
எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

என்ன நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்? நேற்றிரவு, (இன்றைய அதிகாலை 1.30 இல் இருந்து 2.00 மணிக்குள்ளாக மறுபடி செக்யூரிடி எச்சரிக்கை மணி. பின்னர் விடிகாலை 3.30 / 4.00 மணி அளவில் எல்லாம் சரியாகி விட்டது எனச் செய்தி வந்தது. இப்போ இது வரை ஒண்ணும் இல்லை. ஆனாலும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை எனச் செய்திகள், இன்னொரு பக்கம் விட்டேனா பார் என்னும் செய்திகள், மொத்தத்தில் குழப்பமாகவும் கவலையாகவும், பயமாகவும் இருக்கு. பயணம் செய்வதும் குறிப்பா விமானப் பயணம் செய்வதும் இப்போதைய நிலையில் ஆபத்தானதே. என்னவோ பார்ப்போம், என்ன நடக்கும் எனப் புரியவில்லை. என்னோட கவலை எல்லாம் முக்கியமாக இது நீட்டித்துக் கொண்டே இருக்கும் எனவும் செப்டெம்பர் தாண்டும் எனவும் சொல்கிறார்கள். ஜூன் மாதம் மாமாவின் ஆப்தீகம் வருது. அதுக்கு இந்தியா வர முடியுமா என்ற கவலை. பையர் போயிடலாம், அதுக்குள்ளே முடிஞ்சுடும் என்கிறார். பார்க்கலாம். எல்லாம் கடவுள் விட்ட வழி. நேற்றுச் சாயங்காலம் ஆறரை மணி அளவில் பையர் முக்கியமான பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது பல ட்ரோன்கள் வருவதும் போவதுமாக இருந்தன என்றார். கடைகளில் கூட்டம் அதிகமில்லை என்றாலும் ஓரளவு மக்கள் காணப்பட்டனர் என்றும் சொன்னார்.
அடுத்து என்ன என்பது புரியலை. ஏற்கெனவே முன்னர் நான் கத்தார், தோஹா வந்த ஓரிரு மாதங்களிலேயே எங்க குடியிருப்புக்கு அருகேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. . இப்போவோ வேறே மாதிரி நிலைமை. நேற்றுக் காலை எழுந்ததுமே மொபைலில் புதுசாக ஏதேனும் செய்தி வந்திருக்கானு பார்த்தப்போத் தான் யுத்தம் ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் காலையிலிருந்து அடுத்தடுத்து அவசர எச்சரிக்கைச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. நேற்று சனிக்கிழமை வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் எல்லோருமே வீட்டில் தான். என்றாலும் கவலையும் பயமும் உலுக்கத் தான் செய்தது. இதற்கு முன்னால் இந்தியாவில் ஜாம்நகரில் கணவர் வேலை மாற்றத்தில் சென்றப்போ நாங்களும் அங்கே இருந்தோம். சில/பல கலவரங்கள், ஏர்பேஸ் தாக்குதல் என அப்போவும் கொஞ்சம் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. நேற்று அடுத்தடுத்து நடந்த ஏவுகணைத் தாக்குதல் இரவு பத்துமணி வரை நீடித்தது. பின்னர் அமைதி. மௌனம் . காலை எழுந்து பார்த்தால் நிலைமை கொஞ்சம் மாறி இருப்பதாகச் செய்தி. என்றாலும் இன்னமும் கவலையோ பயமோ எச்சரிக்கை நிலைமையோ மாறவில்லை எனத் தோன்றுகிறது. இறைவனைப் பிரார்த்திப்பதை விட வேறே வழி இல்லை. அனைவரும் பயம் இன்றி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.
ஒரு நாள் வழக்கம்போல மற்போர் ஆரம்ப மாயிற்று. தஇனங்தகோறும் பெற்று வந்த வெற்றி யினால் பெருமித மடைகச்த மல்வீரர் அன்று மிகவும் உக்ஸாகத்தோடு இருக்கார். வந்திருக்க கூட்டக் தையும் ௮௫௧ வடநாட்டு மல்வீரரது வெற்றியுத்ஸா குத்தையும் கண்டபோது அரசரது உள்ளத்தே சிறிது வருத்த முண்டாயிற்று; £ இவரை ஜயிப்ப தற்கு கமது ஸமஸ்தானத்தில் ஓர் ஆள் இல்லையே? என்ற எண்ணமே அதற்குக் காரணம். அரசருடைய உள்ளக் குறிப்பை யறிம்த மந்திரிகள் அருபிலிரும் து பல வகையாக அவருடைய கவலையைப் போக்கத் கொடங்குனார்கள். J
“மற்றோர் அரசாங்கமாக இருந்தால் இப்படிப் பிற நாட்டு வீரனுக்கு இடங்கொடுக்குமா ? இங்கே மகாராஜா நிஷ்பக்ஷ்பாதியாகையால் வித்தைக்கு மதிப்புக் கொடுத்திருக்றோர்கள். அத்த மல்வீரர் எக்க சாட்டினராக இருக்தால் என்ன ? நாம் அளிக் கும் சம்மானத்தை அவர் மிகவும் உயர்வாகப் போற்றிப் பாதுகாப்பார் ” என்றார் ஒருவர்.
