எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 07, 2025

பெண்களின் மனோபாவம் மாறுமா?

 கணவர் இறந்த பின்னரும் பெண்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்றே எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் எனக்கு என்னமோ இன்னமும் மனதில் எதுவும் ஒட்டவில்லை. ஏதோ போல் இருக்கு. எந்தச் சின்ன விஷயமானாலும் ரங்க்ஸிடம் சொல்லியே பழக்கம் என்பதால் சட்டென மனமும், உடலும் அவரைத் தேடி ஓடும். பின்னர் சாட்டை அடி போல் மனதில் அடி விழுந்ததும் யதார்த்த நிலை புரியும். சமாளித்துக் கொள்வேன். அதிலும் இரவுகளில் அவர் பக்கத்தில் படுத்திருக்கும் நினைப்பில் பேசிவிடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். 12 மணி வரை தூக்கம் வராது. பின்னர் ஏதோ தூங்குவேன். எப்படி ஆனாலும் 3 மணி அல்லது மூன்றரை மணிக்கு விழிப்பு வந்துடும். இங்கே அடுக்களையில் போய் எதுவும் செய்ய முடியாது என்பதால் அப்படியே படுத்திருப்பேன். ஐந்து மணிக்குப் பிள்ளை, மருமகள் இறங்கி வரும்போது அவங்களுக்குத் தொந்திரவாய் இருக்கக் கூடாது எனப் படுத்தே இருப்பேன். சுமார் ஐந்தே முக்கால் அளவில் மருமகள் குழந்தைக்குக் காலை உணவு, மதிய உணவு தயாரித்து முடித்துவிட்டுக் குழந்தையைத் தயார் செய்ய மாடிக்குப் போவாள். 

அப்போ எழுந்திருந்து ஸ்வாமிக்கு விளக்கேற்றி (ஸ்வாமி விளக்கேற்றியதும் சட்டெனக்குங்குமம் வைத்துக் கொள்ளக் கை நெற்றிப் பொட்டிற்குப் போகும். கஷ்டத்துடன் நிறுத்திப்பேன்.)  பின்னர் காஃபி போட்டுப்பேன். சில நாட்கள் முதல்நாள் டிகாக்ஷனே இருக்கும். ஊரில் இருந்தவரை மாமா இருந்தால் குடிக்க மாட்டார் என்பதால் புதிதாகப் போடுவேன். இங்கே அப்படி எல்லாம் பார்ப்பதில்லை. ஏதோ குடித்து வைப்பேன் .அங்கே ஸ்ரீரங்கத்தில் இருந்தவரைக்கும் காலை எழுந்ததும் வழக்கம்போல் வாசல் தெளிக்கவெனப் போகவே கஷ்டமாக இருக்கும். எதிர் வீடுகளிலெல்லாம் அந்த நேரம் வாசல் தெளிக்க வந்தால் நம்மைப் பார்த்ததும் என்ன நினைச்சுக்குவாங்களோ என்று தயக்கமாக இருக்கும். ஆனால் என்னைப் பத்து நாட்களும் பார்க்கவே பார்க்காத ஒருத்தர் எந்தவிதமான மன வேறுபாடும் இல்லாமல் வந்து பார்த்துவிட்டு வெற்றிலை, பாக்கெல்லாம் வாங்கிக் கொண்டு போனார். இன்னொருத்தரோ மாமா இறந்த அன்றிலிருந்து நான் தோஹா கிளம்பும்வரை வெளியேயே வரலை.  இன்னும் சிலர் வந்துட்டுப் பார்த்துட்டுப் பின்னர் அவங்க அவங்க வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.அபார்ட்மென்டில் இது ஒரு பிரச்னை. தனி வீடெனில் தெரியாது. ஏனெனில் இங்கெல்லாம் இன்னமும் சாஸ்திர, சம்பிரதாயம் பார்ப்பவர்களும் கடைப்பிடிப்பவர்களும் இருக்காங்களே!

