எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 29, 2007

அனுபவம் புதுமை! 1



இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது?
22-ம் தேதி காலையில் வண்டியில் கிளம்பும்போது ஒரே தூக்கம் தான். இன்னும் 5,6 நாள் எப்படி இந்த வண்டியில் உட்கார்ந்து போவது என்று கொஞ்சம் யோசனையாவும் இருந்தது. நீண்ட தூரப் பயணம், முதலில் கும்பகோணம் போய், கிராமத்தில் குலதெய்வப் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு, பின் வரிசையாக ஸ்வாமிமலை, அங்கிருந்து மதுரை போகும் வழியில் அழகர் கோயில்,பழமுதிர்சோலை, அங்கே நாவல்பழம் மூலம் ஒளவைக்குப் போதித்த முருகனைப் பார்க்கணும், இந்த சிபி ஏன் இன்னும் "குமாரகாவியம்" எழுதலைன்னு கேட்கணும்! திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சியைப் பார்த்து விட்டுப் பின் திருச்செந்தூர் போய் தரிசனம் முடித்துப் பின்னர் பழனி போய் தண்டாயுதபாணியைப் பார்த்துவிட்டுப் பின்னர், திரும்ப மதுரைக்கு அருகே இருக்கும் என் அப்பாவின் சொந்த ஊரான மேல்மங்கலம் போகவேண்டும் என்ற முடிவு!

சனிக்கிழமை காலையில் 11 மணி வாக்கில் கிளம்பினோம். இங்கிருந்து அம்பத்தூரைத் தாண்டி பைபாஸில் போகவே நேரம் பிடித்தது. சாலையும் மோசம், போக்குவரத்தும் மோசம். ஒரு வழியாக பைபாஸைப் பிடித்துத் திண்டிவனம் வரை கொஞ்சம் பரவாயில்லை, சாலைகள், ஏனெனில் அங்கே எல்லாம் சுங்கம் வசூலிக்கும் சாலைகள், நல்லாவே இருந்தது, பிரயாணம், கும்பகோணம் செல்லும் சாலைப் பக்கம் திரும்பும் வரை! அதுவும் தேசீய நெடுஞ்சாலையில் தான் வருகிறது 45B. ஆனால் சாலையோ மோசமோ, மோசம். ஒரே மேடு, பள்ளம், வண்டிகள் சாதாரண வேகத்தில் கூடச் செல்ல முடியவில்லை, ஒரே குலுக்கல், ஆட்டம். ஒரு 2 மணி நேரத்துக்குள் களைப்பு பிரயாணம் செய்த எங்களுக்கே வந்துவிட்டது, வண்டி ஓட்டுபவருக்கு என்ன கஷ்டமா இருந்திருக்குமோ தெரியவில்லை. ஒருவழியாக மாலையில் 6 மணி போல் கும்பகோணம் வந்து வழக்கமான லாட்ஜுக்குப் போனால் இடமே இல்லைனு கை விரிக்கிறார்கள். இத்தனைக்கும் முன்னாலேயே சொல்லி வச்சிருந்தோம், அப்படியும் இடம் இல்லைனு சொல்லிட்டுப் பின்னர் அவங்களோட கிளை லாட்ஜுக்குத் தொலைபேசி இடம் கொடுக்கச் சொல்லி விட்டார்கள். திரும்பவும் அந்த ஹைஸ்கூல் ரோடில் இருந்த லாட்ஜுக்குப் போனால் அங்கே 3-வது மாடியில் தான் அறைகள் இருந்தனவாம். ஏறுவதற்குப் படிகள் தான். கடவுளே, எப்படி ஏறி இறங்குவது? ஒண்ணுமே புரியலையே? ஒரே குழப்பம். வேறு வழியில்லாமல் அதையே எடுத்துக் கொண்டோம்.

Friday, December 28, 2007

ஒரு சின்ன விளம்பரம்!