“மகாராஜா! இதற்குள் மனம் சலிக்கவேண் டாம். இன்னும் ஸமஸ்தானத்து வீரர்கள் யாவரும் வரவில்லை. யாரோ இறு பிள்ளைகள் இவ்வளவு காள் அம்த வீரரோடு போக்குக் காட்டி விளையாடி. னர்கள். அவருக்கு உள்ள சக்தி எவ்வளவென்.று தெரிந்து கொண்ட பிறகு காம் போவோமென்று லை பெரிய வீரர்கள் இருக்கிறார்கள்? என்று மற் ரொருவர் சொன்னார்.
இக்க ஸமஸ்தானத்தைப் போல இவ்வளவு சிறப்பாகப் பலவகையான வித்தைகளுக்கும் ஆதரவு அளிப்பது வேறொன்றும் இல்லையென்று ஜனங்கள் பே௫ிக்கொள்ளுகிறார்கள். மற்ற இடங்களில் இந்த மற்போரைக் காணுவது அரிது. ஆதலால் இங்கே வெளியூர்களிலிரும்து பல ஜனங்கள் வந்திருக்கிறார் கள். அவர்கள் எல்லோரும் ம்காராஜாவினுடைய பெருமையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக் கிறார்கள் ” என்று வேறொருவர் பேசினர்.
அரசரோ மல் விளையாடும் இடத்தையே பார்த் துக்கொண்டிருந்தார். திடீரென்று அவர், “அம் தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பெரிய மூட்டை தெரி இறதே; அங்கே சுமைதாங்கி இல்லையே. ஏதாவது வண்டி: நிற்பதாகவும் தெரியவில்லையே. அங்கே அவ் வளவு பெரிய மூட்டை இருக்கக் காரணமென்ன ? ?' என்ற கேட்டார்.
அருகிலிருமக்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். ஒரு பெரிய மூட்டை கூட்டத்துக்கடையே தெரிந்தது. கூட்டம் நெருக்கமாக இருந்தமையால் அர்த மூட் டைக்கு ஆதாரமான பொருள் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியவில்லை. மம்திரிமார் அம்க மூட்டை எங்கே இருக்கற தென்று தெசிம்துவர ஓர் ஆளை அனுப்பினர். சிறிது மேரத்தில் ஒருவன் வம்து செய்தியைத் தெரிவித் கரன்) “ஒரு பிராமணர் கம் தலையில் நெல் மூட்டை யைச் அமம்கபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்றொர்” என்று அவன் கூறினான். “ பிராமணரா | முட்டை மிகவும் பெரிதாக இருக்றெதே; அதை அவர் சமமக்துகொண்டே வேடிக்கை பார்ப்பகேன்?! என்னு அரசர் ஆச்சரியத்தோடு கேட்டார். மறுபடி. யும் சமாசாரம் வர்தது; “அவர் அதைச் சிறிதும் கஷ்டமில்லாமல் சமம்துகொண்டு நிற்றோர். கீழே இறக்கவேண்டிய அவ௫யமில்லையென்று சொல்லு இருர் ” என்னு தெரியவந்தது.
“ அத்தகைய மனிதரை காம் பார்க்கவேண் டும்” என்னு அரசர் உத்தரவிட்டார். அவரை அழைத்து வருவதற்காக ஒருவன் சென்றான்.
