எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 10, 2007

ரொம்பவே சின்ன மொக்கை!

மொக்கைப் பதிவுன்னா தான் வந்து எல்லாரும் ஆதரவு கொடுக்கிறதுனு வச்சிருக்கீங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இருந்தாலும் நன்னி, நன்னி, நன்னி! இதிலே நாம என்ன செய்ய முடியும்?

"எல்லா மொக்கையும், மொக்கை அல்ல, சான்றோர்க்கு
எண்ணங்கள் பதிவின் மொக்கையே மொக்கை"
னு புதுக் குறளே பிறந்துடுச்சு. தவிரவும்

"பதிவிட மேட்டர் கிடைக்காத போழ்தில் சிறிது
மொக்கைக்கும் ஈயப் படும்"

அப்படின்னும் ஒரு குறள் பிறந்துடுச்சு. எல்லாம் நம்ம வேதா(ள்) கூடச் சேர்ந்த தோஷம் தான். அவங்க தான் கவிதை எழுதணுமா? நாமும் எழுதலாமேன்னு யோசிச்சேன். அந்த விளைவு தான். நல்லா இருக்கா? நல்லா இருந்தே ஆகணும்! "தலைவி" எழுதி இருக்கும்போது நல்லா இல்லாமல் எப்படி இருக்க முடியும்? பார்க்கிற படங்களில் உள்ள லாஜிக்கை நினைச்சாலே தலை சுத்துது! அப்புறமா படிக்கிற புத்தகங்கள், ஆன்மீகம்னு எழுதறதுக்கு என்னமோ மேட்டர் இருக்கு. ஆனால் கொஞ்ச நாளா அதிகமா வர முடியலை. இன்னும் கொஞ்ச நாள் இப்படித் தான் இருக்கும். நேரம் கிடைக்கும்போது வருவேன். எப்போ வருவேன், எப்படி வருவேன்னு சொல்ல முடியாது, வந்தே தீருவேன், என் வழீஈஈஈஈஈஈஈஈஈஈஈ தனீஈஈஈஈஈஈஈஈஈஈ வழீஈஈஈஈஈஈஈஈஈஈ! நாளைக்கு ஒரு முக்கியமான பதிவு இருக்கு, எல்லாரும் வந்துடுங்க!

அப்புறமாக் காலையிலே "பொதிகை"த் தொலைக்காட்சியிலே "வயலும் வாழ்வும்" பார்க்கிறப்போ முடியற நேரத்திலே ஒருத்தர் பாடினார் பாருங்க, ஆஹா, அற்புதம்! அந்தக் கால (அதாவது அம்பி பிறந்தப்போ உள்ள காலம்) தியாகராஜ பாகவதர் ஸ்டைலில் ஒரு பாட்டு, "கிருஷ்ணா, முகுந்தா, முராரே!" பாட்டின் ராகத்திலேயே, கரும்பைப் பத்தி ஒரு பாட்டு எடுத்து விட்டார் பாருங்க, "ஒண்ணா, ரெண்டா, மூணா?"னு! அப்படி ஒரு குரல் வளம்! ரொம்பவே அருமையான குரல்! ஏன் இன்னும் யார் கண்ணிலும் படலைனு தெரியலை. வழக்கம்போல் பொதிகை அவரோட பேரைப் போடாததோடு, பாட்டுப் பாதியிலேயே அடுத்த நிகழ்ச்சிக்கும் (நேரம் 6-30 ஆயிடுச்சுன்னு) போயிடுச்சு! முழுசாக் கேட்க முடியலை. எப்போவோ இம்மாதிரியான குரல்களில் பாட்டுக் கேட்க முடியுது!

18 comments:

  1. ஆஹா.. கீதா அக்கா நீங்களே இப்படி மொக்கையில கலக்குறிங்க.. அப்ப நாங்க்கெல்லாம் என்ன செய்யறது?..ஹிஹி...சூப்பரு... பிரசண்ட் ..

