எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 12, 2012

அன்றொரு நாள்/பெப்ரவரி 12/ உயர்ந்த மனிதரால் உயர்ந்த நாடு.

மின் தமிழ் நண்பர்களுக்கு,

வணக்கம். நான் மெம்பிஸ் வரப் போகும் செய்தி தெரிந்ததில் இருந்தே திரு இன்னம்புரார் என்னை இங்குள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று பார்த்து எழுதச் சொல்லி வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத சொந்தக் காரணங்களால் என்னால் எங்கும் செல்ல முடியாமல் போனதோடு நாளை ஹூஸ்டனும் திரும்புகிறேன். ஆகவே என்னால் மார்ட்டின் லூதர் கிங்கைக்கொன்ற இடத்துக்கோ, லிங்கனைக் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கோ செல்ல முடியவில்லை. என்றாலும் இன்றைய பிப்ரவரி 12அன்றொரு நாள் தொடருக்கான விஷயத்துக்கு லிங்கனின் பிறந்த நாள் என்பதால் என்னை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். ரொம்பத் தயங்கினேன். அவரைப் போல என்னால் ஜீவன் ததும்படியான எழுத்துக்களில் எழுத முடியாவிட்டாலும் ஓரளவுக்குத் தொகுத்துள்ளேன். இதைத் தொடர்ந்து அவரின் அனுபந்தமும் வரும். நாளை தான் இங்கே பிப்ரவரி 12 என்றாலும் நாளை முழுதும் பயணத்தில் இருப்பதால் இன்றே போடுகிறேன். இந்தியாவில் பிப்ரவரி 12 வந்திருக்குமே. அதிக நீளமான பதிவுக்கு மன்னிக்கவும்.
**************************************************************************************************************************************************************************


இந்தப் பையன் எப்போப் பார்த்தாலும் படிச்சுட்டே இருக்கான்; இவன் எங்கே உருப்படப்போறான்?” தந்தை கரித்துக் கொட்டினார். ஆனால் தாய்க்கு நம்பிக்கை இருந்தது. “இல்லை; இவன் பெரிய ஆளாக வரப் போகிறான்.” என்று நம்பிக்கையுடன் மகன் தலைமுடியைக் கோதிக் கொடுத்தாள், “மகனே, பள்ளிக்குச் செல்!’ என அனுப்பி வைத்தாள். இத்தனைக்கும் மாற்றாந்தாய் அவள். சொந்தப் பிள்ளை இல்லை. மூத்தாள் பிள்ளை. பள்ளிக்குப் போகையிலேயே பிள்ளைக்குப் பதினொரு வயசு. சில நாட்கள் போவான்; பல நாட்கள் போக முடியாது.

தந்தைக்கு மகன் ஏதேனும் ஒரு பண்ணையில் வேலைக்குப் போனான் எனில் வரும் ஒரு சில சென்ட்களே பிரதானமாக இருந்தது. கஷ்டப்பட்ட குடும்பம். முதலில் கென்டுகியில் இருந்தனர். முதல் மனைவி நான்சி இருந்தாள் அப்போது. பின்னர் இன்டியானா வந்தனர். அங்கே தான் நான்சி இறக்க நேரிட்டது. பின்னர் தந்தையான தாமஸ் லிங்கன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆபே என அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் லிங்கனுக்கு மாற்றாந்தாய் அருமையானவளாக அமைந்தாள். இருந்தும் தந்தை மாதா மாதம் கிடைக்கப் போகும் எட்டு டாலருக்காக ஆயிரம் மைல் தள்ளி இருக்கும் நியூ ஆர்லியன்ஸுக்கு மகனை வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கேதான் முதல் மாற்றம் லிங்கனின் மனதில் ஏற்பட்டது. அடிமைகள் அங்கே சந்தையில் விற்கப்படுவதைக்கண்டு மனம் வருந்தினார் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணினார். பின்னர் நியூ ஆர்லியன்ஸ் திரும்பி வந்த ஆபேக்கு 21 வயசும் ஆகிவிடத் தன்னந்தனியாகத் தன் சுய சம்பாத்தியத்தில் வாழத் தொடங்கினார்.

பள்ளிப்படிப்பே இல்லாமல், கிடைத்த புத்தகங்களை எழுத்துக்கூட்டிப் படித்தே தன் அறிவை வளர்த்துக்கொண்ட லிங்கன் இல்லினாய்ஸ் மாகாணத்தில் பல ஊர்களில் பல வேலைகள் செய்து நியூ சலேம் என்னும் ஊருக்கு வந்து அந்த ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுப் பின் ஒரு தேர்ந்த வக்கீலாக ஆனது தனிக்கதை. பார்க்க இங்கே.
http://www.abrahamlincoln.org/?gclid=CNmB6Jillq4CFaFeTAodTl10eA
http://en.wikipedia.org/wiki/Abraham_Lincoln
1847- ஆம் ஆண்டு தன் மாவட்டப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்ற லிங்கனுக்கு வாஷிங்டனிலேயே அடிமைச்சந்தையைக் காணவும் மனம் கொந்தளித்தது. மாநிலங்களின் சட்டத்தை மாற்றியமைக்க முடியாவிட்டாலும், மத்தியில் நிர்வாகம் செய்து கொண்டு அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அதிபர் இந்த அடிமைகளை ஒழிக்க ஏதேனும் கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்க லிங்கனை எவருமே ஆதரிக்கவில்லை. ஐக்கிய அமெரிக்கா அப்போது மெக்சிகோவுடனான சண்டையில் முழு மனதோடு ஈடுபட்டிருந்தது. அதன் பின்னர் ஐந்தாண்டுகளுக்கு அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த லிங்கன் பின்னர் கான்சாஸ்-நெப்ராஸ்கா பிரதேசத்தில் 1854- ஆம் ஆண்டு மக்கள் அடிமைகளை ஆதரித்து ஓட்டளித்தால் அடிமைகளை வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் போடப்பட்டதைக் கண்டு மனம் கொதித்தார்.

