வல்லி சிம்ஹனுக்குச் சந்தேகம். "கைப்புள்ள"யும், "அதியமானும்" ஒருத்தர்தானான்னு. ஏற்கெனவே அதியமான்ங்கிற பேரிலே ஒருத்தர் பொருளாதாரத்தைப் பத்தி எழுதறாராமே! எனக்குத் தெரிஞ்சு $செல்வன் தான் பொருளாதார மேதை! ஹிஹிஹி, செல்வன், இது வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை. நல்ல புகழ்ச்சிதான். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யார் மாட்டிக்கிறாங்களோ அவங்களையும் கொஞ்சம் கவனிக்கணும் இல்லை. இன்னிக்கு நீங்க. அப்புறம் இந்த அதியமானைக் கவனிப்போம்.
முதல்லே எல்லாம் நானும் "கைப்புள்ள"னு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன். எல்லாம் அந்தப் போட்டியில் வந்தது. அப்போத் தான் தெரிஞ்சது, இவர் ஒரு அதியமான்னு. என்ன போட்டியா? எல்லாம் போன வருஷம் என்னோட பிறந்த நாளில் கைப்புள்ள வச்ச போட்டி தான். எனக்கு என்ன வயசுன்னு கண்டுபிடிக்கப் போட்டி. எனக்குத் தான் தெரியுமே என்னோட வயசு! நியாயமாப் பார்த்தால் என் கிட்டே கேட்டுட்டுப் பரிசையும் எனக்குத் தான் கொடுத்திருக்கணும். இவர் பாட்டுக்குப் போட்டி வச்சுப் பரிசை யாருக்கும் கொடுக்காமல் அவரே சாப்பிட்டும் விட்டார். என்ன தான் பல்லி மிட்டாய்னாலும் அதைக் கூட "ஏதடா, நம்ம தலைவி ஆச்சே! இவங்களுக்கும் கொடுப்போம்"னு தோணாமல் அவரே சாப்பிட்டார் இல்லை, அப்போது தான் எனக்கு உறைச்சது. ஆஹா! இவ்வளவு பெரிய மனசு உள்ள இவர் போன ஜென்மத்தில் "கடையெழு வள்ளல்"களில் ஒருத்தர் தான் அப்படின்னு தோணிச்சு.
என்னோட தமிழறிவை(ஹிஹிஹி, சும்மச் சொல்லிக்கக் கூச்சமா இருக்கு)யும் இவர் அடிக்கடி பாராட்டினாரா? அப்போத் தான் தெரிஞ்சது இவர் ஒரு அதியமான் அப்படின்னு. அந்த அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தார். இந்த அதியமானோ ஒரு பல்லி மிட்டாய் கூடக் கொடுக்கவில்லை இந்த ஒளவைக்கு. அதான் அன்னியிலே இருந்து இந்தப் பேர் வச்சுட்டேன் இவருக்கு. இந்த ரகசியம் இதுவரை யாருக்கும் சொல்லலை. இப்போச் சந்தேகம் தீர்ந்ததா வல்லி? :))))))))))))))))))))))))))) அதான் அதியமானுக்குக் கல்யாணம்னு போஸ்ட் போட்டிருக்கேன். சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம் நல்லா கவனிச்சுக்குங்க என் சார்பாவும் அதியமானை!
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Wednesday, May 30, 2007
Tuesday, May 29, 2007
அதியமானுக்குக் கல்யாணம்!!!!!!!!
ஜூன் மாதம் 3-ம் தேதி அருமை நண்பர், என் பதிவுகளையும், என் எழுத்தையும் ஆரம்ப நாட்களில் இருந்தே ஆதரித்து வருபவர், அறிமுகம் இல்லாமலேயே முதல்முதலாய் எனக்காக என் பிற்ந்த நாளன்று (போன வருஷம்) பதிவு போட்டவர், இந்த வலை உலகில் என்னைப் பற்றி அனைவருக்கும் ஓரளவு அறிமுகம் ஆகக் காரணமாய் இருந்தவர் "மோகன்ராஜ்" என்ற கைப்புள்ளக்குக் கல்யாணம். கைப்புள்ளயாய் இருந்தவர் இப்போது கல்யாண மாப்பிள்ளை ஆகிவிட்டார். என்னால் திருமணத்தில் கல்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வ.வா.ச. சார்பில் சங்கத்துச் சிங்கங்களில் முடிந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என நம்புகிறேன்.