வந்தாச்சு, வந்தாச்சு, புதிய விஷயங்களுடன், புதிய படங்களுடன் உங்கள் "எண்ணங்கள்" புதுப் பொலிவுடன், புதிய தகவல்களுடன், இன்றே பாருங்கள், உங்கள் "எண்ணங்கள்"

பெருச்சாளியின் சதி,
மழையின் சதி,
கூகிளின் சதி,
இணைய இணைப்புக் கொடுக்கும் டாட்டா இண்டிகாமின் சதி,
அனைத்தையும் முறியடித்த ஒரே நபர், உங்கள் ஒப்பற்ற "தலைவி"யின் சாகசங்களை இன்றே காணுங்கள், உங்கள் எண்ணங்களில்.

Friday, December 21, 2007

நற்செய்தி, நற்செய்தி, நற்செய்தி!

வலை உலக மக்களே, நற்செய்தி! தமிழ்நாட்டையும், சென்னை நகரையும் கடந்த ஒரு வாரமாக மழை வாட்டி வருவது அனைவரும் அறிந்ததே! இந்த மழையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை அடைந்தது குறித்து மேன்மை தாங்கிய தலைவி அவர்கள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். (அவங்க வீட்டு வாசலில் குளிக்கலாம், துணி துவைக்கலாம், கப்பல் விடலாம், அவ்வளவு தண்ணி! இதிலே மத்தவங்களைப் பார்த்து துக்கமாக்கும்? :P) க்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஹிஹிஹி, என்னோட மனசாட்சி, அது அடைப்புக்குறிக்குள்ளே வந்து புலம்புது, ரொம்ப நாளா அதைக் கண்டுக்கலைனு கோவம் அதுக்கு! நீங்களும் கண்டுக்காதீங்க!

ஆகவே தலைவி, தென் மாவட்டங்களுக்குப் புயல், சூறாவளி, இப்படி எது வேணாப் போட்டுக்குங்க, வேகத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேர்காணல் மூலம் கண்டு அவர்கள் குறைகளைக் கேட்டு அறியப் போகின்றார். (யாருங்க அது? சொறிஞ்சுக்குங்கனு சொல்றது? வேதா(ள்)வா? ஹிஹிஹி) ரொம்பச் சிரிக்க வேண்டாம், ம.சா. வந்து வச்சுக்கறேன் உன்னை! இப்போ வர்ட்டா??????????????

எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன், ஞாபகம் வச்சுக்குங்க. அபி அப்பா, இதுக்கு தப்புத் தப்பா வந்து பின்னூட்டம் போட வேணாம், நீங்க சாட்டிலே "வ"ன"க்கம்னு சொன்னதுமே இங்கே இணையமே போயிடுச்சு! :P:P

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!


இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில் ஆழ்ந்த மன்னன், மிகவும் வருந்தினான். அப்போது ஐயப்பன் மன்னனிடம் ஒவ்வொரு வருடமும், மகரசங்கராந்தி அன்று தான் காந்த மலையில் ஒளி வடிவில் தோன்றுவதாயும், அப்போது தன் பக்தர்கள் அனைவரும் வந்து தன்னைத் துதிக்கும் வண்ணம் சபரிமலைக் கோயிலில் ஏற்பாடுகள் செய்யும்படியும், மன்னன் செய்து வைத்திருக்கும் திரு ஆபரணத்தை அந்தக் கோயிலின் மூல விக்ரஹத்துக்குச் சாத்தும்படியும் கேட்டுக் கொண்டார். அது போல் மன்னனும், அவன் சந்ததியினரும் ஒவ்வொரு வருடமும் பந்தள அரண்மனையில் இருந்து ஐயனின் திருவாபரணங்களைச் சுமந்து வந்து ஐயனுக்குச் சாத்துவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.

