எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு
Showing posts with label சின்னப் பொண்ணுன்னு சொன்னா நம்பணும். Show all posts
Showing posts with label சின்னப் பொண்ணுன்னு சொன்னா நம்பணும். Show all posts

Monday, May 21, 2007

தலைப்பு உங்க இஷ்டம்!

இரண்டு பதிவுமாச் சேர்ந்து 370 ஆகி இருக்கிறது. இதிலே ஆன்மீகப் பயணம் பதிவிலே திருப்பி 2-ம் முறையாக வந்தது ஒரு 30 கழிச்சா மொத்தப் பதிவுகள் 340-க்குக் கிட்டத் தட்ட இருக்கும். எண்ணங்கள் பதிவு 287 வந்திருக்கு. இன்னும் 13 இருக்கு 300 தொட. அதுக்குள்ளே குழந்தைக்குப் பிறந்த நாள் வேறே வந்துடுச்சு. ஹிஹிஹி, குழந்தை வேறே யாரும் இல்லை. இந்தப் போர்க்கொடி என்னோட பிறந்த தினத்தைத் தப்புத் தப்பா எல்லார் கிட்டேயும் சொல்லி வச்சிருக்கு. நறநறநற. சும்மா பாலக் பனீர், பனீர் பரோட்டானு ஏதோ 2 ஐடெம் பேரு தெரிஞ்சு வச்சுக்கிட்டு எல்லார் கிட்டேயும் ஒரே ஆட்டம். எல்லாம் தெரிஞ்சாப்பல. அது சும்மானு எனக்கு நல்லாத் தெரியும். ஏமாறவே இல்லையே! பாவம் போர்க்கொடியோட ரங்கமணி.

போன வருஷம் என்னோட பிறந்த நாளுக்கு அதியமான் வ.வா.சங்கத்திலே பதிவு போட்டு அனைவருக்கும் போட்டியும், பரிசும் அறிவித்தார். போட்டி என்னனு நான் சொல்ல வேண்டாமே? ஹிஹி, வழக்கம் போல் எனக்கு என்ன வயசுன்னு தான் போட்டி. யாருமே ஜெயிக்கலையா? பரிசுக்கு வச்சிருந்த பல்லி மிட்டாயை அவரே தின்னுட்டார். என் கண்ணிலே கூடக் காட்டலை. போகுது போனு விட்டுட்டேன். பல்லி மிட்டாய் யாருக்கு வேணும்? இந்த வருஷம் அவர் வலை உலகிலேயே இல்லை. கல்யாணம் நிச்சயம் ஆகிட்ட குஷியிலே தலை எது, கால் எதுனு தெரியாம இருக்கார். பொண்ணு எங்க ஊருங்கிறதாலே அதுக்கும் போனாப் போகுதுனு தான் விடணும். தவிர, ஆரம்ப காலத்திலே இருந்து என்னோட பதிவையும், எனக்குத் தமிழ் அறிவு ஜாஸ்தின்னும் (ஹிஹிஹி, அவர் தான் நம்பிட்டு இருக்கார், நான் என்ன செய்யறது சொல்லுங்க?) என்னைப் புகழ்ந்துட்டு இருக்கிற ஒரே மனிதர். எனக்கு என்னமோ விஷய ஞானம் ரொம்ப இருக்குன்னும் நினைச்சுட்டு இருக்கார். தலை எழுத்து, எனக்கில்லை அவருக்குத் தான். இப்படி அப்பாவியா இருக்கிறாரே! இரண்டு பேரும் இன்னும் சந்திக்கலை. அதனால் அவர் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். யாரைச் சொல்றேன்னு புரியும்னு நம்பறேன். நம்ம கைப்புள்ளயத் தான். கல்யாணம் நிச்சயம் ஆகும் முன்னேயே வலை உலகத்தில் இருந்து திடீர்னு காணாமல் போயிட்டாரேன்னு நினைச்சா, மாசக்கணக்காத் தேடிப் பொண்ணைக் "கண்டு கொண்டேன்"னு வந்து சொல்றார். நல்லா இருக்கட்டும். கல்யாணம் தான் கலந்துக்கவே முடியாது.

என்ன என்னோட பிறந்த நாளைப் பத்தி எழுதப் போறேன்னு சொல்லிட்டு அதைக் குறிப்பிடலைன்னு பார்க்கறீங்களா? கைப்புள்ள கல்யாணப்பத்திரிகை அனுப்பிச்சதிலே இருந்து எழுத நினைச்சது. இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சது. அப்புறம் என்னோட பிறந்த நாள் பத்தி: 22-ம் தேதி தான் என்னோட பிறந்த நாள். போர்க்கொடி பேச்சை கேட்டு 24-ம் தேதினு நம்பினவங்க எல்லாம் ஏமாந்து போயிட்டீங்க. அதெல்லாம் ஒரு 2 நாள் கூட வயசைக் குறைச்சுச் சொல்லிக்கிற டைப்பே இல்லை நானுனு இதிலே இருந்து தெரிஞ்சிருக்குமே!