மக்கள் அந்த அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற பதிவுகளையே விரும்பிப் படிக்கிறார்கள். பொதுவாக போணி ஆகும் பதிவுகளில் சாப்பாடு குறித்த பதிவு மட்டுமே. அதுவும் இங்கே "எண்ணங்கள்" வலைப்பக்கத்தில் மட்டுமே! நேத்திக்கு நவராத்திரிப் பதிவு நல்லா போணி ஆகி இருந்தாலும் கருத்துச் சொன்னவர்கள் குறைவே! :) வழக்கம் போல் இது ஓர் ஆச்சரியம் தான். அடுத்து இன்னிக்கு ஒன்பது மணி நேர மின்வெட்டு என்பதால் அவசரம் அவசரமாகவே எழுதுகிறேன். (இது காலையில் எழுதினது) பழுப்பு அரிசி தோசை, இட்லி படம் போடறேன்னு சொல்லி இருந்தேன்! இட்லி படம் எடுக்க மறந்துட்டேன். தோசைப் படம் மட்டும் போடறேன். அப்புறமா நவராத்திரிப் பதிவு வழக்கம் போல்! கொஞ்சம் ஜனரஞ்சகமா இருக்கட்டுமேனு தான் கலந்து கட்டி எழுதி இருக்கேன். :)
இன்றைக்கு நோ சுண்டல் டே! நவராத்திரி முதல்நாள் அன்று பொதுவாக நான் இனிப்புப் பதார்த்தம் ஏதேனும் செய்வது வழக்கம். இப்போ இனிப்புக்குத் தடா என்பதால், யோசனையில் இருக்கேன். இன்றைய நிவேதனம் படம் மாலை மின்சாரம் வருவதைப் பொறுத்துப் போடுவேன். இனி நாளைய தினத்துக்கான வழிமுறைகள்.
நவராத்திரி இரண்டாம் நாள்
இன்று அம்பிகையை "ப்ரம்மசாரிணி"யாக வழிபடுவார்கள். இன்றைய தினம் அம்பிகையை "ராஜராஜேஸ்வரி"யாக அலங்கரிக்கலாம். மூன்று வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையை "திரிபுரா" அல்லது "திரிதேவி"யாக விளங்கும் திரிமூர்த்தியாகப் பாவித்து வழிபட வேண்டும்.
இன்றைய தினம் கோதுமை மாவில் கோலம் போடுவது சிறப்பு. இன்றைக்கும் மஞ்சள் நிறமுள்ள மலர்கள் அல்லது சிவந்த நிறமுள்ள மலர்கள் வழிபாட்டுக்கு ஏற்றவை. சிவப்பு வஸ்திரங்கள், வளையல்கள், சிவந்த நிறமுள்ள குங்குமம் ஆகியன கொடுத்துக் குழந்தைக்கு அதிகம் காரமில்லாமல் புளியோதரை செய்து நிவேதனம் செய்து சாப்பிட வைக்கலாம். மாலை முழு மொச்சையை ஊற வைத்துச் சுண்டல் செய்து நிவேதனம் செய்து விநியோகிக்கலாம்.
புளிக்காய்ச்சல் முன் கூட்டியே செய்து வைக்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம். ஒரு எலுமிச்சை அளவுப் புளியை சுத்தம் செய்துவிட்டு ஒரு கரண்டி நீரில் ஊற வைக்கவும். ஊறியதும் 5 அல்லது 6 சிவப்பு மிளகாய், கொஞ்சம் வெந்தயம் வறுத்தது, கடுகு பச்சையாக, தேங்காய்த் துருவல், தனியா வெறும் வாணலியில் வறுத்தது, ஒரு சின்னக் கட்டி வெல்லம் ஆகியவற்றோடு மஞ்சள் பொடி சேர்த்து புளியை ஊற வைத்த நீரோடு விட்டு விழுதாக அரைக்கவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதை எண்ணெய் பிரியும் வரை கிளறவும். பின்னர் சாதம் உதிர் உதிராக வடித்துக் கொண்டு அதில் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, மி.வத்தல் , கருகப்பிலை தாளித்துச் சேர்த்து அரைத்துக் கிளறிய விழுதில் கொஞ்சம் போல் போட்டுக் கலக்கவும். பின்னர் நெய்யில் பொரித்த மிளகைப் பொடிசெய்து அரை டீஸ்பூன் தூவவும். கமகமவென்ற மணத்தோடு கோயில் புளியோதரை தயார். அரைத்த விழுது மிச்சமிருந்தால் பத்து நாட்களுக்குள் பயன்படுத்தலாம்.
