எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 29, 2023

செங்கோலின் வரலாறு!

இன்னிக்குச் சோதனைக்குக் கொடுத்திருக்கேன். என்ன முடிவு வரப் போகுதோ தெரியலை. கீழே விழுந்ததில் ஏற்பட்ட வலி கணிசமாகக் குறைந்து விட்டது. இப்போக் கொஞ்சம் இல்லை நிறையப் பரவாயில்லை. போன வாரமே விழுந்த அன்னிக்கேக் காட்டிட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். தசை வலி தானே சரியாயிடும்னு நினைச்சு நாட்களை வீணாக்கிட்டேன். :( நாட்டில் ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் திகிலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருக்கார். அது தொடர்பான விசாரணகள் நடந்து முடியும் முன்னரே அடுத்தடுத்து இந்த அதிகாரிகள், வி.ஏ.ஓ. போன்றோருக்கு உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள். அரசு அதிகாரிகளாகப் பணி புரிவோர்க்கு எந்நேரமும் ஆபத்துத் தான் காத்திருக்கிறது. அதிலும் நேர்மையான அதிகாரிகள்னால் கேட்கவே வேண்டாம். பதவியில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டி உள்ளது. திருடனாகப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு. 

இன்னிக்கு அக்னி நக்ஷத்திர முடிவு நாள். வெயில் என்னமோ கொளுத்துகிறது. காற்று ஆரம்பித்தாலும் அவ்வளவு மும்முரமாய் இல்லை. பருவக்காற்று இன்னமும் சுறுசுறுப்பாகத் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கலை. ஏசியைப் பகலில் எல்லாம் வைச்சுக்கறதில்லை. அப்புறமா அந்த அறையிலிருந்து வெளியே வரும்போது வெளிச்சூடு தாக்கிவிடும் என்பதால் இரவில் மட்டும் தான் ஏசி. அதையுமே விடிகாலையில் மூன்று மணி போல் அணைச்சுடுவோம். எழுந்திருப்பதற்குள்ளாக உடல் வெளியே உள்ள வெப்ப நிலைக்குப் பழகணுமே! 22 டிகிரியில் வைச்சுட்டு இருந்தோம். அப்புறமா அணைச்சுட்டு மின் விசிறியைப் போட்டால் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஆகவே இப்போ 24 டிகிரிக்கு வைச்சுட்டுக் கூடவே மின் விசிறியையும் போட்டுக்கறோம். அறை முழுவது நல்ல சில்லென்ற காற்று. காலம்பர அணைச்சாலும் எதுவும் தெரியலை. இதிலே மின்சாரம் வேறே மிச்சம் ஆகும் என்கின்றனர். பார்ப்போம்.

என்னோட சித்தி பையர் சத்யாவில் ஏசி வாங்கி இருக்கார். இன்ஸ்டாலேஷன் சார்ஜஸ் 850 ரூபாயோ என்னமோ சொன்னாங்களாம். வீட்டுக்கு வந்து ஏசியைப் பொருத்தும்போது அது இதுனு சொல்லிக் கடைசியில் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்குக் கொஞ்சம் கீழே ஆகி இருக்கு! சேவையும் ரொம்பவே சுமார் என்கிறார். இதனாலேயே நாங்க இந்த ஆஃபர் கொடுக்கும் கடைகளுக்கே செல்லுவதில்லை. நேரடியாக எல்ஜியைத் தொடர்பு கொண்டே இரண்டு ஏசிக்களையும் வாங்கினோம். பதிவாக ஒருத்தர் வந்து எப்போதும் வேலைகளைச் செய்து கொடுப்பார். வேறே யாரையும் கூப்பிடறதில்லை.

செங்கோல் பற்றிப் பலரும் பலது சொல்கின்றார்கள். உண்மையில் இது 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று திருவாவடுதுறை ஆதீனம் அவர்களால் நேருவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதை நேரு அலஹாபாதில் ஆனந்த பவனத்தில் உள்ள காட்சிப் பொருட்களோடு வைத்திருந்ததாய்க் கேள்வி. மவுன்ட்பேட்டனிடம் யாரும் கொடுக்கவும் இல்லை. பின்னர் அவர் நேருவிடம் கொடுக்கவும் இல்லை. அப்படி நடந்ததாக ஒரு சலவைக்கல்வெட்டு வாட்சப்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெயரால் சுற்றுகிறது. எது உண்மை என்பது அந்தச் சமயம் இருந்தவங்களுக்குத் தான் தெரியும். 

பிரதமர் தலைமை வகித்துப் பங்கேற்கும் விழாக்களுக்கு ஜனாதிபதியை அழைப்பது மரபு/சம்பிரதாயம் இல்லை. ஏனெனில் ஜனாதிபதி பிரதமரை விட உயர்ந்த பதவி. முதல் குடிமகன். ஜனாதிபதி பார்லிமென்ட் திற ப்பு விழாவுக்குப் பங்கேற்கச் செல்லாததில் எந்தவிதமான அரசியல் காரணங்களும் இல்லை. பார்லிமென்டில் குறிப்பிட்ட சில சமயங்கள் மட்டுமே ஜனாதிபதி கலந்து கொள்வார். அதன் முறை/சம்பிரதாயமும் கூட. இந்தக் காரணங்களால் தான் அவரை அழைக்கவில்லை என்றாலும் அவரின் வாழ்த்துச் செய்தி அரசுக்கு வந்துள்ளது.

முன்னர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை முதலமைச்சராக இருந்தப்போ அவருக்கும் செங்கோல் வழங்கப்பட்டது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு? அதற்கு இப்போது சொல்லும் சப்பைக்கட்டு அது கட்சிப் பணத்தில் இருந்து வாங்கியதாம். இது அப்படி இல்லையாம்? கட்சிக்கு ஏது பணம்? கட்சித்தொண்டர்களான பொதுமக்களிடம் வசூலித்தது தானே? அது கொடுக்கலாம். இது வலிந்து ஓர் ஆதீனத்தால் எழுபது வருடங்கள் முன்னரே அப்போதைய பிரதமருக்குப்  பரிசாகக் கொடுக்கப்பட்டது இப்போது மீட்கப்பட்டுப் பொதுவில் உள்ள சொத்துக்களில் ஒன்றாக ஓர் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. எது சரி? இது மதவாதமாம்! எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுவதே உண்மையான மதச் சார்பின்மை. ஆனால் இங்கேயோ சநாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னால் மதச் சார்பின்மை. சநாதனத்தைக் கொண்டாடினால் மதவெறி! என்னவோ போங்க! ஒண்ணுமே புரியலை, உலகத்திலே!

