எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 01, 2026

தொழிலாளர் தினம்!

இன்னிக்குத் தொழிலாளர்கள் தினம் எனக் குறிப்பிட்ட கட்சியினர் கொண்டாடுகின்றனர். ஆனால் தொழிலாளர்கல் சுகமாகவும் சௌகரியமாகவும் வாழ அவர்கள் ஏதேனும் உதவி இருக்காங்களா என்றால் இல்லைனே சொல்லணும். அவர்களோட முக்கிய எதிரிகள் தொழிலதிபர்கள் தான். இத்தனைக்கும் தொழிலதிபர்கள் தொழிலாளர்களுக்கு வேண்டிய சம்பளம், போனஸ், குழந்தைகள் படிப்பில் உதவி, மருத்துவ உதவி, தினசரி உணவு கொடுத்தல் எனப் பல உதவிகள் செய்தாலும் இவர்கள் திருப்தி அடைவதில்லை.

தொழிலாளர்களுக்காக அந்தக் குறிப்பிட்ட கட்சி என்ன செய்தது? அவங்களை வேலை இழந்து திண்டாட விட்டதைத் தவிர்த்து? கல்கத்தாவிலும் சென்னை, அம்பத்தூரிலும் இருந்த வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த டன்லப் தொழிற்சாலை மூடப்பட்டது இவங்களாலே தான். தொழிலாளர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவிய ஒரு பெரிய தொழிற்சாலை முழுக்க முழுக்க மூடப்பட்டுப் பல தொழிலாளர்கள் தெருவில் விடப்பட்டனர். தொழிலாளர் தினம் என்றால் தொழிலாளர்கள் மும்முரமாகவும் ஆர்வமாகவும் தொழிலில் ஈடுபட்டுப் பெருக்கத் தானே வேண்டும்? அதை விடுத்துத் தொழிலதிபர்களை எதிர்ப்பதால் கிடைப்பது என்ன?  அம்பானியையும், அதானியையும் மட்டும் கார்ப்பரேட் தொழிலதிபர்கள் என்போர் நம் நாட்டின் தொலைக்காட்சி சானல்கள் நடத்துபவர்களை யாரென நினைக்கிறார்கள்? அதுவும் ஒரு கார்ப்பரேட் தொழில் தானே? மேலும் இந்தத் தொழிலதிபர்களால் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் எளிய மக்கள் இவை இல்லை எனில் என்ன செய்வார்கள்? நாம் எல்லாப் பக்கமிருந்தும் யோசிக்க வேண்டாமோ? கீழே காபி, பேஸ்ட் பண்ணி இருப்பது முகநூலில் கோடீஸ்வரன் சம்பத் என்பவருடைய பதிவு. இதைப் படிக்கையிலேயே மனம் கொதித்தது. இதுவரை எங்க குடும்பத்தில் நான் அடைந்த அவமானங்களையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த நான் இதைப் படித்ததும் என் மன நிலையை மாற்றிக் கொண்டேன்.

திரு கோடீஸ்வரன் சம்பத் என்பவர் முகநூலில் எழுதிய பதிவின் காப்பி, பேஸ்ட் இங்கே:- அவர் அனுமதி பெற முடியலை. ஏனெனில் மறுபடியும் இந்தப் பதிவைத் தேடினால் எனக்கு அது வரலை. :(  அனுமதிக்காகக் காத்திருந்ததால் தாமதம்.

1977-78களில் ஒரு நாள்: 

வழக்கம்போல பிர்லா நிறுவன தலைவர் திரு.ஆதித்ய பிர்லா, காலை கல்கத்தாவின் ரைட்டர் பில்டிங் (முதல்வர் அலுவலகம்) சாலையில் உள்ள இண்டியா எக்ஸ்சேஞ் கட்டிடத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்துக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்...

வழியெங்கும் கொண்டாட்டம், கம்யுனிசம் மாநில தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி முதல்முறையாக பதவி ஏற்க இருந்த நேரம். முதல்வர் அலுவலகம் அருகே பெருமளவு தொண்டர்கள் கூடியிருந்தனர்...

சிறிது நேரத்தில் ஜோதிபாசு அங்கே வர இருந்த சூழல். அந்த நேரம் பிர்லாவின் கார் அந்த சாலையில் நுழைய "முதலாளித்துவம் ஒழிக" என கத்திக் கொண்டே காரை சூழ்ந்தனர்...

