நாம தான் வியர்டுனு நினைச்சால், நம்ம கணினிகளும் கூட அப்படித்தான் இருக்கு. டெல் மடிக்கணினியில் அது கீழே விழுந்ததில் இருந்தே பிரச்னைகள் இருந்தாலும் ஒரு மாதிரியா ஓடிட்டு இருந்தது. இப்போ அதுக்கு பாட்டரி மாத்தணும்னு சொன்னதாலே அதையும் மாத்திட்டோம். அதுக்கப்புறமாத் திடீர்னு ஒரு நாள் மவுஸ் வேலை செய்யலை. மவுஸின் பாட்டரியையும் மாற்றினால் அப்படியும் வேலை செய்யலை. மவுஸ் தான் வீணாயிடுச்சோனு நினைச்சால் கணினியில் >>>>>>>>>>>>>>>>>>> இப்படியே தொடர்ந்து வந்து எல்லா இடங்களையும் தானாக நிரப்பிக்கொண்டு ஓட ஆரம்பிச்சுடுத்து. சரினு வேறே மவுஸ் வாங்கி வந்து அதை ஒருவழியாக வேலை செய்யறது எப்படினு கண்டுபிடிச்சுக் கொஞ்ச நாட்கள் ஓட்டினால் அது ஓடியது. போன வாரம் வரைக்கும். மறுபடி மவுஸ் வேலை செய்யவில்லையேனு நினைச்சால் அதே பழைய பிரச்னை. கணினியில் தானாகவே எல்லா இடங்களிலும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> இப்படியே வந்து நிரப்பிக் கொள்கிறது. சரினு கணினியை மூட நினைச்சால் ஷட் டவுன் பண்ணும் ஐகானிலும் ஏதோ ஒரு பக்கம் திறந்து ஷட் டவுன் பண்ணவே முடியாமல் இப்படியே >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> வர என்னென்னவோ செய்து ஒரு வழியாக் கணினியை மூடினேன்.
இன்னொரு கணினி தோஷிபா சுமாராக வேலை செய்தாலும் பதினோரு வருடங்கள் ஆனதாலே என்னமோ அப்பப்போ கொஞ்சம் தகராறு பண்ணிக்கும். இரண்டு மடிக்கணினிகளுமே ஜிமெயில் திறப்பது என்றால் பிடிவாதமாக மறுத்துவிடும். cannot sync. error 105 என்றே வரும். திரும்பத்திரும்பத்திரும்பத் திரும்ப முயற்சி செய்ததும் ஒரு முறை போனால் போகுது இணைந்து தொலைக்கும். இது இரு கணினிகளிலுமே இருக்கு. தினம் தினம் போராட்டம் தான். ஒவ்வொரு முறையும் ஜிமெயில் திறப்பதற்குள்ளாக என்பாடு உன்பாடு என்றாகி விடுகிறது. இந்த அழகில் தான் இதோடு குடித்தனம் பண்ணிண்டு இருக்கேன். என்னத்தைச் சொல்லுவது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தான் என்ன? யாரானும் தொ.நு.நி. இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கப்பா! எப்படியும் இன்னிக்குக் கணினி மருத்துவரைக் கூப்பிடப் போறேன். டெல் மடிக்கணினியை ஒரு வாரமா எடுக்கவே இல்லையே. அதை எப்படியானும் சரி பண்ணணும். என்ன செய்யலாம்?