எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 31, 2012

என்றென்றும் ஆனந்தமேயின் பாதிப்பு! :))))

.இன்னம்பூராருக்குப்பெண்கள் இப்போவும், எப்போவும் கஷ்டப் படறதாகவே சொல்கிறார்.  ஒரு சில பெண்கள் விஷயத்தில் உண்மையே; ஆனாலும் அதற்கான தீர்வை தைரியமாய் எடுக்கணும் என்பதே என் கருத்து.  ஆனால் அவருக்கோ கோபமான கோபம்.  நேற்றுக் கோபத்தோடயே படுக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். இன்னமும் கோபம் தணியவில்லை.  அவரின் கேள்விகளும், என் பதிலும்! :)))))))))



.நம்முடைய கஷ்டங்களை, பிரச்னைகளைத் தீர்க்க வழி காணாமல் அழுது கொண்டிருக்கும் பெண்கள், தங்கள் குடும்பத்திற்காகத் தியாகம் செய்வதாய்ச் சொல்லும் பெண்கள் ஆகியோர் பரிதாபத்தையும், தங்கள் சார்புத் தன்மையையும் மீண்டும் மீண்டும் பாதுகாப்பா இருக்கணும்னு தான் எதிர்பார்க்கிறாங்களே தவிர, அதிலிருந்து வெளியே வந்து சிந்திக்க மறுக்கின்றனர்....'
~ இது சிக்கலான பிரச்னையை மழுப்பல் அணுகுமுறையில் தீர்வு காணும் உத்தி.
1. தங்கள் பிரச்னைகளை தீர்க்க சில பெண்களுக்கு வழி கிடைக்காது, ஆணாதிக்கத்தினால். ஆண் வாரிசு பிறக்கவில்லை என்றால், வாழாவெட்டி.
2.குடும்பத்திற்குத் தியாகம்: எதிர்ஜாமீன் கொடுக்க வசதி இல்லை. இரண்டாம்தாரம். உடனே விதவை. அவள் தான் பெரியகுடும்பத்துக்கு பிள்ளை பேறு பார்க்கும் மருத்துவச்சி. அவள் தியாகி தான். என்ன பாதுகாப்பு, இந்த மண்ணங்கட்டி உலகில். அவள் சொத்தைத் திருடினார்கள்.
3. 'தடுத்தாட்கொள்ளப்பட்ட பெண்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்பது சிசுஹத்தி செய்து விட்டு. புத்ரகாமேஷ்டி யாகம் செய்வதை போல.
இன்னம்பூரான்
29 05 2012


ஐயா,

மழுப்பல் முறை எதுவும் இல்லை. பிரச்னையைப் பிரச்னையாய்ப் பார்க்கவேண்டும்;  அதிலிருந்து வெளிவர வேண்டும். என்பதே என் கருத்து.  அழுது கொண்டிருந்து, தானும் அழுது, சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்துத் தன்னைப் பார்த்துப்பரிதாபப் பட வைத்து.... தான் தியாகம் செய்கிறோம் என அனைவரிடமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு,

தன் குடும்பத்துக்குச் செய்வதைத் தியாகம்னு சொல்லக் கூடாது. (வற்புறுத்தல் இருந்தால் தவிர) வழி கிடைக்காது என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. வெளியே வந்தால் பாதுகாப்புப்போய்விடும் என்பதால் வருவதில்லை.  எங்கள் குடும்பத்திலேயே இதற்கு நல்ல உதாரணங்கள் இருந்தாலும் சொல்ல முடியவில்லை. ஆகவே விட்டு விட்டேன்.

ஆண் வாரிசை ஒரு காலத்தில் எதிர்பார்த்தார்கள் தான்.  ஆனால் இப்போது அப்படி இல்லை. பெண்ணோ, ஆணோ ஒரு குழந்தை போதும் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.  இதுவும் சமூகத்துக்குச் செய்யப்படும் தீமையே.  நன்மை அல்ல.  இது பற்றித் தனியாகச் சொல்வேன்.