 நான் வெளியே வந்தால் அவங்க கண்ணில் பட்டு விடுவோமோ எனக் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வெளியே வருவேன். வெளியே போக வேண்டிய வேலைகள் இருந்தனவே. வங்கிக்கு, மருத்துவரைப்பார்க்கவெனப் போக வேண்டி இருந்தது. ஆனால் நெருங்கிய சொந்தங்கள் எந்தவிதமான மன வேறுபாடும் காட்டாமல் சகஜமாக வந்தனர். இதில் முக்கியமாக வெங்கட்டின் மனைவி, இன்னொரு இளம் சிநேகிதி, பெண்களூரிலிருந்து வந்தவர் என வந்தார்கள். அபார்ட்மென்டிலேயே சிலர் சகஜமாக வந்து நான் தனியாக இருப்பதால் ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டுவிட்டுப் போனார்கள். சிலர் உட்கார்ந்து பேசி ஆறுதலும் கொடுத்தனர். என்றாலும் ஒரு சிலர் இன்னமும் இந்த வேறுபாடுகளைப் பார்ப்பது, அதுவும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பார்ப்பது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.

இதுவும் கடந்து போகும் என நானும் கடந்து வந்து விட்டேன். வங்கிகளுக்குச் செல்வதெனில் மதியம் பனிரண்டுக்குக் கிளம்பிப் போய் மூன்றுக்குள் திரும்புமாறு பார்த்துக் கொண்டேன். அந்த நேரம் வீட்டில் இருக்கும் பெண்களின் ஓய்வு நேரமாக இருக்குமே. மருத்துவரைப் பார்க்க இரவு எட்டு மணிக்குப் போவேன். இப்படியே ஜூன், ஜூலை மாதங்களைக் கடத்திவிட்டு ஆகஸ்டிலும் பதினைந்து தேதி வரை ஓட்டிவிட்டு இங்கே வந்தாச்சு. இங்கே வந்த மறுநாளே சுப்புத்தாத்தா பேசினார் என்றாலும் வருவதாகச் சொல்லலை. அவர் வயதுக்கும் உடம்புக்கும் அவரை வரச் சொல்வதெல்லாம் சரியாய் இருக்காது என்பதால் நானும் அழைக்கவில்லை. தக்குடு தொடர்பில் இருந்தார். ஒரு நாள் கூப்பிட்டுப்பேசினார். என்னை அவங்க வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி இருக்கார். அதன் கஷ்டம் இன்னும் அவருக்குப் புரியலை. வண்டியில் ஏறுவதே கஷ்டமாக இருக்கு. நடப்பது இன்னொரு கஷ்டம். இங்கெல்லாம் எங்கே போனாலும் டைல்ஸ் வழவழப்பாக இருப்பதால் சறுக்குகிறது. அதிலும் மருத்துவமனையில் எனக்கு நடக்கவே பயமாக இருந்தது/இருக்கு. நல்லவேளையாக வீல் சேர் கொண்டு வந்து விடுகின்றனர். இப்படியே போய் மருத்துவப் பரிசோதனை, கைரேகைகள் பரிசோதனை எல்லாமும் முடிச்சுக் கத்தார் ஐடியும் வாங்கிக் கொண்டு மருத்துவக் கார்டும் வாங்கி ஆச்சு. எவ்வளவு நாட்கள் இங்கே இருப்பேனு எல்லோரும் கேட்கிறாங்க. எனக்கே தெரியாது. இங்கே இன்னும் மனமே ஒட்டலை. இருப்பதும் தனித்தனி வீடுகள். யாரும் யாரையும் வந்தோ போயோ பார்ப்பதில்லை. யார் இருக்காங்கனு கூடத் தெரியாது.

நாட்கள் மட்டும் போய்க் கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் எதுவும் எடுத்துவரலை. வெங்கட் மனைவி கின்டிலில் படிக்கச் சொல்லி இருக்கார். முயற்சி பண்ணணும். இப்போதைக்கு முகநூலில் தான் அதிகம் படித்து வருகிறேன். சில சமயம் திரும்பிப் போவோமா எனச் சந்தேகம் வருது. எப்படியும் பையர் மாமாவின் ஆறாம் மாசத்திதிகளை ஸ்ரீரங்கத்தில் போய்ச்செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கார். அப்போக் கூட்டிப் போகச் சொன்னால் கஷ்டம் என்கிறார். என்னமோ பார்ப்போம். கடவுள் விட்ட வழி.

