எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 21, 2009

விருது ஏற்பு நிகழ்வில் மழை!

இந்த விருதை எனக்கு திரு பித்தனின் வாக்கு (எவ்வளவு பெரிய பெயருங்க???)அவர்கள் அளித்துள்ளார். அவர் அளித்துப் பலநாட்கள் ஆகியும் என்னால் அவர் பதிவுக்குப் போய்ப் பார்க்கமுடியலை. அடுத்தடுத்து ஏதானும் வேலைகள். பித்தனின் வாக்கு அவர்களின் உண்மைப் பெயர் தெரியலை. அவருக்கு என்னோட மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரோட பழகின எல்லாருக்குமே இந்த விருதைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கார். அது மாதிரி நானும் கொடுக்கணுமா தெரியலை. என்றாலும் அனைத்துப் பதிவர்களும் இதைப் பங்கிட்டுக் கொள்ள அழைக்கின்றேன்.

அப்புறமாத் தமிழ்நாட்டின் சிரபுஞ்சியாக எங்க ஊர் ஆயிட்டு இருக்கு. எங்க தெருவைத் தோண்டின அன்னிக்கு ஆரம்பிச்ச மழை நடுவிலே ஒருநாள் நாங்க துளசி வீட்டுக்குப் போறதுக்காக நின்னது. இப்போச் சேர்த்து வச்சுப் பெய்யுது. நேத்திக்குத் தொலைபேசியிலே மாம்பலத்திலே இருக்கும் தம்பிட்டே பேசினப்போ இங்கே மழை பெய்யுதுனு சொன்னா ஹிஹிஹிஹினு சிரிக்கிறார். எல்லாம் நேரம்! நான் வடாம் எதுவும் கூட இந்த வருஷம் போடலை. ஆனால் பாருங்க, பாலைவனப் பகுதிகளிலே இருந்தெல்லாம் எங்களைக் கூப்பிட்டு அழைப்பு வருது. அங்கெல்லாம் மழை பெய்யணுமாம். யாரானும் நாத்து நடணும்னா உடனே வந்து நடலாம். அவ்வளவு ஆழமா உழுதிருக்காங்க. விளையற நெல்லை நாங்களே அறுவடை செய்துக்கறோம். ஏன்னா இனிமே இது காய்ஞ்சு அவங்க ரப்பிஷோ, கல்லோ கொட்டி கிராவல் போட்டு சமன்படுத்தி, அப்புறம் தார் போடணுமே! வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்ச தூரம்தான்! :)))))))))))))))

3 comments:

  1. வாழ்த்துக்கள் தலைவி ;)))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கீதாம்மா.

    ReplyDelete
  3. கோபி,
    மெளலி, இருவருக்கும் நன்றி.

    ReplyDelete