அங்கே என்ன நடந்தது என்பதை அறியும் முன் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். 1900 முதல் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவு கல்கத்தாவை ஒட்டி இருந்தது...  

இந்திய GDP-யில் 1/3 கிட்டத்தட்ட 35% கல்கத்தாவின் உழைப்பு. சணல், எஞ்சினியரிங், டெக்ஸ்டைல் என பலதரப்பட்ட தொழில்களில் முன்னோடியாக இருந்த மாநிலம்...

டாட்டா, பிர்லா என ஜாம்பாவான்கள் தங்கள் தொழிற்சாலைகளை அங்கே பெரும் முதலீடு செய்து அமைத்திருந்தனர்...

காரை சூழ்ந்த கம்யுனிச தொண்டர்கள் கண்ணாடிகளை உடைத்தனர். ஆதித்ய பிர்லாவை வெளியே இழுத்தனர். ஆளாளுக்கு அவரை தள்ளுவது, அடிப்பது, ஆடைகளை கிழிப்பது என வெறியுடன் தாக்கினர்... 

அவருடைய சட்டை பேண்ட்டை உருவி எறிந்தனர். அவமானத்தில் கூனிக் குறுகி நிற்க முடியாமல் நின்றவரை பார்த்து நகைத்தனர். அதற்குள் கார் முழுமையாக சிதைக்கப் பட்டுவிட்டது. பிர்லாவின் டிரைவர் கெஞ்சினார். அனைவரின் கால்களில் விழுந்தார்...

பிர்லாவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டார். கூட்டம் வழிவிட்டு கைதட்டி ஆர்ப்பரித்தது. உள்ளாடைகளுடன் மெதுவாக நடந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த தன் அலுவலகத்தை அடைந்தார்...

அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரை கண்டு அதிர்ந்தனர். அவர் அமைதியாக தன் அறையை அடைந்து கதவை சாற்றிக் கொண்டார். இதற்குள் தகவல் தெரிந்த காங்கிரஸ் தலைவர்கள் அங்கே வர, யாரையும் சந்திக்க மறுத்து விட்டார்...

1-2 மணி நேரத்தில் இந்த செய்தி கல்கத்தா முழுவதும் பரவ பத்திரிகையாளர்கள், முதல்வர் அலுவலகம், பிர்லா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்...

ஜோதிபாசுவிடம் பிர்லா தாக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு சிரித்துக் கொண்டே இது வெறும் ஆரம்பம்தான் என்று கூறிவிட்டு நகர்ந்தார்...

அன்று மாலை வரை அலுவலகத்தின் உள்ளேயே இருந்த பிர்லா, வீட்டிலிருந்து வேறு ஆடை, கார் வர, யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்...

அடுத்த நாள் காலை கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு சென்றார். மும்பை பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து ஆறுதல் சொல்ல முயல, இதற்குள் பிரதமர் அலுவலக ஃபோன் வர, ஒரே வரியில் பதிலளித்தார்...

இனி பிர்லா குழுவுக்கும் மே.வங்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. அடுத்த பத்து வருடத்தில் மொத்த பிர்லா தொழிலும் மகராஷ்டிரா, குஜராத் என மாறியது...

1977-2011 கம்யுனிசத்தின் கோர பிடியில் சிக்கிய மே.வங்கம் இன்று பாரத அளவில் 24வது இடம். ஒரு காலத்தில் இந்தியா முழுவதுமிருந்து தொழிலாளர்கள் மே.வங்கம் பிழைக்க சென்றனர்...

ஆனால் கம்யுனிசம் வந்த பிறகு, மே.வங்க தொழிலாளர்கள் பாரதமெங்கும் பிழைக்க சென்றனர். கிட்டத்தட்ட 35 ஆயிரம் தொழில்கள் இந்த காலகட்டத்தில் மாநிலத்தை விட்டு வெளியேறின...

உலகின் மிகச் சிறந்த எளிமையான ஒழுக்கமான முதல்வர் எனப் போற்றப்பட்ட ஜோதிபாசு, மே.வங்கத்தை சீரழித்தார். ஆனால் அவரின் ஒரே வாரிசு சந்தன்பாசு மிகப்பெரிய தொழிலதிபர், பங்களாதேஷ், மே.வங்கத்தில் பல தொழில்களை நடத்துகிறார்...

ஜெய்ஹிந்த்...!

Tuesday, April 28, 2026

தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம். ஏப்ரல் 28/2026

சிந்தாமணியை அறிந்தது எவ்வாறு?



திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம் போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார். உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.


பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.


உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப் பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களைத் தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப் படித்தோரும் இந்தத் தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.

Monday, April 06, 2026

நோ சமையல் டே!

 போன மாசமே பவர் கட் எனச் சொல்லி இங்கே உள்ள குடியிருப்போர்  குழுமத்தில் பகிர்ந்திருந்தனர். ஆனால் மறுநாள் வழக்கம்போலத் தான் இருந்தது. இன்னிக்குக் காலம்பர காலைக் காஃபி முடிச்சுட்டுப் பின்னர் சமையல் பண்ணுவதற்காகக் காய்கறிகளை எடுத்து வைக்க ஆறரை மணிக்குக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தால், மின்சாரம் இல்லை. வீடு முழுக்கக் கவனிச்சுப் பார்த்தோம். மாடி, கீழே எங்கேயும் மின்சாரம் இல்லை. பின்னர் பையர் எலக்ட்ரீஷியனுக்குத் தொலைபேசிக் கேட்டார். ஒருவேளை நம்ம வீட்டில் மட்டும் ஏதேனும் ட்ரிப் ஆகி இருக்குமோனு. அவர் இல்லைனு சொல்லிட்டார். காலனி முழுக்க மின்சாரம் இல்லை. அதுக்குள்ளே மருமகளின் வாட்சப்பில் இந்தப் பகுதியில் இன்று பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் காலை ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை இருக்காதுனு சொல்லி இருக்காங்க.  மற்ற நாடுகளில் எப்படியோ தெரியலை. இங்கே கத்தாரில், தோஹாவில் நாங்க இருக்கும் பகுதியில் மின்சார அடுப்புத் தான். சீக்கிரமாக ஆயிடும். ஆனால் கைகளை மறந்து கூட அடுப்புப் பக்கம் வைச்சுடக் கூடாது. அபார்ட்மென்ட் குடியிருப்புக்களில் எரிவாயு போல நினைக்கிறேன். தக்குடுவைக் கேட்டால் தெரியும். போன மாதம் குடும்பத்தோடு வந்து என்னைப் பார்த்துட்டுப் போனார். பழைய நினைவுகளை மறுபடி புதுப்பித்துக் கொண்டோம். 

தினமும் ஆறரைக்கெல்லாம் குளிச்சுட்டு வந்துடுவேன். இன்னிக்கு அறையைக் கொஞ்சம் சுத்தம் செய்ததால் குளிக்க தாமதம். கடைசியில் குழாயைத் திறந்தால் தண்ணீர் மெலிதாக வந்து கொண்டிருந்தது. சமையலறைக்குழாய், குளியலறைக்குழாய்னு எல்லாத்தையும் திறந்து பார்த்துத் தண்ணீர் வரலை என்பதால் குளிக்க முடியலை.  ஒன்பதரை பத்துக்குள் வந்துடுமோனு காத்திருந்தேன். குளிச்சுட்டு சமைச்சுடலாம்னு. என்னோட அலைபேசியில் இணையம் வரவில்லை. மருமகள் ஹாட் ஸ்பாட் போட்டுத் தரேன்னு சொன்னாள். ஆனாலும் இணையம் பார்க்க முடியாது. சார்ஜ் ரொம்பக் கம்மியாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்குள்ளாகத் தீர்ந்தே போயிடும். ஆகவே போட்டுக்கலை. ஆனாலும் இணையம் இல்லாமல் வாட்சப்போ, மெசேஜ்களோ, அழைப்புக்களோ  வராது. சும்மாக் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன்.

பின்னர் குளியலறைக்குழாயில் மெலிதாக வந்து கொண்டிருந்த குழாய் நீரை  வாளியில் நிரப்பிக் கொண்டு (அம்மாடியோவ், சில்லோ சில்) குளிக்க ஆரம்பித்தேன், சுமார் பதினொன்றரை இருக்கும். அதுக்குள்ளே பையர் தொலைபேசியின் மூலம் நிலைமையைத் தெரிந்து கொண்டு சப்பாத்தி, சப்ஜிக்கு ஆர்டர் பண்ணிட்டார். நான் குளிச்சுட்டு வந்ததும் பனிரண்டு மணிக்கே மின்சாரமும் வந்தாச்சு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வேறே என்ன செய்வது? பனிரண்டே காலுக்குச் சாப்பாடு வந்தது. தந்தூரி ரொட்டி, தால், காலிஃப்ளவர் சப்ஜி, பனீர் சப்ஜி, சாலட், கொஞ்சம் போல் பாஸ்மதி அரிசி. நெய்யில் வறுத்து வேக வைத்துக் கொத்துமல்லி தூவினது. ஆக மொத்தம் இன்றைய தினம் சமையல் இல்லாத நாளாக ஆகி விட்டது.



