எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 23, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 7


கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!


ஆனைச்சாத்தன் என்பது ஒரு குருவி வகை. எப்போவும் கிளுகிளுனு பேசிக்கொண்டே இருக்கும், அதோட கொஞ்சம் சோம்பேறியும் கூட. குயில் காலங்கார்த்தாலே எழுப்பி விட்டதுன்னா, இது மெதுவா காக்கைக்கும் அப்புறமா எழுந்திருக்கும், அத்தகைய ஆனைச்சாத்தன் கூட எழுந்துவிட்டது, கீசு கீசுனு பேச ஆரம்பிச்சுட்டதுனு இங்கே சொல்றாள் ஆண்டாள்.

கீகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே!= இந்த ஆனைச்சாத்தன் கூட எழுந்து கொண்டு கீசு கீசுனு சொல்றது கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்றாப்போல் இருக்காம். ஆ, அவைகளின் பேச்சொலி கேட்கவில்லையா பெண்ணே,

காசும் பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ= ஆய்ச்சியர்கள் எல்லாரும் எழுந்திருந்து தயிர் கடைகிறார்கள்.
பானையில் மத்து மோதும் ஓசை, தயிர் சிலுப்பும்போது எழும் ஓசை, ஆய்ச்சியர்களின் கை வளைகளின் கிண்கிணி நாதம், அவர்கள் கழுத்து ஆபரணங்கள் அங்குமிங்கும் அசையும்போது எழும் ஒலி என ஒரே சத்தமாய் இருக்கே! இது எதுவுமா உனக்குக் கேட்கவில்லை, அடி பெண்ணே, என்ன இப்படி ஒரு பெருந்தூக்கம் தூங்குகிறாயே? உனக்கு என்ன பேய்க்குணம் வந்துவிட்டதோ?

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!= நீ அருமையான நாயகப்பெண்ணாயிற்றே, நாங்கள் கேசி என்ற அரக்கனைக்கொன்றதன் மூலம் கேசவன் என்ற பெயர் பெற்ற கண்ணனைப்பாடிப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். நீ அதைக் கேட்டுக்கொண்டே படுத்திருக்கிறாயே? ஆனால் அந்தப் பெண்ணுக்கோ இதுவும் ஒரு சுகம்தான் போலிருக்கு. இவர்கள் கேசவனின் புகழைப்பாடப் பாட அதைப் படுத்துக்கொண்டே கேட்பதில் பெரும் ஆநந்தம் கொள்கிறாளோ என்னமோ.

ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே, வா, வந்து கதவைத் திறப்பாய் என்கிறாள்.

நாராயண பட்டத்திரி,சொல்லுவது என்னவெனில் வெறும் வறட்டுத் தர்க்கத்தில் சிரமப்பட்டு சித்தி அடைவதில் தாமதம் அடையாமல் பக்தி மார்க்கத்தின் மூலம் ஈசனை விரைவில் அடையலாம் என்கிறார்.

"பவத் பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத்
கிமப்யாரூடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ
புநஸ்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதாதய மிலந்
மஹாநந்தாத்வைதம் திஸதி கிமத: ப்ரார்த்யம் அபரம்

ஆரம்பத்திலிருந்து பகவானிடம் நாம் வைக்கும் பக்தியானது அவனுடைய லீலா விநோதங்களாலும், பகவானின் குண விசேஷங்களாலும் இனிமையானதாய் உள்ளது. வளர்ந்துவிட்டாலோ நம் மனத்தின் அனைத்துத் தாபங்களையும் அறவே நீக்குகிறது. அதோடு உள்ளத்தில் மாசற்ற தெளிவான ஞாநத்தையும் உதிக்கச் செய்கிறது. பக்தியானது இவ்வளவு செய்கிறதே இதற்கும் மேல் வேறேன்ன வேண்டும்??

No comments:

Post a Comment