பாஞ்சஜனாவின் கொடூரம்!
சாந்தீபனியின் மகன் ஆன புநர்தத்தன் வைவஸ்வதபுரி என்னும் யமப்பட்டினத்தில் இருந்து மீட்கப் பட்டான் எனப் புராணங்கள் மூலம் அறிகிறோம். விவஸ்வான் என்னும் பெயருள்ள சூரியனின் மகனான யமனை வென்று அழைத்துவருவதாகவும் தெரிந்து கொள்கின்றோம். இதற்கு ஒரு புத்திபூர்வமான சிந்தனையுடன் முன்ஷி சொல்லுவது என்னவென்றால் , முற்காலங்களில் அரபிக்கடல் பகுதியில் “ஒளிநகரம்” என்ற ஒன்று இருந்து வந்ததாகவும், பாபிலோனுக்கு அருகே உள்ள “லார்சா” என்னும் பெயருள்ள நகரத்தைச் “சூரியர்களின் நகரம்” என்ற பெயரில் அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கிறார். மேலும் அவர் சொல்லுவது என்னவென்றால் ஹரிவம்சத்தைக் கூர்ந்து ஆராய்ந்துபார்க்கும் நோக்கில் படித்தோமானால்(நான் படிச்சதில்லை) வைவஸ்வதபுரியின் அரசனான யமன் என்பவன் அனைவரின் உயிரையும் நேரம் வந்தால் எடுத்துச் செல்லும் யமதர்மராஜன் இல்லை என்பதும், இவன் ஒரு மனிதகுலத்தைச் சேர்ந்த அரசன் என்பதும் புரியவரும் என்று சொல்கின்றார். இந்த வைவஸ்வதபுரியின் அரசனான “யமன்” முதலில் கிருஷ்ணரை மஹாவிஷ்ணு என்றே வழிபட்டுக் கொண்டு வந்ததாகவும், கிருஷ்ணன் புநர்தத்தனை மீட்டுச் செல்ல வந்திருக்கும் செய்தியைக் கேட்டதும், இவனோடு சண்டை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. புநர்தத்தனைக் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்து யுத்தம் செய்ததாகவும் தெரியவருகிறது. மரணதேவனான யமனாக இருந்திருந்தால் காக்கும் கடவுளான விஷ்ணுவோடு சண்டை போட்டிருக்க முடியாது எனவும் கூறுகின்றார். ஆகவே இந்த அரசனின் கொடூரமான தன்மையால் இவனுக்கு யமன் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கவேண்டுமென்றும், இவனோடேயே கிருஷ்ணர் சண்டைபோட்டு ஜெயித்து புநர்தத்தனை மீட்டு வந்திருக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் சுட்டுகின்றார். புநர்தத்தனைத் திருப்பி அனுப்பாமல் இருந்ததற்கும் சரியான காரணம் இருந்திருக்கவேண்டும் என்பதும் அவர் கூற்று.
செளராஷ்டிரக் கடற்கரைகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதியில் எங்கேயோ வைவஸ்வதபுரி என்னும் இந்த நகரம் இருந்திருக்கலாம். பாகிஸ்தானில் உள்ள சிந்துப் பிரதேசத்தின் ஹைதராபாத் நகரத்தை அலெக்ஸாண்டரின் காலத்தில் படாலா என அழைத்து வந்திருக்கிறதாய்ச் சொல்லுகிறார். அரபிக்கடலின் சில தீவுகள், நாகர் குலத்து தூம்ரவர்ணன் என்னும் அரசனால் ஆளப்பட்டு வந்திருக்கின்றன. இவனின் பெண்களே கிருஷ்ணனின் யாதவகுலத்தின் சில முன்னோர்களுக்குத் திருமணமும் செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றனர். இந்தப் பெண்களின் பிள்ளைகளில் ஒருவரே இந்தத் தீவுக்கு அரசனாகி இருக்கலாம். மேலும் அந்தக் காலகட்டங்களில் ஆசியக் கண்டம் என இப்போது அழைக்கப்படும் பகுதிகளில் சக்தி வழிபாடு பிரபலமாக இருந்தது. அம்மா என்று அழைக்கப்பட்டும் வந்தாள். ஒரு சில பெண்களைச் சக்தி ரூபமாகவே வணங்கியும் வந்திருக்கிறதாய்ச் சொல்கிறார். இது கதையை மேற்கொண்டு படிக்கும்போது உதவியாக இருக்கும்.
புநர்தத்தனைப் பற்றி மேலும் தகவல்களைச் சேகரித்துக்கொண்டான் கண்ணன். அவன் வைவஸ்வதபுரியின் மன்னனுக்கு விற்கப்பட்டதையும் அறிந்துகொண்டான். இப்பொழுதும் கப்பல் அங்கேயே சென்றுகொண்டிருக்கிறது எனவும் அறிந்தான். அந்த நாட்டின் வழக்கம் ராணியை தெய்வீகத் தாயாக மதிப்பதும், ராணியின் கணவனான அரசனை மரணக்கடவுளான யமன் என அழைப்பதும் என்றறிந்தான். புண்யாஜனா கப்பல் தலைவனான பாஞ்சஜனா கண்ணனை அடிக்கடி தன் தனி அறைக்கு அழைத்துப் பேசி அவனைத் தன் பக்கம் இழுக்க முயன்றான். அவனுடைய கெட்ட எண்ணம் புரிந்துகொண்ட கண்ணன் அவன் எதிரில் செல்வதையே தவிர்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு நாள் மதியமும் பாஞ்சஜனா கப்பலின் மேல் தளத்திற்கு வந்து தன் கையில் இருக்கும் ஒரு அழகிய ரோஜாவைப் போன்ற வெளிர் சிவப்பு நிறச் சங்கை வைத்து ஊதுவான். அந்தச் சங்கு ஒரு அழகான கயிற்றில் கட்டப்பட்டு அவன் தோள்களை அலங்கரித்தது. சங்கோசை கேட்டதுமே அந்தச் சமயம் கப்பல் ஓட்டும் சிலரைத் தவிர கப்பலின் மற்ற
அனைத்து ஊழியர்களும் அங்கே வந்து அவனை வணங்கி நிற்பார்கள். கப்பல் ஓட்டுபவர்களும் ஒரு நாளைக்கு இருமுறை மாறுவார்கள். ஆகவே அனைவருமே ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் இப்படி மேல் தளத்திற்கு வந்து பாஞ்சஜனாவை வணங்கியே ஆகவேண்டும். தன்னிரு பக்கங்களிலும் அவனுடைய இரு மருமகன்களும் துணைக்கு நிற்கப் பின்னால் ராக்ஷசர்களை விடப் பலம் பொருந்திய ஹுக்கு, ஹுல்லு என்னும் இருவரும் காவல் காக்க, ஒவ்வொரு ஊழியனாக வந்து பாஞ்சஜனாவின் கால்களில் விழுந்து வணங்குவார்கள். சரிவர வணங்காத ஊழியர்களோ, நேரம் கழித்து வருபவர்களோ, அல்லது தவறு செய்துவிட்டதாய்க் கருதப் படுபவர்களோ யாராயிருந்தாலும் அவர்களுக்குத் தண்டனையும் அப்போது கொடுக்கப் படும்.
கண்ணன் கப்பலுக்குள் வந்த இரண்டாம் நாள் அம்மாதிரியான தண்டனை கப்பலின் தச்சன் ஒருவனுக்குக் கொடுக்கப் பட்டது. அவன் பெயர் ராது. ஹூக்குவும், ஹுல்லுவும் அவனைப் பிடித்திழுத்து பாஞ்சஜனாவின் முன்னே நிறுத்த பாஞ்சஜனா அவனைக் கால்களால் எட்டி உதைத்தான். அவனுக்கு வந்த கோபத்தில் வாயில் நுரை தள்ளும்போல் இருந்தது. ராதுவை உதைத்த வேகத்தில் அவன் எங்கேயோ போய் விழுந்தான். ஆனாலும் முடிந்தவரையில் வேகமாய் எழுந்து வந்து பாஞ்சஜனாவிடம் தன்னை மன்னிக்க வேண்டினான். ஆனால் பாஞ்சஜனாவோ அவனைச் சாட்டையால் அடிக்கும்படிக் கட்டளையிட்டான். சாட்டையடி முடிந்து முதுகெல்லாம் புண்ணாக, ரத்தம் வழிந்தபடி மயக்கமானான் ராது. அவனைத் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள் அவர்கள்.
கண்ணன் அன்று சுக்கானுக்கெதிரே அமர்ந்திருந்த பிக்ருவிடம் ராதுவுக்கு தண்டனை அளிக்கப்பட்ட காரணம் கேட்டான். பாஞ்சஜனாவின் அறையைச் சரியாகப் பராமரிக்க வில்லை. அதனால் பாஞ்சஜனாவிற்குக் கோபம் அதிகமாகிவிட்டதாய்ச் சொன்னான் பிக்ரு. மேலும் கண்ணனிடம், “குழந்தாய், உனக்கு இது புது விஷயம். இங்கே ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படித் தான் நடக்கும். ஒருமுறை கோபத்தில் சாட்டையால் அடித்துவிட்டு ஒரு மனிதனைக் கடலில் தூக்கி வீசியும் விட்டான் பாஞ்சஜனா. நீ அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாதே!”
“ராது எங்கே தூங்குவான்?” கண்ணனுக்குக் கவலை. “அவனருகில் நான் செல்லவேண்டுமே!”
“தம்பி, விளையாடாதே. அவன் தண்டிக்கப்பட்டவன். அவனருகே யாரும் செல்வதை பாஞ்சஜனா விரும்பமாட்டான்.”
“குக்குருவை என்னுடன் அனுப்புங்கள், நான் போய்ப் பார்த்தே ஆகவேண்டும் ராதுவை. என்ன தண்டனை கிடைத்தாலும் எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.”
ஆனால் குக்குராவுக்கோ பயம் அதிகமாய் இருந்தது. என்றாலும் ஒருவரும் அறியாமலே உத்தவனையும், கண்ணனையும் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். அழைத்துச் செல்லும்போதே அந்த இரு ராக்ஷசர்களும் எங்கே இருந்தாவது பார்க்கப்போகின்றனரே என்ற பயத்தோடே கூட்டிச் சென்று அங்கே சுருண்டு கிடக்கும் ராதுவைக் காட்டிவிட்டு ஓடியே போய்விட்டான். கண்ணன் அவனருகே சென்று மென்மையாகத் தொட்டான். தாங்க முடியாத வலியால் முனகிக்கொண்டிருந்த ராது தூக்கிவாரிப்போட எழுந்தான். முதலில் ஹூக்குவோ அல்லது ஹூல்லுவோ மீண்டும் தண்டிக்க வருகின்றனரோ, அல்லது கடலில் தூக்கிப் போடப் போகின்றனரோ எனப் பயந்த ராது இந்த இரு இளைஞர்களையும் அடையாளம் கண்டுகொண்டு ஆச்சரியம் அடைந்தான். கண்ணனோ வாய் திறந்தே பேசாமல் மென்மையாகவும், அன்பாகவும், ஆறுதலாகவும் அவனைத் தடவிக்கொடுத்துக்கொண்டே இருந்தான்.
கைகளும் பேசுமோ? அந்த இருட்டில் கண்ணன் தடவியதில் தன் வலியும், எரிச்சலும், வேதனையும் கொஞ்சம் மறைவது போலவே இருந்தது ராதுவுக்கு. ஆஹா, மயிலிறகால் அஞ்சனம் தடவுவது போலல்லவோ இந்த இளைஞன் தடவிக் கொடுக்கின்றான்? இவன் கைளில் என்ன மாயம் வைத்திருக்கிறானோ? கண்ணனின் உள்ளத்தில் பொங்கிய கருணையும், அன்பும், பாசமும், அவன் கைகளின் வழியாக வலிநிவாரணியாகச் செயல்பட்டதோ என்னும்படிக்கு ராதுவுக்கு ஆறுதல் கிடைத்தது. அவன் வாழ்நாளிலே முதல்முறையாக இத்தகையதொரு அன்பை அவன் அநுபவிக்கிறான். அவனால் தாங்கமுடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருகக் கண்ணன் தோள்களில் சாய்ந்து விம்மி, விம்மி அழ ஆரம்பித்தான். அவன் எழுந்து கொண்டு கண்ணன் தோள்களில் சாய்ந்ததுமே அவன் முதுகில் சாட்டை அடியினால் ஏற்பட்ட காயங்களில் ஒட்டி இருந்த மணலை எல்லாம் உத்தவன் அதி கவனத்தோடு ஒத்தி ஒத்தி எடுக்க ஆரம்பித்தான். அங்கே பேச்சுக்கே இடம் இருக்கவில்லை. இருவருமே ஒரு ஒத்திசைவோடு, ஒத்த மனத்தோடு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்றினார்கள். கண்ணனோ, உத்தவனோ ராது தன் அழுகையை நிறுத்திவிட்டுத் தன்னையறியாமல் தூங்கச் செல்லும்வரையில் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளை நிறுத்தவே இல்லை. ராது அசதியிலும், ஓரளவு கிடைத்த ஆறுதலிலும் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தான்.
கண்ணனும், உத்தவனும் ஒரு தாய் தன் குழந்தையைத் தூங்க வைக்கும் அதி ஜாக்கிரதை உணர்வோடு ராதுவைத் தூங்க வைத்துவிட்டுக் கீழே மென்மையாகக் கிடத்திவிட்டுத் தங்களுக்கென ஒதுக்கப் பட்ட இடத்திற்குச் சென்றனர். உத்தவன் நகைத்துக்கொண்டே, “கண்ணா, நம் இருவருக்கும் நாளை தண்டனை இருக்கிறதே!” என்றான். “ம்ம்ம்ம்ம்ம், மோசமான அந்த நிலைமையை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். பார்க்கலாம்” என்றான் கண்ணன். இருவரும் தூங்க ஆரம்பித்தனர். மறு நாள் விடிந்தது.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Friday, February 26, 2010
Monday, February 22, 2010
கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம்பாகம்!
கப்பலில் கண்ணனும், உத்தவனும்!
கடல் அலைகளின் ஓங்கார சப்தத்தையும், கடல் நீரைத் துழாவிக்கொண்டு கப்பல் செல்லும் சப்தத்தையும் தவிர எங்கும் நிச்சப்தமாக இருந்தது. சற்று நேரம் கழித்துக் கண்ணனே அந்த மெளனத்தைக் கலைத்தான். “மிக மிக அருமையான கப்பல் பெரியப்பா!” என்றான் கண்ணன். கண்ணனின் இந்த உறவு முறையான அழைப்பில் சற்றுத் திடுக்கிட்டான் பிக்ரு. “எத்தனை வருஷங்களாகக் கடல் பயணம் செய்து வருகிறீர்கள்?” மேலும் கேட்டான் கண்ணன்.
“ஓ,ஓஓ, நான் மிகச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே கடலில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். என் குடும்பத்தார் அனைவருமே கடல் பயணிகள் தான்.”
“அப்படியா?? கடல் பயணம் என்பது மிகவும் அற்புதம் இல்லையா?? வேடிக்கையும், விளையாட்டும் கூட நிறைந்திருக்குமல்லவா? எத்தனை நாடுகள்? எத்தனை மக்கள்?? எவ்வளவு ஊர்கள்?? அடாடா! மனிதர்களில் எத்தனைவிதமான பழக்கங்கள் நிறைந்திருப்பார்கள்? அனைத்தையும் பார்க்கலாமே?? எனக்கும் கடல் பயணம் என்றால் கொள்ளை ஆசை பெரியப்பா! எனக்குக் கப்பலைச் செலுத்துவது எப்படி எனச் சொல்லிக் கொடுக்க முடியுமா?”
கண்ணனின் ஆர்வத்தைப் பார்த்த பிக்ரு அவனிடம் உனக்குப் பிடித்தால் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னான். “அருமையாகப் பராமரிக்கப்பட்டுள்ள கப்பல்” என்று கண்ணன் நற்சான்று வழங்க, மனம் மகிழ்ந்த பிக்ரு, சென்ற மாதம் குஷஸ்தலையில் இருந்தபோது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தான். “ஓஓ அப்படியா! குஷஸ்தலையில் இருப்பவர்கள் ராக்ஷசர்களோ?? எப்படிப் பட்டவர்கள்?” என்று ஏதுமறியாதவன் போல் கண்ணன் கேட்க, “அவர்கள், நம் தலைவனின் குலத்தைச் சேர்ந்தவர்களே!” என்று மறுமொழி சொன்ன பிக்ரு, மேற்கொண்டு அவர்களைப் பற்றிப் பேசினால் தனக்கு ஆபத்தோ என்ற எண்ணத்தில் பேச்சை நிறுத்தினான். கண்ணன் மனதுக்குள்ளாக பிக்ரு இந்தப் புண்யாஜனா கப்பலில் பிரயாணிக்கும் பாஞ்சஜனாவை வெறுப்பதைப் புரிந்துகொண்டான். எனினும் மேலே அவனும் பேசவில்லை. கப்பல் பற்றியே கேள்விகள் கேட்க, சற்று நேரத்தில் பிக்ரு தானாகவே அவர்கள் கட்டை அவிழ்த்துச் சுதந்திரமாக விட்டான். என்றாலும் கப்பல் தலைவனான பாஞ்சஜனாவிற்குத் தெரியாமல் இருக்கக் கூடாது என நினைத்து இருவரையும் பாஞ்சஜனா இருக்குமிடம் கொண்டு சென்றான்.