    ReplyDelete
  2. நடத்துங்க....

    ஆமா, நாளைக்கு என்ன விசேஷம்?

    ReplyDelete
  3. நீங்க தனியா வேற மொக்கை!னு லேபிள் பிரிச்சு சொல்லனுமா? எங்களுக்கே தெரியும். :p

    வயசை பத்தி வாயவே தொறக்க கூடாது நீங்க. அப்புறம் உங்க புகைப்படத்துடன் ஒரு பதிவு பப்ளிஷ் பண்ணீடுவேன், பாவம் இந்த ரசிகன், பயந்து போய்டுவானேனு தான் சும்மா இருக்கேன். :D

    ReplyDelete
  4. மொக்கைக்கான குறள் நல்லாருந்துச்சு..அடுத்த பதிவுல அப்ட் என்ன விசேஷம்..சரி அப்புறமா வர்றேன்..

    ReplyDelete
  5. @ரசிகரே, உங்களை மாதிரி ரசிகருங்க இருக்கும்போது பின்னே என்ன, பொருளாதாரத்தையும், வான சாஸ்திரத்தையும் எழுதினேன்னா, யாரு படிக்கப் போறாங்க? :P

    @வாங்க, மதுரையம்பதி, நாளைக்கு வரணும்கிறதாலே தானே, என்னனு சொல்லலை!

    @அம்பி, நானே என்னோட புகைப்படத்தைப் போடலாமானு யோசிச்சுட்டுத் தான் இருக்கேன், அப்போத் தான் என்னோட உண்மையான வயசு எல்லாருக்கும் தெரியும்! :P

    @பாசமலர், நாளைக்கு வந்து பாருங்களேன்!

    ReplyDelete
  6. அதிலே பாருங்க, பாசமலர், அந்த முதல் குறளிலே "சான்றோருக்கு"ங்கிறதுக்குப் பதிலே முதல்லே மொக்கைப் பதிவருக்குன்னு தான் போட்டேன், அப்புறமா தாயுள்ளத்தோட அதை எடுத்துட்டேன்! :)))))

    ReplyDelete
  7. // "பதிவிட மேட்டர் கிடைக்காத போழ்தில் சிறிது
    மொக்கைக்கும் ஈயப் படும்"//

    அவ்வ்வ்வ்வ்...கீதா அக்கா இப்போதான் முழுசா படிச்சேன்(ஹிஹி..)
    சீடன் கிட்டயே ஜி3 பண்ணலாமா?.. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்..ஹிஹி..

    http://rasigan111.blogspot.com/2007/10/blog-post_30.html

    ReplyDelete
  8. // கீதா சாம்பசிவம் said...

    @ரசிகரே, உங்களை மாதிரி ரசிகருங்க இருக்கும்போது பின்னே என்ன, பொருளாதாரத்தையும், வான சாஸ்திரத்தையும் எழுதினேன்னா, யாரு படிக்கப் போறாங்க? :P//

    கீதா அக்கா நீங்க பாராட்டுறிங்களா? இல்ல உள்குத்தான்னு பிரியலை.. (இதுத்தேன் "வஞ்சப்புகழ்ச்சி அணி " ம்பாங்களோ?.
    இருந்தாலும் பாராட்டறதாவே எடுத்துக்கிட்டு தாங்க்ஸ் சொல்லிக்கிறேன்..ஹிஹி..

    ReplyDelete
  9. // ambi said...

    பாவம் இந்த ரசிகன், பயந்து போய்டுவானேனு தான் சும்மா இருக்கேன். :D //

    அவ்வ்வ்வ்வ்வ்......அம்பியண்ணாவ்வ்..
    இம்புட்டு நல்லவரா நீங்க?...

