எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 27, 2025

வியாழக்கிழமை இரவில் மருத்துவமனை வாசம்!

 அது என்னமோ தெரியலை. மாமா இருந்தவரைக்கும் நான் அதிகமா மருத்துவப் பரிசோதனை எல்லாம் செய்துக்கலை. மருத்துவர் கொடுத்த வழக்கமான மருந்துகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இப்போப்பையரும் பெண்ணும் மாமாவின் காரியங்கள் முடிந்ததும் கூட்டிச் சென்றார்கள் கத்தார் வருவதற்கு மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்டும் மருத்துவரின் மருந்துச் சீட்டும் இல்லாமல் போக முடியாது என்பதால் போனோம். அதிலிருந்து ஒரே பரிசோதனைகள் தான். நான் ஜூன் மாசம் வரைக்கும் ரத்தத்தில் சர்க்கரை பார்ப்பது தவிர்த்து எதுவும் செய்து கொண்டதில்லை. இப்போ எக்கச்சக்கப் பரிசோதனைகள்.  அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எக்ஸ்ரேக்கள் என. அதிலும் பிஎஸ் என் எல் போனப்போப் பையர் படிகளில் இறங்க முடியாத என்னைத் தூக்கி இறக்கி விடும்போது ஏதோ பிரச்னையாகி வயிற்றில் மார்புக்கூட்டுக்கு அருகே இருந்து மேல் வயிறு முழுவதும் எக்கச்சக்க வலி ஏற்பட்டுப் பல மருந்துகள் சாப்பிட்டும் தீராமல் இங்கே தோஹா வருவதற்கு நாலைந்து நாட்கள் முன்னர் (டிக்கெட் எல்லாம் வாங்கினப்புறமா) வலி மிக மிக அதிகமாகி உட்காரவோ, படுக்கவோ முடியாமல் போனதில் ஸ்ரீரங்கத்திலேயே ஒரு சர்ஜனிடம்அவர் சொன்னபடி எல்லாவிதமான ஸ்கேன்களும் எடுக்கப்பட்டு உள்ளே  மசில் ஸ்பாசம் ஆக இருக்குனு சொல்லி மாத்திரைகள் கொடுத்தார் ஐந்தே நாட்களுக்கு. கிளம்பும் முன்னர் சரியாகவும் போச்சு. இங்கே வந்து கொஞ்ச நாட்கள் இடப்பக்கம் படுக்க முடியாமல் இருந்தாலும் பின்னர் சரியாகி விட்டது. 

இ த்தனை நாட்கள் கழிச்சு இ ப்போத் திடீரென புதன்கிழமை அன்று மதியத்திலிருந்து அந்த வலி. முதல்நாள் கொஞ்சம் பொறுக்கும்படி இருந்தாலும் மேல்வயிற்றைத் தொட முடியலை. படுக்க முடியலை. அன்னிக்குப் பையர் அலுவலக வேலையாக ஆஃப் ஷோர் போயிருந்தார். ஆகவே வீட்டுக்கு வரலை. மறுநாள் தான் வந்தார். அன்னிக்குச் சாயங்காலம் மறுபடி திடீரென வலி வரவே கொஞ்சம் பயந்த நான் பையரிடம் சொல்லக் கிட்டத்தட்ட ஆறரை மணி அளவில் மருத்துவமனை சென்றோம். வழக்கமாகப் பார்க்கும் மருத்துவர் அந்த வாரம் முழுவதும் விடுமுறையில் இருந்ததால் இன்னொரு மலையாள மருத்துவரிடம் போனோம். அவர் பல விதங்களிலும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் சர்ஜனிடம் தான் போகணும்னு சொல்லிட்டார். சொல்லிட்டு அந்த மருத்துவமனையின் சர்ஜனைத் தொடர்பு கொண்டால் அவர் அன்னிக்கு வரலை. ஆகவே கத்தாரின் தோஹாவில் உள்ள அரசு மருத்துவமனை சர்ஜனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். உடனே அங்கே போய் எமர்ஜென்சியில் பார்க்கச் சொல்லி வற்புறுத்தி விட்டார். 

