இன்று ஶ்ரீராமநவமி. ஶ்ரீராமனுக்கு ஜன்ம தினம். பாவம் ராமன்! ஓர் அரசகுமாரனாகப் பிறந்து காட்டில் வாழ்ந்தான். மனைவியைப் பிரிந்தான். மனைவியோடு மீண்டும் சேர்ந்ததும் மீண்டும் பிரிவதற்காகவே! இப்படி வாழ்நாள் முழுவதும் உழன்றுவிட்டுப் பின்னர் போய்ச் சேர்ந்தான். இருந்தவரையிலும் தான் ஓர் அவதார புருஷன் என்பதை அறிந்தவன் இல்லை. நல்ல கடுங்கோடையில் பிறந்திருக்கிறான். அவன் பிறந்த நாள் எல்லோரும் அசுபம் எனக்கருதும் நவமி திதியில் வருகிறது. பெரும்பாலும் ஜன்ம நக்ஷத்திரங்களே பிறந்தநாளைக்கு என எல்லோருக்கும் வைத்திருக்க நம் முக்கியமான இஷ்ட தெய்வங்கள் ஆன ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் திதியைத் தான் எடுத்துக் கொள்கிறோம். சிவனுக்கும், விஷ்ணுவுக்குமோ முறையே திருவாதிரை, திருவோணம் ஆகிய நக்ஷத்திரங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன.
ஒரு சில ஊர்களில் ஶ்ரீராமனின் பிறந்தநாளைப் பங்குனி அமாவாசை அன்றிலிருந்து ஆரம்பித்துக் கொண்டாடி தசமியோடு முடிப்பார்கள். அன்று பட்டாபிஷேஹம் செய்வார்கள். ஆனாலும் ஶ்ரீராமநவமிப் பிரசாதங்கள் எனில் மிகவும் எளிமையானது. இந்தக் கோடைக்கு ஏற்றது. பருப்புப் பாயசம், சுண்டல், நீர்மோர், பானகம். இவை தான். வடை தட்டுவது எல்லாம் நம் தேவைக்கு ஏற்ப. உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் விதத்தில் பிரசாதங்கள். அநேகமாய் நாம் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளின் பிரசாதங்களும் இப்படித் தான் அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்றாற்போன்ற தானியங்கள் அடங்கிய உணவு வகைகளாகவோ அல்லது பக்ஷண வகைகளாகவோ இருக்கும். அதிலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கும் உணவாகவும் இருக்கிறது. பானகம் அருந்துவதால் தாகம் தணிவதோடு இல்லாமல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் செய்யும்.வேக வைத்துச் சாப்பிடும் சுண்டல் மூலம், கால்ஷியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கும். புரதம், இரும்புச் சத்து குறித்துச் சொல்லவே வேண்டாம். நீர்மோர் அஜீரணத்தைப் போக்குவதோடு உடலில் ஏற்படும் உப்புச் சத்துக்குறைவையும் போக்குகிறது. கோடைக்கு இவை ஏற்றவை!
இதே கிருஷ்ணன் பிறந்த நாள் எனில் நல்ல கடும் மழைக்காலத்தில் நள்ளிரவில் வரும்! அவன் பிறந்ததும் அஷ்டமி திதியில். கடுக் முடுக் எனக் கடித்துச் சாப்பிடும்படியான பக்ஷணங்கள். குழந்தையாகப் பல லீலைகள் புரிந்ததாலும் சாப்பாடு, பாயசம், பக்ஷணம், பால், வெண்ணை, மோர், தயிர் போன்றவற்றில் ஈடுபாடு இருந்ததாலும் பெரும்பாலும் அவற்றை ஒட்டியே நம் பிரசாதங்கள் இருக்கின்றன. அதிலும் மழைக்காலக் குளிருக்கென உடலைச் சூடு பண்ணும் விதத்தில் அமைந்த பிரசாதங்கள். எனினும் கண்ணன் மானுடனாகப் பிறந்தாலும் தன் ஒவ்வொரு செய்கையிலும் அவன் தான் அவதாரம் என்பதைக் காட்டிக் கொண்டே இருந்தான்.