பாஞ்சஜனா நல்ல வளர்த்தியாக, உயரமும், பருமனுமாக, தழும்புகள் நிறைந்த முகத்தை மறைக்கவென்று வளர்க்கப் பட்டதோ என்று எண்ணும்படியான தாடியுடன் காணப்பட்டான். முகம் தாடியில்லாமல் பார்க்கவே பயங்கரமாக இருக்குமோ என எண்ணும்படி தழும்புகள் நிறைந்திருந்தது. இடுப்பில் கட்டிய ஒரு வேஷ்டியைத் தவிர வேறு ஆடை எதுவும் அணியாமல் பெரிய பெரிய ஆபரணங்களால் உடலை மறைத்திருந்தான். ஒரு வெள்ளிச் சங்கிலி இடுப்பை அலங்கரிக்க அதன் ஒரு பக்கம் கட்டப் பட்ட நீண்ட வாள் இடுப்பில் தொங்கியது. கையிலிருந்தும் ஒரு சங்கிலி அவனுடைய பதவியைக் குறிக்கும் பதக்கத்தோடு தொங்கியது. அவனுக்கு எதிரே மற்ற ஆட்கள் பயம் கலந்த மரியாதையோடு நின்றிருந்தனர். அவனுக்குப் பின்னால் இரு ராக்ஷசர்கள் கையில் பிடித்த சாட்டையோடு நின்றிருந்தனர். அந்தக் கப்பலில் பயணம் செய்யும் ஆட்களில் எவர் தவறு செய்ததாக நிரூபிக்கப் பட்டாலும் அந்தச் சாட்டையடிக்குத் தப்பமுடியாது எனும் வண்ணம் அவர்கள் தயாராகக் காத்திருந்தனர். பிக்ரு இளைஞர்கள் இருவரையும் அங்கே கொண்டு சென்று இருவரும் கப்பலுக்கு வந்த விதத்தையும் தெரிவித்தான். பாஞ்சஜனா ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணன் அவனுக்குத் தன் வணக்கங்களைச் சமர்ப்பித்தான்.
“மதிப்புக்கு உகந்த தலைவரே! வணக்கம். நான் வாசுதேவ கிருஷ்ணன். சென்ற வருடம் நீங்கள் கூட்டிச் சென்ற புநர்தத்தன் எங்கள் நண்பன். அவனைப் பிரிந்து எங்களால் இருக்கமுடியவில்லை. தாங்கள் அவனிருக்குமிடம் எங்களைக் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம். எங்களை அவனிடம் கொண்டு செல்லுங்கள்” என்று மிகவும் வேண்டுதலாகச் சொன்னான்.
கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் கண்ணனின் வசீகரமும், நளினமும் கலந்த அழகு பாஞ்சஜனாவைக் கவர்ந்தது. “ஆஹா, வலுவில் வந்திருக்கும் இவர்களை நாம் விடக் கூடாது. அதிலும் இந்தக் கருநிறப் பையனுக்கு விலை அதிகம் கிடைக்கும்” என மனதுக்குள்ளாக எண்ணிக்கொண்டே அவர்கள் ஆசைக்குச் சம்மதிப்பதாகத் தெரிவித்தான் பாஞ்சஜனா. மேலும் தன்னுடைய அறை சகல வசதிகளோடு இருப்பதால் அங்கே வந்து தங்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டான். ஆனால் கண்ணனோ பிக்ருவோடு தாங்கள் தங்குவதாகவும், பிக்ரு தங்களுக்குக் கப்பல் ஓட்டக் கற்றுக் கொடுக்கப் போவதாகவும் சொன்னான். “ஹா,ஹா,ஹா,” எனச் சிரித்த பாஞ்சஜனா, “இத்தனை மெல்லிய, நளினமான கரங்களைக் கொண்ட நீங்கள் கப்பல் ஓட்டப் போகிறீர்களா? என் பெண்களுக்குக் கூட இத்தனை நளினமும், மெல்லியதுமான கரங்கள் கிடையாது. கரடு, முரடான கரங்கள் அவை. வலுவானதும் கூட. உங்கள் கரங்களில் வலுவில்லை.” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.
“ஆனால், தலைவா, நாங்கள் இங்கே சாப்பிடும் சாப்பாட்டுக்கு என இங்கேயே வேலை செய்து சம்பாதிக்க ஆசைப்படுகிறோம். நீங்கள் அளிக்கும் இலவசச் சாப்பாடு வேண்டாம் எங்களுக்கு.” என்று திட்டவட்டமாகக் கண்ணன் மறுத்தான். ஆனால் பாஞ்சஜனாவோ இந்த இளைஞர்கள் இப்போது இருப்பதுபோலவே மென்மையும், அழகும், நளினமும் பொருந்திக் காணப்பட்டாலே அதிக விலைக்கு விற்கமுடியும் எனக் கருதினான். கப்பல் ஓட்டக் கற்றுக்கொள்வது என்ன அவ்வளவு சுலபமா? கடலில் செல்லும்போது அடிக்கும் சுழிக்காற்று, சூரியனின் வெம்மை, மழையின் கடுமை என இயற்கையின் அனைத்துச் சீற்றங்களையும் எதிர்கொள்ளவேண்டும். அப்படி எதிர்கொள்ளும்போது இவர்களின் தோற்றம் மாறிவிடுமே! மனதில் கவலை மிகுந்தது பாஞ்சஜனாவிற்கு. ஆனால் கண்ணனோ தொடர்ந்து வற்புறுத்த அரை மனதோடு சம்மதித்த பாஞ்ச ஜனா பிக்ருவிற்குக் கட்டளை இட்டான். “பிக்ரு, இந்த இளைஞர்களை அதிகம் வேலை வாங்காதே. முக்கியமாய் சூரிய வெப்பத்தில் இவர்கள் தோல் நிறம் மாறிவிடாமல் பார்த்துக்கொள். சூரியனின் வெம்மை தாக்கினால் இவர்களின் இளமைத் தோற்றமும், மென்மையும் மாறிவிடும். ஜாக்கிரதை! அப்படி ஏதானும் நேரிட்டால் உனக்குக் கடுமையான தண்டனை விதிப்பேன்!” என்று கடுமையாகச் சொன்னான். மேலும் தனக்குப் பின்னால் நின்றிருக்கும் ஆட்களைப் பார்த்துக் கண் ஜாடையும் காட்டினான். அவர்கள் தலை வணங்கிப் புரிந்ததுக்கு அடையாளம் காட்டினர்.
*************************************************************************************
இப்போ மேலே தொடரும் முன்னர் ஒரு சின்ன விளக்கம். இந்தக் கதையைப் புராணரீதியாகவே படிச்சிருப்போம். இப்போக் கொஞ்சம் மாறுபட்டு இருப்பது தெரிஞ்சிருக்கும். திரு முன்ஷிஜி அவர்களின் எண்ணம் அறிவுபூர்வமாகவும் கண்ணனால் இப்படி எல்லாம் செய்திருக்கமுடியும் என்பதைச் சொல்லுவதே. அதை நினைவில் இருத்திக்கொண்டு படிக்கவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இந்தக் கதையில் மேற்கொண்டு கண்ணன் செல்லும் இடங்களாய்க் குறிப்பிடப் படுபவை பற்றிய ஒரு விளக்கமும் கீழே.
கம்சனைக் கொன்றபின்னர் கண்ணன் செய்யும் மிகப் பெரிய சாகசங்களில் இது அடங்கும். புநர்தத்தனை வைவஸ்வதபுரிக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கே இருந்து கண்ணன் புநர்தத்தனை மீட்டு வந்ததாகவும் புராணங்கள் சொல்லும். ஆனால் இங்கேயே பிரபாஸ க்ஷேத்திரத்தின் குஷஸ்தலையில் இருந்த சில ராக்ஷசர்கள் எனக் குறிக்கிறோம். பாணிகள் என்பவரை ரிக் வேதத்தில் கடவுளுக்கு எந்தவிதமான நிவேதனங்களோ, யாகங்களோ, யக்ஞங்களோ செய்யாதவர்கள் எனக் குறிப்பிட்டிருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இவர்களின் மொழியும் வேறு என்றும் சொல்கின்றனர். கடவுளை நம்பாததால் இவர்களை ராக்ஷசர்கள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். கடுமையான தொனியில் பேசுவார்கள் எனவும் குறிப்பிடப் படுகிறது. கடற்கொள்ளைக்காரர்கள் என்றும் சொல்லலாமோ??
இவர்கள் அனைவரையுமே இந்த ராக்ஷசர்கள் என்னும் ஒரே பதத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன். இவர்கள் இருந்த இடம் என முன்ஷி அவர்கள் Phoenicia என்றும், யூரிதிரயன் கடலருகில் இவர்களின் குடியிருப்புகள் இருந்ததாகவும் கூறுகிறார். இவர்கள் கடல் பிரயாணத்தில் வல்லவர்கள் என்றும், ஒழுங்குமுறையற்ற நடவடிக்கைகள் அதிகம் என்றும் கூறுகின்றார். கி.மு. 1600-1350 க்கு உட்பட்ட காலத்தில் இவர்களின் ஆதிக்கம் கடல் வெளியில் அதிகம் இருந்ததாகவும் சொல்லுகின்றார். Rawlinson's History of Phonecia P. 406 என்று ஆதாரம் கொடுத்திருக்கிறார். புத்தகம் இருக்கிறவங்க பார்த்துட்டுச் சொல்லுங்கப்பா! ஆகவே அரபிக்கடல் பிரதேசத்தில் இவர்களின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. புநர்தத்தனைக் கொண்டு செல்லவும் வழி வகுத்திருக்கிறது. நாளை புநர்தத்தன் எங்கே போயிருப்பான் என்பது பற்றிய ஒரு விளக்கம் காணலாம்.
கடல் அலைகளின் ஓங்கார சப்தத்தையும், கடல் நீரைத் துழாவிக்கொண்டு கப்பல் செல்லும் சப்தத்தையும் தவிர எங்கும் நிச்சப்தமாக இருந்தது. சற்று நேரம் கழித்துக் கண்ணனே அந்த மெளனத்தைக் கலைத்தான். “மிக மிக அருமையான கப்பல் பெரியப்பா!” என்றான் கண்ணன். கண்ணனின் இந்த உறவு முறையான அழைப்பில் சற்றுத் திடுக்கிட்டான் பிக்ரு. “எத்தனை வருஷங்களாகக் கடல் பயணம் செய்து வருகிறீர்கள்?” மேலும் கேட்டான் கண்ணன்.
“ஓ,ஓஓ, நான் மிகச் சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே கடலில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். என் குடும்பத்தார் அனைவருமே கடல் பயணிகள் தான்.”
“அப்படியா?? கடல் பயணம் என்பது மிகவும் அற்புதம் இல்லையா?? வேடிக்கையும், விளையாட்டும் கூட நிறைந்திருக்குமல்லவா? எத்தனை நாடுகள்? எத்தனை மக்கள்?? எவ்வளவு ஊர்கள்?? அடாடா! மனிதர்களில் எத்தனைவிதமான பழக்கங்கள் நிறைந்திருப்பார்கள்? அனைத்தையும் பார்க்கலாமே?? எனக்கும் கடல் பயணம் என்றால் கொள்ளை ஆசை பெரியப்பா! எனக்குக் கப்பலைச் செலுத்துவது எப்படி எனச் சொல்லிக் கொடுக்க முடியுமா?”
கண்ணனின் ஆர்வத்தைப் பார்த்த பிக்ரு அவனிடம் உனக்குப் பிடித்தால் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னான். “அருமையாகப் பராமரிக்கப்பட்டுள்ள கப்பல்” என்று கண்ணன் நற்சான்று வழங்க, மனம் மகிழ்ந்த பிக்ரு, சென்ற மாதம் குஷஸ்தலையில் இருந்தபோது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தான். “ஓஓ அப்படியா! குஷஸ்தலையில் இருப்பவர்கள் ராக்ஷசர்களோ?? எப்படிப் பட்டவர்கள்?” என்று ஏதுமறியாதவன் போல் கண்ணன் கேட்க, “அவர்கள், நம் தலைவனின் குலத்தைச் சேர்ந்தவர்களே!” என்று மறுமொழி சொன்ன பிக்ரு, மேற்கொண்டு அவர்களைப் பற்றிப் பேசினால் தனக்கு ஆபத்தோ என்ற எண்ணத்தில் பேச்சை நிறுத்தினான். கண்ணன் மனதுக்குள்ளாக பிக்ரு இந்தப் புண்யாஜனா கப்பலில் பிரயாணிக்கும் பாஞ்சஜனாவை வெறுப்பதைப் புரிந்துகொண்டான். எனினும் மேலே அவனும் பேசவில்லை. கப்பல் பற்றியே கேள்விகள் கேட்க, சற்று நேரத்தில் பிக்ரு தானாகவே அவர்கள் கட்டை அவிழ்த்துச் சுதந்திரமாக விட்டான். என்றாலும் கப்பல் தலைவனான பாஞ்சஜனாவிற்குத் தெரியாமல் இருக்கக் கூடாது என நினைத்து இருவரையும் பாஞ்சஜனா இருக்குமிடம் கொண்டு சென்றான்.
பாஞ்சஜனா நல்ல வளர்த்தியாக, உயரமும், பருமனுமாக, தழும்புகள் நிறைந்த முகத்தை மறைக்கவென்று வளர்க்கப் பட்டதோ என்று எண்ணும்படியான தாடியுடன் காணப்பட்டான். முகம் தாடியில்லாமல் பார்க்கவே பயங்கரமாக இருக்குமோ என எண்ணும்படி தழும்புகள் நிறைந்திருந்தது. இடுப்பில் கட்டிய ஒரு வேஷ்டியைத் தவிர வேறு ஆடை எதுவும் அணியாமல் பெரிய பெரிய ஆபரணங்களால் உடலை மறைத்திருந்தான். ஒரு வெள்ளிச் சங்கிலி இடுப்பை அலங்கரிக்க அதன் ஒரு பக்கம் கட்டப் பட்ட நீண்ட வாள் இடுப்பில் தொங்கியது. கையிலிருந்தும் ஒரு சங்கிலி அவனுடைய பதவியைக் குறிக்கும் பதக்கத்தோடு தொங்கியது. அவனுக்கு எதிரே மற்ற ஆட்கள் பயம் கலந்த மரியாதையோடு நின்றிருந்தனர். அவனுக்குப் பின்னால் இரு ராக்ஷசர்கள் கையில் பிடித்த சாட்டையோடு நின்றிருந்தனர். அந்தக் கப்பலில் பயணம் செய்யும் ஆட்களில் எவர் தவறு செய்ததாக நிரூபிக்கப் பட்டாலும் அந்தச் சாட்டையடிக்குத் தப்பமுடியாது எனும் வண்ணம் அவர்கள் தயாராகக் காத்திருந்தனர். பிக்ரு இளைஞர்கள் இருவரையும் அங்கே கொண்டு சென்று இருவரும் கப்பலுக்கு வந்த விதத்தையும் தெரிவித்தான். பாஞ்சஜனா ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்ணன் அவனுக்குத் தன் வணக்கங்களைச் சமர்ப்பித்தான்.
“மதிப்புக்கு உகந்த தலைவரே! வணக்கம். நான் வாசுதேவ கிருஷ்ணன். சென்ற வருடம் நீங்கள் கூட்டிச் சென்ற புநர்தத்தன் எங்கள் நண்பன். அவனைப் பிரிந்து எங்களால் இருக்கமுடியவில்லை. தாங்கள் அவனிருக்குமிடம் எங்களைக் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறோம். எங்களை அவனிடம் கொண்டு செல்லுங்கள்” என்று மிகவும் வேண்டுதலாகச் சொன்னான்.
கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாலும் கண்ணனின் வசீகரமும், நளினமும் கலந்த அழகு பாஞ்சஜனாவைக் கவர்ந்தது. “ஆஹா, வலுவில் வந்திருக்கும் இவர்களை நாம் விடக் கூடாது. அதிலும் இந்தக் கருநிறப் பையனுக்கு விலை அதிகம் கிடைக்கும்” என மனதுக்குள்ளாக எண்ணிக்கொண்டே அவர்கள் ஆசைக்குச் சம்மதிப்பதாகத் தெரிவித்தான் பாஞ்சஜனா. மேலும் தன்னுடைய அறை சகல வசதிகளோடு இருப்பதால் அங்கே வந்து தங்கும்படி இளைஞர்களைக் கேட்டுக் கொண்டான். ஆனால் கண்ணனோ பிக்ருவோடு தாங்கள் தங்குவதாகவும், பிக்ரு தங்களுக்குக் கப்பல் ஓட்டக் கற்றுக் கொடுக்கப் போவதாகவும் சொன்னான். “ஹா,ஹா,ஹா,” எனச் சிரித்த பாஞ்சஜனா, “இத்தனை மெல்லிய, நளினமான கரங்களைக் கொண்ட நீங்கள் கப்பல் ஓட்டப் போகிறீர்களா? என் பெண்களுக்குக் கூட இத்தனை நளினமும், மெல்லியதுமான கரங்கள் கிடையாது. கரடு, முரடான கரங்கள் அவை. வலுவானதும் கூட. உங்கள் கரங்களில் வலுவில்லை.” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.