1-ம் தேதிதான் இதைப் போட்டிருக்கணும். ஆணால் அன்னிக்கு என்னாலே கணினியில் உட்கார முடியுமான்னு தெரியலை. அதான் இன்னிக்கே போட்டுட்டேன். அருமை நண்பர் திரு கைப்புள்ளக்கும் அவர் தம் அருமை மண்மகளுக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். திருமணம் சிறப்பாக நடைபெறவும், மணவாழ்க்கை இனிமையாகவும், அருமையாகவும் அமையவும் எங்கள்வாழ்த்துக்களோடு மட்டுமில்லாமல் அந்த இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.
3-ம் தேதி அன்று இங்கே எனக்கும் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் வேலை இருக்கிறதால் 1-ம் தேதியே போடலாம்னு இருந்தேன். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இப்போவே ஆரம்பிச்சுச் செய்ய வேண்டி இருப்பதால் என்னால் அதிக நேரம் கணினியில் உட்கார முடியலை. அதனால் இன்னிக்கே போட்டிருக்கேன். ஜூன் 3-ம் தேதியன்று கிட்டத் தட்ட நானும் கைப்புள்ளயின் கல்யாணத்தை நினைத்துக் கொண்டே இங்கே விருந்து சாப்பிடுவேன். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
1-ம் தேதிதான் இதைப் போட்டிருக்கணும். ஆணால் அன்னிக்கு என்னாலே கணினியில் உட்கார முடியுமான்னு தெரியலை. அதான் இன்னிக்கே போட்டுட்டேன். அருமை நண்பர் திரு கைப்புள்ளக்கும் அவர் தம் அருமை மண்மகளுக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். திருமணம் சிறப்பாக நடைபெறவும், மணவாழ்க்கை இனிமையாகவும், அருமையாகவும் அமையவும் எங்கள்வாழ்த்துக்களோடு மட்டுமில்லாமல் அந்த இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.
3-ம் தேதி அன்று இங்கே எனக்கும் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் வேலை இருக்கிறதால் 1-ம் தேதியே போடலாம்னு இருந்தேன். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இப்போவே ஆரம்பிச்சுச் செய்ய வேண்டி இருப்பதால் என்னால் அதிக நேரம் கணினியில் உட்கார முடியலை. அதனால் இன்னிக்கே போட்டிருக்கேன். ஜூன் 3-ம் தேதியன்று கிட்டத் தட்ட நானும் கைப்புள்ளயின் கல்யாணத்தை நினைத்துக் கொண்டே இங்கே விருந்து சாப்பிடுவேன். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
துரோகம் என்று இதைச் சொல்லலாமா? :(((((((((
சரித்திரத்தில் இடம் பெறாத உண்மைகள் இவை. எனக்குப் பள்ளி நாட்களிலேயே என் ஆசிரியர் மூலமாய் ஓரளவு தெரியவந்தது. அதற்குப் பின் பல புத்தகங்கள் மூலமும், அந்தச் சமயம் பிறந்து சுதந்திரப் போராட்டத்தை நேரில் கண்டு உணர்ந்தவர்கள் மூலமும் தெரிய வந்தது. என்றாலும் நானாக முடிவு எடுத்துக் கொண்டது முதன் முதல் "நரசையா" இதைப் பற்றி எழுதியதைப் படித்ததும் தான். தற்சமயம் "திரு ஸ்டாலின் குணசேகரன்" இம்மாதிரி மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் இந்தப் புரட்சியையும் குறித்து ஒரு அத்தியாயம் எழுதி உள்ளார். இத்தனை விவரங்கள் கொடுத்திருக்காரான்னு தெரியலை. நான் விமரிசனம் மட்டும் தான் படிக்க முடிந்தது. இனி, இந்தப் போராட்டம் பற்றி!