ராஜராஜ சோழன் சிவபாத சேகரனாகத் தான் கடைசிவரை வாழ்ந்தான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். அதற்காக யாரும் அவனுக்கு மதவெறி என்று சொன்னதாகத் தெரியலை. ஜைன, பௌத்த மடங்களுக்கும், மற்ற மதங்களுக்கும் உரிய மரியாதையையும் கொடுத்து வந்தான். தில்லை வாழ் அந்தணர்கள் தான் சோழ அரசனுக்குப் பட்டம் கட்டும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் வேறுபாடுகள் பார்க்காமல் திருப்பணிகள் செய்து வந்தனர் சோழ அரசர்களும், மற்ற அரசர்களும். உண்மையான மதச் சார்பின்மை என்பது முன் காலத்தில் இருந்தது. இப்போது சுயநலம் பிடித்தவர்களால் ஆளப்படும் நாட்டில் மதச்சார்பின்மை என்பது பொருளற்றுப் போய்விட்டது.

Thursday, May 25, 2023

நானெல்லாம் படம் பார்த்து!

 இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் படங்களைப் பார்க்க வாய்ப்பு இருந்தும் அவ்வளவு மனம் ஒன்றவில்லை.முன்னால் இரண்டு படங்கள் பார்த்துட்டு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னர் கொஞ்ச நாட்கள் படங்களே பார்க்கும் ஆவல் வரலை. திடீர்னு ஒரு நாள் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் படிக்கையில் இந்த யூ டர்ன் படம் கண்ணில் பட்டது. சரினு பார்க்க ஆரம்பித்தேன். விறுவிறுப்பான படம் தான். நடிகர்கள் யாரும் யாரெனத் தெரியலை. முற்றிலும் புதிய நடிகர்கள். ஆனாலும் நடிப்பும், கதையும், காட்சிகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப்போய்ப் பார்க்க வைத்தது. அப்படியும் 2,3 நாட்களாகத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து முடித்தேன். குறிப்பிட்டதொரு தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இடத்தில் பாலத்துக்கு மேலே யூ டர்ன் எடுக்கவே கூடாத இடத்தில் இரு சக்கர, நாலு சக்கர வாகனப் பயணிகள் அங்கே போட்டிருக்கும் கான்க்ரீட் பாறைகளை நகர்த்தி விட்டு வழி உண்டாக்கிக் கொண்டு யூ டர்ன் எடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்கின்றவர்கள் ஒவ்வொருவராக அன்றே இறக்கின்றனர்.

பத்திரிகையாளராக இருக்கும் ராதிகா பக்க்ஷிக்கு இதைக் குறித்து ஆய்வு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. சாலைப் பயணங்களில் நடைபெறும் விபத்துக்களையும் அதோடு கூடவே ஆய்வு செய்கிறாள். அப்போது இந்த யூ டர்ன் பற்றித் தெரிய வந்ததும் அது குறித்த தேடலில் மும்முரமாய் இறங்குகிறாள்விசித்திரமான சம்பவங்கள் மட்டுமின்றி போலீஸ் ஆய்வாளர் அர்ஜுன் ராதிகாவே இவற்றுக்குக் காரணமாய் இருப்பாளோ என சந்தேகப்படுகிறார். கடைசியில் உண்மையை ராதிகாவும் அர்ஜுனுமாகச் சேர்ந்து பேசுகையில் இருவருக்குமே புரிய வருகிறது. நம்பவே முடியாத உண்மை. மிச்சத்தை இணையத் திரையில் காணுங்கள்.

அதுக்கப்புறமாப் பார்த்தப்போ "கோஸ்டி" நன்றாக இருக்குமெனப் போட்டிருந்தாங்க. காஜல் அகர்வால் தான் கதாநாயகி. காஜல் அகர்வால் குழந்தையாய் இருந்தப்போ ஐபிஎஸ் அதிகாரியாய் இருந்த அவர் தந்தை ஒருபோக்கிரிகள் கோஷ்டித்தலைவனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்துத் தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார்.  ஆனால் காஜல் அகர்வாலின் தந்தை இறக்க அதன் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்கணும்னு நினைச்சு அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆகிறார். இந்த வழக்கை எடுத்துக் கொண்டு ஆய்வுகளைத் தொடர்கிறார். ஆனால் இவரை ஒரு தீவிரமான போலீஸ் அதிகாரியாகக் காண முடியாமல் காமெடி என்னும் பெயரில் சொதப்பி இருக்காங்க. படம் ஹிந்தியில் இருக்குமோனூ பார்த்தால் கிடைக்கலை. தமிழில் தான் பார்க்க வேண்டி வந்தது. அறுவைனா அறுவை அம்புட்டு அறுவை. பேய், பிசாசுங்க எல்லாம் வந்தாலும் திகிலாக எல்லாம் இல்லை. தலையில் அடிச்சுக்கத் தான் தோன்றியது. இதில் தேவ தர்ஷினியைப் போட்டு வீணடித்திருக்கிறார்கள். யாரோ யோகி பாபுவாம். முதலில் உயிரோடு வந்து விட்டுப் பிறகு பேய், பிசாசாக வருகின்றனர். காமெடி என்னும் பெயரில் இது ஒரு கொடுமை. படத்தை அதற்கு மேல் பார்க்கப் பிடிக்கலை என்பதால் விட்டுட்டேன். காஜல் அகர்வாலும் ஒரு போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரமோ, தீவிரமான மனப்பான்மையோ இல்லாமல் அச்சுப்பிச்சென்று நடித்திருக்கார். அவரோடு கூட ஊர்வசியும், இன்னொருத்தரும். மூன்று பேரும் காமெடி என்னும் பெயரில் அறுவை போடுகின்றனர்.