“ஆனால், தலைவா, நாங்கள் இங்கே சாப்பிடும் சாப்பாட்டுக்கு என இங்கேயே வேலை செய்து சம்பாதிக்க ஆசைப்படுகிறோம். நீங்கள் அளிக்கும் இலவசச் சாப்பாடு வேண்டாம் எங்களுக்கு.” என்று திட்டவட்டமாகக் கண்ணன் மறுத்தான். ஆனால் பாஞ்சஜனாவோ இந்த இளைஞர்கள் இப்போது இருப்பதுபோலவே மென்மையும், அழகும், நளினமும் பொருந்திக் காணப்பட்டாலே அதிக விலைக்கு விற்கமுடியும் எனக் கருதினான். கப்பல் ஓட்டக் கற்றுக்கொள்வது என்ன அவ்வளவு சுலபமா? கடலில் செல்லும்போது அடிக்கும் சுழிக்காற்று, சூரியனின் வெம்மை, மழையின் கடுமை என இயற்கையின் அனைத்துச் சீற்றங்களையும் எதிர்கொள்ளவேண்டும். அப்படி எதிர்கொள்ளும்போது இவர்களின் தோற்றம் மாறிவிடுமே! மனதில் கவலை மிகுந்தது பாஞ்சஜனாவிற்கு. ஆனால் கண்ணனோ தொடர்ந்து வற்புறுத்த அரை மனதோடு சம்மதித்த பாஞ்ச ஜனா பிக்ருவிற்குக் கட்டளை இட்டான். “பிக்ரு, இந்த இளைஞர்களை அதிகம் வேலை வாங்காதே. முக்கியமாய் சூரிய வெப்பத்தில் இவர்கள் தோல் நிறம் மாறிவிடாமல் பார்த்துக்கொள். சூரியனின் வெம்மை தாக்கினால் இவர்களின் இளமைத் தோற்றமும், மென்மையும் மாறிவிடும். ஜாக்கிரதை! அப்படி ஏதானும் நேரிட்டால் உனக்குக் கடுமையான தண்டனை விதிப்பேன்!” என்று கடுமையாகச் சொன்னான். மேலும் தனக்குப் பின்னால் நின்றிருக்கும் ஆட்களைப் பார்த்துக் கண் ஜாடையும் காட்டினான். அவர்கள் தலை வணங்கிப் புரிந்ததுக்கு அடையாளம் காட்டினர்.
*************************************************************************************
இப்போ மேலே தொடரும் முன்னர் ஒரு சின்ன விளக்கம். இந்தக் கதையைப் புராணரீதியாகவே படிச்சிருப்போம். இப்போக் கொஞ்சம் மாறுபட்டு இருப்பது தெரிஞ்சிருக்கும். திரு முன்ஷிஜி அவர்களின் எண்ணம் அறிவுபூர்வமாகவும் கண்ணனால் இப்படி எல்லாம் செய்திருக்கமுடியும் என்பதைச் சொல்லுவதே. அதை நினைவில் இருத்திக்கொண்டு படிக்கவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இந்தக் கதையில் மேற்கொண்டு கண்ணன் செல்லும் இடங்களாய்க் குறிப்பிடப் படுபவை பற்றிய ஒரு விளக்கமும் கீழே.
கம்சனைக் கொன்றபின்னர் கண்ணன் செய்யும் மிகப் பெரிய சாகசங்களில் இது அடங்கும். புநர்தத்தனை வைவஸ்வதபுரிக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கே இருந்து கண்ணன் புநர்தத்தனை மீட்டு வந்ததாகவும் புராணங்கள் சொல்லும். ஆனால் இங்கேயே பிரபாஸ க்ஷேத்திரத்தின் குஷஸ்தலையில் இருந்த சில ராக்ஷசர்கள் எனக் குறிக்கிறோம். பாணிகள் என்பவரை ரிக் வேதத்தில் கடவுளுக்கு எந்தவிதமான நிவேதனங்களோ, யாகங்களோ, யக்ஞங்களோ செய்யாதவர்கள் எனக் குறிப்பிட்டிருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இவர்களின் மொழியும் வேறு என்றும் சொல்கின்றனர். கடவுளை நம்பாததால் இவர்களை ராக்ஷசர்கள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். கடுமையான தொனியில் பேசுவார்கள் எனவும் குறிப்பிடப் படுகிறது. கடற்கொள்ளைக்காரர்கள் என்றும் சொல்லலாமோ??
இவர்கள் அனைவரையுமே இந்த ராக்ஷசர்கள் என்னும் ஒரே பதத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன். இவர்கள் இருந்த இடம் என முன்ஷி அவர்கள் Phoenicia என்றும், யூரிதிரயன் கடலருகில் இவர்களின் குடியிருப்புகள் இருந்ததாகவும் கூறுகிறார். இவர்கள் கடல் பிரயாணத்தில் வல்லவர்கள் என்றும், ஒழுங்குமுறையற்ற நடவடிக்கைகள் அதிகம் என்றும் கூறுகின்றார். கி.மு. 1600-1350 க்கு உட்பட்ட காலத்தில் இவர்களின் ஆதிக்கம் கடல் வெளியில் அதிகம் இருந்ததாகவும் சொல்லுகின்றார். Rawlinson's History of Phonecia P. 406 என்று ஆதாரம் கொடுத்திருக்கிறார். புத்தகம் இருக்கிறவங்க பார்த்துட்டுச் சொல்லுங்கப்பா! ஆகவே அரபிக்கடல் பிரதேசத்தில் இவர்களின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. புநர்தத்தனைக் கொண்டு செல்லவும் வழி வகுத்திருக்கிறது. நாளை புநர்தத்தன் எங்கே போயிருப்பான் என்பது பற்றிய ஒரு விளக்கம் காணலாம்.
Saturday, February 20, 2010
சீவகசிந்தாமணியின் முதல் பதிப்புக்கான முயற்சிகள்!
கீழே உள்ள பதிவை நேற்றே போட நினைத்து முடியவில்லை. இன்று போட்டுள்ளேன். இது உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கப் பட்ட முயற்சிகள் பலவற்றில் ஒரு சிறு துரும்பு. எவ்வளவு கஷ்டப் பட்டு விபரங்கள் தேடி ஊக்கத்தோடும், முனைப்போடும் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரம். மேலும் அவருக்குத் தகவல்கள் கொடுத்து உதவியதும் ஒரு பெண்மணி. இதிலிருந்து அக்கால கட்டத்தில் பெண்கள் படிப்பதிலிருந்து தடுக்கப்படவில்லை என்பதும், முடக்கப்படவில்லை என்பதும் கற்றறிந்த சான்றோராகவே இருந்தனர் என்பதும் புரியவரும். பிற ஆண்களுக்கு எதிரே வருவது என்பது எல்லாக் குடும்பங்களிலும் வழக்கத்தில் இல்லை. ஆகவே அந்த அம்மையார் வெளியே வரவில்லை என்பது குடும்ப வழக்கம் என்றே கொள்ளவேண்டும். மற்றபடி கல்வியறிவிலும், ஆன்மீகத்திலும் சிறந்தே விளங்கியிருக்கிறார் என்பதும் புரிய வருகிறது.
*************************************************************************************
186. "பவ்ய ஜீவன்"
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
சீவகசிந்தாமணி தமிழில் உள்ள சிறந்த காப்பியங்களில் ஒன்று. அது ஜைனசமயத் துறவியாகிய திருத்தக்க தேவரென்னும் பெரியாரால் இயற்றப் பெற்றது. ஜைனர்கள் அந்நூலை ஒரு பாராயண நூலாகப் போற்றி வருகின்றனர்.
முதன்முதலில் அந்நூலைத் தான் ஆராய்ந்து வெளியிட்டேனென்பது தமிழுலகு அறிந்த விஷயம். சிந்தாமணியே என்னுடைய தமிழ்நூற்பதிப்பில் முதல் அரும்பு. வழக்கொழிந்த பழந்தமிழ்நூல்களை அறிவதற்கும் ஆராய்வதற்கும் அச்சிடுவதற்கும் என் உள்ளத்தைப் பக்குவப் படுத்தி ஊக்கமூட்டியவை அந்த நூலும் அதன் உரையுமே. தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டென்னும் உண்மையை எனக்கு முதன்முதலில் வெளிப்படுத்தியது அந்த நூலே.
முதன் முயற்சியிலே அடையும் சிரமங்கள் அளவிறந்தன. சிந்தாமணியைப் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் வழங்காத அக்காலத்தில் அதன் நடையே ஒரு தனிப் பாஷைபோல இருந்தது. அதன் உரையோ பின்னும் புதியதாகவே தோற்றியது. அதில் உள்ள விஷயங்களோ ஜைன சமயத்தைச் சார்ந்தவை. சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கின. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, கூறும் தமிழ்நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. அன்றியும் திருவாவடுதுறையாதீனமாகிய சைவ மடத்திற் படித்த எனக்குப் புறச்சமயமாகிய ஜைனத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏது?
நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். சிந்தாமணி ஏட்டுப் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னவர் சேலம் இராமசாமி முதலியார். நானும் படித்து அவருக்கும் பாடஞ்சொல்லி வந்தேன். ஜைனசமயக் கொள்கைகளை அறிந்து கொள்வதற்கு மிகவும் பாடுபட்டேன். என்னிடம் படித்துக்கொண்டிருந்த இராமலிங்க பண்டாரமென்பவர், என் கஷ்டத்தையறிந்து கும்பகோணத்தில் ஜைனர்கள் சிலர் இருக்கிறார்களென்று கூறியதோடு தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியாரென்ற ஒருவரை எனக்குப் பழக்கம் செய்விப்பதாகவும் சொன்னார்.
ஒருநாள் சந்திரநாத செட்டியார் வீட்டிற்கு அவரும் நானும் போனோம். அந்த வீடு ராமஸ்வாமி கோவிலுக்கு மேல்புறமுள்ள ஒரு தெருவில் இருந்தது. அவர்கள் வீட்டில் வாழைமரமும், மாவிலைத் தோரணமும் கட்டப் பட்டிருந்தன. மாக்கோலம் போட்டிருந்தார்கள். ஜைனசமய நூல்களில் மிகச் சிறந்த பயிற்சியை உடைய *வீடூர் அப்பாசாமி நயினார் என்பவரும் வேறு சிலரும் வந்திருந்தனர். முதலில் சந்திரநாத செட்டியாரையும் அப்பால் மற்றவர்களையும் பழக்கம் செய்துகொண்டேன். "இன்று உங்கள் வீட்டில் ஏதோ சுபகாரியம் நடந்தது போலிருக்கிறது." என்றேன் நான்; "ஆமாம்! இன்று சிந்தாமணி பாராயண பூர்த்தி உத்ஸவம். சில மாதங்களாகச் சிந்தாமணி படனம் நடந்து வந்தது" என்றார். வீடூர் அப்பாசாமி நயினார் சந்தை சொல்லச் சந்திரநாத செட்டியார் முதலியோர் அதைப் படனம் செய்து வந்தார்களென்று அறிந்தேன். எனக்கு அப்பொழுது இராமாயண பட்டாபிஷேஹம், பெரியபுராண படனம் முதலிய செய்திகள் ஞாபகத்துக்கு வந்தன.
அப்பால் என்னுடைய சந்தேகங்கள் போவதற்கு அந்த ஜைனர்கள் பெரிதும் துணை செய்வார்களென்ற தைரியம் எனக்கு உண்டாயிற்று. அப்பாசாமி நயினாரிடமிருந்து பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் சிலகாலம் கும்பகோணத்தில் இருந்தார். அவர் இருந்தவரையிலும் அடிக்கடி அவரிடம் சென்று விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் பிறகு ஊர் சென்றுவிட்டார். நான் கண்டு பேசிய ஜைனர் பலர், கும்பகோணத்தில் தரணி செட்டியார் என்ற ஒருவர் இருந்தனரென்றும் அவர் ஜைன விஷயங்களில் ஒரு உரையாணியைப் போல விளங்கினாரென்றும் கூறினார்;" அவர் இருந்திருந்தால் இந்த விஷயங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிவிடுவாரே!" என்று இரங்கினர்.
சந்திரநாத செட்டியார் மிக்க செல்வர்; ஜைன நூற்பயிற்சி நன்றாக உடையவர். அவருக்குச் சிந்தாமணி முழுவதும் பாடமாக இருந்தது. வைணவர்கள் திவ்யப் பிரபந்தத்தை ஸேவிப்பது போல அவர் சிந்தாமணியை ஸேவித்து மனனம் பண்ணியிருந்தார். நான் சிந்தாமணியை ஆராய்ந்தபோது நச்சினார்க்கினியர் தம் உரையினிடையே பின்னே வரும் செய்யுட்பகுதியை எடுத்துக்காட்டிச் சில செய்திகளை விளக்கி வருவதை அறிந்தேன். அப்படிக் காட்டப் பெற்ற பகுதிகள் எங்கே இருக்கின்றன வென்பதைத் தேடுவது ஆரம்ப காலத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போது சந்திரநாத செட்டியாரைக் கேட்பேன். கேட்டவுடனே அவர் அப்பகுதிகள் இன்ன இன்ன இலம்பகத்தில் இன்ன இன்ன பாட்டில் வருகின்றனவென்று சொல்லிவிடுவார். இப்படியே சிந்தாமணியை ஜைனர்களிற் பலர் பாடம் பண்ணியிருந்ததை நான் அறிந்தேன். ஆனாலும் அவர்கள் அச்செய்யுட்களை ஆராய்ச்சி முறையில் படிக்கவில்லை. குற்றங்களைந்து சுத்த பாடமாக மனனம் செய்யவில்லை. பரம்பரையாக வந்த பழக்கத்தினாலும் பக்தியினாலும் சிந்தாமணியைப் பாராயணம் செய்தும் மனனம் செய்தும் வந்தார்கள். சம்பிரதாயமாக வழங்கி வந்த உரையொன்றையும் அவர்கள் நெட்டுருச் செய்திருந்தார்கள். அந்த உரை பெரும்பாலும் சம்ஸ்கிருத பதங்கள் நிரம்பியும் பரிபாஷைகள் விரவியும் அமைந்திருக்கும். மூலத்திலும் உரையிலும் பலகாலமாக ஏறிப் போன வழுக்கள் வழுக்களாகவே இருந்தன. எட்டுப் பிரதிகளும் அவர்கள் பாடமும் எவ்வளவோ இடங்களில் மாறுபட்டன. அதனால் அவர்கள் பாடத்தை வைத்துக்கொண்டு ஆராய்வதென்பது இயலாத காரியமாயிற்று.
ஒருமுறை சந்திரநாத செட்டியார் வெளியூருக்குச் சென்றிருந்தார். ஸமவசரணம் என்பதைப் பற்றி விரிவாக அறியவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சந்திரநாத செட்டியார் இல்லாமையின் வேறு யாரையேனும் கேட்கலாமென்றெண்ணினேன். அவர் வீட்டிற்கு எதிர்வீட்டில் குணபால செட்டியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவரும் ஜைனசமய சாஸ்திரப் பயிற்சியுடையவரென்று கேள்வியுற்றேன். யாரேனும் ஒருவர் என் ஆராய்ச்சிக்குச் சிறிதளவு பயன்படக்கூடியவராக இருந்தாலும் அவரைத் தேடிப் பிடித்துப் பழக்கம் செய்துகொண்டு அவரிடமிருந்து அவருக்குத் தெரிந்தவற்றை அறிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் சலிப்பு ஏற்படுவதில்லை. ஆதலின் குணபால செட்டியாரையும் பார்த்துப் பழக்கம் பண்ணிக்கொள்ளவேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டேன். ஒருநாள் அவர் வீட்டுக்குப் போனேன்.
அவரும் ஒரு செல்வர்; பிராயம் முதிர்ந்தவர். நான் போனவுடன் என்னை அன்போடு வரவேற்று உபசரித்தார். நான் அந்த ஊர்க் காலேஜ் உபாத்தியாயராதலின் என்னைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்தார். ஒரு 'ஸோபா'வில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்த ஆஸனத்தில் மூட்டைப் பூச்சிகள் இருந்தன. சகல உரிமையோடும் அவை மேலே உலாவிக்கொண்டிருந்தன. ஒன்றைக் கையில் எடுத்தேன். குணபால செட்டியார், "ஹா ஹா ஹா!! கொல்லவேண்டாம், கொல்லவேண்டாம்" என்று நடுங்கிக் கொண்டே கையை அசைத்தார். ஜீவகாருண்யத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கும் ஜைனர்களில் அவர் ஒருவர் என்பதை அப்போது உணர்ந்தேன். கையில் எடுத்த மூட்டைப் பூச்சியை அதனுடைய இடத்திலே சுகமாக இருக்கும்படி விட்டுவிட்டு நான் அந்த 'ஸோபா'வினின்று எழுந்திருந்து வேறிடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவரிடம் ஸமவசரணமென்பதைப் பற்றிக் கேட்டேன். அவர் தமக்குத் தெரிந்தவற்றைக் கூறிவிட்டுத் தம் வீட்டில் இருந்த ஸமவசரணத்தைக் குறிக்கும் படமொன்றைக் காட்டினார். நான் பார்த்து மகிழ்ந்தேன். அவரிடம் மேலும் பல விஷயங்களைக் கேட்டேன். சிலவற்றைச் சொன்னார். மாலை ஐந்து மணி ஆயிற்று. அவர் உணவுகொள்ளப் போய்விட்டார். இரவில் உண்ணுவது ஜைனர்களுக்கு விரோதமானது.
