எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 12, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்.

வேறே ஏதோ தேடப் போய் துவாரகை அகழ்வாராய்ச்சி பற்றிய சில குறிப்புகள் மட்டும் கிடைச்சது. முதலில் சரியாத் தெரியாமல் இதை எழுத வேண்டாம்னு இருந்தேன். துவாரகையிலும் சரி, பேட் துவாரகாவிலும் சரி, படங்கள் எடுக்க முடியாது. படங்கள் எடுத்துக் குறிப்புகளைக் கொடுப்பது என்பது தனி. சும்மா எழுதறது தனி. ஆதாரங்கள், குறிப்புகளோடு கொடுப்பது தனி இல்லையா?? அதான் கொஞ்சம் தாமதமும் ஆச்சு. நான் தேடியது கிடைக்கலைனாலும், வாராது வந்த மாமணி போல் துவாரகை பற்றிய குறிப்புகள் கிடைத்தன. இனி அக்குறிப்புகளில் இருந்து.

இந்திய தேசீய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983-ம் ஆண்டு முதன் முதலில் இந்த ஆராய்ச்சியைப் பேராசிரியர் திரு எஸ்.ஆர்.ராவ் அவர்களின் தலைமையில் ஆரம்பித்தது. ஆராய்ச்சியின் முடிவுகளைப் பேராசிரியர் The Lost City of Dvarakaஎன்னும் தன்னுடைய நூலில் எழுதி உள்ளார். புத்தகம் முழுதும் படிக்கக் கிடைக்கவில்லை எனினும், அதிலிருந்து ஒரு சில குறிப்புகள் கிடைத்தன. அவை கீழே:

புராண காலத்தில் நடந்ததாய்ச் சொல்லப் படும் ஒரு நிகழ்வுக்கான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பு இதுவெனச் சொல்லப் படுகின்றது. இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் மஹாபாரதக் கதை நடந்தது எனவும், துவாரகை என்றோர் நகரம் இருந்ததும் உண்மையே என்பதும் உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றது. கி.மு. 1500-ம் ஆண்டில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகே உள்ள சிறு தீவான பேட் துவாரகை ஆகிய பகுதிகளில் ஸ்ரீகிருஷ்ணன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. கடற்கரையில் இருந்து சுமார் அரை மைல் தூரத்தில் நன்கு வடிவமைக்கப் பட்ட ஒரு நகரம் இருந்திருக்கின்றது. சாலைகள் சுமார் 18 மீட்டர் அகலமாயும், ஆறு குடியிருப்புகளும், அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டும், பிரம்மாண்டமான மூன்று கட்டிடத் தொகுப்புகளும் இருந்திருக்கலாம்.

கண்டு பிடிக்கப் பட்ட நகரின் சுவர்களின் தன்மையைக் கொண்டு அவை 3,600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததெனத் தெரிய வருகின்றது. கடலில் திடீரென ஏற்பட்ட சுனாமி போன்ற ஓர் இயற்கைப் பேரழிவால் கடலில் இந்நகரம் மூழ்கி இருக்கலாம். வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கவேண்டும் இந்நகரம். அப்படி வடக்கு நோக்கி விரிவடைந்த பகுதியே பெட் துவாரகை என்றழைக்கப் பட்டிருக்க வேண்டும். இந்தத் தீவு நகரம் கிருஷ்ணர் தன் மனைவியரோடு வந்து தங்கிப் பொழுதைக் கழிக்கும் ஒரு பொழுது போக்குத் தலமாக இருந்திருக்க வேண்டும். மேலும் இந்நகரத்தின் வியாபகத் தன்மை வியப்புக்குரியதாய் உள்ளது. தெற்கே ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கே பிந்தாரா என்ற இடம் வரையிலும் இந்நகரம் வியாபித்திருந்திருக்கிறது. இந்த பிந்தாரா - தாரகா என்ற பகுதியில் தான் துர்வாசரின் ஆசிரமம் இருந்ததாய் மஹாபாரதம் சொல்கின்றது.

1 comment:

  1. ஹிஹிஹி, அ.வ.சி. சேமிக்கத் தட்டினால் பப்ளிஷ் ஆயிடுச்சு. இன்னும் இருக்கு. தொடரும். சின்னப் பதிவைப் பார்த்துட்டு என்னடானு அசந்து போயிடாதீங்க, விடறதாயில்லை, வருவேன். பூஸ்ட் சாப்பிடாமலேயே ஊக்கத்துடன். :))))))))))))

    ReplyDelete