்டே பேச்சோட பேச்சாச் சொன்னார். இப்போ கணேசனுக்கு ஆப்பீச்ச்சிலே வேலை அதிகம், ஆணி ஜாஸ்தியாயிடுச்சாம், அதனாலே தான், முன்ன மாதிரி அம்பிக்கு எழுதிக் கொடுக்க முடியலையாம். சொன்னார். இன்னிக்குப் போய் எழுதிக் கொடுக்கணும்னு சொன்னார். சரியாப் போய்ப் பார்த்தால் இன்னிக்கு வந்திருக்கு கணேசன் எழுதின விஷயம். யார் இந்த கணேசன்கிறவங்களுக்கு, கணேசன், அம்பியோட சொந்தத் தம்பி. கண்ணபிரான் கே.ஆர்.எஸ்., மதுரையம்பதி இவங்களோட பதிவிலே "தம்பி"ங்கற பேரிலேயே பின்னூட்டம் போடுவார். அம்பிக்குக் கவிதை, மற்றும் ஆன்மீகத் தகவல்கள் கொடுத்து எழுதித் தரது இவர் தான், இவரே தான். வேறே யாருமில்லை! என்ன அம்பி இது எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி இருக்கு???????????


அப்புறம் என்னோட "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்" பதிவுக்காக இன்னும் பின்னூட்டங்கள் வந்துட்டு இருக்குச் சென்னைக் காதலர்கள் கிட்டே இருந்து. நான் என்னமோ சென்னையை ரொம்பவே மட்டமாச் சொல்றதாய் அவங்க எண்ணம்.இன்னிக்கு ஒரு பின்னூட்டத்திலே, 25 வருஷமா இருக்கேன், இந்த ஊரிலே, எந்தத் தெருவில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்கு, சொல்லுங்க, பார்ப்போம்னு இன்னிக்கு ஒருத்தர் கேள்வி. என்னோட புகாரே அது தானே? தெரு எங்கே இருக்கு? ஒரே மேடும், பள்ளமுமா, மேடு எதுனு தண்ணீர் இருக்கும்போது தெரியாது. பள்ளம் எதுனு புரியாது. வண்டியை எடுத்துட்டுப் போனால் பின்னால் உட்காரக் கூட முடியாது. தண்ணீர் வாரி அடிக்கும். தண்ணீர் இருக்கும் இடங்களில் கீழே இறங்கி வண்டியைத் தள்ளிட்டே போகணும். தெருவாய் இருந்தால் பரவாயில்லை. இல்லைனா மழை பெய்து குறைந்த பட்சம் ஒரு நாளிலாவது தண்ணீர் எல்லாம் வடிஞ்சாலாவது பரவாயில்லை. எதுவும் இல்லை. ஆகஸ்ட் மாத மழைத் தண்ணீரே இன்னும் வடியலை எங்க தெருவிலே, இதிலே கொசு உற்பத்தி வேறே. அங்கங்க பிரசாரம் பண்ணினால் போதுமா, தண்ணீரைத் தேங்க விடாதீங்கனு. தண்ணீரை முனிசிபாலிட்டி இறைக்க வேணாமா? அவங்க கடமை இல்லையா இது? ரோடு போட்டதாய் 25 வருஷமாக் கணக்குக் காட்டி இருக்காங்க எங்க முனிசிபாலிட்டியிலே! சொத்துவரி மட்டும் வாங்கறாங்க. பாதாளச் சாக்கடைக்கு முன் பணம் கட்டி இருக்கோம் பத்து வருஷம் ஆகப் போகுது. இன்னும் பாதாளச் சாக்கடைக்குக் குழாய் போடவே ஆரம்பிக்கலை. மற்ற இடங்களில் வேலை செய்து விட்டுக் கமிஷன் வாங்குவாங்க! இவங்க கமிஷன் மட்டும் வாங்கிட்டு வேலை செய்துட்டோம்னு கணக்குக் காட்டறாங்க. என்னத்தைச் சொல்றது? இன்னிக்கு வந்த பின்னூட்டத்தாலே இதை எழுதும்படியா ஆச்சு. ஏற்கெனவே அரசாங்கத்துக்கு நிறையவே எழுதிப் போட்டிருக்கோம்!

ஐயப்பனைக் காண வாருங்கள் -7


இப்போ சிவா கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தமும், சிலைப் பிரதிஷ்டையும்.

உலோபம் என்றால் பொதுவாக யாருக்கும் எதுவும் கொடுக்காத பேராசைக் காரன் என்ற பொருளில் தான் இங்கே வரும்.

அசூயை என்பதும் இங்கே பொறாமை என்ற அர்த்தத்தில் தான் எடுத்துக் கொள்ளணும்.

சத்வகுணம்: மிகவும் உயர்ந்த ஒரு குணம். இந்த சத்வ குணம் நிரம்ப உள்ளவர்களைத் தான் நாம் "ரொம்ப நல்லவங்க" என்ற அடை மொழியுடன் அழைக்கிறோம்.

ரஜோகுணம் என்பது தைரியத்தைக் குறிப்பிட்டாலும், கொஞ்சம் சுறுசுறுப்பையும் குறிக்குமோன்னு தோணுது.

தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டுத் தனமான கோபம், ஆணவம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தா இது. இறைவனிடம் நாம் செல்லும்போது அனைத்தையும் துறந்து "பரிபூரண சரணாகதி" அடைய வேண்டும். இறைவன் ஒருவனே பெரியவன் என்ற எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதாலேயே பதினெட்டுப் படிகள். பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தேவதைகளையும் குறிக்கும் எனவும் பார்த்தோம். இது தவிர, சபரி மலை தவிர ஐயப்பன் இன்னும் பதினெட்டு இடங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் சொல்கின்றனர். அவை எல்லாமே கேரளத்தில் தான் உள்ளது.

பொன்னம்பலமேடு
கெளதென் மலை
நாகமலை
சுந்தரமலை
சிற்றம்பல மலை
கல்கி மலை
மாதங்க மலை
மயிலாடும்மேடு
ஸ்ரீபாத மலை
தேவர்மலை
நீலக்கல் மலை
தாலப்பாறமலை
நீலிமலை
கரிமலை
புதுச்சேரிமலை
காளகட்டி மலை
இஞ்சிப்பாறை மலை
சபரிமலை
ஆகிய பதினெட்டு இடங்கள் ஆகும்.

சபரிமலையில் விஸ்வகர்மாவின் உதவியுடன் கோயில் கட்டிவிட்டு, விக்ரஹப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமெனத் தவித்த மன்னனுக்கு இரவு கனவில் ஐயன் தன்னுடைய யோக கோலத்தைக் காட்டி அருளினார். மெய்சிலிர்த்த மன்னன் கண்விழித்தபோது அவர் எதிரில் பரசுராமர் நின்றிருந்தார். மன்னனிடம், "மன்னா, உன் கனவில் கண்ட வடிவைப் போலவே விக்ரஹம் செய்து, இங்கே சபரிமலையில் பிரதிஷ்டை செய்து விடு. சாஸ்தா என் வேண்டுகோளின்படி இந்த மலைநாட்டில் பதினெட்டு இடங்களில் கோவில் கொள்ளுவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும் சமயம், நானும், அகத்தியரும் பங்கு கொள்வோம்!" எனத் தெரிவித்து மறைந்தார்.

