எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 20, 2009

இளைய தலைமுறையே இது உனக்காக!

இந்தியா எப்படி இருந்திருக்கு? இப்போ எப்படி ஆயிடுச்சு பாருங்க! :( ஆனால் நாம் நாட்டைப் பற்றி எவ்வளவு பெருமை கொள்கின்றோம்? ஆராய்ந்தால் இல்லைனே சொல்ல வேண்டி இருக்கு. கொஞ்சம் நிதானமா யோசிங்க. ஆச்சு, இன்னும் ஒரு பதிவுதான் போயிடுவேன், அதுக்குள்ளே சொல்லிட்டுப் போறேனே! கொஞ்சம் பொறுமையாத் தெரிஞ்ச விஷயமா இருந்தாலும் படிச்சு நினைவு கொள்ளுங்களேன்!

மெகஸ்தனிஸ் காலத்தில் இந்த நாட்டில் யாரானும் ஏதானும் கொடுத்தாலும் கை நீட்டி வாங்கிக் கொள்ள ஆள் இல்லை என்றும், எந்தப் பண்டம் எங்கே இருந்தாலும், கிடைத்தாலும் திருட ஆள் இல்லை என்றும், மக்கள் பொய்யே சொல்லத் தெரியாமல் இருந்ததாகவும் சொல்லி இருக்கின்றான். இந்த நாடோ அல்லது இந்த நாட்டின் மதம் எனக் கூறப்படும் இந்து மதமோ சண்டை மூலம் தன்னை வளர்த்துக் கொண்டதாக எந்த வரலாறும்கூறியதில்லை. சமூகப் பணிகளைக் காட்டி மற்றவரை இழுத்துக் கொண்டதும் இல்லை. பலமான குருபீடங்களும் கிடையாது. மாற்று மதத்தினர் படை எடுப்பிலும், ஆக்கிரமிப்பிலும் பலவிதக் கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகியும், நயமாகவும், பயமாகவும் பல்வேறு பிரசாரங்களைச் சந்தித்தும் இந்த மதம் அழியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் சநாதன தர்மத்திலேயே இருக்கின்றனர். ஆனாலும், யுகாந்திரமாக பல எதிர்ப்புகள் வந்தாலும் அழியாமல் இருக்கிறது. இன்னமும் இருக்கும். உண்மையான மதச் சார்பின்மை என்றால் எல்லா மதங்களுக்கும் சரியான விகிதத்தில் மதிப்புக் கொடுப்பதே ஆகும். ஆனால் இன்றைக்கு அப்படி நடக்கிறதா??

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை வழக்கத்தில் இருக்கும் வேதங்களை எடுத்துக் கொண்டால், வேதங்கள்தான் உலகிலேயே முதன்முறையாகக் கண்டறியப் பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. மனித நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்தே இவையும் இருந்ததாகவும், வாய்மொழியாகவே பத்தாயிரம் வருஷங்களுக்கு மேலாகச் சொல்லப் பட்டு வந்ததாகவும், 5,000 வருஷங்கள் முன்னரே அவை எழுதப் பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வருகின்றது. அக்னியைப் பற்றி ஆரம்பித்து அக்னியைப் பற்றியே முடியும் ரிக்வேதம், வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாய் இருப்பதாகும். இதில் தான் உலகத்து மக்கள் அனைவருக்குமான ஒற்றுமைப் பிரார்த்தனை ஸ்லோகமும் உள்ளது. இந்த ஸ்லோகத்தோடு தான் முடியும்.

