எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 10, 2008

அனுபவம் புதுமை -4 அல்லது 5? தெரியலை!

நாங்க ஸ்வாமிமலைக்குப் போய்த் தரிசனம் முடிச்சுட்டுப் பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் போயிட்டுப் பின் மதுரைக்கு நேரே போகலாமா, இல்லை நடுவழியிலேயே தங்கலாமான்னு விவாதிச்சோம், எங்க டிரைவருக்கு அர்த்த ராத்திரியானாலும் மதுரைக்குப் போயிடணும்னு ஒரே ஆசை, ஆனால் எங்க பையனுக்கோ இரவில் போக இஷ்டம் இல்லை, காலையில் போகலாம்னு சொல்லிட்டான், மதுரைக்கு அருகே உள்ள எங்க கிராமத்துக்கு மறுநாள் போகலாம்னு கேட்டப்போ, அங்கே கோவிலைச் சுற்றி வராக நதியின் வெள்ளம் இன்னும் வடியலை, அதனால் இன்னும் 2 நாள் கழிச்சு வாங்கனு சொல்லிட்டாங்க. நாம் போனது டிசம்பர் 25 தேதின்னாலும், இங்கே தான் மாதம் மும்மாரி இல்லை, 4,5 மாரி கூடப் பெய்யுதே! இப்போக் கூடப் பாருங்க, 2 நாளா மழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே! அதுவும், நான் மோர் மிளகாய், சுண்டைக்காய், மிளகு தக்காளி என்னும் மனைத்தக்காளி போன்றவற்றை வற்றல் போடுவதற்கு மோரில் ஊறப் போட்ட அன்னிக்கே மேகம் கருக்குது, மழை வரப் பாக்குது தான். அதை எடுத்து வெயிலில் வைச்சால் உடனேயே மழை கொட்ட ஆரம்பிச்சுடும், எங்க பையன் யு.எஸ்ஸுக்குத் திரும்பும் முன்னர் என்னிடம் கண்டிப்பாய் நீ இப்போ எதுவும் போட்டு வைக்காதே, விமானம் எங்கேயாவது கான்சல் ஆயிடப் போகுது, இல்லைனா மழையிலே போகும்போது நனைஞ்சுட்டே பெட்டி, படுக்கையை எடுத்துட்டுப் போகணும்னு சொல்லி என்னைத் தடுத்துட்டான். ஆக மொத்தம், நாம எங்கே போனாலும் மழை நம்மைத் தொடரும்கிறது என்னமோ உண்மை! அதுக்காக எல்லாம் அஞ்சினால் நாம் வீராங்கனையாக இருக்கிறது எப்படி? :P (எல்லாம் "நமக்கு நாமே" திட்டத்தின் படி வந்த பட்டம்தானுங்க, நல்லா இல்லை?)

தஞ்சாவூரில் என் பெரிய மாமியாரைப் பார்த்துட்டுத் திரும்பும் போது மணி கிட்டத் தட்ட 7-00(இரவு) ஆகி விட்டது. தஞ்சாவூரிலேயே சாப்பிடலாம்னு சொன்னதுக்கு,என் பையனும் ஒத்துக்கலை, ம.பா. சும்மாவே நான் என்ன சொன்னாலும் மறுக்கிறதே அவர் வேலை, இப்போ பையன் வேறே சேர்ந்தாச்சு, ஆகவே அடுத்துப் புதுக்கோட்டையில் தங்கலாம்னு பையனோட எண்ணம். கையிலே தமிழ்நாட்டின் சாலைப் போக்குவரத்தைச் சொல்லும் படம் வச்சுட்டு அவன் தான் டைரக்ட் செய்துட்டு இருக்கான். அப்படி இருந்தும் டிரைவருக்கு மதுரை போகணும்னு ஆசையோ, இல்லை புதுக்கோட்டையில் தங்கும் இடம் எல்லாம் எப்படி இருக்கும்னு தோணிச்சோ தெரியலை, நாங்க சொல்லச் சொல்ல அவர் பாட்டுக்குத் திருச்சி வழியில் வண்டியை வேகமாய் விட்டுட்டு வரார். வேகத்தில் எதிரே வரும் வண்டிகளின் விளக்குகள் கண்ணைக் கூசும் வெளிச்சத்துடன் வரும்போது பயமாவே இருக்கு. உண்மையில் சாலைவிதிகளின்படி அப்படி வெளிச்சம் காட்டும் விளக்குகளைப் போடலாமானு தெரியலை. வல்லம் கல்லூரிக்கு வந்தாச்சு. அப்புறம் தான் டிரைவர் ஒத்துக்கிறார், இது திருச்சி வழின்னு. திரும்பப் போகணும்னு முடிவு எடுத்துட்டார். எனக்கு இவ்வளவு தூரம் வந்தாச்சு, திருச்சியே போகலாமேன்னு ஒரு ஆசை, யார் கேட்கிறாங்க நம்மை? புதுக்கோட்டைக்குத் திரும்பி, திரும்ப ஒரு முறை புதுக்கோட்டை ராஜாவின் சரித்திரத்தைப் பையனுக்குச் சொல்லி, பத்தாதுக்கு ஜெமினி கணேசனுக்கு இந்த ஊர்தான்னும் சொல்லி, ஒருவழியா வந்தாச்சு.

