எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 22, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? -- 8

ஆறு மாதங்களுக்கு மேல் ஆனதில் அந்தக் குழந்தை தவழ ஆரம்பித்திருந்தது.  எல்லா அறைகளுக்கும் தவழ்ந்தே செல்லவும் ஆரம்பித்திருந்தது.  இப்போது அந்தக் குழந்தைக்கு உடம்பு சரியில்லையா?  தவழ்ந்து வந்து எல்லாருடனும் படுத்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும்.  அப்போதெல்லாம் ரவிக்குப் பயமாகவே இருக்கும்.  அது கிட்டே வந்து படுத்துக் கொண்டு இருக்கும் இந்த இருவரையும் ஒரேயடியாக இல்லாமல் பண்ணிடப் போகிறதேனு பயப்படுவான். யோசித்த ரவிக்கு அப்போது.......

சாந்தி அவனை உரக்க அழைக்கும் குரல் கேட்டது.  "ரவி, இங்கே வாங்க கொஞ்சம்!" என்று அழைத்தாள். ரவி சாந்திக்குத் தான் என்னவோ ஏதோ என அலறி அடித்துக் கொண்டு விரைந்தான்.  அங்கே சென்றவனுக்கு அதிர்ச்சி.  சாந்திக்கு ஒன்றும் இல்லை.  அந்தக் குழந்தை தான் சுருண்டு படுத்திருந்தது.  ரவிக்கு ஆச்சரியத்தின் மேலே ஆச்சரியம்.  இந்தக் குழந்தையாவது சுருண்டு படுக்கிறதாவது! என்ன ஆச்சு!  ஒரு வழியாய்த் தொலைந்து விட்டதா? அப்பாடா, நிம்மதி என நினைத்தவாறே, "என்ன சாந்தி? என்ன ஆச்சு?"என்று கேட்டான்.  "குழந்தையைப் பாருங்கள்!" என்றாள்.  கொஞ்சம் தயக்கத்துடனேயே குழந்தையைத் தொட்டான் ரவி.  குழந்தை உடல் அனலாகக் கொதித்தது.  சட்டெனக் கையை எடுத்தான் ரவி.

"டாக்டரிடம் காட்டினாயா? அல்லது அவரை வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டான்.

"வேண்டாம்;  வந்துவிட்டுப் போய்விட்டார்.  குழந்தைக்குப்பொன்னுக்கு வீங்கி!(mumps)  இது ஒட்டுவாரொட்டி என்பதால் யாரையும் கிட்டே வரவேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்.  அது தான் குழந்தைகளை இங்கே விடவில்லை.  முக்கியமாய்ப் பையனையும், உங்களையும் கிட்டே நெருங்க விடவேண்டாம்னு சொல்லி இருக்கார். " மெல்ல தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சாந்தி.  'நான் சொல்வது புரியுதா?' என்றபடி.  கொஞ்சம் ஏமாற்றத்தோடு அவளைப் பார்த்த ரவி, 'சரி' என்றபடி வெளியே சென்றுவிட்டான்.  தானே சாப்பிட்டுவிட்டுத்  தொலைபேசியை எடுத்து குழந்தையைப் பார்த்த மருத்துவரிடம் பேசினான்.  அவர் சொன்ன தகவல் அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியையும், இன்னொரு பக்கம் நிம்மதியையும் அளித்தது.  தன் குழந்தைகளோடு சேர்ந்து சிறிது நேரம் விளையாடிவிட்டு அவர்களைத் தூங்க வைத்துவிட்டுத் தானும் அறைக்குச் சென்று படுத்தான்.  ஒருவேளை தன் குழந்தைகளுக்கு இரவில் தான் தேவைப்பட்டால் என்பதால் அறைக்கதவைத் தாழிடவில்லை.

தன்னுடைய கார்ட்டூன் வேலைகளில்  ஆழ்ந்த ரவி புதியதாய் இரு கார்ட்டூன் படங்களுக்கா வேலைகளில் ஆழ்ந்தான்.  கீழே உட்கார்ந்து கொண்டு அவற்றைச் செய்து கொண்டிருந்தவன். அப்படியே எல்லாவற்றையும் வைத்துவிட்டுப் படுத்துவிட்டான். ஒரு தலையணையை மட்டும் எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு அப்படியே தூங்கிப் போனான்.  இரவு முழுதும் நல்ல தூக்கம்.  அவன் மேல் மெத்தென ஏதோ இருப்பதாகத் தோன்றவே திடுக்கிட்டுக் கண் விழித்தான் ரவி.  சின்னச் சின்னக் கைகள், சின்னச் சின்னக் கால்கள். அவன் கழுத்தை அந்தக் கைகள் கட்டிக்கொண்டிருக்க கால்கள் அவன் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தன.  ஒரு நிமிடம் இறந்து போன தன் நான்காவது குழந்தை நினைவு அவனுக்கு வரக் கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டான்.  அணைத்தவனுக்குக் குழந்தையை வருடும்போது தெரிந்த மாறுதல்கள் புரியவரச் சட்டெனத் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து குழந்தையைத் தன்னிடமிருந்து விலக்கிவிட்டுப் பார்த்தான்.

அந்தப் பிசாசுக் குழந்தை தான் அவன் மேல் படுத்துக் கொண்டு அவனைக் கட்டிக் கொண்டிருந்தது.  எரிச்சல் மேலோங்க ரவி அதைப் பிடுங்கித் தன் கைகளில் தூக்கிய வண்ணம் சாந்தியை நோக்கிச் சென்றான்.  "என்ன இது" என்றான் கடித்த பற்களுக்கு இடையே!  சமையல் வேலைகளில் மும்முரமாக ஆழ்ந்திருந்த சாந்தி அவனை நிமிர்ந்து பார்த்துக் கள்ளமில்லாமல் சிரித்தாள்.  "தொட்டிலில் விட்டு விட்டு வந்தேன்.  அதுக்குள்ளே கால் முளைச்சுடுத்து போல!" என்றாள்.

"உன்னுடன் வைத்துக்கொள் இதை எல்லாம்!" என மீண்டும் கோபமாகப் பேசிய ரவி அந்தக் குழந்தையை அப்படியே கீழே வைத்துவிட்டு வெளியேறினான்.  குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பினவனுக்குச் சட்டெனப் பொறி தட்டியது.  அந்த மருத்துவர் கூறிய வார்த்தைகள். ஆஹா,  ஏமாந்து விட்டேனோ! எனப் பதறிப் போனான்.  எதற்கும்  அலுவலகம் செல்லும் முன்னர் மருத்துவரைப் போய்ப் பார்த்துவிட்டே செல்வது என முடிவு செய்தான். 

8 comments:

  1. நோய் கொடுக்க வந்ததோ!

    ReplyDelete
  2. ஆஹா! அந்த குழந்தை ரொம்ப கிளவரா காயை நகர்த்துதே!

    ReplyDelete
  3. மருத்துவர் கூறிய வார்த்தைகள்...?????

    ReplyDelete
  4. ஶ்ரீராம், என்னனு போகப் போகத் தெரியும். :)

    ReplyDelete
  5. ஆமாம் சுரேஷ்! :)

    ReplyDelete
  6. டிடி யோசிங்க! :)))

    ReplyDelete
  7. அட என்ன ஆச்சு அப்புறம்....

    ReplyDelete
  8. மருத்துவர் சொன்ன விஷயம் என்னவோ என்று அறிய ஆவல்.

    ReplyDelete