இன்றைய நிவேதனம், சக்கரைப் பேடா, உப்புப் பேடா!
மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்ததில் இதுக்குத் தான் ஓட்டு விழுந்தது. மத்தத் தித்திப்புப் பதார்த்தங்கள் சாப்பிட முடியாதே! ஆகவே கொஞ்சமாச் சர்க்கரை போட்டு இதைச் செய்தேன்.
செய்முறை மைதாமாவு ஒரு கரண்டி, கோதுமை மாவு இரண்டு கரண்டி இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி அரை டீஸ்பூன், அரைக்கிண்ணம் பால், ஒரு சிட்டிகை உப்பு.
வெண்ணெய், உப்போடு சர்க்கரையை ஏலக்காய் சேர்த்துப் பொடிசெய்து சேர்த்து நன்கு கலக்கவும. சுமார் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களாவது கலக்க வேண்டும். பின்னர் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலக்கவும். இதுவும் ஒரு ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் கலக்க வேண்டும். அதன் பின்னர் அரைக்கிண்ணம் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேவைப்படும் வரை ஊற்றி மாவைச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். சர்க்கரை சேர்ப்பதால் அதிலும் நீர்ச் சத்து உண்டென்பதால் பாலை விடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் பெரிய பெரிய அப்பளங்களாக இட்டு ஓரத்தில் நெளிநெளியாக வரும்படி கிடைக்கும் கர்ச்சிக்காய் ஸ்பூனால் வெட்டி எடுக்கவும்.
அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துக் குறைந்த தீயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். சுவையான பிஸ்கட் சுவைக்குத் தயார்.
உப்புப் பேடா!
மைதா மாவு, கோதுமை மாவு அதே அளவு, கால் டீஸ்பூன் பெருங்காயம், உப்பு அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஓமம் ஒரு டீஸ்பூன், வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், பிசைய நீர்.
வெண்ணெயை உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொண்டு மாவையும் மிளகாய்ப் பொடியையும், பெருங்காயப் பொடியையும், ஓமத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும் . மீண்டும் நன்கு கலக்கவும். கலக்கும்போது ஒரே பக்கமாகக் கலந்தால் காற்று நன்கு உட்புகுந்து பொரிக்கையில் கரகரப்புக் கூடும் என்பதோடு உப்பிக் கொண்டும் வரும். காரப் பொடி பிடிக்கவில்லை எனில் மிளகு பொடியும் சேர்க்கலாம். பின்னர் தேவையான நீர் விட்டுப் பிசைந்து முன் சொன்னது போல் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் பெரிய அப்பளங்களாக இட்டுக் கொண்டு கரண்டியால் கத்திரித்துப் பொரித்து எடுக்கவும்.
தோசை சாப்பிடத் தயாராக!
தோசைக்கல்லில் வேகும் தோசை! :)
இன்றைக்கு நோ சுண்டல் டே! நவராத்திரி முதல்நாள் அன்று பொதுவாக நான் இனிப்புப் பதார்த்தம் ஏதேனும் செய்வது வழக்கம். இப்போ இனிப்புக்குத் தடா என்பதால், யோசனையில் இருக்கேன். இன்றைய நிவேதனம் படம் மாலை மின்சாரம் வருவதைப் பொறுத்துப் போடுவேன். இனி நாளைய தினத்துக்கான வழிமுறைகள்.
நவராத்திரி இரண்டாம் நாள்
இன்று அம்பிகையை "ப்ரம்மசாரிணி"யாக வழிபடுவார்கள். இன்றைய தினம் அம்பிகையை "ராஜராஜேஸ்வரி"யாக அலங்கரிக்கலாம். மூன்று வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையை "திரிபுரா" அல்லது "திரிதேவி"யாக விளங்கும் திரிமூர்த்தியாகப் பாவித்து வழிபட வேண்டும்.
இன்றைய தினம் கோதுமை மாவில் கோலம் போடுவது சிறப்பு. இன்றைக்கும் மஞ்சள் நிறமுள்ள மலர்கள் அல்லது சிவந்த நிறமுள்ள மலர்கள் வழிபாட்டுக்கு ஏற்றவை. சிவப்பு வஸ்திரங்கள், வளையல்கள், சிவந்த நிறமுள்ள குங்குமம் ஆகியன கொடுத்துக் குழந்தைக்கு அதிகம் காரமில்லாமல் புளியோதரை செய்து நிவேதனம் செய்து சாப்பிட வைக்கலாம். மாலை முழு மொச்சையை ஊற வைத்துச் சுண்டல் செய்து நிவேதனம் செய்து விநியோகிக்கலாம்.