அந்தத் திருவாபரணப் பெட்டிகள் மூன்றிலும் உள்ளவை: ஒன்றில் ஐயப்பனின் திருமேனிக்குச் சார்த்தப் படும் திருவாபரணமும், இரண்டாவதில் கலசக்குடை பேடகமும், மூன்றாவதில் கொடிப்பெட்டியும் உள்ளது. இதைத் தவிர, திருவிதாங்கூரின் சித்திரைத் திருநாள் மகாராஜாவின் காணிக்கையாகத் தங்க அங்கியும் மண்டலபூஜை நிறைவின் போது சாத்துவது வழக்கம். அப்போது ஐயப்பனுக்கு அபிஷேஹம் செய்யப் படும் நெய்யானது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்தே வருவதாயும், இந்த வழக்கத்தையும் இந்த மகாராஜாவே ஏற்படுத்தியதாயும் சொல்கின்றனர். சபரிமலை சாஸ்தா கோயில் கட்டத் தொடங்கிய நாள் கார்த்திகை மாதம் முதல்தேதி என்பதால் ஐயப்பனின் விரதத்தில் கார்த்திகை முதல் தேதி அன்று துவக்குகின்றார்கள்.

நெய்யபிஷேஹம் ஏன் என்பதற்குக் காரணம்:மூன்று கண்களை உடைய தேங்காய் சாட்சாத அந்தப் பரமசிவனின் அம்சம். நெய்யோ என்றால் அந்த நெய் உண்ட மாலவனின் அம்சம். ஹரிக்கும், ஹரனுக்கும் பிறந்த தெய்வக்குழந்தைக்கு அவன், தாயையும், தந்தையையும் ஒன்றாக இணைத்துக் கொடுத்து வழிபடுவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் என்னவென்றால் அழியக்கூடிய நாம் தான் தேங்காய் என்றால் அழிவில்லாத ஆத்மா தான் நெய் என்று கருதி அந்த நெய்யை நிரப்பி எடுத்துச் சென்று ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். அழிவில்லாத ஆத்மாவான நெய்யை, இறைவனிடம் சேர்த்துவிட்டு, அழியக் கூடிய உடலான தேங்காயை, நெருப்பில் இடுகின்றோம்.

Sunday, December 16, 2007

பதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா!


மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற திருநாமம் இவருக்குக் கிடைத்தது என்றும் சொல்லுவார்கள். கள்ளர்களைப் போலவே தலையில் கொண்டை, கையில் வளரி என்னும் ஆயுதம்,(தற்காலத்தில் பூமராங் என்று அழைக்கப் படுகிறது), சாட்டைக் கம்பு, தலையில் எடுத்துக் கட்டிய உருமால், காதுகளில் கடுக்கன்கள், இடுப்பிலும், மார்பிலும் ஒரே ஆடையை இடுப்பில் அரையாடையாகவும், மார்பில் மேலாடையாகவும் கிராமத்து மக்களைப் போல் உடுத்தும் பாங்கு, இவற்றால் கவரப் பட்ட மன்னன் சேரநாடு சென்றும் கள்ளழகர் நினைவாகவே இருந்தான். பின்னர் அங்கே இருந்த "மலையாளக் கருப்பு" கோயிலுக்குப் போய் அவரை வணங்கும்போது அவரிடம் எப்படியாவது அந்தக் கள்ளழகரை இங்கே கொண்டு சேர்ப்பித்து விடு என வேண்டிக் கொண்டார். கருப்பு மன்னனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார். தனக்கும் தாய் தானே ஒரு வகையில், ஆகவே பெருமாளை எப்படியாவது சேரநாட்டுக்குக் கடத்திவிடலாம் என நினைத்துத் தன் பதினெட்டுப் பட்டிகளில் இருந்தும், தன் பரிவார தேவதைகளைச் சேர்த்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்து சேருகிறார்.

