எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 18, 2019

உலகநாயகி உடனுறை சாம வேதீஸ்வரர் கோயில், திருமங்கலம். லால்குடி!

தம்பி குடும்பம் வந்திருந்த போது  இங்கே அருகே உள்ள சாமவேதீஸ்வரர் தரிசனத்துக்குச் சென்றோம். அந்தக் கோயில் கோபுரம் மேலே! கீழே நுழைவாயில். இரு படங்களை இணைக்க முயன்றேன். அதனால் இப்படி வந்திருக்கு.


உள்ளே நுழைந்ததும் உள்ள முன் மண்டபம்

கொடிமரம் அருகே நம்மாளு ஜம்முனு உட்கார்ந்திருக்கார். சாதாரணமாக் கொடிமரம் அருகே காணப்பட மாட்டார். இந்தக் கோயிலில் வித்தியாசமாக


உலகநாயகி! கருவறையில். ஜூமெல்லாம் செய்யலை. படம் எடுத்ததே அதிகம்னு விட்டுட்டேன்.

 காலபூஜைக்கான வாத்தியங்கள் வாசிப்பவர். இவரும் தவில்காரரும் மட்டும் வந்தார்கள். நாதஸ்வரக்காரரை எங்கேனு கேட்டதுக்குப் பக்கத்து ஊர்க்கோயில் திருவிழாவுக்கு வாசிக்கப் போயிட்டார் என்றனர். ஏன் இங்கே வாசிக்கலையா என்று கேட்டேன். இங்கே நேரம் ஆவதால் அங்கே வாசிக்க முன்னுரிமை கொடுத்துட்டாராம். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. 


சாமவேதீஸ்வரர். விபரங்கள் பின்னால். நாளைக்குப் பதிவு வந்தாலும் வரலாம். அப்புறமா  5 நாளைக்கு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட விடுமுறை! எஞ்சாய்!

Friday, March 15, 2019

பழசு தான், ஆனாலும் சாப்பிடலாம்! :)

இன்னிக்குக் காரடையான் நோன்பு என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது முன்னர் எப்போதோ நோன்பின் போது எடுத்த படம். இந்த வருஷப் படம் இல்லை. ஆனால் எப்போதும் போல் கொஞ்சமாகத் தான் கொழுக்கட்டை செய்தேன். காலை ஐந்தே முக்காலுக்குள்ளாகச் சரடு கட்டிக் கொண்டாகி விட்டது.  இந்த வருஷம் அதிசயமா எங்க குடும்பப் புரோகிதரின் உதவியாளர் வந்து நோன்புச் சரடு கொடுத்தாரே என அதை எடுத்தால் கையில் கூடக் கட்டிக்கொள்ள முடியாது! அவ்வளவு குறைந்த நீளம். ஏதோ கொடுத்தேன் எனப் பெயர் பண்ணிட்டார். வருஷா வருஷம் விலைக்குத் தான் வாங்குவோம். அது போல வாங்கி இருந்திருப்போம். நல்லவேளையாப் போன வருஷச் சரடுகளை பத்திரமாக வைத்திருந்ததால் அதைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டேன். நல்லபடியா நோன்பு முடிஞ்சது.

இன்று மாலை பல்லவனில் என் தம்பியும் அவன் மனைவி, பெரிய மகன் ஆகியோர் வருவதால் இன்றும் நாளையும் கொஞ்சம் வேலை! வெளியே போக வேண்டியது என இருப்பதால் நாளைக்கு வர மாட்டேன். அதிரடி, சொல்லாமல் போயிட்டேன்னு சொல்லக் கூடாது! நெல்லைத் தமிழரே! எப்போவானும் பதிவு போடுகிறேன் எனக் குற்றம் சொல்லாதீங்க! முடிஞ்சால் பழைய பதிவுகளைப் போய்ப் படிங்க! வந்ததும் தேர்வு வைப்பேன். :)))) அஞ்சு, இரண்டு நாளும் நீங்க பிசியா இருப்பீங்க! முடிஞ்சப்போ வாங்க! அதிரடி கிட்டே சொல்ல வேண்டாம்!

Wednesday, March 13, 2019

இன்றைய எண்ணங்கள்! ஒரு தேவையான மொக்கை!

சனிக்கிழமையில் இருந்தே வேலை அதிகம் ஆகி விட்டது. வீடு சுத்தம் செய்யும் வேலை ஆரம்பித்தோம். எப்போதும் போல் ஆட்களை இம்முறை அழைக்க முடியவில்லை. இரண்டு இரண்டு அறையாகச் சுத்தம் செய்யலாம் என ஆரம்பித்து விட்டோம். முதல் நாள் சமையலறையும் ஒரு படுக்கை அறையும் மட்டும் முடிந்தது. அடுத்த இரண்டு நாட்களில் மற்ற இடங்களைச் சுத்தம் செய்து விட்டு நிமிர்ந்தால் நேற்றிலிருந்து யாரானும் வருகை தந்து கொண்டே இருக்கின்றனர். பேச்சிலே பொழுது கழிந்து விடுகிறது. இன்று முக்கியமான விருந்த்னர். அவங்களுக்காக சிற்றுண்டி தயாரிப்பு பின்னர் பேச்சு என மதியம் 2 மணி வரை சரியாப் போய் விட்டது. பதிவுகள் போடவோ யார் பதிவுக்கும் வரவோ கிடைக்கும் நேரத்தில் தான் முடியுது! ஆகவே இன்னும் 2,3 நாட்களுக்கு நான் வரலைன்னாத் தேடாதீங்க! நாளைக்கும் மத்தியானத்துக்கு மேல் தான் வருவேன்.

சென்னையிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து சென்னைக்கும் "தேஜஸ் எக்ஸ்பிரஸ்" என்னும் புதிய ரயில் வண்டி விட்டிருக்கின்றனர். முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. தானியங்கிக் கதவுகள். இதில் ஏறினால் எல்லா வண்டிகளிலும் நாம் அடிக்கடி இறங்கி இறங்கி ஏறுவது போல் முடியாது. ஏனெனில் ரயில் கிளம்ப ஐந்து நிமிஷம் இருக்கையில் வண்டிக்கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். பின்னர் திறக்க இயலாது. பாஸ்வேர்ட் இருக்குனு சொல்றாங்க. ஆனாலும் பாஸ்வேர்ட் போட்டாலும் திறந்துக்கறதில்லையோனு நினைக்கிறேன். ஏனெனில் 2 நாட்கள் முன்னர் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய ஒரு தகப்பன், மகள் இருவரில் மகளை இருக்கையில் அமர வைத்துவிட்டுத் தந்தை கீழே குடிநீர் வாங்கப் போயிருக்கார். ரயிலிலேயே வாங்கி இருந்திருக்கலாம். என்னமோ போறத நேரம். அவர் கீழே இறங்கியதுமே வண்டி கிளம்ப 5 நிமிடமே இருந்ததால் தானியங்கிக் கதவுகள் மூடிக்கொள்ளக் குடிநீர் பாட்டிலோடு வந்த தந்தை ரயில் நிலைய நடைமேடையில் செய்வதறியாது விழிக்க, யாராலும் கதவைத் திறக்க முடியவில்லை. ஊழியர்களாலும் முடியவில்லை போலும். வண்டி அடுத்த ஸ்டேஷனில் நிற்கையில் தான் கதவு திறக்கும் என்று சொல்லி இருக்கின்றனர். தகப்பனார் திகைத்துப் போய் வண்டியில் இருக்கும் மகளிடம் தன்னுடைய கைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் பின்னல் கிளம்பிய குருவாயூரில் பயணம் செய்து மகளை மதுரையில் போய்ப் பிடித்திருக்கிறார்.தேஜஸ் காலை ஆறு மணிக்கு எழும்பூரில் இருந்து கிளம்புகிறது. இது சமீபத்தில் ஒருத்தருக்கு ஏற்பட்ட அனுபவம்.