யஜுர் வேதம் வழிபாடுகள் பற்றி விவரிக்கும். ரிக்வேத மந்திரங்கள் பலவும் இதிலும் கூறப்பட்டாலும், யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களையும் சொல்லும். வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக்வேதம் உதவினால் காரியத்தில் செய்ய யஜுர்வேதம் உதவும். ஸாமம் என்றால் மனதை சாந்தப் படுத்துவது என்று அர்த்தம். தேவசக்திகளையும், பரமாத்மாவையும் நமக்கு அருகே கொண்டு வரச் செய்வது ஸாமவேதம். ஒருத்தரை சந்தோஷப் படுத்த முகஸ்துதி செய்கின்றோம் அல்லவா? அப்படி ஸ்தோத்திரம் செய்யச் செய்வது ஸாமவேதம். ஸாம வேத மந்திரங்கள் அனைத்தும் ரிக்வேதத்தில் உள்ளவையே எனச் சொல்லப் பட்டாலும் இதில் ஆத்ம ஸ்ரேயஸும் தேவதா ப்ரீதியையும் விசேஷமாய் அளிக்கும் பாடல் உருவில் அமைந்து இருப்பதால் தனிச் சிறப்புப் பெற்றிருக்கிறது.அடுத்து அதர்வன் என்றால் புரோகிதர் என அர்த்தம் அதர்வா என்ற பெயருடைய ரிஷின் மூலம் பிரகாசமடைந்த வேதம் அதர்வ வேதம். பலவிதமான ஆபத்துகளையும் போக்கிக் கொள்ளும் மந்திரங்கள் மாந்த்ரீகம், தாந்த்ரீகம் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள் கோரமான பலவேறு ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில் இருக்கின்றன. அதே சமயம் உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் இருக்கின்றன.

உலகத்து சிருஷ்டி விசித்திரத்தைக் கொண்டாடும் ப்ருத்வி ஸூக்தம் என்னும் ஸ்லோகம் அதர்வ வேதத்தில் இருக்கிறது. யக்ஞங்களை மேற்பார்வை இடுகின்றவரை பிரம்மா எனச் சொல்லுவது வழக்கம்.. அந்த பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லுவது வழக்கம். இன்று பிரசித்தி அடைந்த பத்து உபநிஷத்துக்களுக்குள் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம் என்ற மூன்று உபநிஷத்துகள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தவையே. அதிலும் மோக்ஷத்தைப் பற்றி விவரிக்கும் மாண்டூக்ய உபநிஷத் அதர்வ வேதம் ஆகும். மற்ற மூன்று வேதங்களுக்கான பொதுவான காயத்ரி மந்திரத்தை உபநயனத்தின் போது உபதேசம் செய்வார்கள். ஆனால் அதர்வ வேதத்தைக் கற்க வேண்டுமென்றால், ஏற்கெனவே உபநயனம் ஆகி இருந்தாலும் மீண்டும் ஓர் முறை உபநயனம் செய்து கொண்டே அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு பின்னர் அதர்வ வேதத்தைக் கற்கவேண்டும். மற்ற மூன்று வேதங்களுக்குமான பொதுவான காயத்ரி அதர்வ வேதத்துக்கு இல்லை. வேதங்களின் பொதுவான பெருமை, இது தான் தெய்வம், இவரைத் தான் வழிபடவேண்டும் என்று சொல்லாமல் எந்தத் தேவதையை எப்படி வழிபட்டாலும் ஒரே வழியில் கொண்டுவிடும் என்று காட்டுவது மட்டுமே தான்.

அதர்வண வேதத்தில் யுத்தத்தில் உண்டாகும் பலவிதமான காயங்களுக்கான சிகிச்சை முறைகள், அவற்றுக்கான மருந்துக்கான மூலிகைகள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லி இருக்கிறது. போஜராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான இயந்திரங்களைத் தயாரிக்க வேண்டிய அடிப்படைகளை விவரித்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. அவ்வளவு ஏன்? கல்லணை கட்டப் பட்டு 2,000 வருஷங்களுக்கு மேலாகியும் இன்றைக்கும் அதன் அமைப்பைப் பற்றி வியக்கின்றனர்.

எல்லாக் கலைகளும், விஞ்ஞான அறிவியல் நுட்பங்களும் இந்தியர்களுக்கு நன்கு தெரிந்தே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் ஏற்படும் அழிவுகள் உண்டாகக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வை இருந்ததாலேயே மனப் பக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டும் இவை சொல்லிக் கொடுக்கப் பட்டது. சாதாரணமானவர்கள் இவற்றை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்பதும் காரணம். ஆனால் இவை அனைத்தும் தவறான கண்ணோட்டத்திலே பார்க்கப் படுகிறது. வராஹ மிஹிரரின் பிருஹத் ஸம்ஹிதையில் இல்லாத சாஸ்திர ஞானங்களே இல்லை என்று சொல்லுகின்றனர். இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டது.