Thanks to google for the picture. 




Friday, March 27, 2026

ராமஜயம், ஸ்ரீராமஜயம், நம்பின பேருக்கு ஏது பயம்?

 


Posted by Picasa


Posted by Picasaஸ்ரீராமவமி


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநனே

ஸ்ரீராம நவமி இன்னிக்கு. தினமும் ராமரை நினைச்சுண்டாலும் இன்னிக்கு ராமநவமி என்பதால் இரண்டு , மூன்று நாட்களாய் அவர் தான் நினைவில். கல்யாணம் ஆகிப்புக்ககத்தில் அழைத்த முதல் நாளில் முதல் நமஸ்காரம் இவருக்குத் தான் பண்ணினோம். இம்மாதிரியானத் தஞ்சாவூர் ஓவியப்படங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் ஏதோ ஒன்றிரண்டு ஏதேனும் தீபாவளி மலர் மூலமாகப் பார்த்திருப்பேன். அப்போ ரொம்பச் சின்ன வயசு தானே. அதனால் அதிகம் இதெல்லாம் தெரிஞ்சிருக்கலை. அவரைப் பார்த்ததுமே மனதில் ஓர் நம்பிக்கை. இஅவர் நம்மை வழி நடத்துவார்னு நினைச்சுண்டேன். அப்போல்லாம் இந்தப்படம் எங்களிடம் வரும்னு தெரியவும் தெரியாது. முதலில் கருவிலியில் இருந்தே கிளம்புவாங்களானு தெரியாத நேரம். ஆகவே பெரிசாய் எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஆனால் 1982 -- 83 ஆம் வருஷங்களில் கருவிலியில் எல்லாவற்றையும் விற்று மாமனார் செட்டில் செய்து நிரந்தரமாக எங்களுடன் வந்திருக்க முடிவு செய்து கருவிலி வீட்டைக் காலி செய்தப்போ ராமரும் எங்களுடன் கும்பகோணத்தில் இருந்து எங்களுடன் சென்னைக்குப் பயணம் ஆனார். அதன் பின்னர் எங்களுடனேயே இருந்தார். எங்க வீட்டு கிரஹப்ரவேசம் நடந்தப்போ 83 ஆம் ஆண்டில் இவருக்காகவே ஸ்வாமி அலமாரியில் அளவு எடுத்துப் படம் வைப்பதற்காக இடம் ஏற்படுத்திக் கட்டினோம். அப்போவும் இவர் எங்களுடன் இருப்பார்னு நினைக்கலை. ஏனெனில் மாமனாருக்குத் தன் இரண்டாவது பையருக்குத் தான் இதைக் கொடுக்கணும் எனத் தீர்மானமாக ஒரு கருத்து இருந்தது.. நாங்க வேறே ராஜஸ்தான், குஜராத்னு எல்லாம் போயிண்டு இருந்தோம். என்றாலும் வேறே சில தனிப்பட்ட காரணங்களுக்காக மைத்துனரிடம் தான் கொடுக்கணும்னு இருந்தார். 


ஆனால் அவரோ தன்னால் இதைப் பராமரிக்க முடியாதுனு சொல்லிட்டார். அவர் மனைவிக்கும் பெரிய அளவில் இது குறித்த ஆவல் எல்லாம் இல்லை என்பதால் இயல்பாக இது எங்களிடமே இருந்தது. கடைசி மைத்துனர் தனக்கு வேண்டாம் என முன்னரே சொல்லிட்டார். இப்படித் தான் இவர் எங்களுடன் வந்து இருக்க ஆரம்பித்தார். நாங்க 88 ஆம் ஆண்டில் மறுபடியும் ராஜஸ்தான், குஜராத் வந்தப்போ மாமனார் இருந்ததால் படம் வீட்டிலேயே ஸ்வாமி அலமாரியில் இருந்தது. பெரியவங்க காலத்தில் இவரை ஸ்வாமி அலமாரியின் மேல் தட்டிலும் கீழே உள்ள அலமாரியில் பஞ்சாயதன பூஜைக்கான விக்ரஹங்களும் சாளக்ராமமும் வைச்சுப்பூஜைகள் செய்திருக்காங்க. சொத்துப் பிரிவினையின் போது என் மாமனாருக்குப் படமும் அவர் அண்ணாவுக்கு விக்ரஹங்களும்னு கொடுத்திருக்காங்க. மாமனாரின் அண்ணாவுக்கு ஆண் வாரிசு இல்லை. பெண் வீட்டுக்கு விக்ரஹங்களைக் கொடுத்தப்போ பெண்ணின் மாமனார் மறுத்திருக்கார். அதே போல் அவங்களுக்கு ஏதோ பிரச்னை வர இந்த விக்ரஹங்கள் என் பெரிய மாமியாரிடமே இருந்தன. 