இன்னொருத்தர் தன் மனைவியையோ, அம்மாவையோ ஏற்றி விட வந்தவர் இறங்குவதற்குள்ளாக வண்டிக்கதவுகள் மூடிக்கொள்ள அவர் திருச்சி வரை அந்த வண்டியில் பயணம் செய்யும்படி ஆகிவிட்டது என்கிறார்கள். இது எவ்வளவு நிஜம் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கதவுகள் தானாக மூடிக் கொண்டாலும் பாஸ்வேர்ட் போட்டுத் திறக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதோடு பயணிகளுக்கு இவற்றை எல்லாம் பயணச் சீட்டிலேயே அச்சடித்துக் கொடுக்க வேண்டும். ரயில் நிலையத்திலும் வண்டி கிளம்பும் சமயம் வரை அறிவிப்புச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்கு இன்னமும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டவில்லை. கிட்டினால் படம் எடுத்துப் போடறேன். (யாரு அங்கே கிழிச்சேனு கூவறது?) இப்போல்லாம் காமிரா எடுத்துட்டுப் போறோமாக்கும்! 

Friday, March 08, 2019

சிவராத்திரிப் படங்கள் தாமதமாக!

எல்லோரும் சிவராத்திரிப் பதிவுகள் போட்டிருந்தார்கள். நான் சிவராத்திரி பற்றி எல்லாம் எழுதிட்டேன். திரும்ப மீள் பதிவுகள் போடுவதில் விருப்பம் இல்லை. ஆகவே போடுவதில்லை. தவிர்க்க முடியாமல் சிலவற்றைப் போட வேண்டி இருந்தது. அதல்லாமல் எல்லாவற்றையும் மீள் பதிவாகப் போட்டால் புதுசாக எழுத ஒன்றுமே இல்லையா என நினைப்பீங்களே! அதனாலும் போடுவதில்லை. 

சிவராத்திரி அன்றைய தினம் கூட்டம் காரணமாகக் கோயில்களுக்குப் போவது இல்லை. வீடு தான் அன்று கோயில். விரதம் மட்டும் கடைப்பிடிப்போம். ஆகவே தற்காலங்களில் பதிவெல்லாம் போடுவது இல்லை! அதனால் என்ன? என்னைத் தேடிக் கோயில் விசேஷங்களே வந்து விட்டன! கருவிலி பற்றி அடிக்கடி எழுதிட்டு இருக்கேன். அனைவருக்கும் தெரியும்.கோயில் பற்றியும் அனைவரும் அறிவீர்கள் இல்லையா? திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் புதுப்பிக்கப்பட்டுக் கும்பாபிஷேஹங்கள் கண்டகோயில். இப்போது இந்தக் கோயிலில் எல்லா நாட்களும் சிறப்பாக எல்லாக் கால வழிபாடுகளும் நடந்து வருகிறது.  இந்த வருஷம் சிவராத்திரி அன்றைய வழிபாட்டுக்கான அழைப்பு வந்தது. ஆனால் போக முடியாது என்பது தெரியும். நான் சிவராத்திரி வழிபாடு ஓரிரு முறை மதுரையில் பார்த்திருக்கேன். சிவராத்திரி வழிபாடு முதல் இரண்டு காலங்களும், ஐப்பசி மாத அன்னாபிஷேஹமும் மதுரையில் பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் கோயிலுக்குப் போவது என்பதே மதுரையோடு போயாச்சு! காலமும், வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் சென்று விட்டன.  இம்முறை சிவராத்திரிக்குப் போகவில்லையே தவிர அங்கு நடந்த நிகழ்ச்சிகளின் சில படங்களைத் திரு கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் ஆன திரு ஜி. கண்ணன் அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார். அவற்றை இங்கே பகிர்கிறேன்.




கோயிலின் இந்த நுழைவாயிலை அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்றாலும் இது இரவு நேரத்தில் விளக்கு அலங்காரங்களுடன் காணப்படுகிறது.



கருவறைக்கு மேலுள்ள விமானமே உயரமாகக் கட்டப்படும் சோழநாட்டுக் கலைப்படியே இந்தக் கோயிலும் இருந்தது. ஆனால் திரு கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்ற பின்னர் இங்கே ராஜ கோபுரம் தேவை என உணர்ந்து ராஜகோபுரம் கட்டினார். அந்த ராஜகோபுரம் தான் மேலே காணப்படுவது. இதையும் பார்த்திருப்பீர்கள்.

அர்த்த மண்டபத்துக்கு முன்னே உள்ள மஹா மண்டபம். இங்கே வேதங்கள் ஓதுவோர்களும், தேவார, திருவாசகம் ஓதுவார்களும் ஒருங்கே அமர்ந்து அவரவர் பணியைச் செய்து வருகின்றனர்.


இது எந்தக் கால வழிபாடு எனத் தெரியவில்லை.  ஏதோ ஒரு கால வழிபாடு முடிந்த பின்னர் காட்சி கொடுக்கும் இறைவன்.

நாதஸ்வரம் இப்போது கோயில்களில் இருந்து மறைந்து வருகிறது  என்பது வருந்தத் தக்க செய்தி. ஆனாலும் பழமைப் பெருமை பெற்ற மீனாக்ஷி அம்மன் கோயிலிலும், ஶ்ரீரங்கம் அரங்கன் கோயிலிலும் இன்னமும் ஒவ்வொரு கால வழிபாட்டிலும் நாதஸ்வர இசையால் அம்மையையும், அப்பனையும், அதே போல் அரங்கனையும் நாச்சியாரையும் மகிழ்விக்கின்றனர். எல்லாக் கோயில்களிலும் நாதஸ்வரம் சிறப்புப் பெற வேண்டும். பழைய நிலைமைக்கு மீள வேண்டும். ஆனால் கிராமங்களையும் பழமை வாய்ந்த கோயில்களையும் விட்டு நகரத்துக்குக் குடி பெயர்ந்த பல நாதஸ்வர வித்வான்கள் சொல்லுவது இங்கே விவரிக்க முடியாத வேறு சில காரணங்கள். விரைவில் எல்லாம் மறந்து நாதஸ்வரக்கலை புத்துயிர் பெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.