*************************************************************************************
பொது வேலை நிறுத்தமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் சீக்கிரமாகவே வலுவடைந்தது. போராட்டம் ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள், போராட்டம் நடத்துவதோ இந்திய மக்களுக்காக. படையோ இந்தியப் படை. இந்தியக் கப்பல் படை இது எனச் சொல்லி முற்றிலும் திரு நேதாஜிக்கும் அவர் சார்ந்த இயக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் சுவரொட்டிகள். நேதாஜியின் படம் அனைவர் கையிலும். அவர் சாகசங்கள் அனைவர் மனதிலும். இந்த விஷயம் மெதுவாக மற்ற நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. சின்னப் பொறியாக இருந்தது மாபெரும் எரிமலைபோல் வெடிக்கக் காத்திருந்தது. உள்ளூர் காவல் படையும் நேரடியாகவே இதற்கு ஆதரவு தந்தது. மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய அனைவரும் மறுத்தனர். ஆங்கிலேய மேலதிகாரிகள் திகைத்தனர். செய்வதறியாமல் தலைநகரைத் தொடர்பு கொள்ள விஷயம் லண்டனுக்கும் போனது.
கராச்சி, சென்னை, கல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கும் விஷயம் பரவி அங்கேயும் இதற்கு ஆதரவு பெருகியது. சென்னையிலும், புனே நகரிலும் இருந்த பெரும்பான்மையான தரைப்படை வீரர்களும் இதற்கு முழு ஆதரவு தந்தனர்.விமானப் படையும் மறைமுகமாக ஆதரித்தது. போஸ் எதிர்பார்த்த ஆதரவு இது தான். ஆனால் அப்போதும் ஆங்கிலேய அரசு இந்த ஆதரவு அவருக்குக் கிடைக்காமல் செய்தது. இப்போதும் இதை அடக்கப் பார்த்தது. உள்ளூரில் இருந்த காங்கிரஸின் தலைவியும், "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை வெற்றிகரமாய் பம்பாய் நகரில் நடத்தி முடித்தவருமான அருணா அசஃப் அலியின் முழு ஆதரவு இதற்குக் கிடைத்ததாய்ச் சொல்லப் படுகிறது. எல்லாக் கப்பல்களிலும் மூன்று கொடிகள் முதல்முறையாகவும், கடைசிமுறையாகவும் சேர்ந்து பறந்தன. அவை காங்கிரஸின் மூவர்ணக் கொடி, முஸ்லீம் லீகின் பச்சை வண்ணக் கொடி, கம்யூனிஸ்டின் செங்கொடி. அதிலும் மூவர்ணக் கொடியும், பச்சைக் கொடியும் சேர்ந்து பறந்தது அதுவே முதல் முறை ஆகும்.இவ்வாறு ஆரம்பித்த போராட்டத்தைக் கண்டு ஆங்கில அரசு கதி கலங்கியது என்றே சொல்ல வேண்டும். லண்டனில் உள்ள அரசு, இந்தியாவில் உள்ள அரசைக் கடிந்து கொள்ள இந்தியாவில் உள்ள அப்போதைய வைஸ்ராய் காங்கிரஸ் மேலிடத்தை நேருவின் மூலம் அணுகினார்.
ஏனெனில் காங்கிரஸ் மேலிடம் இதை முற்றிலும் ஆதரிக்கவில்லை. அரசுக்கு ராணுவ வீரர்கள் செய்யும் துரோகமாக காந்தியால் வர்ணிக்கப் பட்டது. அருணா ஆசஃப் அலியைக் கடிந்தும் கொண்டார். பேச்சு வார்த்தைக்கு நேரம் குறித்தனர். ஆனால் வீரர்களும், அதிகாரிகளும் ஒப்புக் கொள்ள மறுத்தனர். இருந்தாலும் பேச்சு வார்த்தைக்கு ஒருவர் வந்தார். அவர் தான் இரும்பு மனிதர் என்று எல்லாராலும் வர்ணிக்கப் படும் "சர்தார் வல்லபபாய் படேல்"! பின்?