கள்ளரின் அழகைப் பார்த்த அவருக்குக் கண் இமைக்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறார். வந்த வேலை மறந்து விடுகிறது. எம்பெருமான் கள்ளர்களை விட்டுவிட்டு, மதுரையை விட்டுப் போவானா? அவன் மாயையே, இம்மாதிரி கருப்பை வந்த வேலையை மறக்கச் செய்கின்றது. அங்கேயே இருந்து தினமும் வணங்கிக் கொண்டிருந்த மலையாளக் கருப்புக்குத் திடீரென ஒருநாள் தான் வந்த வேலையும், தற்போது இருக்கும் நிலையும் புரிய, அழகரையே என்ன செய்வது எனக் கேட்கிறார். அழகரும், "நீ திரும்பிப் போகவேண்டாம். இங்கேயே இருந்து எனக்குக் காவல் காத்துக் கொண்டு இருந்துவிடு. நான் வெளியே போகும் நாட்களில் கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடைய கணக்கு, வழக்குகளுக்கும் நீ பொறுப்பு எடுத்துக் கொள், உன் முன்னிலையில் என்ன தீர்ப்பு வருகின்றதோ அதற்கு மக்கள் கட்டுப் படுவார்கள். உன் முன்னிலையில் ஒருவன் பொய்யாகச் சத்தியம் செய்ய மாட்டான். உண்மையே உன் முன்னிலையில் நிற்கும். என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் உன்னைத் தரிசித்துவிட்டே பின்னர் என்னைத் தரிசிக்க வருவார்கள்" என்று ஆசி வழங்குகிறார்.

கருப்பும் தன்னுடைய பதினெட்டுப் பரிவார தேவதைகளையும், பதினெட்டுப் படிகளாய் மாற்றி அன்று முதல் அழகர்கோயிலில் காவல் இருக்க ஆரம்பிக்கின்றார். இவருடைய பெயரும் அப்போது முதல் "பதினெட்டாம்படிக் கருப்பு" என வழங்க ஆரம்பித்தது. மலையாளத்தில் இருந்து வந்தபடியாலும், பதினெட்டு படிகள் உள்ளதாலும், இவர் சாஸ்தாவின் ஒரு ரூபமே என மக்கள் நம்பிக்கை. மேலும் ஐயப்பனும் கரிய திருமேனி படைத்தவர் எனக் கூறுவது உண்டு. இங்கே பதினெட்டுப் படிகளும், கதவும் தான் தரிசிக்க முடியும். வாசல் கதவு தான் கருப்பண்ணசாமி சன்னதி. சந்தனத்தால் (ஐயப்பனுக்கும் சந்தனம் விசேஷம்) அலங்கரிக்கப் பட்ட இந்தக் கதவின் இருபக்கமும் இரு பெரிய அரிவாள்கள் வைக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கே பூஜைகள் நடக்கும் இந்தச் சன்னதிக்கு முன்னர் நின்று பேசித் தீர்த்து வைக்கப் பட்ட வழக்குகள் மதுரை மாவட்டத்தில் கணக்கில் இல்லை என்றே சொல்லலாம். யாராக இருந்தாலும் இந்தச் சன்னதிக்கு முன்னர் பொய்ச் சத்தியமோ, பொய்ச் சாட்சியோ கூறுவது இல்லை. இன்றளவும், அழகர் சித்திரைத் திருவிழாவுக்கு மதுரைக்குச் செல்வதற்கு முன்னர், கருப்பண்ணசாமி சன்னதியில் அழகரின் நகைகளின் ஜாபிதாவைச் சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பும்போது அதே ஜாபிதாபடியே நகைகள் கணக்குகளைக் காட்டிவிட்டுமே செல்வார்கள்.

பின்னூட்டம் போட்டால் கண்ணாடி உடையும்!

இரண்டு நாள் முந்தி அபி அப்பா "பொங்கள்" பத்தி எழுதி இருந்த பதிவுகளைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் போட்டுட்டு இருந்தேனா? அதிலே இருந்த தப்புக்களைப் பார்த்தால் தலை சுத்த ஆரம்பிச்சது. சரி, ஒண்ணோ, இரண்டோ இருக்கும் சுட்டிக் காட்டலாம்னு பார்த்தால், சுட்டிக் காட்டிட்டு இருப்பதைத் தவிர வேறே ஒண்ணுமே செய்ய முடியலை, எண்ண முடியலை, கடைசியில் தோல்வியை ஒத்துக்கிட்டுத் தலையில் அடிச்சுட்டு உட்கார்ந்தேன். வேறே வழியே இல்லை. எத்தனை சொன்னாலும் அவர் திருத்தி என்னமோ எழுதப் போறதில்லை. விரக்தியின் எல்லைக்கே போய் உட்கார்ந்துட்டு இருந்தபோது, திடீரெனப் பதிவுகளைப் படிக்க முடியலை, என்ன ஆச்சு எனக்கு? தலை சுத்தலில் கண் மறைக்கிறதா? அல்லது என்னோட தமிழ் ஆர்வம் அதிகமாகிக் கண்களில் இருந்து அபி அப்பாவின் தமிழைப் பார்த்துவிட்டு ஆனந்த பாஷ்பம் பொழியுதா? என்னன்னே புரியலை.

"சொத்!" எதுவோ கீழே விழுந்த சப்தம். என்னனு குனிந்து பார்த்தால், கண்ணாடி, கண்ணுக்குப் போடுவது தாங்க, கையில் வந்தது. ஃப்ரேம் லூசாகி விட்டது, டைட் பண்ணணும்னு நினைச்சுட்டே கையில் கண்ணாடியை எடுத்தால், என்ன ஆச்சரியம்? ஒரு பக்கத்து ஃப்ரேமே உடைஞ்சு போயிடுச்சு. கொஞ்ச நாள் முந்தி ஒரு புத்தகத்தில் படிச்சேன். வெளிநாட்டுக் காரர் ஒருவர் லலிதா சகஸ்ரநாமம் டேப்பை இந்தியாவில் இருந்து வாங்கிப் போயிருந்தாராம். வாங்கும்போதே இதுக்குப் "பவர்" அதிகம், தினமும் சொன்னால், அதுவும் ஒரே சிந்தையுடன் சொன்னால் அதிகமாய் சக்தி இருக்கும் என்று. அதைச் சோதனை பண்ணிப் பார்க்க வேண்டி அவர் தினமும் அந்த சஹஸ்ரநாமம் காசெட்டைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டே ஒரே சிந்தனையாக இருந்திருக்கிறார். திடீர்னு ஒரு நாள் அது வெடித்தே விட்டதாம். அது போல அபி அப்பாவின் தமிழுக்கும் கண்ணாடியை உடைக்கும் அளவுக்குச் சக்தியா என்று வியந்து போய் விட்டேன், போங்க, மூணு நாளா கண்ணாடி இல்லாமல் எதுவும் செய்ய முடியலை, நேத்துச் சாயங்காலம் தான் ஒரு மாதிரி ஃப்ரேம் சோல்டரிங் பண்ணி வந்தது. பவர் வேறே ஜாஸ்தியாகி இருக்கு. கண்ணாடியையே மாத்தணும், அதுக்குள்ளே, இது வேறே. இனி "மொக்கை இடைவேளை" முடிஞ்சு பதிவுகள் ஆரம்பம்.

Wednesday, December 12, 2007

காரணம் என்ன சொல்வேன்?