30 comments:

  1. கீசா மேடம்... உங்களுக்கு ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும் (ஏனென்றால் நீங்க பசங்க குடும்பத்தோடு தனியாக இருந்ததில்லை). இது சில மாதங்களிலேயே பழகிவிடும். என் தனிப்பட்ட கருத்து, குங்குமம் வைப்பதில் தவறில்லை. அது சிறுவயதிலிருந்தே பெண்களுக்கு வந்த ஒன்று. என் அம்மாவும் கடைசி வரை குங்குமம் வைத்திருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. குங்குமம்னு வைக்கலை அப்பாதுரை சொன்னாப்போல் ஸ்டிக்கர் பொட்டு வைச்சுக்கறேன். ஆனாலும் மனதில் ஒட்டலை. :)

      Delete
  2. பழைமை முறை மாறாமல் இருப்பவர்கள், மாறிய காலத்திற்கு ஏற்றவர்கள் அல்லர். அதனால் நீங்க அவங்களைப் பற்றி மனதுல போட்டுக்கொள்ளாதீர்கள். முடிந்ததென்றால் சிறிது எடை குறைப்பை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்புங்கள், அது உங்களுக்கும் கவனத்தைத் திருப்பும்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, ஒரே தளத்தில் எதிர் எதிரே இருப்பதால் தான் பிரச்னை. :) எடை குறைய என்ன செய்யணும்னு புரியலை. சாப்பிடுவதே கொஞ்சம் போலத் தான். சாதம் எனக்கு மட்டும் தான் வைக்கிறாள். அதிலேயே மிஞ்சிப் போகுதே என மருமகள் சொல்கிறாள். ராத்திரியும் தோசை 2, சப்பாத்தி 2 என்று தான். இரண்டே வேளை தான் சாப்பாடு. எடை எப்படி ஏறுது மட்டும் புரியறதில்லை.

      Delete
    2. இதை நீங்க பப்ளிஷ் பண்ண வேண்டாம். (அப்படி நீங்க நினைத்தால்). 1. சாதம் தடா. பால் பொருட்கள் தடா. எதைச் சாப்பிட்டாலும் 1 தான். இனிப்பு தடா 2. முதலில் சிறிது தூரம் நடக்கப்பாருங்கள். அதில் சிரமம் இருந்தால் உட்கார்ந்த இடத்திலிருந்து சிறிது யோகா முயற்சிக்கலாம். அது கையைத் தூக்குவது காலை மடக்குவது போன்று. அதிகமாகச் செய்யவேண்டாம். 3. ஒரு இடைவெளியில் சாப்பிடுங்க. அதாவது காலை 9-மாலை 5 என்று வைத்துக்கொண்டு அதற்குள் சாப்பிட்டு முடித்துவிடுங்க. தண்ணீர் அருந்தலாம். மற்றவற்றிர்க்குத் தடா. 4. முடிந்தால் தினமும் எடையைக் கவனித்து வாருங்கள். நிச்சயம் மாற்றம் தெரியும் 10வது நாளிலிருந்து.

      Delete
    3. சாதம் சாப்பிடுவ்தே இரண்டு கைப்ப்பிடிதான். அதையும் நிறுத்தினால் என்ன சாப்பிடுவேன்? மற்றபடி பிள்ளைக்குச் சப்பாத்தி தான வேண்டும் என்பதால் மருமகள் பெரும்பாலும் சப்பாத்தியே பண்ணுகிறாள். ஆகவே இரவு நேரம் சில நாட்கள் சப்பாத்தி. அதோடு இங்கே நேரப்படி எல்லாம் சாப்பிட முடியலை/முடியாது. வழக்கமாக ஸ்ரீரங்கத்தில் காலை பதினோரு மணிக்குள் மாலை ஏழு மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிடுவோம். இங்கே ஏழு மணிக்கு மேல் தான் பண்ணவே ஆரம்பம். காலையும் நேரம் ஆயிடும். விடுமுறை தினம் எனில் மத்தியானம் ஒரு மணியாவது ஆகும். என் விருப்பப்படி எல்லாம் நேரப்படி சாப்பிட முடியாது. தண்ணீர் இங்கே குழாயில் வருவது குளிக்க, துவைக்க, பாத்திரம் தேய்க்கத் தான். சமையலுக்கும் குடிக்கவும் வாட்டர் கேன் தண்ணீர் தான். அது எனக்கு அவ்வளவா ஒத்துக்கறதில்லை. வயிற்றில் வாயுக்கொண்டு விடுகிறது என்பதால் மாத்திரை சாப்பிட மட்டும் வெந்நீராகப் போட்டுக்கறேன். அப்படியே தண்ணீரைக் குடித்தால் வயிற்றில் நிச்சயமாய் வலி வருது. வயது ஆயிடுச்சே. எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டி இருக்கு.

