எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 01, 2026

அமைதி நிலவட்டும்! ஜெய் ஸ்ரீராம்.

 அடுத்து என்ன என்பது புரியலை. ஏற்கெனவே முன்னர்  நான் கத்தார், தோஹா வந்த ஓரிரு மாதங்களிலேயே எங்க குடியிருப்புக்கு அருகேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. . இப்போவோ வேறே மாதிரி நிலைமை. நேற்றுக் காலை எழுந்ததுமே மொபைலில் புதுசாக ஏதேனும் செய்தி வந்திருக்கானு பார்த்தப்போத் தான் யுத்தம் ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் காலையிலிருந்து அடுத்தடுத்து அவசர எச்சரிக்கைச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. நேற்று சனிக்கிழமை வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் எல்லோருமே வீட்டில் தான். என்றாலும் கவலையும் பயமும் உலுக்கத் தான் செய்தது. இதற்கு முன்னால் இந்தியாவில் ஜாம்நகரில் கணவர் வேலை மாற்றத்தில் சென்றப்போ நாங்களும் அங்கே இருந்தோம். சில/பல கலவரங்கள், ஏர்பேஸ் தாக்குதல் என அப்போவும் கொஞ்சம் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. நேற்று அடுத்தடுத்து நடந்த ஏவுகணைத் தாக்குதல் இரவு பத்துமணி வரை நீடித்தது. பின்னர் அமைதி. மௌனம் . காலை எழுந்து பார்த்தால் நிலைமை கொஞ்சம் மாறி இருப்பதாகச் செய்தி. என்றாலும் இன்னமும் கவலையோ பயமோ எச்சரிக்கை நிலைமையோ மாறவில்லை எனத் தோன்றுகிறது. இறைவனைப் பிரார்த்திப்பதை விட வேறே வழி இல்லை. அனைவரும் பயம் இன்றி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.