புதுகைத் தென்றல்? அது என்னங்க? இப்படி ஒரு ஊரா இருக்கு உங்க ஊர்? இரவு 9-00 மணிக்கே கடையைக் கட்டிடுவாங்க போலிருக்கே? தங்குவதற்கு நல்ல லாட்ஜ்&சாப்பிட நல்ல ஹோட்டல்னு கேட்டதுக்கு ஒருத்தர் என்ன நினைச்சாரோ தெரியலை, அங்கே இருந்த ஒரு கையேந்தி பவனைக் காட்ட, நாங்களும் அங்கே பக்கத்தில் ஏதோ லாட்ஜ் இருக்காக்கும்னு நினைச்சுப் போக அப்புறம் யார் கண்ணிலோ பட்டது ஹோட்டல் மாரிஸ் பெயர். உடனேயே அங்கே போய் அறை பதிவு செய்யறேன்னு போயிட்டான் பையன். அறை என்னமோ நல்லாத் தான் இருந்தது. ஆனால் வெந்நீர்தான் வராதாம். இத்தனைக்கும் அது ஸ்டார் ஓட்டல்னு சொன்னாங்க. சரி, வெந்நீர்க் கவலையைக் காலம்பர பட்டுக்கலாம்னு சாப்பிட அங்கேயே பக்கத்தில் இருந்த ரெஸ்டாரண்டுக்குப் போனோம். விலை எல்லாம் இப்போ தங்கம் விக்கிற விலைதான் அதிகமாச் சொல்லலை. ஆலு மட்டர் கேட்டதுக்கு, ஒரே ஒரு உருளைக்கிழங்குத் துண்டம் போட்டு, பேருக்குக் கூடப் பட்டாணி இல்லாமல் ஒரு க்ரேவி வந்தது. அவரிடம் ஆலு மட்டர் நல்லா இருக்குமா என்றதுக்கு அவர் முன்பே "க்ரேவி"தானே சார், நல்லாவே இருக்கும்னு சொல்லி இருந்தார். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி விட்டார். சாப்பிட்டோம்னு பேர் பண்ணிவிட்டுப் படுத்தோம். மறு நாள் மதுரையில் நடக்கப் போவதை அறியாமல். படம் எங்கே இருக்குனு தெரியலை, தேடிட்டு இருக்கேன், கிடைச்சதும் போடறேன்.

எப்படியோ ஒரு வழி பிறக்கட்டுமே!


//பணிவு இல்லாதவர் ஆணவத்துடன், தான் கொடுக்கிறோம் என்ற நினைப்புடனே, தனக்கு அடங்கியவருக்கு தருவது இடை நிலை தருமம் ஆகும். ஆங்கிலத்தில் இதை the beggar has no choices
என்றும் சொல்வார்கள். பெறுபவன் கொடுப்பவனுக்குத் தகுதி இருக்கிறதா எனக்கவனித்துப் பின் பெறுவது
அசாத்தியம். ஏதோ கிடைக்கிறதே என்று ஆண்டவனுக்கும் கொடுத்தவனுக்கும் நன்றி சொல்லி விட்டு செல்லுதல் இயற்கை. இந்த வகைதனை இடை நிலை தருமம் எனச் சொல்கிறார் புலவர் பெருமான்.

மூன்றாவது நிலை. பணிவற்றவன், ஆணவ, அகங்காரத்துடன், தான் தான் கொடுக்கிறேன் என்ற இறுமாப்புடன்,
ஊர் எல்லாம் பறை சாற்றிக் கொடுப்பதும், அவற்றைப் பெறுபவர், இவன் என்ன கொடுத்துவிட்டான் என இகழ்ச்சியுடன் எண்ணத்தோடு செயல்படுவதும், மூன்றாவது கடை நிலை தருமமாகும். இந்தக் காட்சி எப்படி
இருக்கின்றது என்றால், தோலால் செய்த இரு பொம்மைகள் நாடக அரங்கிலே போர் புரிவது போலாகும்.//

சூரி சார், படிச்சுட்டேன், மேலே சொன்ன இரண்டிலே நாங்க எதுனு புரியலை, அதனால் இரண்டையுமே எடுத்துக்கிட்டேன், ஓகேயா? :D அப்புறம் நான் முன் சொன்ன பதிவிலே பெருமாளைப் "பிச்சை எடுக்கும் பெருமாள்"னு எழுதி இருப்பது நிறையப் பேரைப் பாதிச்சிருக்கு. முக்கியமாய் டாக்டருக்கும், சூரி சாருக்கும். "பட்டினி கிடக்கும் பெருமாள்"னு எழுதி இருக்கலாமேனு டாக்டருடைய எண்ணம். பட்டினி நாமாய் விரும்பி இருப்பது. ஆனால் இங்கே அப்படி இல்லை. பெருமாள் கிட்டே எல்லாமே இருக்கு, எதுவும் இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு சிலருடைய கவனிப்பு இல்லாமையால் அவர் பட்டினி கிடக்கவேண்டி இருப்பதோடு அல்லாமல், தன் சம்பாத்தியத்தில் உள்ளதையும் அனுபவிக்க முடியாமல் இருக்கிறார். அதனால் தான் அந்த ஆற்றாமையால் தான் இப்படி எழுதினேன். உங்கள் மனம் புண்பட்டதற்கு மன்னிப்புக் கேட்பதோடு அல்லாமல், நமக்குப் பிச்சை போட்ட ஆண்டவனுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா என்றும் தோன்றுகிறது. எப்போவோ அங்கே போய், ஒரு துளி எண்ணெய் கொடுத்து, அன்று மட்டும் அபிஷேகம் செய்துவிட்டு, ஒரு துளிக் கண்ணீர் வடிப்பதில் என்ன பயன் என்றும் சூரி சாரின் கேள்வி. இதற்கு அவருக்கு என்னுடைய பதில், திரும்ப ஒருமுறை பதிவைப் படியுங்கள் என்பதே!

//நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம்.// இந்த வரிகளைப் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். நித்தியப் படி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்து, அதற்குப் பணமும் கொடுத்திருப்பதை வெளியில் சொல்லவேண்டாம் என்றே சொல்லவில்லை. வந்து பூஜை செய்யும் அர்ச்சகருக்கு நாங்கள் கொடுக்கும் வருமானம் பத்தாதபடியால் சரியாக வருவதில்லை. நாங்களும் நடுத்தர வர்க்கம்தான் சார், பெருமாள் இந்த அளவுக்காவது படி அளக்கிறாரே என்ற ஆதங்கத்தில் தான் ஏதாவது செய்யணும்னு எண்ணம். அங்கே போய் இருக்க முடியவில்லை என்பதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சொன்னால் சுயபுராணமாகிவிடும். ஆனால் எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்து வருகிறோம். இதை இப்போது இங்கே போட்டதின் காரணம் கூட R.E.A.C.H.Foundation, சந்திரசேகரன், இணையத்தில் இது பற்றி எழுதுங்கள், நாங்களும் போடுகிறோம் என்று சொன்னதாலேயே. மற்றபடி கண்ணபிரான் சொன்னது எல்லாம் யோசிக்கிறோம். எல்லாவற்றுக்கும் ஊரில் இருக்கும் இருவேறு நபர்களின் தலைமை ஒத்துக் கொள்ளவேண்டும், அவ்வளவே! இப்போ தமிழ்த்தேனீ அவர்கள் இந்த ஊர் எங்கே இருக்கிறது என்ற விபரங்கள் கேட்டிருந்தார். அவருக்கும், மற்றவர்களுக்கும் விவரங்கள் இதோ:
*************************************************************************************
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வரும் வழியில் கோனேரிராஜபுரத்துக்கு முன்னால் புதூருக்கு அருகே, வடமட்டம் என்னும் ஊர் வரூம். வடமட்டத்தில் இருந்து நேரே சென்றால் பரவாக்கரை என்னும் ஊர் வரும். இது மிக மிகப் பழமையான சிவபதி என்று பேராசிரியர் திரு சு.செளந்திரராஜன்,(ஓய்வு)Ph.D.,(MAdras)., C.Chem.,F.R.S.C(London),(Department of Inorganic and Physical Chemistry, Indian Institure of Science, Bangalore), அவர்கள் சொல்கின்றார். காஞ்சி பரமாச்சாரியாரின் அருளினால் திருமூலரின் திருமந்திரத்தை ஆய்வு செய்து அவர் தெரிந்து கொண்ட விஷயங்களைத் தொகுத்துப் புத்தகமாய்ப் போட்டு இருக்கின்றார். அதி இந்த ஊரின் கோயில்களின் பெருமையைப் பற்றியும் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்த ஊரின் கிழக்கே, திருவீழிமிழலை, தெற்கே, கொட்டிட்டை கருவிலி,(தற்சமயம் சற்குணேஸ்வரபுரம் என அழைக்கப் படுகிறது), மேற்கில் திருநாகேச்வரம், வடக்கில் திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுநாயகமாய் உள்ளது பரவாக்கரை என்னும் கிராமம், பண்டைய காலத்தில் இதை வண்தில்லை என்று அழைக்கப் பட்டதாய்ச் சொல்லுகின்றார்.

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாகக் கூந்தலூர் வந்து அங்கிருந்து சற்குணேஸ்வரபுரம் என்னும் கருவிலியில் இருந்தும் முட்டையாறு என்னும் ஆற்றைக் கடந்து பரவாக்கரை வரலாம். அந்தப் பெருமாளைப் பற்றி இப்போது. இவரைப் பற்றியும் திருமூலர் தன் திருமந்திரத்தில் கூறி இருக்கிறாராம். திருமந்திரம் 190-ம் பாடலில்,"வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத்துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகறியாதவர்தாங்க வல்லாருயிர் தாமறியாரே."என்று திரு சு.செளந்திர ராஜன் கூறுகிறார்.(அவருடைய இனிஷியல் "க" என்று நானாகப் போட்டு விட்டேன். இன்று தான் அவர் புத்தகம் பார்த்ததில் சு.செளந்திரராஜன் என்று புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.) இந்த வேங்கடநாதன் கோவில் யார் கட்டினது, எப்போ கட்டினது என்று எல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் என் மாமனாரின் பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். என் மாமனாரின் பாட்டி குடும்பம் இங்கே விஷ்ணு கோவிலும், அந்தப் பாட்டியின் தங்கை குடும்பம் கருவிலியில் சிவன் கோவிலும் பராமரித்து வந்திருக்கிறார்கள். என் மாமனாரின் அண்ணா இருந்த சமயம் கும்பாபிஷேஹம் செய்வித்திருக்கிறார். பெருமாளுக்கு என்று நிலங்கள், இடம், தேர்முட்டி கோவிலில் பூஜை செய்யும் பட்டருக்கு வீடு என்று எல்லாம் இருந்து வந்தது. ஆனால் என் மாமனார் தன்னால் நிர்வகிக்க முடியாது என்பதாலும், அரசாங்கம் எல்லாக் கோவில்களையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த நேரம் தன் அறங்காவலர் பதவியை விட்டு விட்டார். அதற்குப்பின் வந்த யாரும் ஊரில் தங்கிப் பெருமாளுக்குப் பூஜை செய்யவில்லை. இங்கேயே இருந்த பட்டாச்சாரியாரும் வேறு ஊருக்குப் போய்விட வேறு ஊரில் இருந்து வந்தவர் நினைத்த நேரம் வர, பெருமாள் தனக்கு எப்போ குளியல், எப்போ படையல் எதுவும் தெரியாமல் திகைத்துப் போய் விட்டார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆன இவர் மிக அழகான உருவமும் வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் உள்ளமும் கொண்டவர். மாமனார் கருவிலியில் இருந்தவரை அவ்வப்போது நடந்த பூஜையும் இப்போது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. 41/2 அடி உயரத்தில் இருக்கும் பெருமாள் உற்சவ மூர்த்தங்களுடன் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி உண்டு. தற்சமயம் ஆஞ்சனேயர் சன்னதியில் ஆரம்பித்து அரச மரம் வேர் விட்டுப் பரவு சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது கோவில். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் முட்களும், பாம்புகளும், புதர்களும் மண்டிக்கிடக்கிறது. உள்ளே சன்னதியிலோ வவ்வால்களின் குடித்தனம்.