விடுதலை, பத்துத்தல, அயலி, அயோத்தி, ருத்ரன் எனப் பல தமிழ்ப்படங்கள் இருந்தாலும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படி இருக்குமோனு ஒரு பயம். அயோத்தி பற்றி நிறைய விமரிசனங்கள் வந்தன. பார்க்க வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்.

***********************************************


நேற்றுப் பல மாதங்களுக்குப் பின்னர் வெளியே ஒரு பூணூல் கல்யாணத்துக்குப் போனோம். ஆத்து வாத்தியார் பிள்ளைக்குப் பூணூல். குழந்தைக்கு ஏழு வயது தான் இருக்கலாம். மழலை மாறவில்லை. மொட்டை அடித்துக்கொண்டு பூணூல் போட்டுக்க வந்தபபோத் தூக்கி எடுத்துக் கொஞ்சத் தான் தோன்றியது. அந்தச் சத்திரத்துக்குள் போக எக்கச்சக்கமான படிகள். வாசல் படிகளில் ஏறும்போதே ஒரு இடத்தில் படி உடைந்து அதைக் கவனிக்காமல் ஏறிச் சறுக்கிக் கொண்டு போய்ப் பக்கத்துக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டேன். அதில் நடு நெஞ்சில் நல்ல அடி பட்டுப் படுக்கவோ, உட்காரவோ முடியலை. இரும முடியலை.வலிக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருக்கேன். அதன் பிறகு பூணூல் நடக்கும் மண்டபம் போக ஒரு பத்துப் படிகள். அங்கிருந்து சாப்பிடும் இடம் போக ஐந்தாறு படிகள். எல்லாமாகச் சேர்ந்து கசரத் வாங்கியதில் முடியலை. சாப்பாடு வேறே சரியில்லை. 

மெனு என்னமோ நல்ல மெனு தான்.பால் பாயசம், தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, உ.கி.பொடிமாஸ், அவரைக்காய்க் கறி, பூஷணிக்காய்க் கூட்டு,மாங்காய் ஊறுகாய், வடை, பதிர்பேணி, புளியோதரை, வறுவலுக்குப் பதிலாக மிக்சர், கதம்ப சாம்பார், ரசம்,மோர். பறிமாறினவங்க யாருக்கும் பரிமாறவே தெரியலை. சாம்பாரை முடிச்சுட்டு ரசத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்திருந்தேன். ரசம் ஊற்றுபவர் அந்த வழியாகவே நாலைந்து தடவைகள் போய் வந்தும்,எனக்கு ரசம் ஊற்றவே இல்லை. பின்னர் கத்தினத்துக்கப்புறமா வந்து அரைக்கரண்டி ரசத்தை ஊத்திட்டு அந்தப்பக்கம் பரிமாறுபவர்களோடு மும்முரமாய்ப் பேச ஆரம்பிச்சுட்டார். வந்த கோபத்துக்கு எழுந்துடலாம்னு தோணியது. ஆனால் இந்தப்பக்கம் நாலு பேர், அந்தப்பக்கம் நாலு பேர்னு எழுந்துக்க முடியாத நிலைமை. சாப்பிட்டோம்னு பேர் பண்ணினேன்.சாப்பாடு வயித்துக்கும் ஒத்துக்காமல் ஒரே தொந்திரவு. மிளகு ரசம் வைச்சுச் சாப்பிட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. நம்ம ரங்க்ஸுக்குக் கூட்டிப் போகவே இஷ்டமில்லை. வராதேனு சொன்னேனே என்று சொல்லிக் கொண்டே இருந்தார். :(

Wednesday, May 03, 2023

நெல்லையின் கேள்வியும் எனக்குத் தெரிந்த பதிலும்!

 ஒரு சென்சிடிவ் கேள்வி. ஆனால் நான் நிறைய நாள் யாரிடமாவது கெட்கணும்னு நினைத்திருந்தேன். வைணவத்தில் ஆழ்வார் பதின்மர், ஆண்டாள் மதுரகவியாழ்வாரும் அவர்கள் செய்த திவ்யபிரபந்தங்களைச் சேவிப்பத் உண்டு. இதேபோல் திருமுறைகளை  எல்லா பிராமணர்களும் சேவிப்பதில்லை என்பதைக் காணுகிறேன்,  அவர்கள் பூஜை அறையிலும் கூட நாயன்மார்களோ அல்லது திருமுறைகளை உண்டாக்கியவர்களையோ வணங்குவதில்லை. இதன் காரணம் என்ன?கீதா சாம்பசிவம் போன்று இதன் பாரம்பர்யத்தைத் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

நெல்லைத் தமிழன் கேள்வி.

பிராமணர்கள் தினந்தோறும் தேவார, திருவாசகங்களை ஏன் படித்து வணங்குவதில்லை. நாயன்மார்களுக்கும் அவர்கள் ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? நல்லதொரு கேள்வி. கிட்டத்தட்டப் பிற்காலச் சோழர்கள்/பாண்டியர்கள் காலம் வரையிலும் சைவம் செழிப்பாகவே இருந்தது. மாறி மாறிப் பாண்டியர்களும்/சோழர்களும் கோயில்களில் திருப்பணியைச் செய்தார்கள். தேவார/திருவாசகங்களை ஓதுவதற்கென  சிவத்திருமடங்களில் பொதுமக்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். அரசும் பல நிவந்தங்களை இதற்காக ஒதுக்கி இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்டத் தென்னாட்டில் முஸ்லீம்கள் படை எடுப்பு வரையிலும் சரியாகத் தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு சுமார் 40/50 ஆண்டுகள் ஒரு தலைமுறையே எந்தவிதமான இறை வழிபாடுகளும் செய்ய முடியாமல் இருந்திருக்கின்றனர். கோயில்களில் திருவிழாக்கள் நடந்தன என்பதே அப்போதைய இளைஞர்களுக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்கிறது. 

