எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 27, 2007

பாரதி கேட்ட மன்னிப்பு!

தியாகுவின் கேள்விக்கு பதில் சொல்லலாமா வேணாமான்னு நினைத்தேன். பாரதி சிறையில் இருந்தப்போ ஒரு கடிதம் தன்னை விடுதலை செய்யச் சொல்லி எழுதியதாயும், அதில் அவர் மன்னிப்பு வேண்டி இருப்பதாயும் இப்படிப் பட்டவர் எப்படி அரசியல் நேர்மை உடையவராய் இருக்க முடியும் எனவும் கேட்டிருக்கிறார். முதலில் பாரதி எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவே இல்லை.அவர் மதித்த தலைவர்கள் எனக் குறிப்பிட்டால் வ.உ.சி. சுப்புரமணிய சிவா, அரவிந்தர், வ.வே.சு. ஐயர் போன்றவர்கள்.
காந்தியை அவர் மதித்தார். காந்தி சென்னை விஜயத்தின் போது சென்று சந்தித்தார்.
ஆனால் காங்கிரஸைச் சார்ந்த்ருக்கவில்லை. திருமணம் ஆகி இரண்டு பெண்குழந்தை பெற்ற அவர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் "சுதேசமித்திரன்" பத்திரிகையில் வேலை செய்தார். அவரின் கருத்துக்கள் மக்களைச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தூண்டி விடுகிறது என்ற கோபத்தின் விளைவாகவே அந்தப் பத்திரிகையும் சரி, பாரதியும் சரி தடை செய்யப் பட்டனர் பலமுறை. பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் நுழையவும், அங்கே வாழவும் தடுக்கப் பட்டார். உயிர் போகும் வரை வாழ்ந்து தானே ஆகவேண்டும். தற்கொலை கோழைகளின் செயல். ஆகவே வாழ்க்கைக்கு அவர் தேர்ந்தெடுத்தது புதுச்சேரி. அங்கே இருந்து வாழ்க்கை நடத்தினார். இல்வாழ்க்கையிலும் பெரும் இன்னல்கள் சூழ்ந்தன. அன்றாட வாழ்விற்கேப் பணம் இல்லாத சூழ்நிலை.

தன்னை நம்பி வந்த மனைவி, குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் தான் எட்டையபுரம் ராஜாவிற்குச் "சீட்டுக்கவி" அனுப்ப நேர்ந்தது. காங்கிரஸ் மகாநாடுகள் சென்னை மெரினா திடலில் நடக்கும்போது பாரதியைச் சுதந்திரப் போராட்டப் பாடல்கள் பாட அழைப்பது உண்டு காங்கிரஸ் தலைவர்கள். பாரதியும் வந்து பாடுவார் மறுப்பேதும் சொல்லாமல். ஆனால் அவர் பாடி முடித்ததும் கூட்டம் கலையும். அதில் தலைவர்கள் அதிருப்தி அடைவர். இந்தக் காட்சி "பாரதி" திரைப்படத்தில் கூடக் காண நேரலாம். அப்படிப் பட்ட காங்கிரஸ் தலைவர்கள் அவர் அன்றாட வாழ்விற்கு உதவி ஏதும் செய்யவில்லை. ரவீந்திர நாத் தாகூர் "நோபல் பரிசு" வென்றதற்கு விழா எடுத்துக் கொண்டிருந்தனர். இதைத் தோழர் "ஜீவானந்தம்" குறிப்பிட்டு வருந்தி உள்ளார். மகாத்மாவாகவே இருந்தாலும் காந்தியும் பலகீனங்கள் நிறைந்த மனிதர் தான். அவரே குறிப்பிட்டுள்ளார். ஆகவே எதற்கும் மறுபக்கம் இருக்கும். அதன் காரணத்தையோ, காரியத்தையோ சரியாகப் புரிந்து கொள்ளாமல் நாம் பேச முடியாது. அன்றைய சூழலில் நாம் வாழவில்லை.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூட நாடு கடத்தப் பட்டு ஐரோப்பாவில் வசிக்க நேர்ந்த காலத்தில் கல்கத்தாவில் இருந்த அவரின் தகப்பனார் மரணத்திற்குநாட்டுக்கு வர விரும்பினார். அன்றைய ஆங்கில அரசு அவரைப் பல விதமான நிபந்தனைகளுடன் வரவிட்டது. அதறுகுகட்டுப் பட்டுத் தான் அவர் வர நேர்ந்தது. அதற்காக நேதாஜியின் வீரத்தைக் குறைத்து மதிப்பிட முடியுமா? அதுபோல்தான் இதூம் காரணத்துடன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. அதற்கான என்னுடைய பதில் பின்னால் வெளிவரும். நன்றி தியாகு இந்த பதில் கொடுக்கும்படி செய்ததுக்கு.கட்டபொம்மன் பற்றி அவர் பாட நேராததற்கும் தனியாகக் காரணங்கள் இருக்கலாம். கட்டபொம்மனும் பாளையக் காரன் தான். அவனுக்கும் மறுபக்கம் என்று இருக்கிறது. அது தெரிந்தும் பாடி இருக்கமாட்டார். நாம் அதற்காகக் கட்டபொம்மனை வீரன் இல்லை என்றோ தியாகம் செய்யவில்லை என்றோ சொல்லவில்லையே! கட்டபொம்மனின் வீரத்தையும் பாராட்டுகிறோம், அதற்குச் சற்றும் குறைந்தது இல்லை எட்டப்பனின் வீரமும். வரலாறு நமக்கு நன்கு தெரியாது. அவரவர் பார்வையில் எழுதி இருப்பதைப் படித்துவிட்டுச் சொல்லுகிறோம். மருது சகோதரர் வீரம் பற்றியும் பாரதி பாடி இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால் என்ன? இது தனி ஒரு மனிதனின் விருப்பம் என விட்டுவிடலாமே!