எப்போதாவது நாங்கள் போகும் சமயம் கோவிலைத் திறந்து வைக்கச் சொல்வது உண்டு, நாளாவட்டத்தில் கோவில் திறக்கக்கூட ஆள் இல்லாமல் போய் அந்த ஊரிலேயே போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கிறவர் பரிதாபப்பட்டுக் கோவிலைத் திறந்து வைத்து அபிஷேஹமும், நைவேத்யமும் ஒருமுறையாவது செய்து வந்தார். அவர் தாயின் உடல் நலம் குன்றியதால் அவரும் தற்சமயம் ஊரில் இல்லை. கோவிலின் நிலங்கள் போனவழி தெரியவில்லை. கோவிலின் முன்னே இருந்த தேர்முட்டி மற்றும் அதைச் சார்ந்திருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டது. வேங்கடநாதன் தன் மனைவியருடனும், அத்யந்த சிநேகிதனான அனுமனுடனும் கோவிலில் சிறைப்பட்டு விட்டார். அவரை விடுவிக்கும் வழி தான் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சி பலிக்க வில்லை. எல்லாம் தெரிந்த அந்த இறைவன் இதை அறிய மாட்டானா என்ன? அவனுக்கு அவன் தான் வழி தேடிக்கொள்ள வேண்டும். மூன்று முறை நாங்கள் முயற்சித்தும் புனருத்தாரண வேலை ஆரம்பிக்க முடியவில்லை. பொறுப்புப் பெரிதாக இருப்பதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள் புரியவில்லை. ஒருத்தர் ஒருத்தருக்காத் தனியாப் பதில் சொல்ல முடியலை மன்னிக்கவும், நேரமின்மைதான் காரணம். தவிர இதுக்குப் பதில் சொல்ல ஆரம்பிச்சா ரொம்பவே பெரியதாய் ஒரு பதிவாப் போயிடும், சில விவாதங்களைத் தவிர்க்கவும் பதில் சொல்லவில்லை. பெருமாள் கோயிலின் உள்படம் தான் தேடினேன், கிடைக்கவில்லை, ரொம்பக் கஷ்டப் பட்டுப் படம் தேடி எடுத்து இருக்கேன், இப்போ re-format செய்ததிலே படங்கள் எல்லாம் back-up செய்தது சரியா இல்லைனு நினைக்கிறேன். வந்தவரைக்கும் போட்டிருக்கேன்.




*

Thursday, February 07, 2008

பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((


எங்க ஊரில் மாரியம்மன் கோவில் தவிர, ஒரு சிவன் கோவிலும், ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது. இது தவிர, ஐயனார் கோவில், பிடாரி கோவில் போன்ற காவல் தெய்வங்களும், பொய்யாப் பிள்ளையார் துணையே இல்லாமல் தனியாகவும் இருக்காங்க. இந்த ஐயனார் கோவில் பக்கம் உள்ள வயலில் உழுவதற்குத் தோண்டியபோது சில சிலைகளும், அஸ்திவாரங்கள் போன்ற அமைப்பும் கிடைத்ததாய்ச் சொல்கின்றனர். அந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்ததாயும் திருமூலர் எழுப்பிய முதல் மாடக் கோயில் அது எனவும், அதை லிங்கத்தடி எனவும் சொல்கின்றனர். அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் தனியாய் வரும். இப்போப் பெருமாள் கோயில் பத்தி. பரம்பரை தர்மகர்த்தாக்கள் ஆன எங்க குடும்பத்தார் அதை அரசுக்கு மாற்றி 70களின் கடைசியில் கொடுத்தாச்சு. கோவிலுக்கு என்று எங்கள் குடும்ப நிலத்தில் இருந்து அரைவேலியும் எழுதி வைத்திருக்காங்க. அதைத் தவிரவும், கொஞ்சம் நிலத்தில் சில மரங்கள், ஒரு கருகமரத் தோப்பு போன்றவையும் உண்டு. இதில் மரங்கள் இருந்த நிலத்தில் மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன. விற்கப் பட்டிருக்கிறது. கோவில் நிலத்தில் விவசாயமும் நடைபெற்று வருகிறது. கருகத் தோப்பும் இருக்கிறது. ஆனால் பெருமாள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் யாராவது ஊருக்குப் போனால் தான் அவருக்குக் குளியல், துணி மாற்றம், சாப்பாடு எல்லாமே. வெளிச்சமே அப்போது தான் பார்க்கிறார். நான் திருமணம் ஆகிவந்து இந்தக் கோயிலில் நல்ல முறையில் எல்லாக் கால பூஜையும் நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு விளக்குக் கூடப் போடுவது இல்லை. கோவில் தேர்முட்டி, மற்றும் கோவிலின் வெளிச்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டு இப்போது பட்டாவே போட்டுக் கொடுத்தாச்சு. கோவிலுக்கு நேர் எதிரே சன்னதிக்கு நேரே ஒரு பெரிய மரம் வெட்டப் பட்டுப் பல நாட்களாய்க் கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தச் சொல்லி தற்போதைய டிரஸ்டி கிட்டே சொல்லியும் அவர் இதோ, போய்ச் சொல்லறேன், என்று டாடா இண்டிகாம் ஆட்கள் மாதிரியே சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போப் போனவாரம் போனபோது கூட அப்படியே இருக்கிறது. மாடுகள் கட்டப் பட்டு, ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன கோயிலுக்குப் போகும் வழியில். நிலத்தில் விளைந்து வந்த நெல் கோவிலுக்கு அளக்கப் படவே இல்லை. நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம். அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ வருவாங்க. வேறு ஊரில் இருந்து வந்து இருந்து செய்வதென்றால் நிரந்தரமாய் ஏதேனும் ஒரு வருமானம் வேண்டாமா?

