முதலில் சரித்திரம்: பிடிக்கலைனாலும் அம்பி கேட்டிருப்பது எலிசபத் ராணியைப் பத்தி. முதலாம் எலிசபத் ராணி என்றால் 1533-ல் பிறந்து 1558 வரை (இறக்கும் வரை) இங்கிலாந்தின் ராணியாக இருந்தார். இவரைப் பற்றிய தொலக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் வெளி வந்துள்ளது. "கன்னி ராணி" என்று அழைக்கப் பட்டார். அப்போதிருந்த அமெரிக்கக் காமன்வெல்த்தில் இருந்த மாநிலம் ஒன்று இவரின் இந்தப் பெயரில் தான் இன்றுவரை வர்ஜீனியா என அழைக்கப் படுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். தற்போது இருக்கும் 2-ம் எலிசபத் பிறந்ததே 1926-ல் தான். இவர் திருமணம் செய்து கொள்ளும்போது இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதுனு நினைக்கிறேன். இவர் திருமணத்துக்குக் காந்தி பரிசாக கதரினால் கையால் நெய்யப் பட்ட ஒரு மேசை விரிப்போ அல்லது உடுத்தும் உடுப்போ பரிசாகக் கொடுத்தார் எனச் சொல்லப் பட்டது. அதுக்கு முன்னாலேயே தாகூர் 1913 அல்லது 14-ல் நோபல் பரிசு வாங்கி விட்டதாய்க் கேள்விப் பட்டேன். ஆகவே முதலில் அம்பிக்குச் சரித்திரமே தெரியலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே எடுத்த எடுப்பிலே எனக்குக் கோபம் வந்து விட்டது. 41-ல் தாகூர் இறக்கும்போது இந்த 2-ம் எலிசபத் பட்டத்துக்கே வரலை! அவர் 50களில் தான் எப்போவோ பட்டத்துக்கு வந்தார்னு நினைக்கிறேன். இப்போ அடுத்து "கீதாஞ்சலி"யைப் பத்தி.
உண்மையில் "கீதாஞ்சலி"க் கவிதைத் தொகுப்பை ஆன்மாவின் ராகங்கள் எனக் கூறலாம். நம் பக்தி உணர்வில் பலவிதமான வழிமுறைகள் உண்டு. அவற்றில் நாயகன், நாயகி பாவமும் ஒன்று. தன்னை நாயகியாகப் பாவித்துக் கொண்டு, இறைவனை நாயகனாய்ப் பாவித்துக் கொண்டு எழுதிய அநேகம் கவிதைகள், முக்கியமாய் பக்தி இலக்கியக் கவிதைகள் பல நம் தமிழிலும் உண்டு. கீதாஞ்சலியும் அப்படி ஒரு ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய கவிதைத் தொகுப்பு. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது என்றாலும் அது எல்லாம் பின்னால் தான். முதலில் ஆங்கிலத்தில் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்தவர் "யீட்ஸ்" என்பவர், என்றாலும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு முழுக்க முழுக்க வங்காள மொழியில் தாகூர் எழுதிய எல்லாக் கவிதைகளுமே என்று சொல்ல முடியாது எனவும் ஒரு விமரிசனம் உண்டு.
தன்னுள்ளே உறையும் இறை ஒளியைக் கண்ட பாரதி எப்படிக் குதித்துக் கொண்டு,"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்! அதை ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தேன், வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் , குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ?" என்க் கேட்டதோடு அல்லாமல், "தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்!" என ஆடிப் பாடி குதிக்கவும் செய்தார். அதே போல் தாகூரும் தன்னுள்ளே உறையும் இறைவனைக் கண்டார். தன் ஆன்மா இறைவனுடன் சேரும் நாளுக்ககக் காத்திருந்தார். தேடினார். அலைந்தார். புலம்பினார். அழுதார், சிரித்தார். ஆனந்தம் அடைந்தார். அவரின் பல்வேறு விதமான் உணர்வுக் கலவை இது. பக்தி இலக்கியத்தைச் சேர்ந்தது. தேவாதி தேவனே, என்றும், அரசர்க்கு அரசே என்றும், தலைவருக்கு எல்லாம் தலைவா என்றும், புலவருக்கு எல்லாம் புலவனே என்றும் அவர் அழைத்ததும், உருகித் தவித்ததும் இறைவனை நோக்கி. தன் ஆன்மா இறைவனுடன் ஒன்றாய்க் கலக்கும் நாளுக்காகத் தினம் தினம் அவனுக்காகப் புதிய பாடல்கள் பாடி, அவனை வரவேற்றுத் தொழுது, அழுது, அரற்றித் தன்னையே அவனுக்கு நிவேதனமாகப் படைக்கத் தான் தயாராய் இருப்பதைச் சொல்கிறார். இன்னும் வரலியேனு ஏங்குகிறார். இதைப் புரிந்து கொண்டு அந்த உணர்வோடு ஒன்றிப் போய்ப் படித்தால் கவிதை புரியும், நம்மால் எழுத முடியாவிட்டாலும், மனதில் உணர்வுகள் பொங்கும்!