நாங்கள் போன ஆஸ்டெர் மருத்துவமனையிலிருந்து சுமார் அரை மணி நேரப் பயணத்தில் அரசு மருத்துவமனை இருந்தது. அங்கே போனோம். போகும்போதே ஏழரைக்கு மேல் ஆகி விட்டது. அங்கே போய் எமர்ஜென்சியைத் தேடிக்கொண்டு போனோம். இங்கே எல்லாம் பெண்களுக்குத் தனி/ ஆண்களுக்குத் தனி என்றிருப்பதோடு பெண்கள் பக்கம் ஆண்கள் வரக்கூடாது/வர முடியாது. ஆகவே மருமகளுக்குத் தொலைபேசி எப்போ வேண்டுமானாலும் அழைப்பேன் எனப் பையர் சொல்லி வைத்திருந்தார். மருத்துவமனையில் எமர்ஜென்சிக்குள் போகும் இடம் வரைப் பையர் வந்து விட்டார். அங்கே போய்ப் பெயரை ஐடிகார்டுடனும் ஹெல்த் கார்டுடனும் கொடுத்துப் பதிந்து கொண்ட பின்னர் (வழக்கம்போல் வீல் சேர்தான்) அந்தச் செவிலியர் ஒரு பரிசோதனை அறைக்கு முன்னர் என்னை உட்கார்த்தி வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். காரைப் பார்க் செய்யச் சென்ற பையர் முக்கிய நுழைவாயில் வழியாக வந்து நான் அமர்ந்திருக்கும் பெரிய கூடத்தின் வாயில் வரை வந்து அங்கிருந்த செக்யூரிடியிடம் என்னைக் காட்டி விபரங்கள் சொன்னார். அவர் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டார். ஆனால் பையரை உள்ளே விடவில்லை. 

காத்திருந்த இடத்தில் எனக்கு முன்னரே நாலைந்து பேர்கள் இருந்ததால் அங்கிருந்த செவிலியர் ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு உள்ளே அழைத்துச் சென்று பரிசோதனைகளை முடித்தார். கீழே ரத்தப்பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றச் சின்னச் சின்னப்பரிசோதனைகள். அவை முடிந்ததும் என்னை அங்கிருந்த ஒரு உதவிப் பெண்மணி  மேலே எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இது வேறே வாயில் என்பதால் வெளியே நின்ற பையருக்கு நான் மேலே போயிருப்பதே தெரியாது. உள்ளே போனது தான் தெரியும். பின்னர் எப்படியோ விசாரித்துக் கொண்டு வர முயன்றால் எத்தனையோ ஆண்கள் தத்தம் மனைவியரோடு வந்திருக்கையில் பையரை மட்டும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆகவே அவர் கீழே சென்று விட்டார். நான் மத்தியானம் சாப்பிட்டது தான். கீழே இருக்கையிலேயே பையர் அங்கே இருந்த செக்யூரிடியிடம் கேட்டுவிட்டு அங்கிருந்த காஃபி ஷாப்பில் கேக் போன்றதொரு வஸ்துவை வாங்கிக் கொடுத்துவிட்டார். தாங்கணுமே, எத்தனை நேரம் ஆகுமோ என்பதால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டேன். தண்ணீர் குடிச்சால் நம்பர் ஒன் போக வேண்டி இருக்கும். துணை இல்லாமல் வீல் சேரிலோ, நடந்தோ போக முடியாது. ஆகவே தண்ணீரே குடிக்கவில்லை. மேல சில மணி நேரக் காத்திருப்பில் எப்போப் பரிசோதனைகள் ஆரம்பிக்கும் எனக் கேட்டதில் சரியாகப் பதில் கிடைக்கவில்லை.