தன்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டுப் பெருமாள் வேண்டுமானால் பட்டினியாய் இருப்பார். அவருக்குப் பரவாயில்லை. ஆனால் வந்து பூஜை செய்யறவங்களுக்குக் குடும்பம், குழந்தைன்னு இருக்குமே? அதுக்கு ஏதாவது கொடுக்கணுமே? கோவில் டிரஸ்டியிடம் கேட்டால் குத்தகைக்காரர் அளக்கவில்லை என்கிறார். குத்தகைக்காரர் கிட்டே கேட்டால் விளையவே இல்லை, சிவன் கோவிலுக்கு என்ன கொடுத்தாங்க? அவங்க கிட்டே கேட்கிறதில்லையே, என் கிட்டே மட்டும் ஏன் கேட்கணும்? என்று சொல்றாங்க. இந்த அழகில் பெருமாளின் இருப்பிடமே இடிந்து விழுந்து விடுமோனு பயமா வேறே இருக்கு. கர்ப்பக் கிரகத்தில் மூலவருக்குக் கீழே வரை வேர் பிடித்து ஒரு அரசமரம் அபாரமாய் வளர்ந்திருக்கு. அங்கங்கே விரிசல்களில் வெளவால்கள் அடைந்துள்ளன. நாங்களும் இந்தக் கோயிலுக்குப் பராமரிப்புச் செய்து கும்பாபிஷேகம் நடத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறோம். நேற்று வந்த தகவல் படி ஊரில் யாருமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. கோவில் நிலத்தை விற்றாவது அதை வைப்பு நிதியில் போட்டு அதில் இருந்து வரும் வட்டியில் கோவிலை நிர்வாகம் செய்யலாமே எனத் தோன்றுகிறது. ஆனால் ஊர் இரண்டு பட்டுக் கிடக்கிறபடியால் எதையும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை, பெருமாளே தனக்கு ஒரு வழியைத் தேடிக்கணும்.

R.E.A.C.H. Foundation மூலம் ஏதானும் வழி பிறக்கும் என்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்றைய பதிவுகள் இரண்டுமே கொஞ்சம் சீரியஸ் பதிவாகி விட்டது. இவங்க மூலமாத் தான் ஏதேனும் செய்ய முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இவங்க விலாசம் reach.foundation.india@gmail.com. இதிலே நம்ம சக பதிவாளர் மரபூர் ஜெ.சந்திரசேகரன் ஒரு உறுப்பினர். அவரை ஞாயிறு அன்று போய்ப் பார்த்தோம். உதவிகள் செய்வதாய்ச் சொன்னாலும் எப்படி இருந்தாலும் ஊர்க்காரங்க சம்மதம் தான் முக்கியம்னு அவரும் சொல்றார். (வழக்கம் போல் சந்திரசேகரும், நான் நினைச்சாப்பலே இல்லை, ஹிஹிஹி) பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனசு வைக்கணும் போல் இருக்கு. மேலே இருப்பது அவர்தான் குடும்ப சமேதராய், பொதுவாய் மூலஸ்தானத்தில் இருக்கும் திருமேனிகளைப் படம் எடுத்துப் போடுவது இல்லை. இவருக்கு முறையான பூஜைகள் நடந்து 25 வருஷமாவது ஆகி இருக்கும். கோவிலின் வெளிப்புறம் படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும் போடுகிறேன்.

நல்லாக் கொண்டாடுங்க! வேணாம்னு சொல்லலை!


இரண்டு நாளா ஒரே தொல்லை மறுபடியும் இணையம் போயிடுச்சு. அவங்களாலேயும் கண்டு பிடிக்க முடியலை, கடைசியில் என்னனு பார்த்தால், செர்வரை இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில்(வாடகை கொடுத்துத் தான்) வச்சிருக்காங்க. அவங்களுக்கு வீட்டில் "ஃப்யூஸ்" போயிடுச்சாம். அதைச் சரி பண்ணறதுக்கு செர்வர் வச்சிருந்த பாக்ஸை எடுத்து, அதிலே அவங்க வீட்டுக் கனெக்ஷன் கொடுத்துக்கிட்டிருந்திருக்காங்க. ஆகவே செர்வர் டவுன், இங்கே கனெக்ஷன் கட். என்னத்தைச் சொல்றது! மக்கள் இப்படி அறிவுஜீவியா இருக்காங்க! மக்களுக்குப் பொதுச் சொத்து என்றால் எவ்வளவு இளக்காரமும், அலட்சியமும் வந்து விடுகிறது? அதே அவங்க சொந்தப் பொருள் என்றால் அப்படி இருக்க மாட்டாங்க இல்லையா?

நேற்றுத் தினசரியில் பார்த்தால் கல்லூரி மாணவர்கள் "பஸ் டே" என்ற பெயரில் பேருந்துகளை நாசம் செய்வதும், பயணிகளுக்குத் தொந்திரவு கொடுப்பதும் தான் தலைப்புச் செய்தி. எத்தனை பேருக்குத் தாமதம் ஏற்பட்டிருக்கும்? எத்தனை பேர் அவசரப் பயணம் மேற்கொண்டிருப்பார்கள்? பேருந்துக்கு நன்றி தெரிவிக்க வேறு வழிகளே இல்லையா என்ன? ஒவ்வொரு வருஷமும் பயணிகள் இருக்கும் பேருந்துகளே மாணவர்களால் ஆக்கிரமிக்கப் படுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் பேருந்துகளின் மேல் ஏறி நின்று ஆடுகிறார்கள். இதுக்காக அவங்களுக்கு எந்தவிதப் பரிசும் கிடைக்கப் போவதில்லை. கஷ்டப் பட்டு உழைத்து ஓடாகிப் பணம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோர், தங்கள் பையனை அந்தப் பேருந்துகளின் உச்சியில் பார்க்கும்போது மனம் வருந்துவது மட்டுமில்லாமல், பையனின் உயிரை நினைத்தும் கவலை அடைவார்கள். இதுக்காகவா படிக்க வைக்கின்றனர்? நன்றி தெரிவிக்க அமைதியான வழிகள் எத்தனையோ இருக்கின்றனவே!