    ReplyDelete
  10. கீதா அக்கா.. நீங்க அனுப்பின அந்த கொள்ளுப்பாட்டியோட படத்த நீங்க சொன்ன மாதிரி காலேஜ் படிக்கிற பொண்ணாட்டும் கிராஃபிஸ் பண்ணியாச்சு.இப்போ அனுப்பிடரேன்.
    ஆமா யாரு அவிங்க?..உங்க பாட்டியா?

    ReplyDelete
  11. அவ்வ்வ்.... இது உங்க தனி மெயில் இல்ல்லியா?..சாரி ஃபார் த கிராஸ் டாக்..ஹிஹி..

    ReplyDelete
  12. கீதா சாம்பசிவம் said...
    // நானே என்னோட புகைப்படத்தைப் போடலாமானு யோசிச்சுட்டுத் தான் இருக்கேன், அப்போத் தான் என்னோட உண்மையான வயசு எல்லாருக்கும் தெரியும்! :P //

    இதுக்கும், அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல்லிங்கோ..( பின்ன... இம்போஷிசன் யாரு எழுதறது?..ஹிஹி..)

    ReplyDelete
  13. ஹா ஹா ஹா.... நல்லாவே இருக்குது பதிவு. அதிலும் குறள்கள் சூப்பர்....
    //பதிவிட மேட்டர் கிடைக்காத போழ்தில் சிறிது
    மொக்கைக்கும் ஈயப் படும்"
    //

    கவிதை எழுதுவது ஈஸிதான்... ஆனா குறளை மாற்றி... லயம் பிறழாமல் கொண்டு வந்திருக்கீங்க பாருங்க... அது.. அது... சூப்பர்.

    ReplyDelete
  14. இது பின்னூட்டத்திற்க்காக இல்லேங்க டீச்சர்

    கீதா அக்கா.. இது அநியாயம். நீங்க பதிவுல நடத்தற பாடம் புரியலைன்னுட்டு ஜி டாக்குல டியுசன் சேரலாமுன்னு அழைப்பு அனுப்புனாக்கா இன்னும் அக்செப்ட் பண்ணலை.. (ஒருவேளை உங்க நேரம் நல்ல நேரமாயிருக்கோ?..ஹிஹி..)

    தோழி வேதா சொன்னாங்க.. என்னிய உங்களால அடையாளம் கண்டுக்கவே முடியலையாம்.. அவ்வ்வ்வ்வ்வ்..........இதுக்குத்தேன் சொல்லறது மனப்பாடம் செஞ்சிக்கிட்டு வந்து பாடம் நடத்திப்புட்டு போவாம.. ,மாணவர்களையும் தெரிஞ்சிக்கனுமிங்கரது..

    மறுபடி தேடிப்புடிச்சி அனுப்பியிருக்கேன்..ஓகே..

    குறிப்பு : கீதா அக்கா.. sreedar2005@gmail.com னு வருதான்னு செக் பண்ணிப்புட்டு அக்செப்ட் செய்யுங்க..

    ReplyDelete
  15. மொக்கைக்கான குறள் நல்லாருந்துச்சு..அடுத்த பதிவுல அப்ட் என்ன விசேஷம்..சரி அப்புறமா வர்றேன்..

    ரிப்பீட்டரேன்

    எனது மெயில் ஐடி pdkt2007@gmail.com

    ReplyDelete
  16. //
    மொக்கைப் பதிவுன்னா தான் வந்து எல்லாரும் ஆதரவு கொடுக்கிறதுனு வச்சிருக்கீங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இருந்தாலும் நன்னி, நன்னி, நன்னி!
    //
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆதரவு!!!!!!!

    ReplyDelete
  17. //
    ரசிகன் said...
    ஆஹா.. கீதா அக்கா நீங்களே இப்படி மொக்கையில கலக்குறிங்க.. அப்ப நாங்க்கெல்லாம் என்ன செய்யறது?..ஹிஹி...சூப்பரு... பிரசண்ட் ..
    //
    ரிப்பீட்டேய்

    ReplyDelete