      Delete
  3. நீங்க லேப்டாப் வைத்திருந்தால், டெலெகிராப் அப்ளிகேஷன் மூலமா பழைய நாவல்களைப் படி இறக்கிக்கொண்டு படிக்கலாம். இருந்தாலும் சேரில் உட்கார்ந்துகொண்டு கம்ப்யூட்டரில் படித்துக்கொண்டிருப்பது கால்களுக்குப் பாரமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நேரம் உட்கார முடியறதில்லை. இந்த டெலக்ராஃப் அப்ளிகேஷன் விஷயம் புதுசு. முயற்சி செய்து பார்க்கிறேன்.

      Delete
  4. இருக்கும் இடமே ஸ்ரீரங்கம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

    இன்னும் ஆறு மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலநிலை சூப்பராக ஆரம்பிக்கும். பிறகு மார்ச்சிலிருந்து வெயில் கொளுத்த ஆரம்பிக்கும்.

    தனியாக இருக்கும்போது இசை கேட்கலாம் (mp3 அல்லது யூடியூபில் மெதுவாக வைத்துக்கொண்டு).

    கொஞ்சம் யோசித்து ஒரு ஒழுங்குமுறை வைத்துக்கொண்டால், கவனம் திரும்பும். நான் மதியம் 12 மணி வரை ரொம்பவே பிஸி. போன் வந்தால்கூட என் ஒழுங்குமுறை தவறிவிடும். அப்படி பிஸியாக வைத்துக்கொண்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே வீட்டு வேலைனு எதுவும் இல்லை என்பதாலும் பொழுதை நகர்த்துவது கஷ்டமா இருக்கு. என்னாலும் ரொம்ப நேரம் நின்னுண்டு எதுவும் செய்ய முடிவதில்லை. நேற்றுப் பேசினதில் பையர் நவம்பரில் ஆறாம் மாசத்துக்குப் போறச்சேக் கூட்டிக் கொண்டு போவதாகச் சொல்லி இருக்கார். இந்த பிஎஸ் என் எல் பிரச்னையை முடிக்கணுமே. நான் தான் போயாகணும்.

      Delete
  5. //இங்கு இன்னும் எவ்வளவு நாட்கள் என்று எல்லோரும் கேட்கிறாங்க// யார் கேட்கிறாங்க என்று நீங்க எழுதலை. யார் கேட்டாலும் அதைப்பற்றிக் கவலைப் படாதீங்க. உங்க பையர் மகள் வீட்டில் எத்தனை யுகங்கள் இருந்தாலும் யார் அதைப்பற்றிக் கேட்பது?

    ReplyDelete
    Replies
    1. அநேகமா சொந்தங்களிலிருந்து நண்பர்கள் வரை எல்லோருமே கேட்கிறாங்க. தப்பாய் எல்லாம் கேட்பதாய்த் தெரியலை. சும்மாத் தெரிஞ்சுக்க ஆர்வம்.

      Delete
  6. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

    ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதை நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை கீதாம்மா.

    இது ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும் தாங்கிக்கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

    இதுவும் கடந்து போகும்...... தைரியமாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், என்னை எல்லோரும் தைரியமான பெண்மணினு சொல்லிச் சொல்லியே தைரியமே போயிடுத்துனு நினைக்கிறேன். :) நான் மட்டும் தனியாக இருப்பது இன்னும் பழகவில்லை. திரும்பத் திரும்ப ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது. இன்னமும் ஜீரணிக்க முடியலை.

      Delete
  7. மாமா உங்களுடனேயே மானசீகமாக இருக்கிறார்.   தனியாக இருக்கும்போது நீங்கள் அவருடன் எப்போதும் பேசுவது போல மனதளவில் பேசலாம்.  குங்குமம் வைப்பதில் தவறில்லை.  இதெல்லாம் நாமாக ஒரு குற்ற உணர்வில் நினைத்துக் கொள்வதுதான்.   நடந்ததது நடந்தவையாய் இருக்க நல்லது இனி நடக்க உற்சாகமாய் இருங்கள்.  நீங்கள் அபப்டி இருப்பதுதான் மாமாவும் விரும்புவார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், குங்குமம்னு வைச்சுக்கலை. ஸ்டிக்கர் பொட்டு வைச்சுக்கறேன். மற்ற்படி யாருக்கும் நான் எதுவும் செய்யணும்னு இல்லை என்பதாலோ என்னமோ வாழ்வதில் அர்த்தம் இல்லாமல் இருக்கு. இருந்து என்ன செய்யப் போறோம்னு நினைப்பு வருது.