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணுள்ள பேருந்துகளில் பயணிக்கும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து அந்தப் பேருந்தை ஓட்டும் ஓட்டுநருக்கும், நடத்துனருக்கும் தங்களுக்குள் பணம் வசூலித்துப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து கெளரவிக்கலாம். அல்லது நல்ல ஓட்டலில் விருந்து கொடுக்கலாம், அல்லது அவர்களுடைய முக்கியத் தேவை என்ன என்று கேட்டறிந்து அதை நிறைவேற்றித் தரலாம். அல்லது ரத்த தானம் செய்யலாம். பேருந்து செல்லும் வழியில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து, பொது மக்களுக்கு உதவலாம். இப்படி எத்தனையோ ஆக்கபூர்வமான வழிகள் இருக்கின்றன. பொதுச் சொத்து நம் சொத்து, சொந்தச் சொத்தைவிட மேலானது. உங்கள் அப்பா, அம்மா கட்டும் வரியில் இருந்துதான் வாங்கப் படுகிறது. அடுத்து நீங்கள் சம்பாதித்துக் கட்டும் வரிப்பணத்தில் இருந்தும் வாங்கப் படும். இது நினைவு வைத்துக் கொண்டால் போதுமே! மாணவர்கள் யோசிக்க வேண்டும். இந்த மாதிரியான கொண்டாட்டத்தினால் அவர்களுக்கு என்ன நிறைவு கிடைக்கிறது? ஒன்றும் இல்லை. பொதுமக்களும், குறிப்பிட்ட பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் திட்டுவது தான் மிச்சம்.

Tuesday, February 05, 2008

ANUBAVAM PUDHUMAI - 3

என்னோட மறுபாதி இருக்காரே, அவருக்குப் பல சமயம், நான் ஒருத்தி கூட வரேன் அப்படினே நினைப்பு இருக்காது. அவர் பாட்டுக்கு முன்னாலே திரும்பிக் கூடப்பார்க்காம வேகமாப் போவார். நான் ரொம்பவே "அப்பாவி"யாய்ப் பின்னாலே போகணும். அதுவும் இப்போ அவருக்குக் கழுத்தில் பிரச்னை வந்து திரும்ப முடியாமல் போனதுக்குப் பின்னர் ரொம்பவே கஷ்டமாப் போச்சு. இப்படி வேகமாப் போகாதீங்க, நில்லுங்கனு சொன்னால் கேட்டால் தானே? ஹோட்டலில் அறை எடுக்கும்போது கூட இப்படித்தான், அவர் பாட்டுக்கு எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டே இருப்பார், நான் வரேனான்னு கூடப் பார்க்க மாட்டார். இப்படித் தான் போன முறை நான் அறை இரண்டு இருந்ததாலே எதுனு புரியாமல் உட்கார்ந்திருக்கேன், முழுசா, ரிசெப்ஷனிலே, என்னோட ம.பா,. விவரங்கள் எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் லிஃப்ட் ஏறிப் போயாச்சு. நான் என்னடா, இந்த மனுஷனைக் காணோமேன்னு உட்கார்ந்திருக்கேன். மாடிக்குப் போனவருக்கு ரூமுக்குள் போனதும் தான் சூட்கேஸைப் பார்த்ததும், என்னைக் காணலைனு உறைச்சிருக்கு. மறுபடி கீழே இறங்கி வரார் படிகள் வழியா. அதுக்குள்ளே, நான் லிஃப்ட் மூலம் மேலே ஏற, அறை பூட்டி இருக்க, மறுபடியும் நான் கீழே இறங்க, அவர் மேலே வர, கொஞ்ச நேரம் "கண்ணாமூச்சி, ரே ரே, ரே," விளையாடிட்டு அப்புறம் என்னோட ரத்த அழுத்தம் எகிற, அறை வாசலிலேயே சோர்ந்து போய் உட்கார்ந்துட்டேன். அப்புறமா அவர் வந்து,
ரூம் திறந்து, அது தனிக்கதை!

இந்த வாட்டி அப்படி எதுவும் நடக்கவில்லை. அதான், கூடவே பையன் வந்திருந்தானே? ஆகவே குழப்பம் இல்லாமல் அவன் கூட்டிப் போயிட்டான், என்னை முன்னாலேயே! ஒருவேளை, அவன் மனைவியை அவன் மறப்பானோ என்னமோ? ஹி, ஹி, ஹி, என்ன செய்யறது? வம்ச வழி அப்படியே வருமோ என்னமோ? சரி, சரி, சுய புராணம் போதும் இல்லை? அங்கிருந்து மறுநாள் காலை கிளம்பி எங்க ஊர் ஆன "பரவாக்கரை"க்குப் போனோம். சாலையா அது? காரைக்கால் செல்லும் வழி அது இத்தனைக்கும். திவா, உங்க ஊர் எதுனு தெரியலை, ஆனால் சிதம்பரம் வந்து அப்புறமாக் கும்பகோணம் போகணும்னு இல்லை. சிதம்பரம் பாதை தனியாப் பிரியும், சிதம்பரம் போகாமலேயே கும்பகோணம் போகலாம், சேத்தியாத் தோப்பு வழியா. சிதம்பரம் பாதையும் அப்படி ஒண்ணும் நல்லா இருக்காது. அதுவும் பல்லாங்குழி தான். என்ன கும்பகோணம் பாதையில் குழிகள் அதிகமா இருக்கும், அங்கே கொஞ்சம் கம்மியா இருக்கலாம் அவ்வளவுதான்.


ஒரு மாதிரியா ஊர் போய்ச் சேர்ந்து, மாரி அம்மனுக்கு அபிஷேஹம் எல்லாம் முடிச்சுட்டுத் திரும்பினோம். சாயங்காலமாய் சுவாமிமலை போகணும்னு திட்டம். ஆகவே அதுக்குத் தயார் ஆனோம். வண்டியிலேயே வந்திருந்ததால் நினைச்ச நேரம் கிளம்ப முடியும் ஒரு வசதி, ஆனால் சுவாமி மலை போயிட்டுத் தஞ்சாவூர் போக நினைச்சா, இந்த டிரைவருக்கு என்ன கோபம்னு தெரியலையே?