திரு கிருஷ்ண மூர்த்தி அவர்களால் நடைபெறும்  வேத பாட சாலையின் மாணாக்கர்கள் இந்த வழிபாட்டில் பங்கு பெற்ற நிகழ்வு படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.




Tuesday, March 05, 2019

நான் கணினி கற்றால், அதை முழுதும் கற்றால் இணைய ரசிகர்களைப் படுத்தாமல் விடமாட்டேன்!

 

அப்போல்லாம் நாம் வேண்டுகிற தளத்தின் விலாசத்தைத் தான் முழுவதுமாகத் தட்டச்சணும்.  நான் என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்.  அப்போ என்னோட ஆசிரியர் வந்து ப்ரவுஸ் பண்ணப் போறீங்களானு கேட்க, நானும் என்னனு யோசிக்காம, ஆமாம்னு சொல்லிட்டேன்.  என்ன சைட்னு கேட்டார்.  சைட்டா?  நான் யாரையும் சைட் அடிக்கலையேனு வாயிலே வந்ததை முழுங்கிட்டேன்.  எனக்குக் கூச்ச சுபாவம் இல்லை;  நேரடியாச் சொல்லி இருக்கலாமோ!  அதுக்கும் திரு திரு.  அப்புறமா அவரே சரினு ஏதோ ஒரு தளத்தைத் திறந்து கொடுத்தார்.  அதிலே சில முக்கியமான தளங்களின் வெப் அட்ரஸ் இருந்தது.  அதிலே இருந்து ஒரு தினசரியின் தளத்தைக் க்ளிக்கிப் பார்க்க  முயல, மெளஸ் அந்தக் குறிப்பிட்ட சுட்டியில் நிக்காமல் ஓடிட்டே இருந்தது.  பொறி வைச்சுத் தான் பிடிக்கணும் போலிருக்கேனு அலுத்துப் போயிட்டேன். மீண்டும் ஆசிரியர் வருகை.  வெண்ணை திருடின கண்ணனாட்டமா நான் முழிக்க, அவருக்குச் சிரிப்பு.  நேத்திக்கு நடந்ததை அந்த ஆசிரியர் சொல்லி இருப்பாரோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சே, நேத்திக்கு எவ்வளவு ஜாலியா இருந்தது!  நல்லா விளையாட முடிஞ்சதே, இன்னிக்கு என்னன்னா, பாடம் ஆரம்பிச்சு நடத்தறாரே!  எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லைனாலும் அந்த ஆசிரியர் கிட்டே இதைச் சொல்ல முடியலை. :P


என்ன ஆச்சு மேடம்னு கேட்க, மெளஸ் ஓடிப் போயிடறதுனு புகார் கொடுத்தேன்.  நீங்க பிடிச்சுக்கறதிலே இருக்குனு சொன்னார்.  மெளஸ்னு நினைச்சாலே பிடிக்கவா தோணும்! இதோட பெயரை வேறே ஏதானும் வைச்சிருக்கக் கூடாதோ!  யாருங்க அது இதுக்கு மெளஸ்னு பெயர் வைச்சது! னு மனசுக்குள்ளே நொந்து நூலாகிப் போயிட்டேன். அதுக்குள்ளே மெயில் கொடுக்கணுமேனு யோசனை வர, என் பையருக்கும், பொண்ணுக்கும் மெயில் கொடுக்கணும்னு சொன்னேன்.  அவங்க மெயில் ஐடி தெரியுமானு கேட்டார்.  எழுதிக் கொண்டு போயிருந்தேன்.  அதைச் சொல்லவும். என் கிட்டே இருந்து மெளஸை வாங்கி எதையோ க்ளிக்கினார்.  ஒரு தளம் வந்தது.  அதிலே என்னோட பெயர், வயசு எல்லாம் கொடுத்து ஓகே கொடுக்கச் சொல்ல சரினு அவர் சொன்னதெல்லாம் பண்ணி வைச்சேன்.  பாஸ்வேர்ட்னு ஒண்ணு கொடுக்கணுமே.  அப்போல்லாம் யாஹூ தான்.  யாஹூ.காமில் ஒரு அக்கவுன்ட் க்ரியேட் பண்ணினேன்.  பாஸ்வேர்ட் கொடுக்கையில் என்ன கொடுக்கிறதுனு புரியலை.  ஏதோ ஒரு பூவின் பெயரைக் கொடுத்தேன்னு நினைக்கிறேன்.  எல்லாம் முடிச்சாச்சு. மெயில் கொடுக்க என்ன செய்யறதுனு புரியாம எதையோ க்ளிக்கினால் தளம் மறைஞ்சே போயிச்சு.  ஆஹா, காக்கா தூக்கிண்டு போச்சோனு, உஷ், உஷ்னு கத்தலாம்னு நினைச்சேன்.  அதுக்குள்ளே கணினியே முழுசா ஆஃப் ஆக என்னமோ தப்பாயிடுச்சுனு புரிஞ்சது.