*************************************************************************************
பொது வேலை நிறுத்தமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் சீக்கிரமாகவே வலுவடைந்தது. போராட்டம் ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள், போராட்டம் நடத்துவதோ இந்திய மக்களுக்காக. படையோ இந்தியப் படை. இந்தியக் கப்பல் படை இது எனச் சொல்லி முற்றிலும் திரு நேதாஜிக்கும் அவர் சார்ந்த இயக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் சுவரொட்டிகள். நேதாஜியின் படம் அனைவர் கையிலும். அவர் சாகசங்கள் அனைவர் மனதிலும். இந்த விஷயம் மெதுவாக மற்ற நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. சின்னப் பொறியாக இருந்தது மாபெரும் எரிமலைபோல் வெடிக்கக் காத்திருந்தது. உள்ளூர் காவல் படையும் நேரடியாகவே இதற்கு ஆதரவு தந்தது. மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய அனைவரும் மறுத்தனர். ஆங்கிலேய மேலதிகாரிகள் திகைத்தனர். செய்வதறியாமல் தலைநகரைத் தொடர்பு கொள்ள விஷயம் லண்டனுக்கும் போனது.
கராச்சி, சென்னை, கல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கும் விஷயம் பரவி அங்கேயும் இதற்கு ஆதரவு பெருகியது. சென்னையிலும், புனே நகரிலும் இருந்த பெரும்பான்மையான தரைப்படை வீரர்களும் இதற்கு முழு ஆதரவு தந்தனர்.விமானப் படையும் மறைமுகமாக ஆதரித்தது. போஸ் எதிர்பார்த்த ஆதரவு இது தான். ஆனால் அப்போதும் ஆங்கிலேய அரசு இந்த ஆதரவு அவருக்குக் கிடைக்காமல் செய்தது. இப்போதும் இதை அடக்கப் பார்த்தது. உள்ளூரில் இருந்த காங்கிரஸின் தலைவியும், "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை வெற்றிகரமாய் பம்பாய் நகரில் நடத்தி முடித்தவருமான அருணா அசஃப் அலியின் முழு ஆதரவு இதற்குக் கிடைத்ததாய்ச் சொல்லப் படுகிறது. எல்லாக் கப்பல்களிலும் மூன்று கொடிகள் முதல்முறையாகவும், கடைசிமுறையாகவும் சேர்ந்து பறந்தன. அவை காங்கிரஸின் மூவர்ணக் கொடி, முஸ்லீம் லீகின் பச்சை வண்ணக் கொடி, கம்யூனிஸ்டின் செங்கொடி. அதிலும் மூவர்ணக் கொடியும், பச்சைக் கொடியும் சேர்ந்து பறந்தது அதுவே முதல் முறை ஆகும்.இவ்வாறு ஆரம்பித்த போராட்டத்தைக் கண்டு ஆங்கில அரசு கதி கலங்கியது என்றே சொல்ல வேண்டும். லண்டனில் உள்ள அரசு, இந்தியாவில் உள்ள அரசைக் கடிந்து கொள்ள இந்தியாவில் உள்ள அப்போதைய வைஸ்ராய் காங்கிரஸ் மேலிடத்தை நேருவின் மூலம் அணுகினார்.
ஏனெனில் காங்கிரஸ் மேலிடம் இதை முற்றிலும் ஆதரிக்கவில்லை. அரசுக்கு ராணுவ வீரர்கள் செய்யும் துரோகமாக காந்தியால் வர்ணிக்கப் பட்டது. அருணா ஆசஃப் அலியைக் கடிந்தும் கொண்டார். பேச்சு வார்த்தைக்கு நேரம் குறித்தனர். ஆனால் வீரர்களும், அதிகாரிகளும் ஒப்புக் கொள்ள மறுத்தனர். இருந்தாலும் பேச்சு வார்த்தைக்கு ஒருவர் வந்தார். அவர் தான் இரும்பு மனிதர் என்று எல்லாராலும் வர்ணிக்கப் படும் "சர்தார் வல்லபபாய் படேல்"! பின்?
Monday, May 28, 2007
சிப்பாய்க் கலகம்-கப்பல் படையில்?