ஐயப்பனைக் காண வாருங்கள், பதிவு இன்னும் முடியலை, சில எதிர்பாராத காரணங்களினால் உடனே தொடர முடியலை, பதினெட்டாம்படிக் கருப்பைப் பற்றி எழுதப் போறேன்னு சொன்னேன், 2 நாள் தகவல் தேடினேன், அதுக்குள்ளே, வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் "பொதிகை" மூலமா அற்புதமான தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையிலே தான் எழுதப் போறேன், மேலும் ஐயப்பன் கல்யாணம் பத்தியும், மதுரை செளராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவர்கள் அதை நடத்துவாங்கன்னும் நான் சொன்னதைக் கூடல் குமரன் உறுதி செய்துள்ளதோடு மேலதிகத் தகவல்களும், படங்களும் இருப்பதாய் லிங்க் கொடுத்துள்ளார். இன்னும் போய்ப் பார்க்க முடியலை, போகணும், கண்ணபிரான் கேட்ட "திருவாபரணங்கள்" பத்தியும், மதுரையம்பதியின் பதிவிலே உள்ள "சத்யகா" பத்தியும் தகவல்கள் கேட்டுட்டு இருக்கேன், கிடைச்சதும் அதையும் இணைக்கணும், ஆகவே இன்னும் அது முடியலை, வெயிட்டீஸ் ப்ளீஸ், அதுவரை, மெகா தொடருக்கு நடுவே, தொலைக்காட்சிச் சானல்களில் விளம்பர இடைவேளை மாதிரி நம்ம வலைப்பதிவில் மொக்கைப் பதிவுகள் வரும், எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்த வேண்டாமா? அதுவும் பெருவாரியான குண்டர்கள், சீச்சீ, சிஷ்யகேடிகள், சீச்சீ, என்னமோ தப்பாவே வருதே, சிஷ்யகோடிகள்னு வரணும் இல்லை? அவங்களுக்கு எல்லாம் மொக்கையே போதும்னு இருக்கும்போது, சிறிது அவங்களையும் திருப்தி செய்து மொக்கை போடவேணாமா?

நேத்துப் பூராப் பொதிகையிலே பாரதியார் பாட்டு, பாரதியார் பட்டிமன்றத் தொகுப்பு நிகழ்ச்சிகள், பாரதி பாட்டை ராஜ்குமார் பாரதி பாடிய பழைய? மறு ஒளிபரப்பு?, அப்புறம் பாரதி பாட்டுக்களில் "சக்திப்பாட்டுக்கள்" தேர்ந்தெடுத்து மெல்லிசை, பாரதி விழா என ஒரே பாரதியாகவே இருந்தது. என்றாலும் பொதிகைத் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது பாரதியை நினைவு கூர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்று பொதிகையே அதிகம் பார்க்கும் என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். ஆனால் தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று எதிலுமே வரலைனு நினைக்கிறேன். அதாவது நான் பார்க்கும்போது, மற்ற நேரங்களில் காட்டினாங்களா தெரியாது. ஆனால் நேற்று சாயந்திரம், சன்ஸ்கார் சானலில் கங்கை ஆரத்தி முடிஞ்சு, பொழுது போகாமல் சானல் மாற்றிக் கொண்டிருந்த போது, "ராஜ்" தொலைக்காட்சியில் "சுப்பிரமணிய பாரதி" என்ற தலைப்பில் நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. என்ன அதிசயம் எனப் பார்க்க ஆரம்பித்தேன். நிஜமாகவே அற்புதமான ஒரு தொகுப்பு. முதல் பகுதி, அதாவது பாரதி பிறந்ததும், அவர் அம்மா இறந்து,தந்தையின் மறுதிருமணம் எல்லாம் போய்விட்டது. நான் பார்க்கும்போது 11-ம் வயதில் பாரதி எழுதிய முதல் கவிதையில் இருந்து சில வரிகள் கைஎழுத்துப் பிரதியாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அந்தக் கவிதைக்கு அவருக்குக் கிடைத்த "பாரதி" பட்டமும், பேரும், புகழும் என்று, பின்னர் தந்தை நடத்திய ஜின்னிங் பாக்டரியை மூட வேண்டிய கட்டாயமும், அதை மூடக் காரணம் ஆங்கிலேயர் விதித்த வரிகள் எனவும், அந்த வரிகளைக் கட்ட முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு மூடவேண்டிய நிர்ப்பந்தமும், அந்த பாக்டரியின் இடிந்த சின்னங்களும் எனக்காட்டினார்கள், பாரதியின் திருமணமும், பின்னர் தந்தை மரணம், திருநெல்வேலி இந்துப் பள்ளியில் படித்த பாரதி, படிப்பை நிறுத்த வேண்டி வந்ததும், மனதை நெகிழ வைத்தது. பள்ளியின் பாரதிக்கு நினைவுச் சின்னம் எழுப்பி இருப்பதையும் காட்டினார்கள்.

