எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 08, 2011

சங்கர ஜெயந்தியும், அன்னையர் தினமும்!

ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ!

அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:

"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"

ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.

"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:

குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"

சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளூக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது.

17 comments:

  1. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .
    தங்களுடைய வேலைகள், தங்களுடைய உரிமைகள் என்றுதான் இன்று பார்க்கின்றனர்.

    தனி மனித உரிமைகள் வலுப்பெற்றதன் விளைவோ என்று பல நாள் நான் யோசித்துள்ளேன். காரணம், பொதுவாக நம் பாரத நாடு , பொது சிந்தனை உடையது. எப்பொழுது தனி மனித உரிமை சித்தாந்தங்கள் இங்கே வலுப்பெற துவங்கியதோ அன்றிலிருந்து இந்த மாதிரி குழப்பங்கள் வருகிறது

    ReplyDelete
  2. இது ஒரு மீள் பதிவு. மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. அன்னையர் தின வாழ்த்துக்கள் மாமி
    பொருத்தமான பதிவு.,
    சங்கரரின் மாத்ரு பஞ்சகம் எந்த புத்தகத்தில் இருக்கிறது, விபரங்கள் அளிக்கவும் தயவு செய்து.
    பால குமாரன், மணல் நதி என்னும் கட்டுரையிலும் (காசி, கயா, மானசதேவி சுற்றுப் பயண கட்டுரை) இது பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.


    மீள் பதிவு என்றால் புரிய வில்லை, இதற்கு முந்தைய வருடங்களில் கூட அன்னையர் தினமும், சங்கர ஜெயந்தியும் ஒரே நாளில் வந்துள்ளனவா.

    ReplyDelete
  4. அன்னையின் அன்பு அருமையான பதிவு.

    அன்னையர் தினவாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது. //

    :-(

    ReplyDelete
  6. தலைவிக்கும் அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தினவாழ்த்துகள் ;)

    ReplyDelete
  7. தாய்மை உணர்வு உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    தாய்மை உணர்வு உள்ள தாயுமானவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அன்னையர் தின வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

    ReplyDelete
  8. அற்புதம் மேடம். அன்னையர் தினத்திற்கு சங்கரரின் மாத்ரு பஞ்சகம்.... ;-))

    ReplyDelete
  9. வாங்க எல்கே, நம் நாட்டின் கலாசாரம் மாறிட்டு வரது தான் இப்போதைய முக்கியக் கவலையே. சர்வே ஜனோ சுகினோ பவந்து என்ற மந்திரத்தை மறந்துட்டாங்க! :(

    ReplyDelete
  10. வாங்க ராம்ஜி, இதற்கு முந்தைய ஒரு அன்னையர் தினத்தில் ஒருத்தரின் விருப்பத்தின் பேரில் இந்த மாத்ருகா பஞ்சக விளக்கம் எழுதினேன். நேற்று சங்கர ஜயந்தியும், அன்னையர் தின அறிவிப்பும் சேர்ந்து கொண்டதால் இரண்டுக்கும் பொருத்தம் என மீள் பதிவு செய்தேன். ஒவ்வொரு வருஷமும் இரண்டும் சேர்ந்து வருவதில்லை. இந்த வருஷம் என்னவோ அதிசயம்! :))))

    ReplyDelete
  11. வாங்க மாதேவி, நன்றிம்மா

    ReplyDelete
  12. திவா, என்ன செய்யறது?? பலரையும் பார்த்துக் கேட்டு உணர்ந்தே சொல்றேன். :(((((

    ReplyDelete
  13. வாங்க கோபி, வாழ்த்துக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  14. வாங்க கோமதி அரசு, உங்க பதிவிலே பின்னூட்டம் போடவே முடியலை. ஏதோ வேலைகள்! :(ஆனாலும் நீங்க மறக்காமல் வருவது குறித்து சந்தோஷமே. இன்னொரு பக்கம் வெட்கமாயும் இருக்கு. விரைவில் பின்னூட்டம் போடறதுக்கு வரணும்! :))))))நன்றிங்க.

    ReplyDelete
  15. வாங்க ஆர்விஎஸ், என்னோட அண்ணாவையும் ஆர்விஎஸ்னே கூப்பிடுவாங்க. ஆனால் நீங்க எனக்கு அண்ணா இல்லை! :)))))) தம்பி??? வந்ததுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  16. //அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும்.//
    பாரட்டப்பட வேண்டிய ,கடை பிடிக்க வேண்டிய வரிகள் ;நன்றி கீதாம்மா

    தங்களுக்கும் எல்லா திருமண மானவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete