எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 16, 2014

கடைமுகம்




இன்று துலா மாதக் கடைசி நாள்.  ஆகவே நாளையில் இருந்து ஆண்டாள் இங்கே வரமாட்டாள். இன்னிக்கு அதனால் மீண்டும் ஆண்டாளைப் பார்க்கப் போனேன். ஒரே கூட்டம். இரு பக்கமும் வண்டிகள்.  குளிக்கச் செல்லும் மக்கள் கூட்டம் எனப்படம் எடுக்க முடியுமானு சந்தேகம்.  போலீஸ் வந்து வழியை ஒழுங்கு செய்தது. ஏதோ ஒப்பேத்தி இருக்கேன். 


 

கண்ணாடி வேறே இல்லை.  நாளைக்குத் தான் வரும்.  ஆகவே கைவிரல்களின் உணர்வை வைத்துத் தட்டச்சி இருக்கேன்.  தப்பு நிறைய இருக்கலாம். நாளை தான் திருத்தணும். :)






கிட்டக்க வந்துட்டாங்க ஆண்டாளம்மா.






போகும் ஆண்டாளை முழுவதும் படம் எடுப்பதற்குள் அருகில் இருந்தவர் கை தட்டி விடப் படம் சரியாக் வரவில்லை. கொஞ்சம் முன்னால் போய் நிற்கலாம் என்றால் அங்கே நிற்க விடவில்லை. :(  இந்த வருடம் அவ்வளவு தான்.  பிழைத்துக் கிடந்தால் பார்த்துக்கலாம். :)


கருத்துச் சொல்லுவோருக்கு பதில் எல்லாம் நாளைக்குத் தான். ஆகவே இன்று எஞ்சாய்!!

14 comments:

  1. ஆண்டாளைக் கிட்டத்தில் பார்த்ததில் சந்தோஷம்.

    ReplyDelete
  2. ஆண்டாள் என்பது யானைதானே.?

    ReplyDelete
  3. கடைமுக பகிர்வு அருமை! நன்றி!

    ReplyDelete
  4. ஆண்டாளைப் பார்த்து விட்டேன் .

    ReplyDelete
  5. ஆண்டாளைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்!.. பதிவில் திருத்தமே தேவையில்லை!...நீண்ட கால அனுபவத்தின் வீச்சினை உணர முடிந்தது!..

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், ஆண்டாளை இன்னும் கிட்டப் போய் எடுத்திருக்கணுமோ? :)

    ReplyDelete
  7. வாங்க ஜிஎம்பி சார், ஶ்ரீரங்கம் கோயில் யானையின் பெயர் ஆண்டாள்.

    ReplyDelete
  8. நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  9. நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  10. நன்றி பார்வதி. கைவிரல்கள் தொடுவதை உணர்ந்தே தட்டச்சினேன் இரண்டு நாட்களாக. எதுக்கு வம்புனு பெரியதாக எல்லாம் தட்டச்சப் போகவில்லை. சும்ம்ம்மா, சின்னச் சின்னப் பத்திகள் மட்டுமே! :)

    ReplyDelete
  11. ஆண்டாளை இந்த முறை இரண்டாவது தடவையாக படம் எடுத்துவிட்டீர்கள். ஒருவருடம் ஸ்ரீரங்கத்தில் வந்து இருக்க வேண்டுமென்று ஆசை. ஆசை மட்டும்தான் படமுடிகிறது.

    ReplyDelete
  12. //கைவிரல்கள் தொடுவதை உணர்ந்தே தட்டச்சினேன் //

    உங்களுக்கு கூட வயசாயிடுச்சா..? :))

    ReplyDelete
  13. வாங்க ரஞ்சனி, உங்க மாமா இன்னமும் இங்கே தானே இருக்கார்? அப்புறம் என்ன? வாங்க, வாங்க. :))

    ReplyDelete
  14. அம்பி, தும்பி, வம்பி, வயசாச்சுனு எங்கே சொல்லி இருக்கேன். உங்களை மாதிரித் தாத்தாக்களுக்குத் தான் இப்படி எல்லாம் தட்டச்சுவதற்கு வராது! மீ குழந்தை ஒன்லி. ஒன் அன்ட் ஒன்லி!

    ReplyDelete