அவர் ஜைன சம்பிரதாயங்களை அநுஷ்டானத்தில் ஒழுங்காக அநுசரிப்பது கண்டு நான் வியந்தேன். அவர் போஜனம் செய்த பிறகு ஜின ஸ்தோத்திரங்கள் சொல்லத் தொடங்கினார். நெடுநேரம் சொல்லிவிட்டுப் பிறகு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். சில விஷயங்களை அவர் தெளிவாகச் சொல்ல இயலவில்லை; "நாளைக்கு வாருங்கள். இவைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்று அவர் கூறி என்னை அனுப்பினார். 'புஸ்தகங்களைப் பார்த்துத் தெரிந்து சொல்வார் போலும்!' என்றெண்ணிக் கொண்டு நான் திரும்பி வீடு சென்றேன்.
மறுநாள் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். வீட்டுத் திண்ணையில் அவர் உட்கார்ந்திருந்தார். நான் அவருக்கு எதிரே சிறிது தூரத்தில் உட்கார்ந்தேன். அவர் என்னைக் கண்டவுடன், "வாருங்கள்; இருங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வருவாரென்று எண்ணினேன். சிறிது நேரத்தில் மீண்டு வெறுங்கையோடு வந்தார். "சரி, இப்போது உங்கள் சந்தேகங்களை யெல்லாம் சொல்லுங்கள்" என்று சற்று ஊக்கத்தோடு சொன்னார். அவர் என்னைக் கண்டதும், உள்ளே போனதும், மீண்டு வந்து ஊக்கத்தோடு இப்படிச் சொன்னதும், அவர் ஏதோ புதிய பலத்தைப் பெற்று வந்திருப்பதைப் போலத் தோற்றச் செய்தன.
நான் ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். அவர் அதைக் கேட்டு அங்கே இருந்த ஜன்னல்வழியாக உள்ளே யாரோ ஒருவரிடம் அதை அப்படியே சொன்னார்; உள்ளிருந்து சற்று மெல்லிய குரலில் அதற்கேற்ற விடை வந்தது. செட்டியார் அடைந்த புதியபலம் அந்தக் குரலென்பதை அறிந்து கொண்டேன். அக்குரல் ஒரு முதிர்ந்த பெண்பாலாருடையதென்று தோற்றியது. என்னுடைய சந்தேகத்துக்கு அது தெளிவான விடையாக இருந்தது. நான் இருந்த இடத்திலிருந்து உள்ளே இருப்பவர் இன்னாரென்று பார்க்கமுடியவில்லை.
அடுத்தபடி வேறொரு கேள்வி கேட்டேன். செட்டியார் அதை வாங்கி ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பினார். உள்ளிருந்து அந்த மெல்லியகுரலிலே விடை வந்தது. இப்படி நான் கேட்பதும் செட்டியார் அதை ஜன்னல் வழியாகத் தெரிவிப்பதும் அங்கிருந்து விடை வருவதுமாக ஸம்பாஷணை நடைபெற்று வந்தது. நானும் அதற்குள் ஓரளவு ஜைன விஷயங்களை அறிந்திருந்தேனாதலின் உள்ளிருந்து வரும் விடைகளை நன்றாகத் தெரிந்து குறிப்பெடுத்துக் கொண்டேன். இப்படி நிகழும்போது இடையே உள்ளிருந்த குரல், "பவ்யஜீவன் போலிருக்கிறதே!" என்றது. நான் மிகவும் சிரத்தையோடு மிக நுண்ணிய ஜைன சமயக் கருத்துக்களைக் கேட்டு வந்தேன். அக்கேள்விகளால் என்னைப் பற்றி ஓர் அபிப்பிராயம் அந்தக் குரலுக்குடையாருக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோற்றியது. பவ்ய ஜீவனென்பது ஜைனர்களுள் கிரமமாக மோக்ஷமடைவதற்குத் தகுதியான நிலைமையில் இருக்கும் ஆத்மாவைக் குறிப்பது. எனக்கு அவ்விஷயம் முன்பே தெரிந்திருந்தது. ஆதலின் என்னப் பவ்ய ஜீவனென்று உள்ளிருந்தவர் கூறினவுடன் என் உடலில் மயிர்க்கூச்செறிந்தது. அர்கத் பரமேஷ்டியின் பக்தி எனக்கு அதிகமென்றெண்ணியேனும், நான் ஸந்தோஷமடையவில்லை. சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு என்பதை அந்த இனிய குரல் கூறி என்னைத் தேற்றியதாகவே நான் கருதினேன்.
சிந்தாமணிக்கு உரை எழுதத் தொடங்கிய நச்சினார்க்கினியர் மிகவும் உழைத்துச் செய்திகளை அறிந்து முதலில் ஓர் உரை வகுத்தனராம். அதை ஜைனப் பெரியார்களிடம் காட்டியபொழுது அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்பால் அவர் ஒரு ஜைனவித்தியார்த்தி போல் சித்தாமூரிலுள்ள ஜைனமடத்திற்குச் சென்று ஜைன சமய நூல்களைக் கற்றுப் பிறகு இரண்டாம் முறை உரை எழுதினாராம். அதை யாவரும் அறிந்து பாராட்டினராம்.
இந்த வரலாற்றை நான் கேள்விப் பட்டிருந்தேன். அத்தகைய நூலை, "நடுக்காட்டில் வழி தெரியாது திகைப்பவனைப் போல நிற்கும் நான் எப்படி ஆராயமுடியும்? எனக்குத் தகுதி ஏது?" என்று ஐயமும் அச்சமும் கொண்டிருந்தேன். "பவ்ய ஜீவன்" என்று எனக்கு யோக்யதாபத்திரம் ஒரு ஜைன அறிவாளி மூலம் கிடைத்ததென்றால் எனக்கு ஆறுதலும் ஊக்கமும் உண்டாவதில் என்ன ஆச்சரியம்?
"உள்ளே இருந்து பேசுபவர்கள்...??" என்று பணிந்த குரலில் வாக்கியத்தை முடிக்காமலே செட்டியாரைக் கேட்டேன்.
"நம்முடைய பார்யை" என்று அவர் பெருமை தொனிக்கக் கூறினார். தம்மைக் காட்டிலும் தம் மனைவியாருக்கு அதிக அறிவு இருப்பதில் அவருக்கு எல்லையற்ற திருப்தி இருந்தது.
"அப்படியா! அவர்கள் இன்றைக்கு எனக்கு மகோபகாரம் செய்தார்கள். நான் எங்கெங்கோ தேடித் தேடிக் கஷ்டப் பட்டேன். இந்தக் காலத்தில் இவ்வளவு விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது மிகவும் ஆச்சரியம்" என்றேன் நான்.
"எல்லாம் எங்கள் பிதா அவர்கள் ஆசீர்வாதம். அவர்கள் இட்ட பிச்சை."உள்ளிருந்த பெண்மணியார் கூறினார். அப்படிச் சொல்லும்போதே அவர்குரல் இடையிடையே தழுதழுத்தது; துக்கத்தின் கலப்பு அதில் இருந்தது. அவர் அப்போது தம்முடைய தந்தையாரை நினைவு கூர்ந்ததே அதற்குக் காரணம் என்று நான் ஊகித்துக்கொண்டேன்.
"அவர்கள் நாமதேயம் என்னவோ?" என்று நான் கேட்டேன். "தரணி செட்டியார்" என்று குணபால செட்டியாரே பதில் சொன்னார். "தரணி செட்டியார்வாளா!" என்று ஆச்சரியப் பட்டேன் நான். பலர் அப்பெரியாரைப் பற்றி அடிக்கடி கூறியது எனக்கு ஞாபகம் வந்தது.
"அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்த்து விஷயங்கள் தெரிந்து கொள்ளும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுடைய அருமைக் குமாரியாரிடமிருந்து தெரிந்து கொள்ளும் லாபம் கிடைத்ததே; அதோடு, அவர்கள் எனக்குப் 'பவ்யஜீவன்' என்ற பட்டம் வேறு கொடுத்தார்களே; இதை நான் என்றும் மறவேன்" என்று நன்றியறிவோடு நான் கூறி விடை பெற்றுக்கொண்டேன்.
*.இவர் கும்பகோணம் காலேஜ் பிரின்சிபால் ஸ்ரீமான்ராவ்பகதூர் அ. சக்கரவர்த்தி நயினார் அவர்களுடைய பிதா.
*************************************************************************************
186. "பவ்ய ஜீவன்"
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
சீவகசிந்தாமணி தமிழில் உள்ள சிறந்த காப்பியங்களில் ஒன்று. அது ஜைனசமயத் துறவியாகிய திருத்தக்க தேவரென்னும் பெரியாரால் இயற்றப் பெற்றது. ஜைனர்கள் அந்நூலை ஒரு பாராயண நூலாகப் போற்றி வருகின்றனர்.
முதன்முதலில் அந்நூலைத் தான் ஆராய்ந்து வெளியிட்டேனென்பது தமிழுலகு அறிந்த விஷயம். சிந்தாமணியே என்னுடைய தமிழ்நூற்பதிப்பில் முதல் அரும்பு. வழக்கொழிந்த பழந்தமிழ்நூல்களை அறிவதற்கும் ஆராய்வதற்கும் அச்சிடுவதற்கும் என் உள்ளத்தைப் பக்குவப் படுத்தி ஊக்கமூட்டியவை அந்த நூலும் அதன் உரையுமே. தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டென்னும் உண்மையை எனக்கு முதன்முதலில் வெளிப்படுத்தியது அந்த நூலே.
முதன் முயற்சியிலே அடையும் சிரமங்கள் அளவிறந்தன. சிந்தாமணியைப் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் வழங்காத அக்காலத்தில் அதன் நடையே ஒரு தனிப் பாஷைபோல இருந்தது. அதன் உரையோ பின்னும் புதியதாகவே தோற்றியது. அதில் உள்ள விஷயங்களோ ஜைன சமயத்தைச் சார்ந்தவை. சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கின. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, கூறும் தமிழ்நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. அன்றியும் திருவாவடுதுறையாதீனமாகிய சைவ மடத்திற் படித்த எனக்குப் புறச்சமயமாகிய ஜைனத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏது?
நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். சிந்தாமணி ஏட்டுப் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னவர் சேலம் இராமசாமி முதலியார். நானும் படித்து அவருக்கும் பாடஞ்சொல்லி வந்தேன். ஜைனசமயக் கொள்கைகளை அறிந்து கொள்வதற்கு மிகவும் பாடுபட்டேன். என்னிடம் படித்துக்கொண்டிருந்த இராமலிங்க பண்டாரமென்பவர், என் கஷ்டத்தையறிந்து கும்பகோணத்தில் ஜைனர்கள் சிலர் இருக்கிறார்களென்று கூறியதோடு தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியாரென்ற ஒருவரை எனக்குப் பழக்கம் செய்விப்பதாகவும் சொன்னார்.
ஒருநாள் சந்திரநாத செட்டியார் வீட்டிற்கு அவரும் நானும் போனோம். அந்த வீடு ராமஸ்வாமி கோவிலுக்கு மேல்புறமுள்ள ஒரு தெருவில் இருந்தது. அவர்கள் வீட்டில் வாழைமரமும், மாவிலைத் தோரணமும் கட்டப் பட்டிருந்தன. மாக்கோலம் போட்டிருந்தார்கள். ஜைனசமய நூல்களில் மிகச் சிறந்த பயிற்சியை உடைய *வீடூர் அப்பாசாமி நயினார் என்பவரும் வேறு சிலரும் வந்திருந்தனர். முதலில் சந்திரநாத செட்டியாரையும் அப்பால் மற்றவர்களையும் பழக்கம் செய்துகொண்டேன். "இன்று உங்கள் வீட்டில் ஏதோ சுபகாரியம் நடந்தது போலிருக்கிறது." என்றேன் நான்; "ஆமாம்! இன்று சிந்தாமணி பாராயண பூர்த்தி உத்ஸவம். சில மாதங்களாகச் சிந்தாமணி படனம் நடந்து வந்தது" என்றார். வீடூர் அப்பாசாமி நயினார் சந்தை சொல்லச் சந்திரநாத செட்டியார் முதலியோர் அதைப் படனம் செய்து வந்தார்களென்று அறிந்தேன். எனக்கு அப்பொழுது இராமாயண பட்டாபிஷேஹம், பெரியபுராண படனம் முதலிய செய்திகள் ஞாபகத்துக்கு வந்தன.
அப்பால் என்னுடைய சந்தேகங்கள் போவதற்கு அந்த ஜைனர்கள் பெரிதும் துணை செய்வார்களென்ற தைரியம் எனக்கு உண்டாயிற்று. அப்பாசாமி நயினாரிடமிருந்து பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் சிலகாலம் கும்பகோணத்தில் இருந்தார். அவர் இருந்தவரையிலும் அடிக்கடி அவரிடம் சென்று விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் பிறகு ஊர் சென்றுவிட்டார். நான் கண்டு பேசிய ஜைனர் பலர், கும்பகோணத்தில் தரணி செட்டியார் என்ற ஒருவர் இருந்தனரென்றும் அவர் ஜைன விஷயங்களில் ஒரு உரையாணியைப் போல விளங்கினாரென்றும் கூறினார்;" அவர் இருந்திருந்தால் இந்த விஷயங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிவிடுவாரே!" என்று இரங்கினர்.
சந்திரநாத செட்டியார் மிக்க செல்வர்; ஜைன நூற்பயிற்சி நன்றாக உடையவர். அவருக்குச் சிந்தாமணி முழுவதும் பாடமாக இருந்தது. வைணவர்கள் திவ்யப் பிரபந்தத்தை ஸேவிப்பது போல அவர் சிந்தாமணியை ஸேவித்து மனனம் பண்ணியிருந்தார். நான் சிந்தாமணியை ஆராய்ந்தபோது நச்சினார்க்கினியர் தம் உரையினிடையே பின்னே வரும் செய்யுட்பகுதியை எடுத்துக்காட்டிச் சில செய்திகளை விளக்கி வருவதை அறிந்தேன். அப்படிக் காட்டப் பெற்ற பகுதிகள் எங்கே இருக்கின்றன வென்பதைத் தேடுவது ஆரம்ப காலத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போது சந்திரநாத செட்டியாரைக் கேட்பேன். கேட்டவுடனே அவர் அப்பகுதிகள் இன்ன இன்ன இலம்பகத்தில் இன்ன இன்ன பாட்டில் வருகின்றனவென்று சொல்லிவிடுவார். இப்படியே சிந்தாமணியை ஜைனர்களிற் பலர் பாடம் பண்ணியிருந்ததை நான் அறிந்தேன். ஆனாலும் அவர்கள் அச்செய்யுட்களை ஆராய்ச்சி முறையில் படிக்கவில்லை. குற்றங்களைந்து சுத்த பாடமாக மனனம் செய்யவில்லை. பரம்பரையாக வந்த பழக்கத்தினாலும் பக்தியினாலும் சிந்தாமணியைப் பாராயணம் செய்தும் மனனம் செய்தும் வந்தார்கள். சம்பிரதாயமாக வழங்கி வந்த உரையொன்றையும் அவர்கள் நெட்டுருச் செய்திருந்தார்கள். அந்த உரை பெரும்பாலும் சம்ஸ்கிருத பதங்கள் நிரம்பியும் பரிபாஷைகள் விரவியும் அமைந்திருக்கும். மூலத்திலும் உரையிலும் பலகாலமாக ஏறிப் போன வழுக்கள் வழுக்களாகவே இருந்தன. எட்டுப் பிரதிகளும் அவர்கள் பாடமும் எவ்வளவோ இடங்களில் மாறுபட்டன. அதனால் அவர்கள் பாடத்தை வைத்துக்கொண்டு ஆராய்வதென்பது இயலாத காரியமாயிற்று.
ஒருமுறை சந்திரநாத செட்டியார் வெளியூருக்குச் சென்றிருந்தார். ஸமவசரணம் என்பதைப் பற்றி விரிவாக அறியவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சந்திரநாத செட்டியார் இல்லாமையின் வேறு யாரையேனும் கேட்கலாமென்றெண்ணினேன். அவர் வீட்டிற்கு எதிர்வீட்டில் குணபால செட்டியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவரும் ஜைனசமய சாஸ்திரப் பயிற்சியுடையவரென்று கேள்வியுற்றேன். யாரேனும் ஒருவர் என் ஆராய்ச்சிக்குச் சிறிதளவு பயன்படக்கூடியவராக இருந்தாலும் அவரைத் தேடிப் பிடித்துப் பழக்கம் செய்துகொண்டு அவரிடமிருந்து அவருக்குத் தெரிந்தவற்றை அறிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் சலிப்பு ஏற்படுவதில்லை. ஆதலின் குணபால செட்டியாரையும் பார்த்துப் பழக்கம் பண்ணிக்கொள்ளவேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டேன். ஒருநாள் அவர் வீட்டுக்குப் போனேன்.
