எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 15, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கனின் தீபாவளிக் கொண்டாட்டம்



.ஆன்மீகப் பயணம் பக்கத்தில் தான் இந்தப் பதிவைப் போட்டிருந்தேன்.  யாரும் அங்கே ஜாஸ்தி வரதில்லையா! போணி ஆகிறதில்லை. :D, (பேரைப் பார்த்து பயந்துடறாங்க போல! :P, பரவாயில்லைனு இங்கே காப்பி, பேஸ்டி இருக்கேன். அரங்கன் கொண்டாடிய தீபாவளியைப் பத்திப் படிங்க.  இன்னிக்குக் காலம்பரத்தான் துலாக் காவிரி நீரை ஆண்டாளம்மா அரங்கன் அபிஷேஹத்துக்குத் தங்கக் குடத்தில் கொண்டு போறதைப் பார்த்தேன்.  கையிலே காமிராவோ, செல்லோ இல்லாததால் படம் எடுக்க முடியலை.  நான்எங்க குடியிருப்பின் மாடியிலே walking போறச்சே அங்கே இருந்து பார்த்தேன்.  மின்சாரம் அவுட்.  பதிவு போகுதானு தெரியல



அரங்கன் தீபாவளி கொண்டாடுவது அமர்க்களமாக இருக்கும் என ஸ்ரீரங்கம் வரும் முன்னரே கேள்விப் பட்டிருக்கேன்.  நேற்றுக் காலையிலேயே கோயிலுக்குப் போக எண்ணம்.  ஆனால் முடியவில்லை.  மாலை அரங்கன் சந்தனு மண்டபத்தில் எட்டு மணி வரை சேவை சாதிப்பான் என்பதைத் தெரிந்து கொண்டு சென்றோம்.  அரங்கன் சேவை அதி அற்புதம்.  எதிரே கிளி மண்டபத்தில் ஆழ்வாராதிகளையும், அப்படியே ஆசாரியர்களையும் சேவித்துக் கொண்டோம்.  அப்படியே விமான தரிசனமும், பர வாசுதேவர் தரிசனமும் செய்து கொண்டோம்.  பெரிய பெருமாள் ஏழு மணிக்கப்புறமாய்த் தான் தரிசனம் தருவார். அதுக்குக் கூட்டம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிருந்தது.  ஆகவே வந்துவிட்டோம்.  இன்னொரு நாள் தான் போகணும்.  போகப் போகக் கவர்ந்து இழுக்கும் கோயிலாக இருக்கிறது. பார்க்கப் பார்க்கத் திருப்தியும் அடையவில்லை. இனி நம்பெருமாளின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்து:


ஆண்டாள் கவலையுடன் அமர்ந்திருக்க, ரங்க மன்னார் வருகிறார்.  இதழ்க்கடையில் சிரிப்பு.  குறும்புச் சிரிப்பு.  "என்ன ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! என்ன விஷயம்? "



"ஒன்றுமில்லை;  தீபாவளி வருகிறது.  அப்பா வருவாரா, மாட்டாரா எனத் தெரியவில்லை."

"ஏன், இங்கே உனக்குப் பட்டுப் பட்டாடைகளுக்கு என்ன குறைவு? இவை போதவில்லையா? இந்தப் பெண்களே...............

"போதும் நிறுத்துங்க!  உங்களை விடவும் அலங்காரப் பிரியர் வேறு யார் இருக்கிறார்கள்?  என் கவலையெல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் அப்பாவுக்குச் சீர் தர இயல வேண்டுமே என்பது தான். "



அரங்கன் இளமுறுவலோடு ஆண்டாள் அருகே அமர்ந்தான்.  ஆயிற்று; நாளை தீபாவளி.  மாமனார் வந்து சீர் கொடுக்க வேண்டும், என மாப்பிள்ளை சும்மா இருக்க முடியுமா!  அவனுடைய அடியார்களை எல்லாம் அவன் தானே கவனிக்க வேண்டும். அதோடு அவன் வேறு எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டுமே.  எண்ணெயில் தானே ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி இருக்கிறாள்.  முதல் நாள் இரவே அரங்கன் எண்ணெய்க் கோலம் காண்கின்றான்.  மற்றவங்க எண்ணெய் தேய்த்துக்கிறதுக்கும் அரங்கன் தேய்ச்சுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே.  இங்கே அரங்கன் கோயிலின் பட்டத்து யானையான ஆண்டாள், ரங்கா, ரங்கா எனப் பிளிற, மேள, தாளங்கள் முழங்க அரங்கன் எண்ணெய்க் காப்பு நடக்கிறது.