16 comments:

  1. அவசியத்துக்கும், அவசரத்துக்கும் எழுதிய இந்தப் பதிவில் சில தவறுகள், பிழைகள் திருத்த முடியவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. தவறு என்று குறிப்பிட்டது எழுத்துப் பிழையைத் தான்.

    ReplyDelete
  3. சரி விடுங்க, டென்ஷன் ஆகாதீங்க இதுக்கேல்லாம். :)

    உங்க பதிவுபடி பார்த்தா "பாரதி கேட்காத மன்னிப்பு!னு இல்ல தலைப்பு இருக்கனும்..? :)

    ReplyDelete
  4. //இந்தப் பதிவில் சில தவறுகள், பிழைகள் திருத்த முடியவில்லை. மன்னிக்கவும்.
    //

    நின் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம். தவறை பொறுத்தருளினோம் அவ்வையே! :)

    ReplyDelete
  5. மிக நல்ல பதிவுங்க.

    அப்புறம் சமீபத்தில்தான் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன். பாரதி அப்படி சீட்டுக் கவி எழுதியது தனது மகளின் திருமணத்திற்கு வெறுமனே 2 மாதமிருக்கும் போதே.

    2 பெண்களைப் பெற்ற பெண்ணின் தந்தை எழுதுவதைத் தவிர வேறு எதுவும் அறியாத ஒரு மனிதன் தனது மகளின் திருமணத்திற்காக இதைக் கூட செய்யக்கூடாதா????

    அப்படிப் பார்த்தால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் கப்பம் கட்ட முயற்சி செய்து பின்பு வேறு வழியே இல்லாததால், தனது நிலையை எடுத்துரைக்க ஆங்கிலேயரைப் பின் தொடர்ந்து போன கட்டபொம்மனின் வீரத்தையும் சந்தேகிக்கலாம்.

    மன்னிக்கவும் இதன் மூலம் கட்டபொம்மன் தரம் தாழ்ந்தவர் என்று சொல்ல நான் முயற்சிக்க வில்லை. இது போன்று ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்து ஒரு உயர்ந்த மனிதரின் முயற்சியை கேள்விக்குறியதாக்குவது சரியல்ல என்று சொல்ல வருகிறேன்.

    ReplyDelete
  6. //"பாரதி கேட்ட மன்னிப்பு!" //

    எனக்கு ஏதோ என்னமோ ராஜ தந்திரம் போல தான் உள்ளது. சிறையில் இருந்து எழுச்சி உண்டாக்க முடியாது என்ற காரணத்தால் வெளியில் வர விரும்பி இருக்கலாம்...

    நீங்க கூறியதை போல அவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பது அவருக்கு தான் வெளிச்சம்...

    ReplyDelete
  7. om sakthi
    ----------
    District Jail, Cuddalore,
    28 November-1918.

    To,His Excellency Lord Pentland,
    Governor,
    Fort St.George,Madras.

    The Humble petition of C.Subramania Bharathi,

    May it please your excellency,
    It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.

    Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
    I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.

    I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

    I beg to remain
    Your Excellency's
    most obedient Servant
    C.Subramania Bharathi.



    //பாரதி சிறையில் இருந்தப்போ ஒரு கடிதம் தன்னை விடுதலை செய்யச்

    சொல்லி எழுதியதாயும், அதில் அவர் மன்னிப்பு வேண்டி இருப்பதாயும்

    இப்படிப் பட்டவர் எப்படி அரசியல் நேர்மை உடையவராய் இருக்க முடியும்

    எனவும் கேட்டிருக்கிறார்.//

    அப்படி ஒரு கடிதம் இல்லைஎன்பது போலவும் இருப்பதாக தியாகுதான்

    சொல்கிறார்னும் நீங்க நினைச்சு எழுதி இருப்பது போல இருக்கு , கடிதம்
    ஆவண காப்பகத்தில் இன்னும் இருக்கு போய் பார்த்துக்கங்க .

    அவர் கட்சி சார்ந்து இருந்தார்னு சொல்லவில்லை ,"அவர் சார்ந்த அரசியல்"

    அப்படின்னுதான் சொன்னேன் அது தேசபக்திக்கும் விடுதலைக்கும்

    ,குரல்கொடுத்த தலைவர்களில் அரசியலும் இவர் அரசியலும் ஒன்னுன்னு
    நாம் நினைக்கிறோமே அந்த அரசியலை சொன்னேன்.

    பிறகு பாரதியின் வாழ்க்கையின் சோகத்தையும் அவரது இயலாமையையும் பேசிய நீங்கள்
    // ஆகவே எதற்கும் மறுபக்கம் இருக்கும். அதன் காரணத்தையோ, காரியத்தையோ சரியாகப் புரிந்து கொள்ளாமல் நாம் பேச முடியாது. அன்றைய சூழலில் நாம் வாழவில்லை//

    பாரதிக்கு மறுபக்கம் இருக்கும் என்பதை சொல்கிறீர்கள்

    அந்த மறுபக்கத்தில் இருந்து இந்த கடிதம் அவர் எழுதி இருக்கலாம்

    இல்லையா

    //நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூட நாடு கடத்தப் பட்டு ஐரோப்பாவில் வசிக்க நேர்ந்த காலத்தில் கல்கத்தாவில் இருந்த அவரின் தகப்பனார் மரணத்திற்குநாட்டுக்கு வர விரும்பினார். அன்றைய ஆங்கில அரசு அவரைப் பல விதமான நிபந்தனைகளுடன் வரவிட்டது.//

    நேதாஜியை இழுத்து வந்து பாரதியின் கடித்தை நிமிர்த்த முயலும் நீங்கள்
    நேதாஜி நிபந்தனைகளுக்கு உட்பட்டார் என்பதையும் பாரதி தாள்பணிந்து விடுதலை கேட்டார் என்பதையும் ஒன்றாக்க முயன்று தோற்கிறீர்கள் .

    பரிதாபகரமான உங்கள் வாதம் தனது பாரதியையும் மிஞ்சுகிறது .


    //நாம் அதற்காகக் கட்டபொம்மனை வீரன் இல்லை என்றோ தியாகம் செய்யவில்லை என்றோ சொல்லவில்லையே! கட்டபொம்மனின் வீரத்தையும் பாராட்டுகிறோம், அதற்குச் சற்றும் குறைந்தது இல்லை எட்டப்பனின் வீரமும். //
    கட்டபொம்மனையும் எட்டப்பனையும் நீங்கள் ஒன்றாக சொல்லும் இந்தவாதம்
    ஏன் காந்தியையும் கோர்பசேவயும் ஓரே நியதியில் இயங்கியதாக கொள்ள முடியாதென்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பல்லிளிக்கும்

    பாரதி ஒரு கவிஞன் தன் காலத்தில் சிறந்த படைப்பாளி
    என்ற வகையில் அவரை நான் குறைத்து மதிப்பிடவில்லை
    ஆனால் அவரை புரட்சிகாரன் என ஓவாரா தூக்கும்போது
    அவர் கடிதத்தையும் அவரையும் விமர்சனம் செய்யாமலிருக்க முடியாது

    நன்றி

    ReplyDelete
  8. மேடம், பாரதியின் மீது தாங்கள் கொண்டுள்ள பற்று என்னை அசரவே செய்கிறது ஒவ்வொரு முறையும். உங்களின் இந்த கோபம் நியாயமானதே.. மாகாத்மா என்று அழைக்கப்பட்ட ஒருவர் செய்த காரியங்களை எண்ணுகையில், பாரதியின் விஷயங்கள் ஒரு பொருட்டல்ல.. குடிமகன் என்ற வகையில் நாட்டை கவனிப்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி குடும்பத் தலைவன் எனும் வகையில் வீட்டையும் காக்கவேண்டும்.. அந்த வகையில் பாரதி செய்தது சரி தான் என்பது என் கருத்து..

    ReplyDelete
  9. உங்களோட மற்ற பதிவுகள் எல்லாம் படித்தேன்.. ஆனால் தனித் தனியாக பின்னூட்டமிட முடியவில்லை

    ReplyDelete
  10. படித்து விட்டு, " நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற
    வரிகள் தாம் நினைவுக்கு வந்தன.

