எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 25, 2025

போனது போனது தானே!

 மாமாவுக்கும் எனக்கும் சுமார் ஏழரை வயது வித்தியாசம். இந்தக்காலத்துப் பெண்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எங்க பெண்ணைக் கூட நாங்க எட்டு வயது வித்தியாசத்தில் தான் கொடுத்திருக்கோம். அது போகட்டும்  பெண் அம்பேரிக்கா போக வேண்டிய தினம் பார்த்து மிசல்(Missile) அட்டாக் இரு பக்கமும். வான்வெளியை மூடிவிட்டார்கள் எனச் செய்திகள். எப்படிப் போகப் போறா என அன்றிரவு முழுக்க பதட்டம். போறாத குறைக்கு தோஹாவில் போட்ட மிசைல் பையர் இருக்கும் இடத்துக்கு அருகே சுமார் 50 கிலோ மீட்டருக்குள்ளாக .போட்டிருக்காங்க. போட்டிருக்காங்க. அவங்களுக்கு வீட்டில் சாப்பிடும்போது சப்தம் பலமாகக் கேட்டிருக்கு.. நல்ல வேளையாகச் சேதம் எதுவும் இல்லை. என்றாலும் கவலை, பதட்டம், செய்வது தெரியாமல் முழிச்சது என முந்தாநாள் இரவு எங்களுக்கெல்லாம் கழிந்தது. இன்று காலை ஆறு மணி அளவில் பெண் ஹூஸ்டன் போய்ச் சேர்ந்து தகவல் கொடுத்ததும் தான் கொஞ்சம் நிம்மதி.

எதுவோ சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். இந்த ஐம்பத்தி ஐந்து வருட இல்வாழ்க்கையில் நாங்கள் பிரிஞ்சிருந்தது என்றால் என்னுடைய இரு பிரசவத்தின் போது மட்டுமே. அதிகம் நான் அவரைத் தனியாச் சமைத்துச் சாப்பிடும்படி விட்டதில்லை. அவரும் அந்த அளவுக்கு என்னை அனுமதித்ததில்லை. கல்யாணங்களுக்குப் போனால் கூட அவருடனே போயிட்டு அவருடனேயே திரும்பிடுவேன். இதுக்காகப் பெண், பிள்ளை படிக்கும் நாட்களில் இருவரும் சேர்ந்து போக முடியாதவற்றுக்கு மாமனார், மாமியார் போவாங்க. அல்லது நான் மட்டும் தனியாகவோ, அவர் மட்டும் தனியாகவோ போவோம். 

எங்களுக்குள் சண்டைனு வந்தால் அது அவர் காய்கறி மார்க்கெட் போயிட்டு வந்தால் தான். கருகப்பிலை மட்டும் இரண்டு மூன்று கட்டு, கொத்துமல்லிக்கட்டு  தினுசு தினுசாகனு வாங்குவார். பாத்திரக்கடைனு போனால் நான் ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்துடுவேன். அவர் தான் ஆசை ஆசையாக எல்லாமும் பார்த்து வாங்குவார். அதிகமாக வாங்கினால் டிஷும் டிஷும் தான். ஆனாலும் கண்டுக்க மாட்டார். அக்கம்பக்கம் எல்லாம் நான் சத்தம் போடுவதைப் பார்த்துட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னாடி அவர் குணம் புரிந்து நான் கடிவாளாம் போடுவதைப் புரிஞ்சுண்டாங்க. இதுக்காக அவர் கை ஓங்கியது என்றோ என்னோட கை ஓங்கியது என்றோ பொருள் இல்லை. நவராத்திரிக்குக் கொடுக்கும் பரிசுப் பொருள் மட்டும் எப்போவுமே என்னோட தேர்வாக இருக்கும்.

இப்போ உடல்நிலை சரியில்லாது போனாதில் இருந்து அவருக்குள் ஒரு ஏக்கம். வீட்டில் தான் தன்னுடைய அதிகாரத்தோடு பழைய மாதிரி இருக்க முடியலை என்னும் ஏக்கம். ஒவ்வொரு பொருளும் நான் வாங்குகையில் முகத்தில் குற்ற உணர்வு இருக்கும். நீ வீட்டையும் பார்த்துண்டு வெளி வேலைகளும் பார்க்க வேண்டி இருக்கே என்பார். நீ படுத்துட்டா நான் என்ன செய்வேன்? உன் உடம்பையும் பார்த்துக்கோ. எனக்கு முன்னாடி போயிட்டியானா நான் தான் கஷ்டப்படுவேன். என்னை யார் கவனிச்சாலும் எனக்குச் சரியா வராது. நீ மட்டும் என்னை விட்டுட்டுப் போயிடாதே என்பார். இதான் அவர் கடைசியாக என்னிடம் சொன்னதும். என்னோட இரண்டு கைகளையும் பிடிச்சு அவர் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, நீ எங்கேயும் போயிடாதே. என்னை ஏமாத்திடாதே! என்றே திங்கட்கிழமை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் தான் பைத்தியம் பனிரண்டு மணிக்கு மேல் தூஙிட்டாரேனு வந்து படுத்துக் கொண்டது தப்பாகி விட்டது. நான் இல்லைனு தெரிஞ்சதும் அந்த ப்யத்திலேயே போயிட்டாரோனு குற்ற உணர்ச்சி என்னைக் கொன்று கொண்டு இருக்கிறது. என்ன செய்ய முடியும்?


இதோடு புலம்பலை நிறுத்திக்கப் பார்க்கிறேன்f. எல்லோருக்கும் அலுப்புத் தட்டிடும் இல்லையா?  _/|_

No comments:

Post a Comment