அப்பாடா! அரங்கனுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் ஒரு நிம்மதி.  இனிமேலே நம்முடைய அடியார்களைக் கவனிப்போம்.  யாரங்கே, ஆழ்வார்களுக்கெல்லாம் எண்ணெய், சீயக்காய், கொண்டு கொடுங்கள்.  அவங்க வீட்டுப் பெண்களை மறக்காதீங்க.  ஆகவே மஞ்சளும் கொடுக்கணும்.

ஆழ்வார்களுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா!  ஆசாரியர்கள், வைணவத்தைப் பரப்பியவர்கள், அவங்களுக்கு?

இதோ, அவங்களுக்கும் தான்.  அதோடு நாளைக்கு அவங்களுக்கெல்லாம் தீபாவளிப் பரிசும் உண்டு. " அரங்கன் அறிவிக்கிறான். இப்போது அரங்கன் ரகசியமாக, மிக ரகசியமாகத் தன் அடியார் ஒருத்தரை அழைத்து, "ரங்க நாயகிக்கு எண்ணெய் அனுப்பியாச்சா?  அவள் படிதாண்டாப் பத்தினி.  அப்புறமாக் கோவிச்சுக்குவா. சேர்த்தித் திருவிழா  அன்னிக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாள். நான் மறந்துட்டேன்னு நினைக்கப் போகிறாள்." என்று கிசுகிசுக்க, ஆண்டாள், "என்ன விஷயம்?" எனக் கேட்க, அரங்கன் மெளனமாகப் புன்னகைக்கிறான்.

மறுநாள் தீபாவளி அன்று தாயார் ரங்கநாயகி, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அனைவரும் எண்ணெய் அலங்காரம் செய்து கொண்டு திருமஞ்சனமும் செய்து கொள்கிறார்கள்.  அரங்கன் மட்டும் தன்னுடைய அர்ச்சா மூர்த்தியான நம்பெருமாளை உசுப்பி விடுகிறான்.  பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் நடந்து புதுசாக ஆடை, அலங்காரம், மாலைகள் முடிந்ததும், நம்பெருமாளுக்கும் நடக்கின்றது.  நம்பெருமாள் உலாக்கிளம்புகிறார்.  ஆனால் கோயிலுக்குள்ளேயே தான்.

"ஆஹா, அப்பா வந்துவிட்டாராமே, அங்கே இப்போது போக முடியுமா? அனைத்துப் பெரியவர்களும் கூடி இருக்கின்றனரே." ஆண்டாளுக்குக் கவலை.


ஆம்,  பெரியாழ்வார் உட்பட அனைத்து ஆழ்வார்களும், ஆசாரியர்களும் அரங்கனின் சேவையைக் காண மூலஸ்தானத்துக்கு நேர் எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே தனியாகப் பிரிந்து காணப்படும் கிளிமண்டபத்தில் எழுந்தருளுகிறார்கள்.  அனைவரும் அரங்கன் வருகைக்குக் காத்திருக்கப் பெரியாழ்வார் நாணய மூட்டைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.  மாப்பிள்ளையான அரங்கனுக்குச் சீராகக் கொடுக்க வேண்டியவை அவை.  அரங்கனோ சாவகாசமாக மூலஸ்தானத்துக்கு எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்திற்கு வந்து மீண்டும் ஒரு அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகிறான்.

பின்னர் தீபாவளிச் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.  பின்னர் பகல் நான்கு மணிக்குப் பெரியாழ்வார் சீராகக் கொடுத்த நாணய மூட்டைகள் அரங்கனைச் சுற்றிப் பெரியாழ்வார் சார்பில் கோயில் அரையர்களால் வைக்கப் படுகிறது.  இந்த நாணய மூட்டையை "ஜாலி" அல்லது "சாளி" என்கிறார்கள்.  இவற்றை ஏற்றுக் கொள்ளும் அரங்கன் தம் மாமனார் பெருமையை உலகறியக் காட்ட வேண்டி இரண்டாம் பிராகாரத்தில் நாணய மூட்டைகளோடு வலம் வருகிறான்.  பின்னர் மீண்டும் கர்பகிருஹத்துக்கு எதிரிலுள்ள சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.

