எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 29, 2015

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??

அனுமதி வாங்காமல் போட்டதற்காக சற்று முன்னர் போட்ட பதிவை எடுத்துவிட்டேன். என்னமோ மனசு கேட்கவில்லை. வேறு யாரும் சொல்லும் முன்னர் நாமே  செய்துடுவோம்னு எடுத்துட்டேன். முகநூலில் இருக்கும் நண்பர்கள் அதில் பார்த்துக் கொள்ளவும். இப்போது என்னோட பழைய பதிவு ஒன்றே மீள் பதிவாகப் போட்டுடறேன். அனைவரும் மன்னிக்கவும்.


ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும்.  .  இந்த வருடம் செப்டம்பர் பதினைந்தாம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று சாமவேதிகளுக்கான உபாகர்மா!

தகவல்களுக்கு நன்றி:தெய்வத்தின் குரல்!

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.  .  பொதுவாக மீள் பதிவு போடுவதில்லை;  என்றாலும் இது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் கடந்த சில வருடங்களாகப் போட்டு வருகிறேன்.  ஏற்கெனவே படித்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  நன்றி. பொறுத்தருள்க! :)))))

13 comments:

  1. வீட்டிலும் அறிந்து கொண்டார்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  2. என் வேத வாத்தியார் அசை போட்டபோது .... முன்னேயெல்லாம் எல்லாரும் லீவு போட்டுவிட்டு (அலுவலகமே விடுமுறை இல்லாவிட்டால்) குளத்தங்கரைக்கு போய் மதிய குளியல் முடித்து உபாகர்மா செய்து முடித்து மேளதாளத்துடன் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்களாம். இன்று மாணவர்கள் யாரும் வரவில்லை. அலுவலகம் போகிறவர்கள் வரவில்லை. ரிடயர் ஆனவர்கள் மட்டுமே வந்தனர். வீட்டுக்கு வந்தால் ஆரத்தி எடுக்கக்கூட ஆள் இல்லை! :(
    காலம்மாறிக்கொண்டே இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் வருத்தமாய் இருக்கு. ஆனால் இங்கே கொஞ்சம் பரவாயில்லை. அம்மாமண்டபம் காவிரிக்கரையிலும் சிருங்கேரி மடத்திலும், திருவானைக்கா சங்கரமடத்திலும் அனுசரித்தார்கள். முன்னெல்லாம் இந்த ஆரத்தி எடுப்பது எனக்கு ஒரு உற்சாகமான விஷயம். ஆரத்தி எடுத்தால் தட்டில் காசு போடுவார்களே! அதுக்காகவே குடித்தனம் எல்லோர் வீட்டிலும் பூணூல் போட்டுக் கொண்டு வருபவர்களுக்கு ஓடிப் போய் ஆரத்தி எடுப்பேன். கல்யாணம் ஆன வரைக்கும் இது நடந்திருக்கு! :) இப்போக் காசு கொடுத்தால் கூட ஆள் இல்லை! :(

      Delete
    2. அதோடு எனக்குத் தெரிந்து எழுபதுகள் வரை அரசு அலுவலகங்களில் ஆவணி அவிட்டத்திற்கு அரசு விடுமுறை இருந்து வந்தது. :) அதன் பின்னரே மாற்றினார்கள்.

      Delete
  3. விவரங்களைப் படித்து அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அநேகமா ஒவ்வொரு வருஷமும் போடறேனே!

      Delete
  4. நன்றாக விவரமாக உள்ளது பதிவு. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். அன்புடன்

    ReplyDelete
  5. ஆரத்தியை மறந்துவிட்டேன். . இப்போது ஆரத்தி எடுத்துவிடுகிறேன். கீதா தகவல்களுக்கு மிக நன்றிமா.

    ReplyDelete
    Replies
    1. ஆரத்தி எடுங்க வல்லி. நன்றி.

      Delete
    2. இந்தப் பதிவுக்கு எக்கச்சக்கப் பார்வையாளர்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இருந்திருக்காங்க என்று கூகிளார் சொல்கிறார். ஆனால் கருத்துச் சொன்னவர்கள் சொற்பமே! :)

      Delete
  6. நேற்று 29 -ம் தேதி பிராம்மணர் அல்லாத ஒருவர் ஸ்ராவண சனிக்கிழமை என்று கூறி எங்களை அவர்கள் வீட்டுக்குக் கூட்டிப் போய் விருந்து படைத்தார்கள். நைவேத்தியப் பிரசாதங்களுடன் சிம்பிளான பூஜை. பின் சாப்பாடு.எங்களை சாம வேதிகள் என்று சொல்கிறார்கள். ஆகவே என் சகோதரர்கள் பிள்ளையார் சதுர்த்தி காலத்தில் பூணூல் மாற்று வார்கள். காயத்ரி ஜெபிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவரவர் வழக்கம் கடைப்பிடிக்கின்றனர். நாங்களும் சாமவேதிகள் தான். இந்த வருஷம் செப்டெம்பர் 15 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. காயத்ரி ஜபம் இன்று இனிதே முடிந்தது.

      Delete