அதன்படியே வடிவமைக்கப் பட்ட விக்ரஹத்தைக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும்போது பரசுராமர், அகத்தியர், மற்ற முனிவர்கள் அனைவரும் மன்னனுக்கு உதவினார்கள். தை மாதம் முதல் நாள் தேய்பிறை பஞ்சமிதிதியில் சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம் கூடிய நன்னாளில் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பூஜை முறைகள் ஒழுங்கு செய்யப் பட்டது. தெய்வமே தனக்கு மகனாய் வந்ததை நினைத்து, நினைத்து, அந்தத் தெய்வக் குழந்தையின் எளிமையையும். எவரும் அணுகும் வண்ணம் இருந்த தன்மையையும் நினைத்து, நினைத்து வியந்தார் மன்னர். மீண்டும் பந்தளம் திரும்பிய மன்னன், தான் பெற்ற மகன் ஆன "ராஜராஜனு"க்குப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்தார்.ராஜராஜனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. என்றாலும் பெறாத மகன் ஆன "மணிகண்டனின்" மகத்துவத்திலேயே மன்னன் மூழ்கி, அனைவரிடமும் சாஸ்தாவின் மகிமையை எடுத்துக் கூறினார். பட்டாபிஷேஹம் செய்து பார்க்க முடியாத மகனுக்கு, ஆண்டு தோறும் சங்கராந்தி அன்று தன்னால் அளிக்கப் பட்ட "திரு ஆபரணங்களை"ப் பூட்டி அழகு பார்க்க நினைத்து, வித விதமாய் ஆபரணங்கள் செய்து, சபரிமலை ஐயப்பனுக்குக் கொடுத்தார். பின்னர் ஐயன் நினைவிலேயே தவம் இருந்து ஐயன் திருவடியை அடைந்தார். என்றாலும் மன்னன் ஆரம்பித்து வைத்த வழக்கப் படியே இன்றும், சங்கராந்தி அன்று பந்தள அரண்மனையில் இருந்து "திரு ஆபரணங்கள்" வந்து ஐயனுக்குச் சார்த்தப் படுகிறது. தன் கோயிலில் தன் மூல விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த சங்கராந்தி அன்று ஒவ்வொரு வருஷமும் தான், எதிரே உள்ள காந்த மலையில் ஜோதி வடிவாய்த் தோன்றுவதாயும் மன்னனுக்கு ஐயன் வாக்களித்தார். அந்தப் படி ஒவ்வொரு சங்கராந்தி அன்றும் மாலையில் சபரிமலையில் தர்மசாஸ்தாவின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் சன்னதிக்கு எதிரே உள்ள காந்தமலையில் ஐயனின் ஜோதி உருவம் காட்சி அளித்து வருகிறது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட மகிஷியை ஐயன், தான் இந்தப் பிறவியில் ராஜகுமாரனாகப் பிறந்திருந்தாலும், ஒரு பிரம்மச்சாரியாகவே வாழப் போவதாயும், மற்றொரு பிறவியில் மகிஷியை மணந்து கொள்ளுவதாயும் கூறினார். அதுவும் எப்படி? "ஒவ்வொரு வருஷமும் ஐயனைக் காண வரும் பக்தர்களில் எந்த வருஷம் புதிய பக்தர்கள் இல்லையோ அந்த வருஷம் திருமணம் நடக்கும்" எனக் கூறி இருக்கிறார். புதிதாய் ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களைக் "கன்னி ஐயப்பன்" என அழைப்பது உண்டு. ஒவ்வொரு வருஷமும் புதிய, புதிய பக்தர்கள் சென்று வருவதால் மஹிஷியின் தவம் இன்னும் முற்றுப் பெறவில்லை. அவள் சன்னிதியில் இருந்து வெளியே வந்து, இந்த வருஷமும் கன்னி ஐயப்பன் மாரா? எனப் பார்த்துவிட்டுப் பின்னர் கோபத்துடன் கதவைச் சாத்திக் கொள்வதாய் ஐதீகம். அந்தப் படிக்கு அவள் சன்னதி சாத்தப் படுகிறது. முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். அவை ஆரியங்காவு, அச்சன் கோவில், பந்தளம், குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகியவை. அடுத்து மதுரை அழகர்கோவிலில் இருக்கும் பதினெட்டாம்படிக் கருப்பணசாமி பற்றிப் பார்ப்போம்!

Monday, December 03, 2007

"பொதிகை"த் தொலைக்காட்சியின் ஊனமுற்றோர் தினச் சிறப்பு நிகழ்ச்சி!

சற்று முன்னர் "பொதிகை"த் தொலைக்காட்சி, திரு எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்பவரின் இசைக்கச்சேரியை ஒளிபரப்புச் செய்தது. இரு கைகளும் இல்லாத அவர் பாடியது மற்ற சங்கீத வித்வான்களுக்குச் சற்றும் குறைவானது அல்ல. அதுவும் "திருச்செந்தூரில் சிவகுமாரன்" பாட்டு மனத்தை மிகவே உருக்கியது. பக்கவாத்தியமாக எம்.ஏ. கிருஷ்ணசாமி, வயலின், உமையாள்புரம் மாலி, மிருதங்கம், டி.எஸ்.கார்த்திக், கடம். இவர்களும் பிரபலம் ஆனவர்களே. மிகவும் அனுபவித்து, வாய்ப்பாடகருடன் ஒத்துழைத்து வாசித்தனர். பாராட்டப் படவேண்டிய ஒன்று. பொதிகையின் ஒளிபரப்பும் பாராட்டுக்குரியது என்றாலும் இன்று "ஊனமுற்றோர் தினம்" என்பதால் மட்டுமே இன்று மட்டும் அவரைக் கூப்பிட்டுக் கெளரவித்துப் பாடச் செய்து மற்ற தினங்களில் கூப்பிடாமல் இருப்பது முறையல்ல. பெரிய சங்கீத சபாக்களும் இவரைக் கூப்பிட்டுப் பாடச் சந்தர்ப்பம் கொடுத்துக் கெளரவிக்க வேண்டும். அவரின் தன்னம்பிக்கையும், பாடும் முறையும், அனுபவித்துப் பாடியதும் வியக்க வைத்த ஒன்று. மற்றத் தொலைக்காட்சிகள் சந்தர்ப்பம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. பொதிகை தொடர்ந்து அவரை ஆதரிக்கவேண்டும் என்பதோடு சென்னையில் உள்ள பிரபல சபாக்களும் இவரை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்கவில்லை என்றால் நம் மன ஊனத்தைக் காட்டியவர்கள் ஆவோம். அனைத்து ஊனமுற்றவர்களையும், அவர்களிடம் இருக்கும் தனித்திறமையை ஊக்குவிப்பதின் மூலம் அவர்களை இந்தச் சமூகத்தில் அவர்களும் சாதாரண, சராசரி மனிதர்களைப் போல் வாழ முடியும் என்று அவர்களை நிரூபிக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை!

ஊனமுற்றோர் அனைவருக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கு வாழ்த்துவதோடு இறைவனையும் பிரார்த்திப்போம்!

Sunday, December 02, 2007

அனுராதாவுக்கு ஒரு பிரார்த்தனை

ஐயப்பன் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடறவங்க யாருக்கும் பதில் எழுத முடியலை. தவறாய் நினைக்க வேண்டாம். இணையம் கிடைப்பது ஒரு 2 மணி நேரம். அறிவிக்கப் படாத மின் தடை போய், இப்போ அறிவிப்போட மின் தடை இருக்கு. தவிர, அனுராதாவின் பதிவைப் படித்து மிகவும் மனதுக்குக் கஷ்டமாய் இருக்கிறது. நேற்று இரவெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தேன். தூக்கமே வரவில்லை. திரும்பத் திரும்ப அவங்க பதிவுகளில் எழுதி இருப்பதே கண் முன்னால் வந்து கொண்டே இருந்தது. இறைவன் ஏன் அவங்களுக்கு இப்படித் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்? அப்படியும் அவங்களோட மனோதைரியம் என்னை வியக்க வைக்கிறது. விடாமல் மற்றவங்களுக்கு நல்லது செய்யணும் என்ற ஒரே நோக்கத்தோடு தன்னுடைய கஷ்டம் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். அவங்களுக்காகப் பிரார்த்திப்பதைத் தவிர வேறே ஒண்ணும் செய்ய முடியலை. இப்போ மதுரையில் மீனாட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றார்கள். நண்பர் சீனாவும், அவர் மனைவியும் போய்ப் பார்த்து விட்டு வந்தாங்களாம்.

அவங்க எழுதி இருக்கும் ஒரு விஷயம் தான் மனதை இன்னும் குடைகிறது. புற்று நோய் என்பதை வெளியில் சொன்னால் அக்கம்பக்கத்தவர் யாரும் பேசக் கூட மாட்டார்கள் என்று சொல்கிறார். இந்தக் காலத்தில் கூடவா இப்படி என ஆச்சரியமாய் இருக்கிறது. கூடவே என் அம்மாவின் நினைவும் வருது. என் அம்மாவும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப் பட்டு, அதை அவங்களே கண்டறிந்து உடனேயே மருத்துவரிடம் சென்று ஒரு மார்பகம் அகற்றப் பட்டு 5 வருஷங்கள் இருந்தார்கள். எல்லா வேலையும் செய்தார்கள், நாங்கள் யாரும், எங்கள் உறவு, சுற்றத்தார் மட்டுமில்லாமல் அக்கம்பக்கம் கூட என் அம்மாவிடம் தனிப்பட்ட அன்பே காட்டினார்கள். அவங்களை யாருமே வெறுக்கவில்லை. எல்லாருமே பேசினார்கள். எங்கள் வீட்டில் நடக்கும் பெரிய விசேஷங்களுக்குக் கூட ஆபரேஷனுக்குப் பின்னரும் அம்மா தனியாகச் சமையல் செய்து போடுவார்கள். எல்லாருமே சாப்பிட்டிருக்கின்றனர். கோவில், கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கும் தனியாகவே போய் வந்திருக்கிறார்கள். கடவுள் அருளால் அவங்களுக்கு இந்தக் கொடுமை நடக்கவில்லை. அனைவரும் வரவேற்று அன்பாகவே நடத்தினார்கள்.