அதுக்குள்ளே என்னோட மூஞ்சியைப் பார்த்துட்டே அந்த ஆ"சிரி"யர் வந்து சேர்ந்தார்.  என்னனு கேட்க, வாயே திறக்காமல் கணினியைச் சுட்டிக் காட்டினேன்.  ஹிஹிஹி, ஷட் டவுன் பண்ணி இருக்கீங்க, எப்படிச் செய்தீங்கனு கேட்டார்.  நான் எங்கே ஷட் டவுன் பண்ணினேன்.  மெயில்கொடுக்கணும்னு தான் நினைச்சேன்.  அது ஒரேயடியா காணாமப் போச்சுனு சொன்னேன்.  மறுபடியும் ஸ்விட்சைப் போட்டு கணினியைத் திறக்கச் சொன்னார். திறந்து ஸ்டார்ட் பட்டனைக் க்ளிக்கச் சொல்ல ஸ்டார்ட் க்ளிக் பண்ணினேன்.  டபுள் க்ளிக் என்று சொன்னதாக நினைவு.  ஆகவே இன்னொரு தரம் எதிலோ க்ளிக்க, பெயின்ட், ப்ரஷ்னு வந்துடுச்சு.  அங்கே பார்த்தால் ஒரு ப்ரஷ் ஒண்ணு ஓரமா இருக்க அதைக்க்ளிக்கினால் சென்டருக்கு வந்தது.  மேலும்,மேலும் க்ளிக்கிக் கொண்டே போக விதவிதமான கோடுகள், வளைசல்கள். வட்டங்கள், செவ்வகங்கள்னு தோணினதை எல்லாம் கைக்குக் கிடைச்சபடி போட்டுட்டு இருந்தேன்.  இது நேத்தை விட இன்னிக்கு இன்னும் ஜாலியாவே இருந்தது.  இப்படி எல்லாம் விளையாடலாம்னு யாருமே சொல்லலையே, துரோகிங்கனு பொண்ணையும், பையரையும் திட்டிக் கொண்டேன், மனசுக்குள்ளே தான்.  பார்த்தார் ஆசிரியர். என்னதான் இவங்களுக்குக் கூச்ச சுபாவம் இல்லைனாலும் இதெல்லாம் டூ மச் இல்லை, ஃபோர் மச்ச்னு தோணிப்போய், என்ன மேடம் மெயில் ஐடி க்ரியேட் பண்ணணும்னு சொல்லிட்டு வரையறீங்களேனு கேட்க, அசடு வழிய நான் ஸ்டார்ட் பட்டனிலே டபுள் க்ளிக் பண்ணினதிலே இது வந்ததுனு சொல்ல, அதெல்லாம் இல்லை, ப்ரொகிராமிலே பெயின்ட், ப்ரஷிலே க்ளிக்கி இருக்கீங்கனு நாலு பேர் முன்னாடி சொல்லி என் மானத்தை(இருக்கா என்ன?) ஒட்ட வாங்கினார். ப்ரொகிராமா அது எங்கே இருக்கு??  ம்ம்ம்ம்?? தனியாக் கேட்டு வைச்சுக்கணும், இல்லைனா இன்னொரு நாள் வந்து கணினியைத் துருவிப்பார்க்கணும்னு நினைச்சுக் கொண்டேன்.  பின்னர் அங்கே வந்து யாஹூவைத் திறந்து கொடுத்தார்.


மெயில் கொடுக்க இன்பாக்ஸ் திறந்துடுச்சு.  ஆ னு வாயைப் பிளந்தேன். கொடுங்க மேடம்னு சொன்னார்.  இதிலே ஒருத்தருக்குத் தானே கொடுக்க முடியும்னு சொல்ல, நீங்க மேட்டரை டைப் பண்ணுங்க.  இல்லைனா சொல்லுங்க, நான் டைப்பறேன்னு சொல்லவே, அட, இந்த ஆங்கிலம் கூடவா தெரியாதுனு நினைச்சுட்டார்னு கோபம் வர, கிடு கிடு கிடு கிடுனு டைப்பினேன்.  அவசரத்தில்" கிடுகிடு"  "கிடு கிடு" "கிடு கிடு" அப்படின்னே அடிச்சுருக்கப்போறேனேனு பார்த்துக் கொண்டேன்.  நல்ல வேளையா இல்லை.நான் டைப்பின வேகத்தைப் பார்த்து அசந்துட்டார்.  என்ன இவ்வளவு வேகமா டைப்பறீங்க! ஒண்ணும் அவசரம் இல்லை.  இன்னும் பத்து நிமிஷம் இருக்கு உங்க நேரம் முடிய.  அப்புறமாக் கூட ஒரு ஐந்து நிமிஷம் ஆனாப் பரவாயில்லைனு ரொம்பப் பெருந்தன்மையாச் சொல்ல, அலட்சியமா அவரைப் பார்த்த நான். என்னோட டைப்பிங் குறைந்த பட்ச வேகம் இதுனு சொல்லி அவரைத் திரும்ப அசர அடிச்சேன். அப்புறமா அந்த ஐடியை மேலே டைப் பண்ணச் சொன்னார். சென்ட் கொடுக்கச் சொன்னார். நாளைக்கு பதில் என்னோட இந்த ஐடியிலே இருக்கும், வந்து பார்த்துக்குங்கனு சொன்னார்.  நான் எனக்கு? எனக்கு? னு சுண்டல் கேட்கிறாப்போல் கேட்க, அவரும் இங்கே பக்கத்துப் பிள்ளையார் கோயில்லே தான் தராங்கனு சொல்லிட்டார்.  பதிலுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரின நான், அவர் கிட்டே நானே சொந்தமா என்னோட மெயில் ஐடி ஒண்ணு க்ரியேட் பண்ணணும்னு சொல்ல,  அதான் மேடம் இதுனு செந்தில்--கவுண்டமணி வாழைப்பழ ஜோக் மாதிரிச் சொல்லிட்டார்.

அப்புறமா அங்கிருந்து பொண்ணுக்குத் தனியா, பிள்ளைக்குத் தனியானு மறுபடி  என் முயற்சியாலேயே இன்னொரு மெயில் கொடுத்தேன். அப்பா!  இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினாக் கூட இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சந்தோஷமா இருந்தது.  போயிருக்குமானு சந்தேகம் வேறே.  அன்னிக்கு வீட்டிலே போய் ரங்க்ஸ் கிட்டே இதான் பெருமையாச் சொல்லிட்டு இருந்தேன்.  பையர் அன்னிக்கு ராத்திரியே ஃபோன் பண்ணி அம்மா மெயில் வந்ததுனு சொல்லிட்டு, என்னோட ஆர்வத்தைப் பொசுக்கிட்டார். "ஏண்டா, சொன்னே! ஒரு மெயில் கொடுக்கக் கூடாதோ! நான் வந்து அப்பா கிட்டே சொல்லுவேனே!" னு சொன்னா. "ஹை டெக் அம்மா" னு கிண்டல் வேறே!  இப்போவும் என்னை ஹை டெக் அம்மானு தான் சொல்லுவார். :P:P:P:P

மறுநாளைக்குப் பொண்ணு சமத்தா மெயிலில் பதில் கொடுத்திருந்தாள். ரொம்பவே சந்தோஷமா இருந்தது.  அதுக்கப்புறமா ஆரம்பிச்சார் எங்க பையர்.  அம்மா கணினி எக்ஸ்பெர்ட் ஆயிட்டானு, அவர் அமெரிக்கா போகிறதுக்குண்டான வேலையை எல்லாம் இங்கே என்னைச் செய்ய வைச்சு, அதைக் கணினி மூலமா அப்டேட் செய்யச் சொல்லி இன்னும் பழக்கினார்.  ஓரளவுக்குக் கணினியைத் திறக்கவும், மூடவும், மெயில் ஐடியைத் திறக்கவும் வந்தது.  அப்புறமா முதல்முறை அமெரிக்கா போனப்போ பொண்ணு வீட்டு கணினியிலே தான் முதல்முறையாத் தமிழ் படிச்சேன். அந்தக் கதை தனி. அதை வேறே யாரானும் கேட்டா வைச்சுக்கலாம்.  மொத்தத்தில் நான் கணினி கற்றுக் கொண்டதுனு பார்த்தா மெயில் கொடுக்க மட்டுமே தெரிந்து கொண்டிருந்தேன்.  மிச்சம் எல்லாம் அவ்வப்போது செய்த தவறுகளின் மூலமே தெரிந்து கொண்டேன்.