அவரும் ஒரு செல்வர்; பிராயம் முதிர்ந்தவர். நான் போனவுடன் என்னை அன்போடு வரவேற்று உபசரித்தார். நான் அந்த ஊர்க் காலேஜ் உபாத்தியாயராதலின் என்னைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்தார். ஒரு 'ஸோபா'வில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்த ஆஸனத்தில் மூட்டைப் பூச்சிகள் இருந்தன. சகல உரிமையோடும் அவை மேலே உலாவிக்கொண்டிருந்தன. ஒன்றைக் கையில் எடுத்தேன். குணபால செட்டியார், "ஹா ஹா ஹா!! கொல்லவேண்டாம், கொல்லவேண்டாம்" என்று நடுங்கிக் கொண்டே கையை அசைத்தார். ஜீவகாருண்யத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கும் ஜைனர்களில் அவர் ஒருவர் என்பதை அப்போது உணர்ந்தேன். கையில் எடுத்த மூட்டைப் பூச்சியை அதனுடைய இடத்திலே சுகமாக இருக்கும்படி விட்டுவிட்டு நான் அந்த 'ஸோபா'வினின்று எழுந்திருந்து வேறிடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவரிடம் ஸமவசரணமென்பதைப் பற்றிக் கேட்டேன். அவர் தமக்குத் தெரிந்தவற்றைக் கூறிவிட்டுத் தம் வீட்டில் இருந்த ஸமவசரணத்தைக் குறிக்கும் படமொன்றைக் காட்டினார். நான் பார்த்து மகிழ்ந்தேன். அவரிடம் மேலும் பல விஷயங்களைக் கேட்டேன். சிலவற்றைச் சொன்னார். மாலை ஐந்து மணி ஆயிற்று. அவர் உணவுகொள்ளப் போய்விட்டார். இரவில் உண்ணுவது ஜைனர்களுக்கு விரோதமானது.
அவர் ஜைன சம்பிரதாயங்களை அநுஷ்டானத்தில் ஒழுங்காக அநுசரிப்பது கண்டு நான் வியந்தேன். அவர் போஜனம் செய்த பிறகு ஜின ஸ்தோத்திரங்கள் சொல்லத் தொடங்கினார். நெடுநேரம் சொல்லிவிட்டுப் பிறகு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். சில விஷயங்களை அவர் தெளிவாகச் சொல்ல இயலவில்லை; "நாளைக்கு வாருங்கள். இவைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்று அவர் கூறி என்னை அனுப்பினார். 'புஸ்தகங்களைப் பார்த்துத் தெரிந்து சொல்வார் போலும்!' என்றெண்ணிக் கொண்டு நான் திரும்பி வீடு சென்றேன்.
மறுநாள் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். வீட்டுத் திண்ணையில் அவர் உட்கார்ந்திருந்தார். நான் அவருக்கு எதிரே சிறிது தூரத்தில் உட்கார்ந்தேன். அவர் என்னைக் கண்டவுடன், "வாருங்கள்; இருங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வருவாரென்று எண்ணினேன். சிறிது நேரத்தில் மீண்டு வெறுங்கையோடு வந்தார். "சரி, இப்போது உங்கள் சந்தேகங்களை யெல்லாம் சொல்லுங்கள்" என்று சற்று ஊக்கத்தோடு சொன்னார். அவர் என்னைக் கண்டதும், உள்ளே போனதும், மீண்டு வந்து ஊக்கத்தோடு இப்படிச் சொன்னதும், அவர் ஏதோ புதிய பலத்தைப் பெற்று வந்திருப்பதைப் போலத் தோற்றச் செய்தன.
நான் ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். அவர் அதைக் கேட்டு அங்கே இருந்த ஜன்னல்வழியாக உள்ளே யாரோ ஒருவரிடம் அதை அப்படியே சொன்னார்; உள்ளிருந்து சற்று மெல்லிய குரலில் அதற்கேற்ற விடை வந்தது. செட்டியார் அடைந்த புதியபலம் அந்தக் குரலென்பதை அறிந்து கொண்டேன். அக்குரல் ஒரு முதிர்ந்த பெண்பாலாருடையதென்று தோற்றியது. என்னுடைய சந்தேகத்துக்கு அது தெளிவான விடையாக இருந்தது. நான் இருந்த இடத்திலிருந்து உள்ளே இருப்பவர் இன்னாரென்று பார்க்கமுடியவில்லை.
அடுத்தபடி வேறொரு கேள்வி கேட்டேன். செட்டியார் அதை வாங்கி ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பினார். உள்ளிருந்து அந்த மெல்லியகுரலிலே விடை வந்தது. இப்படி நான் கேட்பதும் செட்டியார் அதை ஜன்னல் வழியாகத் தெரிவிப்பதும் அங்கிருந்து விடை வருவதுமாக ஸம்பாஷணை நடைபெற்று வந்தது. நானும் அதற்குள் ஓரளவு ஜைன விஷயங்களை அறிந்திருந்தேனாதலின் உள்ளிருந்து வரும் விடைகளை நன்றாகத் தெரிந்து குறிப்பெடுத்துக் கொண்டேன். இப்படி நிகழும்போது இடையே உள்ளிருந்த குரல், "பவ்யஜீவன் போலிருக்கிறதே!" என்றது. நான் மிகவும் சிரத்தையோடு மிக நுண்ணிய ஜைன சமயக் கருத்துக்களைக் கேட்டு வந்தேன். அக்கேள்விகளால் என்னைப் பற்றி ஓர் அபிப்பிராயம் அந்தக் குரலுக்குடையாருக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோற்றியது. பவ்ய ஜீவனென்பது ஜைனர்களுள் கிரமமாக மோக்ஷமடைவதற்குத் தகுதியான நிலைமையில் இருக்கும் ஆத்மாவைக் குறிப்பது. எனக்கு அவ்விஷயம் முன்பே தெரிந்திருந்தது. ஆதலின் என்னப் பவ்ய ஜீவனென்று உள்ளிருந்தவர் கூறினவுடன் என் உடலில் மயிர்க்கூச்செறிந்தது. அர்கத் பரமேஷ்டியின் பக்தி எனக்கு அதிகமென்றெண்ணியேனும், நான் ஸந்தோஷமடையவில்லை. சிந்தாமணியை ஆராய்வதற்கு என்பால் ஓரளவு தகுதி உண்டு என்பதை அந்த இனிய குரல் கூறி என்னைத் தேற்றியதாகவே நான் கருதினேன்.
சிந்தாமணிக்கு உரை எழுதத் தொடங்கிய நச்சினார்க்கினியர் மிகவும் உழைத்துச் செய்திகளை அறிந்து முதலில் ஓர் உரை வகுத்தனராம். அதை ஜைனப் பெரியார்களிடம் காட்டியபொழுது அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்பால் அவர் ஒரு ஜைனவித்தியார்த்தி போல் சித்தாமூரிலுள்ள ஜைனமடத்திற்குச் சென்று ஜைன சமய நூல்களைக் கற்றுப் பிறகு இரண்டாம் முறை உரை எழுதினாராம். அதை யாவரும் அறிந்து பாராட்டினராம்.
இந்த வரலாற்றை நான் கேள்விப் பட்டிருந்தேன். அத்தகைய நூலை, "நடுக்காட்டில் வழி தெரியாது திகைப்பவனைப் போல நிற்கும் நான் எப்படி ஆராயமுடியும்? எனக்குத் தகுதி ஏது?" என்று ஐயமும் அச்சமும் கொண்டிருந்தேன். "பவ்ய ஜீவன்" என்று எனக்கு யோக்யதாபத்திரம் ஒரு ஜைன அறிவாளி மூலம் கிடைத்ததென்றால் எனக்கு ஆறுதலும் ஊக்கமும் உண்டாவதில் என்ன ஆச்சரியம்?
"உள்ளே இருந்து பேசுபவர்கள்...??" என்று பணிந்த குரலில் வாக்கியத்தை முடிக்காமலே செட்டியாரைக் கேட்டேன்.
"நம்முடைய பார்யை" என்று அவர் பெருமை தொனிக்கக் கூறினார். தம்மைக் காட்டிலும் தம் மனைவியாருக்கு அதிக அறிவு இருப்பதில் அவருக்கு எல்லையற்ற திருப்தி இருந்தது.
"அப்படியா! அவர்கள் இன்றைக்கு எனக்கு மகோபகாரம் செய்தார்கள். நான் எங்கெங்கோ தேடித் தேடிக் கஷ்டப் பட்டேன். இந்தக் காலத்தில் இவ்வளவு விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருப்பது மிகவும் ஆச்சரியம்" என்றேன் நான்.
"எல்லாம் எங்கள் பிதா அவர்கள் ஆசீர்வாதம். அவர்கள் இட்ட பிச்சை."உள்ளிருந்த பெண்மணியார் கூறினார். அப்படிச் சொல்லும்போதே அவர்குரல் இடையிடையே தழுதழுத்தது; துக்கத்தின் கலப்பு அதில் இருந்தது. அவர் அப்போது தம்முடைய தந்தையாரை நினைவு கூர்ந்ததே அதற்குக் காரணம் என்று நான் ஊகித்துக்கொண்டேன்.
"அவர்கள் நாமதேயம் என்னவோ?" என்று நான் கேட்டேன். "தரணி செட்டியார்" என்று குணபால செட்டியாரே பதில் சொன்னார். "தரணி செட்டியார்வாளா!" என்று ஆச்சரியப் பட்டேன் நான். பலர் அப்பெரியாரைப் பற்றி அடிக்கடி கூறியது எனக்கு ஞாபகம் வந்தது.
"அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்த்து விஷயங்கள் தெரிந்து கொள்ளும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும் அவர்களுடைய அருமைக் குமாரியாரிடமிருந்து தெரிந்து கொள்ளும் லாபம் கிடைத்ததே; அதோடு, அவர்கள் எனக்குப் 'பவ்யஜீவன்' என்ற பட்டம் வேறு கொடுத்தார்களே; இதை நான் என்றும் மறவேன்" என்று நன்றியறிவோடு நான் கூறி விடை பெற்றுக்கொண்டேன்.
*.இவர் கும்பகோணம் காலேஜ் பிரின்சிபால் ஸ்ரீமான்ராவ்பகதூர் அ. சக்கரவர்த்தி நயினார் அவர்களுடைய பிதா.
கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்
கப்பலில் கண்ணனும், உத்தவனும்!
சாந்தீபனி தொடர்ந்தார்:
“கண்ணா, உன்னைவிடச் சில வருடங்கள் பெரியவன் என் குமாரன் புநர்தத்தன். சென்ற வருடம் நாங்கள் இங்கே வந்துவிட்டுத் திரும்புவதற்கு முதல்நாள் கடலில் குளிப்பதற்காக இந்தக் கடற்கரைக்கு வந்தான். எனக்குப்பின்னர் என்னுடைய குருகுலத்தைத் திறம்பட நடத்தப் போகிறான் என எண்ணி இருந்த என் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போயின. இந்தப் புண்யாஜனா ராக்ஷஸர்களால் அவன் கடத்தப்பட்டான். இங்கிருந்து இன்னும் மேற்கே வெகு தொலைவில் யமப்பட்டினம் என்ற பெயரில் ஒரு நகரம் இருப்பதாகவும், அங்கே என் குமாரனைக் கடத்திச் சென்றிருக்கலாமோ என்றும் சொல்லுகின்றனர். அங்கே சென்றவர்கள் திரும்பியே வரமுடியாது என்றும் சொல்லுகின்றனர். அந்த யமதர்மராஜாவே எடுத்துச் சென்றுவிட்டானோ என் மகனை? குமாரா, என் அருமைக்குமாரா! எவ்வளவு மென்மையான இதயம் படைத்தவன் அவன்?? என்னிடமிருந்து பிரிக்கப்பட்டதுமே அவன் இதயம் உடைந்திருக்குமே! அவ்வளவு கொடூரமான ராக்ஷஸர்களோடு இனி அவன் வாழ்நாள் பூராவும் எவ்வாறு கழிக்கப் போகிறான்??” புலம்ப ஆரம்பித்தார் சாந்தீபனி.
“ஆஹா, அதோ அவர்கள் கப்பல். மீண்டும் இந்தக் கடற்கரைக்கு வருகிறது. அவர்கள் கப்பலை மூழ்கடிக்கச் செய்யவேண்டுமென்றே என் மனம் விரும்புகிறது. ஆனால் அதற்காக என் மகனைப்பழிவாங்கிவிடுவார்களோ என்ற எண்ணத்தினால் தயக்கமும் ஏற்படுகிறது. “ குரு தேவரின் கண்கள் கண்ணீரை மழையாகப் பொழிந்தன. “குருதேவா, நான் என்னால் இயன்ற அளவு முயன்று பார்க்கட்டுமா?” கண்ணன் கேட்டான்.
“வேண்டாம், வாசுதேவ கிருஷ்ணா, உன்னால் இயலாது. அவர்கள் ஏழு கடல்களுக்கும் பிரயாணம் செய்கின்றனர். படாலா என்னும் நகருக்கு அடிக்கடி செல்வார்களாம். மேலும் கருநிற ராக்ஷசர்கள் பலர் ஒரு கூட்டமாய் வசிக்கும் தீவுகளுக்கும் செல்கின்றனராம். யார் கண்டது? என் மகனை அங்கே யாரிடமாவது, எந்தத் தீவிலாவது விற்றிருப்பார்கள். அல்லது அவர்களின் துர் தேவதைகளுக்குப் பலியாகக் கூடக் கொடுத்திருக்கலாம். என் மகன் இருக்கின்றானோ அல்லது கொல்லப் பட்டானோ?”
“நான் ஒரு முயற்சி செய்கின்றேனே?”
“அப்பா, கண்ணா, நீ வம்பைத் தான் விலைக்கு வாங்கிக் கொள்வாய். அல்லது உனக்கும் புநர்தத்தனுக்கு நேர்ந்ததே நேர்ந்துவிட்டால்??? நான் என்ன செய்வேன்???” குரு பதறினார்.
“ஐயா, தாங்கள் அந்தக் கப்பல் இங்கே வந்ததும், அதைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் நான் அறிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள். சென்ற வருடம் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். ஆனால் நான் என்னுடைய குருதக்ஷிணையை இந்த விதத்தில் செலுத்த விரும்புகிறேன். நாளை என்னை இந்தக் குருகுலத்திலிருந்து விடுவித்து அனுப்பி வையுங்கள்.” என்றான் கிருஷ்ணன்.
“வாசுதேவ கிருஷ்ணா, உன் எண்ணத்தை நீ மாற்றிக்கொள்வதையே நான் விரும்புகிறேன். ஆனாலும் நீ இந்த விஷயத்தில் முனைப்பாக இருந்தால், பின்னர் அது உன் விருப்பம். ஆனால் இம்முயற்சியில் உனக்கு ஏதாவது நேர்ந்ததென்றால் உன் தகப்பன் வசுதேவனுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?? இவ்வளவு நாள் கழித்து உன்னை அடைந்திருக்கும் உன்னைப் பெற்ற தாய் தேவகிக்கு என்ன சொல்லுவேன்?”
“குருதேவா, அவர்களிடம் நான் தர்மத்தை நிலைநாட்டச் சென்றிருக்கிறேன் எனத் தெரிவியுங்கள். அந்தக் கொடூர புத்தியுள்ள கடத்தல்காரர்களைத் தண்டிக்கச் சென்றிருப்பதாய்க் கூறுங்கள்.”
உத்தவன் கண்ணனின் சித்தப்பாவான தேவபாகனின் மூன்றாவது குமாரன். கண்ணனைப் பிறந்ததுமே கோகுலத்துக்கு அனுப்பியபோது அவனோடு துணையாக அங்கே வளர்ந்து வர அனுப்பி வைக்கப் பட்டான். ஆகையால் சிறு வயதிலிருந்தே கண்ணனின் அருமைத் தோழனும், சகோதரனும், கண்ணனுக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவனாகவும் இருந்தான். கண்ணனின் மனதில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு செயலாற்றக் கூடிய திறமையும் கொண்டிருந்தான். இப்போது புண்யாஜனா கப்பலைப் பற்றிய செய்திகளையும், அந்தக்கப்பலில் பிரயாணிப்போர் பற்றிய தகவல்களையும் கண்ணனோடு சேர்ந்து அவனும் திரட்டி வந்தான். அவனுடைய ஒரே கவலை, ஒருவேளை கண்ணன் எடுக்கும் முடிவில் தன்னை விலக்கிவிடக் கூடாது என்பதே. புண்யாஜனா கப்பல் பிரபாஸ க்ஷேத்திரத்தின் கடற்கரைக்கு வந்த நாலாம் நாள் வர்த்தகம் நல்லபடியாக முடித்துக்கொண்டு அதன் தலைவன் ஆன பாஞ்சஜனா கரையிலிருந்து ஒரு படகில் தன் கப்பலுக்குச் சென்றான். அன்று நள்ளிரவில் கிருஷ்ணனும் , உத்தவனும் கடலில் நீந்திக் கொண்டு அந்தக் கப்பலை அடைந்து மிகவும் கஷ்டப் பட்டு அந்தக் கப்பலில் ஏறினார்கள். மேலே குதித்ததுமே ஒரு மாலுமி இரவு நேரத்தில் பணி புரிபவனால் பிடிக்கப் பட்டனர். அவனுக்கு இவர்களின் மொழி தெரிந்திருந்தது. ஆகவே என்ன வேண்டும் என விசாரிக்க, உங்களுடன் செல்ல விரும்புகிறோம் என்று கண்ணன் புன்னகையுடன் கூறினான். மேலும், “எங்கள் குருவழி சகோதரன் ஆன புநர்தத்தனை சென்ற வருடம் நீங்கள் கூட்டிச் சென்றுவிட்டீர்கள் அல்லவா? அவனைப் பிரிந்து எங்களால் இருக்க முடியவில்லை. அவன் இருக்குமிடம் எங்களை அழைத்துச் செல்லுங்களேன். அதற்காகவே வந்தோம்.” என்றான்.