இப்போது பெண் விடுதலை, விழிப்புணர்ச்சி, பெண்ணைப் பெண்ணே வெறுக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் வேதனையில் துடிக்கும் பெண்ணை ஒதுக்குவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இது என்ன தொற்று வியாதியா? அப்படி ஒண்ணும் இல்லை! அதுவும் சில ஆஸ்பத்திரிகளில் நர்ஸ்களும், உதவியாளருகளுமே புற்று நோயாளிகளைக் கண்டபடி பேசுவார்கள் என வேறு சொல்கின்றார். ஏற்கெனவே உடல் வேதனையில் இருக்கிறவங்களுக்கு, மனம் வேறே வேதனைப் படணுமா? யாருக்குமே இந்தக் கஷ்டம் வர வேண்டாம். மகத்தான பெண்மணியான அனுராதாவுக்குப் பிரார்த்திப்போம். அவங்களுக்கு மூளையிலும் புற்று நோய் பரவி இருப்பதாய் அவங்க கணவர் எழுதி இருக்கார். எத்தனை துன்பம்? இத்தனையிலும் அவங்க தன்னோட நிலையின் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்காங்க. அவங்க துன்பம் தீர வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.

Saturday, December 01, 2007

பதினெட்டாம்படியின் மகத்துவமும், தத்துவமும்



ஒண்ணாம் படியில் ஏறுகின்றேன்
உனையன்றி காட்சிகள் தொலைக்கின்றேன்! [காணல்]

இரண்டாம் படியில் ஏறுகின்றேன்
ஒலிகள் சத்தம் மறக்கின்றேன்! [கேட்டல்]

மூணாம் படியில் ஏறுகின்றேன்
மணங்கள் யாவும் விடுகின்றேன்! [நுகர்தல்]

நாலாம் படியில் ஏறுகின்றேன்
அறுசுவை அகற்றி செல்கின்றேன்! [உண்டல்]

ஐந்தாம் படியில் ஏறுகின்றேன்
தொடுவுணர்வற்று நகர்கின்றேன்! [தொடுதல்]

ஆறாம் படியில் ஏறுகின்றேன்
காமங்கள் யாவும் தொலைக்கின்றேன்! [காமம்]

ஏழாம் படியில் ஏறுகின்றேன்
கோபங்கள் அகலப் பார்க்கின்றேன்! கோபம்]

எட்டாம் படியில் ஏறுகின்றேன்
லோபம் விலகக் காண்கின்றேன்! [லோபம்]

ஒன்பதாம் படியில் ஏறுகின்றேன்
மோஹம் பறந்திடச் செய்கின்றேன்! [மோஹம்]

பத்தாம் படியில் ஏறுகின்றேன்
மதமென்னும் பேயை விரட்டுகின்றேன்! [மதம்]

பதினொண்ணாம் படியில் ஏறுகின்றேன்
வெறுப்புகள் விலகிடக் காண்கின்றேன்! [மாத்ஸர்யம்]]

பனிரண்டாம் படியில் ஏறுகின்றேன்
அசூயை அகற்றி வாழ்கின்றேன்! [அசூயை]

பதிமூணாம் படியில் ஏறுகின்றேன்
பெருமிதமின்றிச் செல்கின்றேன்! [தற்பெருமை]

பதினாலாம் படியில் ஏறுகின்றேன்
சத்வகுணத்தை விடுகின்றேன்! [சத்வம்]

பதினைந்தாம் படியில் ஏறுகின்றேன்
சிற்றின்ப குணத்தைத் விடுகின்றேன்! [ரஜம்]

பதினாறாம் படியில் ஏறுகின்றேன்
தாமஸ குணத்தைத் தொலைக்கின்றேன்! [தாமஸம்]

பதினேழாம் படியில் ஏறுகின்றேன்
கற்றதையெல்லாம் மறக்கின்றேன்! [வித்யை]

பதினெட்டாம் படியில் ஏறுகின்றேன்
அறியாமை இருளைப் போக்குகின்றேன்! [அவித்யை]

பகவானே உனைக் காண்கின்றேன்
பந்தபாசத்தை விடுகின்றேன்!

ஸ்வாமியே சரணமெனக் கதறுகின்றேன்
சாஸ்வத நிலையில் திளைக்கின்றேன்!

மகரஜோதியில் கரைகின்றேன்
மனத்தினில் களிப்பே உணர்கின்றேன்!

பதினெட்டாம்படிக்கதிபதியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

திரு விஎஸ்கே அவர்கள், பதினெட்டாம்படியின் தத்துவத்தைக் குறித்து எழுதிய பாடல். அவரோட பதிவிலேயும் போட்டிருக்கலாம். இங்கேயும் ஜி3 செய்துள்ளேன்.

டாக்டர் சார், உங்களோட பாடலை உங்களைக் கேட்காமல் ஜி3 செய்து போட்டிருப்பதற்கு மன்னிக்கவும். பாடல் என்னோட போன பதிவின் அர்த்தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது.

ஐயப்பனைக் காண வாருங்கள் - 6




மஹிஷியை வதம் செய்ததும் அவள் உடலைக் கற்களைப் போட்டு மறைத்தார்கள் தேவாதி
தேவர்கள். இல்லை எனில் அவள் உடல் சூரிய ஒளியில் வளர ஆரம்பித்து விடும் அல்லவா?
பிறகு, தான் புலிப்பால் கொண்டு செல்லவேண்டிய விஷயத்தை ஐயப்பன் தேவர்களுக்குத்
தெரிவிக்க, தேவேந்திரன் புலியாக உருமாறினான். மற்ற தேவர்களும் புலிக் குடும்பமாக மாற
தேவேந்திரனாகிய புலியின் மேல் அமர்ந்து, மற்றப் புலிகள் புடை சூழ ஐயப்பன் பந்தளம்
திரும்பினார். ஏராளமான புலிகள் புடை சூழ மணிகண்டன் வருவதைப் பார்த்த நகர மக்கள்
பயந்து ஓட, சூழ்ச்சி செய்த மந்திரி திகைப்பால் தலை சுற்றி, மயங்கி விழ, மன்னனோ மனம் மகிழ்ந்தான். ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து மனம் மகிழ்ந்தார். மன்னனின் பாசத்தைக் கண்ட மணிகண்டன், மந்திரிக்கும், ராணிக்கும் ஆறுதல் கூறுகிறார்.

"தாயே! நாடாளும் ஆசை எனக்கு இல்லை. நான் வந்த காரியம் முடிந்தது. நீங்கள் பெற்ற மகன் ஆன ராஜராஜனே நாட்டைச் சிறப்பாக ஆளுவான்! நான் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!" எனச் சொல்லிப் பின்னர் தன் தந்தையிடமும், பிரியாவிடை
கேட்கின்றார். "தந்தையே, நான் திரும்பச் செல்ல வேண்டும். சபரிமலையில் நான் ஒரு மரத்தின் மீது அம்பு தொடுத்திருப்பேன். அதை அடையாளமாக வைத்து, அங்கே எனக்கொரு ஆலயம் எடுங்கள். தங்கள் அன்பை மறக்க மாட்டேன்!" எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குத் திரும்புகிறார்.

காந்தமலைக்குச் சென்றார் என்பது ஐதீகம். மணிகண்டனின் பிரிவால் வருந்திய மன்னன் சபரிமலை சென்று அங்கு ஐயப்பனின் சரம் குத்தி இருந்த அடையாளத்தைக் கண்டார். அங்கே கோயில் கட்டத் தீர்மானித்தார். இரவு படுத்த போது ஐயப்பனின் தோழர் ஆன வாவர்
என்பவர் வந்து மன்னனை அழைத்துச் செல்கின்றார். இப்போது வாவர் பற்றிய சில குறிப்புக்கள்:

ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் பதினெட்டாம்படிக்கு அருகே வாவர் சாமியின் கோயிலும்
இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாவர் ஐயப்பனுக்கு நெருங்கிய நண்பர் எனவும்
சொல்கின்றனர். பிறப்பால் இவர் முஸ்லீம் எனவும் அரேபியாவில் இருந்து வந்த கடற்கொள்ளையர்களில் ஒருவர் எனவும், இன்னும் சிலர், முஸ்லீம் மதத்தைப் பரப்ப வந்ததாயும் சொல்கின்றனர். கொள்ளை அடித்துக் கொண்டிருந்த வாவரை ஐயப்பன் அடக்க வந்தபோது இருவருக்கும் சண்டை மூண்டதாயும் சொல்கின்றனர். வாவர் பெரிய வீரன் என்றும், ஐயப்பனோடு முதலில் சண்டை போட்டார் என்றும் பின்னர் ஐயனின் அருளை உணர்ந்து அவரின் சீடராகவும், தோழராகவும் மாறினார் என்று சொல்கின்றார்கள். அவரின் வீரத்தைக் குறிக்கவே சன்னிதியில் பழமையான வாள் வைக்கப் பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஐயப்பனின் நட்பைப் பெற்ற வாவருக்கு அங்கே ஐயப்பனைப் போல் தனிக் கோயிலும் உள்ளது.