இந்தியர்களாய்ப் பிறந்திருக்கும் நம்முடைய கலாசாரமும், நாகரீகமும் மிகவும் புராதனமான ஒன்று. எப்போது என்று சொல்ல முடியாத அநாதியான காலகட்டத்தில் இருந்தே நம் கலாசாரம் கண்ணியத்துடனும், கட்டுக்கோப்புடனும் இருந்து வந்திருக்கின்றது. உண்மையில் நாம் நம்முடைய இந்த அருமையான கலாசாரத்தைச் சேர்ந்தவர்களாய் இருப்பதில் பெருமை அடைய வேண்டும். அதைக் கட்டிக் காக்க, உலகுக்குத் தெரிவிக்க முற்பட வேண்டும். ஆனால் நடப்பது என்ன??? நம் நாகரீகம், அநாகரீகம் என்றும் நம் கலாசாரம் முற்றிலும் பழைமையானது, வெறுக்கத் தக்கது எனவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களால் விதைக்கப் பட்ட உணர்வாகும். இந்த எதிர்ப்புணர்வு இன்றைய நாட்களில் மிகவும் அதிகம் ஆகி நம்முடைய அருமையான கலாசாரத்தைக் கட்டிக் காப்பதற்குப் பதிலாக வெறுப்பே கொண்டிருக்கின்றோம். இந்தியர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் முட்டாள்கள் என்ற உணர்வை நாமே ஏற்படுத்திக் கொள்ளுவதோடல்லாமல், நம்மை நாமே முட்டாள்கள் எனவும் எண்ணுகின்றோம்.

1.கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு மற்ற எந்த நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை. ஆங்கிலேயர் வரும்வரைக்கும் உலகிலேயே செல்வம் மிகுந்த, தன்னிறைவு பெற்ற ஓர் நாடாகவே இருந்து வந்தது. அடிமைத் தனம் என்பது அறவே இருந்தது இல்லை.

எண்கள் முறையில் கணிதம் இந்தியாவிலே தான் ஆரம்பிக்கப் பட்டது. இந்தியர்களாலேயே கண்டு பிடிக்கப் பட்டது. கிறிஸ்துவுக்கு முன்னரே இவை இந்தியாவில் வழக்கத்தில் இருந்திருக்கின்றது. ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு முன்னரே ஆர்ய பட்டா என்னும் இந்தியர் பூமியின் சுற்றுப்பாதையின் அளவு, அமைப்பு , வேகம் போன்றவற்றைக் கணக்கிட்டுக் கூறி விட்டார்.

உலகின் முதல் பல்கலைக்கழகம் தக்ஷசீலாவில் ஆரம்பிக்கப் பட்டது. கிட்டத் தட்ட 60 விஷயங்களுக்கு மேல் கற்பிக்கப் பட்டது. நாளந்தாவில் ஆரம்பிக்கப் பட்ட பல்கலைக் கழகமும் உலகளவில் பிரபலமான ஒன்றாய் இருந்தது. சம்ஸ்கிருத மொழி அனைத்து மொழிகளுக்கும் மூலம் எனக் கருதப் பட்டது. ஹிப்ரூ மொழிக்கும், லத்தீன் மொழிக்கும் முந்தைய மொழி சம்ஸ்கிருதமே என அறியப் படுகின்றது. மூத்த மொழியாக இருப்பதோடு அல்லாமல், இன்றைய விஞ்ஞானத்திற்குப் பயனாகும் வகையிலும், ஒழுங்கான முறையிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. இந்திய மக்கள் மட்டுமின்றி இந்தியக் கலாசாரத் தாக்கம் உள்ள மற்றச் சில நாடுகளிலும் சம்ஸ்கிருதம் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சம்ஸ்கிருதம் என்றாலே ஒழுங்கு என்றும், சுத்தமானது என்றும் அர்த்தம். உலகின் முதல் மருத்துவமுறை ஆயுர்வேதமே எனக் கருதப் பட்டது. முதல் அறுவை சிகிச்சையும் ஆயுர்வேதத்திலே இந்தியாவிலே செய்யப் பட்டது. குழந்தை பிறப்புக்காக அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டிருக்கின்றது.

