அனுபவங்கள் எல்லாம் நமக்குனு தேடிட்டு வருது. புதுசு புதுசா. வழக்கமா மத்தியானம் படுத்ததும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அல்லது ஸ்ரீராம் கம்பெனியின் முதலீடுகள், ஸ்டாக் மார்க்கெட் பத்தித் தான் யாரேனும் கூப்பிட்டுப் படுத்துவாங்க. திட்டிட்டுத் தொலைபேசியை வைப்போம். நேற்றுக் காலை என் தங்கை (ஹிஹி)சித்தி பெண்ணு தான். எங்களைப் பார்க்க வந்திருந்ததால். அவளோடு பேசிப் பொழுது போக்கிட்டு படுக்கவே ஒரு மணியாச்சு. யாரு கூப்பிடறாங்களோனு பயந்துட்டே படுத்தேன். ஆனால் இப்போக் கொஞ்ச நாட்களா அந்தத் தொந்திரவு இல்லையேனு சந்தோஷமா இருந்தது. நேற்று மாலை ஆறரை மணி சுமாருக்குக் கேழ்வரகு வெல்ல தோசை வார்த்துட்டு இருந்தேன். மொபைல் அடித்தது,. ரங்க்ஸிடமே வைச்சிருந்ததால் எடுத்துப் பேசினார். அவர் பேச்சிலிருந்து ஏதோ பணத்தை அவருக்கு அனுப்பச் சொல்றார்னு மட்டும் புரிஞ்சது. சாயங்காலம் தான் ஊசி போட வந்த நர்ஸுக்கு ஜிபேயில் பணம் கொடுத்திருந்தேன். அதில் ஏதாவது கூடியோ குறைஞ்சோ போயிடுத்தோ? தோசையை எடுத்துக் கொண்டு அவர் தட்டில் போட்டேன். ஃபோனை என் கையில் கொடுத்து நீயே பேசுனு சொன்னார் ரங்க்ஸ்.
தொலைபேசியில் ஒரு நபர் தன் பெயர் இன்னார் எனச் சொல்லி அவர் என்னோட மொபைல் எண் போலவே இன்னொரு எண்ணிற்குக் கடைசி எண் மட்டும் மாற்றம் ஜிபே அனுப்பியதாகவும் கவனக்குறைவால் ஒரு எண்ணை மாத்திப் போட்டுட்டதால் எங்களுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்து அதை உடனே அவருடைய எண்ணிற்கு அனுப்பச் சொன்னார். நானோ சும்மாவே சந்தேகப் பேர்வழி. இப்போ இன்னமும் ஜந்தேகம். ஏன் அவர் வங்கிக்கு முதலில் ஸ்டாப் பேமென்ட் கொடுக்காமல் நம்மைக் கூப்பிட்டார் என்பது தான். என் மொபைலில் அதுவரை க்ரெடிட் மெசேஜ் எதுவும் வந்திருக்கலை. ஆகவே நான் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டு மறுபடி தோசை வார்க்கப் போனேன்.. அவர் விடாமல் ரங்க்ஸைக் கேட்க சரினு நானும் மெசேஜ் ஏதேனும் அந்தக் கொஞ்ச நேரத்தில் வந்திருக்கானு பார்த்தால் ஒரு குறிப்பிட்ட பெயருள்ள நபரிடமிருந்து பணம் நம்ம ரங்க்ஸோட பெயருக்கு அவர் அக்கவுன்டில் வந்திருந்தது.
இப்போ என்ன செய்யலாம்னு யோசிச்சால் ரங்க்ஸ் லாப்டாபைத் திற்ந்து அக்கவுன்டில் பணம் வந்திருப்பதைப் பார்க்கச் சொல்ல அந்த ஆளும் அதையே வற்புறுத்தவே எனக்கு மண்டையில் குடைச்சல். ஏன் அக்கவுன்டைத் திறந்து பார்த்துப் பணத்தை அவனுக்கு அனுப்ப ஜிபேயைத் திறந்தால் நம்ம கணக்கு விபரங்கள் எல்லாம் அந்த ஆளுக்குத் தெரிய வாய்ப்பிருக்கேனு யோசிச்சுட்டு கணக்கைத் திறந்து பார்க்க வேண்டாம்னு முடிவு பண்ணீட்டு ரங்க்ஸிடமும் அதைச் சொல்லிட்டு வங்கியில் எங்களுக்கு எப்போவும் உதவி செய்யும் நபர் ஏழு மணிக்குத் தான் வீட்டுக்குப் போவேன் என ஏற்கெனவே சொல்லி இருந்தார். அவரை அழைத்தேன், விபரங்களைத் தொலைபேசியில் சொல்ல முடியாது. ஆகவே வீட்டுக்கு வாங்கனு சொல்லி வரச் சொல்லி எல்லாவற்றையும் சொல்ல அவரும் வங்கிக்கணக்கைத் திறந்து பார்க்க வேண்டாம் எனச் சொல்லிட்டு அந்த ஆள் அனுப்பி இருந்த விபரங்களையும் பார்த்துட்டு நீங்க இப்போதைக்குச் சும்மா இருங்க அதான் நல்லது, அப்படி அந்த ஆள் தொடர்பு கொண்டால் பேச வேண்டாம்னு சொன்னார்.