      Delete
    2. அக்கா நீங்கள் இதுவரை நிறைய செய்தாச்சே! அதனால இப்ப உங்களுக்கு மன ஓய்வும் உடல் ஓய்வும் மிக முக்கியம் அக்கா. யாருக்கும் தேவையில்லை எல்லாரும் வளர்ந்தாச்சு அவங்கவங்க வேலை பொறுப்புகள், உங்கள் பொறுப்புகள் இனி இந்த வயதில் வேண்டாமே அக்கா உங்களுக்காக அந்த இடத்தில் உங்களுக்குப் பிடித்ததை செய்து கொண்டு இருக்க முயற்சி செய்ங்க. நலல்து நடக்கும் அக்கா.

      ஸ்ரீராம் சொல்லியிருக்கும் கடைசி வரியை ஆமோதிக்கிறேன்

      கீதா

      Delete
    3. மாமாவுக்குக் கடைசி வரை அவர் முன்னாடி போய்விட்டால் நான் தனியாகப் பிள்ளையிடமோ பெண்ணிடமோ இருப்பதில் உள்ள சிரமம் நன்றாகப் புரிந்திருந்தது. என்னிடம் நீ ஸ்ரீரங்கத்திலேயே இருந்துடு என்றே சொல்வார். எனக்குக்கால் பிரச்னை இல்லை எனில் நானும் கிளம்பி இருக்க மாட்டேன்.

      Delete
  8. அங்கு ஏதும் லைப்ரரி கிடையாதா?  புத்தகங்கள் எடுத்து வர முடியாதா?  ஆனால் கிண்டிலில் வாசிக்கக் கிடைக்காத புத்தகங்களே இல்லை.  உங்களுக்கும் தெரியும்.  

    ReplyDelete
    Replies
    1. லைப்ரரி இருக்கணும். இவங்களுக்கு அவ்வளவாத் தெரியலை. தக்குடு போலப் பல வருஷங்கள் இருப்பவங்களைக் கேட்டால் தெரியும். அது இருந்தாலும் புத்தகங்கள் எடுத்து வரவோ திருப்பிக் கொடுக்கவோ பிள்ளையைத் தான் சொல்லணும். அவருக்கு ஆஃப் ஷோர் அடிக்கடி போக வேண்டி வந்தால் காலை போனால் இரவு தான் வீட்டுக்கு வர முடியும். வேலைத் தொந்திரவு அதிகம்.

      Delete
  9. கிச்சனுக்குதான் போகவேண்டுமா என்ன?  உங்கள் அறையில் ஒரு எலெக்ட்ரிக் அடுப்பு வைத்துக் கொண்டு, காஃபி போன்ற சின்ன சமாச்சாரங்களை தேவைப்படுபவற்றை அவர்களை தொந்தரவு செய்யாமல் செய்து கொள்ளலாமே..

    ReplyDelete
    Replies
    1. இங்கே யார் வீட்டிலும் எரிவாயு அடுப்பு இருப்பதாய்த் தெரியலை ஸ்ரீராம். மின்சார அடுப்புத் தான். காயில் இல்லை. முன் காலத்தில் இருந்தாப்போல் மெல்லிய வலை. மேலே க்ளாஸ் டாப். அதில் தான் சமைக்கணும்/ மற்ற இடங்களில் எல்லாம் அனுமதி இல்லாமல் அடுப்பெல்லாம் வைச்சுக்க முடியாது. அதோடு நான் சமையலறையில் பார்த்துக் கொண்டு தான் போய்க் காஃபி போட்டுப்பேன். லீவு நாட்களில் அவங்கல்லாம் எழுந்து கீழே வருவதற்குள்ளாக முடிச்சுடுவேன். வேலை நாட்களில் தான் நேரம் ஆகும்.

      Delete
    2. சமையலறைக்குப் பக்கத்தில் தீயணைப்புக் கருவியும் இருக்கு. அம்பேரிக்காவில் அலார்ம் இருக்கும். அது கத்தி ஊரைக் கூட்டும். ஹோமம் எல்லாம் செய்யும்போது அலார்மைக் கழட்டி வைச்சுட்டுத் தான் பண்ணுவோம். :)

      Delete
  10. மற்றவர்கள் என்ன நினைப்பர் என்று நினைக்காமல், அவர்கள் முகங்களை கவலைபபடாமல் நீங்கள் நீங்களாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரோடையும் தானே இருந்தாக வேண்டி இருக்கு. அவங்களைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாதே!

      Delete
  11. அக்கா மாமா உங்களோடுதானே இருக்கிறார் அப்புறம் நோ வொர்ரிஸ்!