கொலம்பஸ் இந்தியாவின் செல்வ வளத்தைப் பற்றிக் கேள்விப் பட்டே இந்தியாவைத் தேடி வந்தவர் பாதை மாறித் தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக அமெரிக்கக் கண்டத்தைக் கண்டறிந்தார். கடல் பயணமும் இந்தியர்களாலேயே, சிந்து நதிக்கரையில் கண்டு பிடிக்கப் பட்டது. சித்தாந்த சிரோன்மணி என்னும் நூலில் புவனகோசம் ஆறில் பாஸ்கராசாரியார் என்னும் கணித விஞ்ஞானி தான் முதன் முதல் பூமியின் புவி ஈர்ப்பு சக்தியைப் பற்றிக் கண்டறிந்தார் எனச் சொல்லப் பட்டிருக்கிறது. ஐஸக் நியூட்டன் பிறப்பதற்கு 400 வருஷங்கள் முன்னரே இவர் கண்டறிந்தார்.



நம்ம திறமைகளை நினைச்சு நாமே பெருமைப் பட்டுக்கலாம். அதோடு சோழ அரசர்கள் காலத்திலேயே குடவோலை முறையில் தேர்தல்களும் நடத்தப் பட்டு வந்திருக்கிறதையும் கட்டாயமாய் அறிந்திருப்போம். பல ஆங்கிலேய பொறியியல் துறை வல்லுநர்களும் வியக்கும் வண்ணம் கட்டப் பட்ட கல்லணைக்கு(ம்ம்ம்ம்ம், இன்னும் பார்க்கலைங்க! :() ஈடு, இணை சொல்ல முடியுமா? கோயில்களை எடுத்துக்குங்களேன்! இப்படிப் பிரம்மாண்டமான கோயில்களை மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசனாலும் கட்டி இருக்க முடியாது அல்லவா?? கற்களைக் கொண்டு வந்து சேர்த்து, ஆயிரக்கணக்கான சிற்பிகளை வேலை வாங்கி, ஒவ்வொரு வாசலாக, ஒவ்வொரு நிலையாகக் கோபுரம் நிர்மாணித்து, அங்கே வெளிச்சம், காற்று வர முன் யோசனையுடன் ஏற்பாடுகள் செய்து, ஆனால், நாம் இது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிஞ்சுட்டு வரதைப் பத்திக் கவலை கூடப் படறதில்லை. நம்மாலே நிச்ச்யம் இம்மாதிரியான கோயில்கள் கட்ட முடியாது. ஆனால் இருக்கிறதைக் காப்பாத்தலாம் அல்லவா??? பழமைக்கு மதிப்புக் கொடுக்கக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா?

டிஸ்கி: பல்வேறு புத்தகங்களிலிருந்தும், தெய்வத்தின் குரல் புத்தகங்களிலிருந்தும்
நக்ஷத்திர வாரத்திற்கெனத் திரட்டியவை இந்தத் தகவல்கள்.

3 comments:

  1. நல்லாயிருக்கு இந்த கட்டுரையும்.

    ReplyDelete
  2. மெளலி, இதுக்குப் பேரு தான் நடுநிலைமையா?? :))))))) நன்றிப்பா, தொடர்ந்து படிச்சதுக்கும் பின்னூட்டங்களுக்கும். இன்னும் ஒரு வாரம் அதுக்கப்புறமா கொஞ்சம் எல்லார் பதிவையும் எட்டியாவது பார்க்க முடியும்னு நினைக்கிறேன்! :))))))))

    ReplyDelete
  3. நல்ல முயற்சி.
    அதர்வ வேதம் குறித்த ஒரு கேள்வி http://koottanchoru.wordpress.com/ ல் வந்திருந்தது. அப்போ நான் கூகிளார் கிட்டே கேட்டபோது உங்க பதிவு கண்ணில் பட்டது

    if you serach as Atharva vetha and Islam you'll land with interesting details. If you have not read its worth doing so. Do not stop with one site. Just explore few.

    http://www.virutcham.com

    ReplyDelete