இன்னும் சிலர், மதுரையில் இருந்து திருமலை நாயக்கன் காலத்தில் சென்றவர்களில் வாவரும் ஒருவர் எனவும் சொல்கின்றனர். இந்த வாவருக்கு முஸ்லீம் மதத்தைச்
சேர்ந்த குரு தான் பூஜை செய்கின்றார். வாவருக்கு எனத் தனியான சிலை ஒன்றும்
இல்லாவிட்டாலும் ஒரு கற்பலகை செதுக்கப் பட்டு வைத்திருப்பதாயும் ஒரு பழமையான வாள் இருப்பதாயும் சொல்கின்றனர். மூன்று பக்கமும் பச்சை நிறப்பட்டுத் துணியால் மூடப்பட்டு நாலாவது பக்கம் திறந்து காணப்படுகிறது எனச் சொல்கின்றனர். ஐயப்பனே பந்தள அரசனிடம் வாவருக்கு எருமேலியில் மசூதி கட்டச் சொன்னதாயும், சபரிமலையில் சன்னிதி கட்டச் சொன்னதாயும் ஐதீகம்.

இந்த வாவர்தான் மன்னனைக் கூட்டிச் சென்றதாய்ச் சொல்கின்றனர். மன்னன் சென்ற
இடத்தில் ஐயன் காந்த மலையில் கோயில் கொண்டிருக்கக் கண்டான். தந்தையிடம் மணிகண்டன், தனக்குச் சபரிமலையில் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யுமாறும் சொல்கின்றார். கோயில் கட்டும்போது இடையூறு நேர்ந்தால் அதைத் தவிர்க்க ஒரு கத்தியும் கொடுத்து அருளுகின்றார். பின்னர் திரும்பவும் சபரிமலை வந்த மன்னர் காலையில் எழுந்த
தான் கண்டது கனவா, நனவா என்ற பிரமையில் ஆழ்ந்து கனவில் கண்டது போல் கோயில் கட்ட எத்தனிக்கின்றார். அப்போது மன்னனைச் சோதிக்கவும் விஸ்வகர்மாவின் துணையை
அவருக்குக் கொடுக்கவும் விரும்பிய இந்திரன் மன்னனுக்குத் தொல்லைகள் கொடுக்க, மன்னன் ஐயப்பன் கொடுத்த வாளை வீசுகின்றார். அந்த வாள் இந்திரனைத் துரத்த இந்திரன்
எல்லா இடமும் ஓடித் தப்பிக்க முடியாமல் கடைசியில் மன்னனிடமே வந்து காப்பாற்றும்படி
கேட்க, மன்னனும் வாளைத் திரும்பப் பெற்றார். பின்னர் இந்திரனின் ஆலோசனைப் படியே
விஸ்வகர்மாவின் துணையுடன் சபரிமலையில் கோயில் கட்டுகின்றார் மன்னர். பதினெட்டுப் படிகளும் அமைத்தாயிற்று. அந்தப் பதினெட்டுப் படிகள் அமைத்த காரணம் என்ன தெரியுமா?

பஞ்ச பூதங்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து ஆகிய 15-ன் துணையோடு தான் சாதாரண மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாலங்களையும் கடக்க வேண்டும். அதைக் குறிக்கவே பதினெட்டுப் படி அமைக்கப் பட்டதாய் ஒரு தத்துவம். இது தவிர, ஒவ்வொரு தேவதையும் தன் அம்சத்தைப் பதினெட்டுப் படிகளிலும் கொடுத்ததாயும் ஒரு தத்துவம்.

அது வருமாறு:
முதல் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - முருகன்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகா விஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினொன்றாம் படி - சுக்கிரன்
பனிரண்டாம் படி - ரங்க நாதன்
பதின் மூன்றாம் படி- சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமன்
பதினைந்தாம் படி -ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி -விநாயகர்

இனி விக்ரஹம் அமைக்க வேண்டுமே? சரியான காலம் வரும்போது வழிகாட்டல் கிடைக்கும் என்பது ஐயப்பன் மன்னனுக்குச் சொன்னது யார் வந்து விக்ரஹம் அமைக்க வழிகாட்டப் போகின்றனர்? மன்னன் காத்திருந்தான்.

Thursday, November 29, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 5

தத்தன், லீலாவதி என இரு தெய்வீகத் தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே "தெய்வீகத் தம்பதி" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் தங்கள் பக்தியின் உயர்வைக்குறித்துச் சண்டை ஏற்பட இருவருமே ஒருவரை மற்றொருவர் சபித்தனர். அவர்களின் தவத்தின் பலத்தால் அந்தச் சாபம் பலித்தது. அப்படி என்ன சபித்தனர்? ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை "மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியுமே அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா? அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா? அதுவும் பிரம்மச்சாரியாக? நடக்காத காரியமே என நிம்மதியுடனேயே தன் கொடுங்கோலாட்சியை நடத்தி வந்தாள் மஹிஷி!

இது இவ்வாறிருக்க மஹிஷியை சம்ஹாரம் செய்யும் தருணம் வந்துவிட்டது எனத் தேவாதி தேவர்கள், மும்மூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, அவர்களும் அவ்வாறே ஆகும் எனச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இங்கே பந்தளத்தில் மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய கோபெருந்தேவி, தனக்குத் தீராத தலைவலை வந்துவிட்டதாய் நடித்தாள். அரண்மனை வைத்தியரைக் கையில் போட்டுக் கொண்ட மந்திரி, ராணியின் தலைவலி தீரவேண்டுமென்றால், புலிப்பால் கொண்டுவரவேண்டும் எனச் சொல்லுமாறு வைத்தியனை நிர்ப்பந்திக்க, வைத்தியரும் அவ்வாறே கூறுகின்றார். புலிப்பாலை யார் கொண்டுவருவது? மணிகண்டன் தான் சிறந்த ஆள், அவன் தான் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிவிடுங்கள் எனவும் சொல்லிக் கொடுக்கப் பட வைத்தியரும் மணிகண்டனே போய்த் தான் புலிப்பால் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூது இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். அவள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மணிகண்டனோ நிலைமையைப் புரிந்து கொண்டு, ராணியின் சூழ்ச்சியையும் மந்திரியின் துர்ப்போதனையையும், தன் அறிவால் அறிந்து கொண்டு, விதியை மதியால் வெல்லலாம் என முடிவு செய்து கொண்டு காட்டுக்குச் சென்று புலிப்பால் கொண்டு வரச் சம்மதிக்கிறான். மன்னனையும் ஒத்துக் கொள்ள வைக்கிறான். அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தவிப்பானே அருமைக் குமாரன், என ஒரு நீளமான பையில் அரிசி, தேங்காய், அவல் போன்ற பொருட்களைக் கட்டிக் கொடுத்து, வில்லும், அம்பும் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறான்.

அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் "பொன்னம்பலமேடு" எனவும், "காந்தமலை" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் "பம்பா" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள். மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது. மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண்வடிவெடுத்து ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.

ஐயன் சொல்கின்றார்: என்னுடைய அவதார நோக்கமே உன்னுடைய சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் "மஞ்சமாதா" என்னும் பெயரில் என்னருகிலேயே கோயில் கொண்டிருப்பாய். எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், புதியதாய் கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று சொல்கின்றார். மஞ்சமாதா, மாளிகப்புரத்து அம்மன், என்ற பெயரில் மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்? எங்கே? அதை யார் கட்டினார்கள் என்ற விவரங்கள் நாளை காணலாம்!!!!!

Wednesday, November 28, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 4



பந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், "பத்ம தளம்" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு வந்த மன்னன், "ராஜசேகர பாண்டியன்", மிகச் சிறந்த சிவபக்தன். அவன் மனைவியான கோப்பெருந்தேவி, இருவருக்கும் குழந்தை இல்லை என்பதைத் தவிர, வேறு குறை இல்லை. குடிமக்களும், மன்னன் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வந்தான் மன்னன். ஒரு நாள் மன்னன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்போதே மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. வேட்டைக்குச் சென்ற மன்னனுக்கு அங்கே கிடைத்தது ஒரு பெரிய புதையலே!!! ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன? ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போலச் சிரித்தது மன்னனைப் பார்த்து. கையில் எடுத்தான் அந்தப் பூக்குவியலை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான், மன்னன் யாரையும் காணவில்லை. அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.

"மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்." எனச் சொல்லுகிறார். (வேதியராக வந்தது சிவபெருமான், எனச் சிலர் கூற்று. அகத்தியர் எனச் சிலர் கூற்று.) குழந்தையும் பந்தள மன்னனின் சகோதரி குழந்தை எனவும் சிலர் கூற்று. அந்தக் கதை செவிவழி கூறுவது:
பந்தள மன்னனுக்கு ஒரு சகோதரி உண்டு என்றும், மகாவிஷ்ணுவின் அம்சம் ஆன அந்தச் சகோதரி மணந்தது, சிவ அம்சம் ஆன தளபதி ஒருவரை எனவும், மன்னனின் மந்திரியானவனும், அரசியும், இந்தத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு நாடு உரியது என்பதால், (கேரள நாட்டில் மருமக்கள் தாயம் என்னும் முறை இருந்ததாலோ??) இருவரையும் கொல்ல முடிவு செய்தான் என்றும், அவனிடமிருந்து தப்பின மன்னனின் சகோதரியும், அவள் கணவனும் காட்டில் மறைந்து வாழ்ந்தனர் என்றும், அங்கே குழந்தை பிறந்த வேளையில் மன்னன் வரவே, குழந்தையை அவனிடம் ஒப்புவித்து விட்டு இருவரும் மறைந்தனர் எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

எது எப்படி இருந்தாலும் சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் ஒருங்கே சேர்ந்து பிறந்த அந்தக் குழந்தையின் வரவால் மன்னன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். நீலகண்டனுக்கும், கெளஸ்துப கண்டனுக்கும் பிறந்த அந்தக் குழந்தை, கழுத்தில் மணியுடன் இருந்ததால் "மணிகண்டன்" எனப் பெயரும் சூட்டுகிறான் மன்னன். வளரும்பருவத்திலேயே குழந்தையின் சிறப்புக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குழந்தை குருகுல வாசத்துக்கு அனுப்பப் படுகிறான். அங்கே குருவின் பார்வையற்ற, பேச்சற்ற குழந்தைக்குப் பார்வையும், பேச்சும் மணிகண்டன் அருளால் கிடைக்கிறது. குருவுக்கு வந்திருப்பது சாதாரணப் பிள்ளை இல்லை எனப் புரிகின்றது.

இடைப்பட்ட காலத்தில் அரசியும் கருவுற்று ஒரு ஆண் மகவைப் பெற்றெடுக்கிறாள். தனக்கெனச் சொந்தமாய்ப் பிள்ளை வந்ததும் அரசிக்கு இந்தப் பிள்ளைக்கே அரசாட்சி உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகிறது. குழந்தையும் "ராஜராஜன்" என்ற பெயரில் சீருடனும், சிறப்புடனும் வளர்ந்து வருகின்றான். மணிகண்டன் தன்னுடைய சீரான நடவடிக்கைகளாலும், தெய்வாம்சம் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்ததாலும், மக்கள் மனதைக் கவருகின்றான். மணிகண்டனின் செல்வாக்கைப் பார்த்த அரசிக்குப் பொறாமை மேலிடுகின்றது. மந்திரியின் துணையையும் நாடுகின்றாள். ஏற்கெனவே மந்திரிக்கு மணிகண்டன் அரசன் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மங்கிக் காட்சி அளிக்குமே என்ற கவலை இருந்து வந்தது. எவ்வகையிலேனும், மணிகண்டனை அழிக்க உறுதி பூண்டான். அப்போது அரசியும் அவ்வாறான எண்ணத்துடன் இருக்கவே , இருவரும் சேர்ந்து மணிகண்டன் திரும்ப வர முடியாதபடி ஏதேனும் செய்ய எண்ணுகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா? மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா??? நாளை காணலாம்.

Tuesday, November 27, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் -3

சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் தங்கள் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்கவேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள். மற்றொருத்தியான பூரணையானவள், வஞ்சி மாநகரை ஆண்டு வந்த பிஞ்சகன் என்னும் மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார். இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந்தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம்!!!! திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம், அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். "பூதநாதனே சரணம்! செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்! மோகினி மைந்தனே சரணம்!" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. "பயம் வேண்டாம்" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார்.

மனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, "ஐயனே! அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்கவேண்டும்." என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார். பூர்ணையை ஐயன் ஏற்றுத் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் பலிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது. புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க பலிஞன் ஆத்திரம் அதிகம் ஆகிறது. சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார்.

"ஐயனே! என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா? இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ அடுத்த பிறவியில் பூவுலகில் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக வாழ்வாய்! நீ 12 வயது பாலகனாய், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துவிட்டு, 12-ம் வயதிலேயே மறைவாய்! உனக்கென உரிமையான ராஜ்யமும் உனக்குக் கிடைக்காது!" எனச் சாபம் கொடுக்கிறான். ஐயன் இதழ்களில் புன்முறுவல். "பலிஞனே! ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய்!! உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்!" எனக் கூறுகிறார். இப்போது பந்தளத்துக்குச் செல்லும் முன்னர், புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று.

மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவது உண்டு,. அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப் படிக் கோயிலில் தங்குகின்றனர், தந்தையும், மகளும். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள். மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை மகள். நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.

ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான், அந்த வேடன். அவனுக்குப் பரிசாகத் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார் வணிகர். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, " நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய்? வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார். "உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.

மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்புங்கால், ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் கனவு. ஐயப்பன் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. காலையில் கோயில் திறந்து ஐயன் சந்நிதியைக் கண்டால் காட்டில், வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் உள்ளது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.

டிஸ்கி: இது மதுரைப் பக்கத்தில் செளராஷ்டிர குலத்தவரிடம் வழங்கும் கதை. இதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் ஒவ்வொரு வருஷமும் செளராஷ்டிர குலத்தைச் சேர்ந்த, ஆரியங்காவு தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகாஜனங்கள், மார்கழி மாதம் 9-ம் தேதிக்கு மேல், 15-ம் தேதிக்குள்,இந்த வைபவத்தை ஐயனின் திருமண உற்சவமாய்க் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வருஷமும் பெண்வீட்டாராக செளராஷ்டிர மகா ஜனங்கள் ஆரியங்காவு சென்று வரிசைகள் செய்து, "பாண்டியன் முடிப்பு" என்ற தாம்பூலத் தட்டுக் கொடுத்துத் திருமணம் நிச்சயித்து, சாஸ்திர, சம்பிரதாயங்களின் படி ஐயனுக்கும், அம்மைக்கும் திருமணம் செய்விக்கின்றனர். இதற்கான திருமணச் சடங்குகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் நடத்தி வைப்பதாகவும் சொல்லுகின்றனர். இப்போதும் மதுரையில் இது நடக்கிறதா இல்லையா எனக் "கூடல் குமரனோ" அல்லது "சிவமுருகனோ" தான் சொல்ல வேண்டும்.

Monday, November 26, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 2



மஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது. அவள் அப்படி என்ன கேட்டாள்? "ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்." இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும்? அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும்? வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும்?" என்பதே!ஆட்டுக்குக் கூட வாலை அளந்தே வைக்கும் அந்த சர்வேசன் மஹிஷிக்கு மட்டும் முடிவை வைக்காமலா இருப்பான்? என்றாலும் அவள் எத்தனை காலம் இருக்க வேண்டுமோ அத்தனை காலம் இருந்தே ஆகவேண்டும் அல்லவா?