இந்தியாவை ஆளவந்த ஆங்கிலேயர்கள் அரசை இங்கிலாந்தில் உள்ள ஆங்கில அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வந்த போதிலும் அங்கிருந்து சில ராணுவ அதிகாரிகளும் இந்தியாவில் பணியாற்ற வந்தார்கள். ஏற்கெனவே ஆங்கிலேயர் தாம் கைப்பற்றிய சமஸ்தானங்களின் படைவீரர்களை இங்கிலாந்தில் இருந்த ராணியின் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததோடு அல்லாமல், காலப்போக்கில் தரைப்படையைத் தவிர விமானப்படை, கப்பல்படையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அப்படி ஏற்பட்ட கப்பல் படையில் ஆங்கிலேயக் கப்பல்படை அதிகாரிகளைத் தவிர, இந்தியர்களும் அதிகாரிகளாயும், மாலுமிகளாயும் இருந்தார்கள். பணியாற்றும் வீரர்களில் இருவரும் இருந்தபோதிலும் ஒரு ஆங்கிலேய மாலுமி தனக்கு மேல் இந்திய உயர் அதிகாரி இருப்பதை விரும்பியதில்லை. அதுபோல் இந்திய அதிகாரிகளை ஆங்கிலேய அதிகாரிகள் கூடச் சம உரிமை கொடுத்து நட்புப் பாராட்டியதில்லை. முதல் உலக யுத்தத்தில் லேசாகக் கனன்று கொண்டிருந்த இந்த நெருப்பானது 2-ம் உலக மகாயுத்தத்தின் பின் அதிகம் ஆனது.
இந்தச் சமயம் தான் திரு சுபாஷ் சந்திர போஸின் வீரதீரச் சாகசங்களால் மனம்கவரப்பட்ட சிப்பாய்களுக்கும் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த "ராயல் நேவி"யையும் இது கவர்ந்தது. அவர்கள் தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே "நிறவேற்றுமை" என்னும் கொடுமைக்கு ஆளாகியதோடு அல்லாமல், உணவு, உடை, போண்றவற்றிலும் பாரபட்சம் காட்ட ஆரம்பித்திருந்தது இங்கிலாந்து அரசு. முதலில் சிறு முணுமுணுப்பாக ஆரம்பித்தது இது. சரியான உணவு, உடை வேண்டும், தங்கள் தகுதியைக் குறைக்கக் கூட்டாது என்று மாலுமிகல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கோரிக்கை வெறும் விழலுக்கு இறைத்த நீராகப் போனது. இது மட்டுமா? இந்தியா எங்கள் நாடு என்று அவர்கள் தங்கள் நாட்டின் மீதுள்ள தேசப் பற்றைக் காட்டிக் கொண்டாலோ உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. மொத்தம் 78 கப்பல்கள், 20 கடல் சார்ந்த நிறுவனங்கள், மாலுமிகள் மட்டுமே 20,000 அதைத்தவிர அதிகாரிகள் என ஒரு பெரும்படையே இதை எதிர்த்துப் போரட முடிவு செய்தது. ஆரம்பித்தது வேலை நிறுத்தம். முதலில் பொது வேலை நிறுத்தம் என அறிவித்தனர். மாலுமிகள் தங்களுக்கு மேல் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கண்டதும் வணங்க மறுத்தனர். அப்படி வணங்கினாலும் இடது கையால் "சல்யூட்" கொடுத்தனர். ஆங்கிலேய அதிகாரிகளால் அவமானத்தைப் பொறுக்க முடியவில்லை.
இந்தச் சமயம் தான் திரு சுபாஷ் சந்திர போஸின் வீரதீரச் சாகசங்களால் மனம்கவரப்பட்ட சிப்பாய்களுக்கும் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த "ராயல் நேவி"யையும் இது கவர்ந்தது. அவர்கள் தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே "நிறவேற்றுமை" என்னும் கொடுமைக்கு ஆளாகியதோடு அல்லாமல், உணவு, உடை, போண்றவற்றிலும் பாரபட்சம் காட்ட ஆரம்பித்திருந்தது இங்கிலாந்து அரசு. முதலில் சிறு முணுமுணுப்பாக ஆரம்பித்தது இது. சரியான உணவு, உடை வேண்டும், தங்கள் தகுதியைக் குறைக்கக் கூட்டாது என்று மாலுமிகல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கோரிக்கை வெறும் விழலுக்கு இறைத்த நீராகப் போனது. இது மட்டுமா? இந்தியா எங்கள் நாடு என்று அவர்கள் தங்கள் நாட்டின் மீதுள்ள தேசப் பற்றைக் காட்டிக் கொண்டாலோ உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. மொத்தம் 78 கப்பல்கள், 20 கடல் சார்ந்த நிறுவனங்கள், மாலுமிகள் மட்டுமே 20,000 அதைத்தவிர அதிகாரிகள் என ஒரு பெரும்படையே இதை எதிர்த்துப் போரட முடிவு செய்தது. ஆரம்பித்தது வேலை நிறுத்தம். முதலில் பொது வேலை நிறுத்தம் என அறிவித்தனர். மாலுமிகள் தங்களுக்கு மேல் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கண்டதும் வணங்க மறுத்தனர். அப்படி வணங்கினாலும் இடது கையால் "சல்யூட்" கொடுத்தனர். ஆங்கிலேய அதிகாரிகளால் அவமானத்தைப் பொறுக்க முடியவில்லை.
Wednesday, May 23, 2007
சிப்பாய்க் கலகம் -இரண்டாம் பகுதி
கொஞ்ச நாளைக்கு போஸை விட்டு வைப்போம். இப்போ நாம் 1946-க்குப் போறோம். இடம் பம்பாய்த் துறைமுகம். மாதம் பெப்ரவரி 18-ம் தேதி. திடீரென துறைமுகத்தில் இருந்த ஆங்கில அரசால் நிர்வாகம் செய்யப் பட்டு வந்த இந்திய அரசின் ராணுவக் கப்பல்களில் வேலை செய்து வந்த சிப்பாய்களும், மாலுமிகளும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். வேலை நிறுத்தம் மெதுவாய்ப் பரவுகிறது. வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. பம்பாயின் மக்கள் மட்டும் இல்லாமல் அங்கே இருந்த தரைப்படை, விமானப் படையும் ஆதரிக்கும் நிலை. பம்பாயில் இருந்து முக்கியக் கேந்திரங்களான சென்னை ராஜதானிக்கும், கல்கத்தாவுக்கும், கராச்சித் துறைமுகத்துக்கும் விஷயம் போகிறது. ஆதரவு பெருகுகிறது இந்தியாவைச் சேர்ந்த மாலுமிகளின் வேலை நிறுத்தத்துக்கு. மூன்று கொடிகள் சேர்ந்து பறக்கின்றன. பிரிட்டிஷ் அரசு செய்வதறியாது திகைக்கிறது. லண்டனில் இருந்த ஆங்கிலேய அரசுக்கு விஷயம் தெரிய வருகிறது. படைகளை அடக்கக் கட்டளை இடுகிறார்கள்.
இந்தியச் சிப்பாய்களோ இந்திய ராணுவ அதிகாரிகளைத் தவிர மற்றவர்களை அதாவது ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளை வணங்க மறுக்கிறார்கள். ஆங்கிலேய அதிகாரிகள் இடது கையால் "ஸல்யூட்" வைக்கும் இந்தியச் சிப்பாய்களையும், அதிகாரிகளையும் பார்த்துத் திகைக்கிறார்கள். உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித்தலைவியான அருணா அசஃப் அலியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கிறது. உள்ளூர் போலீஸும் ஆதரவு தருகிறது. மொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் நிலை! அடுத்து என்ன? காத்திருங்கள் சில நாள். இன்னொரு சிப்பாய்க் கலகம் என்றழைக்கப் பட்ட இதன் நிலைமையைப் பார்ப்போம்.
இந்தியச் சிப்பாய்களோ இந்திய ராணுவ அதிகாரிகளைத் தவிர மற்றவர்களை அதாவது ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளை வணங்க மறுக்கிறார்கள். ஆங்கிலேய அதிகாரிகள் இடது கையால் "ஸல்யூட்" வைக்கும் இந்தியச் சிப்பாய்களையும், அதிகாரிகளையும் பார்த்துத் திகைக்கிறார்கள். உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித்தலைவியான அருணா அசஃப் அலியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கிறது. உள்ளூர் போலீஸும் ஆதரவு தருகிறது. மொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் நிலை! அடுத்து என்ன? காத்திருங்கள் சில நாள். இன்னொரு சிப்பாய்க் கலகம் என்றழைக்கப் பட்ட இதன் நிலைமையைப் பார்ப்போம்.
Monday, May 21, 2007
தலைப்பு உங்க இஷ்டம்!