அடுத்துக் கண்ணபிரான் எழுதியது பத்தி. அம்பி வழக்கம்போல் இதையும் சரியாப் படிக்கலை. (எப்பவும் பூரிக்கட்டையும் தங்கமணியும்னு நினைப்பு இருந்தால் இப்படித் தான் :P) கண்ணபிரான் எழுதி இருந்தது தேசீய கீதத்தைப் பற்றியும் அது வெளியிடும்போது நாட்டில் இருந்த சூழ்நிலை பற்றியும், அதை ஆங்கில அரசு எப்படித் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டது என்பது பற்றியும். அம்பி இன்னொரு முறை கண்ணன் பதிவிலே போய்ப் படிங்க! "விதாதா" எனத் தாகூர் கூப்பிட்டது இறைவனையே, ஒரு போதும் அன்னிய அரசனை அல்ல! இதையும் "யீட்ஸ்" குறிப்பிட்டதாய்க் கண்ணன் எழுதி இருக்கிறார். அம்பி நிஜமாவே நல்லாப் படிச்சுட்டுப் பின்னூட்டம் கொடுங்க ப்ளீஸ்! கண்ணன் எழுதி இருப்பது தற்போது உள்ள எலிசபத் அரசியின் தந்தை ஆன 6-வது ஜார்ஜுக்கும் முன்னர் இருந்த 5-ம் ஜார்ஜ் மன்னர். அவர் இந்தியா வந்திருந்திருக்கிறார்.. அப்போது காங்கிரஸ் மகாசபையில் வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டபோது தாகூரின் "ஜனகணமன" கடவுள் வாழ்த்தாகத் தான் பாடப் பட்டிருக்கிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வாழ்த்தி இல்லை! :(((((((
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, August 25, 2007
அம்மாஞ்சி கேட்ட கேள்வி!
தாகூரின் "கீதாஞ்சலி"யை நாம் மொழிபெயர்க்கும்போதே சந்தேகம் தான். எத்தனை பேர் சரியாப் புரிஞ்சுப்பாங்கன்னு! இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்யலாம்னு செய்தேன். ஆனால் நேற்று மொழிபெயர்ப்பின் போது எனக்குக் கொஞ்சம் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வரிகளில்:
"மேரே கீத் நே உதார் டாலே ஹைம்! உஸே சுந்தர் வேஷ் அவுர் சஜ்ஜித் ஹோனே கா கர்வ நகி ஹை! கஹனே ஹமாரா சந்யோக் நஹி ஹோனே தேதே, வே தும்ஹாரே அவுர் மேரே பீச் மே ஆ ஜாதேஹை! உன்கி ஜங்கார் ஸே தும்ஹாரி தீமி ஆவாஜ் தப் ஜாதி ஹை!"