குடும்பத்திற்குத் தியாகம்: எதிர்ஜாமீன் கொடுக்க வசதி இல்லை. இரண்டாம்தாரம். உடனே விதவை. அவள் தான் பெரியகுடும்பத்துக்கு பிள்ளை பேறு பார்க்கும் மருத்துவச்சி. அவள் தியாகி தான். என்ன பாதுகாப்பு, இந்த மண்ணங்கட்டி உலகில். அவள் சொத்தைத் திருடினார்கள். //

இப்படியானவர்களை அறிவேன். ஆனால் இப்போதெல்லாம் அந்தக் காலம் இல்லை.  இங்கே நாங்கள் இருக்கும் குடியிருப்பில் 90 வயது மூதாட்டி ஒருவர் இருக்கிறார்.  குழந்தைகள் பிறந்தும் உயிரோடு இல்லாமல், பக்கத்து வீட்டுப் பையரை வளர்த்துப் படிக்க வைத்து ஆதரவு காட்டி, தங்கை குழந்தைகளுக்கு ஆதரவாய் இருந்து, இப்போ தங்கை பிள்ளையிடம் தான் இருக்கிறார்.  கண்ணில் வைத்துப் போற்றுகிறார்கள்.  சொத்தெல்லாம் அதிகம் இல்லை.  உழைப்பு, உழைப்பு, உழைப்புத் தான் அவர்களிடம்.  பேட்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.//









//தனித்திறமை கொண்ட கதாநாயகி வளர்வது தங்களது ஹீரோ பிம்பத்துக்கு ஆபத்தானது என்பதால், எந்த நடிகரும் அதை விரும்புவது இல்லை. எனவேதான் ஒரே மாதிரி​யான படங்கள் உருவாக்கப்படும் துரதிர்ஷ்டத்துக்குள் தமிழ் சினிமா சிக்கிக்கொண்டது’ என்கிறார் அசோகமித்திரன் என்று அவருடைய 'இருட்டுலிருந்து வளிச்சம்' என்ற நூலை மதீப்பீடு செய்த ஜூனியர் விகடன் கூறுகிறது.
~ ஆனந்தத்தை பிடுங்கிக்கொண்டது யாரு?//
இன்னம்பூரான்


சந்தேகமே இல்லாமல் ஆண்களே பிடுங்கிக்கறாங்க.  நான் சொல்வதும் அதுவே.  ஆணாதிக்கம் நிறைந்த உலகில் ஒரு பெண்ணாகப் பெண் என்பதை மறவாமல் ஆணோடு எந்தவிதத்திலும் போட்டியிடாமல் தங்கள் தனித் தன்மையால் வாழக் கற்க வேண்டும். பெண் பெண்ணாகவே இருக்க வேண்டும்.

ஜூனியர் விகடன் படிக்கிறதில்லை.  அதோட அசோக மித்திரன் என்னோட சித்தப்பா என்பதால் அவரோட கருத்தோட ஒத்தும் போக மாட்டேன். முதல்லே அவருக்கே பிடிக்காது.  தனித் திறமை கொண்ட கதாநாயகி வளர்வது பெரிய ஹீரோக்களுக்கு வேண்டுமானால் ஆபத்தாய் இருந்திருக்கும், இருக்கிறது. நாளையும் இருக்கும். ஆனால் அதையும் மீறி வந்தவர்களை ஒரு பட்டியலே சொல்லலாம். மீறி வருவதை தங்கள் லக்ஷியமாய்க் கொள்ள வேண்டும்.

ஸ்மிதா படீல், இவர் இறந்தப்போ மஹாராஷ்ட்ரா மொத்தமும் அழுத அழுகை; மறக்க முடியாது

ஷாபனா ஆஸ்மி-- ஸ்மிதா படீலும் இவரும் சேர்ந்து நடித்த படம் எவராலும் மறக்க முடியாது.