1858-ல் செனடர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றாலும் 1860-ஆம் ஆண்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால்!!! பெருமளவுக்கு அடிமைகளை வைத்திருந்த பதினைந்து தென் மாநிலங்களில் முதலில் ஏழும், பின்னர் நான்கும் யூனியனில் இருந்து விலகிக் கொண்டதாக அறிவித்தன. லிங்கனை அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. ஜெஃபர்சன் டேவிஸ் என்பவரை அதிபராக நியமித்தார்கள். வெடித்தது உள்நாட்டுப் போர். பார்க்க:
http://en.wikipedia.org/wiki/American_Civil_War

ஏன் போர் என்பதைக் குறித்த அவர் பேச்சு மிகவும் பிரபலம் ஆனது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
http://en.wikipedia.org/wiki/Gettysburg_Address

http://www.civilwar.org/battlefields/gettysburg.html?gclid=CJ2czLqQlq4CFWZjTAodKBorgQ
http://norvig.com/Gettysburg/


போரில் லிங்கன் ஜெயித்து மறுமுறைக்கான அதிபர் தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இன்றளவும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லிங்கனை மறக்கவே மாட்டார்கள். மொத்த அமெரிக்காவும் லிங்கனின் பிறந்த தினமான பெப்ரவரி 12-ம் தேதியன்று அவரை நினைவு கூர்கின்றனர்.

The Slave singing at Midnight
from Poems on Slavery
by Henry Wadsworth Longfellow
(1807-1882)

Loud he sang the psalm of David!
He, a Negro and enslaved,
Sang of Israel's victory,
Sang of Zion, bright and free.

In that hour, when night is calmest,
Sang he from the Hebrew Psalmist,
In a voice so sweet and clear
That I could not choose but hear,

Songs of triumph, and ascriptions,
Such as reached the swart Egyptians,
When upon the Red Sea coast
Perished Pharaoh and his host.

And the voice of his devotion
Filled my soul with strange emotion;
For its tones by turns were glad,
Sweetly solemn, wildly sad.

Paul and Silas, in their prison,
Sang of Christ, the Lord arisen,
And an earthquake's arm of might
Broke their dungeon-gates at night.

But, alas! what holy angel
Brings the Slave this glad evangel?
And what earthquake's arm of might
Breaks his dungeon-gates at night?

17 comments:

  1. போரில் லிங்கன் ஜெயித்து மறுமுறைக்கான அதிபர் தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இன்றளவும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லிங்கனை மறக்கவே மாட்டார்கள். மொத்த அமெரிக்காவும் லிங்கனின் பிறந்த தினமான பெப்ரவரி 12-ம் தேதியன்று அவரை நினைவு கூர்கின்றனர்.//

    உயர்ந்த மனிதரை மறக்க முடியாது.
    உயர்ந்த மனிதரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆப்ரஹாம் லிங்கன் பற்றி விவரமாக தெரிந்துகொள்ள முடிந்தது . நன்றி. ஏன் நம்ம பக்கம் வல்லே. ரொம்ப நாள் ஆச்சே

    ReplyDelete
  3. ஆப்ரஹாம் லிங்கனைப் பற்றி மிக அருமையான குறிப்பு.

    இன்னும் விவரமாக நீங்க ஏழுதியிருந்தாலும் படிச்சு அவரைப் பற்றி தகவல்கள் தெரிந்து கொண்டிருப்போம், மாமி.

    ReplyDelete
  4. மொத்த அமெரிக்காவும் லிங்கனின் பிறந்த தினமான பெப்ரவரி 12-ம் தேதியன்று அவரை நினைவு கூர்கின்றனர்


    அருமையான உயர்வான பகிர்வுகல்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. ஆபிரகாம் லிங்கனை நினைவு கூர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. லிங்கன் அவர்களை பற்றி கூடுதல் தகவல் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி கீதாமா

    ReplyDelete
  7. ஆப்ரகாம் லிங்கனை பற்றிய நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. வாங்க லக்ஷ்மி, கூகிள்+ல் படிக்கும் பதிவுகளுக்கு மட்டுமே உடனடியாப் பின்னூட்டம் போட முடிகிறது. வலைப்பக்கங்களுக்குச் சென்று படிக்க நேரம் இருப்பதில்லை; அதான் வரமுடியலை. :(

    ReplyDelete
  10. வாங்க ராம்வி, மழலைகள்.காம் மின்னிதழில் அமெரிக்கா, அமெரிக்கா என்னும் தலைப்பில் பார்க்கவும். அமெரிக்க வரலாறே கிடைக்கும். நன்றிம்மா. இது ஒரு நண்பரின் வேண்டுகோளின்படி எழுதினேன். சுருக்கமாய்த் தான் எழுதணும்; அதுவே பெரிதாகிவிட்டது. :))))

    ReplyDelete
  11. வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. வாங்க விச்சு, நன்றி.

    ReplyDelete
  13. ஏடிஎம், இதெல்லாம் கூடப் படிப்பீங்க??? :))))

    ReplyDelete
  14. வாங்க ப்ரியா, நன்றிம்மா.

    ReplyDelete
  15. வாங்க கோவை2தில்லி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  16. அள்ளிட்டீங்க! என் மனதை தான். எத்த்னை ஆர்வம், இவ்வளவு விஷயங்களை கோர்வையாக , சுவைபட எப்படித்தான் எழுதுகிறீர்களோ!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete