எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 17, 2008

கரிகுலம், உங்களுக்கான பதில் இங்கே!

karikkulam has left a new comment on your post "சீதையின் அக்னிப்ரவேசம் சரியானதா?? இல்லையா? தொடர்ச்...":

//உங்களை உங்க வீட்டுக்காரர் தீக்குளிக்கச் சொல்றார். ஏன்னாக்கா, யாரோ ஒருத்த தப்பா பேசிட்டான்.//

தப்பாப் பேசினதுக்கெல்லாம் தீக்குளிக்கச் சொல்ல மாட்டார் என் கணவர். ராமரும் இங்கே சீதையைத் தீக்குளிக்கச் சொல்லவில்லை. சீதை தானாகவே எடுத்த முடிவு. அப்படிப் பார்த்தால், யாரோ ஒருத்தர் தப்பாப் பேசினால் எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவும் மாட்டாள். கணவன் தப்பாக நினைத்துவிட்டானோ என்ற துயரத்திலேயே பெண்கள் தீக்குளிக்கின்றார்கள், இன்றும், எப்போவும். ஆகவே ஆணின் பார்வைதான் மாற வேண்டும். சீதை தீக்குளித்ததும், கணவன் தன்னைத் தப்பாய் நினைத்துவிட்டானோ என்ற எண்ணத்தால் தான்.

//எப்படி இருக்கும் உங்களுக்கு? நன்னா பேஷா இருக்குமா?//

கணவர் அப்படி நினைச்சால் தான் வருத்தமா இருக்கும் கரிகுலம், மத்தபடி யார் என்ன சொன்னாலும் என்ன செய்ய முடியும்??? கணவன், மனைவி சரியாகப் புரிந்து கொண்டாலே போதும், இல்லையா? ஆகவே இங்கே இந்தக் கேள்விக்கே இடமில்லை.

//ஏன், ராமன் கூட சீதையை விட்டுத் தனியாகத்தான் இருந்தான். சீதை ஏன் நாலுபேரு தப்பா பேச்சுவான்னு, தீக்குளிக்க சொல்லவில்லை?//

ராமன் தனியாக எங்கே இருந்தான்? தம்பி லட்சுமணனோடு சீதையைத் தேடி அலைந்தான். வழியில்ஜடாயு, வானரங்கள் ஆகியோரைப் பார்க்கிறான். வானரங்கள் கூட இருக்கின்றரே????? அதை மறந்து விட்டீர்களா? ராமனோ, அசோகவனத்தில் சீதையோ, தப்பாய் நடந்ததாய் எங்கானும், யாரானும் ஒரு பேச்சுப் பேசி இருக்காங்களா என்ன? ஆகவே சீதை ராமரை சந்தேகிக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவருக்குமே நன்றாகத் தெரியும், உலகத்தார் கண்களுக்கு உண்மை நிரூபிக்கப் பட வேண்டும் என.. சீதை தான் அந்நியர் வீட்டில் இருந்தாளே ஒழிய, ராமன் நகருக்குள் எந்த இடத்திலும் நுழையவே இல்லை. தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி 14 வருடம் வனவாசம்.அந்தப் பதினான்கு வருடம் முடியும் முன்னர் அவன் எந்த நகருக்குள்ளும் நுழைந்து தன் பிரதிக்ஞையை உடைக்க விரும்பவில்லை. தனியாக இருந்தபோதும், தன் தவங்களைக் கைவிடவில்லை என்று ராமனே, சீதையிடம் சொல்கின்றானே, இந்தச் சந்திப்பின் போது. அதைக் கவனியுங்கள்.

//கீதா சாம்பசிவம்! ஒரு தப்பை தப்புன்னு சொல்ல உங்களால் முடியவில்லை. என்னா, அது ராமன் புகழை மங்க வைக்கும்.//

ராமன் செய்தது சரினு யாருமே சொன்னதில்லையே திரு கரிகுலம்! ஒரு சாதாரண மனிதன் போல, அற்ப எண்ணம் கொண்டவனாக நடந்து கொண்டான் என்றே சொல்லி இருக்கிறேன், வால்மீகியும் அப்படியே தான் சொல்லி இருக்கின்றார். அதை மறுக்கவேண்டுமென்றால், நான் கம்பராமாயணம் மட்டுமே எழுதி, ராமனை ஒரு அவதார புருஷன் என்று சொல்லி இருக்க வேண்டும் இல்லையா?? அப்படி எங்கே சொன்னேன்??இன்றைய மனிதன் எப்படித் தன் மனைவியிடம் கோபம் வரும்போது நடப்பானோ அப்படித் தான் இதிகாச ராமனும் நடந்து கொண்டான். அதை யாரும், எங்கேயும், எப்போதும் மறுத்துப் பேசியதில்லை. அதனால் ராமன் புகழ் மங்காது. தன் தவறை உணர்ந்து வருந்தும்போதுதான் ஒருவர் புகழ் ஓங்கும். அந்த விதத்தில் சீதையைப் பிரிந்து வருந்தும்போதுதான், ராமன் புகழே ஓங்கியது என்று சொல்லலாமோ???

//இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வராது. நாமெ எங்கேயே போய்விட்டோம். இன்னும் நீங்கள் அந்தகாலத்தில் பெண்ணை ஆணின் அடிமையாகவௌம், ஆணின் சுகத்திற்காகவும் படைக்கப்பட்டதாகவும் நம்பி பிறந்து வளரும் சிறுமிகளை கெடுக்கிறீர்கள். //

இந்தக் காலம் என்ன, புரியாதவங்களுக்கு, அல்லது புரிந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்பவர்களுக்கு, கண்ணிருந்தும் பார்க்க மாட்டேன் என்பவர்களுக்கு எந்தக் காலத்துக்குமே, எப்போவுமே ஒத்து வராது திரு கரிகுலம். நாம் எங்கேயோ போய்விட்டோம்! அது உண்மைதான்! இந்த நாட்டின் ஜீவனை விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிரோம். நான் அந்தக் காலத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள். இல்லை, ஆணின் அடிமை என்று சொல்கிறீர்கள் பெண்ணை, உண்மையில் இப்போது தான் பெண்கள் அடிமைத்தனத்திற்கும், உண்மையான விடுதலைக்கும் வேறுபாடு தெரியாமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர் சுதந்திரம் என்ற பெயரில். பெண் என்பவள் மாபெரும் சக்தி! அதை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, நீங்களும், ஆணின் அடிமையாகவும், ஆணின் சுகத்திற்காகவுமே பெண்கள் படைக்கப் பட்டதாய் நம்பிப் பிறந்து வளரும் சிறுமிகள் என ஒட்டு மொத்தப் பெண்குலத்தையும் சொல்லவேண்டாம். தன்னைத் தான் உணர்ந்த எந்தப் பெண்ணும் இவ்வாறு நினைக்க மாட்டாள். குடும்பம் என்பது இரட்டை மாட்டு வண்டி திரு கரிகுலம், ஒரு மாடு படுத்தாலும் வண்டி ஒடாது. ஆகவே அதை உணர்ந்த எந்தப் பெண்ணும் என்னைத் தவறாகவே நினைக்க மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கின்றது. வாழ்த்துகள் கரிகுலம். நன்றியும் கூட பதில் தர வாய்ப்பளித்தமைக்கு.

4 comments:

  1. எதிர்பார்த்த கேள்வி.
    அருமையான பதில்!

    தயை செய்து எழுத்துக்களின் வண்ணத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். படிக்கவே முடியலை. குறிப்பா டெம்ப்ளேட் மாத்தின பிறகு!

    ReplyDelete
  2. //தயை செய்து எழுத்துக்களின் வண்ணத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். படிக்கவே முடியலை. குறிப்பா டெம்ப்ளேட் மாத்தின பிறகு!//

    வயசானால் அப்படித் தான்! :P :P :P

    ReplyDelete
  3. நாயகி என்னை நீங்கியதாலே
    வீடு வெறிச்சோடி போச்சு
    நாற்புறம் கண்ணீர் சூழ்ந்தததாலே
    கட்டில் தீவாக ஆச்சு
    மணமாகும் முன்பு கண்ணன் நானே
    மணமான பின்பு ராமன் நானே
    அடி சீதை நீ சொன்னால்
    ராமன் தீக்குளிப்பேன்

    ReplyDelete
  4. நாயகி என்னை நீங்கியதாலே
    வீடு வெறிச்சோடி போச்சு
    நாற்புறம் கண்ணீர் சூழ்ந்தததாலே
    கட்டில் தீவாக ஆச்சு
    மணமாகும் முன்பு கண்ணன் நானே
    மணமான பின்பு ராமன் நானே
    அடி சீதை நீ சொன்னால்
    ராமன் தீக்குளிப்பேன்

    இன்றைய ராமர் கமலஹாசன் பஞ்சதந்திர பட பாடலில்

    ReplyDelete