இந்நிலை நீடிக்காமல் விஜயநகரப் பேரரசும், நாயக்கர், மராத்தியர் ஆட்சிக்காலங்களும் மக்களுக்கு மீண்டும் பக்தி மார்க்கத்தைக் காட்டிக் கோயில்களைச் செப்பனிட்டுப் புதுப்பித்து விழாக்களை எல்லாம் ஒழுங்கு செய்து மக்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். என்றாலும் மக்கள் முழு மனதுடன் இறை வழிபாட்டில் ஈடுபட வில்லை.அவர்களுக்குள் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டிருக்கிறது. முன்னர் ஒரே வீட்டிலேயே அண்ணன் சிவ பக்தனாகவும், தம்பி வைணவ பக்தனாகவும் இருந்த காலம் போய் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டு உள்ளது.

அந்நாளைய படிப்பில் சைவத்திருமுறைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களே கோயில் சிவாசாரியார்களாக இருக்க முடியும் என்னும் நிபந்தனைகள் எல்லாமும் இருந்திருக்கிறது. சாமானிய மனிதன் தமிழ் கற்றால் கூடத் தமிழ் இலக்கணம், இலக்கியம், சங்க இலக்கியம் என நிறுத்திவிடாமல் பன்னிரு திருமுறைகளையும் கூடக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவற்றைப் பண் அமைத்துப் பாட வேண்டும் என்னும் நிபந்தனையும் கூட இருந்திருக்கிறது. இது நம் தமிழ்த்தாத்தா அவர்கள் தமிழ் கற்கும்போது கூட இருந்திருக்கிறது என்பதை அவருடைய சுய சரிதையின் மூலம் காணலாம். தமிழ் கற்க இவ்வாறெல்லாம் நிபந்தனைகள் இருக்க ஆங்கிலப் பள்ளிகள் நாளாவட்டத்தில் பெருகின. அவை ஆங்கிலத்தைப் போதித்ததோடு நிற்காமல் தமிழின் முக்கியத்துவத்தை மெல்ல மெல்லக் குறைத்தார்கள். முன்னெல்லாம் சிவ தீக்ஷை பெற்றவர்களே தமிழில் பண்டிதர்கள் ஆகலாம் என்றிருந்தது மாறித் தமிழை ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்னும் நிலைமைக்கு மாற்றியது அக்கால ஆங்கில அரசு. அதே சமயம் இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழர்களும் சரி, மற்றத் தமிழர்களும் சரி தேவார/திருவாசகங்களைப் படித்து ஓதி சிவ தீககை பெற்றே மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் முற்றிலும் வேறான நிலைமை.


இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் வைணவப் பிரிவினையின் மூலம் வைணவர்கள் விஷ்ணு ஒருவனே தெய்வம்! என்னும் கொள்கையையும் தூக்கிப் பிடித்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்குள் வடகலை/தென்கலைப் பிரிவுகள் தோன்றினாலும் ஸ்ரீராமானுஜர் காலத்துக்குப் பின்னால் தமிழுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தினமும் கோயில்களில் பட்டாசாரியார்களே சந்நிதிக்குள் பாசுரங்கள் பாடும் முறையை ஏற்படுத்தினார்கள். அதைத் தவிரவும் பாசுரங்கள் பாடுவதில் வல்லவர்களைத் தேர்ந்தெடுத்துத் தனி கோஷ்டி முறையை உருவாக்கி இதற்கென்றே தனிப் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.

சைவர்களில் சைவர் எனத் தனியாக இருந்தவர்கள் ஆதி சைவர்களும், சிவாசாரியார்களுமே. இருவருமே ஒன்றே எனச் சிலர் சொன்னாலும் பலர் மறுக்கவும் செய்கின்றனர். இவங்க சிவனைத் தவிர்த்து வேறே கடவுளை வணங்குவதில்லை.  அதே சமயம் பிராமணர்களில் ஸ்மார்த்தர் என்னும் புதியதொரு பிரிவு தோன்றியது. இவர்கள் ஆதி சங்கரரைத் தங்கள் குருவாக ஏற்றவர்கள். அவருடைய ஷண்மத தத்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு எந்தக் கடவுள்களிடமும் பேதங்கள் கிடையாது. சர்வம் சிவ மயம் என்றாலும் சர்வம் விஷ்ணு மயம் என்றாலும் ஏற்பவர்கள். பஞ்சாயதன பூஜை என்னும் ஷண்மத வழிபாட்டில் முக்கியமான பூஜை முறையைப் பலரும் ஏற்று அதன்படி பூஜை செய்பவர்கள். இவர்களில் சிவ பூஜை மட்டுமே செய்பவர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கான உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்வார்கள். மற்றவர்களை ஏற்க மாட்டார்கள்.

இந்த ஸ்மார்த்தர்கள் என்னும் பிரிவினர் கோயில்களில் வழிபாடுகளைச் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஆனால் வைணவர்களில் அப்படி இல்லை.ஆகம நடைமுறைகள் தெரிந்த பட்டாசாரியார்கள் என அனைவருமே கோயிலின் கர்பகிரஹத்தில் வழிபாடு செய்வார்கள். வழிபாடு செய்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பிரபந்தங்களை ஓதத் தெரிந்தவர்கள். ஆனால் அதே சமயம் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்கள் பன்னிரு திருமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள். ஓதவும் தெரியும். ஆனாலும் எப்போது எனத் தெரியாத காலத்திலேயே சிவன் கோயில்களில் ஓதுவார்கள் தோற்றுவிக்கப்பட்டுச் சைவ மடங்களால் ஆதரிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இருக்கும் கோயில்களின் கால வழிபாட்டின்போது தேவார/திருவாசகங்களை ஓதும் பேறு பெற்று இன்று வரை பல கோயில்களிலும் ஓதி வருகின்றனர். இவர்களில் ஸ்மார்த்தர்களும் சேர்ந்து கொள்வார்கள். பலருக்கும் ஓதத் தெரிந்திருந்தாலும் சிவன் கோயில் நடைமுறைப்படி ஓதுவார் தான் ஓத வேண்டும் என்றிருப்பதால் அவர்தான் ஓதுவார். கூடவே நாமும் தெரிந்தால் சொல்லலாம்.