இதை மொழி பெயர்க்கும்போது கொஞ்சம் தடுமாறியே போனேன். வார்த்தைகள் உண்மையாகவே தகுந்த விதத்தில் வெளிப்படவில்லை.என்றாலோ அல்லது கொஞ்சம் மாறினாலும் அற்புதமான இந்தக் கவிதைத் தொகுப்பின் அர்த்தமே மாறிப் போய் ஒரு காதல் கவிதையாக அடையாளம் காட்டப் படும். தாகூரின் நோக்கமோ, அவரின் இறை உணர்வும், அதைக் கண்டு உணர்ந்த அவர் தன் சொல் வலிமையால் அதை வெளிப்படுத்திய விதமும் கேவலப் பட்டுப் போயிருக்கும். ஆகவே கூடியவரை தக்க வார்த்தைகளைப் போட்டு எழுத நினைத்த என்னால் எழுத முடியாமல் போய் ஏதோ ஒப்பேற்றினேன். இருந்தாலும் திருப்தி இல்லாமல் பதிவை வெளியிடுவதும், திரும்ப வாபஸ் வாங்குவதும், பின்னூட்டத்தில் விளக்கம் எழுதுவதுமாய் இருந்தேன். அப்போதுதான் முத்தமிழ்க் குழுமத்தில் போட்டதுக்கு, வேந்தர் "சம்மந்தம் இல்லமல் இருக்கிறதே?" எனக் கேட்டு எழுதிய விமரிசனத்தையும், அதற்கு திரு வீஎஸ்கே அவர்கள் என் சார்பில் கொடுத்த விளக்கமும் பார்த்தேன். இனி ஒண்ணும் செய்ய முடியாது எனத் தோன்ற இந்தப் பதிவை ப்ளாகிலும் பப்ளிஷ் பண்ணி விட்டேன். திரு வீஎஸ்கே அவர்களைக் கலாய்த்தும் ஒரு பதில் எழுதி விட்டுத் தான்! :P இது எனக்காகப் போட்டிருக்கேன்! இப்போ அம்பி கேட்ட கேள்வி என்னை அறைகிறாப் போல் இருக்கிறது.
திரு வீஎஸ்கே அவர்கள் என்னைச் சரியான நேரத்தில் காப்பாற்றி இருக்கிறார் என்றாலும் அப்போது அதை நான் உணராமலே இருந்தேன். இருந்தாலும் சரியாக வெளிப்படுத்தாமல் போனது என் மனதை வாள் போல் அறுத்துக் கொண்டே இருந்தது. இன்று அவர் எனக்கு மன்னிப்புக் கேட்டு எழுதியதைப் பார்ததும் ரொம்பவே வெட்கமாயும், வருத்தமாயும் இருக்கிறது. உண்மையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்க அவர் கேட்டதில் இருந்து "பெரியவங்க பெரியவங்க தான்!" என்ற எண்ணமும் என் அல்ப புத்தியும் வெளிப்படையாக ஆனது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ அம்பியின் கேள்விக்கு வருவோமா? அம்பி கேட்டது: " நிஜமாவே தெரியாம தான் கேக்கறேன்: இந்த கீதாஞ்சலியே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் எலிசபத் ராணி மற்றும் அவர் கணவர் (பிரபு) இவர்களைப் புகழ்ந்து பாடப் பட்ட ஒரு பாடல் தொகுப்புனு சொல்றாங்களே உண்மையா? உங்க மொழி பெயர்ப்பும் அதே மாதிரி தான் இருக்கு. தனிப் பதிவாகவே விளக்கவும். கண்ணபிரான் கூட ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க!"
இதைப் பார்த்ததும் முதலில் எனக்குக் கோபம் தான் வந்தது. அம்பியைத் திட்டித் தான் பின்னூட்டம் போட நினைத்தேன். ஆனால் அப்போது தான் திரு வீஎஸ்கே நினைவு வந்தார். தப்பு என் பேரில் இருக்க அவர் என்ன்னிடம் மன்னிப்புக் கேட்டிருக்கையில் அம்பி நிஜமாவே சரித்திர அறிவு கூட இல்லாமல் எழுதி இருக்கும் போது திருத்தணும், அது தான் சரின்னு முடிவு செய்தேன். அது என்னனு இன்னொரு பதிவா எழுதறேனே!
"மேரே கீத் நே உதார் டாலே ஹைம்! உஸே சுந்தர் வேஷ் அவுர் சஜ்ஜித் ஹோனே கா கர்வ நகி ஹை! கஹனே ஹமாரா சந்யோக் நஹி ஹோனே தேதே, வே தும்ஹாரே அவுர் மேரே பீச் மே ஆ ஜாதேஹை! உன்கி ஜங்கார் ஸே தும்ஹாரி தீமி ஆவாஜ் தப் ஜாதி ஹை!"