தீப்தி நாவல்-- அருமையான நடிகை

டிம்பிள் கபாடியா---ருதாலியில் இவரின் நடிப்பைப் பார்த்தால் எப்படிப்பட்டதொரு நடிகையைக் கவர்ச்சி நடிகையா ஆக்கிட்டோம்னு புரியும். எல்லாம் பணம் செய்யும் வேலை.

கரிஷ்மா கபூர்---ஷக்தி, ஜுபைதா இரண்டிலும் இவரின் நடிப்பைப் பார்த்தால் கண்ணில் ரத்தமே வரும்.

ஜெயா பாதுரி---பிறவி நடிகை; இவரைப் பத்தி அதிகம் சொல்ல வேண்டாம்.

ரேகா--- பன்முகத் திறமை கொண்ட நடிகையான இவரின் உம்ராவ் ஜான் படம் எவராலும் மறக்க முடியாத ஒன்று.

சுசித்ரா சென்  -- சஞ்சீவ் குமாரும் இவரும் சேர்ந்து நடித்த படம் "ஆந்தி?" மறக்க முடியாத ஒன்று.

ஊர்மிளா மண்டோத்கர்-- பனாரஸில் இவர் நடிப்பையும் இன்னொரு படம் இந்தப் படம் பேர் நினைவிலேயே நிற்கவில்லை, பஞ்சாபிப் பெண்ணாக நடிப்பார். இந்தியா--பாகிஸ்தான் பிரிவினையில் பழைய சண்டையில் முஸ்லீம் குடும்பத்தினர் திருமணம் நிச்சயமான இவரைக் கடத்திக் கொண்டு போவார்கள். இந்தப் படத்திலும் ஊர்மிளாவின் நடிப்பு அருமையாக இருக்கும்.

தமிழிலே இல்லையானு கேட்காதீங்க. ரொம்பக் கொஞ்சமே கொஞ்சம் தான். தேடிப் பிடிச்சுப் பார்த்தால்..........

ரேவதி, அர்ச்சனா, அஸ்வினி போன்ற சில நடிகைகள், காஞ்சிபுரம் படத்தில் சமீரா ரெட்டி? போன்றவர்கள், பாரதி படத்தில் தேவயானி  இவர்கள் எல்லாருமே ஆண்களை மீறிக்கொண்டு தன்னை நிரூபித்தவர்களே. இப்படியான நிரூபணமே தேவை. பல நடிகைகளும் பணத்துக்காக ஆடிப் பாடினால் போதும்னு இருக்காங்க.  அவங்க தான் சிந்திக்கணும்னு சொல்றேன். நடிப்புன்னா என்னனு புரிஞ்சுக்கணும். இயல்பா இருக்கணும்.  காஞ்சிபுரம் படத்தின் சமீரா ரெட்டியைப்பார்த்தால் தெரியும். வீடு படத்தின் அர்ச்சனா.  ரேவதி நடித்த சில படங்கள். ஆண்களின் திறமையை மிஞ்சிக் கொண்டு தான் இந்த நடிகைகள் எல்லாம் வர முடிந்திருக்கிறது.  ஆணோடு போட்டியே இல்லை என்பது என் கருத்து.  ஆனால் நீங்கள் போட்டி உண்டு என்கிறீர்கள்.  அங்கே தான் நாம் மாறுபடுகிறோம்.

5 comments:

  1. நடிகைகள் பட்டியலில் நடிகையர் திலகம், மற்றும் அந்தக் கால கே ஆர் விஜயா (அம்மன் வேட மஞ்சள் புடவை விஜயா இல்லைங்கோ!) ஆகியோரை மறந்துவிட்டீர்கள்!

