எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 26, 2012

சினிமா பேரு என்னனு சொல்லுங்க!

இப்போ ஒரு படம் பார்த்தேன்.  நல்ல விறுவிறு.  ஒரிஜினல் மலையாளம்;  டப்பிங் செய்திருக்காங்க.  நடிகர்கள் யார்னே எனக்குத் தெரியலை.  டைரக்‌ஷன் மட்டும் பி. உன்னிகிருஷ்ணன்.  கதை தெரிந்த வரையிலும் கீழே கொடுக்கிறேன். ஹிஹிஹி, எப்போவுமே முழுசாப் படம் பார்க்கிற வழக்கமே இல்லையா, இன்னிக்கும் பாதிப்படத்திலே தான் பார்க்க ஆரம்பிச்சோம்.  அப்புறமா அவர் வெளியே போயிட்டார்; நான் மட்டுமே பார்த்தேன்.

சைமன் என்றொரு இளைஞன் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டோடு சம்பந்தப் பட்டிருக்கிறவன்,  கொலை செய்யப்படுகிறான்.  இந்த சைமனின் அப்பா கிட்டே விசாரணை நடப்பதில் இருந்து தான் பார்க்க ஆரம்பிச்சேன்.  அந்த சைமன் இறக்கையில் போலீஸ் ஆஃபீஸர் நிரஞ்சனிடம் தன்னைக் கொலை செய்தது யார்னு சொல்லிட்டுச் செத்துப் போகிறான்.  அவன் சொன்னது Meeraspa.  இதை வைத்துக்கொண்டு கொலையாளிகளைப் பிடிக்கப் பார்க்கும் நிரஞ்சனின் அப்பா, அம்மா, விவாகரத்துக்கு(?)க் காத்திருக்கும் மனைவி போன்றவர்களைக் கொலையாளிகள் குழு தொந்திரவு செய்கிறது.  ம்ஹூம், தமிழ் சினிமா மாதிரிக் கடத்தி வைச்சுட்டு எல்லாம் இல்லை.  நிரஞ்சனை மிரட்டுகின்றான் மார்ட்டின் தினகர் என்னும் ஒரு ஆள்.

அன்டர் வேர்ல்ட் தாதா அதோடு சைமனைக் கொன்றது தான் தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறான்.  அவனுக்குத் துணையாக இருந்தவங்களைப் பிடிச்சு உதைச்சு விசாரிச்சதிலே ஓரளவுக்கு உண்மை வெளியே வந்தாலும் மார்ட்டினைப் பிடிப்பது கஷ்டம் என அவர்கள் நண்பரான இன்னொரு போலீஸ் ஆஃபீஸர் தற்போது பதவியில் இல்லாதவர் சொல்வதோடு, இந்தக் கேஸ் கோர்ட்டில் நிற்காது என்றும் சொல்கிறார்.  ஏன் எனக் கேட்கும் நிரஞ்சனிடம் மார்ட்டினைப் பிடிக்க முடியாது என ஏதேதோ காரணங்கள் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். அப்போது நிரஞ்சனுக்கு ஒரு ஃபோன் கால் வருது.  அதைக் கேட்ட நிரஞ்சன் மார்ட்டின் தினகரைப் பார்க்க வேண்டுமென்று சொல்லிட்டுக் கிளம்புகிறான்.

நிரஞ்சன் மார்ட்டின் தினகரைப் பார்த்தானா?

சைமனைக் கொன்றது மார்ட்டின் தானா?

போலீஸ் ஆஃபீஸர் என்னதான் இப்போ வேலையில் இல்லைனாலும் ஏன் இப்படி அலக்ஷியமாய் நடந்து கொண்டார்?

நிரஞ்சனும், அவன் மனைவியும் சேர்ந்தாங்களா?

மீதியை உங்கள் வீட்டுத் தொலைக்காட்சித் திரையில் எப்போதாவது போடுகையில் காண்க.

இப்போ என்னோட மண்டைக்குடைச்சல் படத்தோட பெயர் என்ன?


6 comments:

  1. இன்று போட்ட படம்தானே.... மலையாளப் படம்....

    ReplyDelete
  2. என்ன படம் தெரியுமா.....

    ReplyDelete
  3. http://vivekranjit.blogspot.in/2010/11/thriller-does-not-thrill.html

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், சஸ்பென்ஸோடு படத்தோட பெயரைச் சொன்னதுக்கு நன்றி. :)))) போய்ப்பார்த்துட்டு வந்துட்டேன்.

    ReplyDelete
  5. வாங்க வெங்கட், ரசனைக்கு நன்றி.

    ReplyDelete