இரண்டு பதிவுமாச் சேர்ந்து 370 ஆகி இருக்கிறது. இதிலே ஆன்மீகப் பயணம் பதிவிலே திருப்பி 2-ம் முறையாக வந்தது ஒரு 30 கழிச்சா மொத்தப் பதிவுகள் 340-க்குக் கிட்டத் தட்ட இருக்கும். எண்ணங்கள் பதிவு 287 வந்திருக்கு. இன்னும் 13 இருக்கு 300 தொட. அதுக்குள்ளே குழந்தைக்குப் பிறந்த நாள் வேறே வந்துடுச்சு. ஹிஹிஹி, குழந்தை வேறே யாரும் இல்லை. இந்தப் போர்க்கொடி என்னோட பிறந்த தினத்தைத் தப்புத் தப்பா எல்லார் கிட்டேயும் சொல்லி வச்சிருக்கு. நறநறநற. சும்மா பாலக் பனீர், பனீர் பரோட்டானு ஏதோ 2 ஐடெம் பேரு தெரிஞ்சு வச்சுக்கிட்டு எல்லார் கிட்டேயும் ஒரே ஆட்டம். எல்லாம் தெரிஞ்சாப்பல. அது சும்மானு எனக்கு நல்லாத் தெரியும். ஏமாறவே இல்லையே! பாவம் போர்க்கொடியோட ரங்கமணி.
போன வருஷம் என்னோட பிறந்த நாளுக்கு அதியமான் வ.வா.சங்கத்திலே பதிவு போட்டு அனைவருக்கும் போட்டியும், பரிசும் அறிவித்தார். போட்டி என்னனு நான் சொல்ல வேண்டாமே? ஹிஹி, வழக்கம் போல் எனக்கு என்ன வயசுன்னு தான் போட்டி. யாருமே ஜெயிக்கலையா? பரிசுக்கு வச்சிருந்த பல்லி மிட்டாயை அவரே தின்னுட்டார். என் கண்ணிலே கூடக் காட்டலை. போகுது போனு விட்டுட்டேன். பல்லி மிட்டாய் யாருக்கு வேணும்? இந்த வருஷம் அவர் வலை உலகிலேயே இல்லை. கல்யாணம் நிச்சயம் ஆகிட்ட குஷியிலே தலை எது, கால் எதுனு தெரியாம இருக்கார். பொண்ணு எங்க ஊருங்கிறதாலே அதுக்கும் போனாப் போகுதுனு தான் விடணும். தவிர, ஆரம்ப காலத்திலே இருந்து என்னோட பதிவையும், எனக்குத் தமிழ் அறிவு ஜாஸ்தின்னும் (ஹிஹிஹி, அவர் தான் நம்பிட்டு இருக்கார், நான் என்ன செய்யறது சொல்லுங்க?) என்னைப் புகழ்ந்துட்டு இருக்கிற ஒரே மனிதர். எனக்கு என்னமோ விஷய ஞானம் ரொம்ப இருக்குன்னும் நினைச்சுட்டு இருக்கார். தலை எழுத்து, எனக்கில்லை அவருக்குத் தான். இப்படி அப்பாவியா இருக்கிறாரே! இரண்டு பேரும் இன்னும் சந்திக்கலை. அதனால் அவர் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். யாரைச் சொல்றேன்னு புரியும்னு நம்பறேன். நம்ம கைப்புள்ளயத் தான். கல்யாணம் நிச்சயம் ஆகும் முன்னேயே வலை உலகத்தில் இருந்து திடீர்னு காணாமல் போயிட்டாரேன்னு நினைச்சா, மாசக்கணக்காத் தேடிப் பொண்ணைக் "கண்டு கொண்டேன்"னு வந்து சொல்றார். நல்லா இருக்கட்டும். கல்யாணம் தான் கலந்துக்கவே முடியாது.
என்ன என்னோட பிறந்த நாளைப் பத்தி எழுதப் போறேன்னு சொல்லிட்டு அதைக் குறிப்பிடலைன்னு பார்க்கறீங்களா? கைப்புள்ள கல்யாணப்பத்திரிகை அனுப்பிச்சதிலே இருந்து எழுத நினைச்சது. இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சது. அப்புறம் என்னோட பிறந்த நாள் பத்தி: 22-ம் தேதி தான் என்னோட பிறந்த நாள். போர்க்கொடி பேச்சை கேட்டு 24-ம் தேதினு நம்பினவங்க எல்லாம் ஏமாந்து போயிட்டீங்க. அதெல்லாம் ஒரு 2 நாள் கூட வயசைக் குறைச்சுச் சொல்லிக்கிற டைப்பே இல்லை நானுனு இதிலே இருந்து தெரிஞ்சிருக்குமே!
