எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 14, 2012

அப்பு டேட்ஸ்! புத்தம்புதியது!

அப்புவுக்கு நாங்க ஸ்ரீரங்கம் வந்ததிலே இருந்து கவலை.  சென்னை இந்தியாவிலே தாத்தா, பாட்டி இருந்தவரைக்கும் துணைக்கு பாட்டியோட பிக் பிரதரும், பேபி பிரதரும் இருந்தாங்க.  மும்பை இந்தியாவிலே கல்யாணிப்பாட்டிக்குத் துணைக்கு மோகன் அங்கிள் இருக்கார். ஆனால்  இங்கே இந்த இந்தியாவிலே (ஊர் பேரு சொல்லத் தெரியலை இன்னமும்) தாத்தா, பாட்டிக்குத் துணைக்கு யாருமே இல்லையே!  தே ஆர் அலோன்!  ஹு வில் டேக் கேர் ஆஃப் தெம்? அப்படினு ஒரே கவலையாம்.  அது குட்டியா இருக்கிறதாலே அதாலே வந்து கவனிச்சுக்க முடியாதாம்.  அதனால் அவங்க அக்காவைப் போய்ப் பார்த்துக்கச் சொல்லிட்டு இருக்காம். :)))))

இந்த வருஷம் தீபாவளிக்கு கம்பி மத்தாப்பு விட்டிருக்கு.  அவங்க அப்பா ஃபோட்டோ எடுத்து அனுப்பி இருக்கார்.  தீபாவளின்னா, மத்தாப்பு விடணும்னு தெரிஞ்சு வைச்சுண்டு அவங்க அப்பாவை வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கு. இப்போ அவங்களும் ஹூஸ்டனுக்கே வந்தாச்சு.  புது ஊர், புது இடம், புது ஸ்கூல் எல்லாமும் பிடிச்சிருக்காம். 

8 comments:

  1. படங்களையும் இணைத்திருக்கலாமே...

    ReplyDelete
  2. செல்ல அப்புவுக்கு என் அன்புகள். அதோட கவலையும் உண்மைதானே. அதற்குத் தெரிந்ததெல்லாம் சென்னை வீடும் பாட்டியின் ப்ரதர்ஸ்தான்.
    அதான் குழந்தை வருத்தப் படுகிறது.
    ஸ்ரீரங்கம் ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப் போனால் சமாதானம் ஆகிவிடும்.

    ReplyDelete
  3. நன்றி ஸ்ரீராம்,

    டிடி, ஃபோட்டோவைப் பகிர்ந்துக்க அவங்க அம்மா, அப்பாவுக்கு இஷ்டம் இல்லை. அதனால் போடுவதில்லை. :))))))

    வல்லி, இந்த வருஷம் வர முடியாது. அடுத்தவருஷம் வரலாம். பார்க்கலாம். :))))

    ReplyDelete
  4. என்ன ஒரு அன்பு! நெகிழ வைக்கிறது. ரொம்ப சந்தோஷம். என்ஜாய் பண்ணுங்க. :)

    ReplyDelete
  5. நன்றி, மீனாக்ஷி.

    நன்றி அப்பாதுரை.

    ReplyDelete


  6. செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே

    எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா

    வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது

    அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.

    ReplyDelete
  7. படிக்கும்போது நெகிழ்கின்றது குழந்தையின் அன்பு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete