எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு
Showing posts with label சுய புராணம். Show all posts
Showing posts with label சுய புராணம். Show all posts

Saturday, March 06, 2010

கிடைத்தது அதிக பவர்!

அப்பாடா! ஒருவழியாய் அதிக பவர் இன்னிக்குக் கிடைச்சுடுச்சு. ஒரு இரண்டு மாசமப் பட்ட கஷ்டம் இருக்கே சொல்லி முடியாது. என்ன இருந்தாலும் பவர் இருந்தாலும் கஷ்டம் தான், இல்லாட்டியும் கஷ்டம் தானே! அதுவும் அதிக பவர்னால் கேட்கவே வேண்டாம். வலை உலகத் தலைவியாச்சே. பவர் இல்லைனாத் தான் கஷ்டம். அம்பி, மெளலி, திராச, தக்குடு எல்லாம் என்ன விஷயம் அதிக பவர்னு குழம்பிண்டு இருந்தாங்க. இப்போப் புரிஞ்சிருக்குமே!

இரண்டு மாசத்துக்கும் மேலாக "ந" "த" மாதிரியும் "ண" "ன" என்றும் "ற" "ந" மாதிரியும், தெரிஞ்சுட்டு இருந்தது. சில சமயம் கூறு என்பது கூகூறுறு என்று இரட்டையாவும் தெரியும். "ம' போட்டால் "ழ"வோனு சந்தேகம் வரும். "க" போட்டால் கேட்கவேண்டாம். "ச" மாதிரித் தெரியும். சிலசமயம் இரண்டிரண்டு தரம் எழுதிட்டேனோனு கூட நினைச்சுப்பேன். எல்லாத் தொல்லையும் கொஞ்ச மாசங்களுக்கு இருக்காது.

புதுக்கண்ணாடி அதிகப் பவருடன் இன்னிக்குத் தான் வந்தது.