    இரண்டாவது, குங்குமம் எல்லாம் வைப்பது தவறா என்ன? அக்கா ப்ளீஸ் ...அம்மன் குங்குமம் அவளே சக்தி எனவே வைத்துக் கொள்வதில் பிரச்சனை இல்லை. மத்தவங்க என்ன நினைப்பாங்கன்றதை விடுங்க அக்கா. நீங்க நீங்களா இருங்க.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவர் என்னோடு இருப்பதாகவே நினைப்பு மட்டும் மாறவே இல்லை. சில சமயங்கள் மாமாவிடம் பேசறாப்போல் பையரிடம் பேச வாய் வரும். கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திப்பேன். :)

      Delete
  12. அக்கா, இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம் என்பது போல ரங்கநாதர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.

    ஸ்ரீரங்கத்துல பக்கத்துவீடுகள் உங்களைப் பார்க்கவே இல்லைனா அதெல்லாம் சாஸ்திரமா என்ன? அட போங்கக்கா. சாஸ்திரம் சம்பிரதாயம்னு. ஒருவருடைய மனசுதான் மிக முக்கியம்.

    அக்கா ப்ளீஸ் உங்களை அப்படி நினைத்துக் கொண்டு ஒதுங்காதீங்க. என் பிரியமான அத்தையின் கணவர் இறந்தப்போ எங்க அத்தைக்கு 38 வயது. அத்தை ஒதுங்குவாங்க. நான் அவங்களை பிடிச்சு இழுத்து முன்னால நிக்க வைச்சு முதல்ல ஆசி வாங்குவேன் அவங்க கையால பொட்டு வைக்கச் சொல்வேன். வெத்தலை பாக்கு கொடுக்கச் சொல்வேன். என் மாமிகளையும் அப்படித்தான். நம்ம வீட்டுக்கு வந்தாலும் அவங்களுக்கும் வைத்துக் கொடுப்பதுண்டு. அதற்காகவே முன்ன இருந்தே எல்லாரும் வந்தால் எல்லாருக்கும் ஒரே போல பழங்களை வைத்துக் கொடுத்துவிடுவேன். ஒருவருக்குக் குங்குமம் கொடுத்து மற்றவருக்குக் கொடுக்காமல் என்று நான் செய்வதில்லை. சின்ன வயதிலிருந்தே இப்படி மனதை நோகடிக்கக் கூடாது என்று ...

    ஸோ அக்கா ப்ளீஸ் அங்கு ஸ்ரீரங்கம் போன்று யாரும் இருக்க மாட்டாங்க இல்லையா? ஸோ அதை எல்லாம் மனசுல போட்டுக்காதீங்க.

    வாட்சப்பில் அங்கு இருக்கும் நட்புகள், நல்ல உறவுகளிடம் பேசி, வாசிக்க புத்தகங்கள் பெற்றுக் கொள்ள முடியுமா என்று பாருங்க.

    நீங்கள் நீங்களாக இருங்க அக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நானும் எல்லோருக்கும் வெத்திலை, பாக்குக் கொடுக்கும் வழக்கம் வைச்சிருக்கேன் தி/கீதா. எங்கள் தளத்தில் கணவனைச் சின்ன வயசிலேயே இழந்த ஓர் பெண்மணி அதுக்கப்புறமாப் படிச்சுக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியவர் இருக்கார். அவரை எல்லாப் பண்டிகைகளுக்கும் அழைப்பேன். மாவிளக்குக் கூட வைச்சுக் கொடுப்பேன். இப்போ எனக்கும் எதிர்வீட்டு மாமி ஆடி கடைசி வெள்ளியன்று மாவிளக்குப் போட்டுவிட்டுக் கொண்டு வந்து கொடுத்தார். சகஜமாக வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார். ஆறுதல் சொல்லுவார்.

      Delete
    2. என் சித்தி அசோகமித்திரனின் மனைவியைச் சித்தப்பா இறந்தாலும் நாங்கள் ஒதுக்கியதில்லை. எல்லா முக்கிய விசேஷங்களுக்கும் அழைப்போம். என் அண்ணா பெண் நிச்சியதார்த்தத்துக்குக் கூடத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார். நாங்க அதெல்லாம் பார்ப்பதில்லை. மாமியாருக்கு இப்படி ஆனப்போக் கூட அவங்களை எல்லாவற்றிலும் முன்னிலைப் படுத்தியே வைத்துக் கொண்டோம். கணுவிற்குக் கூட அவங்களை விட்டே மஞ்சள் கீறவும் சொன்னோம்.

      Delete