பின்னர் அத்தை குப்பம்மாளிடம் போனது, காசியில் படித்தது, அங்கே ஆங்கிலம், வடமொழி, என கற்றுத் தேர்ந்தது, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது எனக்காட்டினார்கள். படித்த பள்ளியையும், அத்தை குப்பம்மாளின் இல்லமும் இடம் பெற்ற இந்தக் காட்சிக்குப் பின்னர் காசிக்கு வந்த எட்டயபுரம் மன்னர் அழைப்பின் பேரில் திரும்ப எட்டயபுரம் போய் அரசவைக் கவிஞனாக இருக்க முயன்றதும், 6 மாதங்கள் கூட நீடிக்க முடியாமல் போனதும், பின்னர் சேதுபதி உயர்நிலைப்பள்ளி, மதுரையில் தமிழாசிரியராக வந்தது, அங்கேயும் 3 மாதங்களுக்குள், ஜி.சுப்பிரமணிய ஐயரால் "சுதேசமித்திரன்"பத்திரிகைக்கு அழைக்கப் பட்டுச் சென்னை வந்தது, தேசீய எழுச்சியின் தாக்கத்தால் எழுந்த பாடல்கள், நிகழ்த்திய சொற்பொழிவுகள், திலகரிடம் கொண்ட பக்தி, வ.உ.சி. நண்பரானது, அவரும் சுப்பிரமணிய சிவாவும், ஆங்கிலேயரின் தந்திரத்தால் கைது செய்யப்ப்பட்டது, அவர்களை மீட்கப் போராடினது, சாட்சி சொன்னது என்றும் காட்டினார்கள். விஞ்ச் துரையுடன் வ.உ.சி. நிகழ்த்திய பேச்சுப் பற்றிய பாடலும் இடம் பெற்றது.

இந்தச் சமயம் தான் "இந்தியா" பத்திரிக்கைக்கும் அழைப்பு வருகிறது பாரதிக்கு. அதை நடத்திய திருமலாச்சாரியார், பாரதியை ஆசிரியர் என்று போட்டால் ஏற்படக் கூடிய நிகழ்வுகளை நினைத்து, திரு ஸ்ரீநிவாசன் என்பவரை ஆசிரியராக வெளிப்படையாகப் போட்டு அதை நடத்துகிறார். இந்தப் பத்திரிகையில் பாரதி முதல்முதலாகக் கேலிச்சித்திரங்கள், என்னும் கார்ட்டூன்களை வைத்து அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்வதை ஆரம்பித்து வைக்கிறார். பத்திரிகையின் சூடு தாங்கவில்லை ஆங்கில அரசுக்கு. பாரதி கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரதிநிதியாகப் போகிறார். பின்னர் 1907-ல் நடந்த சூரத் காங்கிரஸில், மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகள் எனச் சொல்லப் பட்ட திலகர் குழுவுக்கும் நடந்த வாக்குவாதம் கலவரத்தில் முடிகிறது. விபின் சந்திரபால் கைது செய்யப் படுகிறார். சற்று முன்பின்னாக இருக்கோன்னு நினைக்கிறேன். குறிச்சு வச்சுக்கலை, ஓரளவு நினைவில் இருந்து எழுதறேன். இந்தியா பத்திரிகை "யங் இந்தியா" என பாரத இளைஞர்களுக்காகவும் ஒன்று ஆரம்பிக்க அதன் ஆசிரியர் ஸ்ரீநிவாசன் கைது செய்யப் பட பாரதியும் கைது செய்யப் படும் சூழ்நிலை தெரிகிறது. விபின்சந்திரபால், திலகர் இவர்களின் கோஷங்களை எழுதிய பத்திரிகைகளையோ, அல்லது நோட்டிஸ்களையோ திருவல்லிக்கேணித் தெருக்களில் பாரதி விநியோகித்ததாயும், அன்று மாலை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவ்ர் பேச்சு ஆவேசம் நிரம்பியும் இருந்ததாயும் இந்தியா பத்திரிகையில் வர பாரதி தேடப் படுகின்றார். ஆகவே பத்திரிகை நடத்திவரும் திருமலாச்சாரியாரே பாரதியைப் புதுச்சேரிக்கு அனுப்பி அங்கே இருந்த தம் நண்பர் ஒருவர் உதவியுடன் பத்திரிகையை அங்கிருந்தே வெளியிட ஏற்பாடு செய்கின்றார். இந்த இடத்தில் தான் ஒரு ஆச்சரியமான விஷயம் பகிரப் பட்டது. அயர்லாந்தும், இங்கிலாந்தில் இருந்து சுதந்திரம் பெறப் போராடிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது அமெரிக்காவில் இருந்து வெளிவந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை "ஜர்னல் அமெரிக்கா" என்றோ என்னமோ, நினைவில் இல்லை, ஆனால் அமெரிக்கா என முடிகிறது. இந்தப் பத்திரிகை, அயர்லாந்தின் விடுதலையை முற்றிலும் ஆதரித்ததோடு அல்லாமல், அங்கே இருந்து அமெரிக்கா சென்றவர்களையும் ஆதரித்து வந்திருக்கின்றது. அந்தப் பத்திரிகையை அன்றைய நாட்களில், அதாவது 1906, 07, 08-ம் ஆண்டுகளில் சென்னை ராஜதானியில் மொத்தம் 13 பேர் மட்டுமே சந்தா கட்டி வரவழைத்திருக்கின்றார்கள், அவர்களில் பாரதியும் ஒருவர், இதுதான் ஆங்கிலேயர் அவரிடம் வெறுப்பும், கோபமும் கொள்ள அடிப்படைக் காரணம் என்று இந்தப் பதிவில் காட்டப் படுகிறது. மிச்சம் இன்னிக்குச் சாயங்காலம்னு சொல்லிட்டாங்க, அதுக்குள்ளே பொதிகையில் "வேளுக்குடி"யும் ஆரம்பிச்சுட்டார்.