மெல்ல மெல்ல இரவு எட்டு மணி ஆகிறது.  தனக்காகக் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசாரியர்களைக் கிளி மண்டபத்திற்கு வந்து அரங்கன் ஒவ்வொருவராகப்பெயரைச் சொல்லி அழைக்க, ஒவ்வொருவருக்கும் அரங்கன் சார்பில் தனியாக மரியாதை செய்யப் படுகிறது.  அரங்கனின் மரியாதையைப் பெற்றுக்கொண்ட ஆழ்வார்களும், பதில் மரியாதையைப் பெற்றுக் கொண்ட பெரியாழ்வாரும் அரங்கனிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு தத்தம் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.  ஆனாலும் கூடி இருக்கும் மக்களுக்காக அரங்கன் இன்னும் சிறிது நேரம் அங்கே சேவை சாதிக்கிறான்.  நேரம் ஆவதைக் குறித்துக் கவலை இல்லாமல் பக்தர்களுக்கு சேவை சாதித்துவிட்டுப் பின்னர் அரங்கன் தன் தீபாவளிக் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கிறான்.

ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். "என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?"

"சுவாமி, தங்கள் கருணையே கருணை!" ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி: தினமலர்

17 comments:

  1. ஆன்மீகம்ன்னு தப்பா எழுதாம ஆன்மிகம்ன்னு சரியா எழுதினா நியூமராலஜிப்படி கூட்டம் கூடுமாம். செஞ்சு பாருங்கோ.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு. நாங்களும் தீபாவளி அன்று மாலை சென்று சேவித்து வந்தோம்! சென்ற வருடமோ அதற்கு முந்தைய வருடமோ 1000, 500 ரூபாய் நோட்டு மாலை கூட போட்டு இருந்தார்களாம். இம்முறை இல்லை!

    ReplyDelete
  3. வாங்க இ.கொ. இத்தனை வருஷங்களாய்ச் சொல்லவில்லையேனு நினைச்சேன். புலி தான் மாத்தினார். இந்தப் பெயரை அவர் தான் வைச்சார். அவரைப் பிடிங்க. :)))))))

    ReplyDelete
  4. வாங்க வெங்கட், ஆமாம், நோட்டு மாலை இருக்குமானு நாங்களும்தேடினோம். இல்லை. :(

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு... நன்றி அம்மா...

    ReplyDelete
  6. பார்க்காத ஒன்றை தெரிந்து கொண்டேன். விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆன்மீகப் பயணங்கள் இனி இங்கேயே வந்து விடுமா?! அங்கே போக வேண்டாமே?

    ReplyDelete
  7. இதுவரை தெரிந்திராத விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி

    ReplyDelete
  8. வாங்க டிடி, இருமுறை பாராட்டியதுக்கு நன்னி ஹை.

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், உங்களுக்கும் சேம், ஆனால் இந்த ஒரு பதிவு தான் இங்கே போட்டேன். மற்ற ஶ்ரீரங்கம் வரலாறுப் பதிவுகள் எல்லாம் அங்கே தான் போகும், இங்கே பல விஷயங்களும் எழுதுவதால் சரியாக வராது. மன்னிக்கவும். :)))

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, நன்றி.

    ReplyDelete
  11. அருமையா எழுதியிருக்கீங்க. சுவாரசியமான நடை. 'படிதாண்டா பத்தினி'னு ஸ்ரீரங்கம் தாயார் (ரங்கநாயகி?) பத்தி அடிக்கடி எழுதுறீங்க - இதுக்கு எதானும் கதை இருக்கா? ஏன் படி தாண்டுறதில்லே? உற்சவம் எல்லாம் கிடையாதா?

    ஆன்மீகப் பதிவு படிக்க ஆள் வராதது வருத்தம் தான் - ஆன்மீகத்துகாக இல்லை, ஆளுக்காக. அதாவது உங்க எழுத்துக்காக. (ஆன்மீகம் படிக்கலின்னா எங்க கட்சி கூடுதுங்கோ :)

    ஆண்டாளுக்கு பூர்வீகக் கதை உண்டு தெரியுமோ? (சமயம் கிடைக்கிறப்போ அசுவத்தாமன் சொல்றதா சொல்லியிருக்கார்)

    ReplyDelete
  12. படிதாண்டா பத்தினி'னு ஸ்ரீரங்கம் தாயார் (ரங்கநாயகி?) பத்தி அடிக்கடி எழுதுறீங்க - இதுக்கு எதானும் கதை இருக்கா? ஏன் படி தாண்டுறதில்லே? உற்சவம் எல்லாம் கிடையாதா?//

    அப்பாதுரை, விரைவில் இது குறித்து ஸ்ரீரங்கம் தொடரில் வரும். :))))) உற்சவங்கள் உண்டு.