இதை மொழி பெயர்க்கும்போது கொஞ்சம் தடுமாறியே போனேன். வார்த்தைகள் உண்மையாகவே தகுந்த விதத்தில் வெளிப்படவில்லை.என்றாலோ அல்லது கொஞ்சம் மாறினாலும் அற்புதமான இந்தக் கவிதைத் தொகுப்பின் அர்த்தமே மாறிப் போய் ஒரு காதல் கவிதையாக அடையாளம் காட்டப் படும். தாகூரின் நோக்கமோ, அவரின் இறை உணர்வும், அதைக் கண்டு உணர்ந்த அவர் தன் சொல் வலிமையால் அதை வெளிப்படுத்திய விதமும் கேவலப் பட்டுப் போயிருக்கும். ஆகவே கூடியவரை தக்க வார்த்தைகளைப் போட்டு எழுத நினைத்த என்னால் எழுத முடியாமல் போய் ஏதோ ஒப்பேற்றினேன். இருந்தாலும் திருப்தி இல்லாமல் பதிவை வெளியிடுவதும், திரும்ப வாபஸ் வாங்குவதும், பின்னூட்டத்தில் விளக்கம் எழுதுவதுமாய் இருந்தேன். அப்போதுதான் முத்தமிழ்க் குழுமத்தில் போட்டதுக்கு, வேந்தர் "சம்மந்தம் இல்லமல் இருக்கிறதே?" எனக் கேட்டு எழுதிய விமரிசனத்தையும், அதற்கு திரு வீஎஸ்கே அவர்கள் என் சார்பில் கொடுத்த விளக்கமும் பார்த்தேன். இனி ஒண்ணும் செய்ய முடியாது எனத் தோன்ற இந்தப் பதிவை ப்ளாகிலும் பப்ளிஷ் பண்ணி விட்டேன். திரு வீஎஸ்கே அவர்களைக் கலாய்த்தும் ஒரு பதில் எழுதி விட்டுத் தான்! :P இது எனக்காகப் போட்டிருக்கேன்! இப்போ அம்பி கேட்ட கேள்வி என்னை அறைகிறாப் போல் இருக்கிறது.
திரு வீஎஸ்கே அவர்கள் என்னைச் சரியான நேரத்தில் காப்பாற்றி இருக்கிறார் என்றாலும் அப்போது அதை நான் உணராமலே இருந்தேன். இருந்தாலும் சரியாக வெளிப்படுத்தாமல் போனது என் மனதை வாள் போல் அறுத்துக் கொண்டே இருந்தது. இன்று அவர் எனக்கு மன்னிப்புக் கேட்டு எழுதியதைப் பார்ததும் ரொம்பவே வெட்கமாயும், வருத்தமாயும் இருக்கிறது. உண்மையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்க அவர் கேட்டதில் இருந்து "பெரியவங்க பெரியவங்க தான்!" என்ற எண்ணமும் என் அல்ப புத்தியும் வெளிப்படையாக ஆனது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ அம்பியின் கேள்விக்கு வருவோமா? அம்பி கேட்டது: " நிஜமாவே தெரியாம தான் கேக்கறேன்: இந்த கீதாஞ்சலியே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் எலிசபத் ராணி மற்றும் அவர் கணவர் (பிரபு) இவர்களைப் புகழ்ந்து பாடப் பட்ட ஒரு பாடல் தொகுப்புனு சொல்றாங்களே உண்மையா? உங்க மொழி பெயர்ப்பும் அதே மாதிரி தான் இருக்கு. தனிப் பதிவாகவே விளக்கவும். கண்ணபிரான் கூட ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க!"
இதைப் பார்த்ததும் முதலில் எனக்குக் கோபம் தான் வந்தது. அம்பியைத் திட்டித் தான் பின்னூட்டம் போட நினைத்தேன். ஆனால் அப்போது தான் திரு வீஎஸ்கே நினைவு வந்தார். தப்பு என் பேரில் இருக்க அவர் என்ன்னிடம் மன்னிப்புக் கேட்டிருக்கையில் அம்பி நிஜமாவே சரித்திர அறிவு கூட இல்லாமல் எழுதி இருக்கும் போது திருத்தணும், அது தான் சரின்னு முடிவு செய்தேன். அது என்னனு இன்னொரு பதிவா எழுதறேனே!
Friday, August 24, 2007
வருவாள் மஹாலட்சுமி!
சரியா, தப்பா? தெரியாது?
என் இதயம் ஆகிய இந்தச் சிறிய மலரைப் பறித்து விடு! உடனே ஏற்றுக் கொள்! உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இல்லை எனில் இது வாடிப் புழுதியில் மண் மூடிவிடுமோ என அச்சமாய் உள்ளது.