நான் ஏற்கெனவே அந்த ஆளிடம் எங்க வங்கிக்குச் செய்தி கொடுத்திருக்கேன். மானேஜர் வரார்னு சொல்லி இருந்ததாலோ என்னமோ அவர் அப்புறமாக் கூப்பிடவே இல்லை. நானும் அவர் கொடுத்த வாட்சப்பையும் அவரோட எண்ணையும் தேவையற்றது என நீக்கிவிட்டுப் பின்னர் சாப்பிட்டுப் படுத்தோம். இரவு வேறொரு எண்ணில் ஒரு அழைப்பு வர இவராக இருக்கலாம்னு அதை எடுக்காமல் அதையும் நீக்கிட்டு தொலைபேசியை ம்யூட்டில் போட்டுட்டுப் படுத்தேன். இன்னிக்கு வங்கியில் கேட்டதில் வங்கி மூலமாகவே இந்தப் பிரச்னையைத் தீர்க்கப் பார்ப்பதாகச் சொல்லி இருக்காங்க. அந்த ஆளிடமிருந்து பின்னர் அழைப்பு வரலை. ஒருவேளை நிஜமாகக் கூட இருக்கலாம். என்றாலும் அந்த ஆள் அவர் வங்கி மூலமாகவே இதைச் சரி செய்து இருக்கலாம். சாதாரணமாக வங்கிக்குச் செல்பவர்கள் இதைத் தான் செய்வார்கள். என்ன ஒரு நாள் முன்னே பின்னே ஆகலாம். எங்கள் வரை வந்திருக்கவே வேண்டாம். ஏன் இப்படிச் செய்தார்? இந்தக் கேள்விகள் தான் மனதில். இறை அருளால் இத்தோடு இது தீர்ந்துடும்னு நம்பறேன்.
மிகச் சரியாக செயல்பட்டிருக்கிறீர்கள். என்னதான் சைபர் கிரைம் பற்றி படித்தாலும் அவசரத்தில் தப்பு செய்துவிடுவார்கள். நீங்கள் தெளிவு. பாராட்டுகள்.
ReplyDeleteநீங்கள் சந்தேகப்பட்டு நிறுத்தியதுதான் சரி. இதுவும் ஒருவகை ஏமாற்றுவேலை. இந்த வேலையை இவர்கள் புதிதாக ஆரம்பித்த புதிதில் சில கேஸ்கள் கேட்டிருக்கிறேன். இவர் நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.
ReplyDeleteஎன் இளையவன் என் பாஸின் மாமாவுக்கு போன் டாப் அப் செய்கிறதென் என்று ஒரு எண் மாற்றி எவருக்கோ செய்து விட்டான். மறுபடி முயற்சித்து மாமா எண்ணுக்கு சரியாக செய்தபின் தவறாக செய்யப்பட எண்ணைத் தொடர்பு கொண்டு பணம் திருப்பி அனுப்பப் சொல்லலாம் என்று முயற்சித்தான். நான், 'அவன் இந்த ஏமாற்று வேலைகளுக்கு பயந்தே போன் எடுக்க மாட்டான்' என்று சொன்னேன். அவன் எடுக்கவில்லை!
ReplyDeleteஅதுதான் போனைத் திறந்தாலே கசகசவென்று பாஸ்ட் பார்வேர்டில் எச்சரிக்கை மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கின்றனவே...
ஸ்டார் ஹெல்த், மற்றும் சில கம்பெனி ஆட்கள் தொலைபேசினால் எத்தனைமுறை பேசினாலும் எனக்கு வேண்டாம் என்று அமைதியாக சொல்லி வைத்து விடுவேன்.
ReplyDeleteபாவம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்காக கணக்கு காட்ட அங்கு வேலை செய்யும் பரிதாப ஜீவன்கள்.
கீதாக்கா இப்ப ஏமாற்றுப் பேர்வழிகள் நிறைய இருக்காங்க.
ReplyDeleteசரியாகக் கையாண்டிருக்கீங்க, கீதாக்கா.
நாங்கள் தெரியாத நம்பரை எடுப்பதே இல்லை. அப்படி நம்மைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் நமக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். தாங்கள் யாரென்று ஆனால் அதையும் ரொம்ப ஆராய்ந்துவிட்டுத்தான், உங்களைப் போலவே எங்களுக்கும் சந்தேகங்கள் வரும்.
தொழில்நுட்பம் பெருகப் பெருக இப்படியான தொல்லைகள் நிறையவே வருது.
எனக்கும் சமீபகாலமாகத் தெரியாத எண்களில் இருந்து அழைப்பு குறைந்திருக்கிறது. டச் வுட் இது இப்படியே தொடரட்டும்னு
கீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல உஷாராக யோசித்து செயல்பட்டிருக்கிறீர்கள் . பாராட்டுக்கள். ஏமாறுகிறவர்கள் கிடைத்தால், இப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பது இப்போது சகஜமாகி விட்டது. முன்பு மனிதரை நேரடியாக சந்தித்து ஏமாற்றினார்கள். இப்போது தொலைபேசி வாயிலாக. நாங்களும் தெரியாத நம்பர் ஏதும் வந்தால் எடுப்பதில்லை. தங்களின் முன் ஜாக்கிரதையான அனுபவ பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.