தொழில் நுட்பப் பிரச்னைகள் என வரும்போது நண்பர்கள் உதவி செய்யறாங்க, செய்தாங்க, இன்னும் செய்வாங்க.

நான் அழைக்கும் ஐந்து பேர்

வல்லி சிம்ஹன்

ரஞ்சனி நாராயணன்

வை.கோபாலகிருஷ்ணன்

ஜி.எம்.பி. சார்

ஜீவி அவர்கள்

ரொம்ப யோசிச்சு இவங்களை எல்லாம் யாரும் கூப்பிடலை என்பதை உறுதி செய்து கொண்டு கூப்பிட்டிருக்கேன்.  பதிவு ரொம்பவே பெரிசா ஆயிடுமோனு இதைக் கொஞ்சம் அவசரமாவே முடிச்சிருக்கேன்.  மன்னிக்கவும். :))))

இது மீள் பதிவு என்பதால் போனமுறை ஐந்து பேரை அழைக்கணும் என அழைத்திருந்தேன். இதைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடிட வேண்டாம். இப்போ நான் யாரையும் அழைக்கலை!சே,பதிவுக்குக் கருத்துச் சொல்லனு நினைச்சுட்டு எங்கே ஓடறீங்க? வந்து கருத்துச் சொல்லிட்டுப் போங்க! நான் சொன்னது யாரும் இதைத் தொடர் பதிவாக நினைத்துக்கொண்டு எழுத வேண்டாம் என்பதே! உங்களுக்கே விருப்பம் இருந்தால் எழுதுங்க! தடுக்க மாட்டேன்! :)))))

Saturday, March 02, 2019

நான் காற்று வாங்கவில்லை, கணினி கற்கச் சென்றேன்!

 

இப்போல்லாம் நிறையப் பேர் கணினி கத்துக் கொடுக்கறாங்க.  போதாததுக்கு எல்லாப் பத்திரிகைகளும் கணினி அறிவு பற்றிய செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.  நமக்கெல்லாம் அப்படி யாரும் கிடைக்கலை.  சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா, ஒரு மெயில் கொடுக்கக் கத்துக்கலாம்னு போனது தான். லோட்டஸ் னா எனக்குத் தாமரைனு தான் அர்த்தம் புரியும்.  ஜாவானா, பைக் நினைப்பிலே வரும். இப்படி இருக்கிறவ கிட்டேப் போய் ஜாவாவும், லோட்டஸும் படின்னா, யார் படிப்பாங்க!  அதானால் நான் ஸ்ட்ரிக்டா ஹிஹிஹி, கவனிக்கவும், ஸ்ட்ரிக்டா என்னோட கணினி ஆசிரியர் கிட்டே என்னோட தேவை என்னனு விளக்கிட்டேன். பையர் பரோடாவிலும், பொண்ணு அமெரிக்காவிலும் இருக்கிறதாலே அவங்களுக்கு ஆத்திர, அவசரத்துக்கு மெயில் கொடுக்கத் தெரிஞ்சாப் போதும்னு சொல்லிட்டேன். நமக்குத் தான் கூச்சமே கிடையாதே!  ஆசிரியர் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்திருப்பார்.  ஆனாலும் காட்டிக்கலை.




தலை எழுத்தை நொந்து கொண்டு அடிப்படை எப்படியும் தெரிஞ்சிருக்கணும்னு சொல்லி, இதான் சிபியுனு சொன்னார். அப்படின்னா? இதாங்க கம்ப்யூட்டரே.  ஓஹோ, அப்படியா? பொட்டி உள்ளே என்னெல்லாம் இருக்கும்?? அவர் மனசுக்குள்ளே இது என்ன துணிமணி வைக்கிற சூட்கேஸா, இல்லை மேக்கப் பொட்டியா, இவங்க கேட்கிறதைப் பார்த்தால் அப்படித் தான் நினைக்கறாங்க போலனு நினைப்பது பளிச்சென எனக்குத் தெரிய, ஹிஹி, இல்லை, அதுக்குள்ளே உள்ள மெகானிசம்னு ஆரம்பிக்க, அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க?  இதோ, இந்த ஸ்விட்சை ஆன் பண்ணினா இங்கே ஹோம் பேஜ் வரும்னு சொன்னார்.  நமக்குத் தான் கூச்ச சுபாவமே கிடையாதுனு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்,  ஆகவே,  ஹோம் பேஜ் இப்படித் தான் இருக்கணுமா?  அந்தக் கம்ப்யூட்டரில் வேறே மாதிரி இருக்கே! னு நான் கேட்க, அது எல்லாம் எப்படி வேணா வைச்சுக்கலாம்ங்க.  அவங்க அவங்க விருப்பத்துக்கு ஏத்தாப்போல் மாத்தி அமைச்சுக்கலாம்னு ஆரம்பிச்சார்.  துளிக்கூடக் கூச்ச சுபாவம் இல்லாமல் நான் அப்போ இதை மாத்திக்காட்டுங்களேன்னு நான் சொல்ல, அவரும் தலை எழுத்தை நொந்து கொண்டு டெஸ்க் டாப்பில் தெரிஞ்ச படத்தை மாத்தி வேறே படத்தைக் கொண்டு வந்தார்.  அந்த விளையாட்டு எனக்குப் பிடிச்சுப் போக நானும் விளையாடறேனேனு கேட்க, சரினு சொல்லிக் கணினி பாடு; உன்பாடுனு என்னையும் அதையும் தன்னந்தனியே விட்டுட்டுப் போயிட்டார்.



நானும் இரண்டையும் கொஞ்ச நேரம் மாத்தி, மாத்திப் போட்டுப் பார்த்துட்டு, அலுத்துப் போய், என் ஆசிரியரைக் கூப்பிட்டு, எனக்கு மெயில் கொடுக்கக் கத்துக் கொடுக்கறதாச் சொல்லிட்டுப் போயிட்டீங்களேனு கேட்டேன்.  ஹிஹிஹி, நமக்குத் தான் கூச்ச சுபாவமே கிடையாதே!  திருதிருவென விழித்த அவர், இன்னும் பேசிக்கே நீங்க கத்துக்கலையேனு ஆரம்பிச்சார்.  என்னங்க, நீங்க தானே சொல்லிக் கொடுக்கணும்!  என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களேனு நான் அவரைத் திருப்ப, பதில் சொல்ல முடியாமல் திணறின மனிதர், இன்னிக்கு ஒரு மணி நேரம் ஆயிடுச்சுங்க, நாளைக்கு வாங்க, பார்க்கலாம்னு சொல்ல, ஒண்ணுமே சொல்லிக் கொடுக்கலை, அதுக்குள்ளே ஒரு மணி நேரம் ஆயிடுச்சா? சரியாப் போச்சு போங்க, இப்படிச் சொல்லிக் கொடுத்தால் நான் எப்படிக் கத்துக்கறதுனு சொல்லிட்டு நாளைக்கு வரேன்னு அவரைப் பயமுறுத்திட்டு நடையைக் கட்டினேன்.  ஹிஹிஹி,இதுவும் கூச்ச சுபாவம் இல்லாமல் தான் சொன்னதாக்கும்.