அனுபவம் புதுமை மூன்றாம் பகுதி தலைப்பு ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும். வேறே வழியே இல்லை! :(

Sunday, February 03, 2008

அனுபவம் புதுமை -2


சைகிள் காப்பிலே சாண்ட்ரோ ஓட்டறேன்னு கேஆரெஸ் என்னிக்குச் சொன்னாரோ தெரியலை, அவர் வாயில் சூடா "ஜீரா"வைத் தான் ஊத்தணும், நான் இங்கே சாண்ட்ரோ இல்லை, லிமோவே ஓட்ட வேண்டி இருக்கு. அடுத்து அடுத்துப் பிரச்னைகள் வந்தால், அதுக்கு நடுவில் எழுதறேன்னு ஏதோ பேர் பண்ணறேனே அதே பெரிய விஷயம். இதிலே நேயர் விருப்பம் வேறே நடு, நடுவில். பத்தாக்குறைக்கு வல்லி சிம்ஹனும், துளசியும் அனுபவம் புதுமை, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்கிறாங்க, இந்த திவாவோ, பழைய பதிவைத் தூசு தட்டி எடுத்து, (ஹச், ஹச், ஹச்,) தும்மலுங்க, ரெயிலிலே இருந்து விழுந்தப்புறம் என்ன ஆச்சுனு எழுதவே இல்லையேன்னு கேட்டுட்டு இருக்கார். அதை விடுங்க, திவா, இப்போ லேட்டஸ்ட் என்னன்னு பார்ப்போமா? பழைய பதிவைப் பார்க்க இங்கே சுட்டாதீங்க, வரலைன்னா, நான் பொறுப்பில்லை, கோபி, இப்போ சரியா?

இங்கே பாருங்கள்.

ஏற்கெனவே உடம்பு சரியில்லாமல் இருந்த எனக்கு, இந்த மருந்து மயக்கத்திலே நடக்கிறதே, பறக்கிறாப்போல இருந்தது. ஆகவே, எப்போவும் தங்கற லாட்ஜிலே லிஃப்ட் வசதி இருந்துச்சு, இங்கே இல்லைங்கிறது கூட உறைக்கலை. பறந்தே போனேன், ஏற்கெனவே ரோடெல்லாம் அவ்வளவு நல்லா இருந்தது, வழு, வழுனு அப்படியே சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆ சலவைக்கல் போட்டாப்பல. அதுவும் திண்டிவனத்தில் இருந்து, கும்பகோணம் போகும் வரையும், சேத்தியாத் தோப்புக்கு அப்புறம் அணைக்கரைப் பாலத்தைக் கடந்து போகும் போதும் கைலை யாத்திரையை நினைவு படுத்தும் சாலைகள் மட்டுமில்லாமல், அதை விடத் திக், திக், திக், திக், திக். உண்மையில் நம்ம தமிழ்நாட்டு டிரைவர், கண்டக்டர் எல்லாம் இந்தச் சாலையில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஓட்டிக் கொண்டு சேர்க்கிறாங்களே, அதுக்கே ஒரு "பாரத ரத்னா"வை விடப் பெரிய பரிசா இருந்தால் கொடுக்கலாம்.

அங்கே போய் ரெஸ்ட் எல்லாம் எடுத்துக்க முடியலை, சாமானை வச்சுட்டு மறுநாள் குலதெய்வம் கோயிலுக்குப் போகவேண்டியதற்கு வேண்டிய சாமான்களை வாங்கப் போனோம். என்ன ஒரு ஆச்சரியம்? அங்கே காய், கறிகள் எல்லாம் குறைந்த பட்ச விலை கிலோ 5 ரூ, தானாம். இங்கே கிலோ 20, அல்லது 25 கொடுத்து வாங்கும் வெண்டை, கத்திரி, அவரைக்காய்கள் அங்கே கிலோ 5 ரூ.க்கு வாங்குவார் இல்லாமல் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒருவாரம் ஊர் சுத்தணும்கிறதாலே ஒண்ணும் வாங்க முடியாமல் அவற்றைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுட்டு, வழக்கமாய்ச் சாப்பிடும் பஞ்சாபகேச ஐயர் ஓட்டலில், (அபி அப்பாவும், திராச. சாரும் சொன்ன ஓட்டலை, நாகேஸ்வரன் சன்னதி முழுக்கத் தேடியும் கிடைக்கவே இல்லை, அப்படி ஒரு ஓட்டலே இல்லைனு சொல்லிட்டாங்க! :P) சாப்பிட்டுவிட்டு, மறுநாள் பரவக்கரைக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். சாலை வழக்கம்போல் பல்லாங்குழி விளையாடும் வகையில் அருமையாக இருக்க அரிசிலாற்றங்கரையில் பயணித்தோம். வழக்கமாய் அரிசிலாற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் மன உளைச்சல் இப்போதும் ஏற்பட்டது. அவ்வளவு ஆகாயத் தாமரைகள், பல இடங்களில் சுத்தமே செய்யப் படவில்லை. நடு ஆற்றில் "பார்த்தீனியம்" என்னும் விஷச் செடிகள். ஆற்று மணலெங்கும் வீசி எறியப் பட்ட ப்ளாஸ்டிக் பைகள். (கண்டு பிடிச்சது யாரு? அவங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தரணும்!) :( அன்றலர்ந்த மலரை வாழை நாரில் கட்டுவதோ, அதை வாழை இலையில் சுற்றி வைப்பதோ அரிதாகி விட்டது. ப்ளாஸ்டிக் மோகம் அப்படித் தலை விரித்தாடுகிறது. ஆனால் நான் விடாப்பிடியாக நாரில் கட்டிய பூவும் வாங்கிக் கொண்டு, அதை வாழை இலையில் தான் சுற்றித் தரவேண்டும் என அடம் பிடிப்பேன். எந்தக் காட்டில் இருந்து வந்திருக்கீங்க என்ற பார்வையுடன் தேடிப் பிடித்து எடுத்துத் தருவார்கள்.