    //ஆன்மீகப் பதிவு படிக்க ஆள் வராதது வருத்தம் தான் - ஆன்மீகத்துகாக இல்லை, ஆளுக்காக. அதாவது உங்க எழுத்துக்காக. (ஆன்மீகம் படிக்கலின்னா எங்க கட்சி கூடுதுங்கோ :)//

    நான் எழுதறது ஆன்மிகமே இல்லையே! வெறும் புராண, பக்திக் கதைகளே. ஆன்மிகம் எழுத வேறே இன்னும் திறமைசாலிகள் இருக்காங்க. எழுத ஆரம்பிச்ச புதிசிலே ஆன்மீகப் பயணம் என்ற இந்தப் பெயரை நண்பர் சூடான் புலி பதிவு பிரிக்கையிலே வைச்சார். அப்புறமா மாத்தலை. :)))))) ஆன்மிகம்படிக்கவும் ஆட்கள் இருக்காங்களே. எனக்கு நிறையத் தனிமடல்கள் வரும். பலரும் குடும்பக் கஷ்டங்களைச் சொல்லி என்ன செய்யலாம்னு கேட்கிறாங்க. ஹிஹிஹி, என்னையே கடவுள்னு நினைச்சிருப்பாங்க போல. இன்னும் சிலர் புராண, இதிகாசங்களிலே சந்தேகங்கள் கேட்பார்கள். ஆகையால் பின்னூட்டங்கள் தான் போடறதில்லை. நிறையப் பேர் மெளனமாய்ப் படிக்கிறாங்கனு தெரியும். :)))))))

    ReplyDelete
  13. அப்பாதுரை, மறந்தே போயிட்டேனே, அஸ்வத்தாமாவை ஆண்டாளின் பூர்வகதையைச் சீக்கிரமா எழுதச் சொல்லுங்க. ஆவலோடு காத்திருக்கேன்.

    ReplyDelete
  14. பிரமாதமா எழுதி இருக்கீங்க. நேர பாக்க ஏங்க வைக்கறது உங்க எழுத்து. இதுக்கே இப்படின்னா உங்க ஸ்ரீரங்கம் தொடரை படிச்சா கும்பகோணத்துல செட்டில் ஆற எண்ணத்தை மாத்திண்டு நான் ஸ்ரீரங்கமே வந்துடுவேன் போல இருக்கே. :))
    நாங்க சென்னைல இருந்தப்போ பக்கத்துல இருந்த பெருமாள் கோவில்ல திருவிழா நடக்கும்போது தினமும் பெருமாள் புறப்படறதுக்கு முந்தி நடக்கும் வையாளி சேவையை தவறாமா பாக்க போய்டுவோம். அப்பா! ரொம்ப அழகா இருக்கும். இதை நாங்க மிஸ் பண்ணவே மாட்டோம். அப்ப எல்லாம் அப்பா சொல்லிண்டே இருப்பார் அரங்கன் வையாளி சேவையை பாக்க ஆயிரம் கண் வேணும்னு. வையாளி சேவைன்னாலே ஸ்ரீரங்கம்தான்னு அடிக்காத குறையா சொல்லுவார். :) அப்பா அப்படி சொல்லும்போதெல்லாம் எப்படியாவது நானும் ஒரு தடவையாவது நிச்சயமா ஸ்ரீரங்கம் வையாளி சேவை பாத்தே ஆகணும்னு நினைப்பேன். இப்பவும் நினைக்கறேன். பாக்கலாம். நீங்க இந்த சேவையை பாத்திருக்கீங்களா?

    ReplyDelete
  15. வாங்க மீனாக்ஷி, அரங்கனின் இந்தத் திருவிளையாடல் முழுசையும் எனக்கும் பார்க்கக் கொடுத்து வைக்கலை. ஆனால் அலங்காரத்தைப் பார்த்தேன், ஆழ்வாராதிகளையும் தரிசித்தேன். வையாளி சேவையை மதுரையில் பலமுறை பார்த்திருக்கிறேன். இங்கே ஸ்ரீரங்கத்தில் பார்க்கணும். கொடுத்து வைச்சிருந்தாக் கிடைக்கும்.

    அப்புறம் ஒரு விஷயம், நாங்களும் கும்பகோணத்தில் செட்டில் ஆக நினைச்சு வீடு கூடப் பார்த்தோம். ஆனாலும் மனசில் என்னவோ நெருடல்... வேண்டாம்னு விட்டுட்டோம். கும்பகோணம் இங்கே மாதிரி நிச்சயமா இல்லை. இது தனி ரசனை தான். இன்னமும் இங்கே தீபாவளிக் கொண்டாட்டம் முடியலை. :)))))) திங்கள் கிழமையிலிருந்து சரியாகும் என்றார்கள். :))

    ReplyDelete
  16. சிறீரங்க நாதனின் தீபாவளி கொண்டாட்டங்கள் நாங்களும் கலந்துகொண்டோம்.

    மகிழ்ச்சி.

    ReplyDelete