நான் கையில் என்னுடைய அலைபேசியை எடுத்துச் செல்லாததால் மணி என்னனு தெரியலை. அங்கிருந்த ஓரிரு மலையாளச் செவிலியர்கள் பிடிவாதமாக மலையாளத்திலும்/ ஆங்கிலத்திலும்/ அரபியிலும் பேசினார்கள். மறந்து கூட இந்தியிலோ/தமிழிலோ பேசவில்லை. ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம் என்னைப் பார்க்க மருமகள் வந்து விட்டாள். அவளிடம் கேட்டதில் விபரங்கள் ஒன்றுமே தெரியாத காரணத்தால் அந்த அகாலத்தில் பையர் மருமகளைக் குழந்தையை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார் எனவும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கீழே பையரிடம் விட்டுவிட்டுத் தான் மட்டும் மேலே வந்திருப்பதையும் மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் பதினோரு மணிக்குப் பரிசோதனை ஆரம்பிக்கும் எனச் சொன்னதாகவும் தகவல்கள் கொடுத்தார். பின்னர் அவர் உதவியோடு நான் கழிவறை சென்று வந்தேன். பையரிடம் விபரம் தெரிவிக்க மருமகள் கீழே போய் விட்டார். சற்று நேரத்தில் எனக்குக் கையில் நரம்பு மூலம் மருந்து ஏற்றுவதற்கான ஊசியைச் சொருகி அதில் சில/பல மருந்துகளை ஏற்றி அடுத்தடுத்துச் செய்யப் போகும் பரிசோதனைகளுக்குத் தயார் செய்தனர்.


18 comments:

  1. ஆஹா...    என்ன ஆச்சு?  இப்போது எப்படி இருக்கிறீர்கள்?  ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம் அதெல்லாம் வந்தாச்சு. நல்லவேளை அட்மிஷன் அளவுக்கெல்லாம் போகலை. ஆனால் உள்ளூர பயமாய்த் தான் இருந்தது.

      Delete
  2. பழைய மசில் ஸ்பாசம் திரும்பிப் படுக்கும்போது மறுபடி வந்து விட்டதா?  என்ன அவஸ்தை..  நம்மூராயிருந்தால் வேறு நிலைமை.  அங்கே ஆயிரம் வழிமுறைகள் வைத்திருப்பார்களே..  ஆனாலும் முறையாக முதலிலிருந்து சுத்தமாக சோதித்துப் பார்த்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மசில் ஸ்பாஸம் தான். முதலில் இருந்து ஆரம்பித்து அடியைப் பிடிடா பார்த பட்டா எனத் தொடங்கி எல்லாச் சோதனைகளையும் பண்ணிப் பார்த்துட்டுத் தான் விட்டார்கள்.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    எத்தனை எத்தனை சிரமங்கள். கஸ்டங்கள்..! உங்கள் நிலையை படிக்கவே எனக்கு மிக பதட்டமாக உள்ளது.நீங்கள் நேரடியாக அத்தனை சிரமங்களையும் தாங்கிக் கொண்டு எப்படித்தான்..! என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் உங்களுக்கு எதையும் தாங்கும் மனதை தந்த அந்த ஆண்டவனுக்கு உங்களுடன் சேர்ந்து நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    தற்சமயம் பரிசோதனைகள் முடிந்து நலமாகி இருப்பீர்கள் என நம்புகிறேன். மகன், மருமகள் உதவியில் மருத்துவர் தந்த மருந்துகளில் இப்போது வலி பூரண குணமாகி விட்டதா?

    நல்ல இடத்தில் தொடரும் போட்டு சுவாரஸ்யபடுத்தும் கதையைப் போல எழுதும் உங்கள் நகைச்சுவை எண்ணங்கள்தான் உங்களை திடமான மனதுடன் எதையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றலையும் தந்துள்ளது என நான் நினைக்கிறேன். (ஏனெனில் நானும் இதுவரை எனக்கு வரும் உபாதைகளை அப்படித்தான் கடந்து வருகிறேன்.) அதனால் ஒரே அலைவரிசையில் இருக்கும் உங்கள் எண்ணங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நமக்குள் ஒரேயொரு வித்தியாசம். நான் மருத்துவமனைக் செல்லவே அஞ்சுவேன். .