அவற்றை அவர் வைத்து பூஜிக்க முடியாமல் ஓர் பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் அவர் முதியோர் இல்லம் சென்றதால் இவற்றை எங்களிடம் கொடுத்துவிட்டார். இப்படியாகத் தானே அவை 2010 ஆம் ஆண்டில் எங்க வீட்டு ஸ்வாமி அலமாரியில் மேலே படமும், கீழே விக்ரஹங்களும் என வைத்து இருந்தோம். பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் வந்தப்போ ராமரும் ரொம்ப குஷியாக ரங்கநாதர் என் குலதெய்வம் எனச் சொல்லிக் கொண்டு எங்களோடு பயணம் செய்து இங்கே வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் வரதுக்கு முன்னால் நாங்க என் நாத்தனாரின் மைத்துனர் வீட்டில் இருந்தோம். அங்கே உள்ள ஸ்வாமி அலமாரியில் இருந்த ராமரைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்.

 . போன வருஷம் மாமா இருந்தார். ஸ்ரீராமநவமிக்குச் சாப்பாடு மட்டும் வெளியே வாங்கிக் கொண்டு பிரசாதங்கள் எல்லாம் வீட்டில் பண்ணினேன். மாமாவையே ராமருக்கு மாலை சாத்தச் சொன்னேன். முடியலை தான். ஆனாலும் நடமாடிக் கொண்டு இருந்ததால் ஆர்வமுடன் செய்தார். பூஜை எல்லாம் பண்ண முடியலை. சும்மாப் பிரசாதங்களை வைச்சு நிவேதனம் பண்ணினோம். கற்பூர ஆரத்தி காட்டினோம். இந்த வருஷம் அந்த நினைவுகளில் ஆழ்ந்திருக்கேன்.

இப்போவும் தோஹா கிளம்பும் முன்னால் மைத்துனரிடம் படத்தையும் விக்ரஹங்களையும் வைச்சுக்கறீங்களானு கேட்டதுக்குத் தன்னால் முடியாது. வீட்டில் ஸ்வாமி அலமாரி ரொம்பச் சின்னது. மேலும் இந்தப் படங்களையும் விக்ரஹங்களையும் வைத்துக் கொண்டு அவற்றுக்கான முறைகளில் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதும் கஷ்டம் எனச் சொல்லிட்டார். தினசரி நிவேதனமே கஷ்டம் என்றா  ர். ஆகவே ராமர் ஸ்ரீரங்கத்தில் தனியாகத் தான் இருக்கார். விக்ரஹங்கள் எல்லாம் உள்ளே பெட்டியில். :(


விக்ரஹங்கள் அனைத்தும் ராமருடனேயே இடம் பெற்றிருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் எடுக்கும் படங்களில் ஒளியின் பிரதிபலிப்பால் படம் சரியாக வந்திருக்காது. நெல்லை கேலி செய்துண்டே இருப்பார்.

Friday, March 06, 2026

நல்லதே நடக்கட்டும்!