உன்னுடைய அழகிய மாலையில் வெறும் நாரினால் இந்த மலரைப் பிணைக்காதே! என் தலைவா! உன்னுடைய மிருதுவான தொடுகையால் இந்த அற்ப மலரின் ஊடலைப் போக்கிப் பின்னரே இம்மலரைப் பறிப்பாய்! நான் உன் தொடுகையால் மனநிறைவு பெறும் முன்னரே இந்த தினம் முடிந்து விடுமோ? என்னுடைய வழிபாட்டின் நேரம் தவறி விடுமோ? என எனக்கு அச்சமாக உள்ளது!
இந்த அற்ப மலருக்குச் சிறிது வண்ணமும், வாசனையும் சேர்த்துவிடு! பிறகே உன்னுடைய சேவையில் இந்த மலரை ஏற்றுக் கொண்டு நேரம் வந்ததும் இதற்கு மோட்சம் கொடுத்து விடு!
இறைவா! என்னுடைய பாடல் அழகான ராகங்களால் ஏற்ற இறக்கத்துடன் கூடி உள்ளது. அதற்கு இந்த வேஷத்தால் அழகு அடைந்தமைக்குப் பெருமை ஏதும் இல்லை. ஏனெனில், இந்த அழகான ஆபரணங்களே உன்னை நான் ஆலிங்கனம் செய்து கொள்வதைத் தடுக்கிறது. உனக்கும் எனக்கும் நடுவில் பிரிவை உண்டாக்குகிறது. அதனுடைய ஆரவாரமான ஒலியினால் உன்னுடைய மிருதுவான அழைப்பு அழுந்தப் படுகிறது.
உனக்கு முன் நான் ஒரு கவிஞன் என்றும், புலவன் என்றும் கொண்ட பொய்யான பெருமை தூள் தூளாக நொறுங்கிப் போகிறது. ஏ மாபெரும் கவிஞனே! உன் காலடியில் நான் அமர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையை இப்போது மிக எளிதானதாக்கி விடு! அப்போதுதான் நான் இனிமையான கீதம் இசைக்கும் ஒரு புல்லாங்குழல் போல் ஆகி உன்னுடைய புகழைப் பாட முடியும்!
உன்னுடைய அழகிய மாலையில் வெறும் நாரினால் இந்த மலரைப் பிணைக்காதே! என் தலைவா! உன்னுடைய மிருதுவான தொடுகையால் இந்த அற்ப மலரின் ஊடலைப் போக்கிப் பின்னரே இம்மலரைப் பறிப்பாய்! நான் உன் தொடுகையால் மனநிறைவு பெறும் முன்னரே இந்த தினம் முடிந்து விடுமோ? என்னுடைய வழிபாட்டின் நேரம் தவறி விடுமோ? என எனக்கு அச்சமாக உள்ளது!
இந்த அற்ப மலருக்குச் சிறிது வண்ணமும், வாசனையும் சேர்த்துவிடு! பிறகே உன்னுடைய சேவையில் இந்த மலரை ஏற்றுக் கொண்டு நேரம் வந்ததும் இதற்கு மோட்சம் கொடுத்து விடு!
இறைவா! என்னுடைய பாடல் அழகான ராகங்களால் ஏற்ற இறக்கத்துடன் கூடி உள்ளது. அதற்கு இந்த வேஷத்தால் அழகு அடைந்தமைக்குப் பெருமை ஏதும் இல்லை. ஏனெனில், இந்த அழகான ஆபரணங்களே உன்னை நான் ஆலிங்கனம் செய்து கொள்வதைத் தடுக்கிறது. உனக்கும் எனக்கும் நடுவில் பிரிவை உண்டாக்குகிறது. அதனுடைய ஆரவாரமான ஒலியினால் உன்னுடைய மிருதுவான அழைப்பு அழுந்தப் படுகிறது.
உனக்கு முன் நான் ஒரு கவிஞன் என்றும், புலவன் என்றும் கொண்ட பொய்யான பெருமை தூள் தூளாக நொறுங்கிப் போகிறது. ஏ மாபெரும் கவிஞனே! உன் காலடியில் நான் அமர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையை இப்போது மிக எளிதானதாக்கி விடு! அப்போதுதான் நான் இனிமையான கீதம் இசைக்கும் ஒரு புல்லாங்குழல் போல் ஆகி உன்னுடைய புகழைப் பாட முடியும்!
