ரஞ்சனியோட கொழு கொழு கன்னைப் படிச்சதும் கொசுவத்தி மிக மிக வேகமாயும், புகை மண்டியும் சுத்தத் தொடங்கிடுச்சு. அப்போதெல்லாம் விளையாடிய ஒரு சில விளையாட்டுக்கள் நினைவில் வந்தன. முதல்லே ]
குலைகுலையாம் முந்திரிக்கா
திரி திரி பந்தம்
திருமால் தந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒருமொட்டு
வட்டமாய் எல்லோரும் உட்கார்ந்துக்கச் சுத்தி வருபவர் பாடுவார். பாடுவார் என்ன கிட்டத்தட்ட மந்திரம் மாதிரி முணுமுணுப்பார். உடனே வட்டத்தில் உள்ள ஒருத்தர் முதுகில் தன் கையில் உள்ள துண்டை அல்லது ஏதேனும் பொருளை ஒளித்து வைப்பார். ஒளித்து வைக்கிறது தெரியாமல் வைக்கணும். இதுக்காக நாலைந்து பேர் முதுகில் தட்டு என்ற பெயரில் செல்ல அடிவிழும். கடைசியில் யார் முதுகில் ஒளிச்சு வைச்சிருக்காங்கனு கண்டு பிடிக்கணும். சில சமயம் அவசரப் பட்டு யார் முதுகில் ஒளிச்சு வைச்சிருக்கோமோ அவங்க தன்னோட முதுகிலே இருக்குனு தெரிஞ்சு என் பேர் பூஷணிக்காய்னோ, கத்திரிக்காய்னோ சொல்லிடறது உண்டு.
குலையா குலையா முந்திரிக்காய் (சுற்றுபவர் பாடும் பாடல்)
நரியே நரியே சுற்றி வா (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் (சுற்றுபவர் பாடும் பாடல்)
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)
சுத்தி வருபவர் யார் முதுகில் இருக்கோ அவங்களை எழுப்பி விட்டுட்டு அந்த இடத்தில் உட்காரணும். எழுப்பப்பட்டவர் சுத்தி வரணும். இதிலே ஏதேனும் தப்பு இருந்தாலோ, மாற்றம் இருந்தாலோ சொல்லுங்கப்பா.
அப்புறமாக் கண்ணாமூச்சி விளையாட்டு
கண்ணாமூச்சி ரேரேரே
காட்டுமூச்சி ரேரேரே
ஒரு பழம் தின்னுட்டு???? மறந்து போச்சு
அப்புறமா என்ன???
அடுத்து
கிச்சு கிச்சுத் தாம்பாளம்,கியாங், கியாங் தாம்பாளம்னு வரும். மறந்திருக்கு!
அப்புறமா
கல்லா, மண்ணா,
அதுக்கப்புறம்
புளியங்கொட்டை இருந்தால் கூடப் போதும் ஒத்தையா, ரெட்டையாக்கு!
ஒத்தையா இரட்டையா
கொஞ்சம் மறந்து போன
சீதாப்பாண்டி
இப்போவும் விளையாடிப் பார்க்கும்
தாயம்
கனவுகளாகிப் போனப்
பல்லாங்குழி
பார்க்கவே முடியாத
பூப்பறிக்க வருகிறோம்
குலைகுலையாம் முந்திரிக்கா
திரி திரி பந்தம்
திருமால் தந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒருமொட்டு
வட்டமாய் எல்லோரும் உட்கார்ந்துக்கச் சுத்தி வருபவர் பாடுவார். பாடுவார் என்ன கிட்டத்தட்ட மந்திரம் மாதிரி முணுமுணுப்பார். உடனே வட்டத்தில் உள்ள ஒருத்தர் முதுகில் தன் கையில் உள்ள துண்டை அல்லது ஏதேனும் பொருளை ஒளித்து வைப்பார். ஒளித்து வைக்கிறது தெரியாமல் வைக்கணும். இதுக்காக நாலைந்து பேர் முதுகில் தட்டு என்ற பெயரில் செல்ல அடிவிழும். கடைசியில் யார் முதுகில் ஒளிச்சு வைச்சிருக்காங்கனு கண்டு பிடிக்கணும். சில சமயம் அவசரப் பட்டு யார் முதுகில் ஒளிச்சு வைச்சிருக்கோமோ அவங்க தன்னோட முதுகிலே இருக்குனு தெரிஞ்சு என் பேர் பூஷணிக்காய்னோ, கத்திரிக்காய்னோ சொல்லிடறது உண்டு.
குலையா குலையா முந்திரிக்காய் (சுற்றுபவர் பாடும் பாடல்)
நரியே நரியே சுற்றி வா (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் (சுற்றுபவர் பாடும் பாடல்)
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி (அமர்ந்திருப்பவர் அனைவரும் சேர்ந்திசை)
சுத்தி வருபவர் யார் முதுகில் இருக்கோ அவங்களை எழுப்பி விட்டுட்டு அந்த இடத்தில் உட்காரணும். எழுப்பப்பட்டவர் சுத்தி வரணும். இதிலே ஏதேனும் தப்பு இருந்தாலோ, மாற்றம் இருந்தாலோ சொல்லுங்கப்பா.
அப்புறமாக் கண்ணாமூச்சி விளையாட்டு
கண்ணாமூச்சி ரேரேரே
காட்டுமூச்சி ரேரேரே
ஒரு பழம் தின்னுட்டு???? மறந்து போச்சு
அப்புறமா என்ன???
அடுத்து
கிச்சு கிச்சுத் தாம்பாளம்,கியாங், கியாங் தாம்பாளம்னு வரும். மறந்திருக்கு!
அப்புறமா
கல்லா, மண்ணா,
அதுக்கப்புறம்
புளியங்கொட்டை இருந்தால் கூடப் போதும் ஒத்தையா, ரெட்டையாக்கு!
ஒத்தையா இரட்டையா
கொஞ்சம் மறந்து போன
சீதாப்பாண்டி
இப்போவும் விளையாடிப் பார்க்கும்
தாயம்
கனவுகளாகிப் போனப்
பல்லாங்குழி
பார்க்கவே முடியாத
பூப்பறிக்க வருகிறோம்


