எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 16, 2025

நான் வந்துட்டேன். வந்துட்டேன்னு சொல்லு!

 ஸ்ரீரங்கத்திலே இருந்து இங்கே வந்தாச்சு. மனமே சரியில்லை. ஆனால் வேறே வழி இல்லாமல் மனசைச் சமாதானம் செய்து கொண்டு தான் கிளம்பி வந்திருக்கேன். முன்னே எல்லாம் ரங்க்ஸ் கூட வருவார். இங்கே சரியில்லை எனில் உடனே பயணச்சீட்டைத் தேதி மாற்றிக் கொடுக்கச் சொல்லிக் கிளம்புவோம். நம்ம இடம் தான் நமக்கு சரி. ஆனால் இப்போ இப்படிச் சொல்ல முடியலை. அதுக்காக எவ்வளவோ மனச்சமாதானங்கள், செய்து கொண்டிருக்க வேண்டி இருக்கு. சில விஷயங்களை வெளியே சொல்லிவிட முடியாது. இருந்து பார்த்தால் தான் புரியும். ராமரை அங்கே தன்னந்தனியாக விட்டுட்டு வந்திருக்கேன். பாவம், சாப்பாட்டுக்கு என்ன செய்வாரோ? இன்னிக்குக் கோகுலாஷ்டமி வேறே. அங்கே இருந்தால் பால், தயிர், பழம் மட்டுமாவது கிருஷ்ணனுக்கு வைச்சு இரண்டு பூக்களைப் போட்டுச் செய்யலாம். பண்டிகை என்றெல்லாம் கொண்டாடப் போவது இல்லை. ஆனால் தினசரி நிவேதனம் உண்டே. அது மாதிரிச் செய்யலாம். இங்கே சரியாக வராது. இங்கே வீடு எல்லாம் பெரிதாக உள்ளது. வில்லா வகையைச் சேர்ந்த வீடு. ஒரு சின்ன டவுன்ஷிப் மாதிரி உள்ளது. அக்கம்பக்கம் இருப்பது வாசலில் நிற்கும் கார்களில் இருந்தும் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதர்களைப் பார்க்கவே முடியவில்லை. இதை விட அம்பேரிக்க வாழ்க்கை இன்னமும் எளிதானதும், க்ஷ்டமில்லாததுமாக இருக்கும். இங்கேயே இருக்கணும் என்றால் என்னால் முடியுமா? தெரியலை. போகப் போகப் பார்க்கணும்.

நம்ம ஊரில் ஆட்டோக்களில் ஏற முடியாதது போல் இங்கே கார்களில் ஏற முடியவில்லை. விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குப் போக டாக்சியில் ஏற முடியலை. எப்படியோ கஷ்டப்பட்டுப் பின்னிருக்கையில்  சிரமப்பட்டு ஏறினேன். படுக்கையில் படுத்துக் கொள்ள ஸ்டூல் வைச்சு ஏற வேண்டி இருந்தது. அப்புறமாப் பையரிடம் சொல்லி அவசரமாக ஆளைக் கூப்பிட்டுக் கட்டிலை அரை அடி போல் கீழிறக்கி மெத்தையைப் போட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. குளியலறை ஒரே கீக்கிடம். ஒரே பக்கம் குளிக்கும் முற்றம் , கழிவறை, தரையோ ஒரே வழுக்கல். காலை வைத்தால் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

இன்னும் வரும் விரிவாக

3 comments:

  1. தோகா சென்று சேர்ந்தது அறிந்தேன். மகிழ்ச்சி. எல்லாம் நல்லதாகவே நடக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.

    ReplyDelete
  2. தோஹா சென்று சேர்ந்தது மகிழ்ச்சி. ஏர்போர்ட்ல அந்த பெரிய பொம்மையைப் பார்த்தீங்களா?

    உண்மையைச் சொன்னால் தோஹா வாழ்க்கை எளிதாக இருக்கும். நீங்க வில்லா டைப் வீடு என்று சொல்வதால் பக்கத்துல கடைகள்லாம் இருக்கா என்று தெரியவில்லை. கல்ஃப் தேசங்கள் மிகவும் பாதுகாப்பானவை, குறிப்பாக பெண்களுக்கு. நிறையபேர் உதவுவாங்க. என்ன ஒண்ணு.. அக்டோபர் மாதம்தான் காலநிலை நல்லா இருக்கும். மார்ச் வந்துவிட்டால் வெயில் வாட்ட ஆரம்பித்துவிடும். முதல்ல anti skid பிளாஸ்டிக் குளியலறைக்குள் வைத்துக்கொள்ளுங்கள் (விலை குறைவு, பாதுகாப்பானது). வழுக்குவதுமாத்திரம்தான் பெரிய பிரச்சனை (ஹால்லயும்). அதை மாத்திரம் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வீடு முழுவதும் கார்ப்பெட் போட்டிருந்தேன். பிறகு அதில் அழுக்கு நிறைய சேர்கிறது என்று பிறகு எடுத்துவிட்டேன்.

    உடம்பு சரியில்லை என்றால் டாக்டர் மற்றும் மருத்துவமனை வசதிகள் கல்ஃபில் நன்றாக இருக்கும். அம்பேரிக்காவில் அப்படிக் கிடையாது.

    எப்போதுமே நம்ம வீடு, நாம் இருக்கும் ஊர் போல வராது. ஆனால் கல்ஃப் ஓரளவு பரவாயில்லை. நமக்குத் தேவையான நம் உணவுப்பொருட்கள் எல்லாமே சட் சட் என்று கிடைத்துவிடும்.

    ReplyDelete
  3. இண்டர்னெட் இருக்கும். கரண்ட் போகாது. உதவியாளர்கள் சல்லிசாகக் கிடைப்பார்கள். கிடைக்காது என்று சொல்லும் பொருள் ஒன்றுகூட இருக்காது. தேடினா அகத்தி இலைகூட கிடைக்கும்.

    நம்ம ஊர் போல சுத்திவர சைவர்கள்தாம் இருக்கணும், அசைவ உணவு வாசனையே வரக்கூடாது என்று இருக்க முடியாது.

    சரவண பவன் போன்ற நம்ம ஊர் சாப்பாடு, விலை அதிகமில்லாமல் கிடைக்கும். எதற்கும் குறைவு கிடையாது.

    நல்லதே நடக்கும் கீதா சாம்பசிவம் மேடம்.

    ReplyDelete