Saturday, February 02, 2008

ரொம்பப் பிடிச்ச பதிவு எது?

ரொம்ப நாளா ஒண்ணுமே எழுத முடியலை. எதிர்க்கட்சி ஆளுங்களுக்குச் சந்தோஷமா இருக்கும். இந்த அழகிலே "தேவ்" வேறே சங்கிலித் தொடருக்கு அழைப்பு விடுத்திருக்கார். என்னை நினைப்பு வச்சு அழைச்சிருக்கீங்களேன்னு கேட்டால், சங்கத்தின் முதல் தலைவி நான் அப்படினு ஒரு புதுக்கதை விடறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., சங்கத்தின் "தனிப்பெரும் தலைவி" "நிரந்தரத் தலைவி" "ஒரே தலைவி" "யானைத் தலைவி" சீச்சீ, "தானைத் தலைவி" நான் மட்டும் தான்னு எப்படி மறந்து போச்சுன்னு புரியலை! எல்லாம் இந்த "விவசாயி" செய்த சதிவேலைனு நினைக்கிறேன். அப்போவே அடிச்சுக்கிட்டேன், என்னோட படத்தைப் போடுங்க, போடுங்கனு, இப்போ பாருங்க, நான் யாருனு சொல்லிக்க வேண்டிப் போயிடுச்சு. போகட்டும்.

என்னோட பதிவுகளில் பிடிச்ச பதிவு எதுனு எழுதணுமாம், ஹிஹிஹி, நான் எழுதறதும் ஒரு "பதிவு"னு ஒத்துக்கிட்டதே அதிகமா இல்லை? கொஞ்சம் ஓவராவே இருக்குனு எனக்கே தோணுது! அது சரி, தேவ், என்னை வச்சுக் காமெடி, கீமெடி ஏதும் பண்ணலையே? எனக்குப் பிடிச்ச பதிவுகள் வரிசையிலே எதை எழுதறது? நம்ம அதியமான்ராஜஸ்தான் சிதோட்கட் பத்தியும், குஜராத் பத்தியும் எழுதின பதிவுகள் பிடிக்கும். அப்புறமாய் நம்ம அணுக்கத் தொண்டராய் இருந்து (பொன்னையன் மாதிரி? :P) தற்போது ஒதுங்கி இருக்கும், கார்த்திக், எழுதும் கிராமத்துப்பதிவுகள், வேதா, முயல்எழுதும் பதிவுகள், போல என்னால் எழுத முடியலையேனு இருக்கு.

மற்றபடி மத்தவங்க பதிவுகள் எல்லாம் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அவங்க எல்லாம் எழுதறதுக்குக் கிட்டே கூட என்னால் போக முடியாது. நான் குறிப்பிட்டிருக்கும் இந்த மூன்று பேரும் தங்களோட அனுபவங்களை என்னை மாதிரி எழுதறாங்கனாலும் ரொம்பவே நல்லா இருக்கு. அதுவும் வேதாவும், கார்த்திக்கும் கவிதைகளிலே கூடக் கலக்கறாங்க. இப்படி எல்லாரும் நல்லா எழுதிட்டு இருக்கும்போது நான் பேத்தறதை நல்லா இருக்குனு சொல்ல என்னோட மனசாட்சியே ஒப்ப வேண்டாமா? ஆகவே சாரி தேவ், எனக்குப் பிடிச்ச மாதிரி ஒண்ணுமே இல்லை. ஏதோ எழுதறேன், அவ்வளவு தான். மத்தபடி நானும் மூன்று பேரைக் கூப்பிடணுமாம். இல்லையா? யாரைக் கூப்பிடறது? எல்லாரும் எல்லாரையும் கூப்பிட்டு ஆச்சு, நான் கூப்பிட்டு ஏற்கெனவே சில பேர் ஒண்ணுமே எழுதலை. சிபியைக் கூப்பிட்டால் அவர் வந்து "பிடிச்ச பதிவு" அப்படின்னு கொட்டை எழுத்தில் போட்டுட்டுப் போயிடுவார். ஆள் மாட்டவே மாட்டேங்கறார். இல்லைனா "குமார காவியம்"னு சொல்லி மிரட்டியாவது எழுத வைக்கலாம். இ.கொ. புரியாத மொழியில் அகராதியைப் பார்த்து பயமுறுத்திட்டுப் போயிடுவார். வேதா ஏற்கெனவே நிறைய அர்ரியர்ஸ்! அம்பி? ம்ம்ம்ம்ம்ம்ம்? அம்பி, இப்போ பதிவே எழுதறதில்லை, கணேசனுக்கு வேலை ஜாஸ்திங்கறதாலே! கணேசன், உன்னாலே உதவ முடியுமா உங்க அண்ணனுக்கு? மதுரையம்பதி? புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காராமே? எழுதுவாரா? தெரியலை! திராச சார்? ஒரு முறை மாட்டி விட்டாச்சு. சுமதி? அர்ரியர்ஸ்! ரசிகன், வேணாம், பேத்துவார் ரொம்ப. ஏற்கெனவே அறுவை தாங்கலை! புலி? குகைக்கு வந்துடுச்சா தெரியலை! ராம்? இருக்கிற பிடுங்கல் பத்தாதுன்னு மதுரைக்காக இன்னும் வேறே ஏதோ செய்யப் போறாராம். ஒருவேளை, "ரஞ்சனி"னு சொன்னா ஒத்துக்குவாரோ? ம்ம்ம்ம்ம்ம்? தெரியலையே? :P:P:P:P மணிப்பயல்? இப்போ ஷேர் இருக்கிற நிலைமையிலே எழுதுவாரா? தெரியலை! அபி அப்பா? ம்ஹூம், ஆள் அட்ரஸே தெரியலை! :( கோபிநாத்! வேணாம், ஏற்கெனவே கொடுத்த மொக்கையைச் சரியா எழுதலை. ஆகவே யாருக்குமே இல்லை, வர்ட்டா!!!!