சிதம்பரத்தில் ஒவ்வொரு காலத்துக்கும் தருமபுரம் ஆதீனத்தால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் வந்து பன்னிரு திருமுறைகளை ஓதுவதை இன்றும் பார்க்க முடியும். அங்கே உள்ள தீக்ஷிதர்கள் ஸ்மார்த்தர்கள் ஆனாலும் அவர்கள் ஈசனின் நேரடிச் சீடர்கள் என்பதால் அவர்கள் கர்பகிரஹத்தில் வழிபாடுகள் செய்ய உரிமை பெற்றவர்கள் என்பதோடு அனைவருக்குமே பன்னிரு திருமுறைகளை ஓதவும் தெரியும். பெரும்பாலும் அபிஷேஹ காலத்தில் ஸ்ரீருத்ரம் சொல்லிக் கொண்டோ அல்லது திருமுறைகளை ஓதிக்கொண்டோ அபிஷேஹம் செய்வார்கள்.எல்லாக் கோயில்களிலும் பன்னிரு திருமுறைகளை முறைப்படி சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் அந்த அந்தக் கோயிலைச் சேர்ந்த மடங்களால் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் பங்கு கொள்பவர்களே பிராமணர்கள் தாம். அனைவரும் சேர்ந்து தேவார முற்றோதல் என்னும் நிகழ்ச்சியை அடிக்கடி தொடங்கி நிறைவும் செய்வார்கள். கட்டாயப்பாடமாகப் பன்னிரு திருமுறைகளை வைக்காமல் விருப்பப் பாடமாக வைத்திருப்பதால் இதில் ஆர்வம் உள்ளவர்களே கலந்து கொள்கின்றனர். திருப்புகழும் அப்படித் தான் எல்லாக் கோயில்களிலும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.


ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்தியே ஆகவேண்டும். வைணவர்களுக்கு மகாவிஷ்ணுவிடம் உள்ள பற்றும், பாசமும், பக்தியும் சைவர்கள்னு சொல்லிக் கொள்ளும் ஸ்மார்த்தர்களுக்கு இல்லை என்றே சொல்லணும். மிகச் சின்ன வயசிலேயே வைணவ பக்தி நெறிமுறைகள் போதிக்கப்படுகின்றன என்பதற்கு என் முகநூல் நண்பர் திரு கேசவபாஷ்யம் வி.என். அவர்களின் புதல்வன் "ஆத்ரேயனே" சான்று. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்து வருகிறேன். இங்கேயும் "சிந்துஜா ஹரிகதை" போன்ற மேதைகள் உள்லனர் என்றாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.. வைணவர்கள் மறந்தும் பிறன் தொழமாட்டார்கள் என்பதற்குச் சிதம்பரம் கோயிலின் பெருமாளே சாட்சி. ஆனால் மற்றவர்கள் எல்லாவற்றையும் ஏற்பார்கள். இந்துக்களின் இன்றைய நிலைமைக்கு அது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  சிவன் கோயில்களில் ஸ்வாமி பல்லக்கைத் தூக்குபவர்கள் பிராமணராய்த் தான் இருக்கணும்னு கட்டாயம் இல்லை. ஆனால் விஷ்ணு/பெருமாள் கோயில்களில் அவர்களைத் தவிர வேறே யாரும் பெருமாளின் பல்லக்கைத் தொடக் கூட முடியாது. பிராமணர்கள் அலகு குத்திக்க மாட்டாங்க, கடினமான வேலைகளைச் செய்ய மாட்டாங்க என்பவர்கள் அந்த ஸ்ரீபாதம் தாங்கிகளின் தோள்பட்டையைப் பார்த்தால் தெரியும்.

வேறு கருத்துள்ளவர்கள் சொல்லலாம்.

Friday, April 28, 2023

தாத்தாவை நினைவு கூர்வோம்!

 உ.வே.சா. வாழ்க்கையின் சிறப்பு

உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துகளையும் விற்றுப் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.


சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா. பெரும் காரணமாவார். சங்க கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.


இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களைக் குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.


சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்க முயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887-ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக் கருவூலமாக இருக்கின்றது.


நன்றி விக்கிபீடியா

சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.


இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.


தமிழாசிரியர் எங்குக் கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாகக் குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உ.வே.சா. பதிவுசெய்கிறார்

Friday, April 21, 2023

மாறி வருவது உலகமா? மனிதர்களா?

 விலைவாசி எல்லாமே அதிக பக்ஷமாக 100% ஏறி இருக்கும் போல! ஜனவரியில் 75 ரூபாய்க்கு விற்ற எள்ளுருண்டைகள் இப்போ 120 ரூபாய்க்கு விற்கிறது. இனிப்புப் பண்டங்கள் எல்லாமும் கிலோ  500 ரூக்கு விற்கின்றன. உணவுப் பண்டங்கள், தேநீர் எல்லாமும் விலை அதிகரித்துள்ளது. இதற்கான அடிப்படைப் பண்டங்கள் விலையும் கூடி இருக்கணும். அதைப் பார்க்கணும். ஆனால் பெரிய அளவில் இதற்காக யாரும் எதுவும் சொல்லவில்லை என்பது எனக்கு அதிசயமாகவே இருக்கு. எரிவாயு விலை கூடிக் கொண்டே போவதற்கும் ஆங்காங்கே அரசியல் கட்சிகள் கொஞ்சம் கத்துவதோடு சரி. பொதுமக்களிடமிருந்து ஏன் எதிர்ப்பே காணோம்? 