புளிக்காய்ச்சல் முன் கூட்டியே செய்து வைக்க முடியவில்லை எனில் கவலை வேண்டாம். ஒரு எலுமிச்சை அளவுப் புளியை சுத்தம் செய்துவிட்டு ஒரு கரண்டி நீரில் ஊற வைக்கவும். ஊறியதும் 5 அல்லது 6 சிவப்பு மிளகாய், கொஞ்சம் வெந்தயம் வறுத்தது, கடுகு பச்சையாக, தேங்காய்த் துருவல், தனியா வெறும் வாணலியில் வறுத்தது, ஒரு சின்னக் கட்டி வெல்லம் ஆகியவற்றோடு மஞ்சள் பொடி சேர்த்து புளியை ஊற வைத்த நீரோடு விட்டு விழுதாக அரைக்கவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதை எண்ணெய் பிரியும் வரை கிளறவும். பின்னர் சாதம் உதிர் உதிராக வடித்துக் கொண்டு அதில் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, மி.வத்தல் , கருகப்பிலை தாளித்துச் சேர்த்து அரைத்துக் கிளறிய விழுதில் கொஞ்சம் போல் போட்டுக் கலக்கவும். பின்னர் நெய்யில் பொரித்த மிளகைப் பொடிசெய்து அரை டீஸ்பூன் தூவவும். கமகமவென்ற மணத்தோடு கோயில் புளியோதரை தயார். அரைத்த விழுது மிச்சமிருந்தால் பத்து நாட்களுக்குள் பயன்படுத்தலாம்.
நம்ம வீட்டுக் குட்டிக் கொலு! அதிகம் அலங்காரம் செய்யும் அளவுக்கு உடல்நலம் இல்லை! ஆகவே சும்ம்ம்ம்ம்ம்மா பொம்மைகளை வைத்ததோடு சரி! :(
இன்றைய நிவேதனம், சக்கரைப் பேடா, உப்புப் பேடா!
மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்ததில் இதுக்குத் தான் ஓட்டு விழுந்தது. மத்தத் தித்திப்புப் பதார்த்தங்கள் சாப்பிட முடியாதே! ஆகவே கொஞ்சமாச் சர்க்கரை போட்டு இதைச் செய்தேன்.
செய்முறை மைதாமாவு ஒரு கரண்டி, கோதுமை மாவு இரண்டு கரண்டி இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி அரை டீஸ்பூன், அரைக்கிண்ணம் பால், ஒரு சிட்டிகை உப்பு.
வெண்ணெய், உப்போடு சர்க்கரையை ஏலக்காய் சேர்த்துப் பொடிசெய்து சேர்த்து நன்கு கலக்கவும. சுமார் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களாவது கலக்க வேண்டும். பின்னர் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலக்கவும். இதுவும் ஒரு ஐந்து நிமிஷத்துக்குக் குறையாமல் கலக்க வேண்டும். அதன் பின்னர் அரைக்கிண்ணம் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேவைப்படும் வரை ஊற்றி மாவைச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். சர்க்கரை சேர்ப்பதால் அதிலும் நீர்ச் சத்து உண்டென்பதால் பாலை விடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் பெரிய பெரிய அப்பளங்களாக இட்டு ஓரத்தில் நெளிநெளியாக வரும்படி கிடைக்கும் கர்ச்சிக்காய் ஸ்பூனால் வெட்டி எடுக்கவும்.
அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துக் குறைந்த தீயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். சுவையான பிஸ்கட் சுவைக்குத் தயார்.
உப்புப் பேடா!
மைதா மாவு, கோதுமை மாவு அதே அளவு, கால் டீஸ்பூன் பெருங்காயம், உப்பு அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஓமம் ஒரு டீஸ்பூன், வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், பிசைய நீர்.
வெண்ணெயை உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொண்டு மாவையும் மிளகாய்ப் பொடியையும், பெருங்காயப் பொடியையும், ஓமத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும் . மீண்டும் நன்கு கலக்கவும். கலக்கும்போது ஒரே பக்கமாகக் கலந்தால் காற்று நன்கு உட்புகுந்து பொரிக்கையில் கரகரப்புக் கூடும் என்பதோடு உப்பிக் கொண்டும் வரும். காரப் பொடி பிடிக்கவில்லை எனில் மிளகு பொடியும் சேர்க்கலாம். பின்னர் தேவையான நீர் விட்டுப் பிசைந்து முன் சொன்னது போல் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் பெரிய அப்பளங்களாக இட்டுக் கொண்டு கரண்டியால் கத்திரித்துப் பொரித்து எடுக்கவும்.