போன வருஷம் என்னோட பிறந்த நாளுக்கு அதியமான் வ.வா.சங்கத்திலே பதிவு போட்டு அனைவருக்கும் போட்டியும், பரிசும் அறிவித்தார். போட்டி என்னனு நான் சொல்ல வேண்டாமே? ஹிஹி, வழக்கம் போல் எனக்கு என்ன வயசுன்னு தான் போட்டி. யாருமே ஜெயிக்கலையா? பரிசுக்கு வச்சிருந்த பல்லி மிட்டாயை அவரே தின்னுட்டார். என் கண்ணிலே கூடக் காட்டலை. போகுது போனு விட்டுட்டேன். பல்லி மிட்டாய் யாருக்கு வேணும்? இந்த வருஷம் அவர் வலை உலகிலேயே இல்லை. கல்யாணம் நிச்சயம் ஆகிட்ட குஷியிலே தலை எது, கால் எதுனு தெரியாம இருக்கார். பொண்ணு எங்க ஊருங்கிறதாலே அதுக்கும் போனாப் போகுதுனு தான் விடணும். தவிர, ஆரம்ப காலத்திலே இருந்து என்னோட பதிவையும், எனக்குத் தமிழ் அறிவு ஜாஸ்தின்னும் (ஹிஹிஹி, அவர் தான் நம்பிட்டு இருக்கார், நான் என்ன செய்யறது சொல்லுங்க?) என்னைப் புகழ்ந்துட்டு இருக்கிற ஒரே மனிதர். எனக்கு என்னமோ விஷய ஞானம் ரொம்ப இருக்குன்னும் நினைச்சுட்டு இருக்கார். தலை எழுத்து, எனக்கில்லை அவருக்குத் தான். இப்படி அப்பாவியா இருக்கிறாரே! இரண்டு பேரும் இன்னும் சந்திக்கலை. அதனால் அவர் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். யாரைச் சொல்றேன்னு புரியும்னு நம்பறேன். நம்ம கைப்புள்ளயத் தான். கல்யாணம் நிச்சயம் ஆகும் முன்னேயே வலை உலகத்தில் இருந்து திடீர்னு காணாமல் போயிட்டாரேன்னு நினைச்சா, மாசக்கணக்காத் தேடிப் பொண்ணைக் "கண்டு கொண்டேன்"னு வந்து சொல்றார். நல்லா இருக்கட்டும். கல்யாணம் தான் கலந்துக்கவே முடியாது.
என்ன என்னோட பிறந்த நாளைப் பத்தி எழுதப் போறேன்னு சொல்லிட்டு அதைக் குறிப்பிடலைன்னு பார்க்கறீங்களா? கைப்புள்ள கல்யாணப்பத்திரிகை அனுப்பிச்சதிலே இருந்து எழுத நினைச்சது. இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சது. அப்புறம் என்னோட பிறந்த நாள் பத்தி: 22-ம் தேதி தான் என்னோட பிறந்த நாள். போர்க்கொடி பேச்சை கேட்டு 24-ம் தேதினு நம்பினவங்க எல்லாம் ஏமாந்து போயிட்டீங்க. அதெல்லாம் ஒரு 2 நாள் கூட வயசைக் குறைச்சுச் சொல்லிக்கிற டைப்பே இல்லை நானுனு இதிலே இருந்து தெரிஞ்சிருக்குமே!
Saturday, May 19, 2007
இவ்வளவு அருமையான போஸ்டா?
என்னுடைய திருமண நாளுக்குத் தனிப்பட்ட முறையில் மெயில் கொடுத்தும், கவிதை எழுதியும், (ஹிஹிஹி புலி தான் வேறே யாரு? வம்பு செய்யறதே அதோட தொழில் :P வேதாவைக் கவிதை எழுதத் தூண்டியும் விட்டுட்டு இருந்தது) பதிவில் வாழ்த்தியும், ப்ளாக் யூனியன் மூலம் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள்
Subscribe to:
Posts (Atom)