பிக்ரு என்னும் பெயர் கொண்ட அந்த மாலுமிக்குக் கண்ணனின் இந்த பயமற்ற தன்மையும், மிகவும் எளிதாகத் தன் விருப்பத்தைச் சொன்னதும் ஆச்சரியப்பட வைத்தது. பிரபாஸ க்ஷேத்திரத்து மக்கள் அனைவருக்கும் இந்தக் கப்பலில் வருபவர்களைக் கண்டாலே பயந்து நடுங்குவார்கள். அதுவும் இந்தக் கப்பலின் தலைவன் பாஞ்சஜனாவைப் பார்க்கக் கூட அவர்களால் இயலாது. ஆனால் இந்தப் பையர்களோ எனில்?? அவனுக்குக் கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. இருவரும் ஏதேனும் திருட வந்திருப்பார்களோ? ம்ம்ம்ம்??? எதற்கும் நங்கூரத்தை எடுத்துவிட்டுக் கப்பலை ஓட்ட ஆரம்பிப்போம். கப்பல் நகர ஆரம்பித்தால் பயந்து நடுங்கிக் கொண்டு மீண்டும் கடலில் குதித்துக் கரைக்கு நீந்திச் செல்வார்கள். நங்கூரம் எடுக்கப் பட்டுக் கப்பல் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது. கடலில் அலைகள் மேலே பொங்குவதும், அடங்குவதுமாக இருந்தன. மேலே பொங்கும் சமயம் கப்பலும் அலைகளின் உச்சிக்குச் சென்றது. அலைகள் கீழே இறங்கும்போது கப்பலும் வேகத்துடன் கீழே இறங்கியது. அலைகளின் ஆட்டமும், அதனால் கப்பலின் ஆட்டமும் அதிகரித்தது. கப்பலும் வேகம் பிடிக்க ஆரம்பித்தது. ஆனாலும் இருவரும் சற்றும் கலங்காமல் இருந்தனர். ம்ம்ம்ம்ம்ம்???? என்ன இது??? பிக்ரு யோசனையுடனேயே கயிறுகளைக் கேட்டு வாங்கிக் கண்ணனையும், உத்தவனையும் அந்தக் கயிறுகளால் பிணைத்தான். இருவரும் தினம் தினம் இந்த மாதிரிக் கட்டுப் படுவதைத் தவிர தங்களுக்கு வேறு வேலை இல்லை என்பது போல் கட்ட அநுமதித்தனர். முகத்தின் புன்னகை மாறவே இல்லை. சுக்கானுக்கருகே அவர்களைக் கொண்டு சென்று விட்டுவிட்டு பிக்ருவும் அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டான். சற்று நேரம் மெளனம் ஒருவருமே பேசவில்லை. பிக்ருவின் மனதில் குழப்பம் மிகுந்தது.
சாந்தீபனி தொடர்ந்தார்:
“கண்ணா, உன்னைவிடச் சில வருடங்கள் பெரியவன் என் குமாரன் புநர்தத்தன். சென்ற வருடம் நாங்கள் இங்கே வந்துவிட்டுத் திரும்புவதற்கு முதல்நாள் கடலில் குளிப்பதற்காக இந்தக் கடற்கரைக்கு வந்தான். எனக்குப்பின்னர் என்னுடைய குருகுலத்தைத் திறம்பட நடத்தப் போகிறான் என எண்ணி இருந்த என் எதிர்காலக் கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போயின. இந்தப் புண்யாஜனா ராக்ஷஸர்களால் அவன் கடத்தப்பட்டான். இங்கிருந்து இன்னும் மேற்கே வெகு தொலைவில் யமப்பட்டினம் என்ற பெயரில் ஒரு நகரம் இருப்பதாகவும், அங்கே என் குமாரனைக் கடத்திச் சென்றிருக்கலாமோ என்றும் சொல்லுகின்றனர். அங்கே சென்றவர்கள் திரும்பியே வரமுடியாது என்றும் சொல்லுகின்றனர். அந்த யமதர்மராஜாவே எடுத்துச் சென்றுவிட்டானோ என் மகனை? குமாரா, என் அருமைக்குமாரா! எவ்வளவு மென்மையான இதயம் படைத்தவன் அவன்?? என்னிடமிருந்து பிரிக்கப்பட்டதுமே அவன் இதயம் உடைந்திருக்குமே! அவ்வளவு கொடூரமான ராக்ஷஸர்களோடு இனி அவன் வாழ்நாள் பூராவும் எவ்வாறு கழிக்கப் போகிறான்??” புலம்ப ஆரம்பித்தார் சாந்தீபனி.
“ஆஹா, அதோ அவர்கள் கப்பல். மீண்டும் இந்தக் கடற்கரைக்கு வருகிறது. அவர்கள் கப்பலை மூழ்கடிக்கச் செய்யவேண்டுமென்றே என் மனம் விரும்புகிறது. ஆனால் அதற்காக என் மகனைப்பழிவாங்கிவிடுவார்களோ என்ற எண்ணத்தினால் தயக்கமும் ஏற்படுகிறது. “ குரு தேவரின் கண்கள் கண்ணீரை மழையாகப் பொழிந்தன. “குருதேவா, நான் என்னால் இயன்ற அளவு முயன்று பார்க்கட்டுமா?” கண்ணன் கேட்டான்.
“வேண்டாம், வாசுதேவ கிருஷ்ணா, உன்னால் இயலாது. அவர்கள் ஏழு கடல்களுக்கும் பிரயாணம் செய்கின்றனர். படாலா என்னும் நகருக்கு அடிக்கடி செல்வார்களாம். மேலும் கருநிற ராக்ஷசர்கள் பலர் ஒரு கூட்டமாய் வசிக்கும் தீவுகளுக்கும் செல்கின்றனராம். யார் கண்டது? என் மகனை அங்கே யாரிடமாவது, எந்தத் தீவிலாவது விற்றிருப்பார்கள். அல்லது அவர்களின் துர் தேவதைகளுக்குப் பலியாகக் கூடக் கொடுத்திருக்கலாம். என் மகன் இருக்கின்றானோ அல்லது கொல்லப் பட்டானோ?”
“நான் ஒரு முயற்சி செய்கின்றேனே?”
“அப்பா, கண்ணா, நீ வம்பைத் தான் விலைக்கு வாங்கிக் கொள்வாய். அல்லது உனக்கும் புநர்தத்தனுக்கு நேர்ந்ததே நேர்ந்துவிட்டால்??? நான் என்ன செய்வேன்???” குரு பதறினார்.
“ஐயா, தாங்கள் அந்தக் கப்பல் இங்கே வந்ததும், அதைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் நான் அறிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள். சென்ற வருடம் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். ஆனால் நான் என்னுடைய குருதக்ஷிணையை இந்த விதத்தில் செலுத்த விரும்புகிறேன். நாளை என்னை இந்தக் குருகுலத்திலிருந்து விடுவித்து அனுப்பி வையுங்கள்.” என்றான் கிருஷ்ணன்.
“வாசுதேவ கிருஷ்ணா, உன் எண்ணத்தை நீ மாற்றிக்கொள்வதையே நான் விரும்புகிறேன். ஆனாலும் நீ இந்த விஷயத்தில் முனைப்பாக இருந்தால், பின்னர் அது உன் விருப்பம். ஆனால் இம்முயற்சியில் உனக்கு ஏதாவது நேர்ந்ததென்றால் உன் தகப்பன் வசுதேவனுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?? இவ்வளவு நாள் கழித்து உன்னை அடைந்திருக்கும் உன்னைப் பெற்ற தாய் தேவகிக்கு என்ன சொல்லுவேன்?”
“குருதேவா, அவர்களிடம் நான் தர்மத்தை நிலைநாட்டச் சென்றிருக்கிறேன் எனத் தெரிவியுங்கள். அந்தக் கொடூர புத்தியுள்ள கடத்தல்காரர்களைத் தண்டிக்கச் சென்றிருப்பதாய்க் கூறுங்கள்.”
உத்தவன் கண்ணனின் சித்தப்பாவான தேவபாகனின் மூன்றாவது குமாரன். கண்ணனைப் பிறந்ததுமே கோகுலத்துக்கு அனுப்பியபோது அவனோடு துணையாக அங்கே வளர்ந்து வர அனுப்பி வைக்கப் பட்டான். ஆகையால் சிறு வயதிலிருந்தே கண்ணனின் அருமைத் தோழனும், சகோதரனும், கண்ணனுக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவனாகவும் இருந்தான். கண்ணனின் மனதில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு செயலாற்றக் கூடிய திறமையும் கொண்டிருந்தான். இப்போது புண்யாஜனா கப்பலைப் பற்றிய செய்திகளையும், அந்தக்கப்பலில் பிரயாணிப்போர் பற்றிய தகவல்களையும் கண்ணனோடு சேர்ந்து அவனும் திரட்டி வந்தான். அவனுடைய ஒரே கவலை, ஒருவேளை கண்ணன் எடுக்கும் முடிவில் தன்னை விலக்கிவிடக் கூடாது என்பதே. புண்யாஜனா கப்பல் பிரபாஸ க்ஷேத்திரத்தின் கடற்கரைக்கு வந்த நாலாம் நாள் வர்த்தகம் நல்லபடியாக முடித்துக்கொண்டு அதன் தலைவன் ஆன பாஞ்சஜனா கரையிலிருந்து ஒரு படகில் தன் கப்பலுக்குச் சென்றான். அன்று நள்ளிரவில் கிருஷ்ணனும் , உத்தவனும் கடலில் நீந்திக் கொண்டு அந்தக் கப்பலை அடைந்து மிகவும் கஷ்டப் பட்டு அந்தக் கப்பலில் ஏறினார்கள். மேலே குதித்ததுமே ஒரு மாலுமி இரவு நேரத்தில் பணி புரிபவனால் பிடிக்கப் பட்டனர். அவனுக்கு இவர்களின் மொழி தெரிந்திருந்தது. ஆகவே என்ன வேண்டும் என விசாரிக்க, உங்களுடன் செல்ல விரும்புகிறோம் என்று கண்ணன் புன்னகையுடன் கூறினான். மேலும், “எங்கள் குருவழி சகோதரன் ஆன புநர்தத்தனை சென்ற வருடம் நீங்கள் கூட்டிச் சென்றுவிட்டீர்கள் அல்லவா? அவனைப் பிரிந்து எங்களால் இருக்க முடியவில்லை. அவன் இருக்குமிடம் எங்களை அழைத்துச் செல்லுங்களேன். அதற்காகவே வந்தோம்.” என்றான்.
பிக்ரு என்னும் பெயர் கொண்ட அந்த மாலுமிக்குக் கண்ணனின் இந்த பயமற்ற தன்மையும், மிகவும் எளிதாகத் தன் விருப்பத்தைச் சொன்னதும் ஆச்சரியப்பட வைத்தது. பிரபாஸ க்ஷேத்திரத்து மக்கள் அனைவருக்கும் இந்தக் கப்பலில் வருபவர்களைக் கண்டாலே பயந்து நடுங்குவார்கள். அதுவும் இந்தக் கப்பலின் தலைவன் பாஞ்சஜனாவைப் பார்க்கக் கூட அவர்களால் இயலாது. ஆனால் இந்தப் பையர்களோ எனில்?? அவனுக்குக் கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. இருவரும் ஏதேனும் திருட வந்திருப்பார்களோ? ம்ம்ம்ம்??? எதற்கும் நங்கூரத்தை எடுத்துவிட்டுக் கப்பலை ஓட்ட ஆரம்பிப்போம். கப்பல் நகர ஆரம்பித்தால் பயந்து நடுங்கிக் கொண்டு மீண்டும் கடலில் குதித்துக் கரைக்கு நீந்திச் செல்வார்கள். நங்கூரம் எடுக்கப் பட்டுக் கப்பல் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது. கடலில் அலைகள் மேலே பொங்குவதும், அடங்குவதுமாக இருந்தன. மேலே பொங்கும் சமயம் கப்பலும் அலைகளின் உச்சிக்குச் சென்றது. அலைகள் கீழே இறங்கும்போது கப்பலும் வேகத்துடன் கீழே இறங்கியது. அலைகளின் ஆட்டமும், அதனால் கப்பலின் ஆட்டமும் அதிகரித்தது. கப்பலும் வேகம் பிடிக்க ஆரம்பித்தது. ஆனாலும் இருவரும் சற்றும் கலங்காமல் இருந்தனர். ம்ம்ம்ம்ம்ம்???? என்ன இது??? பிக்ரு யோசனையுடனேயே கயிறுகளைக் கேட்டு வாங்கிக் கண்ணனையும், உத்தவனையும் அந்தக் கயிறுகளால் பிணைத்தான். இருவரும் தினம் தினம் இந்த மாதிரிக் கட்டுப் படுவதைத் தவிர தங்களுக்கு வேறு வேலை இல்லை என்பது போல் கட்ட அநுமதித்தனர். முகத்தின் புன்னகை மாறவே இல்லை. சுக்கானுக்கருகே அவர்களைக் கொண்டு சென்று விட்டுவிட்டு பிக்ருவும் அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டான். சற்று நேரம் மெளனம் ஒருவருமே பேசவில்லை. பிக்ருவின் மனதில் குழப்பம் மிகுந்தது.
Friday, February 19, 2010
தமிழ்த்தாத்தாவுக்கு தாமதமான அஞ்சலி!
Wednesday, February 17, 2010
கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!
சாந்தீபனியின் துக்கம்!
கடலையே அதுவரை கண்டிராத கண்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் இவ்வளவு பெரிய மேலைக்கடலைக் கண்டதும், ஆச்சரியமும், உற்சாகமும் பெருக்கெடுத்தது. கண்ணன் கடலின் நுட்பங்களையும், அதன் அலைகளையும், அவற்றின் வேகத்தையும், சீற்றத்தையும், அமைதியாய் இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொந்தளிப்பதையும் கண்டு ஆச்சரியப் பட்டான். மேலும் அந்தக் கடலில் படகை அவனே விட்டுக்கொண்டு போகவும் ஆசைப்பட்டான். ஆசானின் அநுமதியோடு படகைச் செலுத்தியும் பார்த்தான். குரு சாந்தீபனி அடிக்கடி அங்கே வருபவர் ஆதலால் அந்தப் பக்கத்து மக்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருந்தார். அனைவரும் மிகவும் மரியாதையுடனும், பக்தியுடனும் அவரை வணங்கினார்கள். சொல்லப் போனால் அவர் வரவை எதிர்பார்த்துக்காத்திருந்ததாகவே தெரிந்தது. சாந்தீபனியின் குருகுலத்து மக்களுக்கு பிரபாஸ க்ஷேத்திரத்தை நெருங்கியதும், அங்கே அப்போது ஆண்டுவந்த மன்னனால் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. செளராஷ்டிரம் என அழைக்கப் பட்ட அந்தப் பகுதியிலும் ஆரியர்கள் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். ஆகவே அனைவருக்குமே இந்த குருகுலத்தின் வரவு தேவையாகவும், மகிழ்வாகவும் இருந்தது. ஏதோ திருவிழா போல் மக்கள் மனமகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டாடினார்கள்.
அங்கே இறங்கி தாற்காலிகமாய் குருகுலத்தை ஏற்படுத்திக் கொண்ட சாந்தீபனி தனக்கென ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக்கொண்டார். தன்னுடைய முதன்மையான சீடன் ஆன ஸ்வேதகேதுவின் மூலம் குருகுலத்துக்குக் கற்க வரும் அனைவருக்கும் அவரவருக்கு என்ன தேவையோ அதற்கேற்றாற்போல் கற்பிக்க ஆரம்பித்தார். தேர்ந்தெடுத்த சில திறமை வாய்ந்த சீடர்கள் அக்கம்பக்கம் உள்ள ஊர்களுக்குச் சென்று அங்கே இருந்த மக்களுக்கும் பாடங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்பிக்க ஆரம்பித்தனர். அரசனாகட்டும், குருவாகட்டும், வருவார்கள், போவார்கள். ஆனால் நிலைத்து நிற்பது என்றென்றும் தர்மம் மட்டுமே. ஆகவே ஆரியர்கள் என்றாலே தர்மத்தைக் காப்பவர்கள் என்றே சொல்லப் பட்டது. அதனால் அவரவர்களுக்குரிய தர்மத்தைப் பாதுகாக்கவே அனைவரும் முயன்று வந்தனர். ஆரியர்களைத் தவிரவும் வேறு ஒரு இனத்து மக்களும் அங்கே வசித்து வந்தனர். அவர்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்களாக இருந்தனர். தெருக்கள் அழகாகவும், ஒழுங்காகவும், வீடுகள் வரிசையாகவும் இருந்தன. அவர்களுக்கு மஹாதேவன் ஆகிய சிவபெருமானே கடவுளாக இருந்தான். ஆனால் லிங்க வழிபாடு செய்யாமல் சிவனின் உருவத்தை யோகமுறையில் அமைத்து வழிபட்டு வந்தனர். கப்பல் கட்டும் கலையிலும் சிறந்து விளங்கினார்கள். சொந்தமாய்க் கப்பல்கள் வைத்து வாணிபம் செய்தவரும் பலர் இருந்தனர். அவர்களின் மொழி தனியாக, வேறாக இருந்தாலும் ஆரியர்கள் பேசும் பெருவாரியான மொழியையும் பலரும் அறிந்து வைத்திருந்தனர். வேதங்களையும், சாஸ்திரங்களையும் பற்றிய தெளிந்த அறிவும் இருந்தது. சாந்தீபனியின் குருகுலம் கடற்கரையில் சூரியனின் கோயிலுக்கு அருகே அமைந்திருந்தது. வழக்கம்போல் இங்கேயும் தினமும் காலையும், மாலையும் குளித்தல், அன்றாட அநுஷ்டானங்கள் செய்தல், யக்ஞம் செய்தல் எனப் பலவேலைகளையும் செய்து வந்தாலும் இந்தக் கடற்கரைக்கு வந்தது முதலே குரு சாந்தீபனி ஏதோ இனம் தெரியாத தவிப்பில் இருந்து வந்தார். ஒவ்வொரு முறை கடலுக்குக் குளிக்கப் போகும்போதெல்லாம் கடலையே பார்த்துக்கொண்டு பெருமூச்சுக்களை விட்டுக் கொண்டு, கண்களில் வரும் கண்ணீரை மறைக்கப் பிரயத்தனப் பட்டுக்கொண்டு கடலில் அவசரம் அவசரமாக முழுகுவார்.