கிருஷ்ணனோ எனில் ஶ்ரீராமனுக்கு நேர்மாறாகவே இருந்தான். ஒருதாரக் கொள்கையுடன் ராமன் இருந்தான் எனில் கிருஷ்ணனுக்கோ ருக்மிணி, சத்யபாமை, ஜாம்பவதி என மூன்று மனைவியர். போதாக்குறைக்கு ராதை என்னும் கோபிகா ஸ்த்ரீ. இவளைத் தவிர்த்தும் கோபிகைகள் அனைவரும் கண்ணனையே நினைத்தனர் என்பது தனி விஷயம். அதன் தத்துவார்த்தமும் வேறே! ஆனாலும் கிருஷ்ணனை ஓர்ஸ்த்ரீலோலனாகச் சித்திரிக்க இந்தக் கருத்தைப் பலர் எடுத்துக் கையாளுகின்றனர். மீராபாய் தன்னைச் சந்திக்க மறுத்த ஹரிதாஸிடம் சொன்னதைப் போல கிருஷ்ணனின் ராஜ்ஜியத்தில் அவன் ஒருவனே புருஷன்! மற்ற அனைவருமே பெண்டிர் தான்! இதன் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்ளுதல் கொஞ்சம்கடினம். எப்படி ஆனாலும் நாம் நம் வாழ்வில் ஶ்ரீராமனையும், கிருஷ்ணனையும் மறக்காமல் இருந்து வருகிறோம். நாம இப்போ வந்த வேலையைப் பார்ப்போமே!
இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு எங்க வீட்டில் செய்த பிரசாதங்கள் படத்துடன் வெளியிடப்படுகிறது. எங்க வீட்டு ராமர் தான் இணையத்தில் ரொம்பவே பிரபலமாச்சே. என்றாலும் மறுபடி அவர் படத்தைப் போடுகிறேன்.
பிரசாதங்கள், சாதம், பருப்பு, பாயசம், உளுந்து வடை, பாசிப்பருப்புச் சுண்டல், நீர் மோர், பானகம். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய். சுண்டலையே தொட்டுக்க வைச்சுண்டாச்சு என்பதால் வேறே காய் பண்ணலை! நாளை தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். காலையிலே நாளைக்கு வர முடியாது.
அதோடு கோலாப்பூர் போனது, சென்னைப் பயண விபரங்கள் எல்லாம் மெதுவாகத் தான் வரும். உடனே எல்லாம் எழுத நேரமில்லை. வேறே வழியே இல்லை. நெல்லைத் தமிழர் பொறுத்துக்கத் தான் வேண்டும். வீட்டில் வேலையும் முக்கியம். அதோடு பண்டிகைகளும் வேறே! ஒரு காலத்தில் இந்த "எண்ணங்கள்" வலைப்பக்கமே 2,3 பதிவுகள் போட்டிருக்கேன். இப்போக் கணினியில் உட்காரும் நேரமும் குறைவு!
ஒரு சில ஊர்களில் ஶ்ரீராமனின் பிறந்தநாளைப் பங்குனி அமாவாசை அன்றிலிருந்து ஆரம்பித்துக் கொண்டாடி தசமியோடு முடிப்பார்கள். அன்று பட்டாபிஷேஹம் செய்வார்கள். ஆனாலும் ஶ்ரீராமநவமிப் பிரசாதங்கள் எனில் மிகவும் எளிமையானது. இந்தக் கோடைக்கு ஏற்றது. பருப்புப் பாயசம், சுண்டல், நீர்மோர், பானகம். இவை தான். வடை தட்டுவது எல்லாம் நம் தேவைக்கு ஏற்ப. உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் விதத்தில் பிரசாதங்கள். அநேகமாய் நாம் கொண்டாடும் அனைத்துப் பண்டிகைகளின் பிரசாதங்களும் இப்படித் தான் அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்றாற்போன்ற தானியங்கள் அடங்கிய உணவு வகைகளாகவோ அல்லது பக்ஷண வகைகளாகவோ இருக்கும். அதிலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கும் உணவாகவும் இருக்கிறது. பானகம் அருந்துவதால் தாகம் தணிவதோடு இல்லாமல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் செய்யும்.வேக வைத்துச் சாப்பிடும் சுண்டல் மூலம், கால்ஷியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்துக் கிடைக்கும். புரதம், இரும்புச் சத்து குறித்துச் சொல்லவே வேண்டாம். நீர்மோர் அஜீரணத்தைப் போக்குவதோடு உடலில் ஏற்படும் உப்புச் சத்துக்குறைவையும் போக்குகிறது. கோடைக்கு இவை ஏற்றவை!