    ReplyDelete
  11. பாரதி மன்னிப்புக்கேட்டது உணமை ஒரு வேளை அவரது சூழல் அப்படி நிர்பந்தித்து இருக்கலாம். ஆனால் நீங்கள் எதற்கு வேறு என்னமோ எல்லாம் சொல்லி குழப்புகிறீர்கள்,

    பாரதி ஒரு பிழைக்க தெரியாத மனிதர் என்பது என் அளவில் உணர்ந்த ஒன்று, எட்டயபுர மகாராஜா 1000 ரூபாய் கொடுத்தார் அதில் 900 க்கு புத்தகம் வாங்கியவர் மீதி வண்டிக்காரனுக்கு.வீட்டில் அரிசி இல்லை, பருப்பு இல்லை அப்படியும் இப்படி தான் பாரதி நடந்துக் கொண்டார்.

    புதுவையில் பாரதி இருந்த போது அவருக்கு பொருளாதார உதவிகள் செய்தது விளக்கெண்ணை செட்டியார் , மற்றும் குவளைக்கண்ணன் என்ற இருவர்தான். கண்ணன் என் நண்பன் என்ற பாடல் கூட இந்த கண்ணன் மீது கொண்ட அன்பினால் தான். பாரதியை புதுவையில் மற்ற அனைவரும் சுதேசி என்று தான் அழைத்தார்களாம்.ஆனால் அவர் மல் வேட்டி தான் கட்டுவார், அது ஆங்கில மில் தயாரிப்பு. இப்படி பல முரண்பாடுகளைக்கொண்டவர் தான் பாரதி.

    //அதற்குச் சற்றும் குறைந்தது இல்லை எட்டப்பனின் வீரமும். வரலாறு நமக்கு நன்கு தெரியாது.//

    இது என்ன காமெடிக்காக சொன்னதா? என்ன காமெடி என்று தெரியவில்லை, கட்டம்பொம்மன் பற்றி பாடாதது ஒன்றும் குற்றம் இல்லை , ஆனால் எட்டப்பனின் வீரம் என்று சொல்வது தான் :-))

    சில நாட்களுக்கு முன் எனது பதிவில் கட்டபொம்மன் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளேன் நேரம் கிடத்தால் படித்துப்பார்க்கவும் ,மறுப்பக்கம் வெளிப்படும்.

    ReplyDelete
  12. தியாகு, முதல் முறையாக என் வலைப்பக்கத்துக்கு வந்ததுக்கு நல்வரவு. மற்றபடி எல்லாருடைய கருத்துக்களுக்கும் நன்றிகள். வேறு ஒண்றும் இப்போதைய சூழைல் சொல்லப் போவதில்லை.
    @வவ்வால், கட்டபொம்மன் பற்றி வேண்டியது படித்து விட்டேன். சரி, விடுங்கள். கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தான் என்பதற்காக எட்டப்பன் வீரம் இழந்து போய்விடவில்லை, மற்றபடி அன்றைய சூழல் இருவருமே ஆங்கிலேய அரசுக்குக் கப்பம் கட்டியவர்கள் தான் என்பதும் உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். உங்கள் பக்கத்துக்கு முடிந்தபோது வந்து பார்க்கிறேன். அழைப்புக்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. கட்டபொம்மன் பத்தி நான் எந்தப் பாட்டும் பாடவில்லை வவ்வால், நீங்க எழுதி இருப்பதையும் படிச்சேன். நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  14. நீங்கள் பாடவில்லை என்று சொல்லவில்லை பாரதி ஏன் பாடவில்லை என்பது தானே கேள்வி, அவர் பாடவில்லை என்றாலும் கட்டபொம்மன் குறிப்பிட தக்க வீரன் தான், ஆனால் சிங்கதிற்கு அருகே சிறு நரியான எட்டயப்பன் எப்படி என்பது தான் எனது கேள்வி.

    உங்களுக்கு சற்று விரிவாக எனது பதிவிலேயே இன்னொரு பதிலும் அளித்துள்ளேன்.

    ReplyDelete
  15. பாரதி பாடாத தலைவர்களில் கட்டபொம்முவுடன் மருது சகோதர்ர்களும் உண்டு..மற்றபடி பூலித்தேவன்,அழகுமுத்து கோன்,பற்றி பாடினாரா தெரியவில்லை.ஒரு வேளை இவர்கள் எல்லாம் திராவிட ஆட்சியில் தான் விடுதலை வீரர்கள் ஆனார்களோ?

    ReplyDelete
  16. பாரதி பாடாத தலைவர்களில் கட்டபொம்முவுடன் மருது சகோதர்ர்களும் உண்டு..மற்றபடி பூலித்தேவன்,அழகுமுத்து கோன்,பற்றி பாடினாரா தெரியவில்லை.ஒரு வேளை இவர்கள் எல்லாம் திராவிட ஆட்சியில் தான் விடுதலை வீரர்கள் ஆனார்களோ?

    ReplyDelete