Wednesday, August 22, 2007
ஹிந்தியில் இருந்து - மொழி பெயர்ப்பு முயற்சி
எனது ஆருயிரே, என் ஜீவனே!, உன்னுடைய உணர்ச்சி மிகுந்த தொடுகையால், என்னுடைய அங்கங்கள் எல்லாம் பூரித்துப் போகிறது. நான் என்னுடைய இந்த உடலை மிகவும் புனிதமான ஒன்றாய் வைத்திருக்க எப்போதும் முயற்சி செய்கிறேன்.
என்னுள்ளே ஒரு அணையா விளக்குப் போல் பிரகாசிக்கும் அந்த விவேகம் என்னும் சுடரானது, நீ ஏற்றி வைத்தது தானே! என் கெடுமதியால் விளையும் எண்ணங்களை அந்த ஒளியின் உதவியால் நான் தூரவே வைத்திருக்க எப்போதும் முயல்கிறேன்.
என்னுடைய இருதயத்தின் அந்தரங்கமான இடத்தில் உள்ள மேடையில் நீ அரியணை போட்டு அமர்ந்துள்ளாய். நான் என்னுடைய இருதயத்தின் அழுக்குகளைப் பூராவும் களைய முயல்கிறேன். உன்னில் இருந்து வரும் பிரகாசமான ஒளிச்சுடரின் நளினமான கிரணங்களால் என் ஆன்மாவும், இதயமும் புனிதம் அடையச் செய்ய எப்போதும் முயல்கிறேன்.
உன்னில் இருந்து கிளர்ந்து எழும் அற்புத எண்ணங்களால் நான் சக்தி உள்ளவன் ஆகிறேன். மேலும் என்னுடைய எண்ணங்களிலும், செயல்களிலும் உன்னை முன்னிலைப் படுத்தி, உன்னில் என்னைக் காண நான் எப்போதும் முயல்கிறேன்.
ஒரு கணம், ஒரே ஒரு கணம், உன்னருகில் என்னை அமர விடு! என் தேவனே! அனைத்தையும் நான் பெற்றவன் ஆகிறேன்.
உன் அருகாமையில் இருந்து நான் விலகிப் போனதும் என் இதயமும், ஆன்மாவும் துக்கத்திலும், வியாகூலத்திலும் ஆழ்ந்து விடுகிறது. அதற்குப் பின் நான் மேற்கொள்ளும் எந்த வேலையும், என்ன சொல்வேன், என் நாதனே! கடினமாகி விடுவதை உணருகிறேன்.
இன்று, இந்தக் கணம், வசந்தமானது தனது தென்றலை அனுப்பி என் சாளரக் கதவைத் தட்டுவதோடு அல்லாமல் மெல்ல ராகத்துடன் முணுமுணுக்கவும் செய்கிறது. என் முற்றத்தில் உள்ள செடி,கொடிகளில் உள்ள மலர்ந்த புஷ்பங்களையும், பூங்கொத்துக்களையும் வண்டுகள் ரீங்காரமிடும் தொனி கேட்கிறது.
இப்போது, இந்தச் சமயம் தான் உன் அருகாமையில் தங்கி இருந்து என் ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்யவும், என் ஆன்மா இசைக்கும் கீதத்தை உன்னைக் கேட்கச் செய்யவும் தகுந்த சாந்திமயமான நேரம் வந்துள்ளது.
என்னுள்ளே ஒரு அணையா விளக்குப் போல் பிரகாசிக்கும் அந்த விவேகம் என்னும் சுடரானது, நீ ஏற்றி வைத்தது தானே! என் கெடுமதியால் விளையும் எண்ணங்களை அந்த ஒளியின் உதவியால் நான் தூரவே வைத்திருக்க எப்போதும் முயல்கிறேன்.
என்னுடைய இருதயத்தின் அந்தரங்கமான இடத்தில் உள்ள மேடையில் நீ அரியணை போட்டு அமர்ந்துள்ளாய். நான் என்னுடைய இருதயத்தின் அழுக்குகளைப் பூராவும் களைய முயல்கிறேன். உன்னில் இருந்து வரும் பிரகாசமான ஒளிச்சுடரின் நளினமான கிரணங்களால் என் ஆன்மாவும், இதயமும் புனிதம் அடையச் செய்ய எப்போதும் முயல்கிறேன்.
உன்னில் இருந்து கிளர்ந்து எழும் அற்புத எண்ணங்களால் நான் சக்தி உள்ளவன் ஆகிறேன். மேலும் என்னுடைய எண்ணங்களிலும், செயல்களிலும் உன்னை முன்னிலைப் படுத்தி, உன்னில் என்னைக் காண நான் எப்போதும் முயல்கிறேன்.