இதே கிருஷ்ணன் பிறந்த நாள் எனில் நல்ல கடும் மழைக்காலத்தில் நள்ளிரவில் வரும்! அவன் பிறந்ததும் அஷ்டமி திதியில். கடுக் முடுக் எனக் கடித்துச் சாப்பிடும்படியான பக்ஷணங்கள். குழந்தையாகப் பல லீலைகள் புரிந்ததாலும் சாப்பாடு, பாயசம், பக்ஷணம், பால், வெண்ணை, மோர், தயிர் போன்றவற்றில் ஈடுபாடு இருந்ததாலும் பெரும்பாலும் அவற்றை ஒட்டியே நம் பிரசாதங்கள் இருக்கின்றன. அதிலும் மழைக்காலக் குளிருக்கென உடலைச் சூடு பண்ணும் விதத்தில் அமைந்த பிரசாதங்கள். எனினும் கண்ணன் மானுடனாகப் பிறந்தாலும் தன் ஒவ்வொரு செய்கையிலும் அவன் தான் அவதாரம் என்பதைக் காட்டிக் கொண்டே இருந்தான்.
கிருஷ்ணனோ எனில் ஶ்ரீராமனுக்கு நேர்மாறாகவே இருந்தான். ஒருதாரக் கொள்கையுடன் ராமன் இருந்தான் எனில் கிருஷ்ணனுக்கோ ருக்மிணி, சத்யபாமை, ஜாம்பவதி என மூன்று மனைவியர். போதாக்குறைக்கு ராதை என்னும் கோபிகா ஸ்த்ரீ. இவளைத் தவிர்த்தும் கோபிகைகள் அனைவரும் கண்ணனையே நினைத்தனர் என்பது தனி விஷயம். அதன் தத்துவார்த்தமும் வேறே! ஆனாலும் கிருஷ்ணனை ஓர்ஸ்த்ரீலோலனாகச் சித்திரிக்க இந்தக் கருத்தைப் பலர் எடுத்துக் கையாளுகின்றனர். மீராபாய் தன்னைச் சந்திக்க மறுத்த ஹரிதாஸிடம் சொன்னதைப் போல கிருஷ்ணனின் ராஜ்ஜியத்தில் அவன் ஒருவனே புருஷன்! மற்ற அனைவருமே பெண்டிர் தான்! இதன் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்ளுதல் கொஞ்சம்கடினம். எப்படி ஆனாலும் நாம் நம் வாழ்வில் ஶ்ரீராமனையும், கிருஷ்ணனையும் மறக்காமல் இருந்து வருகிறோம். நாம இப்போ வந்த வேலையைப் பார்ப்போமே!
இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு எங்க வீட்டில் செய்த பிரசாதங்கள் படத்துடன் வெளியிடப்படுகிறது. எங்க வீட்டு ராமர் தான் இணையத்தில் ரொம்பவே பிரபலமாச்சே. என்றாலும் மறுபடி அவர் படத்தைப் போடுகிறேன்.
ராமர் மேலே, கீழே ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள்
அதோடு கோலாப்பூர் போனது, சென்னைப் பயண விபரங்கள் எல்லாம் மெதுவாகத் தான் வரும். உடனே எல்லாம் எழுத நேரமில்லை. வேறே வழியே இல்லை. நெல்லைத் தமிழர் பொறுத்துக்கத் தான் வேண்டும். வீட்டில் வேலையும் முக்கியம். அதோடு பண்டிகைகளும் வேறே! ஒரு காலத்தில் இந்த "எண்ணங்கள்" வலைப்பக்கமே 2,3 பதிவுகள் போட்டிருக்கேன். இப்போக் கணினியில் உட்காரும் நேரமும் குறைவு!