அவருக்குச் சென்ற வருடம் இங்கே கற்பிக்க வந்ததும், தன் ஒரே மகன் புநர்தத்தனை, பாஞ்சஜனா என்பவனால் அவனுடன் கப்பலில் அந்தக் கடற்கரைக்கு வியாபாரத்திற்கு வந்த புண்யாஜன இனத்தைச் சேர்ந்த பொல்லாத ராக்ஷசர்கள் கடத்திக்கொண்டு சென்றுவிட்டதும், அதன்பிறகு எப்படி எப்படியெல்லாமோ தேடியும் தன் மகன் திரும்பக் கிடைக்காததும் நினைவில் மோதியது. மகனைப் பற்றிய நினைவுகளிலே மூழ்கிப் போய்த் துன்பம் அநுபவித்துக்கொண்டிருந்த அவரால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது கஷ்டமாய் இருந்தது. திடீர் திடீரென நடு இரவில் கடற்கரைக்குத் தன்னந்தனியே வந்து கடலைப் பார்த்துக்கொண்டே, தூரத்தில் தெரியும் அடிவானத்தில் தன் பிள்ளை இருக்கிறானா எனத் தேடுபவர் போல் பார்த்துக்கொண்டே நிற்பார். கண்களோ மழையாக வர்ஷிக்கும்.
இதை அங்கு வந்ததில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு நாள் இரவு அவர் அம்மாதிரிப் போய் நிற்கும்போது கூடவே தானும் சென்றான். மெல்ல மெல்ல குருவின் அருகே போனான். அவன் வந்ததை உனர்ந்தார் சாந்தீபனி. தன் கண்களைத் துடைத்துக்கொண்டார். ஏற்கெனவே மற்ற மாணாக்கர்கள் மூலம் குருவின்மகன் புநர்தத்தன் கடத்திச் செல்லப் பட்டதை அறிந்திருந்தாலும் கண்ணன் அவரிடம் எதுவும் பேசவில்லை. சாந்தீபனி கண்ணனைப் பார்த்து, “குழந்தாய்! மகனே! இந்த வேளையில் இங்கே எதற்கு வந்தாய்?” என வினவினார். “குருவே, வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். உங்கள் துயரம் என்னவென்று எனக்கு நன்கு புரிகிறது. என்னால் எதுவும் செய்யமுடியுமா என யோசிக்கிறேன். உங்கள் அனைத்து மாணாக்கரிலும் நான் உங்களுக்கு மிக அருமையானவன் எனச் சொல்லி இருக்கின்றீர்கள். நானும் உங்களை என் தந்தையை விட மேலாகவே கருதி வருகிறேன். நான் ஏதானும் செய்து உங்கள் துயரத்தைப் போக்கமுடியுமா? தயவு செய்து கட்டளையிடுங்கள் குருவே!” என்றான் கண்ணன்.
“என் குழந்தாய்?? உன்னால் என்ன செய்யமுடியும்?? ராக்ஷசர்களின் பிடியில் அகப்பட்டுவிட்ட என் மகனை மீட்டுக் கொண்டுவர எவரால் இயலும்? யாராலும் என்னைச் சந்தோஷப் படுத்த முடியாது. உனக்கு இது இப்போது புரியாது கிருஷ்ணா! நீயும் ஒரு மகனுக்குத் தந்தையாகி, அந்த மகனே உலகம் என வாழும்போது இம்மாதிரி ஒரு கொடூர ராக்ஷசர்கள் கையில் அவன் அகப்பட்டு மறைந்து போகும்போது புரிந்துகொள்வாய். ஒரு மகனிடம் தந்தை என்பவன் தன்னையே பார்க்கிறான். வருங்காலம் என்பது அவன் தான் எனத் தெரிகிறது அவனுக்கு. வாழ்க்கையில் ஒரு தந்தைக்கு மகன் என்பவன் பெரும் ஊன்றுகோலாக விளங்குகிறான். இறப்பிலோ “புத்” என்னும் நரகத்திற்குச் செல்வதில் இருந்து காப்பாற்றுகிறான். ஒரு தந்தைக்கு மகனை இழப்பது என்பது அவன் வாழ்க்கையையே இழப்பதற்குச் சமானம். ஒரு மகனின் இடத்தை வேறு எவராலும் பூர்த்தி செய்யவும் முடியாது.”
சாந்தீபனி சொன்னதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டான் கிருஷ்ணன். பின்னர் தான் ஆசாரியர் ஸ்வேதகேதுவிடம் பாஞ்சஜனாவுடன் கப்பலில் வந்த ராக்ஷசர்கள் எப்படிப் புநர்தத்தனைக் கடத்தினார்கள் என்பதைக் கேட்டறிந்ததாகவும், அவனை மீட்க எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லையா என்றும் கேட்டான். சோகத்துடன் இல்லை எனத் தலையாட்டிய குரு, திடீரெனத் தொடுவானத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே ஒரு சிறு கரும்புள்ளி தென்பட்டது. வர வரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. அதுதான் அந்தக் கப்பல் என்றும், மீண்டும் இங்கே வருவதாகவும் கூறினார். இந்தப் பாஞ்சஜனா என்பவன் புண்யாஜனா என்னும் ஆதிவாசிகளைச் சேர்ந்தவன் என்றும், சில வருடங்கள் முன்பு அவர்கள் குஷஸ்தலையைப் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறினார். (குஷஸ்தலை தான் இப்போதைய துவாரகை.) குஷஸ்தலையின் அரசனான குக்குடுமின் என்பவன் நாடோடியாக ஊருக்கு ஊர் அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்தப் புண்யாஜனா ராக்ஷசர்கள் ஒவ்வொரு வருடமும் இம்மாதிரி இந்த மாதங்களிலேயே இங்கே வியாபாரம் என்ற போர்வையில் வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் வணிகம் முடிந்ததும் எங்கே திரும்பிச் செல்கிறான் என்பது புரியாமல் மர்மமாக இருப்பதாகவும் கூறினார். ஒருவேளை அது படாலாவாக இருக்கலாம் என்றும் கூறினார். (பாகிஸ்தானில் இருக்கும் இப்போதைய ஹைதராபாத், சிந்து பிரதேசங்கள். )
சென்ற வருடமும் அப்படித் தான் அவர்கள் வணிகம் செய்ய இங்கே வந்ததாகவும், அப்போது ஒருநாள் புநர்தத்தன் கடலில் குளிப்பதற்காகக் கடலுக்குச் சென்றான் என்றும் சொன்ன குரு, புநர்தத்தன் கிருஷ்ணனை விட வயதில் பெரியவன், மிகவும் புத்திசாலை, வீரன் என்றெல்லாம் பெருமை பொங்கச் சொன்னார். எனக்குப் பின்னர் என்னுடைய குருகுலத்தை நடத்துவதற்கு அவனே சிறந்தவன் என எண்ணி இருந்தேன் என்றும் கூறிப் பெருமூச்செறிந்தார்.
கடலையே அதுவரை கண்டிராத கண்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் இவ்வளவு பெரிய மேலைக்கடலைக் கண்டதும், ஆச்சரியமும், உற்சாகமும் பெருக்கெடுத்தது. கண்ணன் கடலின் நுட்பங்களையும், அதன் அலைகளையும், அவற்றின் வேகத்தையும், சீற்றத்தையும், அமைதியாய் இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொந்தளிப்பதையும் கண்டு ஆச்சரியப் பட்டான். மேலும் அந்தக் கடலில் படகை அவனே விட்டுக்கொண்டு போகவும் ஆசைப்பட்டான். ஆசானின் அநுமதியோடு படகைச் செலுத்தியும் பார்த்தான். குரு சாந்தீபனி அடிக்கடி அங்கே வருபவர் ஆதலால் அந்தப் பக்கத்து மக்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருந்தார். அனைவரும் மிகவும் மரியாதையுடனும், பக்தியுடனும் அவரை வணங்கினார்கள். சொல்லப் போனால் அவர் வரவை எதிர்பார்த்துக்காத்திருந்ததாகவே தெரிந்தது. சாந்தீபனியின் குருகுலத்து மக்களுக்கு பிரபாஸ க்ஷேத்திரத்தை நெருங்கியதும், அங்கே அப்போது ஆண்டுவந்த மன்னனால் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. செளராஷ்டிரம் என அழைக்கப் பட்ட அந்தப் பகுதியிலும் ஆரியர்கள் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். ஆகவே அனைவருக்குமே இந்த குருகுலத்தின் வரவு தேவையாகவும், மகிழ்வாகவும் இருந்தது. ஏதோ திருவிழா போல் மக்கள் மனமகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டாடினார்கள்.அங்கே இறங்கி தாற்காலிகமாய் குருகுலத்தை ஏற்படுத்திக் கொண்ட சாந்தீபனி தனக்கென ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக்கொண்டார். தன்னுடைய முதன்மையான சீடன் ஆன ஸ்வேதகேதுவின் மூலம் குருகுலத்துக்குக் கற்க வரும் அனைவருக்கும் அவரவருக்கு என்ன தேவையோ அதற்கேற்றாற்போல் கற்பிக்க ஆரம்பித்தார். தேர்ந்தெடுத்த சில திறமை வாய்ந்த சீடர்கள் அக்கம்பக்கம் உள்ள ஊர்களுக்குச் சென்று அங்கே இருந்த மக்களுக்கும் பாடங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்பிக்க ஆரம்பித்தனர். அரசனாகட்டும், குருவாகட்டும், வருவார்கள், போவார்கள். ஆனால் நிலைத்து நிற்பது என்றென்றும் தர்மம் மட்டுமே. ஆகவே ஆரியர்கள் என்றாலே தர்மத்தைக் காப்பவர்கள் என்றே சொல்லப் பட்டது. அதனால் அவரவர்களுக்குரிய தர்மத்தைப் பாதுகாக்கவே அனைவரும் முயன்று வந்தனர். ஆரியர்களைத் தவிரவும் வேறு ஒரு இனத்து மக்களும் அங்கே வசித்து வந்தனர். அவர்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்களாக இருந்தனர். தெருக்கள் அழகாகவும், ஒழுங்காகவும், வீடுகள் வரிசையாகவும் இருந்தன. அவர்களுக்கு மஹாதேவன் ஆகிய சிவபெருமானே கடவுளாக இருந்தான். ஆனால் லிங்க வழிபாடு செய்யாமல் சிவனின் உருவத்தை யோகமுறையில் அமைத்து வழிபட்டு வந்தனர். கப்பல் கட்டும் கலையிலும் சிறந்து விளங்கினார்கள். சொந்தமாய்க் கப்பல்கள் வைத்து வாணிபம் செய்தவரும் பலர் இருந்தனர். அவர்களின் மொழி தனியாக, வேறாக இருந்தாலும் ஆரியர்கள் பேசும் பெருவாரியான மொழியையும் பலரும் அறிந்து வைத்திருந்தனர். வேதங்களையும், சாஸ்திரங்களையும் பற்றிய தெளிந்த அறிவும் இருந்தது. சாந்தீபனியின் குருகுலம் கடற்கரையில் சூரியனின் கோயிலுக்கு அருகே அமைந்திருந்தது. வழக்கம்போல் இங்கேயும் தினமும் காலையும், மாலையும் குளித்தல், அன்றாட அநுஷ்டானங்கள் செய்தல், யக்ஞம் செய்தல் எனப் பலவேலைகளையும் செய்து வந்தாலும் இந்தக் கடற்கரைக்கு வந்தது முதலே குரு சாந்தீபனி ஏதோ இனம் தெரியாத தவிப்பில் இருந்து வந்தார். ஒவ்வொரு முறை கடலுக்குக் குளிக்கப் போகும்போதெல்லாம் கடலையே பார்த்துக்கொண்டு பெருமூச்சுக்களை விட்டுக் கொண்டு, கண்களில் வரும் கண்ணீரை மறைக்கப் பிரயத்தனப் பட்டுக்கொண்டு கடலில் அவசரம் அவசரமாக முழுகுவார்.
அவருக்குச் சென்ற வருடம் இங்கே கற்பிக்க வந்ததும், தன் ஒரே மகன் புநர்தத்தனை, பாஞ்சஜனா என்பவனால் அவனுடன் கப்பலில் அந்தக் கடற்கரைக்கு வியாபாரத்திற்கு வந்த புண்யாஜன இனத்தைச் சேர்ந்த பொல்லாத ராக்ஷசர்கள் கடத்திக்கொண்டு சென்றுவிட்டதும், அதன்பிறகு எப்படி எப்படியெல்லாமோ தேடியும் தன் மகன் திரும்பக் கிடைக்காததும் நினைவில் மோதியது. மகனைப் பற்றிய நினைவுகளிலே மூழ்கிப் போய்த் துன்பம் அநுபவித்துக்கொண்டிருந்த அவரால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது கஷ்டமாய் இருந்தது. திடீர் திடீரென நடு இரவில் கடற்கரைக்குத் தன்னந்தனியே வந்து கடலைப் பார்த்துக்கொண்டே, தூரத்தில் தெரியும் அடிவானத்தில் தன் பிள்ளை இருக்கிறானா எனத் தேடுபவர் போல் பார்த்துக்கொண்டே நிற்பார். கண்களோ மழையாக வர்ஷிக்கும்.
இதை அங்கு வந்ததில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு நாள் இரவு அவர் அம்மாதிரிப் போய் நிற்கும்போது கூடவே தானும் சென்றான். மெல்ல மெல்ல குருவின் அருகே போனான். அவன் வந்ததை உனர்ந்தார் சாந்தீபனி. தன் கண்களைத் துடைத்துக்கொண்டார். ஏற்கெனவே மற்ற மாணாக்கர்கள் மூலம் குருவின்மகன் புநர்தத்தன் கடத்திச் செல்லப் பட்டதை அறிந்திருந்தாலும் கண்ணன் அவரிடம் எதுவும் பேசவில்லை. சாந்தீபனி கண்ணனைப் பார்த்து, “குழந்தாய்! மகனே! இந்த வேளையில் இங்கே எதற்கு வந்தாய்?” என வினவினார். “குருவே, வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். உங்கள் துயரம் என்னவென்று எனக்கு நன்கு புரிகிறது. என்னால் எதுவும் செய்யமுடியுமா என யோசிக்கிறேன். உங்கள் அனைத்து மாணாக்கரிலும் நான் உங்களுக்கு மிக அருமையானவன் எனச் சொல்லி இருக்கின்றீர்கள். நானும் உங்களை என் தந்தையை விட மேலாகவே கருதி வருகிறேன். நான் ஏதானும் செய்து உங்கள் துயரத்தைப் போக்கமுடியுமா? தயவு செய்து கட்டளையிடுங்கள் குருவே!” என்றான் கண்ணன்.
“என் குழந்தாய்?? உன்னால் என்ன செய்யமுடியும்?? ராக்ஷசர்களின் பிடியில் அகப்பட்டுவிட்ட என் மகனை மீட்டுக் கொண்டுவர எவரால் இயலும்? யாராலும் என்னைச் சந்தோஷப் படுத்த முடியாது. உனக்கு இது இப்போது புரியாது கிருஷ்ணா! நீயும் ஒரு மகனுக்குத் தந்தையாகி, அந்த மகனே உலகம் என வாழும்போது இம்மாதிரி ஒரு கொடூர ராக்ஷசர்கள் கையில் அவன் அகப்பட்டு மறைந்து போகும்போது புரிந்துகொள்வாய். ஒரு மகனிடம் தந்தை என்பவன் தன்னையே பார்க்கிறான். வருங்காலம் என்பது அவன் தான் எனத் தெரிகிறது அவனுக்கு. வாழ்க்கையில் ஒரு தந்தைக்கு மகன் என்பவன் பெரும் ஊன்றுகோலாக விளங்குகிறான். இறப்பிலோ “புத்” என்னும் நரகத்திற்குச் செல்வதில் இருந்து காப்பாற்றுகிறான். ஒரு தந்தைக்கு மகனை இழப்பது என்பது அவன் வாழ்க்கையையே இழப்பதற்குச் சமானம். ஒரு மகனின் இடத்தை வேறு எவராலும் பூர்த்தி செய்யவும் முடியாது.”