ஒரு கணம், ஒரே ஒரு கணம், உன்னருகில் என்னை அமர விடு! என் தேவனே! அனைத்தையும் நான் பெற்றவன் ஆகிறேன்.
உன் அருகாமையில் இருந்து நான் விலகிப் போனதும் என் இதயமும், ஆன்மாவும் துக்கத்திலும், வியாகூலத்திலும் ஆழ்ந்து விடுகிறது. அதற்குப் பின் நான் மேற்கொள்ளும் எந்த வேலையும், என்ன சொல்வேன், என் நாதனே! கடினமாகி விடுவதை உணருகிறேன்.
இன்று, இந்தக் கணம், வசந்தமானது தனது தென்றலை அனுப்பி என் சாளரக் கதவைத் தட்டுவதோடு அல்லாமல் மெல்ல ராகத்துடன் முணுமுணுக்கவும் செய்கிறது. என் முற்றத்தில் உள்ள செடி,கொடிகளில் உள்ள மலர்ந்த புஷ்பங்களையும், பூங்கொத்துக்களையும் வண்டுகள் ரீங்காரமிடும் தொனி கேட்கிறது.
இப்போது, இந்தச் சமயம் தான் உன் அருகாமையில் தங்கி இருந்து என் ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்யவும், என் ஆன்மா இசைக்கும் கீதத்தை உன்னைக் கேட்கச் செய்யவும் தகுந்த சாந்திமயமான நேரம் வந்துள்ளது.
Tuesday, August 21, 2007
ஜி3, உங்களுக்கு என்மேல் என்ன கோபம்?
யு.எஸ். வந்ததில் இருந்தே தமிழ் எழுதறதுக்கு ஜி3 பண்ண வேண்டியதாப் போச்சு. இ-கலப்பையை, டவுன்லோட் செய்யணும்னு "க்ளிக்"கினால் அது என்னவோ இது சோதனைக்கான டவுன்லோடுதான், உனக்கு வேணும்னா யு.எஸ்.டாலரில் உன்னோட சொத்தை எழுதிக் கொடுன்னு கேட்குது. சரி, நம்ம ஹெட்லெட்டர் தான் தெரியுமேன்னு, நெருப்பு நரியைப் போட்டு எழுத ஆரம்பிச்சா தமிழா அது? தமிழா, தமிழான்னு பாடக் கூட முடியலை. அவ்வளவு மோசம். எல்லாம் இரண்டிரண்டாத் தெரிய ஆரம்பிச்சது. கண்ணாடி தான் சரியில்லையோனு பார்த்தா வீட்டில் எல்லாரும், என்னை அதிசயமாப் பார்த்து, எப்போதில் இருந்து உருது கத்துக்கிட்டுப் படிக்க ஆரம்பிச்சேன்னு கேட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது, தப்பு நம்ம பேரில் இல்லைனு, அப்போதான் கை கொடுத்த தெய்வமாய் திரு விஎஸ்கே அவர்கள் உதவினார். அதில் இருந்து ஜி3 தான் பண்ணிட்டு இருக்கேன். இங்கே ஹூஸ்டன் வந்தும் அதே தான். ஆனால் அதில் என்ன கஷ்டம்னால் இந்த மடிக்கணினிக்கு ஞாபக சக்தி ரொம்பவே அதிகமாப் போயிடுச்சு.
நேத்திக்கு ஒரு கமென்ட் கொடுத்திருப்பேன்: "இது என்ன அநியாயம்?" அப்படின்னு. அது யாருக்குக் கொடுக்கணுமோ அவங்களுக்குப் போட்டும் இருப்பேன். அதுக்குப் பின் வேறே ஏதாவது எழுதி, மத்தவங்களுக்குப் பின்னூட்டம் கொடுக்கணும்னாலோ, அல்லது புதிசாய்ப் பதிவாய் எழுதி ஜி3 பண்ணனும்னாலோ, அது ஜி3 ஆகறதே இல்லை. அதுக்குப் பதிலா நான் போட்ட, "இது என்ன அநியாயம்?"ங்கிற பின்னூட்டமே ஒட்டிக்கிட்டு வந்து எல்லா இடத்திலும் விழுதே! இது ஒரு உதாரணத்துக்குத் தான். சில சமயம் சிலர் பதிவுகளில் பின்னூட்டம் கொடுக்கப் போய் என்னோட பதிவுகளே அங்கே ஜி3 ஆயி அதுக்கப்புறம் அதை டெலீட் செய்ய நான் படற கஷ்டம் எல்லாம் எழுதலை. அது தனியா வச்சுக்குவோம். இப்போ இதுக்கு என்ன செய்யறது? திரும்ப "RESET" கொடுன்னு சொல்ல வேண்டாம். பலமுறை "RESET" கொடுத்தும் இப்படித்தான் வருது. இன்னிக்குக் கணினியில் உட்கார்ந்ததில் இருந்து நேத்திக்கு எழுதிய கீதாஞ்சலி பதிவே எல்லாப் பக்கத்திலும் ஜி3 ஆயிட்டே இருந்தது. அதை மாத்த ரொம்பக் கஷ்டப் பட்டேன். முன் அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஹிஹிஹி ஜி3, உங்களுக்கு ஓசியிலே ஒரு நல்ல விளம்பரம்.