இக்காலத்துப் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதே புரியலை. சமீபத்தில் கேள்விப் பட்ட செய்திகளில் இருந்து பெண்கள் திருமணத்துக்கு முன்னரே எக்கச்சக்கமாக நிபந்தனைகள் விதிக்கின்றனர். கணவனாக வரப் போகிறவன் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதோடு இல்லாமல் தான் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்தால் உடனே எடுத்துப் பேசணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். அதோடு இல்லாமல் தனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். மாமனார் மாமியார் கூடவே இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்களின் பெற்றோர் பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள் கணவனுடன் பேசுவதில் இருந்து எல்லாமும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்படும். அவங்க ஆலோசனைகளைக் கேட்டுத்தான் தன் குடும்பத்தில் எல்லாமும் செய்வார்கள். இதில் மாமியார், மாமனார் வெளி ஆட்கள். அவங்க தலையிடக் கூடாது.

இவங்களுக்கு எல்லாம் கூடப் பிறந்த ஆண் சகோதரர் இருந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் இதே போல் நிபந்தனைகள் விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பெண்களாகவே இருக்காங்க. அவங்களுக்குக் கூடப் பிறந்தவங்க இல்லை என்பதால் எதிலும் தான், தனது என்னும் நினைப்பே முன்னால் நிற்கிறது. கணவனும் ஓர் மனிதன் அவனுக்கும் பெற்றோர் உண்டு; பாசம் இருக்கும் என்பதோடு பெற்றோரைப் பார்த்துக்கும் கடமையும் உண்டு என்றெல்லாம் நினைப்பே வரதில்லை.

இந்தப் பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததோ அல்லது யாரேனும் கூடப் பிறந்தவங்க நிறையப் பேர் இருந்து அவங்களுக்குச் செய்ததோ அவங்க வாழ்க்கை மூலம் இதெல்லாம் தெரிந்து கொண்டார்கள் என்பதோ இல்லை. அப்படி இருக்கையில் அவங்களுக்கெல்லாம் எப்படித் திருமணம் நிச்சயம் ஆகும்போதே மாமனார்/மாமியார் வேண்டாதவங்க என்னும் எண்ணம் உண்டாகிறது? அவங்களைப் பார்த்துப் பழகி அவங்க குணம் பிடிக்கலைன்னா ஒத்துக்கலாம். பார்ப்பதே இவங்க நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளில் தான். அப்போவே இவங்களால் எப்படி இம்மாதிரி எல்லாம் முடிவுக்கு வர முடியுது? பெண்கள் தங்களுடைய விட்டுக்கொடுத்தல், அனுசரித்துப் போதல் இதை எல்லாம் கடைப்பிடிப்பதே இப்போதெல்லாம் அவமானம் என நினைக்கின்றனர். 

இன்னொருவர் சொல்லி இருந்தார். குழந்தை பிறந்தாலும் கூட இவங்க எல்லாம் அந்தக் குழந்தையை முழு மனதோடு பராமரிப்பதும் இல்லை என்பதே! பெரும்பாலான பெண்கள் மொபைல் மோகத்திலும் டிக்டாக்கிலும், ஸ்ம்யூல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று அதைச் சமூகத் தளங்களில் வெளியிடுவதிலும் உள்ள ஆர்வத்தை வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் காட்டுவதே இல்லை. முக்கியமாக அவங்க இன்னொரு மொபைல் வாங்கிக் குழந்தைக்கும் அதைப் பார்க்கப் பழக்கப்படுத்தி விடுகின்றனர். குழந்தை அழுதால் போதும் மொபைலை ஆன் பண்ணிக் குழந்தை கையில் கொடுத்துவிட்டு இவங்க தங்கள் வேலைகளில் மூழ்கி விடுகின்றனர். இது நெருங்கிய நண்பர் ஒருத்தர் வீட்டில் அவர் மருமகள் செய்வது என மனம் நொந்து போய்ச் சொல்லி இருந்தார்.

அதோடு மொபைல் அதிகம் பார்ப்பதால் குழந்தைகளுக்குச் சூடு அதிகம் ஆகிக் கண்களை அவை பாதிக்கும் அவலமும் ஏற்படுகிறது. முகநூலில் ஒரு நண்பரின் பேத்திக் காலை எழுந்ததும் கண்களைத் திறக்க முடியாமல் அவதிப்பட்டுக் குழந்தையால் பத்து மணி வரை கண்களைத் திறக்க முடியலை எனவும் பின்னர் மருத்துவரிடம்போனதில் அவர் சோதனை செய்துவிட்டு மொபைல் அதிகம் பார்ப்பதால் ஏற்பட்ட விளைவு எனவும் மொபைல் பார்ப்பதைக் குறைக்குமாறும் அறிவுரை சொல்லி இருக்கார்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியில் பெண்கள் பெரும்பாலும் சமைப்பதே இல்லை எனவும் ஸ்விகி, ஜொமோட்டோ மூலமே உணவுப் பண்டங்களை வாங்கிக்கறாங்க என்பதும் தெரிய வருகிறது. இவை எல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பிடும் குழந்தைகளுக்கு விரைவில் உடல் பருமன் ஆகிவிடுகிறது என்பதோடு பத்து வயதுக்குள் பூப்பும் அடைந்து விடுகின்றனர். எவ்வளவு தொல்லை இது என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.  நாங்க இந்த ஸ்விகி, ஜொமோட்டோவுக்கே போவதில்லை. வெளியில் வாங்குவது என்றாலும் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் உணவு தான் எங்களுக்கு ஒத்துக்கும். எனக்கு முடியலைனா அங்கே போய் வாங்கி வருவோம். அதிலும் பெரும்பாலும் இட்லிதான்.

இதை எல்லாம் பார்த்தும் கேட்டும், படித்தும் அனுப்வரீதியாக அனுபவங்கள் அடைந்தும் வருவதால் இனி வரப்போகும் சமுதாயம் எத்தகையதொரு நிலைமையில் இருக்கும் என்பதை எண்ணினால் மனம் சஞ்சலம் அடைகிறது. என்ன ஒண்ணு! இதை எல்லாம் பார்க்க  நாங்கல்லாம் இருக்க மாட்டோம். 

Sunday, April 16, 2023

ஏமாறச் சொல்வது நானோ?