"உன் எண்ணப்படியே ஆகட்டும்!" என்ற வரம் மஹிஷிக்குக் கிடைத்தது. அவள் ஆற்றல் அதிகரித்தது. அனைவருக்கும் தொல்லை கொடுப்பதே அவள் சந்தோஷம் ஆயிற்று. இங்கே ஹரியும், ஹரனும் இணைய வேண்டுமே? பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் "பூத நாதன்" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா? "கந்த புராணம், நம் சொந்த புராணம்" எனக் கூறி வந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய தகவல் இது:

"சூரபத்மனால் விரட்டப் பட்ட இந்திரன், சிவனைப் பூஜிக்கக் கைலாயம் செல்ல விரும்பியபோது இந்திராணியைத் தனியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது இந்திராணி தனியே இருக்கப் பயந்தாள். அரக்கர்கள் வந்து என்னைத் தூக்கிச் சென்றால்? எனப் பயப்பட்டாள். இந்திரன் சாஸ்தாவின் துணையை நாட, சாஸ்தா அங்கே பிரத்யட்சம் ஆகி இந்திராணியைத் தான் காவல் காப்பதாய்ச் சொன்னார். அதன்படி அவரின் கணநாதன் ஆன "மஹாகாளன்" காவல் இருக்கிறான் இந்திராணிக்கு. சூரனின் தங்கையான அஜமுகி இந்திராணியை வந்து துன்புறுத்த இந்திராணி, சாஸ்தாவைக் கூப்பிட்டு ஓலம் இடுகிறாள்.
"பூரணைக்கு இறைவா ஓலம்!
புஷ்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறை மேல் கொண்டு
வரும் பிரான் ஓலம்!"
எனக் கூவி அழைக்க, சாஸ்தாவின் கட்டளையின் பேரில் மஹாகாளன் அஜமுகியின் கைகளைத் துண்டித்துத் தண்டிக்கிறார். இந்த மஹாகாள மூர்த்திக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் இருப்பதாய்க் கூறுகின்றார்கள். (நான் இன்னும் பார்த்தது இல்லை! ) சாஸ்தா இந்திராணியைக் காத்த இடமானது "கைவிடாஞ்சேரி" என்ற பெயரால் அழைக்கப் பட்டு, தற்சமயம் "கைவிளாஞ்சேரி'" என்று மருவியதாகவும், சீர்காழியில் தென்பாதித் தெருவில் சாஸ்தாவிற்கு என ஒரு கோயில் இருப்பதாகவும், கூறுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த இடம் சீர்காழி என்று கந்தபுராணக் குறிப்பு சொல்லுகிறது.

சாஸ்தா பிறந்துவிட்டார். பூதநாதனாகிக் காவல் தெய்வம் ஆகி, தர்மத்தை நிலைநாட்டவும் தொடங்கி விட்டார். அப்போது நேபாள நாட்டு மன்னனான பலிஞன் என்பவன், தனக்கு ஏற்பட்ட முதுமையைப் போக்கிக் கொள்ள வழிதேடிக் கொண்டிருந்தான். காளி உபாசகன் ஆன மன்னன் பலிஞன், மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் ஆவான். ஆகவே மந்திர, தந்திரங்களைச் செய்யும் சிலர் மன்னனிடம் வந்து , கன்னிகை ஒருத்தியைக் காளிக்கு நரபலி ஆகக் கொடுத்தால் நீ நினைத்தது நடக்கும் என அவன் ஆவலைத் தூண்டினார்கள். கன்னிகை ஒருத்தியைத் தேடிக் கண்டு பிடித்தான் மன்னன் பலிஞன். அவளோ சிவனைச் சிந்தையில் நிறுத்தி, எந்நேரமும் அவனையே ஒருமுகமாய்த் தியானிப்பவள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிவமந்திரத்தை மறக்காமல் கட்டுண்டு கிடந்து, நரபலியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும், "நமசிவாய" மந்திரத்தைச் சிந்தையில் நிறுத்தி, தியானித்தவண்ணம் இருந்தாள்.

தன் அடியாளைக் கஷ்டப் படுத்தும் எண்ணம் அந்த ஆதிசிவனுக்கு ஏது? மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம்? எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா? ஒன்றும் பலிக்கவில்லை, மன்னன் மிரண்டான், என்ன செய்வது எனப் புரியவில்லை!!!!!!!

சாஸ்தா தன் உருவைக் காட்டி அருளினார். "மன்னா! மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா? அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா?" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை? ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள்? சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா? அப்படி என்றால் ஐயப்பன் யார்? எல்லாம் வரும் நாட்களில்!!!!!!!!!

புலி ஐயப்பன் படங்களைப் புலியின் மேல் இருக்கும் படமும் அனுப்பி வச்சிருக்கு. வரும் நாட்களில் போடுகிறேன். புலி வாகன ஐயப்பன் படங்களைப் புலியே அனுப்பி வச்சிருக்கிறது, என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை???????

Saturday, November 24, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 1



ஹரியும், ஹரனும் இணைந்து பெற்ற திருக்குழந்தையான தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன் ஆகும். எப்படினு பார்ப்போமா? ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம். தர்மசாஸ்தா தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது. அவை:
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.

கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.

வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில்
சிறந்து விளங்கலாம்.

ஞான சாஸ்தா; தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.

பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.

மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.

வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.

தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். யார் இந்த மஹிஷி? எதுக்காக ஐயப்பன் அவதாரம் எடுத்து அவளை சம்ஹாரம் செய்ய வேண்டும்? கொஞ்சம் பின்னோக்கிப்
போவோமா???
******************************************************************************
பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்தாயிற்று. தேவர்களுக்குள் பங்கீடும் முடிந்தது. மோகினியாய் அவதாரம் எடுத்து, விஷ்ணுவும் தன்னோட வேலையைத் திறம்படச்
செய்தாகி விட்டது. என்றாலும் அசுரத் தனமான எண்ணங்கள் அசுரர்களிடம் இருந்து
போகவில்லை. ரம்பன், கரம்பர் என்னும் இரு அரக்கர்களில் ரம்பனின் பிள்ளையான
மஹிஷாசுரனைத் தேவி துர்க்கையாக அவதரித்து சம்ஹரித்தாள். பார்த்தான் கரம்பன்.
அவன் பெண்ணான மஹிஷியைத் தூண்டி விட்டு பிரம்மாவை நோக்கித் தவம் இருக்கச்
செய்தான். மஹிஷியும் தவம் இருந்தாள். இந்த இடத்தில் ஒரு கேள்வி அனைவருக்கும்
சாதாரணமாய் எழக் கூடியது!!

தவம் செய்யும் எல்லாருக்கும் இறைவன் காட்சி தந்து வேண்டிய வரங்களைத் தந்து விட்டு பின்னர் ஏன் மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இல்லையா?எல்லாருமே பரிட்சைக்குப் படிக்கிறோம். அனைவருமே "பிட்" அடிக்காமலும் பரிட்சை எழுதுகிறோம். நாம் எழுதியதுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் கிடைத்துத் தானே ஆகவேண்டும்? குறைத்துக் கொடுத்தால் நாம் சும்மா இருப்போமா? படித்ததை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பம், என்றாலும் பரிட்சை பொதுப்பரிட்சை. எல்லாரையும் போல்தானே மதிப்பெண்கள் எதிர்பார்ப்போம் இல்லையா? அதே தான் இங்கேயும் அரக்கக் குடும்பம் ஆனாலும் தவம் பொய்யல்லவே, பக்தி
பொய்யல்லவே, அதை உபயோகிக்கும் விதம் தானே தவறு! அதற்குத் தான் சம்ஹாரம்
என்ற தண்டனை!! மஹிஷி என்ன ஆனாள் நாளை பார்க்கலாமா????

சபரி மலை ஐயப்பன் படம் எடுக்க முடியவில்லை, ஆனால் ஐயனார் படம் போட்டுள்ளேன். ஐயனாரும், ஐயப்பனும் ஒண்ணே, அதுவும் பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமி என்று சொல்பவரும், ஐயப்பனும் ஒன்றே. மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமியின் தீர்ப்பை இன்றளவும் மீறி நடப்பவர்கள் இல்லை. கறுப்பு காவல் தெய்வம் என்றும், தவறுகளைத் தண்டிக்கும் என்னும் எண்ணமும் இன்றளவும் தென்மாவட்ட மக்களிடம் அதிகமாய் உண்டு. இந்தப் பதினெட்டாம்படிக்கு உள்ள முக்கியத்துவமும், கறுப்பு தான் காவல் தெய்வமான "சாஸ்தா" "சாத்தன்" என்பதும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாய்க் கிடைக்கும்.

Friday, November 23, 2007

திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!