 என்ன நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்? நேற்றிரவு, (இன்றைய அதிகாலை 1.30 இல் இருந்து 2.00 மணிக்குள்ளாக மறுபடி செக்யூரிடி எச்சரிக்கை மணி. பின்னர் விடிகாலை 3.30 / 4.00 மணி அளவில் எல்லாம் சரியாகி விட்டது எனச் செய்தி வந்தது. இப்போ இது வரை ஒண்ணும் இல்லை. ஆனாலும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை எனச் செய்திகள், இன்னொரு பக்கம் விட்டேனா பார் என்னும் செய்திகள், மொத்தத்தில் குழப்பமாகவும் கவலையாகவும், பயமாகவும் இருக்கு. பயணம் செய்வதும் குறிப்பா விமானப் பயணம் செய்வதும் இப்போதைய நிலையில் ஆபத்தானதே. என்னவோ பார்ப்போம், என்ன நடக்கும் எனப் புரியவில்லை. என்னோட கவலை எல்லாம் முக்கியமாக இது நீட்டித்துக் கொண்டே இருக்கும் எனவும் செப்டெம்பர் தாண்டும் எனவும் சொல்கிறார்கள். ஜூன் மாதம் மாமாவின் ஆப்தீகம் வருது. அதுக்கு இந்தியா வர முடியுமா என்ற கவலை. பையர் போயிடலாம், அதுக்குள்ளே முடிஞ்சுடும் என்கிறார். பார்க்கலாம். எல்லாம் கடவுள் விட்ட வழி.  நேற்றுச் சாயங்காலம் ஆறரை மணி அளவில் பையர் முக்கியமான பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது பல ட்ரோன்கள் வருவதும் போவதுமாக இருந்தன என்றார். கடைகளில் கூட்டம் அதிகமில்லை என்றாலும்  ஓரளவு மக்கள் காணப்பட்டனர் என்றும் சொன்னார்.

Sunday, March 01, 2026

அமைதி நிலவட்டும்! ஜெய் ஸ்ரீராம்.

 அடுத்து என்ன என்பது புரியலை. ஏற்கெனவே முன்னர்  நான் கத்தார், தோஹா வந்த ஓரிரு மாதங்களிலேயே எங்க குடியிருப்புக்கு அருகேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. . இப்போவோ வேறே மாதிரி நிலைமை. நேற்றுக் காலை எழுந்ததுமே மொபைலில் புதுசாக ஏதேனும் செய்தி வந்திருக்கானு பார்த்தப்போத் தான் யுத்தம் ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் காலையிலிருந்து அடுத்தடுத்து அவசர எச்சரிக்கைச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. நேற்று சனிக்கிழமை வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் எல்லோருமே வீட்டில் தான். என்றாலும் கவலையும் பயமும் உலுக்கத் தான் செய்தது. இதற்கு முன்னால் இந்தியாவில் ஜாம்நகரில் கணவர் வேலை மாற்றத்தில் சென்றப்போ நாங்களும் அங்கே இருந்தோம். சில/பல கலவரங்கள், ஏர்பேஸ் தாக்குதல் என அப்போவும் கொஞ்சம் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. நேற்று அடுத்தடுத்து நடந்த ஏவுகணைத் தாக்குதல் இரவு பத்துமணி வரை நீடித்தது. பின்னர் அமைதி. மௌனம் . காலை எழுந்து பார்த்தால் நிலைமை கொஞ்சம் மாறி இருப்பதாகச் செய்தி. என்றாலும் இன்னமும் கவலையோ பயமோ எச்சரிக்கை நிலைமையோ மாறவில்லை எனத் தோன்றுகிறது. இறைவனைப் பிரார்த்திப்பதை விட வேறே வழி இல்லை. அனைவரும் பயம் இன்றி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.

Thursday, February 19, 2026

தாத்தாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளும் நமஸ்காரங்களும்.

 



 ஒரு நாள்  வழக்கம்போல மற்போர்‌ ஆரம்ப மாயிற்று. தஇனங்தகோறும்‌ பெற்று வந்த வெற்றி யினால்‌ பெருமித மடைகச்த மல்வீரர்‌ அன்று மிகவும்‌ உக்ஸாகத்தோடு இருக்கார்‌. வந்திருக்க கூட்டக்‌ தையும்‌ ௮௫௧ வடநாட்டு மல்வீரரது வெற்றியுத்ஸா குத்தையும்‌ கண்டபோது அரசரது உள்ளத்தே சிறிது வருத்த முண்டாயிற்று; £ இவரை ஜயிப்ப தற்கு கமது ஸமஸ்தானத்தில்‌ ஓர்‌ ஆள்‌ இல்லையே? என்ற எண்ணமே அதற்குக்‌ காரணம்‌. அரசருடைய உள்ளக்‌ குறிப்பை யறிம்த மந்திரிகள்‌ அருபிலிரும்‌ து பல வகையாக அவருடைய கவலையைப்‌ போக்கத்‌ கொடங்குனார்கள்‌. J


“மற்றோர்‌ அரசாங்கமாக இருந்தால்‌ இப்படிப்‌ பிற நாட்டு வீரனுக்கு இடங்கொடுக்குமா ? இங்கே மகாராஜா நிஷ்பக்ஷ்பாதியாகையால்‌ வித்தைக்கு மதிப்புக்‌ கொடுத்திருக்றோர்கள்‌. அத்த மல்வீரர்‌ எக்க சாட்டினராக இருக்தால்‌ என்ன ? நாம்‌ அளிக்‌ கும்‌ சம்மானத்தை அவர்‌ மிகவும்‌ உயர்வாகப்‌ போற்றிப்‌ பாதுகாப்பார்‌ ” என்றார்‌ ஒருவர்‌.