 அன்னிக்குப் பூராப் பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் டிவி பெட்டியைக் காட்டிக் கம்ப்யூடரில் ஸ்க்ரீன் ஒண்ணு  இப்படித் தெரியறது பாருங்க அது ஒண்ணும் கம்ப்யூட்டர் இல்லையாக்கும்.  கீழே செவ்வக வடிவில் ஒரு பெட்டி இருக்குப் பாருங்க அதான் கம்ப்யூட்டர்.  அதை சிபியூனு சொல்லணும்.  அப்படினு சொல்லிட்டு இருந்தேன்.  ரங்க்ஸ் கிட்டேயும் அதே பாடம்.  அவர் சும்மா இருக்காம, சிபியுனா ஃபுல் ஃபார்ம் என்னனு கேட்டு வைக்க, அதைக் கேட்டுக்கலையேனு திகைச்ச நான்,  அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?  நான் தானே கம்ப்யூட்டரைக் கத்துக்கப் போறேன்.  நான் தெரிஞ்சுண்டாப் போதும்னு சொல்லிட்டுக் காஃபியையும், டிஃபனையும் கொடுத்து அவர் வாயைத் தாற்காலிகமா அடைச்சு வைச்சேன்.


மனசுக்குள்ளே நாளைக்கு சிபியூனா என்னனு கேட்டு வைச்சுக்கணும்னு குறிச்சுண்டேன்.  மறுநாளைக்குக் கரெக்டாப் பத்து மணிக்குப் போயிட்டோமுல்ல!  அங்கே போனால் முதல் நாள் இருந்தவர் இல்லை.  அவருக்கு அன்னிக்கு லீவாம். வேறொருத்தர் இருந்தார்.  நானும் கடவுளே, அவர் இல்லையேனு இன்னிக்குப் போயிடலாமானு யோசிக்கிறதுக்குள்ளே புதுசா இருக்கிறவர் என்ன மேடம், எனி ஹெல்ப்னு கேட்க, நானும் நான் காற்று வாங்க வரலை, ஒரு கணினி கற்க வந்தேன்னு சொல்ல, அவர் தன்னைப் பிரகாஷ்னு அறிமுகம் செய்து கொண்டு வாங்க, நேத்து எதிலே பண்ணினீங்க?  சிபியூ, மானிடர், எல்லாம் காட்டியாச்சா? அப்புறமா, எப்படி ஸ்டார்ட் பண்ணணும்னு சொல்லி இருப்பாங்களே, எங்கே ஸ்டார்ட் பண்ணிக் காட்டுங்கனு ஏற்கெனவே ஸ்டார்ட் செய்து வைச்சிருந்த கணினியை ஷட் டவுன் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணச் சொல்லிட்டார்.  இவர் நம்மைவிடக் கூச்ச சுபாவம் இல்லாதவரா இருப்பார் போலிருக்கே! போச்சு, போச்சு, நேத்து விளையாடின விளையாட்டை இன்னிக்கு விளையாட முடியாது போலிருக்கேனு மனசை நொந்து கொண்டு கம்ப்யூட்டரின் ஸ்விட்சை அழுத்தினேன்.  மானிடரில் வெளிச்சம் வர அதிலே ஸ்டார்ட் பட்டனைத் தேடணுமோனு நினைக்கிறதுக்குள்ளே கண்ணெதிரே ஸ்டார்ட் பட்டன் தெரிய ஆஹானு அது கிட்டே மெளசைக் கொண்டு போறதுக்குள்ளே அது என்னமோ நான் பிடிச்சுக் கூண்டில் அடைக்கப் போறேன்னு நினைச்சுட்டுச் சரியா வராமல் ஆரோ மார்க் எங்கெல்லாமோ நடனம் ஆடினது.   என்றாலும் கூச்ச சுபாவம் இல்லைங்கறதையும் நீங்க புரிஞ்சுக்கணும்.



மெளசைப் பிடிக்க வரலையானு பிரகாஷ் கேட்க, மெளசா எங்கேனு நான் துள்ள, அவர் இப்போ ஹிஹிஹிஹி.  நீங்க கையிலே பிடிச்சிருக்கீங்களே அதான் மேடம் மெளஸ்னு சொல்ல, ஒரு நிமிஷம் பயத்திலே கையை உதறப் போன நான் சுதாரிச்சுட்டு அசடு வழிந்தேன்.  ஹிஹி, இதுக்கு மெளஸ்னு பேரா? பொண்ணு இதெல்லாம் சொல்லவே இல்லையே! மெளஸ் இருக்கும்னு!  முன்னாடியே தெரிஞ்சா பயப்படாம இருந்திருக்கலாமேனு பல்லைக் கடிச்சுட்டு, மெளசைக் கெட்டியாப் பிடிக்கலைனா ஓடிடாதோனு கேட்டு வைச்சேன்.  நல்லா ஹாஸ்யம் பண்ணறீங்க மேடம்னு சொல்லிட்டு, (ஹாஸ்யமா அது?  நான் நிஜம்மாத்தான் கேட்டேன்னு தெரியலை அவருக்கு, பாவம்) மெளசை எப்படிப் பிடிக்கணும்னு சொல்லிக் கொடுத்து ஸ்டார்ட் பண்ணச் சொன்னார்.  அப்போத் தான் சிபியூன்னா என்னனு கேட்கவில்லையேனு தோண, அவரிடம் அதைக் கேட்க, என்ன, நேத்திக்கு அப்போ என்ன சொல்லிக் கொடுத்தார் உங்களுக்குனு கேட்க, ஹிஹிஹி, நேத்திக்கு விளையாடிட்டு இருந்தேன்னு சொல்லவா முடியும்.  நான் திருதிரு.  சிபியூன்னா சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் அப்படினு அழுத்தம் திருத்தமாச் சொல்ல மனதுக்குள்ளே நயாகரா.  ஆகா, கம்ப்யூட்டர் பாஷையிலே ஒண்ணு தெரிஞ்சுடுச்சே!  ஹையா, ஜாலி!  அப்புறமா மானிடரைக் காட்டி, இது மானிடர், எல்லாரும் நினைக்கறாப்போல் இது கம்ப்யூட்டர் இல்லைனு சொல்ல, அதான் எனக்குத் தெரியுமேனு சொல்ல வாயைத் திறந்துட்டு அப்புறமா அடக்கிட்டேன்.  இது ஒண்ணும் கூச்ச சுபாவத்தினாலே இல்லையாக்கும்.  ஆசிரியர் எதிரே எதிர்த்துப் பேசக் கூடாதுனு மரியாதை! அவர் கேட்காமலேயே இது மெளஸ்னு சொல்லிட்டு, தட்டச்சற கீ போர்டைத் தான் ஏற்கெனவே டைப்பிங் கத்துண்டப்போ பார்த்திருக்கோமே, இது கீ போர்ட் அப்படினு அவர் கேட்காம நானாச் சொல்லிட்டு இல்லாத காலரைத் தூக்கி விட்டுண்டேன்.