இன்று காலை நம்ம வல்லி சிம்ஹன் ஊரைக் காட்டினாங்க பொதிகையிலே. அருமையா இருக்கு ஊர், மரங்களும், செடி, கொடிகளும் ஒரே பச்சைப் பசேல் என்று. நாங்க என்னமோ திருநெல்வேலி போனப்போ எப்படி இந்த ஊரை விட்டோம்னு தெரியலை, அந்த வட்டப்பாறையும், அதைத் தொடர்ந்த ராமானுஜர் கதையும், அவர் திருவனந்தபுரம் சென்றதும், அங்கிருந்த பெருமாளைக் கொண்டு வர நினைத்ததும் பெருமானுக்கு வர இஷ்டம் இல்லாததும், ராமானுஜருக்குத் தூக்கம் வரவைத்து, அவரைத் தூக்கத்திலேயே அங்கிருந்து திருக்குறுங்குடி அனுப்பி விடுகின்றார் எம்பெருமான். ஆனால் ராமானுஜரின் அணுக்கத் தொண்டர், அவருக்குச் சகலத்திலும் உதவுவர் வந்து சேரவில்லை. ராமானுஜரோ, அது புரியாமல் தம் தொண்டரைக் கூப்பிட, அங்கே கோயிலில் குடி கொண்டிருக்கும் திருக்குறுங்குடி நம்பியான எம்பெருமானே தொண்டராக வந்து ராமானுஜருக்குத் தொண்டு செய்ததும், அதை ஒட்டிய புடைப்புச் சிற்பங்களுமாக அற்புதமாய் இருந்தது. ஒரு தனிப்பதிவே போடலாம். இதிலே எழுத ஆரம்பிச்சுட்டேன், அதான் சுருக்கமாய்ப் போச்சு, வல்லி இது பத்தி விரிவாய் ஒரு பதிவு போடுவாங்கனு எதிர்பார்க்கலாம்.