“மகாராஜா! இதற்குள்‌ மனம்‌ சலிக்கவேண்‌ டாம்‌. இன்னும்‌ ஸமஸ்தானத்து வீரர்கள்‌ யாவரும்‌  வரவில்லை. யாரோ இறு பிள்ளைகள்‌ இவ்வளவு காள்‌ அம்த வீரரோடு போக்குக்‌ காட்டி விளையாடி. னர்கள்‌. அவருக்கு உள்ள சக்தி எவ்வளவென்.று தெரிந்து கொண்ட பிறகு காம்‌ போவோமென்று லை பெரிய வீரர்கள்‌ இருக்கிறார்கள்‌? என்று மற்‌ ரொருவர்‌ சொன்னார்‌.


இக்க ஸமஸ்தானத்தைப்‌ போல இவ்வளவு சிறப்பாகப்‌ பலவகையான வித்தைகளுக்கும்‌ ஆதரவு அளிப்பது வேறொன்றும்‌ இல்லையென்று ஜனங்கள்‌ பே௫ிக்கொள்ளுகிறார்கள்‌. மற்ற இடங்களில்‌ இந்த மற்போரைக்‌ காணுவது அரிது. ஆதலால்‌ இங்கே வெளியூர்களிலிரும்‌து பல ஜனங்கள்‌ வந்திருக்கிறார்‌ கள்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ ம்காராஜாவினுடைய பெருமையைப்‌ பற்றித்தான்‌ பேசிக்கொண்டிருக்‌ கிறார்கள்‌ ” என்று வேறொருவர்‌ பேசினர்‌.


அரசரோ மல்‌ விளையாடும்‌ இடத்தையே பார்த்‌ துக்கொண்டிருந்தார்‌. திடீரென்று அவர்‌, “அம்‌ தக்‌ கூட்டத்துக்கு நடுவில்‌ ஒரு பெரிய மூட்டை தெரி இறதே; அங்கே சுமைதாங்கி இல்லையே. ஏதாவது வண்டி: நிற்பதாகவும்‌ தெரியவில்லையே. அங்கே அவ்‌ வளவு பெரிய மூட்டை இருக்கக்‌ காரணமென்ன ? ?' என்ற கேட்டார்‌.


அருகிலிருமக்தவர்கள்‌ எட்டிப்‌ பார்த்தார்கள்‌. ஒரு பெரிய மூட்டை கூட்டத்துக்கடையே தெரிந்தது. கூட்டம்‌ நெருக்கமாக இருந்தமையால்‌ அர்த மூட்‌ டைக்கு ஆதாரமான பொருள்‌ இன்னதென்று தெரிந்துகொள்ள முடியவில்லை.  மம்திரிமார்‌ அம்க மூட்டை எங்கே இருக்கற தென்று தெசிம்துவர ஓர்‌ ஆளை அனுப்பினர்‌. சிறிது மேரத்தில்‌ ஒருவன்‌ வம்து செய்தியைத்‌ தெரிவித்‌ கரன்‌) “ஒரு பிராமணர்‌ கம்‌ தலையில்‌ நெல்‌ மூட்டை யைச்‌ அமம்கபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்றொர்‌” என்று அவன்‌ கூறினான்‌. “ பிராமணரா | முட்டை மிகவும்‌ பெரிதாக இருக்றெதே; அதை அவர்‌ சமமக்துகொண்டே வேடிக்கை பார்ப்பகேன்‌?! என்னு அரசர்‌ ஆச்சரியத்தோடு கேட்டார்‌. மறுபடி. யும்‌ சமாசாரம்‌ வர்தது; “அவர்‌ அதைச்‌ சிறிதும்‌ கஷ்டமில்லாமல்‌ சமம்துகொண்டு நிற்றோர்‌. கீழே இறக்கவேண்டிய அவ௫யமில்லையென்று சொல்லு இருர்‌ ” என்னு தெரியவந்தது.