இதுக்குள்ளே கணினி ஸ்டார்ட் ஆகி, இணைய இணைப்புக்குப் பாஸ்வேர்ட் கேட்டது.  அப்போல்லாம் ப்ரவுசிங் சென்டரில் கூட டயல் அப் தான்.  உடனே நம்பர் போடச் சொல்லி ஏதோ வர, இருங்க நான் கனெக்ட் பண்ணித் தரேன்னு சொல்லி அவர் கனெக்ட் பண்ணினார்.  இணையம் விரிந்தது.  கூடவே என் கனவுகளும்.

Friday, March 01, 2019

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கற்றுக் கொண்டாய்?

கொஞ்சம்வேலைகள், கொஞ்சம் உடல் நலக்குறைவு, கொஞ்சம் அலுப்பு, சலிப்பு! ஆகவே என்னை நானே உசுப்பேத்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இது முன்னால் யாரோ தொடர் பதிவுக்கு அழைத்து (ஶ்ரீராம்?) அப்போல்லாம் தினமும் என்னோட பதிவுகளுக்கு வந்திருப்பார். கௌதமன் சார் கூட வந்து கருத்தெல்லாம் சொல்லுவார். அது ஒரு காலம். அந்தக் காலத்திலே யாரோ கணினி கற்ற அனுபவங்கள் குறித்த தொடர் பதிவுக்கு என்னை அழைக்க நானும் எழுதினேன். கீழ்க்கண்டவை தான். அதிலே ஸ்ரீராம் ஆப்பீச்சில் கணினி கற்றுக் கொண்டதாக எழுதி இருந்தாரோ? நினைவில் இல்லை. ஆனால் அதிலே தான் ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் 2,3 பதிவுகள் வரும். கொஞ்சம் சிரிக்கலாம், கொஞ்சம் ரசிக்கலாம். எனக்கு ஓர் புத்துணர்வு கொடுக்கலாம். கீழே ஆரம்பிக்கிறது பதிவு. இதிலே கூச்ச சுபாவம் பத்தி அடிக்கடி வரும். அது ஏன் என்றால் ஶ்ரீராம் தன்னோட கூச்ச சுபாவம் பத்தி அவரோட பதிவிலே குறிப்பிட்டிருப்பார் என நினைக்கிறேன். நாம தான் நம்ம வழக்கப்படி எல்லாத்தையும் மாத்துவோமே! அதான் எனக்குக் கூச்ச சுபாவமெல்லாம் இல்லைனு அடிக்கடி சொல்லி இருப்பேன். இந்தக் குறிப்புப் பதிவை ஏற்கெனவே படிக்காதவர்களுக்காக. கோமதி அரசு, ஶ்ரீராம், டிடி, வெங்கட், ரேவதி, ஆதி, கௌதமன் ஆகியோர் ஏற்கெனவே படிச்சுக் கருத்தும் சொல்லி இருப்பதால் அவங்கல்லாம் ஆட்டத்தில் இல்லை. 



இப்போ நான் ஶ்ரீராம் மாதிரி ஆப்பீச்ச்சுக்கெல்லாம் போகலை.   ஒரு காலத்தில் போனேன். அதுவும் டைபிஸ்டாத் தான் சேர்ந்தேன். தட்டச்சும் வேகம் அப்போவெல்லாம் இன்னும் அதிகம்.  அப்புறமா வாழ்க்கைப் பயணத்தில் எப்படியெல்லாமோ பயணம் செய்யும்படி ஆச்சு. ஆனாலும் டைபிங்கோ, சுருக்கெழுத்தோ மறக்கலை.  இப்போக் கூட எந்த ஆங்கில வார்த்தையைப் பார்த்தாலும் உடனே சுருக்கெழுத்தில் மானசீகமா எழுதிப் பார்த்துடுவேன். எனக்குக் கூச்ச சுபாவம் எல்லாம் இல்லை. ஶ்ரீராமுக்கு நேர் எதிரிடை! :)))) அப்படி இருந்தும்,   பாருங்க, கணினி மட்டும் யாரும் கத்துக்கொடுக்கலைனு தான் சொல்லணும்.  எண்பதுகளில் சூப்பர் கம்ப்யூட்டர் வந்தப்போ வாயைப் பிளந்துட்டு பார்த்ததோடு சரி.  இதெல்லாம் நம்மாலே எப்படினு ஒரு எண்ணம் அப்போல்லாம்.



குழந்தைங்க எல்லாம் காலேஜ் போக ஆரம்பிச்ச சமயம் பொண்ணு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்னு ஒரு கோர்ஸ் படிச்சா.  எங்க வீட்டிலே முதல்லே கணினியைத் தொட்டது அவ தான். அப்போ பெர்சனல் கம்ப்யூட்டர் எல்லாம் இத்தனை கிடையாது.  அவ சொல்றச்சே கேட்டுப்பேன். நான் கத்துக்க முடியுமானு நினைச்சுப்பேன்.  நமக்கெல்லாம் எங்கே கம்ப்யூட்டரைப் பார்க்கக் கூட முடியுமானு நினைச்சுப்பேன்.  அப்புறமாப் பையர் ஒரு தரம் காலேஜ் லீவிலே சென்னை வந்திருந்தப்போ ஆப்டெக்கில் போய்க் கணினி கோர்ஸ் முடிச்சார். அவர் பண்ணிட்டு இருந்தது மெகானிகல் இஞ்சினியரிங்.  ஆகவே தனியாத் தான் படிச்சார்.


