எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு
Showing posts with label மொக்கை வகை. Show all posts
Showing posts with label மொக்கை வகை. Show all posts

Monday, June 16, 2014

சாம்பாரா வேண்டாம்ப்பா! ஓடிடறோம்! :)

என்னோட பிறந்த வீட்டில் சாம்பார் என்றால் அரைச்சு விட்டுச் செய்யறது தான். ஆனால் மாமியார் வீட்டிலோ பொடி போட்டுக் கூட சாம்பார் செய்வாங்க என்பதோடு தினம் தினம் சாம்பார் தான். :) நமக்கோ சாம்பார் என்றாலே அலர்ஜி!  ஆனால் அப்போல்லாம் வத்தக்குழம்பு சாப்பிடுவேன்.  இப்போப்புளி போட்ட எந்தச் சமையலும் பிடிக்கிறதில்லை. பொரிச்ச குழம்பு, மோர்க்குழம்பு, கலந்த சாதம் வகையறா என்றால் கொஞ்சம் உள்ளே இறங்குது.  ஆகவே மாத்தி மாத்தி யோசிச்சு யோசிச்சுத் தான் செய்வேன்.  நம்ம ரங்க்ஸுக்கு முன்னாடி எல்லாம் எது சாப்பிட்டாலும் சாம்பார் தான் வேண்டும்.  குடித்தனம் வைச்ச முதல் மாசம் என்னோட அம்மாவும், அவரோட அம்மாவும் இருந்தாங்க.  அப்புறமா அவங்க கிளம்பிட்டாங்க.  நாங்க ரெண்டு பேர்  தான்.

"என்ன சமைக்க"னு கேட்டதுக்கு சாம்பார் வை, ஆனால் எனக்கு ரசமும் வேணும் கட்டாயமா!" னு சொன்னார்.  அப்பாடானு இருந்தது.  ஏன்னா கிராமத்திலே அவரோட அம்மா ரசமே வைக்க மாட்டாங்க.  எல்லோரும் சாம்பார் சாதமே 2, அல்லது 3 முறை சாப்பிட்டுடுவாங்க.  நமக்கு  ஒரு தரமே இறங்காது. அதனால் இவருக்கும் ரசம் பிடிக்காதுனு நினைச்சேன்.  ரசம் வைனதும் அப்பாடானு ஒரு நிம்மதி.  மாமியார் சாம்பார் வைத்தால் பொடி போட்டுவிட்டு உப்பு, குழம்புக்குப் போடும் தான் எல்லாத்தையும் புளி ஜலத்திலே சேர்ப்பாங்க. எங்க வீட்டில் பொடி போட்டு சாம்பார்னு இல்லை என்பதால் அரைச்சு விட்டு வைச்சேன்.  நல்லா இருந்தது என்றாலும் அவருக்குப் பொடி போட்ட சாம்பார் தான் வேணும் போல!  கடவுளே!  அது எப்படி வருமோனு பயந்துட்டே மறுநாள் வைச்சேன். நினைச்சாப்போலே சரியா வரலை.  ஏதோ கூட்டுச் சேர்க்கை சரியில்லைனு புரிஞ்சது.  அதோட இல்லை.  அவங்க எல்லாம் மாவு கரைச்சு ஊத்துவாங்க.  நான் மாவே கரைச்சு விடமாட்டேன்.  அரைச்சு விட்டுப் பருப்பும் போட்டுச் சேர்ந்து கொதிக்கையில் வருவது தான்.  ரொம்ப கெட்டியாவும் இருக்காது.  தண்ணியாவும் வராது.  அது என்னமோ குழம்பு, கூட்டில் எல்லாம் மாவை விட்டால் உண்மையான ருசி போய் மாவு ருசி வராப்போல் எனக்கு ஒரு எண்ணம். :)))

சரினு மறு நாளைக்கு எங்க வீட்டில் வைக்கிறாப்போல் பருப்புக் குழம்பு வைச்சேன்.  இதுக்கு அடியிலே தாளிக்கணும்.   நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், மி.வத்தல், ப.மி.கருகப்பிலை போட்டுக் கொண்டு தானையும் போட்டு வதக்கிட்டுப் புளிக்கரைசலை ஊத்திட்டுப் பொடியையும் போட்டு உப்புச் சேர்த்துக் கொதிக்க விடணும்.  அப்புறமா வெந்த து.பருப்பைக் கொஞ்சமாச் சேர்க்கணும், இது சாம்பாரும் இல்லை, வத்தக்குழம்பும் இல்லை.  பருப்புக் கம்மியாகச் சேர்ப்போம்.  அதனால் பருப்புக் குழம்பு!  ஹிஹிஹி, இதை வைச்சதும் கேட்டாரே ஒரு கேள்வி!  என்ன இது , வத்தக்குழம்பிலே வத்தல் போடறதுக்கு பதிலா முருங்கைக்காயைப் போட்டுப் பருப்பும் போட்டு வைச்சிருக்கே!  உங்க வீட்டிலே இப்படித் தான் வைப்பாங்களா?" னு கேட்டார்.  நான் திரு திரு! பின்னே சாம்பார் பொடி போட்டு வைக்க வரலைனு சொல்லிக்க கௌரவம் இடம் கொடுக்க வேணாமா?

இன்னி வரைக்கும்  சாம்பார்  சரியா வராதுங்கறது வேறே விஷயம். அதனாலேயே என்னமோ ரங்க்ஸ் சாம்பார் ஆசையையே விட்டுட்டார். இப்போல்லாம் தோசைக்கு, இட்லிக்கு, அடைக்கு சாம்பார் கேட்கிறதில்லை. தோசைக்குச் சட்னி, தக்காளித் துவையல்னு எதானாலும் போட்டுக்கிறார். ஒண்ணும் இல்லைனா மிளகாய்ப் பொடியோடு திருப்திப் பட்டுக்க ஆரம்பிச்சுட்டார்.  ஹிஹிஹிஹி!!!  உப்புமாவுக்கெல்லாம் ஊறுகாய் கூடத் தொட்டுக்க ஆரம்பிச்சுட்டார்.   தெனாலிராமன் குதிரையாட்டமாப் பழக்கிட்டோமுல்ல!  ஆனால் நம்ம பொண்ணு இதிலே எக்ஸ்பர்ட் ஆயிட்டா! எல்லாம்  பரம்பரை தான் காரணம். நம்ம பரம்பரை சாம்பார்னாலே ஓடற பரம்பரையாச்சே!  

@ஶ்ரீராம், திருத்தியாச்சு! :))))