    ReplyDelete
  2. கெளதம் சார், ஹிஹிஹி, நான் நடிகைகளை மட்டுமே குறிப்பிட்டிருக்கேன். :)))))) புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன். பானுமதி அம்மாவைச் சேர்க்கலையேனு இன்னொருத்தருக்குக் கோபம். :)))) அவங்க எல்லாம் இந்த வட்டத்துக்குள்ளே வரலை. :((((

    ReplyDelete
  3. சில பிரச்னைகளை உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டம். நீங்கள் அதை நன்றாகவே செய்கிறீர்கள். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வும் அவரவர்கள் சூழ்நிலையையும் மனத் துணிவையும் பொறுத்தது, இல்லையா?

    //இப்போது அபபடி இல்லை. பெண்ணோ ஆணோ ஒரு குழந்தை போதும் என்று...//
    ஃபிப்டி ஃபிப்டிஎன்று சொல்லலாமா.... இப்போதும் பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொல்லும் வழக்கம் இருக்கத்தானே செய்கிறது? சமீபத்தில் படித்த புத்தகத்தில் ஒரு மருத்துவரே பெண் குழந்தை என்றால் இப்படி, ஆண் குழந்தை என்றால் அபபடி என்று ஏதோ கோட் வர்ட் (என்னவென்று சரியாய் நினைவில்லை) சொல்வதைப் படித்ஹது நினைவுக்கு வருகிறது.

    90 வயது மூதாட்டியின் கதை அறிய ஆவலாய் இருக்கிறது.

    ஆண்களின் உலகை மீறி ஜெயித்த நடிகைகளில் ஷோபா, சில்க் இல்லையா?

    ஆண்களுக்குச் சமமாய்ப் பெண்கள் என்ற கருத்தில் உங்கள் நிலை வசீகரிக்கும் உண்மையைக் காட்டுகிறது. ஆனாலும் இன்றைய நிலையில் விரல் கணக்கில் உதாரணம் காட்டும் நிலையில் மட்டுமேதான் இருக்கிறோமோ...

    ReplyDelete
  4. //இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வும் அவரவர்கள் சூழ்நிலையையும் மனத் துணிவையும் பொறுத்தது, இல்லையா?//

    சரிதான் ஶ்ரீராம். அவரவர் சூழ்நிலையும் முக்கியம். சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொள்ளத் தெரிய வேண்டும் என்பது அதை விடவும் முக்கியம். நீங்க சொன்னாப்போல் பெண் குழந்தை என்றால் வேண்டாம் என்பவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் தான். அவர்களும் மாற வேண்டும். ஏற்கெனவே பெண்கள் கணக்கெடுப்பில் ஆண்களில் பாதி கூட இல்லை என்கின்றனர். 40,45 வயசுக்கெல்லாம் கன்யர்கள் பெண்களுக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். :((((

    90 வயசுப் பாட்டியை ஒரு தரம் பார்த்தது தான். போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வரணும்.

    ஷோபா எங்கே ஜெயித்தார்? கோழை மாதிரி தூக்குப் போட்டுக் கொண்டார். அதே தான் சில்கும், :((( ஆண்களின் உலகில் வாழ ஆண் மாதிரி நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டு ஆணாக மாற வேண்டும் ஆணைப் போல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது தப்பு. பெண்ணுக்கும் தைரியம் உண்டு, அவளாலும் ஜெயிக்க முடியும் என்று ஜெயித்துக் காட்ட வேண்டும்.

    ReplyDelete
  5. பொதுவாக இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களிலேயே நடிக்க வாய்ப்புக் கொடுக்காமல் கவர்ச்சி காட்டினால், ஆடிப் பாடினால் போதும்னு இருக்காங்க. அதையும் மீறி ஒரு சில கன்னடப் படங்கள் நல்லவையாக வந்திருக்கின்றன. ஹிந்தியிலும் அப்படி இருக்கின்றன. தமிழில் சொல்லிக்கிறாப் போல் எதுவும் இல்லை. வீடு, குட்டி, மல்லி, காஞ்சிபுரம் போன்ற ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய படங்கள் தவிர.

    ReplyDelete