சாந்தீபனி சொன்னதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டான் கிருஷ்ணன். பின்னர் தான் ஆசாரியர் ஸ்வேதகேதுவிடம் பாஞ்சஜனாவுடன் கப்பலில் வந்த ராக்ஷசர்கள் எப்படிப் புநர்தத்தனைக் கடத்தினார்கள் என்பதைக் கேட்டறிந்ததாகவும், அவனை மீட்க எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லையா என்றும் கேட்டான். சோகத்துடன் இல்லை எனத் தலையாட்டிய குரு, திடீரெனத் தொடுவானத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே ஒரு சிறு கரும்புள்ளி தென்பட்டது. வர வரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. அதுதான் அந்தக் கப்பல் என்றும், மீண்டும் இங்கே வருவதாகவும் கூறினார். இந்தப் பாஞ்சஜனா என்பவன் புண்யாஜனா என்னும் ஆதிவாசிகளைச் சேர்ந்தவன் என்றும், சில வருடங்கள் முன்பு அவர்கள் குஷஸ்தலையைப் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறினார். (குஷஸ்தலை தான் இப்போதைய துவாரகை.) குஷஸ்தலையின் அரசனான குக்குடுமின் என்பவன் நாடோடியாக ஊருக்கு ஊர் அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்தப் புண்யாஜனா ராக்ஷசர்கள் ஒவ்வொரு வருடமும் இம்மாதிரி இந்த மாதங்களிலேயே இங்கே வியாபாரம் என்ற போர்வையில் வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் வணிகம் முடிந்ததும் எங்கே திரும்பிச் செல்கிறான் என்பது புரியாமல் மர்மமாக இருப்பதாகவும் கூறினார். ஒருவேளை அது படாலாவாக இருக்கலாம் என்றும் கூறினார். (பாகிஸ்தானில் இருக்கும் இப்போதைய ஹைதராபாத், சிந்து பிரதேசங்கள். )
சென்ற வருடமும் அப்படித் தான் அவர்கள் வணிகம் செய்ய இங்கே வந்ததாகவும், அப்போது ஒருநாள் புநர்தத்தன் கடலில் குளிப்பதற்காகக் கடலுக்குச் சென்றான் என்றும் சொன்ன குரு, புநர்தத்தன் கிருஷ்ணனை விட வயதில் பெரியவன், மிகவும் புத்திசாலை, வீரன் என்றெல்லாம் பெருமை பொங்கச் சொன்னார். எனக்குப் பின்னர் என்னுடைய குருகுலத்தை நடத்துவதற்கு அவனே சிறந்தவன் என எண்ணி இருந்தேன் என்றும் கூறிப் பெருமூச்செறிந்தார்.
Monday, February 15, 2010
கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

சக்கராயுதத்தில் தேர்ந்த கண்ணன்!
அனைவரும் பிரியாவிடை கொடுத்தனர் மூன்று சகோதரர்களுக்கும். குரு சாந்தீபனியின் இந்த நடமாடும் குருகுலமானது கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதில் பல தேசத்து அரசகுமாரர்களும் மாணாக்கர்களாக இருந்து பயின்று வந்தனர். என்றாலும் எக்காரணங்களை ஒட்டியும் குரு சட்டதிட்டங்களை இம்மியளவும் தளர்த்துவதில்லை. சாந்தீபனியின் குருகுலத்து மக்கள் இரவுப் பொழுதுகளை ஏதாவது ஒரு நதியின் கரையில் அமைந்துள்ள கிராமங்களில் கழித்தனர். அதிகாலையில் பிரம்ம முஹூர்த்தத்தின் பொழுது எழுந்து அருகிலுள்ள நதிக்குச் சென்று நீராடித் தங்கள் காலைக்கடன்களையும், அநுஷ்டானங்களையும் முடித்துக்கொண்டு வேதப் பயிற்சி நடக்கும். அதற்குள்ளாக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து மாணாக்கர்களுக்கும், மற்றவர்களுக்கும் தேவையான பால் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப் படும். அதன் பின்னர் பயணம் தொடரும். பயணத்தின்பொழுதே, ஒரு தேர்ந்த திறமையான மாணவனால் வேதமந்திரங்களின் இலக்கணங்கள் பற்றியும் அதிலுள்ள நடைமுறைகள் பற்றியும் விளக்கப் படும். மாணவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒரு திறமைசாலியான மாணவன் பயிற்றுவித்துக்கொண்டே வருவான். இதைத் தவிரவும் அஸ்திரப் பிரயோகமும் அதில் தேர்ந்தவர்களால் கற்றுக் கொடுக்கப் படும். வழியில் தென்படும் சிறு சிறு விலங்குகள், மரங்கள், செடிகள் போன்றவற்றைக் குறி வைத்தோ, மரங்களின் கனிகளைக் குறி வைத்தோ, விண்ணில் பறக்கும் பறவைகளைக் குறி வைத்தோ அஸ்திரப் பிரயோகங்கள் கற்றுக்கொடுக்கப் படும். அவற்றிற்குத் தேவையான மந்திரப் பிரயோகம், மந்திரப் பிரயோகம் செய்யும் முன்னர் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், செய்ய வேண்டிய ஜபங்கள், தவங்கள், வழிபடவேண்டிய தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், கொஞ்சம் முறைதவறினாலும் அஸ்திரப் பிரயோகம் மாறிவிடும் என்பதைச் சுட்டிக் காட்டும் சாத்தியக் கூறுகள் என அனைத்தும் கற்பிக்கப் படும். மேலும் யுத்தம் என வந்துவிட்டால் எதிர் தரப்பினருடம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள். யுத்தத்தின் விதிமுறைகள், தோற்றால் நடந்து கொள்ளவேண்டியவைகள், ஜெயித்தால் ஆணவம் வராமல் எப்படி விநயமும், அடக்கமும் தோன்றும்படி இருக்கவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. இவை எல்லாம் சூரியன் உச்சிக்கு வரும்வரை கற்றுக்கொடுக்கப் படும். சூரியன் உச்சிக்கு வந்ததும் ஏதாவது ஒரு அடர்ந்த நிழல் தரும் மரத்தினடியில் ஓய்வு.
அருகிலுள்ள கிராமங்களுக்கு மாணாக்கர்கள் பிக்ஷைக்குச் செல்லுவார்கள். அனைவரும் ஒரே கிராமத்திற்குச் செல்ல மாட்டார்கள். அதே போல் ஒரு வீட்டில் பிக்ஷை எடுத்துவிட்டால் மீண்டும் அங்கே செல்ல மாட்டார்கள். அவர்கள் பிக்ஷையை முடித்துவிட்டு வருவதற்குள்ளாக சாந்தீபனி தன்னுடைய யக்ஞக் கடமைகளை முடித்துவிட்டுக் காத்திருப்பார். மாணாக்கர்கள் கொண்டு வரும் அரிசி, தானியங்கள் போன்றவற்றைக் கொண்டு கூடவே வரும் அரசகுமாரர்களின் பரிவாரங்கள் உணவு சமைத்து, குருவுக்கும், சீடர்களுக்கும் உணவளிக்கத் தயார் செய்யும். ஆனாலும் மாணாக்கர்கள் அனைவரும் தங்கள் பிக்ஷா பாத்திரத்திலேயே உணவை வாங்கிச் சாப்பிடுவார்கள். அங்கே பிக்ஷை போடத் தயாராகக் காத்திருக்கும் அரசகுமாரிகளுடன் ஒரு வார்த்தை கூடப் பேச அநுமதி இல்லை. மாணாக்கர்கள் பேசவும் மாட்டார்கள். ருக்மிணியும், தன் அண்ணனோடும், தங்கள் அரசப் பரிவாரங்களுடனும் இந்தக் கூட்டத்தில் கலந்து வந்து கொண்டிருந்தாள். இம்மாதிரியான சட்ட, திட்டங்களுடன் கூடிய ஒரு குருகுலத்தோடு போகிறோம் என அவளுக்குத் தெரியாது. கண்ணனை அடிக்கடி பார்க்கப் போகிறோம் என அவள் நினைப்பு. தூரத்தில் ரதத்திலிருந்து கண்ணனை பிரமசாரிக் கோலத்தில் பார்க்கப்பார்க்க அவள் மனதில் ஆச்சரியம் ஒரு பக்கமும், கண்ணனிடம் மதிப்பும், ஆசையும் இன்னொரு பக்கமும் பொங்கிப் பிரவாகமெடுத்தது. அவனை அடிக்கடி பார்க்கவேண்டும் என்ற ஆவலை அவளால் தடுக்க முடியவில்லை. அவனைப் பார்க்காமல் அவளால் இருக்கவும் முடியவில்லை. சாந்தீபனியின் மாணாக்கர்கள் உணவை வாங்க அந்தப் பக்கம் வரும்போது அனைவரையும் பின்னால் தள்ளிக்கொண்டு ருக்மிணி முன்னால் வந்துவிடுவாள். கண்ணனின் பிக்ஷைப் பாத்திரத்தில் தன் கைகளாலேயே உணவிடுவாள். மற்ற அரசகுமாரிகள் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக்கொண்டு சிரிப்பை அடக்கிக் கொள்வார்கள். சிலர் சத்தமில்லாமல் சிரிக்கவும் செய்வார்கள். தலைக்கனம் பிடித்த இந்த விதர்ப்ப நாட்டு இளவரசியைத் தடுப்பவர் யார்? என நினைத்துக்கொள்ளுவார்கள். அவள் அண்ணனுக்கும், அண்ணிக்கும் இந்தப் பெண்ணை இந்த மாதிரியான வெளிப்படையான செயலில் இருந்து தடுக்கும் வழி தெரியவில்லை, புரியவில்லை. கஷ்டப் பட்டு தங்கள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டனர். எந்நேரமும் அவளைத் தங்கள் பார்வையிலேயே வைத்திருக்க முயன்றனர்.
ஆனால் எப்படியோ தந்திரமாக ருக்மிணி அவர்கள் பார்வையிலிருந்து தப்பி விடுகிறாள். என்ன முயன்றாலும் அவளைத் தடுக்க முடியவில்லை. தடுத்தாலோ அனைவருக்கும் நேரேயே அவள் கத்த ஆரம்பிப்பாள். அவள் கத்தலை அடக்குவது கஷ்டமாகிவிடும். வேறு வழியே இல்லை, பொறுத்துக்கொள்ளவேண்டியது தான். எதுவுமே நடவாதது போல் மிகவும் சிரமத்துடனேயே அமைதி காத்தனர் ருக்மியும் அவன் மனைவியும். ஆனால் கண்ணனோ?? ஒவ்வொரு முறை ருக்மிணி அவன் பிக்ஷா பாத்திரத்தில் உணவிடும்போதெல்லாம் அவளை நேருக்கு நேராகக் கண்ணோடு கண் சந்திப்பான். ருக்மிணியின் சிரிப்புக்கு எந்தவிதமான பதிலோ, அல்லது உணர்வுகளையோ காட்ட மாட்டான். கல்லைப் போல் உணர்வுகளற்றுக் காணப்படும் அவன் முகத்தின் இரு கண்கள் மட்டும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். ருக்மிணியின் அன்பை உணர்ந்துகொண்டதாய்த் தெரிவிக்கும். அதே சமயம் தான் இப்போது கடுமையான பிரமசரிய விரதத்தை அநுஷ்டித்துக்கொண்டு குருகுலத்தில் இருப்பதால் குருவின் பெயருக்கும், அவருடைய குருகுலத்தின் மேன்மைக்கும் எந்தவிதமான ஹானியும் தன்னால் ஏற்படக் கூடாது என்பதில் தான் தீர்மானமாக இருப்பதையும் தெரிவிக்கும் அந்தப் பார்வை!
சூரியனின் வெம்மை குறைய ஆரம்பிக்கும்போது மீண்டும் கிளம்பும் குருகுலம், மாலை நெருங்கும்போது மீண்டும் ஏதேனும் ஒரு நதிக்கரையின் மரநிழலுக்கடியில் தங்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்கும். தங்கியதும், மாணாக்கர்களுக்குள்ளே மல்யுத்தம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் திறமையைக் காட்ட ஆரம்பிப்பார்கள். அனைத்தையும் கண்ணன் ரசித்தான். புதுமையான இந்தச் சூழல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் தன்னால் இந்தக் கட்டுப்பாடான வாழ்வு நெறிக்குப் பங்கம் நேரக் கூடாது என்பதிலும் உறுதிகாட்டினான். அவனுடைய ஆசிரியரான ஸ்வேதகேது, இவ்வளவு மரியாதையும், பண்பும், கீழ்ப்படிதலும் உள்ள மாணவனை இதுவரை கண்டதில்லை என்னும்படியான பண்பைக் கண்ணன் காட்டி வந்தான். ஒரு பாடம் ஆசிரியர் சொன்னால் உடனே அதை மனனம் செய்து விடுவான். ஆசிரியர் சொல்லுவதைத் தட்டுவது இல்லை. கூடப் படிக்கும் சக மாணாக்கர்களுக்குக் கண்ணன் செய்யும் உதவிகளும், அவர்களிடம் நட்புரிமையோடு பழகும் விதமும் ஸ்வேதகேதுவின் மனதைக் கவர்ந்தது. தாங்கள் அரசகுமாரர்கள் என்பதில் கர்வம் மிகுந்த அவந்தி நகரத்து இரட்டையர்களுக்குக் கூடக் கண்ணன் சேவை செய்து அவர்கள் மனதைக் கவர்ந்துவிட்டான்.
அனைவருடனும் ஸ்வேதகேதுவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டது. அவந்தி இளவரசர்கள் மட்டும் அனைவருடனும் நெருங்கிப் பழகுவது தங்கள் அரசகுல கெளரவத்துக்கு இழுக்கு என நினைத்து அதை விட்டு விலகாமல் தத்தளித்துக்கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல, இந்த நகரும் பல்கலைக்கழகமானது இன்றைய சம்பல் பள்ளத்தாக்கை நெருங்கியது. அங்கே விடைபெற வேண்டிய மற்ற இளவரசர்களும், அரச குமாரர்களும் விடை பெற்றுச் சென்றார்கள். கடைசியில் கிளம்பி ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் அவந்தியை அடைந்த குருகுலம் அங்கே தங்கியது. ஒவ்வொரு வருஷமும் இம்மாதிரி இருமுறைகள் சாந்தீபனியின் குருகுலம் இடம் பெயர்ந்து செல்லும். குருக்ஷேத்திரத்துக்கு வேத வியாசரைத் தரிசிக்க என ஒரு முறையும், பிரபாஸ க்ஷேத்திரம் எனப்படும் மேலைக்கடலோரம் இருக்கும் க்ஷேத்திரத்துக்கு ஒரு முறையும் செல்லும். பிரபாஸ க்ஷேத்திரத்தில் அனைத்து முக்கியமான புண்ணிய நதிகளும் கடலில் சங்கமிப்பதால் அங்கே ஸ்நாநபாநங்கள், ஜப தவங்கள் செய்வது சிறப்பு, அதிலும் பெளர்ணமி தின வழிபாடு அங்கே விசேஷமாய்ச் சொல்லப் படும். இன்னும் பிரபாஸ க்ஷேத்திரத்துக்குப் போகவேண்டிய நாள் வரவில்லை, அதுவரையிலும் கிருஷ்ணனும் பலராமனும் தங்களுக்கு வேண்டிய பயிற்சிகளை இங்கே பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
மெல்ல மெல்ல குரு சாந்தீபனியே கண்ணனுக்கும் பலராமனுக்கும் ஆயுதப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். முட்கள் நிரம்பிய கதாயுதமும், யுத்தத்தில் பயன்படுத்தும் கோடரியும் பலராமனுக்குப் பிடித்தது. அவன் அதில் ஆர்வம் கொண்டு விளங்கினான். அவனுடைய பெரிய சரீரத்தில் இருந்து வேகத்தோடு வரும் கதையும், கோடரியும் எதிராளியை நடுங்க வைத்தது. கண்ணனுக்கோ சக்கரம் தான் மிகப் பிடித்தது. சின்ன வயதிலிருந்தே கண்ணனுக்குக் குறி பார்த்துச் சுருக்கை வீசி மாடுகளின் கழுத்தில் போட்டுப் பிடிக்க ஆவலாய் இருக்கும், அதுவே அவனுக்கு மிகவும் பிடித்த வேலையாகவும் இருந்தது. விஷப் பொய்கையில் காளியனைக்கட்ட இம்மாதிரிச் சுருக்கைத் தான் கண்ணன் பயன்படுத்தினான். இன்று அந்த வேகத்தைச் சுற்றிலும் பற்கள் போல் செதுக்கப் பட்ட இந்த வட்டவடிவமான ஆயுதத்தில் பிரயோகிப்பது கண்ணனுக்கு வெகு எளிதாக இருந்தது. சாந்தீபனியின் சீடர்களில் வெகு சிலருக்கே இது வரும். அவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தால் அதிகம். கண்ணனுக்கோ இதில் பயிற்சி செய்வது கைவந்த கலையாக இருந்தது. சீக்கிரமே சக்கராயுதத்தைச் செலுத்துவதில் கண்ணன் தேர்ந்தான். ஆயிற்று, பிரபாஸ க்ஷேத்திரத்துக்குச் செல்லும் நாளும் வந்துவிட, பிருகு தீர்த்தத்தில் நீராட சாந்தீபனியின் குருகுலம் பெயர்ந்து செல்ல ஆரம்பித்தது. கண்ணனும், பலராமனும் கூடவே சென்றனர்
Subscribe to:
Posts (Atom)