“ அத்தகைய மனிதரை காம்‌ பார்க்கவேண்‌ டும்‌” என்னு அரசர்‌ உத்தரவிட்டார்‌. அவரை அழைத்து வருவதற்காக ஒருவன்‌ சென்றான்‌.


அம்தப்‌ பிராமணர்‌ கஞ்சாவூர்‌ ஜில்லாவிலுள்ள ஹயைம்பேட்டைக்கருகில்‌ இருக்கும்‌ மாங்குடியென்‌ னம்‌ ஊரினர்‌. ஸ்மார்த்கப்பிராமணர்களுள்‌ மழகாட்டுப்‌ பிருகசரண வகுப்பைச்‌ சார்ந்தவர்‌. கைலாசைய ரென்பது அவர்‌ பெயர்‌. தஞ்சாவூரில்‌ இருந்த சாஜபக்துக்களாகிய மகாராஷ்டிரர்கள்‌ பக்கத்துக்‌ ரொமயங்களிலுள்ள தங்கள்‌ நிலங்களைக்‌ குத்த கைக்கு விட்டுவிடுவார்கள்‌. அம்தக்‌ குத்தகைக்காரர்‌ கள்‌ வருஷக்தோலும்‌ மெல்லைக்‌ கொணர்ந்து அவர்க ளிடம்‌ கொடுத்துவிடுவார்கள்‌. சிலர்‌ தாமே சுமந்து வத்து போட்டுவிட்டுச்‌ செல்வார்கள்‌. கைலாசையர்‌


அத்தகைய குத்தகைதாரர்களுள்‌ ஒருவர்‌.  அவர்‌ இரண்டு கலம்‌ நெல்லை ஒரு கோணியில்‌ மூட்டையாகக்‌ கட்டித்‌ தம்‌ தலையிற்‌ சுமந்துகொண்டு வந்தவர்‌ ; அம்ச வழியே செல்லுகையில்‌ பெருங்கூட்ட மொன்று இருப்பதைக்‌ கண்டு அங்கே வந்தார்‌. வளை வுக்குள்ளே மல்‌ விளையாட்டு நடப்பது தெரிந்து வேடிக்கை பார்க்கும்பொருட்டு நின்றார்‌.


மிக்க பலமும்‌ கட்டுமுடைய ஆஜா.னுபாகு வான அவருடைய உடம்பு இரும்பைப்போன்‌ றிரும்‌ தது. நெற்றியில்‌ இருந்த திருமீறும்‌ கழுத்திலிருந்த : ருத்திராட்சமும்‌ அவருடைய இவபக்தியைப்‌ புலப்‌


படுத்தின. அவரும்‌ அவருடைய வகுப்பினரும்‌ இறந்த இவபக்தர்கள்‌ ; மூன்று காலத்தும்‌ ஏகலிங்‌ கார்ச்சனை செய்பவர்கள்‌. கைலாசையருடைய


வன்மைபொருந்திய உடலும்‌ சிவசின்னங்களின்‌ தோற்றமும்‌ பார்ப்பவர்களுக்குப்‌ பீமசேனனது ஞாபகத்தை உண்டாக்கின. திவபக்தியும்‌ தேகபல மும்‌ பொரும்‌ தயவர்களிற்‌ சிறந்தவனல்லவா அவன்‌ 2


கைலாசையர்‌ தம்‌ தலையிலிரும்த சுமையை ஒரு பொருளாக மதிக்கவே இல்லை. ஆதலால்‌ அதை இறக்கிவைக்காமல்‌ நின்றபடியே மற்போர்‌ விளை யாட்டைப்‌ பார்த்துக்கொண்டிருக்தார்‌. அவர்‌ தோளில்‌ .ஒரு பை தொங்கியது. அதில்‌ ஐந்தாறு கவுளி வெற்றிலையும்‌ கொட்டைப்‌ பாக்கும்‌ ஒரு பெரிய பாக்கு வெட்டியும்‌ தேங்காயளவுள்ள சுண்ணாம்புக்‌ கரண்டகமும்‌ வைத்திருந்தார்‌. அம்த மல்‌ விளையாட்டைப்‌ பார்த்துக்கொண்டு மின்‌ றபடியே அவர்‌ காம்பும்‌ தரிக்கத்‌ தொடங்கினார்‌


நினைவு மஞ்சரி முதல் பாகத்திலிருந்து சில பகுதிகள்! இணைய இணைப்புச் சரியாக இல்லாத காரணத்தினால் முழுவதும் பகிரமுடியவில்லை. :(