எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு
Showing posts with label ரொம்பவே நல்ல பதிவு:D. Show all posts
Showing posts with label ரொம்பவே நல்ல பதிவு:D. Show all posts

Wednesday, May 16, 2007

மே மாதம் என்ன விசேஷம்?

போன முறை மே மாதம் 17-ம் தேதி இந்தியாவில் இருந்தோம். இம்முறை மெம்பிஸில்.சிகாகோவில் இருந்து மெம்பிஸ் வரதுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் வந்தோம். யு.எஸ்ஸுக்கு 2-ம் முறை என்றாலும் சிகாகோவுக்கு முதல் முறை. அங்கே விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த நேரம் வெளியே ஒரு கட்டிடத்தின் வாயிலில் எல்லா நாட்டுக் கொடிகளும் பற்ந்து கொண்டிருந்தன. இந்திய தேசீயக் கொடியைப் பார்த்ததும் மனம் பரபரத்தது. இன்னும் கொஞ்ச நாள் இங்கே தான் என்னும் உண்மை அந்தக் குளிர் காற்றைப்போல் முகத்தில் மட்டுமல்லாமல் நெஞ்சிலும் அறைந்தது. போன வருஷம் இந்தியாவில் இருந்தோம். மே 17-ம் தேதி. வழக்கம் போல் பையனும், பெண்ணும் தொலைபேசி வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

என்னுடைய குணங்களும் சரி, என் கணவருடைய குணங்களும் சரி நேர்மாறானது. திருமணம் ஆகிவந்த புதிதில் என் புகுந்த வீட்டில் மின் விளக்கு வசதி கூடக் கிடையாது. பல வருடங்களுக்குப் பின் தான் வந்தது. மதுரையில் இருந்து அங்கே முதல் முதல் போகும்போது ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆகவே மாட்டு வண்டி ஆற்றில் இறங்கியது எனக்கு ஒரு அதிசயமாக இருந்தது. எங்கள் மதுரைப் பக்கம் கிராமங்களில் எப்போவில் இருந்து என்று தெரியாது, பல வருஷங்களாக மின்சார வசதியும் உண்டு, ஆற்றில் பாலங்களும் உண்டு, குழாய் வசதி எல்லாம் இருந்தது. என் சித்தி இருந்த கிராமம் ஆன சின்னமனூர் செல்லும்போது இரண்டு பக்கமும் மரங்கள் சூழ்ந்த அடர்ந்த சாலையில் செல்லும்போது மிகுந்த உற்சாகமாய் இருக்கும். கிராமமும் கிராமம் போல் எல்லாம் இல்லை. சினிமா தியேட்டர் எல்லாம் உண்டு. இங்கே வந்து பார்த்தால் வீடுகளே மிகக் குறைச்சல். அதுவும் ரொம்பவே பழைய வீடு. ஆச்சரியம் எல்லாமே. பேச்சு, பழக்கம் என்று ஒவ்வொன்றும். முன்பின் தெரியாத அந்த வீட்டில் என்னை மாமியார், மாமனார், நாத்தனார், மைத்துனர்கள் ஆகியோருடன் இருக்கவிட்டு விட்டு என் கணவர் புனே சென்று விட்டார். அதுக்கு அப்புறம் அவருக்குத் திடீரென சென்னை மாற்றல் ஆனதும் நாங்கள் தனிக் குடித்தனம் வந்ததும் தனிக் கதை!

இத்தனை ஊர்கள் போனாலும் நாங்கள் மாற்றல் வரும்போதெல்லாம் கூடச் சேர்ந்தே தான் போயிருக்கிறோம். அவர் முன்னால் போய் வீடு பார்ப்பது, பின் நாங்கள் போவது என்றெல்லாம் இல்லை. 4 பேரும் சேர்ந்தே போவோம். இப்போது பையன், பெண் யு.எஸ். வந்ததும் ஊட்டி மாற்றல் ஆனபோது மட்டும் அவர் தனியாகப் போகும்படி நேர்ந்தது. அப்பவும் சிலநாட்கள் நான் அங்கேயும், சில நாட்கள் அவர் சென்னையிலுமாக இருந்தோம். என்றாலும் 2 பேரும் எப்போவும் கிழக்கும், மேற்கும் தான். அவர் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டதில்லை. நான் சொல்வதை அவர் ஏற்றதில்லை. அதனால் பெரிய விஷயங்களில் மட்டும் நான் முடிவு சொல்வேன். அதான் தெரிஞ்சிருக்குமே! இந்த ஐ.நா.விஷயம், ஹிலாரி கிளின்டன் விஷயம், புஷ் நீடிக்கலாமா, கலாம் மறுமுறை வரலாமா? சிதம்பரம் பட்ஜெட் நல்லா இருக்குமா, வேறே யார் போட்டால் நல்லா இருக்கும், இப்போ லேட்டஸ்டா தயாநிதி மாறன் விஷயம் இதில் எல்லாம் என்னோட முடிவு தான். மறு பேச்சே கிடையாது. மற்றச் சின்னச் சின்ன விஷயங்கள், வீட்டு நிர்வாகம், எப்போ யு.எஸ்ஸில் இருந்து கிளம்பலாம்? அவங்க அம்மா, அக்கா, தம்பி, தங்கைகள் விஷயம், பொண்ணு, பையன் பத்தி எல்லாம் அவர்தான் முடிவு எடுப்பார். நான் சும்மா தலை ஆட்டறதோடு சரி. :D

இப்போது நினைத்துப் பார்த்தால் இத்தனை வருடங்களாக எத்தனை ஊர்கள்! எத்தனை மனிதர்கள்! எத்தனை நண்பர்கள்! எத்தனை பழக்கங்கள்! எத்தனை சாப்பாட்டு வகைகள்! அதிலும் கடந்த ஒரு வருஷமாய்க் கணினி மூலம் மட்டும் எத்தனை நண்பர்கள்? நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. எங்கோ பிறந்தோம், வளர்ந்தோம், கணவன், மனைவி ஆனோம், அதன் மூலம் நட்பு வட்டம் பெரிசானது என்றால் இப்போ கணினி மூலம் உலகம் விரிவடைந்து விட்டது. இதற்கு முன்னால் எங்கள் இருவரைத் தவிர பையனும் பெண்ணும் மட்டுமே நினைவு வைத்திருக்கும் ஒரு நாள் இன்று. இப்போ என்னங்கறீங்களா? ஒண்ணும் இல்லை மே மாதம் 17-ம் தேதி திருமணநாள். அதான். வேறே ஒண்ணும் இல்லை.