நேத்திக்கு ஒரு கமென்ட் கொடுத்திருப்பேன்: "இது என்ன அநியாயம்?" அப்படின்னு. அது யாருக்குக் கொடுக்கணுமோ அவங்களுக்குப் போட்டும் இருப்பேன். அதுக்குப் பின் வேறே ஏதாவது எழுதி, மத்தவங்களுக்குப் பின்னூட்டம் கொடுக்கணும்னாலோ, அல்லது புதிசாய்ப் பதிவாய் எழுதி ஜி3 பண்ணனும்னாலோ, அது ஜி3 ஆகறதே இல்லை. அதுக்குப் பதிலா நான் போட்ட, "இது என்ன அநியாயம்?"ங்கிற பின்னூட்டமே ஒட்டிக்கிட்டு வந்து எல்லா இடத்திலும் விழுதே! இது ஒரு உதாரணத்துக்குத் தான். சில சமயம் சிலர் பதிவுகளில் பின்னூட்டம் கொடுக்கப் போய் என்னோட பதிவுகளே அங்கே ஜி3 ஆயி அதுக்கப்புறம் அதை டெலீட் செய்ய நான் படற கஷ்டம் எல்லாம் எழுதலை. அது தனியா வச்சுக்குவோம். இப்போ இதுக்கு என்ன செய்யறது? திரும்ப "RESET" கொடுன்னு சொல்ல வேண்டாம். பலமுறை "RESET" கொடுத்தும் இப்படித்தான் வருது. இன்னிக்குக் கணினியில் உட்கார்ந்ததில் இருந்து நேத்திக்கு எழுதிய கீதாஞ்சலி பதிவே எல்லாப் பக்கத்திலும் ஜி3 ஆயிட்டே இருந்தது. அதை மாத்த ரொம்பக் கஷ்டப் பட்டேன். முன் அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஹிஹிஹி ஜி3, உங்களுக்கு ஓசியிலே ஒரு நல்ல விளம்பரம்.
தவறுகளுக்கு மன்னிக்கவும்!

என் பிரபுவே, உன்னுடைய கீதம் மிகவும் அற்புதமாய் உள்ளது. நான் வியப்பினால் வாய்திறவாமல், எப்போதும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
உன் கீதத்தால், இந்த மூவுலகும் பிரகாசிக்கிறது. உன்னுடைய சங்கீதத்தின் ஜீவநாதம் ஒரு மாபெரும் அலையைப் போல் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பிரவாஹமாய்ப் பெருகுகிறது. இந்தப் புனிதமான பிரவாகம் சற்றும் தடை இல்லாமல் தீவிர கதியில் ஓடுகிறது.
என்னுடைய இதயமோ உன்னுடைய சங்கீதத்தில் மூழ்கி ஆனந்தமய நிலையை அடைய ஆசைப் படுகிறது, ஆனால்,
வார்த்தைகள் எனக்குள் தெளிவாக வரவில்லையே! நான் எப்படிச் சொல்வேன்?
என் உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியாமல், என்னுள்ளே தழுதழுக்கிறேன்.
என் இதய நாதனே, உன்னுடைய இந்த இதய சங்கீதத்தின் நாதத்தால், அதன் அற்புதத்தால், அதன் எண்ணற்ற துவாரங்களால் என்னுடைய இதயத்தை மூடி விட்டாய்! என் இதயம் என்னிடம் இல்லை!
Subscribe to:
Posts (Atom)