அப்புறமா அவர் பரோடாவில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அங்கிருந்து ஒரு தரம் லீவுக்கு வந்திருந்தப்போ விளையாட்டா என்னைச் சும்மாத்தானே இருக்கே! கம்ப்யூட்டர் கத்துக்கோயேன் அப்படினு சொன்னார். பெண்ணுக்கு அப்போத் தான் கல்யாணம் ஆகி இருந்தது.  தொலைபேசி இணைப்பே பொண்ணு கல்யாணம் ஆகி அமெரிக்கா போன அப்புறமாத் தான் எங்க வீட்டுக்கு இணைப்புக் கொடுத்தோம்.   அது தனிக்கதை, இன்னொரு நாள் வைச்சுக்கலாம். அப்போ அவ ஒரு தரம் பேச்சு வாக்கிலே உனக்கு மெயில் ஐடி இருந்தால் ஏதானும் முக்கியமானதுனு இருந்தாக் கொடுக்கலாம்.  நீ உடனே ப்ரவுசிங் சென்டர்லே போய்ப் பார்க்கலாம்.  இப்போ நான் லெட்டர் எழுதி உனக்கு வரப் பதினைந்து இருபது நாட்கள் ஆயிடுதுனு சொன்னா.


அதோட இல்லாமல்   என்னோட சிநேகிதி ஒருத்தி அப்போ கணினி கத்துட்டு மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் பண்ணிட்டு இருந்தா.  அதுக்கு ஆங்கில அறிவும், தட்டச்சும் தெரிந்தால் போதும்னு சொன்னாங்க.  நமக்கு இருக்கிற ஆங்கில அறிவு போதாதானு நானே முடிவு பண்ணிக் கொண்டு நமக்குத் தட்டச்சத் தெரியும். ஆகவே இந்த கோர்ஸ் பண்ணினால் வசதினு தோணிச்சு.எனக்குக் கூச்ச சுபாவமே இல்லையா, உடனேயே   ரங்க்ஸ் கிட்டே என்னோட ஆசையை வெளியிட்டேன்.  இப்போ இருக்கிற பணத் தேவைக்கு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்னு அல்நாஷர் கனவுகள்.  அப்படியே நிறைய க்ளையன்ட் கிடைச்சு, எல்லார் கிட்டேயும் இப்போ முடியாது; இன்னும் இரண்டு நாள் பொறுங்க.  உங்களுக்கு முன்னால் கொடுத்தவங்களுக்கு முடிச்சுட்டுத் தான் உங்களோடதுனு மானசீகமாப் பேசி எல்லாம் பார்த்துண்டேன்.  வீட்டிலேயும் எப்போவும் என்னைப் பார்க்கவென்றே ஒரு கூட்டம் வராப்போல் எல்லாம் கனவுகள்!  கத்துண்டால் மட்டும் போதுமா?   கணினி வீட்டிலே சொந்தமா இருக்கணும்.  அப்போத் தான் இதிலே கொஞ்சமானும் சாத்தியம் ஆனால் எனக்குத் தான் கூச்ச சுபாவம் எல்லாம் இல்லையே!  அதனாலே எனக்குத் தோணினபடி எல்லாம் கற்பனையில் மிதந்தேன்.

ஆனால் பாருங்க, இந்த அழகான, அற்புதமான கற்பனைகளுக்கு, அநியாயமா செக் வைச்சது நம்ம ரங்க்ஸ் தான். இதுக்குச் சொந்தமாக் கணினி வாங்கணும்.  நம்மால வாங்க முடியுமா? முதல் கேள்வி! கணினியோட விலையெல்லாம் அப்போ நினைச்சுப் பார்க்கிற லெவலில் இல்லை.  அது இருந்தால் பொண்ணோட முதல் பிரசவத்துக்கு அமெரிக்கா போயிடலாமே! சரியான இடத்தில் கொக்கி போட்டார் ரங்க்ஸ்!

உன்னாலே தினம் தினம் அண்ணாநகர் போய்ட்டு வர முடியுமா? இரண்டாவது கேள்வி!  மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் கோர்ஸ் அப்போ அண்ணாநகரில் தான் நடத்தினாங்க.  தினம் மதியம் போயிட்டு வரணும்.  அப்போ  குடும்பக் கவலைகள்னு சொல்ல முடியாட்டியும் பொறுப்புகள் இருந்தன. ஆகவே கணினி கோர்ஸுக்கான கட்டணம், அம்பத்தூரில் இருந்து அண்ணாநகருக்கு தினம் போயிட்டு வரக்கூடிய செலவுனு யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.  மூணாவது கேள்வியைப் போட வேண்டிய அவசியமே ரங்க்ஸுக்கு ஏற்படலை! :))))


நம்ம ரங்க்ஸ் எதையும் தன் வாயால் வேண்டாம்னு சொல்லவே மாட்டார்.  இதை எல்லாம் எடுத்துச் சொல்லி, "நீ புத்திசாலி! யோசிச்சுக்கோ!" அப்படினு சொல்லிடுவார்.   நாமளே வேண்டாம், விடுங்கனு சொல்றாப்போல ஆயிடும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஒரு  ஐஸ்னு புரிஞ்சுக்கவே பல வருஷங்கள் ஆயிடுச்சு! மரமண்டை தானே!   :P :P :P ஆகவே ஆவலை அடக்கிக் கொண்டு விட்டேன்.  கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆசை என்னமோ மனசில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு தான் இருந்தது.   அதுவரை கணினியைப் பார்த்ததில்லை.   உங்களை எல்லாம் நான் இப்படிப் படுத்தணும்னு விதி இருக்கிறச்சேச் சும்மா விடுமா! பையர் உசுப்பேத்தி விடவே, நானும் பிடிவாதம் பிடிச்சேன்.  அதோட பாருங்க, எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லையே! :))))

ஒரு நாள் காலை தினசரியோட வந்த விளம்பர அறிவிப்புகளில் ஒண்ணு அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இல்லத்தரசிகள்,படிச்சுட்டுச் சும்மா இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை கணினி அறிவு கற்றுக் கொடுக்கப்படும்னு சொல்லி 20 மணி நேரம் கத்துக்கறவங்களுக்கு அதே 20 மணி நேரம் இலவசமாய் ப்ரவுசிங் செய்துக்கலாம்னு சொல்லி இருந்தாங்க. அடிச்சது நல்லதொரு வாய்ப்பு, விடுவேனா!  ரங்க்ஸ் ஆப்பீச்சு போறச்சே அவரோட வண்டியிலே தொத்திக்கொண்டேன்.  அவருக்கு என்னமோ இஷ்டமில்லை தான்.  உன்னாலே எல்லாம் முடியாதுனு புலம்பிட்டே வந்தார்.  என் கிட்டே கெட்ட பழக்கம் என்னன்னா, யாரானும் உன்னால முடியாது இதுனு சொல்லிட்டாப் போதும் ;  அதைச் செய்தே காட்டணும்னு ஒரு வீராப்பு வரும்.  அப்படி ஒரு சமயம் இப்போ, விடாதேனு ம/சா. அடிச்சுச் சொல்லவே அதன் குரலுக்குக் கீழ்ப்படிந்தேன்.


எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது! உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ, அப்படி! :))))))

ஹிஹிஹி, தாங்க்ஸ் ஶ்ரீராம், கூச்ச சுபாவம் பயனுக்கு!