 நேற்று என்னோட மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. 8453234693 என்னும் எண்ணில் இருந்து நாங்க மின்சாரக் கட்டணம் கட்டவில்லை என்பதால் நேற்று இரவு 9.30 மணிக்கு எங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும். போன மாச மின் கட்டணமும் நாங்கள் கட்டியதற்கான சான்று இல்லை எனவும் அதையும் அப்டேட் செய்யும்படியும்  உடனே 9353544193 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளும்படியும் சொல்லி இருந்தது அந்தச் செய்தியில். அதில் மின் விநியோகம் பெறும் வாடிக்கையாளரின் பெயரோ, அவருடைய பதிவு எண்ணோ எதுவும் இல்லை. எந்த டிவிஷன் என்பதும் சொல்லவில்லை. எந்த ஊர் என்றும் சொல்லி இருக்கலை. சரி இது ஏதோ ஏமாற்றுச் செய்தி என்பது புரிந்து பேசாமல் இருந்துவிட்டோம்.

இன்று சற்று முன்னர் அந்த 9353544193 எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. நான் தான் எடுத்தேன். எடுத்துப் பேசியதுமே வட இந்தியக் குரல் என்பது புரிந்தது. எலக்ட்ரிசிடி என்பதும் புரியவே செல்லை நம்மவரிடம் கொடுத்துட்டேன். அவரிடம் பேசிய அந்தப் பேர்வழி மின் கட்டணத்தை உடனே கட்டும்படி சொல்லி இருக்கார். இன்னிக்கோ ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை தினம். அலுவலக நாட்களிலேயே அவ்வளவு சுறுசுறுப்பாகப் பணம் வசூலிக்காத மின் வாரிய ஊழியர்கள் இன்னிக்கு ஏன் கூப்பிடறாங்க? நம்மவரோ அவரிடம் எந்த ஊர், எந்த டிவிஷன் என்றேல்லாம் கேட்க சென்னை, கோடம்பாக்கம் எனச் சொல்லி இருக்கார். எங்களுக்கு அங்கே வீடே கிடையாது நாங்க ஏன் பணம் கட்டணும் என நம்மவர் கேட்க அவர் திரும்பத் திரும்ப வற்புறுத்த உடனே நம்ம ரங்க்ஸ் சரி, கட்டறேன். நீங்க வாடிக்கையாளர் பெயர், வீட்டு விலாசம். பணம் கட்ட வேண்டிய வாடிக்கையாளரின் பதிவு எண் எல்லாம் சொல்லுங்க. இல்லைனா எஸ்.எம்.எஸ். பண்ணுங்க என்றதும் அதெல்லாம் கொடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கார். பின்னர் எந்த நோக்கத்தில் பணம் கட்டச் சொல்றீங்க? உங்களோட சுய விபரத்தோடு மேற்கண்டவற்றையும் அனுப்பினால் அதன் பிறகு பேசலாம் என்று சொல்லி விட்டார்.வேறே வழியே இல்லாமல் அந்த நபர் செல்லைத் துண்டித்தார். பின்னர் நானும் கூகிள் பண்ணி எல்லாம் பார்த்ததில் மேற்படியான எண்களே இல்லை எனச் செய்தி வருது. ஏமாந்தவர் கிடைச்சால் எப்படி வேணா ஏமாத்துவாங்க போல!

இதே போல் அடிக்கடி ஸ்டேட் பாங்க் எனச் சொல்லிக் கொண்டு உங்க கணக்கை ப்ளாக் செய்திருக்கோம். உடனே தொடர்பு கொள்ளுங்க மேல் அதிக விபரத்துக்கு என்றெல்லாம் செய்திகள் வரும். நாம் கண்டுக்கலைன்னா உடனே ஒரு தொலைபேசி அழைப்பு. வங்கியில் இருந்து மானேஜர்  பேசறேன் என யாரானும் கூப்பிடுவாங்க. எந்த வங்கி எனக் கேட்டால் சில சமயம் சொல்லுவாங்க. பெரும்பாலும் உடனே ஃபோனை வைச்சுடுவாங்க. ஒரு தரம் ஸ்டேட் வங்கி என்றதும், எந்த ஊர், எந்த ப்ரான்ச் எனக் கேட்டதும் பதிலே இல்லை. பல சமயங்களில் நானும் அந்த வங்கியில் இருந்து தான் பேசறேன். அங்கே தான் இருக்கேன் எனச் சொல்லிடுவேன். உடனே தொலைபேசி வைக்கப்படும். 

மொத்தத்தில் திருடர்கள்/ புதுப் புது வழி கண்டு பிடிக்கிறாங்க. கவனமாக இருக்க வேண்டியது நாம் தான்.

Wednesday, April 12, 2023

ரொம்ப நாள் கழிச்சு ஒரு பட விமரிசனம்! இல்லை! படக்கதை!

 பிஎஸ் என் எல் ஃபைபர் நெட் போட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. அதிலே பிஎஸ் என் எல் சினிமா+ இலவசமாகக் கொடுத்திருக்காங்க. இதுக்கு முன்னாடி டிஸ்னி ஹாட் ஸ்டார் கொடுத்தும் அதைப் போய்ப் பார்க்கவில்லை. ஜியோவில் ஜியோ சினிமா கொடுத்திருந்தாங்க. ஆனால் அதிலே படங்களே சரியாப் பார்க்க முடியலை.ஹே! சினாமிகா! பார்த்தேன். பிடிக்கலை. அப்புறமாக் காஷ்மீரி ஃபைல்ஸ் வந்திருந்தது. அதைப் பார்த்தேன். மறுபடி ராம் சேதுவோ, ராகெட்ரியோ பார்க்கலாம்னா பைசா கேட்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்துட்டேன். இதுக்குள்ளே தான் கண் அறுவை சிகிச்சை எல்லாம் நடந்து கணினியைத் தொடாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை. அப்புறமா ஒரு நாள் பிஎஸ் என் எல் சினிமா+ ஐத் தூண்டித்துருவுகையில் ஆர்.ஆர்.ஆர். படம் இருந்தது. ஆஸ்கார் படமாச்சேனு அதைப் பார்க்கலாம்னு ஆரம்பிச்சேன். முதல் மூன்று நிகழ்வுகளையும் பார்த்துட்டேன். பின்னர் சில நாட்கள் பார்க்க முடியலை. அப்புறமா மறுபடி மறுபடி முயன்றால் படமே வரலை. என்னனு புரியலை.


