எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 06, 2006

என்னுடைய மூன்றாவது பதிவு
இன்று காலையிலேயே அரக்கோணம் போய் அங்கிருந்து திருவாலங்காடு கோவிலுக்குப் போனோம்.பல வருடங்களாகப் பார்க்க நினைத்திருந்த கோவில். தற்சமயம் பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள்.கோவிலைச் சுற்றி வர முடியவில்லை வெயில் காரணம். பிரஹாரங்களில் மிகவும் அழகாக திருமுறைப் பாடல்கள் எழுதப் பட்டிருந்தது.காரைக்கால் அம்மையார் நடராஜர் பக்கத்தில் பேய்க் கோலத்தில் வீற்றிருந்தார்.எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நடராஜர் உருவம் மிக மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.அய்யன் காலைத் தூக்கி நின்றாடும் கோலம் பார்க்க மிக ஆனந்தமாக இருக்கிறது.இது வரை பல கோவில்களுக்குப் போயிருந்தாலும் நம் தமிழ் நாட்டுக் கோவில் களில் உள்ள சிலைகளும் சிற்பங்களும் போல் வட இந்தியக் கோவில்களில் இருப்பது இல்லை.துவாரகா மற்றும் சோம்நாத் கோவில்கள், காசி விஸ்வநாதர் கோயில் கொஞ்சம் பரவாயில்லை.ஆனால் பக்தி விஷயத்தில் வட இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை.இப்போது உள்ள இளைஞர்கள் எல்லாம் மிகவும் பக்தியுடன் இருப்பதைப் பார்த்தால் மிக சந்தோஷமாக இருக்கிறது.இன்னும் எழுத நிறைய இருக்கிறது.இன்று முடியவில்லை.

No comments:

Post a Comment