அம்தப் பிராமணர் கஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஹயைம்பேட்டைக்கருகில் இருக்கும் மாங்குடியென் னம் ஊரினர். ஸ்மார்த்கப்பிராமணர்களுள் மழகாட்டுப் பிருகசரண வகுப்பைச் சார்ந்தவர். கைலாசைய ரென்பது அவர் பெயர். தஞ்சாவூரில் இருந்த சாஜபக்துக்களாகிய மகாராஷ்டிரர்கள் பக்கத்துக் ரொமயங்களிலுள்ள தங்கள் நிலங்களைக் குத்த கைக்கு விட்டுவிடுவார்கள். அம்தக் குத்தகைக்காரர் கள் வருஷக்தோலும் மெல்லைக் கொணர்ந்து அவர்க ளிடம் கொடுத்துவிடுவார்கள். சிலர் தாமே சுமந்து வத்து போட்டுவிட்டுச் செல்வார்கள். கைலாசையர்
அத்தகைய குத்தகைதாரர்களுள் ஒருவர். அவர் இரண்டு கலம் நெல்லை ஒரு கோணியில் மூட்டையாகக் கட்டித் தம் தலையிற் சுமந்துகொண்டு வந்தவர் ; அம்ச வழியே செல்லுகையில் பெருங்கூட்ட மொன்று இருப்பதைக் கண்டு அங்கே வந்தார். வளை வுக்குள்ளே மல் விளையாட்டு நடப்பது தெரிந்து வேடிக்கை பார்க்கும்பொருட்டு நின்றார்.
மிக்க பலமும் கட்டுமுடைய ஆஜா.னுபாகு வான அவருடைய உடம்பு இரும்பைப்போன் றிரும் தது. நெற்றியில் இருந்த திருமீறும் கழுத்திலிருந்த : ருத்திராட்சமும் அவருடைய இவபக்தியைப் புலப்
படுத்தின. அவரும் அவருடைய வகுப்பினரும் இறந்த இவபக்தர்கள் ; மூன்று காலத்தும் ஏகலிங் கார்ச்சனை செய்பவர்கள். கைலாசையருடைய
வன்மைபொருந்திய உடலும் சிவசின்னங்களின் தோற்றமும் பார்ப்பவர்களுக்குப் பீமசேனனது ஞாபகத்தை உண்டாக்கின. திவபக்தியும் தேகபல மும் பொரும் தயவர்களிற் சிறந்தவனல்லவா அவன் 2
கைலாசையர் தம் தலையிலிரும்த சுமையை ஒரு பொருளாக மதிக்கவே இல்லை. ஆதலால் அதை இறக்கிவைக்காமல் நின்றபடியே மற்போர் விளை யாட்டைப் பார்த்துக்கொண்டிருக்தார். அவர் தோளில் .ஒரு பை தொங்கியது. அதில் ஐந்தாறு கவுளி வெற்றிலையும் கொட்டைப் பாக்கும் ஒரு பெரிய பாக்கு வெட்டியும் தேங்காயளவுள்ள சுண்ணாம்புக் கரண்டகமும் வைத்திருந்தார். அம்த மல் விளையாட்டைப் பார்த்துக்கொண்டு மின் றபடியே அவர் காம்பும் தரிக்கத் தொடங்கினார்
நினைவு மஞ்சரி முதல் பாகத்திலிருந்து சில பகுதிகள்! இணைய இணைப்புச் சரியாக இல்லாத காரணத்தினால் முழுவதும் பகிரமுடியவில்லை. :(
மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் சில வருடங்கள் முன்னர் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.
உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.
பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார். சனிக்கிழமைகளில் பெரியப்பா வீட்டில் ஏதாவது ஒரு சனிக்கிழமை பஜனை கோஷ்டியை அழைத்துச் சூடான பால், காலை ஆகாரம் முதலியன கொடுத்து கௌரவிப்பார்கள். அதில் எல்லாம் கலந்து கொண்டு பள்ளிக்கும் போயிருக்கேன்.
மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.
எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம். நம்ம ரங்க்ஸுக்கு இந்த கோஷ்டி என்றால் என்னனே தெரியாது. அவங்க பெற்றோருக்கும் தெரிஞ்சிருக்கலை. பின்னர் தான் தெரிந்து கொண்டார்கள். கோஷ்டி பார்க்க ரங்க்ஸுக்கு ஆசை இருக்கவே இங்கே ஶ்ரீரங்கம் வந்த பின்னர் உள் ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும் கோஷ்டியில் 2,3 முறை கலந்து கொண்டிருக்கோம்.
சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதிலும் அந்தத் தயிர் சாதம்! அதன் சுவையே தனி. வடக்குக் கிருஷ்ணன் கோயிலும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! ஆனால் அப்போவே அதில் தூண்களின் சிற்ப விசித்திரங்களைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும். கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். அப்பாவெல்லாம் காலை நான்கரை மணிக்குக் கிளம்பினா எல்லாக் கோயில்களுக்கும் போயிட்டு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வருவார். என்ன ஒண்ணு பிடிக்காதுன்னா எல்லாக் கோயில்ப் பிரசாதங்களையும் ஒண்ணாய்ப் போட்டுக் கொண்டு வருவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த அந்தக் கோயில் பிரசாதத்தின் தனிச் சுவையே தெரியாமல் போயிடும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((