அனைத்து மாதங்களிலும் கார்த்திகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. அனைவரும் கொண்டாடும் தீபத் திருவிழா மட்டுமின்றி, இந்த மாதமே சிவனுக்கு உரித்தானதாய்க் கார்த்திகை சோமவாரம் விரதமும் அனுசரிக்கப் படும். "சோமன்" என்றால் சந்திரனைக் குறிக்கும். சந்திரனுக்கு விநாயகரை எள்ளி நகையாடிய காரணத்தால் தேய்ந்து போவாய் எனச் சாபம் கிடைத்தது. போதாத குறைக்கு மாமனான தட்சனின் 27 பெண்களில் ஒருத்தியிடம் மட்டுமே பிரியம் கொண்டிருந்ததால் மாமனும் சபித்தான். சந்திரனை க்ஷயம் பீடித்தது. இது நீங்குவதற்காகச் சந்திரனை சிவனைத் தஞ்சம் அடைந்தான். சிவபூஜை செய்து வந்தான். அவனின் பக்தியால் மகிழ்ந்த மகேசர் அவனின் நோயைப் போக்கியதோடு அல்லாமல் அவனை நவகிரஹங்களில் ஒருவனாயும் ஆக்கி, அவன் பெயராலேயே ஒரு கிழமை வழங்குமாறும் அருளினார். அவன் பூஜித்தது ஒரு கார்த்திகை மாதத்தில், அந்த நாள் தான் "கார்த்திகை சோமவார விரதம்" எனச் சொல்லப்படத் தொடங்கியது. இவை யாவும் நிகழ்ந்தது கார்த்திகை மாதத்தில். ஆகவே கார்த்திகை சோமவார விரதம் பிரசித்தியும் அடைந்தது. பொதுவாய் அப்போது மழைக்காலம், உடல்நலக் கேடு உண்டாகும். சீக்கிரமே இருட்டி விடும்,. எங்கும் ஈரப் பதமாய் இருக்கும்.

இந்த உடல்நலக் கேட்டில் இருந்து தப்பிக்க விரதமும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குப் போகவும், ஈரப் பதத்தில் இருந்து உஷ்ணம் பெறவும், இவ்வாறான பல காரணங்களையும் உத்தேசித்துக் கார்த்திகை முதல் தேதியன்றிலிருந்தே பெரும்பாலான வீடுகளில் விளக்குகள் நிறைய வாசலில் வைக்கப் படும். வளர்பிறைப் பெளர்ணமி அன்றோ ஈசன் தன் அடிமுடி காட்ட மலையாக உருவெடுத்துத் தானே ஒரு அக்கினிமலையாகத் தோன்றிய நாள். அன்னை பராசக்தியானவள், தவம் புரிந்து ஈசனின் உடலில் ஒரு அங்கமாகிய திருநாள் ஆகும். இதை நினைவூட்டவும் இன்றளவும் திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாடப் படுகிறது, இது மிகப் பழங்காலத்தில் இருந்து கொண்டாடப் பட்டு வந்த ஒரு பெருவிழா என்பதைத் திருஞான சம்மந்தர் இவ்விதம் கூறுகிறார்:

"தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்"

என்று பூம்பாவையை, அவளின் எலும்புகளைப் பெண்ணாக மாற்றும்போது பாடிய பதிகத்தில் கூறுகிறார்.

அடிமுடி காணச் சென்ற பிரம்மாவும், விஷ்ணுவும் காணமுடியாமல் திரும்ப பிரம்மாவோ தாழம்பூவைச் சாட்சிக்கு வைத்துக் கொண்டு பொய் சொல்லுகிறார் முடியைக் கண்டதாய். அன்றிலிருந்து சிவபூஜைக்குத் தாழம்பூ ஏற்பதில்லை என்பதோடு, பிரம்மாவும், விஷ்ணுவும் வேண்டிக் கொண்டதற்கிணங்க மகேசன் தன் ஜோதி வடிவை அப்படியே மலை வடிவாக்குகிறார். மலையே அக்கினி வடிவம். அதில் ஒவ்வொரு திருக்கார்த்திகை அன்றும் உச்சியில் ஜோதி காட்டப் படுகிறது. இந்த ஜோதியைத் தரிசிப்பவர்களுக்கு 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என அருணாசல புராணம் சொல்லுகிறது.

"கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோரு தலைமுறைக்கு
முக்தி வரம் கொடுப்போம்!"

என்பது ஐதீகம். மனித மனத்தைத் துயரங்களில் இருந்து ஒரு சிறிதேனும் விடுவிக்கும் இத்தகைய பண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

Monday, November 19, 2007

இந்த அநியாயம் எங்கேயானும் உண்டா???

வேதாவின் பதிவுகளுக்கான விமரிசனத்தைத் தனியாக எழுதிக் கொண்டால், பின்னால் எடிட், செய்யறதுக்கும், (இது வரை என் பதிவுலக வரலாற்றிலேயே நான் செய்யாதது), பிழை திருத்தவும் வசதியாக இருக்கும் என்று, நோட்பாட் ஓபன் பண்ணி எழுத ஆரம்பிச்சேன். கொழுப்பு, எனக்குத் தான் வேறே யாருக்கு?வொர்ட்டில் எழுதி இருக்கணும், அது என்னமோ வேண்டாத வேலையாத் தோணிச்சு, நோட்பாடில் எழுதினேன். மறுபடி ஒரு முறை பதிவுகள் எல்லாத்தையும் சரிபார்த்துவிட்டு, எது எது முக்கியமாச் சொல்லணும்னு நினைச்சேனோ, அது எல்லாம் வந்திருக்கானும் பார்த்துக்கிட்டேன், எல்லாம் சரியா வந்திருந்தது. சரினு நோட்பாடிலேயே "ஸேவ்" செய்து விட்டு, வேதாவுக்கு ஜிமெயில் அனுப்புமுன்னர், அதிலே ட்ராப்ட் போட்டு வச்சுக்கலாம், இன்னும் 3,4 பதிவுகள் போடுவதாய்ச் சொல்லி இருக்காளே, அது முடிஞ்சதும், அதைப் பத்தியும் எழுதிட்டுச் சேர்த்து அனுப்பலாம்னு, ஜிமெயிலுக்குப் போய்க் கம்போஸ் ஓபன் பண்ணி, அதிலே ஜி3 பண்ணினால், என்ன ஆச்சரியம்? முதல் பத்தியும், இரண்டாவது பத்தியில் பாதியும், þôôôÊ ÅÕÐÐ, ±ýÉ ¦ºöÂÐÛ Ò̢嬀 ±ÉìÌ! இந்த மாதிரி வந்திருக்கு, என்ன செய்யறதுனு புரியலை எனக்கு. ஒரே ஆச்சரியமாப் போச்சு, நோட்பாடில் சாதாரணத் தமிழில் யூனிகோடில் எழுதினது வந்திருக்கு, இதிலே எப்படி இந்த மாதிரி? இப்படி எல்லாம் கூட ஆச்சரியமா நடக்குமா எல்லாருக்குமே?

மற்றப் பத்திகள் எல்லாம் சரியாக வந்திருந்தன. இது என்ன பேராச்சரியம் என்று வியந்து கொண்டே, சரி, நம்ம ப்ளாகில் ட்ராப்டாகப் போட்டு வச்சுக்கலாம், அப்புறம் அங்கிருந்து ஜி3 பண்ணிக்கலாம்னு ப்ளாகுக்கு வந்து அங்கே ஜி3 செய்தால் அதே, அதே, சபாபதே! மறுபடியும் முதல் பத்தியும், 2வது பத்தியில் கொஞ்சமும் þôÀÊò¾¡ý ÅÕ¦ÅýÛ À¢ÊÅ¡¾õ! ஒரே பிடிவாதம் பிடிக்குதேனு குழம்பிப் போய் மறுபடி மெயிலுக்குப் போய் நோட்பாடை ஓபன் செய்து, முதல், இரண்டாவது பத்திகளை அதைப் பார்த்து மறுபடி தட்டச்சு செய்தேன், எல்லாவற்றையும் முடிச்சு விட்டு, "ஸேவ்" கொடுக்கணும். அதுக்குள்ளே ஜிமெயிலுக்குக் கோபம் வந்து, unable to reach gmail, chats receiving and sending may fail. your request could not be processed. அப்படினு புலம்ப ஆரம்பிச்சுட்டது. என்ன தொந்திரவு இதுனு, கொஞ்சம் கோவத்தோடு, சரியாப் போகுதா பார்ப்போம்னு அழுத்தி ஒரு க்ளிக்கினேன் பாருங்க, போயே போச், ஸேவாவாது, மிக்சராவது! வேதாவுக்கு மாட்டர் போயாச்சு, போயிந்தி! அரைகுறையாய். என்னத்தைச் சொல்ல? நான் அனுப்பற மெயில் எதுவும் இத்தனை வேகமாப் போனதில்லை. இது மின்னல் வேகத்தில் போய்ச் சேர்ந்துடுச்சு!

இந்த ப்ளாக்கரும் இப்படித்தான் சதி பண்ணும், சரியா பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்தில், could not connect to blogger.com. publishing and saving may fail அப்படினு பயமுறுத்திட்டே இருக்கும். சரினு முயற்சி செய்து தான் பார்க்கலாமேனு பப்ளிஷ் அழுத்தினால் ஒண்ணு, பப்ளிஷ் ஆகும், அல்லது மொத்தமும் காணாமல் போகும், காக்கா கொண்டு போயிடும். அதனால் எப்பவுமே நான் பப்ளிஷ் செய்யறதுக்கு முன்னாலே அதை ஒரு ஜி3 பண்ணிக் கொண்டே தான் பப்ளிஷ் செய்யறதுனு வச்சிருக்கேன், இல்லாட்டி மறுபடி, மறுபடி, எழுதினதையே எழுதறாப்பலே ஆகிறதோட இல்லாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி வந்து தொலைக்கும். அது சரி, இது எல்லாம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? எல்லாருக்கும் இப்படி நடக்கும்கிறீங்க?