    இப்போது எப்படியிருக்கிறீர்கள்.? பூரண குணமாகி விட்டதா? இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர தினமும் வேண்டிக் கொள்கிறேன். கடவுள் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கட்டும். உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. சுவாரசியத்துக்காகவெல்லாம் நிறுத்தலை கமலா! எழுதி முடிச்சுட்டுப் போஸ்ட் வெளியிட வைச்சிருந்தப்போ எழுதின வரைக்கும் தானாக வெளி வந்திருக்கு. பின்னர் மற்றதை எழுதி வெளியிடத் தாமதம் ஆகி விட்டது. தற்சமயம் கடந்த 3 நாட்களாக வலி இல்லை. இடப்பக்கம் திரும்பிப் படுக்க முடிகிறது. மூச்சு விடும்போது சிரமம் தெரியலை.

      Delete
    2. /சுவாரசியத்துக்காகவெல்லாம் நிறுத்தலை கமலா! எழுதி முடிச்சுட்டுப் போஸ்ட் வெளியிட வைச்சிருந்தப்போ எழுதின வரைக்கும் தானாக வெளி வந்திருக்கு./

      அப்படியா.? நான்தான் தவறுதலாக நினைத்து விட்டேன். மன்னிக்கவும். நீங்கள் அப்படி நிறுத்தியதும் அதன் பின் என்னவாயிற்றோ என்ற கவலை வேறு வந்தது. அதனால் அப்படிச் சொன்னேன். இப்போது நீங்கள் நலம் பெற்று நலமடைந்ததாக வந்த பதிவை கண்டபின் ஆறுதலாக இருந்தது. நன்றி சகோதரி.

      Delete
  4. நான் பெரும்பாலும் பஹ்ரைன் அரசு மருத்துவமனைகளில் இந்தப் பிரச்சனையைச் சந்தித்ததில்லை.

    என்னுடன் பணிபுரிந்தவர்களின் பிரசவ வார்டுக்குக்கூட ஆண்கள் நாங்கள் சென்றிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஆரம்பத்திலிருந்தே எல்லா இடங்களிலும் பெண்கள் தனி, ஆண்கள் தனிதான். கை ரேகை எடுக்குமிடத்தில் மட்டும் என்னைப் பெண்கள் பக்கம் போனப்போ வேண்டாம்னு சொல்லிட்டு விஐபி பக்கம் உட்கார வைத்து எடுத்தார்கள்.

      Delete
  5. மலையாளி நர்சுகள் பெரும்பாலும் உதவக்கூடியவர்கள். ஒருவேளை அங்கு ஏதேனும் பிரச்சனையா தெரியலையே.

    ReplyDelete
    Replies
    1. பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லோரும் பயங்கர வேலைகளில் மூழ்கி இருந்தார்கள். அதோடு மலையாளத்தில் சம்சாரிப்பதே அவங்களுக்கு எளிதாகவும் இருக்கு.

      Delete
  6. என்ன சோதனை படிக்கும் போதே கஷ்டமாக இருக்கிறது. விரைவில் நலம்பெற பிராரத்தனை செய்கிறேன். மருமகள் வந்தது ஆறுதல் . வலி குறைந்து இருக்கும் என்று நம்புகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. ஆமாம், கஷ்டமாய்த் தான் இருக்கு. அதிலும் அந்த வலி. மேல் வயிற்றில் இருந்து நகர்ந்து இடப்பக்கம் படுத்தால் அங்கே போய் உட்கார்ந்து கொள்ளும். ஒரு சின்னப் பந்து போல் கைகளில் உணர முடியும். திரும்பிப் படுத்தால் நடுவில் மார்புக்கூட்டுக்கு நடுவில் வந்து உட்கார்ந்துக்கும். மல்லாந்தும் படுக்கக் கஷ்டம். மூச்சு விட முடியாது. நரம்புகளின் சுருட்டல் தான் என்பது புரிந்தாலும் வலி தாங்க முடியாமல் போயிடுது.

      Delete
  7. என்னாச்சுக்கா இப்ப எப்படி இருக்கீங்க

    கீதா

    ReplyDelete
  8. இப்போது வீட்டுக்கு வந்துவிட்டீர்களா அக்கா?

    அதன் பின் என்னாச்சு?

    கீதா

    ReplyDelete
  9. இவ்வளவு சிரமங்களையும் தாங்கி வந்துள்ளீர்கள்.

    அடுத்த பகிர்வையும் படித்து பார்க்க வேண்டும். வருகிறேன்.

    ReplyDelete