ஆனால் மற்றப்படங்கள் வந்தன. அதில் அயோத்தி,அகிலன் இதெல்லாமும் இருந்தது. அயோத்தி புதுசு என்பதோடு அதுக்குப் பைசா கொடுக்கணுமோனு சந்தேகம். அதோடு படம் விமரிசனம் படிச்சதில் எனக்குப் பிடிக்கவும் இல்லை. பிராமணர்களை மட்டும் அழுத்தம் திருத்தமாகக் கெட்டவங்களாக் காட்டிட்டு மற்றவர்களை ரொம்ப நல்லவர்களாகக் காட்டி இருக்காங்க என்று 2,3 விமரிசனங்கள் பார்த்ததும் படம் பார்க்கும் ஆசையே போயிடுச்சு. அகிலன் பார்க்க ஆரம்பித்தால் ரொம்ப போராக இருந்தது. அதான் ஆர்.ஆர்.ஆரும் வரலையேனு நினைச்சப்போ இந்த ஹிந்திப் படம் கண்களில் பட்டது. 

கஞூஸ் மகின்சோச் என்னும் படம். நடிகர்கள் எல்லாருமே புதியவர்கள். ஆனால் கதைச் சுருக்கம் நன்றாக இருக்கவே நாலைந்து நாட்களாகப் பார்த்தேன். ஒரேயடியாக உட்கார முடியறதில்லை. இன்னிக்குப் பார்த்து முடிச்சுட்டேன். ஜம்னா ப்ரசாத் பான்டே என்னும் இளைஞன் சரியான கருமி. முடிஞ்சு போன டூத் பேஸ்டைக் கூடக் குழவியால் நசுக்கி மிச்சம் மீதி இருக்கானு பார்ப்பான். அவனுக்கு அப்பா, அம்மா, மனைவி, ஒரு பிள்ளை இருந்தார்கள். இவன் ரகசியமாகப் பணம் சேர்த்து வந்தது ஒரு நாள் இரவில் வீட்டில் உள்ளவங்களுக்குத் தெரிந்து போக, அப்போத் தான் அவன் சொல்கிறான் தன் பெற்றோரின் சார்தாம் யாத்திரைக்காகப் பணம் சேர்த்து வருவதாக. எதிர்பாரா மகிழ்ச்சி அடைந்த பெற்றோரும் யாத்திரைக்குத் தயார் ஆக ஜம்னா ப்ரசாதும் அவர்களை அனுப்பி வைக்கிறான்.

அவங்க யாத்திரைக்குச் செல்லும்போது சந்தோஷமாகவே செல்கின்றனர். ஆனால் அவங்க போன அந்தச் சமயம் தான் கேதார்நாத்தில் மேகம் வெடித்து வெள்ளம் வந்திருந்தது. முதலில் பிள்ளையோடு தொடர்பில் இருக்கும் பெற்றோர் பின்னர் தொடர்பு அறுந்து விடுகிறது. மனம் உடைந்த ஜம்னா ப்ரசாத் ரிஷிகேஷ், ஹரித்வார் இங்கெல்லாம் போய் ஒவ்வொரு முகாமாகத் தன் பெற்றோரைத் தேடுகிறான்.  கிடைக்கவே இல்லை. பின்னர் சொந்த ஊரான லக்னோவிற்குத் திரும்பும் அவனுக்கு அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அளிப்பதைக் கேட்டு அதற்கு விண்ணப்பிக்கிறான். அவனுக்குப் பதினான்கு லஷம் கிடைக்கும் எனவும் அதில் மேலதிகாரிகளுக்கும் தனக்குமாக நான்கு லக்ஷத்தைப் பிடித்துக் கொண்டு மீதி பத்து லக்ஷம் தருவதாக அந்த அரசு அதிகார் சதுர்வேதி சொல்ல அரை மனதாக ஜம்னா ப்ரசாத் சம்மதிக்கிறான். 

பத்து லக்ஷத்தை வாங்கி வீட்டிற்குத் தாய்க்குப் பிடித்த நீல நிறத்தில் பெயின்டிங், செய்து பறவைகளுக்கான ஓர் இல்லம் தந்தை விருப்பத்தின்படி அமைத்து பெற்றோரின் பெயரில் பூங்காவில் அமர இரண்டு கல்லால் ஆன பெஞ்சுகள் போட்டுப் பிள்ளையைத் தன் பெற்றோர் விருப்பப்படி ஆங்கில முறைக் கல்வியில் சேர்த்து மனைவி ஆசைப்பட்ட ஆப்பிஎ ஐஃபோன் அவளுக்கு வாங்கிக் கொடுத்து என எல்லாவற்றையும் செலவு செய்து விடுகிறான்.

ஒரு நாள் இரவு அவர்கள் அனைவரும் வெளியே போய்த் திரும்புகையில் கழிவறையை யாரோ பயன்படுத்தும் சப்தம் கேட்டுக் கோபமடைந்த ஜம்னா ப்ரசாத் இந்த ஆங்கில முறையிலான கழிவறை கட்டியதில் இருந்து இந்த வளாகத்தில் இருப்பவங்க இங்கே தான் வந்து தொந்திரவு செய்யறாங்க எனக் கூறிக்கொண்டே கழிவறையை நோக்கிப் போகிறான். அதற்குள் கழிவறை/குளியலறையில் திறந்து வெளியே வருவது அவன் தாயும், தந்தையும். முதலில் பேயோ/பிசாசோ எனப் பயப்படும் ஜம்னா பின்னர் தெளிவடைகிறான். அவனுக்கு சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில் அவன் பெற்றோர் உயிருடன் இருப்பதால் வாங்கிய நிவாரணத் தொகையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். என்ன செய்யப் போகிறான்? இதான் கதையே! மீதியை வெள்ளி இல்லாக் கணினித் திரையில் காணுங்கள்.


ட்ட்ட்டங்க்!