ஒருவேளை ஜி3 மறுபடியும் என் கிட்டே கோவிச்சுக்கிட்டாங்களோ? :P :P ஜி3, ஜி3, நான் உங்களுக்குச் செலவில்லாத விளம்பரம் கொடுத்துட்டு வரேனே, இந்த வ்லை உலகுக்கே உங்கள் பெயரையும், அதன் அர்த்தத்தையும் அறியச் செய்திருக்கேனே, அதுக்கெல்லாம் நன்றி பாராட்டக் கூடாதா? இப்படியா பழி வாங்கறது? :P உங்க குருவின் குரு நான், நீங்க என் சிஷ்யையின் சிஷ்யை! ஆகவே உங்களை நான் எப்போவுமே தாயுள்ளத்தோடு, பெருந்தன்மையுடன் மன்னிச்சுடுவேன். இதைப் புரிஞ்சுக்க வேணாமா?? இப்போ விமரிசனம் பத்தின ஒரு விமரிசனம்.

மத்ததெல்லாம் கூட வேதாவை அவ்வளவு டிஸ்டர்ப் செய்யலை. கடைசி இரண்டு "கவிட்டுரை"க்கும் நான் கொடுத்திருக்கும் விமரிசனம், அதுவும் ஒரு ஆணின் பார்வையில் எழுதின கவிட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள்,
"நட்புக்கும், காதலுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் மிகப் பாதுகாப்புடன் நடக்கச் சம்மதிப்பார்களா? இவ்வளவு மென்மையாக மறுக்கப் பட்ட காதலை ஏற்றுக் கொண்டு செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாய் சந்தோஷப்படவேண்டிய ஒரு விஷயம் தான்."
இவை அவரை மிகவும் தொந்திரவு செய்ததாய் உணர்ந்தேன். என்னைப் பொறுத்த வரை காதல் என்ற உணர்ச்சிக்கு வாழ்க்கையில் இடம் இல்லை என்றாலும், ஓரளவுக்கு சக தோழிகள் மூலம் அறிந்து புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் ஒரு பார்வை, ஒரு சின்னப் புன்னகை, ஒரு அதிர்ச்சி, ஓரத்து விழி நீர் இவற்றின் மூலமாய் சிநேகிதியின் நட்பைத் தான் காதலாய் அர்த்தம் செய்து கொண்டதை எண்ணி வெட்கித் தலை குனிந்த அந்த ஆண் உண்மையிலேயே பாராட்டுக்குரியவன். மற்றவர்கள் மாதிரி பீர் பாட்டிலும் கையுமாய், தாடி வளர்த்துக் கொண்டு தேவதாஸ் மாதிரி திரியாமல் இம்மாதிரியான ஒரு நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொண்டு பிரியவும் பிரியாமல், தன் காதலையும் பூட்டி வைக்காமல், தங்கள் போக்கிலே செல்லும், செல்ல வைக்கும் நட்பு எத்தனை உன்னதமானது? ஒவ்வொருவருக்கும் அதை அடையக் கொடுத்து வைக்க வேண்டும்.

என்றாலும் இன்னும் ஏதோ எழுதி முடிக்காமல் குறை வைத்திருக்கிறாப்போல ஒரு எண்ணம் என் மனசில் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. அது என்னனு புரியலை. நான் கொஞ்சம் லேட் இன்னிக்கு. ஆனால் நேற்று வேதா சொல்லும்போதே சந்தேகமாத் தான் இருந்தது. 10-00 மணிக்கெல்லாம் முடியாதேன்னு. இப்போத் தான் வர முடிந்தது. அந்த கவிட்டுரையின் விமரிசனத்துக்கு யார் யாருக்கு என்ன கேட்கணுமோ இங்கே வந்து சொல்லுங்க, கேட்டுக்கறேன். மற்றபடி இது என்னுடைய ஒரு சிறு முயற்சி.

Sunday, November 18, 2007

கூட்டணியால் ஏற்பட்ட ஏறுமுகம்!!!!!!!!!

அ.இ.அ.தி.மு.க. அல்லது தே.தி.மு.க. அல்லது பா.ஜ.க. அல்லது ல.தி.மு.க அல்லது தி.மு.க. அல்லது பா.ம.க. அல்லது கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ், ஃபார்வர்டு ப்ளாக், ராஜீவ் காங்கிரஸ், வாழப்பாடி காங்கிரஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், இப்படி எதுவோ ஒண்ணு, இன்னொரு கட்சியோட வச்சுக்கிட்ட அல்லது வச்சுக்கப் போற கூட்டணினு நினைச்சு வந்த உங்க எல்லாருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக் கொள்கிறேன்.

இது அது எதையும் பத்தி அல்ல, அல்லவே அல்ல. கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் சுயபுராணம். அதைப் பாடிட்டு இதோ விட்டேன் ஜூட், யாருக்கு என்ன சொல்லணுமோ சொல்லிக்குங்க, நான் மெதுவா வந்து பார்த்துக்குவேன், இன்னிக்குத் தான் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்து எழுதற அளவுக்கு உடம்பு பரவாயில்லை. போன ஞாயிறு அன்று உடல்நிலை சரியில்லாமல் போனபோது, சாதாரண ஜலதோஷக் காய்ச்சல்னு தான் நினைச்சேன். அதென்னமோ எங்க குடும்ப டாக்டருக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாவே இருக்கும். ஏன் என்றால் ஜுரம் வரும்போதே எனக்கு 103*-க்கு மேலே தான் போகுமே ஒழிய, சாமானியத்தில் கீழே இறங்காது. ஒவ்வொரு முறையும் அவர் இது சாதாரண ஜுரம்னு சொல்லத் தான் ஆசைப் படுவார். ஆனால் அது நடக்காது.

வியாதிகள் என் உடலில் கூட்டணி அப்படி அமைத்துக் கொள்ளும். சும்மாவே அக்டோபர் மாசம் பிறந்தாலே எனக்கு பிராங்கைடிஸ் ஜூரம் வந்துடுமேனு பயந்துட்டே நடமாடுவேன். பத்தாக் குறைக்குச் சின்ன வயசிலே கூட இல்லாத டான்சில்ஸ் இப்போ 3 வருஷமாத் தொந்திரவு கொடுத்துட்டு இருக்கு. ஆபரேஷன் வேணாம்னு சொல்லிட்டார் டாக்டர். அதனாலே அப்போ அப்போ அது கொடுக்கிற தொந்திரவு வேறே. இத்தோட ஸ்டமக் இன்ஃபெக்க்ஷன், யூரின் இன்ஃபெக்க்ஷன் என்று எல்லாம் சேர்ந்து ஒரே கூட்டணி அமைத்துக் கொண்டு இம்முறை பல்முனைத் தாக்குதல் நடத்திவிட்டது. க்ளீன் போல்ட்!!!!! சாப்பாடு எல்லாம் வீட்டில் சமைப்பதை மறந்துட்டு வெளியிலே வாங்க ஆரம்பிச்சு,அது ஒத்துக்காமப் போய் டாக்டரையே சாப்பாடு போடறீங்களானு கேக்கலாம்னு நினைச்ச சமயம் நேத்திலே இருந்து அரை மனசாய் வெளியேறி இருக்கு ஜுரம். இன்னும் கொஞ்சம் தொண்டைப் புண்ணும், வீக்கமும் இருக்கு, சரியாப் பேச முடியலை. முழுங்க முடியலை. இருந்தாலும் வேளா வேளைக்குச் சாப்பிடும் மருந்துகளின் உதவியாலே கொஞ்சம் நடமாட்டமும், ஓரளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றமும் இருக்கு. இந்த வருஷக் கோட்டா இத்தோட முடிஞ்சுடுச்சுனு நினைக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசமும், நவம்பர் மாசமும் கடக்கிறது தான் எனக்குப் பெரிய விஷயமா இருக்கு.

வீட்டில் ஒரு வாரமாகக் கிழிக்கப் படாமல் இருந்த தினசரிக் காலண்டரும், இடம் மாறிய பாத்திர வரிசையும், சாமான்களும் இன்னும் என் கவனத்தை ஈர்க்க ஆரம்பிக்கலை. அவ்வளவுக்கு இன்னும் தெம்பு வரலை. கூடிய சீக்கிரம் வரும்னு நம்பிக்கையுடன்